Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

26 minutes ago, goshan_che said:

அண்ணை,

நான் சீமான் யாரால் இயக்க படுகிறார் என்பதை பற்றியும், தமிழரசன், முத்துகுமார் பற்றியும், முத்துகுமார் மர்ம கொலை பற்றியும் மிக தெளிவாக எடுத்து சொல்லியுள்ளேன்.

ஆகவே ஒருவரின் பசப்பு வார்த்தைகளுக்கு அப்பால் அவரை நான் இன்ன ஆட்களின் கையாள் என கணித்து வைத்திருப்பதால் அவரை தமிழ் தேசியத்தின் பிடிப்பாக, எமக்கு நன்மை தரகூடிய ஒருவராக நான் கருதவில்லை.

ஆனால் எமது நலனை விட்டு விட்டு பார்த்தாலே கூட, தமிழ் நாட்டுக்கு திமுக, அதிமுகவை விட மிக கொடிய ஆபத்து பிஜேபி என்பதை நான் நம்புகிறேன். 

உங்களுக்கு பெரியாரை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் போல, தமிழ்நாட்டில் பெரியார் விதைத்த அரசியல் சித்தாந்தம் இல்லாவிடில் இப்போ உபி போல காஞ்சி சங்கராசாரியார் ஆளும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருப்பார்கள்.

ஆகவே ஆரிய அல்லது பிராமணிய அரசியலை அண்டவிடாது தடுக்க வேண்டியது அவசியம். 

ஆகவே தமிழ்நாட்டின் அரநியல் நலனை கருத்தில் கொண்டாலும் சீமான் பெரியாரை நீக்கி அந்த வெற்றிடத்தில் சவர்காரை நிறுவ முயற்சிப்பதால் நான் அவரை எதிர்கிறேன்.

முன்பே பலதடவை எழுதி விட்டேன் சீமான் பெரியார் நீக்கத்தை கைவிட்டால், தமிழர்களை தூயமைவாத சாதிய பிரிப்பில் ஈடுபடுவதை கைவிட்டால் அவரை மூர்க்கமாக எதிர்க்கும் தேவை என்போன்றவர்களுக்கு இராது.

தமிழ் நாட்டின் அரசியலை பொறுத்தவரை நான் யாரின் ஆதரவாளரும் இல்லை.

ஆனால் பிராமணிய/சனாதன சித்தாந்தத்தின் எதிரி. அவ்வளவுதான்.

இந்த அடிப்படையில்தான் சீமானை மட்டும் அல்ல, ரஜனியை, கமலையும் எதிர்கிறேன்.

இனப்படுகொலையாளியின் மகளை யாழ்களதிலேயே பிரபல்யபடுத்தும் அளவுக்கு கச்சிதமாக நான் முகமூடி அணிவதில்லை 🤣.

அதே போல் திமுகவை எதிர்ப்பது போல் பாசாங்கு காட்டியபடி, இனப்படுகொலை நேரமும், இன்றும் கருணாநிதியின் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கும் வைரமுத்துவை உங்களை போல நான் ஆதரிப்பதும் இல்லை.

எமது விடயத்தில் கருணாநிதி துரோகம் செய்தார் என்பதற்காக கருணாநிதி துரோகி என்று சொல்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று ஏற்று கொள்ளும் அப்பாவியும் நானால்ல.

உங்களுக்கு எதிராக கருத்து எழுதியவரை முஸ்லிம் என கூறியவர் நீங்கள் தானே சார்??

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

சாதிய கட்சி நடாத்தும் ராம்தாஸ், தொல்மாவளவன் பற்றி எங்கே ஒரு கருத்தையும் காணவில்லை.

அது வேறை  ஆஸ்பத்திரி 😁

 

Link to comment
Share on other sites

On 15/10/2021 at 19:05, விளங்க நினைப்பவன் said:

ஆகவே இந்தியாகிராமப்புற தமிழ் மக்களை முட்டாளாக வைத்திருந்தே அரசியல் செய்ய விரும்புகிறர் சீமான்.😂

ம்ம் மிச்ச திராவிட கட்சி ஆதரவாளர்கள்/ வாக்காளார்கள் எல்லாம் பி எச் டியாக்கும்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nunavilan said:

தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் முழு அரசியல்வாதிகளும் (99 %) இதை தான் செய்கிறார்கள். 

முதலில் பி.ஜேபி.(  B team, C team, D team)(என்ன கிளித்தட்டோ நடக்குது)  பிறகு ஆர்.எஸ்.எஸ் .

தமிழ் நாட்டில் முழுக்கட்சிகளும் ஏதோ ஒருவகையில் தங்களுக்குள்ளும் , காங்கிரஸ், பி.ஜே.பி என காலத்துக்கு காலம் கூட்டு வைத்த வண்ணமே உள்ளார்கள். அவர்களுக்கான விமர்சனங்கள் உங்களால் வைக்கப்படாதது உங்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

 

பிராமணிய ஜெயலலிதா  ஆட்சியில் இருந்த  போது  ஒரு எதிர்ப்பையும் காணவில்லையே?? ஏன் ஏன்?

நுணா,

நான் சீமானின் மீது விமர்சனம் வைத்தால் அதை முறியடிக்காமல் என் மீது விமர்சனம் வைக்கிறீர்கள். பரவாயில்லை பதில் சொல்கிறேன் (இந்த உங்கள் விமர்சனமும் என் பதிலும் இதுதான் முதற் தடவை அல்ல).

1. பசப்பு வார்த்தை இந்தியா அல்ல உலகம் எங்கும் அரசியல்வாதிகள் கூறுவதுதான். ஆனால் நான் சொன்னது தமிழ் தேசியம் பற்றிய பசப்பு வார்த்தைகளை. சீமானின் தமிழ் தேசியம், தலைவர், எமது பிரச்சனை மீதான பசப்பு வார்த்தையில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் நாட்டில் வேறு அரசியல்வாதிகள் யாரும் இப்படி இப்போ சொல்வதில்லை. ஆனால் 2009 இல் வைகோவின் நடவடிக்கை பற்றி இதே யாழில் (நீங்கள் இணைத்த ஜெகத் காஸ்பர் திரியில்) எழுதியுள்ளேன். ஆனால் வைகோ செய்த உதவிகளையும் நினைவு கூறுவேன். அவரை ஒருபோதும் தமிழன் இல்லை என ஒதுக்க முனைவதை ஏற்க மாட்டேன்.

2. நீங்கள் இந்த கேள்வியை கேட்டது ஆச்சரியமாக உள்ளது. ஆர் எஸ் எஸ் தான் பிஜேபியின் ideological mentor என்பதை அவர்களே வெளிபடையாக ஏற்கிறார்கள். ஆர் எஸ் எஸ் சின் அரசியல் கட்சிதான் பிஜேபி. ஒன்றின் பி/சி டீம் என்றால் மற்றையதினந்தும்தான்.

3. திமுக பிஜேபி கூட்டு இருந்த காலத்தில் நான் யாழில் எழுதுவதில்லை. ஆனால் அப்போ கடும் விமர்சனத்தை வைத்தேன். ஜெயலலிதா கூட்டின் போதும் அப்படியே. நான் யாழில் எழுத தொடங்கிய பின் முந்தைய திராவிட கட்சிகளின் பிஜேபி  கூட்டை விமர்சித்து எழுதியுள்ளதோடு, தமிழ்நாட்டில் முதல் பிஜேபி சீட்டுக்கு அட்சாரம் போட்டவர் கருணாநிதி என்பதையும் எழுதியிள்ளேன். நிச்சயமாக சுய, குறுகிய லாப நோக்கில் பிஜேபியை நாட்டில் காலூன்ற விட்ட அனைவரும் கடும் விமர்சனதுக்கு உரியோரே.

ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் எந்த கட்சியும் செய்யாத முயற்சி “பெரியார் நீக்க அரசியல்”. இது பிஜேபி தமிழ் நாட்டில் alternative government என்ற நிலைக்கும் ஈற்றில் ஆளும் கட்சி என்ற நிலைக்கும் இட்டு செல்லும்.

கூட்டணியில் ஓரிரு சீட் வெல்வதை போல அல்ல - அது மிகவும் அபாயகரமான போக்கு -ஆகவே, பெரியாரிய சித்தாந்தத்தை (பெரியாரை அல்ல) தக்க வைக்க சீமானை கடுமையாக எதிர்ப்பதை தவிர வேறு வழி இல்லை.

4. முன்பு இதை பற்றி எழுதியுள்ளேன். ஜெயலலிதா பிராமணராக இருந்த போதும், சமூக நீதி விடயத்தில் அவர் கருணாநிதியை விட கறாராக இருந்தார். இட ஒதுக்கீட்டை இந்திய அரசியல் அமைப்பின் சரத்தில் சேர்த்தது மூலம் உச்ச நீதிமன்று அதை பறிப்பதை தடுத்தார். இருக்கும் வரை மோடியை அளவோடு வைத்திருந்தார். நீட் உட்பட பலதை எதிர்த்தார். ஆகவே அவரிற்கு சோ போன்றோர் அறிவுரை கூறியதாக சொன்னபோதும், அவர் ஒரு பிராமணராக இருந்த போதும் அவரும் சமூக நீதியினை பேணினார், பெரியாரிய சித்தாந்தத்தை நீக்கும் அரசியல் செய்யவில்லை ஆகவே - பெரியாரை நீக்கி அந்த வெற்றிடத்தை சவர்காரால் நிரப்ப முயற்சிக்கிறார் என்ற பயம் ஜெயாவின் மேல் ஏற்படவில்லை.

ஆனால் அவரின் ஏனைய பல நடவைக்கைகளை விமர்சித்துள்ளேன். 

ஒரு போதும் அவரை ஈழதாய் என்றோ, இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றோ நான் எழுதியதில்லை🤣

4. இராமதாசை ஆணவ படுகொலைகள் திரியில் மிக கடுமையா விமர்சிதுள்ளேன். திருமா இலங்கை வந்ததை மிக கடுமையாக விமர்சிதுள்ளேன். ஆனால் அவரின் தலித் அரசியல் சாதி அரசியல் அல்ல. அடக்குபவரின் சாதி அரசியலையும், அடக்கபடுபவரின் தலித்திய அரசியலையும் ஒன்றாக “சாதி அரசியல்” என பார்ப்பது, பார்பவரின் சமூகநீதி பற்றிய புரிந்துணர்வின்மையே என்பது என் நிலைப்பாடு. தலித் அரசியலுக்கு நான் எப்போதும் ஆதரவுதான். அதில் சமரசம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

உங்களுக்கு எதிராக கருத்து எழுதியவரை முஸ்லிம் என கூறியவர் நீங்கள் தானே சார்??

ஓம் அந்த கருத்தில் என்றும் மாற்றம் இல்லை. அது தனி மனித தாக்குதல் என்று சம்பந்த பட்டவர் சொன்ன போது இல்லை என மறுத்து என் தன்னிலை விளக்கத்தை கொடுத்தேன்.

இப்போ மேலே கூட பிரச்சன்ன சில்வாவின் மகளுக்கு ஆலவட்டம் பிடித்ததை பற்றி எழுதியுள்ளேன். 

நான் ஒரு குற்றசாட்டை வைக்க முன்னம் மிக அவதானமாக அவதானித்து, என் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வாய்ப்பும் கொடுத்து, அதன் பின்பே அதில் இறுதி முடிவு எடுத்தேன். அதை நிர்வாகம் அல்லது நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர் இரசிக்காமல் போகலாம்.

ஆனால் நான் என் மனதில் பட்டதை, விதிகளுக்கு முடிந்தளவு உட்பட்டு எழுதியே போவேன், நிர்வாகிகளுக்கு நோகாமல் எழுதுவதில்லை. 

பிடிக்காவிட்டால் வெட்டி விட்டு போகட்டும். 

ஏன் வெட்டினீர்கள் என்று கேட்பதையே 2015 காலத்தோடு விட்டு விட்டேன்.

Link to comment
Share on other sites

Quote

ஒரு போதும் அவரை ஈழதாய் என்றோ, இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றோ நான் எழுதியதில்லை🤣

இதை சீமான் ஈழதமிழர் நிர்க்கதியான நேரம் அவரின் வார்த்தைகள் (யாருக்கும்) ஒரு அரவணைப்பை தந்தது என  அவரே சொல்லி உள்ளார். நீங்கள் விளங்காது போல் நடிக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் சீமான் மீது உள்ள காழ்ப்புணர்வு என்பதை அடித்து  சொல்வேன்.

Quote

நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர் இரசிக்காமல் போகலாம்.

பிறகு  மற்வர்களுக்கு பாடமெடுக்க கூடாது என்பதற்காகவே எழுதினேன்.

Quote

இராமதாசை ஆணவ படுகொலைகள் திரியில் மிக கடுமையா விமர்சிதுள்ளேன். திருமா இலங்கை வந்ததை மிக கடுமையாக விமர்சிதுள்ளேன். ஆனால் அவரின் தலித் அரசியல் சாதி அரசியல் அல்ல. அடக்குபவரின் சாதி அரசியலையும், அடக்கபடுபவரின் தலித்திய அரசியலையும் ஒன்றாக “சாதி அரசியல்” என பார்ப்பது, பார்பவரின் சமூகநீதி பற்றிய புரிந்துணர்வின்மையே என்பது என் நிலைப்பாடு. தலித் அரசியலுக்கு நான் எப்போதும் ஆதரவுதான். அதில் சமரசம் இல்லை.

மக்களின் பஸ்களை கொழுத்திய ராம்தாஸ் குழு பற்றிய உங்களின் சமூகநீதி அசர வைக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

இதை சீமான் ஈழதமிழர் நிர்க்கதியான நேரம் அவரின் வார்த்தைகள் (யாருக்கும்) ஒரு அரவணைப்பை தந்தது என  அவரே சொல்லி உள்ளார். நீங்கள் விளங்காது போல் நடிக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் சீமான் மீது உள்ள காழ்ப்புணர்வு என்பதை அடித்து  சொல்வேன்.

நீங்கள் சீமான் சொல்வதை எல்லாம் நம்பும் மன நிலையில் இருப்பதால் இதை நம்புவதாக நான் அடிக்காமல் சொல்வேன்.

ஜெயா புலிகளை தீய சக்கி என்று கடைசிவரை விழித்தவர், தலைவரை தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் இயற்றியவர்.

கருணாநிதி வலம் போனால், தான் இடம் போவது தனக்கு ஆதாயம் என்ற அடிப்படையில் அவர் அந்த நேரம் ஈழம் சார்பாக கொஞ்சம் தேர்தல் நேரத்தில் மட்டும் இளக்கம் காட்டுவது போல நடித்தார், அந்த நாடகத்துக்கு சீமானும் ஒரு நல்ல குணச்சித்திர வேடம் ஏற்று நன்றாக ஒப்பேற்றினார்.

இது எனது பார்வை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லை. இருந்தாலும் தேவையான நேரத்தில் தேவையானதை கரம் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nunavilan said:

பிறகு  மற்வர்களுக்கு பாடமெடுக்க கூடாது என்பதற்காகவே எழுதினேன்

தவறு செய்வது மனித இயல்புதானே நுணா அப்படி நானும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்ல. இப்போ பாருங்கள் ஒரு நிர்வாகியாக இருந்து கொண்டே சீமானை பற்றிய திரியில் கோஷானை பற்றி நீங்கள் எழுதுகிறீகள். அது போலத்தான்.

32 minutes ago, nunavilan said:

மக்களின் பஸ்களை கொழுத்திய ராம்தாஸ் குழு பற்றிய உங்களின் சமூகநீதி அசர வைக்கிறது.

நான் மேலே எங்கே இராமதாசுக்கு ஆதரவாக எழுதினேன் - இராமதாசுக்கு எதிர் அரசியல் செய்யும் திருமாவின் அரசியலை பற்றி அல்லவா எழுதியுள்ளேன்.

குறிப்பு

நானறிய இராமதாஸ் பஸ் கொழுத்தி அல்ல அது அதிமுக பிறகு அழகிரி செய்தது.

ஆனால் இராமதாஸ் குடிசை கொழுத்தி, காடு வெட்டி. பஸ்சையும் கொழுத்தி இருந்தால் சுட்டி காட்டவும் திருத்தி கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

55 minutes ago, goshan_che said:

தவறு செய்வது மனித இயல்புதானே நுணா அப்படி நானும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்ல. இப்போ பாருங்கள் ஒரு நிர்வாகியாக இருந்து கொண்டே சீமானை பற்றிய திரியில் கோஷானை பற்றி நீங்கள் எழுதுகிறீகள். அது போலத்தான்.

நான் மேலே எங்கே இராமதாசுக்கு ஆதரவாக எழுதினேன் - இராமதாசுக்கு எதிர் அரசியல் செய்யும் திருமாவின் அரசியலை பற்றி அல்லவா எழுதியுள்ளேன்.

குறிப்பு

நானறிய இராமதாஸ் பஸ் கொழுத்தி அல்ல அது அதிமுக பிறகு அழகிரி செய்தது.

ஆனால் இராமதாஸ் குடிசை கொழுத்தி, காடு வெட்டி. பஸ்சையும் கொழுத்தி இருந்தால் சுட்டி காட்டவும் திருத்தி கொள்கிறேன்.

ரைட்டு. நான் உங்களை முஸ்லிம் என எழுதினேனா?  என்பது தான் எனது  point.

ராமதாசின் குண்டர்களென்பதை தமிழ்நாடே அறியும்.

16 செக்கன் காணொளிக்கு குத்தி முறியும் நீங்கள் மிகுதியையும் பார்த்து கருத்து எழுத  முடியுமா? இல்லை  தப்பி  ஓட்டமா?
குறிப்பாக கோடிக்கணக்கில் மோடி அரசால் குடியேறிகளாகும் வடநாட்டவர்கள் பற்றி தமிழ் நாட்டில் யாரும் வாயே திறக்கவில்லை.(பெரிய கைக்கள்) உங்களின் பி ரீம், சீ ரீம் எங்கோ இடிக்கிறதே??

 

1 hour ago, goshan_che said:

நீங்கள் சீமான் சொல்வதை எல்லாம் நம்பும் மன நிலையில் இருப்பதால் இதை நம்புவதாக நான் அடிக்காமல் சொல்வேன்.

ஜெயா புலிகளை தீய சக்கி என்று கடைசிவரை விழித்தவர், தலைவரை தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் இயற்றியவர்.

கருணாநிதி வலம் போனால், தான் இடம் போவது தனக்கு ஆதாயம் என்ற அடிப்படையில் அவர் அந்த நேரம் ஈழம் சார்பாக கொஞ்சம் தேர்தல் நேரத்தில் மட்டும் இளக்கம் காட்டுவது போல நடித்தார், அந்த நாடகத்துக்கு சீமானும் ஒரு நல்ல குணச்சித்திர வேடம் ஏற்று நன்றாக ஒப்பேற்றினார்.

இது எனது பார்வை.

சீமான் சொல்வதை நான் நம்புவதில்லை. சீமான் என்ன சொன்னாலும் முழு நேர ஊழியனாக எதிர்க்குமொருவர்(நல்லது கெட்டது பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை). இதற்கு மேலாகவும் செய்கிறீர்கள். (அதைப்பற்றி நான் எழுத போவதில்லை). அதனால் தான் உங்களுக்கு பதிலளிக்க வேண்டி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ரைட்டு. நான் உங்களை முஸ்லிம் என எழுதினேனா?  என்பது தான் எனது  point.

ராமதாசின் குண்டர்களென்பதை தமிழ்நாடே அறியும்.

16 செக்கன் காணொளிக்கு குத்தி முறியும் நீங்கள் மிகுதியையும் பார்த்து கருத்து எழுத  முடியுமா? இல்லை  தப்பி  ஓட்டமா?
குறிப்பாக கோடிக்கணக்கில் மோடி அரசால் குடியேறிகளாகும் வடநாட்டவர்கள் பற்றி தமிழ் நாட்டில் யாரும் வாயே திறக்கவில்லை.(பெரிய கைக்கள்) உங்களின் பி ரீம், சீ ரீம் எங்கோ இடிக்கிறதே??

 

சீமான் சொல்வதை நான் நம்புவதில்லை. சீமான் என்ன சொன்னாலும் முழு நேர ஊழியனாக எதிர்க்குமொருவர்(நல்லது கெட்டது பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை). இதற்கு மேலாகவும் செய்கிறீர்கள். (அதைப்பற்றி நான் எழுத போவதில்லை). அதனால் தான் உங்களுக்கு பதிலளிக்க வேண்டி உள்ளது.

1. தப்பி ஓட்டமா? இங்கே என்ன சண்டையா நடக்குது நுணா? கருத்து பரிமாற்றம். இதில் ஒரு கட்டத்துக்கு மேல் கருத்தொற்றுமை வராவிடில் agree to disagree அவ்வளவுதான். நீங்கள் 4 ம் பக்கதில் இணைக்க முதல், இந்த செய்தி இங்கே இணைக்கபட முன்பே நான் முழு காணொளியையும் பார்த்து விட்டேன். சீமான் புருடா விட்டார் என்ற கருத்தில் மாற்றமில்லை.

2. தயவு செய்து நான் இராமதாஸ் பற்றி முதலில் நான் எழுதியதை வடிவாக வாசியுங்கள். ஆணவ கொலை செய்யும் அவரின் அரசியலை நான் ஆதரிக்கவில்லை அதை எதிர்க்கும் தாழ்தப்பட்ட மக்களின் அரசியலைதான் ஆதரிப்பதாக எழுதினேன். 

3. ஏன் வாய் திறக்காமல்? வாக்காளர் அட்டையில் குளறுபடி, ரயில்வே வேலையில் குளறுபடி என பிஜேபி தவிர்ந்த கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டில் வடநாட்டவர் வரத்து குறித்து குரல் கொடுத்த படிதான் உள்ளன.  பி டீம் என்பது அதுவல்ல. இன்றைக்கு இஸ்லாமியரும், கிறீஸ்தபரும் “தாய் மதம்” திரும்ப வேண்டும் என்று சொல்லியுள்ளார் சீமான். இது முழுக்க ஆர் எஸ் எஸ் தத்துவம். இப்படியானவற்றால்தான் சீமானை பிஜேபி/ஆர் எஸ் எஸ் பி டீம் என்கிறோம்.

இதை உங்களுக்கு வருட கணக்க்காக விளங்க படுத்தி நான் களைத்து விட்டேன். பி டீம் என்றால் நேரடியான டீம் அல்ல. எதிர்ப்பது போல் போக்கு காட்டியபடி பிஜேபி முன்னுக்கு வர இடைவெளி ஏற்படுத்தி கொடுக்கும் தரகர்கள். சீமான் மட்டும் அல்ல கமலும், ரஜனியும் கூட இப்படியான தரகர்களே.

பெரியாரை நீக்கி விட்டு அதில் “ஆன்மீக அரசியலை” புகுத்துவது, அல்லது “மனுஸ்மிருதி பற்றி இப்போ கதைக்க வேண்டியதில்லை” என்பது அல்லது “முஸ்லீம்களும்,கிறீஸ்தவரும் தாய் மதம் திரும்ப வேண்டும்” என்பது இவை எல்லாமே சனாதன நச்சை மறைமுகமாக நாட்டில் பரப்பி அதன் மூலம் பிஜேபிக்கு ஏதுவான சூழலை உருவாக்கும் கைங்காரியமே. இதை செய்வபர்கள் யாரும் பீஜேபியின் பி சி டீம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சீமான் என்ன சொன்னாலும் முழு நேர ஊழியனாக எதிர்க்குமொருவர்(நல்லது கெட்டது பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை).

சீமான் சொல்வதை முழு நேரமாக எதிர்கிறேன் என்பதில் ஒரு ஒளிவு மறைவும் இல்லை. நான் எனது அபிப்பிராயத்தின்ன்படி நல்லது கெட்டது என்று எனக்கு படுவதன் படியே இந்த நிலைப்பாட்டை எடுக்கிறேன். சீமானை நான் எதிர்க்கும் காரணத்தை பல பத்தாவது தடவையா மேலே இன்னொருதரம் எழுதியிள்ளேன். நல்லது கெட்டது பற்றி கவலைபடாமல் சீமானை நான்  எதிர்க்கிறேன் என்பது உங்கள் ஒப்பீனியன். அது உங்கள் உரிமை ஆனால் அதை உண்மை என நான் ஏற்க தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இதற்கு மேலாகவும் செய்கிறீர்கள். (அதைப்பற்றி நான் எழுத போவதில்லை). அதனால் தான் உங்களுக்கு பதிலளிக்க வேண்டி உள்ளது.

இதில் நீங்கள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவதாக எனக்கு படுகிறது.

அல்லது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி, பூடகமாக எழுதி என் மேல் சேறடிக்கும் மலின உத்தியோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

நான் யாழில் எழுத தொடங்கிய காலத்தில் நீங்கள் என்னோடு கருத்தாடல் செய்துவிட்டு அதே திரியில் மட்டுறுத்தலும் செய்து என் கருத்துக்களை வெட்டியது பாரபட்சமானது என நமக்கிடையே ஒரு பிணக்கு உருவானது. அதை பின்னர் நான் அப்படியே விட்டு விட்டேன். ஆனால் நீங்கள் அதை கறுவியம் வைத்துள்ளீர்களோ எனவும் எண்ண தோன்றுகிறது.

ஒரு நிர்வாகியாக நீங்கள் இப்படி பூடகமாக  எழுதுவது என் மீது தேவையற்ற சந்தேகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும்.

நீங்கள் அது என்ன என்றாலும் அதை பொது வெளியில் போட்டுடைக்கும் முழு அனுமதியை நான் இப்போ தருகிறேன்.

அப்படி என்ன “இதற்கு மேலாகவும்” நான் செய்கிறேன் என்பதை தயவு கூர்ந்து வெளிப்படையாக எழுதி விடுங்கள்.

ஒருவர் மீது குற்றம் சுமத்தும் போது அது என்ன குற்றம் அதன் ஆதாரம் என்ன என்பதை அவருக்கு சொல்லி, ஒரு right to reply உரிமையை அவருக்கு கொடுக்க வேண்டியது அடிப்படை நியாயாதிக்கம்.

அப்படி உங்களால் சொல்ல முடியாவிட்டால், உங்கள் வார்த்தைய வாபஸ் பெற்று கொள்ள வேண்டும்.

ஒரு நிர்வாகியாக இருந்து கொண்டு பொத்தாம் பொதுவில் ஒருவர் மீது பூடகமாக குற்றசாட்டை வீசி விட்டு போவது நியாயமில்லை என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என நினைகிறேன்.

பிகு

இப்போதும் உங்கள் மீது ஒரு மனத்தாங்கலும் இல்லை. ஆனால் ஒன்றில் அப்படி என்ன செய்கிறேன் என இதே திரியில் எழுதுங்கள் அல்லது உங்கள் பூடகமான குற்றசாட்டை மீளப் பெறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை

இதே right to reply ஐ இன்னொரு கள உறவு மீது சந்தேகம் சொல்லும் போது கோஷான் கொடுத்தாரா? என்ற கேள்வியை நீங்கள் முன்வைக்கலாம்.

ஆம் கொடுத்தேன். ஒரு திரியில் எனது சந்தேகங்களை முழுவதுமாக பட்டியல் இட்டு - நீங்கள் யாழில் இப்படியா இயங்குகிறீகள் என கேட்டேன். அது பதிலின்றி கடந்து போகப்பட்டது, அதே போல் திண்ணையிலும்.

ஆனால் அப்படி நான் சொன்னது தவறு என்றே வைத்தாலும் ( தவறு என நான் ஏற்கவில்லை) அதே தவறை ஒரு நிர்வாக உறுபினராக நீங்கள் செய்ய கூடாதல்லவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழ் சொன்ன தகவல் உண்மை என்றால்.. இது பிரித்தானியாவில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தால்.. நீங்கள் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதாது.

லைவ் இன் த யு கே சான்றிதழ் இல்லையேல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும்..  உங்கள் சமூக சேவைகள் தொடர்பான நற்சான்றிதழ் வழங்கப்படின்.. குறிப்பாக உள்ளூர் எம் பி அல்லது கவுன்சிலர் அதனை உறுதிப்படித்தி தரின் அதுவும் உங்கள் விண்ணப்பத்திற்கு வலுச்சேர்க்கும்.

மேலும்.. சீமான் ஒரு கட்சித் தலைவர் மற்றும் அவரது கட்சி அங்கத்தவர்களுக்கு அரசியல் ரீதியான அச்சுறுத்தல்.. மற்றும் அவர்களின் அரசியல் நிலைப்பாடு காரணமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுதல்.. கொலை செய்யப்படுதலுக்கான வாய்ப்புக்கள் இருப்பின்.. சீமானின் கட்சி உறுப்பினர் என்ற உறுதிப்படுத்தல் கடிதத்தின் மூலம்.. அந்தக் கட்சி சார்ந்து ஆபத்துக்களை எதிர்கொள்ளும் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றால்.. அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பத்திற்கு வலுச்சேர்க்க முடியும்.

சீமான் அதையே தான் குறிப்பிட்டிருப்பார். ஆனாலும் சீமான் வழங்கக் கூடிய சமூகப் பணி தொடர்பான நற்சான்று கடிதங்களும் குடியுரிமை விண்ணப்பத்திற்கு வலுச்சேர்க்கலாம். இருந்தாலும் குறித்த எங்கு பிரஜா உரிமை பெற விரும்புகிறார்களோ அங்கு.. சமூக சேவைக்கான நற்சான்றிதழ் பெறப்படுதல் கூடிய அனுகூலமாகும். அதனை சீமான் உறுதிப்படுத்தி வழங்கலாம்.. தனது வெளிநாட்டு தொடர்பாலர்களின் சமூக சேவைகளை உறுதி செய்து. 

ஆனால்.. சீமானின் கடிதம் ஒன்று மட்டும் எல்லாத்தையும் தீர்மானிக்காது. அது வலுச்சேர்க்கப் பயன்படுத்தப்படலாம். அதை தான் சீமானும் குறிப்பிட்டிருக்கிறார்.. தனது எளிய மொழியில். அவ்வளவும் தான்.

மிகுதி எல்லாம் இங்கு கருத்தாவது சீமான் மீதான வெறுப்புணர்ச்சி மட்டுமே. 

10 hours ago, Elugnajiru said:

எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள்

எனது விண்ணப்பத்துடன் கீழ்வருவனவற்றை இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய இணைத்திருக்கிறேன்.

எனது வரி செலுத்துகை சம்பந்தமான மூன்று வருட அறிக்கை

எனது மொழித்திறன் விடயமாக தகுதிகாண் சான்றிதழ்

எனது தொழில் முறைக்கல்வி தேர்ச்சி தொடர்பான சான்றிதழ்.

இவை அனைத்தையும் சமர்பித்தும் அவஙள் இழுத்தடிக்கிறாஙள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் மிகவும் கேவலமான தனிமனத தாக்குதல். எனக்கு சீமான் மீது எந்தவித‌ வெறுப்பும் இல்லை. நான் பொதுவாக இத‌தகைய திரிகளில் இருந்து வில‌கியே இருப்பவன். தீம்கா என்னால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் தீம்காவில் ஆள் என்கின்றார்கள்? இந்த செய்தயை நான் ஒர் இந்திய செய்தி தளத்தில் இருந்தே வாசித்துவிட்டு வெட்டி ஒட்டினேன். ஆனால் இது எனக்கு ஒரு sensational news ஆக பட்டது ஆகவே இணைத்தேன். 

அதற்கு இவர் எழுதிய பதிலை பதில் மிகவும் தவறானது. அதற்கு இவர் என்னுடை இனத்தை இழுத்து பேசினார். அகதிகளுடன் நேரில் வாழ்ந்து பார்த்த எனக்கு இவர் எழுதியது சிரிப்பக இருந்தது. 

இதற்கு நுனாவிலான் என்ற நிர்வாகியும் லயிக்கி இருந்தார். 

ஒருவருருடய தொழில் / வாழும் இடம் / இனம் / குலம் இவைகளா தமிழ் தேசியத்ததை தீர்மனிகின்றது?

நிர்வாகம் நாதமுனியின் இந்த கருத்தை தூக்கும்படி பகிரங்கமாக வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

ஆம் மிகவும் கேவலமான தனிமனத தாக்குதல். எனக்கு சீமான் மீது எந்தவித‌ வெறுப்பும் இல்லை. நான் பொதுவாக இத‌தகைய திரிகளில் இருந்து வில‌கியே இருப்பவன். தீம்கா என்னால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் தீம்காவில் ஆள் என்கின்றார்கள்? இந்த செய்தயை நான் ஒர் இந்திய செய்தி தளத்தில் இருந்தே வாசித்துவிட்டு வெட்டி ஒட்டினேன். ஆனால் இது எனக்கு ஒரு sensational news ஆக பட்டது ஆகவே இணைத்தேன். 

அதற்கு இவர் எழுதிய பதிலை பதில் மிகவும் தவறானது. அதற்கு இவர் என்னுடை இனத்தை இழுத்து பேசினார். அகதிகளுடன் நேரில் வாழ்ந்து பார்த்த எனக்கு இவர் எழுதியது சிரிப்பக இருந்தது. 

இதற்கு நுனாவிலான் என்ற நிர்வாகியும் லயிக்கி இருந்தார். 

ஒருவருருடய தொழில் / வாழும் இடம் / இனம் / குலம் இவைகளா தமிழ் தேசியத்ததை தீர்மனிகின்றது?

நிர்வாகம் நாதமுனியின் இந்த கருத்தை தூக்கும்படி பகிரங்கமாக வேண்டுகிறேன்.

என்னை, வடகிழக்குக்கு வெளியேயானவன், இஸ்லாமியன் என்றவர், உங்களை, தென் இலங்கையர் என்பதா என்கிறார்.

முதலில் உங்கள் பெயர் கொழும்பான். அதை மாத்தாமல், தென் இலங்கையர் தவறு  என்பதே தவறானதா , இல்லையா?

புரியவில்லை, நண்பா.....

மேலும், நீங்கள், என்னை.... சிங்களத்தில், பொய் பொத்தல் என்றீர்கள், நியாயமா?

ரத்தம், தக்காளி சட்டினி கதை தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

என்னை, வடகிழக்குக்கு வெளியேயானவன், இஸ்லாமியன் என்றவர், உங்களை, தென் இலங்கையர் என்பதா என்கிறார்.

முதலில் உங்கள் பெயர் கொழும்பான். அதை மாத்தாமல், தென் இலங்கையர் தவறு  என்பதே தவறானதா?

புரியவில்லை, நண்பா.....

மேலும், நீங்கள், என்னை.... சிங்களத்தில், பொய் பொத்தல் என்றீர்கள், நியாயமா?

ரத்தம், தக்காளி சட்டினி கதை தானே?

உங்களை வடக்கு கிழக்கிற்கு வாழ்வியலுக்கு அந்நியமானவன் என கூறுவது நீங்கள் அந்த மண்ணின் கலாச்சாரத்தை, அரசியலை, பொருளாதாரத்தை, புவியியலை தலைகீழாக விளங்கி கொண்டு அதன் அடிப்படையில் கருத்துக்களை எழுதுவதால். 

ஆனால் ஒரு அகதி என்பவன் வடக்கு கிழக்குக்கு மட்டும் உரித்தானவன் அல்ல. ஒரு அகதியின் வலியை அறிய உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் எழுத முடியும்.

மேலும் இங்கே கொழும்பானோ வேறு எந்த உறவோ எந்த இடத்திலும் அகதிகளை பழிக்கவோ, வசை பாடவோ இல்லை. அப்படி பழித்திருந்தால் - நீங்கள் சொல்வது போல் அகதிகள் பற்றிய புரிதல் அற்றவர்கள் என்ற குற்றசாட்டு சரியானதாக இருக்கும். 

எல்லாரும் சீமானின் வார்த்தைகளை பற்றி கதைக்க, நீங்கள் அகதிகள் பற்றி தேவையில்லாமல் ஒரு தனி டிரக்கில் டிராமா போட்டீர்கள். அதுதான் சுட்டி காட்டப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, colomban said:

ஆம் மிகவும் கேவலமான தனிமனத தாக்குதல். எனக்கு சீமான் மீது எந்தவித‌ வெறுப்பும் இல்லை. நான் பொதுவாக இத‌தகைய திரிகளில் இருந்து வில‌கியே இருப்பவன். தீம்கா என்னால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் தீம்காவில் ஆள் என்கின்றார்கள்? இந்த செய்தயை நான் ஒர் இந்திய செய்தி தளத்தில் இருந்தே வாசித்துவிட்டு வெட்டி ஒட்டினேன். ஆனால் இது எனக்கு ஒரு sensational news ஆக பட்டது ஆகவே இணைத்தேன். 

அதற்கு இவர் எழுதிய பதிலை பதில் மிகவும் தவறானது. அதற்கு இவர் என்னுடை இனத்தை இழுத்து பேசினார். அகதிகளுடன் நேரில் வாழ்ந்து பார்த்த எனக்கு இவர் எழுதியது சிரிப்பக இருந்தது. 

இதற்கு நுனாவிலான் என்ற நிர்வாகியும் லயிக்கி இருந்தார். 

ஒருவருருடய தொழில் / வாழும் இடம் / இனம் / குலம் இவைகளா தமிழ் தேசியத்ததை தீர்மனிகின்றது?

நிர்வாகம் நாதமுனியின் இந்த கருத்தை தூக்கும்படி பகிரங்கமாக வேண்டுகிறேன்.

நீங்கள் மட்டும் யாழ்ப்பாணிகள் பனங்கொட்டைகள் என்றெல்லாம் எழுதலாம்.

உங்கள் இனம் தமிழ் இனம் இல்லை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள். ( முன்னர் ஒத்துக்கொண்டீர்களா என்று தெரியவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு, நீட்டி, முழக்கி எழுதி வைப்பதை வாசிக்க நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை.

இந்த தளத்தில் சில, நுண்ணிய வேலைகள் நடந்து வருவது தெரிகிறது.

ஒருவர், விஜய் முழு தமிழர் இல்லையே என்பார். அடுத்தவர் முழு விளக்கம் தருவார்.

சீமான் கிறிஸ்தவர் என்பார். பாஜக வின் பி ரீம் தானே என்பார்

முற்று முழுதான திமுக அனுதாப நிலைப்பாடு.

கோத்தா அமேரிக்காவில், பூ போடும் இரட்டை நிலைப்பாடு திரியில், குழப்பம் தரும் கடிதம் இடுவார்.

கேட்டால், நீ வடகிழக்கு இல்லை, இஸ்லாமியன் என்று தனிமனித தாக்குதலில் போவார்கள்.

அதாவது தமது கருத்தியலை விதைப்பது.

தனிமனித தாக்குதல் தொடர்பில் நிர்வாகம் உறுதியாக நடவடிக்கை எடுப்பதால், இப்போது தவிப்பு.

சீமானை எதிர்ப்போர் இருவகை; இரண்டாவது வகையினர் நோக்கமே வேறு. முதலாவது வகையினர், இவர்களை புரிந்து விலகி இருப்பதே நல்லது.

இதை புதிதாக சொல்லவில்லை, முன்பும் சொல்லி இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எனக்கு, நீட்டி, முழக்கி எழுதி வைப்பதை வாசிக்க நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை.

இந்த தளத்தில் சில, நுண்ணிய வேலைகள் நடந்து வருவது தெரிகிறது.

ஒருவர், விஜய் முழு தமிழர் இல்லையே என்பார். அடுத்தவர் முழு விளக்கம் தருவார்.

சீமான் கிறிஸ்தவர் என்பார்.

முற்று முழுதான திமுக அனுதாப நிலைப்பாடு.

கோத்தா அமேரிக்காவில், பூ போடும் இரட்டை நிலைப்பாடு திரியில், குழப்பம் தரும் கடிதம் இடுவார்.

கேட்டால், நீ வடகிழக்கு இல்லை, இஸ்லாமியன் என்று தனிமனித தாக்குதலில் போவார்கள்.

அதாவது தமது கருத்தியலை விதைப்பது.

தனிமனித தாக்குதல் தொடர்பில் நிர்வாகம் உறுதியாக நடவடிக்கை எடுப்பதால், இப்போது தவிப்பு.

சீமானை எதிர்ப்போர் இருவகை; இரண்டாவது வகையினர் நோக்கமே வேறு. முதலாவது வகையினர், இவர்களை புரிந்து விலகி இருப்பதே நல்லது.

சீமான் கிறீஸ்தவர் என்பது நான் சொல்லவில்லை. பாஜகவின் மாநில பொறுப்பில் இருக்கும் எச் ராஜா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது. அதை பற்றி வாய் திறக்காமல் கள்ள மெனம் காப்பது சீமான்.

கிறிஸ்தவர்  என்பதால் ஒன்றும் இல்லை. நானே 1/8 கிறீஸ்தவந்தான். சீமான் விஜையின் மீது இந்த ஆயுதத்தை பாவிக்க முடியாமைக்கு இது காரணம் என்று சொல்லவே அது சொல்லபட்டதே ஒழிய விக்ரரையும், சீலனையும் இன்னும் பலரையும் ஏற்று கொண்ட எனக்கு சீமான் கிறிஸ்தவர் என்பது ஒரு பொருட்டல்ல. 

விஜை பாதி மலையாளி, பாதி தமிழன் என்று எழுதியதும்  - இனத்தூயமை வாதம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை சுட்டி காட்டவும், விஜைய சீமான் தமிழன் என்று முன்பே ஏற்று செர்டிபிகேட் கொடுத்து விட்டதால் இப்போ விழி பிதுங்கி நிக்கிறார் என்பதை சுட்டவுமே.

”அகண்ட-தமிழ் அடையாள அரசியலை” தமிழ்தேசிய அரசியலின் அடித்தளமாக எடுக்க வேண்டும் என யாழில் பக்கம் பக்கமாக எழுதுபவன் நான். எனக்கு எவரினதும் பூர்வீகம், மதம், சாதி பற்றி கிஞ்சித்தும் அக்கறை இல்லை. ஆனால் இவற்றை தூக்கி பிடித்து அரசியல் செய்பவர்கள், தாம் உருவாக்கிய முட்டுச்சந்தில் தாமே மாட்டி நிக்கும் போது அதை சுட்டி காட்டுவேன். 

மேலே தெளிவாக குறிப்பிட்டுளேன் சனாதன எதிர்ப்பு என்பது வேறு திமுக ஆதரவு என்பது வேறு. 

திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவரா வைரமுத்து திரியில் பக்கம் பக்கமாக கருணாநிதியின் வண்டவாளங்ளை தண்டவாளம் ஏற்றுவார்?

சனாதன எதிர்ப்பு என்ற கோணத்தில் நான் வைக்கும் கருத்துக்களை திமுகாரரும் வைத்தால் அதன் அர்த்தம் நான் திமுககாரன் என்பதல்ல. இதே கருத்தைதான் கேரள கம்யூனிஸ்டும் முன்வைக்கிறார்கள். அப்போ நான் மலையாளி, கம்யூனிஸ்டா🤦‍♂️ (சிரிப்பாக இருக்கிறது). 

நிர்வாக நடவைக்கையை இட்டு அலட்டி கொள்ளும், திகதி வாரியாக நினைவில் வைத்து, அனிவசரிக்கு திண்ணையில் நினவூட்டும் அளவுக்கு நான் நிர்வாக நடவைக்கையை நினைத்து உருகுவதில்லை. எழுதுவது என் பணி, திருத்துவது அவர்கள் பணி.

இதே திரியில் நீங்கள் எழுதிய கருத்தில் நிர்வாகம் எத்தனை இடங்களில் *****தையல் போட்டுள்ளது? அந்த இடங்களில் நீங்கள் எழுதிய கருத்துக்கான என் எதிர்வினையை அகற்றி உள்ளது - இதில் எனக்கு முழு உடன்பாடே.

அதனால் ஒருவித தவிப்பும் இல்லை. பிரசன்ன சில்வாவின் நண்பர்கள்தான் தவிக்கிறார்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது முழு பதிவையே நீக்கியது தெரியவில்லை, தையல் தெரிகிறது....

முழு நேர சேவகம் செய்யும் உதயநிதி நண்பர்கள் கூட தவிப்பார்கள். 🤑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தமது முழு பதிவையே நீக்கியது தெரியவில்லை, தையல் தெரிகிறது....

முழு நேர சேவகம் செய்யும் உதயநிதி நண்பர்கள் கூட தவிப்பார்கள். 🤑

எனது முழுபதிவு, உங்கள் தையலுக்கான எதிர்வைனை. உங்களுக்கு தையல் போட்டால் என் எதிர்வினையை முற்றாக நீக்குவது லொஜிக்கல் என்பது கூடவா உறைக்காது?

நான் உதயநிதியியுடன் கூட இருந்து தண்ணி அடிப்பேன் என்று யாழ்களத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லை.

உதயநிதியின் மகன் பாடல் வெளியிட்டவுடன் அதுக்கு யாழில் திரி திறந்து, திண்ணையில் விளம்பரமும் செய்யவில்லை. ஆகவே நான் உதயநிதி நண்பன் இல்லை.

எனக்கு உதய நிதிக்கும் உள்ள ஒரே கனெக்சன் நயந்தாரா மட்டுமே🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க தேவை இல்லை. செயலே சொல்கிறது.

தவிர, நான் ஒருபோதுமே, அவருடன் தண்ணி அடித்ததாக சொல்லவில்லை.

கொழும்பில் வாழும், யாழ் இந்து நண்பர் வீட்டுக்கு, பர்கர் இன மணைவி பிறந்த நாள் பார்ட்டிக்கு போயிருந்தேன். மணைவியின் உறவினர்கள் வந்திருந்தனர்.

நான் கொண்டு போயிருந்த டியூட்டி பிறீ போத்தலை அடித்தார்கள்.

நீ தொடாதே என்று சொல்ல, நான் ஒன்றும், உதயநிதி நண்பர் அல்லவே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க தேவை இல்லை. செயலே சொல்கிறது.

தவிர, நான் ஒருபோதுமே, அவருடன் தண்ணி அடித்ததாக சொல்லவில்லை.

கொழும்பில் வாழும், யாழ் இந்து நண்பர் வீட்டுக்கு, பர்கர் இன மணைவி பிறந்த நாள் பார்ட்டிக்கு போயிருந்தேன். மணைவியின் உறவினர்கள் வந்திருந்தனர்.

நான் கொண்டு போயிருந்த டியூட்டி பிறீ போத்தலை அடித்தார்கள்.

நீ தொடாதே என்று சொல்ல, நான் ஒன்றும், உதயநிதி நண்பர் அல்லவே....

நுணலும் தன் வாயால் கெடும் 🤣.

இப்போதைக்கு வேண்டாம் - தேவையான நேரத்தில் வாக்குமூலத்தின் ஸ்கிரீன் ஷாட் பதியபடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.