Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இது சரிதான்.

ஆனால் இது அதற்கும் மேல்.

இது பிரெக்சிற்காரர்களை போல், டிரம்பை போல் தெரிந்து கொண்டே பொய் சொல்லி அதில் அரசியல் ஆதாயம் அடையும் போக்கு.

நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரியாரை பற்றி, சில தமிழ்நாட்டு சாதிகளை பற்றி ஒரு தொகுதி புலம்பெயர் மக்களிடம் இப்படியான பொய்யைத்தான் பரப்பி வைத்துள்ளார்கள்.

அதே போல் ஒரு பொய்தான் இதுவும். ஆனால் இந்த பொய்யை புலம்பெயர் தமிழர் இலகுவில் இனம் காண கூடியதாய் உள்ளது. 

 

 

இலங்கை தமிழர்களுக்கு  Asylum & Citizenship என்று பல விடயங்கள் தெரியும், ஆனால் இந்திய தமிழ் மக்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

எழுத்தில் கண்ணியம் இல்லையே அக்கா.... 🤗

இங்கே சீமானை எதிர்ப்பவர்கள் கூட, ஒருமையில் பேசி எல்லை தாண்டுவதில்லையே.... 🙂

கள்ள உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழனை கழுத்தறுத்தவர்கள் மீது வராத ரோசமும் மானமும் சீமான் என்றவுடன் கொம்பாய் முளைச்சு நிக்குது.😶

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

இலங்கை தமிழர்களுக்கு  Asylum & Citizenship என்று பல விடயங்கள் தெரியும், ஆனால் இந்திய தமிழ் மக்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்

மீரா,

eastham பக்கம் என்னுடன் வாருங்கள்.... எத்தனை மலையாளிகள், தமிழக, மலேசியா தமிழர்கள், ஈழத்தமிழர்களாக அகதி அந்தஸ்த்து எடுத்து குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள் என்று காட்டுகிறேன்.

கனடாவில் எவ்வளவு பேர் தமிழத்தில் இருந்து நம்மவர்களால், ஈழத்தமிழர்களாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று தெரியாதா என்ன?

புலிகள் போராட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து உதவியவர்கள் என்று சொல்லியே asylum அடித்துள்ளார்கள் பலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீரா,

eastham பக்கம் என்னுடன் வாருங்கள்.... எத்தனை மலையாளிகள், தமிழக, மலேசியா தமிழர்கள், ஈழத்தமிழர்களாக அகதி அந்தஸ்த்து எடுத்து குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள் என்று காட்டுகிறேன்.

கனடாவில் எவ்வளவு பேர் தமிழத்தில் இருந்து நம்மவர்களால், ஈழத்தமிழர்களாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று தெரியாதா என்ன?

நாதம்ஸ்

ஆம் இலங்கை தமிழர்களுடன் பழகியவர்களே இந்த விடயத்தில் கில்லாடிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீரா,

eastham பக்கம் என்னுடன் வாருங்கள்.... எத்தனை மலையாளிகள், தமிழக, மலேசியா தமிழர்கள், ஈழத்தமிழர்களாக அகதி அந்தஸ்த்து எடுத்து குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள் என்று காட்டுகிறேன்.

கனடாவில் எவ்வளவு பேர் தமிழத்தில் இருந்து நம்மவர்களால், ஈழத்தமிழர்களாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று தெரியாதா என்ன?

இங்கே ஜேர்மனியிலும்  நிறையப்பேர் இருக்கின்றார்கள். சில காலங்களுக்கு முன் என்னுடன் ஒரு மலையாளி வேலை செய்தவர். அவர் ஈழத்தமிழன் என்று சொல்லியே அகதி விண்ணப்பம் கோரியவர்.அவரின் மூலம் தான் இப்படி நிறையப்பேர் அசூல் அடிச்சு திரிகின்றனர் என தெரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

நாதம்ஸ்

ஆம் இலங்கை தமிழர்களுடன் பழகியவர்களே இந்த விடயத்தில் கில்லாடிகள்.

1985 மே மாதம் 31ம் திகதியுடன் இலங்கையர்களுக்கான, entry visa வை பிரித்தானியா நிறுத்தியது. ஏப்ரல், மே மாதத்தில் எவ்வளவு தென் இந்தியர்கள் கொழும்பு வந்து, கள்ள பாஸ்போர்ட் எடுத்து, இங்கே வந்து சேர்ந்தார்கள் என்று விபரத்தினை, தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் தர்மகத்தா, ஆறு திருமுருகனை சந்தித்தால்  கேட்டு பாருங்கள். 

திருமுருகன், கனடா செல்ல, அமெரிக்க பிசினஸ் விசா எடுத்து இருந்தார். ஆசை யாரை விட்டது.

அப்படியே சுவிஸ் போய், நண்பர்கள், உறவினர்களை பார்த்து, போவம் என்று சுவிஸ் எம்பஸி போய், அவர் அமெரிக்கன் எமபசிக்கு கொடுத்த ஆவணத்தில் இருந்த தவறை கண்டுபிடித்த, சிங்கள பெண், விசா தாறன் இரு என்று சொல்லி, உள்ள போய் அமெரிக்கன் எம்பசிக்கு தகவல் கொடுக்க, வந்து கான்சல் பண்ணி விட்டு போனார்கள்.

பிறகு விசா எடுத்து, சகல நாடுகளுக்கும் ஆன்மிகவாதியாக வந்த அவர், அந்த சம்பவம், தன்னை துர்க்கை அம்மன் தடுத்து ஆட்க்கொண்ட தருணம் என்று சொன்னார் பின்னர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய சிங்களவர்களும் தாம் தமிழர் என்று சொல்லி அசேலம் கேட்டதும் உண்டு. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நிறைய சிங்களவர்களும் தாம் தமிழர் என்று சொல்லி அசேலம் கேட்டதும் உண்டு. 😁

கண பேர்... இருக்கினம்....

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நிரந்தர வதிவிட உரிமை கொடுக்கும் போது போலீஸ் Clearance (எந்த நாட்டில்  இருந்து வந்தாரோ அந்த நாட்டு ..) இவர் ஆபத்தானவர் இல்லை, என்ற  விளக்கம், விபரம். திரடட மாடடார்களோ ? .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிலாமதி said:

 நிரந்தர வதிவிட உரிமை கொடுக்கும் போது போலீஸ் Clearance (எந்த நாட்டில்  இருந்து வந்தாரோ அந்த நாட்டு ..) இவர் ஆபத்தானவர் இல்லை, என்ற  விளக்கம், விபரம். திரடட மாடடார்களோ ? .
 

அகதிகளாக வந்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

இப்போது நீங்கள் கனடாவுடன் மேலதிகமாக இலங்கை குடிஉரிமை கேட்டால், அதுக்கு, கனடிய போலீஸ் clearance கொடுக்க வேண்டும்.

பிரித்தானியாவுக்கு, கடந்த வாரம் இருநாட்களில் மட்டும் 1200 அளவில், அகதிகள் பிரான்சில் இருந்து வந்துள்ளனர். 

உயிரை கையில் பிடித்தபடி கடலில் மிதக்கும் ரப்பர் படகுகளில் வருகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனிதாபிமானம் இங்கே இருக்கிறது.

போலந்து நாட்டில் இன்று சட்டம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளார்கள். தமது நாட்டுக்குள் அகதியாக வரும் யாரையும், வந்த வழியே 24 மணிநேரத்தினில் திருப்பி அனுப்ப போவதாக.

அவரகள் இணைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் தவறான சட்டம் என்று எச்சரித்துள்ளது. அதேவேளை, போலந்து நாட்டின் எல்லையோரத்தில், தங்கி மறைவாக, இருந்தவர்களில் குளிரில் இறந்த 6 பேர் உடலை கண்டு எடுத்துள்ளார்கள்.

கடந்த வாரம், பெலாரஸ் நாட்டு எல்லை காவல் படை லிதுவேனியா நாட்டினுள் துரத்தி அடித்த வகையில், ஒரு இலங்கையர் இறந்து போனார்.

அகதி வாழ்வு அவலமிக்கது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்  கொடுத்த...பரிசீலனை கடிதங்கள்,
அயல் நாட்டு, உயர் பதவிகளில் இருக்கும் தமிழரை சென்றடைந்து...
அதன் மூலம், பலன் கிட்டியிருக்கலாம்.

அதனை... இப்போது வெளிப்படையாக சொல்வது, சரியல்ல.

அதன் மூலம்... அவர்களின், குடியுரிமை... 
மீண்டும்,  பறிக்கப் படக் கூடிய.. வாய்ப்புகள் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

சீமான்  கொடுத்த...பரிசீலனை கடிதங்கள்,
அயல் நாட்டு, உயர் பதவிகளில் இருக்கும் தமிழரை சென்றடைந்து...
அதன் மூலம், பலன் கிட்டியிருக்கலாம்.

அதனை... இப்போது வெளிப்படையாக சொல்வது, சரியல்ல.

அதன் மூலம்... அவர்களின், குடியுரிமை... 
மீண்டும்,  பறிக்கப் படக் கூடிய.. வாய்ப்புகள் உள்ளது.

மீராவுக்கு மேலே, taken out of context ஆக இருக்கலாம் என்று சொல்லி இருந்தேன்.

அதுதான் கதை போலுள்ளது. யாரோ தமக்கு தேவையானதை வெட்டி, ஒட்டி உள்ளனர்.

15:30 யில் இருந்து கேட்டுப்பாருங்கள்.

என்ன சொல்கிறார் என்றால், சுருக்கமாக, ஒரு ஆங்கீகாரம் கொண்ட அரசியல் கட்சியாக தான் கொடுக்க கூடிய கடிதங்களை வெளிநாடுகளில் அகதி விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றன. 

ஆனால் 35 வருடமாக இங்கே அகதி முகாமில் இருக்கும் ஈழத்தமிழனுக்கு வைக்கும் குடியுரிமைக் கோரிக்கை மீது எதுவுமே நடக்கவில்லை என்கிறார்.

இதனை தான் சொல்வது....தோப்பை விட்டு, தனி மரத்தினை மட்டும் பார்க்கும் வேலை என்று.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

அகதிகளாக வந்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

இப்போது நீங்கள் கனடாவுடன் மேலதிகமாக இலங்கை குடிஉரிமை கேட்டால், அதுக்கு, கனடிய போலீஸ் clearance கொடுக்க வேண்டும்.

பிரித்தானியாவுக்கு, கடந்த வாரம் இருநாட்களில் மட்டும் 1200 அளவில், அகதிகள் பிரான்சில் இருந்து வந்துள்ளனர். 

உயிரை கையில் பிடித்தபடி கடலில் மிதக்கும் ரப்பர் படகுகளில் வருகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனிதாபிமானம் இங்கே இருக்கிறது.

போலந்து நாட்டில் இன்று சட்டம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளார்கள். தமது நாட்டுக்குள் அகதியாக வரும் யாரையும், வந்த வழியே 24 மணிநேரத்தினில் திருப்பி அனுப்ப போவதாக.

அவரகள் இணைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் தவறான சட்டம் என்று எச்சரித்துள்ளது. அதேவேளை, போலந்து நாட்டின் எல்லையோரத்தில், தங்கி மறைவாக, இருந்தவர்களில் குளிரில் இறந்த 6 பேர் உடலை கண்டு எடுத்துள்ளார்கள்.

கடந்த வாரம், பெலாரஸ் நாட்டு எல்லை காவல் படை லிதுவேனியா நாட்டினுள் துரத்தி அடித்த வகையில், ஒரு இலங்கையர் இறந்து போனார்.

அகதி வாழ்வு அவலமிக்கது....

கனடாவில் நிரந்தர விஸாகொடுக்க இலங்கை  யை சேர்ந்த படியால்  இலங்கை clearance    கேட்பர் இந்திய நாட்டுக்கு காரன் இலங்கைபாஸ் போட்டில் போய் பிரான்சில் நிரந்தர விசா கேடடால் எந்த நாட்டு போலீஸ் கிளியரன்ஸ் கொடுப்பார்   .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் சிலர் வெளிநாட்டில் இருந்து இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்து பணம் டிபபோசிட் செய்து குடியுரிமை பெற்று கொண்டனர் என்று கேள்விபட்டேன் . நான் அதை  அவர்கள் இலங்கை  Citizenship  தான் பெற்று கொண்டார்கள் என்று விளங்கி கொண்டுவிட்டேன்.   இப்போது சீமானின் தம்பிகள் சொன்ன பின்பு தான் தெரியும் குடியுரிமை என்றால் அகதியாக இருப்பதிற்கான அனுமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தியாகிராமப்புற மக்களுக்கு அகதிஅந்தஸ்த்து எண்டா என்னெண்டு தெரியா.. குடி உரிமைஎண்டா கொஞ்சம் விளங்கும்.. அவங்களுக்கு ஏற்றமாதிரி பேசி இருக்கிறார்..

ஆகவே இந்தியாகிராமப்புற தமிழ் மக்களை முட்டாளாக வைத்திருந்தே அரசியல் செய்ய விரும்புகிறர் சீமான்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆகவே இந்தியாகிராமப்புற தமிழ் மக்களை முட்டாளாக வைத்திருந்தே அரசியல் செய்ய விரும்புகிறர் சீமான்.😂

இப்ப தமிழ் நாட்டிலை இருக்கிற  பெரிய/சின்னக் கட்சிகள் என்ன செய்யுது? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிலாமதி said:

கனடாவில் நிரந்தர விஸாகொடுக்க இலங்கை  யை சேர்ந்த படியால்  இலங்கை clearance    கேட்பர் இந்திய நாட்டுக்கு காரன் இலங்கைபாஸ் போட்டில் போய் பிரான்சில் நிரந்தர விசா கேடடால் எந்த நாட்டு போலீஸ் கிளியரன்ஸ் கொடுப்பார்   .  

உங்கள் சந்தேகம் எனக்கும் இருந்தது ஆனால் குறித்த பெயரில் உள்ள நபர் இலங்கையை சேர்ந்தவர் ஆனால் சரியான தரவுகள் அற்றவர்  அல்ல என்று முடித்துக்கொள்வார்களாம் .கொஞ்சம் குழப்பம்தான் .

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

கள்ள உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழனை கழுத்தறுத்தவர்கள் மீது வராத ரோசமும் மானமும் சீமான் என்றவுடன் கொம்பாய் முளைச்சு நிக்குது.😶

வணக்கம் அண்ணா,

கள்ள உண்ணாவிரதம் இருந்தவர்கள் யாரும், ஈழத்தமிழர்களை இரட்சிக்க வந்ததாகவும், தலைவரின் அவதாரமாகவும் சொல்லிக் கொள்வதில்லையே? அதனால் அவர்கள் எப்படிப் போனால் நமக்கென்ன?

பலரும் அகதி அந்தஸ்தா, குடியுரிமையா என்ற ஆராய்சியில் இறங்கி விட்டிருப்பது தெரிகின்றது.. அது தேவையற்றது என்பது என் கருத்து... பல கடித, ஆவணங்களில் ஒன்றாக சிலருக்கு நாம் தமிழர் கடிதமும் உதவி இருக்கலாம்... முன்னாளில் நாம் தமிழரில் இணைந்து பயணித்த அய்யநாதன் தான் பலமுறை சீமான் கையெத்துப் பெற்று கடிதங்களை நாடு கடத்தப்பட இருந்தவர்களுக்கு அனுப்பியதாக கூறியுள்ளார்...

சரி. திரு.சீமான் இப்போது இதனை கூற காரணம் என்ன? என் தனிப்பட்ட ஆய்வு (my own analysis).

நாம் தமிழர் இயக்கம் பின்னர் கட்சி, ஈழத்தமிழர் பொருளாதாரத்தைக் கொண்டு கட்டி எழுப்பபட்ட, வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கென தனியான ஆராய்ச்சி எதுவும் தேவையற்றது...

கட்சி ஓரளவில் வளர்ந்து பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்கத்தொடங்கியதும் நாம் தமிழர் தொனி (tone) கொஞ்சம் மாறத்தொடங்கியது.. ஈழத்தமிழரும் கொஞ்சம் தருவதாக...

இன்று, ஈழத்தமிழருக்கு குடியுரிமை பெற்றுக்கொடுத்ததே நான் தான் என சொல்வதன் பொருள், நாளை நான் ஈழத்தை பெற்றுத் தருவேணே இல்லையே, பணம் தரவேண்டியது உங்கள் கடமை என ஒரு கருத்தியலை உருவாக்குவதற்கான முதற்படி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் வைக்கோ கடிதம் கொடுத்து, தமிழகத்தில் ஈழ அகதி முகாமில் இருந்து வந்து அகதி அந்தஸ்து கிடைத்த ஒருவரை எனக்கு தெரியும். 

பிரபாகரன் அண்ணர், மனோகரன், கப்பலில் வேலை செய்து, தமிழகத்துக்கு, தாய், தந்தை பார்க்க போய் வந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவரை கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்த திட்டம் போட்டது, மத்திய அரசு.

நாம் தமிழரின் பொது செயலாளர், அய்யா தடா சந்திரசேகர், டெல்லிக்கு அழைத்து போய், UNHRC மூலம் டென்மார்க் தூதரகத்தினை அணுகி, தேவையான கடிதங்களை, பத்திரங்களை கொடுத்து, அகதி அந்தஸ்து வாங்கி கொடுத்து, அனுப்பி வைத்தனர்.

அது எப்படி நடந்தது? 🤔

***

அகதிகளாக, வந்திருந்தால் தெரியும், அவர்கள் அவலம். கிடைக்கும் எந்த கடிதத்தினையும் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

கிடைத்த பின்னர், அதனால் தான் கிடைத்தது என்று, நன்றியுடன் சொல்லி இருப்பார்கள். கொடுத்தவர்கள் மகிழ்வுடன், வேறு யாருக்கும் அதே உதவி செய்வார்கள் என்று.

அட, நாம வந்து சேர்ந்து விட்டோம்.... அகதி அந்தஸ்து கிடைத்து, பிள்ளைகளையும் வளர்த்து விட்டோம். யாரு எக்கேடு கேட்டால் என்ன என்று நினைப்பது, துடிக்கும் அகதிகளுக்கு கிடைக்கும், சிறு, கொழு கொம்பை இல்லாமல் செய்யும் ஈனச் செயல்.

உதவி செய்யாவிடில், உபத்திரவம் செய்யாமல், கடந்து போவது நல்லது. 

நான். விசா எடுத்து, மேல் படிப்பு படிக்க வந்தனான் எல்லோ, பல்கலைக்கழக படிப்பு முடித்து, migrate பண்ணின ஆள் எல்லோ என்று அடித்து விடுபவர்களானால்.... பெரும் தன்மையுடன் நகர்ந்து செல்லலாமே...

திரியை ஆரம்பித்தவரோ, தென்பகுதியில் பிறந்த... மத்திய கிழக்கில்....வேலை பார்க்கும், அகதி அவலம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவர்.

 

 

நாதம் இன்னும் கள விதிகளைப் படிக்கவில்லைப் போல:

ஒருவர் உங்கள் கருத்துக்குப் பதில் எழுதிய பின்னர் மீளப் போய் உங்கள் கருத்தை மாற்றுவது தவறு!

பொதுவான திரியில் "எனக்கு முதுகு சொறி அல்லது விலகிப் போ" என்பதும் விதி மீறல்! இதை பற்றி ஒரு நாற்சந்திக் காவியமே இருக்கிறது!

எனவே காணொளி வடிவில் வரும் வரை இருக்காமல் போய் விதிகளை வாசியுங்கோ!

தவித்த அகதிக்குக் கிடைத்த சிறு குச்சி "நான் மட்டும் தான் கொம்பானேன்" என்று பொய் சொல்வது மிகுந்த "பெருந்தன்மை" என நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?😎 முடிவாக நாம் சொல்வது, சீமானின் வழமையான புழுகு மூட்டைகளில் இது ஒன்று அவ்வளவே!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் வழமை போல் சீமான் பொய் சொல்கிறார் என்று நாம் சொன்னால் - “ஐயோ அகதிகள் பாவம்” என சம்பந்தமில்லாமல் நீலிகண்ணீர் வடிக்கிறார்🤣.

மேலே யார் அகதிகள் பற்றி தப்பாக பேசியது? யாருமில்லை.

இங்கே பேச்சு சீமானின் பொய்யை பற்றி மட்டுமே.

அகதிகள் பற்றிய கரிசனை எல்லாருக்கும் உண்டு. 

மேலே மிக தெளிவாக குறிப்பிட்டேன் சீமான் கடிதம் கொடுத்திருந்தால் அது ஒரு வழக்கின் ஆதாரம் என்பதாக மட்டுமே கருதப்பட்டிருக்கும். 

ஏற்கனவே இலங்கையில் உயிராபத்து உள்ளவராக உள்ள இலங்கையர் ஒருவரை - அவரின் உயிருக்கு ஆபத்து என்பதை நிறுவ சீமானின் கடிதத்தையும் ஒரு சாட்சியாக நீதி மன்றம் ஏற்றிருக்கலாம்.  இலங்கை எம்பிகள் கொடுக்கும் கடிதம், இலங்கை வக்கீல்கள் கொடுக்கும் கடிதம் போல, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சின்ன கட்சியின் தலைவரின் கடிதம் என்ற அளவில் அதை நீதி மன்று கையாண்டிருக்கும்

ஆனால் சீமான் சொல்வது போல் ஏதோ இவர் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் உடனே அந்தஸ்து கொடுத்தது என்பது விளக்கம் இல்லாத மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலைதான்.

அதில் கூட 10 வருடத்துக்கு முன் ஒரு தடவை இலங்கை போன சீமானுக்கு - இப்போ இலங்கையில் ஒருவருக்கு உயிராபத்து என்பது எப்படி தெரியும் என்ற கேள்வி நிச்சயம் எழும். 

ஆகவே 400 பேர் என்பதும் நம்பவியலாதது.

மூன்று நாட்டில் 400 கடிதம் என்றால் ஒரு நாட்டில் அண்ணளவாக 125 கடிதம். 

கொடுக்கும் கடிதம் ஒவ்வொன்றிலும் அந்த நபரை தனக்கு எப்படி தனிப்பட்டு தெரியும், அவருக்கு என்ன ஆபத்து, அதைதான் இந்தியாவில் இருந்தபடி எப்படி தனிப்பட்டு அறிந்தேன் என விளக்க வேண்டும்.  சும்மா போட்டோ கொப்பி மாரி அடித்து அனுப்பினால் அதை கனம் பண்ண மாட்டார்கள். அல்லது கூலிக்கு கடிதம் கொடுக்கும் professional witness என்றே கருதுவார்கள்.

ஏலவே சீமான் பல பொய்களை நா கூசாமல் சொல்பவர் என்பதால் இதையும் ஒரு மிகைப்படுத்தல் என்றே பார்க்க முடியும்.

கெளரவம்,  விதி, போன்ற சினிமா படங்கள் போலன்றி evidence ஐ ஒரு நீதி மன்று எப்படி அணுகும் என்ற அடிப்படை புரிதல் இருந்தாலே சீமானின் 400 பேர், கப்ஸா என்பது வடிவாக புரியும். 

சீமான் இலங்கையில் சந்தித்த ஒரு சிலரின் வழக்குகளுக்கு இப்படி கடிதம் கொடுத்திருக்கலாம்.

சீமான் பின் வருமாறு கூறி இருந்தால் அதில் யாரும் பிழை காண முடியாது. 

“எனக்கு தெரிந்த சில ஈழத்தமிழர்களுக்கு உயிராபத்து என்பதை உறுதி செய்து நான் கொடுத்த்த கடிதத்தை, ஆதாரங்களில் ஒன்றாக ஏற்று இந்த நாடுகள் அவர்களுக்கு தஞ்சம் அளித்தன”. 

ஆனால் சீமான் சொன்னது? ஏதோ தான் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் எல்லாம் உடனே குடியுரிமை கொடுக்கும் என்பதான சோடிப்பு.

இதைதான் கருணாநிதியும் செய்தார். 

ஆனால் கருணாநிதி பரம்பரை கள்ளன் - லேசில் மாட்ட மாட்டார்.

சீமான் பஞ்சத்துக்கு கள்ளன் - பொய் சொல்லி மக்களை ஏய்க்க வேண்டும் என்று தெரிகிறது ஆனால் எப்படி மாட்டு படாமல் பொய் சொல்வது என தெரியவில்லை🤣.

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

அன்று மட்டுமல்ல இன்றும் தலைவர் பிரபாகரனையும் ஆமை ,ஆமைக்கறி என நக்கலடிக்கும் கோஷ்டிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

தலைவர் பிரபாகரன் என்ற மனிதரை புரிந்து கொள்ளாத உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

சீமான் மீதான உங்கள் பக்தியை நீங்கள் வெளிப்படுத்துங்கோ. இல்லை சீமானே கடவுளாகவே வணங்குங்கள். அது உங்கள் உரிமை. யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

10 hours ago, Nathamuni said:

எழுத்தில் கண்ணியம் இல்லையே அக்கா.... 🤗

இங்கே சீமானை எதிர்ப்பவர்கள் கூட, ஒருமையில் பேசி எல்லை தாண்டுவதில்லையே.... 🙂

பாருங்கள், தாயக உள்ளூர் அதிகளுக்காக, நேசக்கரம் அமைப்பு நடத்தும், உங்கள் சமூக பொறுப்பு நிலைப்பாடு, உங்கள் இந்த தேவையில்லாத கருத்துக்களால் சிக்கலுக்கு உள்ளாகும் என்று முன்பு, உரிமையுடன் சொல்லி இருந்தேன்.

மேலே முல்லைநிலவன் கேள்வியினை நீங்களே கேட்டு பெற்றுக் கொண்டீர்கள் என்று கருதுகிறேன்.

வருந்தத்தக்கது. 😰

முதலில் உங்கள் தெய்வம் சீமானை நாகரீகமான அரசியலை செய்யச் சொல்லுங்கோ நாதமுனி. உங்கள் தலைவர் சீமான் வார்த்தையில் வராத ஒருமையா நான் எழுதிவிட்டேன். 

நிலவு இருட்டு வெளிச்சம் என பக்கம் பக்கமாக நீட்டி புலம்பும் அனாமதேயம்  என் கருத்துக்கு பதில் சொல்லாமல் புலம்புகிறது. தனது இயலாமை 🐢 அல்லது நீங்கள் என்ன சொன்னாலும் எனது கருத்து இதுதான்.

இன்னும் அப்பாவித்தனமாக 🐢 நம்பும் உங்களுடன் கோபிக்கவில்லை. மன்னிக்கவும் இப்படி எழுதியமைக்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

 

திரியை ஆரம்பித்தவரோ, தென்பகுதியில் பிறந்த... மத்திய கிழக்கில்....வேலை பார்க்கும், அகதி அவலம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவர்.

 

 

நாதமுனி என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? செய்தியை யார் வேண்டுமென்றாலும் இணைக்கலாம்
அவருடைய பின்புலத்தை ஏன் ஆராய்கின்றீர்கள்? தென்னிலங்கையில் பிறந்தேன், மத்திய கிழக்கில் வேலை செய்கின்றேன். ஆகவே எனக்கு யூ கே அகதி வாழ்வைபற்றி தெரியாது அப்படியா? சமீப‌ காலமாக இப்படியான கருத்துக்கள் எழுதி ஏன் அம்பானைக்கு பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டு போகின்றீர்கள்?

நீங்கள் இருக்கும் ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன், எனக்கு தெரியாதா? என்னுடன் அறையில் இருந்தவர் டொலொயிலட்டுக்குள் போனால் லேசில் வரவேமாட்டர், இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு வந்த பின் பலவருடம் மனைவியை அழைக்க முயச்சித்தார் முடியவில்லை. சில வருங்களுக்கு முன்பு இறந்து போனார். வீசா இல்லாமல் மன அழுத்தத்தில் சிலர் குடித்தே இறந்து போனது எனக்கு தெரியும். இவர்களுடன் நானும் ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டு குடித்தவன் என்ற அடிப்ப்டயில் எனக்கு எல்லமே தெரியும்.
நிறைய விடயங்கள் எழுத முடியாது. 

குரைடனில் உள்ள் தென் இந்திய தமிழ் சட்ட விரோத குடியேடிகள் சிலர் இவ்வாறு தமிழ் நாட்டில் இருந்து வருபவர்களிடம் கேஸ் எழுதி பணம் கரைப்பதியும் கண்டுள்ளேன். பல்வேறு மலையாளிகளயும், இந்தியர்களியும் எனக்கு தெரியும், அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன், (எல்லேரும் அல்ல சில நல்ல உள்ளங்களையும் கண்டுள்ளேன்) 

மே 2009ல் நானும் எதுவும் செய்ய திறணியற்று தலையில் கை வைத்துக்கொண்டு  க்றைடன் ஸ்டேசனில் பல மணி நேரம் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தவந்தான்.

இலங்கையில் எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உட்படதவர்கள் சந்தோசமா விசாவுடன் இருக்கும்போது, பலர் உண்மையாக பாதிக்கப்ட்டு எந்தவித வீசாவும் இன்றி உள்ளார்கள். 

இங்கு கருதாடுவது சீமான் செய்தது சரியா பிழையா? ஆனாவசியமாக இணைத்தவர்க்கு ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினத்தல் தவறு. தவாறாக எடை போட்டு விட்டீர்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

 

நாதமுனி என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? செய்தியை யார் வேண்டுமென்றாலும் இணைக்கலாம்
அவருடைய பின்புலத்தை ஏன் ஆராய்கின்றீர்கள்? தென்னிலங்கையில் பிறந்தேன், மத்திய கிழக்கில் வேலை செய்கின்றேன். ஆகவே எனக்கு யூ கே அகதி வாழ்வைபற்றி தெரியாது அப்படியா? சமீப‌ காலமாக இப்படியான கருத்துக்கள் எழுதி ஏன் அம்பானைக்கு பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டு போகின்றீர்கள்?

நீங்கள் இருக்கும் ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன், எனக்கு தெரியாதா? என்னுடன் அறையில் இருந்தவர் டொலொயிலட்டுக்குள் போனால் லேசில் வரவேமாட்டர், இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு வந்த பின் பலவருடம் மனைவியை அழைக்க முயச்சித்தார் முடியவில்லை. சில வருங்களுக்கு முன்பு இறந்து போனார். வீசா இல்லாமல் மன அழுத்தத்தில் சிலர் குடித்தே இறந்து போனது எனக்கு தெரியும். இவர்களுடன் நானும் ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டு குடித்தவன் என்ற அடிப்ப்டயில் எனக்கு எல்லமே தெரியும்.
நிறைய விடயங்கள் எழுத முடியாது. 

குரைடனில் உள்ள் தென் இந்திய தமிழ் சட்ட விரோத குடியேடிகள் சிலர் இவ்வாறு தமிழ் நாட்டில் இருந்து வருபவர்களிடம் கேஸ் எழுதி பணம் கரைப்பதியும் கண்டுள்ளேன். பல்வேறு மலையாளிகளயும், இந்தியர்களியும் எனக்கு தெரியும், அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன், (எல்லேரும் அல்ல சில நல்ல உள்ளங்களையும் கண்டுள்ளேன்) 

மே 2009ல் நானும் எதுவும் செய்ய திறணியற்று தலையில் கை வைத்துக்கொண்டு  க்றைடன் ஸ்டேசனில் பல மணி நேரம் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தவந்தான்.

இலங்கையில் எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உட்படதவர்கள் சந்தோசமா விசாவுடன் இருக்கும்போது, பலர் உண்மையாக பாதிக்கப்ட்டு எந்தவித வீசாவும் இன்றி உள்ளார்கள். 

இங்கு கருதாடுவது சீமான் செய்தது சரியா பிழையா? ஆனாவசியமாக இணைத்தவர்க்கு ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினத்தல் தவறு. தவாறாக எடை போட்டு விட்டீர்கள்.

நன்றி.

100% உண்மை 👏👏👏👏👏👏 .

ஆனால் சோனகர்களும் இதற்கு விதி விலக்கல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரோவில் ஒரு தமிழ் பிரக்கிராசியார் இருந்தார். அவரது கடையை இழுத்து மூடிவிட்டார்கள்

இவர், பல தமிழ் கூட்டமைப்பு, தமிழக அரசியல்வாதிகள் கடிதங்களை வாங்கி வைத்து இருப்பார்.

ஒவ்வொரு கேசுக்கும், ஒவ்வொரு விதமா கடிதம் எழுதி, இந்த அரசியல் வாதிகள் கடிதங்கள் உடன் அனுப்பி வைப்பார்.

நாளைடைவில், பிரைன் செனிவிரத்னா போன்ற சிங்களவர் கடிதம் எல்லாம் கொடுத்தார்.

ஊர் விதானையார் கடிதம்..... டாக்குத்தர் கடிதம் எண்டு நீண்டது.....

கடைசீல, கடித விபரம் எப்படி முடிவுக்கு வந்தது எண்டால், பிரிட்டிஸ் தூதரகம், காத்திரமான நடவடிக்கை எடுத்து, தனியார் நிறுவனம் மூலமாக, கடிதங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு நடத்த தொடங்கிய பின்பு.

ஆகவே..... ஒரு அரசியல் கட்சித்தலைவராக சீமான், திருமாவளவன், வைக்கோ பொய் சொல்ல முடியாது. இல்லாத ஒன்றை நடந்ததாக கடிதம் கொடுத்து தமது நாடுகளில் சட்ட சிக்கலில் மாட்டமாட்டார்கள்.

ஒருவர் தமிழக அகதி முகாமில் இருந்தார் என்றால் குறித்த நாட்டு தூதரக அதிகாரிகள் அல்லது அவர்கள் முகவர்கள் விசாரிப்பார்கள்.

தவறான தகவல்களை கொடுத்த காலம் மலையேறி விட்டது.

இதனை இமிக்கிறேசன் பிராக்டிஸ் செய்யும் எந்த பிரக்கிராசியாரும் சொல்வார்.

பிரிட்டிஸ் தூதரகம் போலவே அணைத்து தூதரகமும் விசாரிக்கின்றன்.

அப்பாவை கொன்று விட்டார்கள், நான் தோணியில் ஏறி இந்தியா தப்பி இங்கே வந்தேன்.

அம்மாவும், தம்பியும் எங்கே என்றே தெரியவில்லை என்ற சோக கதைகளை, அப்பா, ஊரிலை விவசாயம் செய்யும் படத்தையும், தவறணைக்குள போய் கள் அடிக்கும் படத்தையும் காட்டி, அம்மா, தம்பி ஊர் வீட்டில் இருந்து கோவில் போற படத்தையும் காட்டி, இந்தியாவே போகவில்லை, ஏத்திய ஏஜன்சி விபரமும் கொடுத்து, பொய் சொன்னதாக கேசை நிராகரித்துள்ளார்கள்.

வை ஜி மகேந்திரன் நாடகம் நடாத்துகின்றோம் என்று, இலண்டணில், ரொரோண்டோவில் ரேடியோ விளம்பரம் செய்திருந்தார்.

அந்த திகதியில் நடக்கவில்லை. பார்த்தால், நாடக குழுவில் இருந்த சுமார் 34 பேருக்கு காசை வாங்கி விசா எடுத்து இருக்கிறார்.

அவர்களை ஏத்தி அனுப்பிவிட்டு, அவர் வரவில்லை, நாடகமும் நடக்கவில்லை.

இறுதியில் அமெரிக்க தூதரகம் அவர் மேல், விசா மோசடி செய்ததாக போலிஸ் முறைப்பாடு செய்தது.

மச்சான் ரஜனியை பிடித்து, கலைஞரை சந்தித்து தப்பினார்.

சீமானுக்கு அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, shanthy said:

தலைவர் பிரபாகரன் என்ற மனிதரை புரிந்து கொள்ளாத உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

நான் நானகவே இருக்கின்றேன். மற்றவர்களை புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.