Jump to content

மாகாண சபைத் தேர்தலுக்காக காத்திருக்கும் தமிழ்க் கட்சிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைத் தேர்தலுக்காக காத்திருக்கும் தமிழ்க் கட்சிகள்

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மாகாண சபைகளுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால், அரசியல்வாதிகள் முடங்கியிருந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு, அவர்களை உற்சாகமடைய வைத்திருக்கின்றது. 

முதலமைச்சர் கனவோடும் அமைச்சர் கனவுகளோடும் பலரும் பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். அதிலும், பாராளுமன்றத் தேர்தலில் தோற்றவர்களின் பதவிக்கான காத்திருப்பு என்பது, சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அரசியல் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம் என்பது பதவி, பகட்டுச் சார்ந்தது. மக்களுக்கான உண்மையான அரசியல் தலைவர்களுக்கு பதவியும் பட்டமும் முக்கியமல்ல. அவர்கள், தேர்தலில் வென்றாலும் தோற்றாலும், மக்களுக்காகத் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பார்கள். 

ஆனால், அரசியல்வாதிகளைப் பொறுத்தளவில், அவர்களால் பதவி, பகட்டு இன்றி வாழவே முடியாது. தேர்தல் வெற்றிகளுக்காக எல்லாவிதமான தந்திரங்களையும் அரங்கேற்றத் துணிவார்கள். 

இப்படியானவர்களால் தமிழ் அரசியல் பரப்பும், கடந்த பத்து ஆண்டுகளில் நிரப்பப்பட்டுவிட்டது. பதவி, பகட்டை எதிர்பார்த்து, அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் நெருங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. 

மக்களுக்கான அரசியல் என்பது, மக்களின் எண்ணங்களை, அவர்களின் ஆழ்மனதில் இருந்து பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ் அரசியல் சூழலில், அவ்வாறான நிலை பெரும்பாலும் இல்லை. அநேகமானவர்களின் அரசியல் அரங்காற்றுகைகள், தேர்தல்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படுகின்றன.

ஒத்திவைக்கப்பட்டு வந்த மாகாண சபைத் தேர்தல்களுக்காக, அதிகமான முக்கியத்துவத்துடன் காத்திருந்த தரப்பினர் என்றால், தமிழ்த் தேசிய கட்சிகளைச் சொல்ல முடியும். தென் இலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகள் கூட, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், பெரிய கரிசனையை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

ஆனால், மாகாண சபை முறையைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசிய கட்சிகள், அந்த நிர்வாகக் கட்டமைப்புக்கான தேர்தலுக்காக, அதிக முக்கியத்துவத்துடன் காத்திருக்கின்றன. இது, அடிப்படையில் முரண்நகை. இந்த முரணுக்குள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், எந்தவித பாகுபாடுமின்றி இருக்கின்றன.

கடந்த காலங்களில், இந்தியாவையும் 13ஆவது திருத்தத்தையும் எதிர்த்துவந்த முன்னணியினர், அந்த நிலையிலிருந்து மாறிவிட்டனர். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது, 13ஆவது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபை முறைமையையும் அங்கிகரிக்கும் செயல் என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறி வந்திருக்கின்றது. 2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் மேற்கண்ட விடயத்தைக் கூறியே, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டது. 

ஆனால், சில ஆண்டுகளிலேயே முன்னணியிடம் மனமாற்றம் ஏற்பட்டு விட்டது. மாகாண சபைத் தேர்தலுக்காக, முன்னணியின் முக்கியஸ்தர்கள் தயாராகத் தொடங்கிவிட்டார்கள். முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தொடங்கி, அந்தக் கட்சியின் உறுப்பினர்களிடத்திலேயே கூட, இந்தியாவுடனான அணுகுமுறை மாறிவிட்டது. அண்மையில், யாழ்ப்பாணம் வந்த  இந்திய வெளியுறவு செயலாளர், கூட்டமைப்பு தவிர்ந்த தமிழ்க் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு இரவு விருந்தளித்தார். 

அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கஜேந்திரகுமாரின் உடல்மொழி, பல செய்திகளை அப்பட்டமாகச் சொல்லியது. கடந்த காலங்களில், ஊடக மையத்திலும் தேர்தல் மேடைகளிலும், இந்தியா தொடர்பில் அவர் முழங்கி வந்திருக்கின்ற கருத்துகள் எல்லாமும் பொய்யானவையோ என்று தோன்றுமளவுக்கு இருந்தன.

ஏற்கெனவே, முன்னணியில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தரப்புக்கும் கஜேந்திரகுமார் தரப்பினருக்குமான முரண்பாடுகள் பெரியளவில் சென்றுவிட்டன. கஜேந்திரகுமாரின் அழுத்தங்களைத் தாண்டி, மணிவண்ணன் தரப்பினர் யாழ்ப்பாணம் மாநகர சபையையும் நல்லூர் பிரதேச சபையையும் வெற்றி கொண்டுவிட்டார்கள். இதனால், முன்னணியின் உண்மையான உரித்தாளர்கள் யார் என்கிற கேள்வி இன்னமும் தொக்கி நிற்கின்றது. 

அப்படியான நிலையில், முன்னணியின் அடையாளத்தைப் பேணுவதற்கு மாகாண சபைத் தேர்தலில், தன்னுடைய அணியினரை அகில இலங்கை காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிட வைத்து, வெற்றிபெற வைக்க வேண்டும் என்கிற தன்முனைப்பு, கஜேந்திரகுமாருக்கு ஏற்பட்டுவிட்டது. 

மாகாண சபைத் தேர்தலில் ஒரு சில உறுப்பினர்களையாவது வெற்றிவெற வைத்தால், முன்னணி உண்மையிலேயே தன்னுடனேயே இருப்பதாகக் காட்டிக் கொள்ளலாம் என்பது அவரது நிலைப்பாடு. இல்லையென்றால், முரண்பாடுகளுக்குப் பின்னராக, மணிவண்ணன் அணி பெற்றிருக்கின்ற முக்கியத்துவம் இன்னமும் அதிகரித்து, முன்னணியின் உரித்துச் சார்ந்த பிரச்சினைகள், எதிர்காலத்தில் இன்னும் பலமாக எழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

கூட்டமைப்பைப் பொறுத்தளவில், பாராளுமன்றத் தேர்தலில் பதவி இழந்தவர்களும், ஏற்கெனவே மாகாண சபையில் உறுப்பினர்களாக இருந்தவர்களுமே, மாகாண சபைத் தேர்தலுக்காகக் காத்திருக்கின்றார்கள். 

இவர்களின் அநேகருக்கு, மாகாண சபையின் நிர்வாகக் கட்டமைப்பின் அதிகார அளவுகள் குறித்துக்கூட, எந்தத் தெளிவும் இல்லை. பெரும்பாலானவர்கள், மாகாண சபைத் தேர்தலை, பதவிகளுக்கான ஒரு கருவியாக மாத்திரமே காண்கின்றார்கள். 

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சியைப் பிடித்தவர்கள் என்கிற ரீதியில், ஒன்பது மாகாண சபைகளிலும், இறுதி இடத்தையே பெற்றுக் கொள்ளும் அளவுக்கு மிகமிகக் குழப்பகரமாக மாகாண சபையை நடத்தியவர்கள் கூட்டமைப்பினர். 

கொழும்பிலிருந்து முதலமைச்சர் வேட்பாளராக அழைத்துவரப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன், தனக்கான பணி என்னவோ அதைச் செய்வதைத் தவிர்ந்து, மற்ற அனைத்து வேலைகளையும், முதலமைச்சர் என்கிற பதவி பிம்பத்தோடு செய்தார். தமிழ் மக்கள் பேரவையும் அவரின் புதிய கட்சியும் அப்படி உருவானவைதான். 

விக்னேஸ்வரன்தான் தன்னுடைய தனிப்பட்ட அரசியலைச் செய்கின்றார் என்றால், அவரைத் தவிர்த்து கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களைச் சரியான புள்ளியில் ஒருங்கிணைத்து, மாகாண சபையை கூட்டமைப்பின் தலைமை நடத்தியதா என்றால், அதுவும் இல்லை. மாகாண சபைக்குள் குழப்பங்கள் ஏற்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இரா.சம்பந்தன், சரியான முடிவுகளை எடுக்கவேண்டிய பல தருணங்களிலும், கடிதங்களை எழுதி விடயங்களைச் சமாளிக்கவே முயன்றார்.

அப்படி மாகாண சபையை, முழுவதுமாகத் தோற்கடித்தவர்களின் தரப்பினரான கூட்டமைப்பினர், இன்றைக்கு மீண்டும் மாகாண சபைக் கனவுகளோடு இருக்கின்றார்கள். குறிப்பாக, பாராளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவிய மாவை சேனாதிராஜாவும் அவரோடு தோற்றுப் போனவர்களும், தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தக்க வைப்பதற்காக, மாகாண சபைத் தேர்தலை குறிவைக்கின்றார்கள். 

ஏற்கெனவே பாராளுமன்றத் தேர்தலில், இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மறுத்தவர்கள், தற்போது மாகாண சபைத் தேர்தலிலும் அதையே செய்ய எத்தனிக்கிறார்கள். ஆற்றலும் ஆளுமையும் உள்ள இளம்தலைமுறையை, செயற்பாட்டு அரசியலுக்கு அழைத்துவந்து, அவர்களிடம் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்கிற எந்தவித எண்ணமும், கூட்டமைப்பின் தலைவர்களிடம் இல்லை. சுயநலம் மட்டுமே வாழ்வாகப் போய்விட்ட நிலைக்கு, கூட்டமைப்பு எனும் கட்டமைப்பைக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களின் எதிர்பார்ப்பே, மாகாண சபைத் தேர்தல் என்றாகிவிட்டது.

கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தளவில், அங்கு மீண்டும் முதலமைச்சராகிவிடலாம் என்கிற கனவோடு பிள்ளையான் இருக்கிறார். ராஜபக்‌ஷர்களின் அனுசரணை, அவருக்கு இருக்கவே செய்கின்றது. ஏற்கெனவே, எதிர்க்கட்சியில் இருந்தாலும், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் ராஜபக்‌ஷர்களின் விசுவாசிகளாக வலம் வரும் நிலையில், அவர்களின் ஆதரவையும் வைத்து, கிழக்கு மாகாண சபையில் பிள்ளையானை அமர்த்தும் வாய்புகளை, ராஜபக்‌ஷர்கள் புறந்தள்ள மாட்டார்கள். 

அங்கு, தமிழ்த் தேசிய கட்சிகள் வேண்டுமென்றால், எதிர்க்கட்சி எனும் நிலையை அடையும் அளவுக்கான பலத்துடன் மாத்திரமே இருக்கின்றன. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், ஆட்சியமைக்கக் கூடிய ஒரே மாகாண சபையாக, வடக்கு மாகாண சபை இருக்கின்றது. அதனை, மீண்டும் கைப்பற்றும் போது, குறைந்தபட்ச அர்ப்பணிப்போடாவது நடத்திச் செல்ல வேண்டும். இல்லையென்றால், எதற்கும் தமிழர்கள் தகுதியற்றவர்கள் என்கிற எண்ணம், அனைத்து இடங்களிலும் பரவிவிடும். அது, எதிர்காலத்தை இன்னும் மோசமாகச் சிதைத்துவிடும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபைத்-தேர்தலுக்காக-காத்திருக்கும்-தமிழ்க்-கட்சிகள்/91-283046

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.