Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இது சரிதான்.

ஆனால் இது அதற்கும் மேல்.

இது பிரெக்சிற்காரர்களை போல், டிரம்பை போல் தெரிந்து கொண்டே பொய் சொல்லி அதில் அரசியல் ஆதாயம் அடையும் போக்கு.

நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரியாரை பற்றி, சில தமிழ்நாட்டு சாதிகளை பற்றி ஒரு தொகுதி புலம்பெயர் மக்களிடம் இப்படியான பொய்யைத்தான் பரப்பி வைத்துள்ளார்கள்.

அதே போல் ஒரு பொய்தான் இதுவும். ஆனால் இந்த பொய்யை புலம்பெயர் தமிழர் இலகுவில் இனம் காண கூடியதாய் உள்ளது. 

 

 

இலங்கை தமிழர்களுக்கு  Asylum & Citizenship என்று பல விடயங்கள் தெரியும், ஆனால் இந்திய தமிழ் மக்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

எழுத்தில் கண்ணியம் இல்லையே அக்கா.... 🤗

இங்கே சீமானை எதிர்ப்பவர்கள் கூட, ஒருமையில் பேசி எல்லை தாண்டுவதில்லையே.... 🙂

கள்ள உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழனை கழுத்தறுத்தவர்கள் மீது வராத ரோசமும் மானமும் சீமான் என்றவுடன் கொம்பாய் முளைச்சு நிக்குது.😶

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

இலங்கை தமிழர்களுக்கு  Asylum & Citizenship என்று பல விடயங்கள் தெரியும், ஆனால் இந்திய தமிழ் மக்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்

மீரா,

eastham பக்கம் என்னுடன் வாருங்கள்.... எத்தனை மலையாளிகள், தமிழக, மலேசியா தமிழர்கள், ஈழத்தமிழர்களாக அகதி அந்தஸ்த்து எடுத்து குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள் என்று காட்டுகிறேன்.

கனடாவில் எவ்வளவு பேர் தமிழத்தில் இருந்து நம்மவர்களால், ஈழத்தமிழர்களாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று தெரியாதா என்ன?

புலிகள் போராட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து உதவியவர்கள் என்று சொல்லியே asylum அடித்துள்ளார்கள் பலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீரா,

eastham பக்கம் என்னுடன் வாருங்கள்.... எத்தனை மலையாளிகள், தமிழக, மலேசியா தமிழர்கள், ஈழத்தமிழர்களாக அகதி அந்தஸ்த்து எடுத்து குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள் என்று காட்டுகிறேன்.

கனடாவில் எவ்வளவு பேர் தமிழத்தில் இருந்து நம்மவர்களால், ஈழத்தமிழர்களாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று தெரியாதா என்ன?

நாதம்ஸ்

ஆம் இலங்கை தமிழர்களுடன் பழகியவர்களே இந்த விடயத்தில் கில்லாடிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீரா,

eastham பக்கம் என்னுடன் வாருங்கள்.... எத்தனை மலையாளிகள், தமிழக, மலேசியா தமிழர்கள், ஈழத்தமிழர்களாக அகதி அந்தஸ்த்து எடுத்து குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள் என்று காட்டுகிறேன்.

கனடாவில் எவ்வளவு பேர் தமிழத்தில் இருந்து நம்மவர்களால், ஈழத்தமிழர்களாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று தெரியாதா என்ன?

இங்கே ஜேர்மனியிலும்  நிறையப்பேர் இருக்கின்றார்கள். சில காலங்களுக்கு முன் என்னுடன் ஒரு மலையாளி வேலை செய்தவர். அவர் ஈழத்தமிழன் என்று சொல்லியே அகதி விண்ணப்பம் கோரியவர்.அவரின் மூலம் தான் இப்படி நிறையப்பேர் அசூல் அடிச்சு திரிகின்றனர் என தெரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

நாதம்ஸ்

ஆம் இலங்கை தமிழர்களுடன் பழகியவர்களே இந்த விடயத்தில் கில்லாடிகள்.

1985 மே மாதம் 31ம் திகதியுடன் இலங்கையர்களுக்கான, entry visa வை பிரித்தானியா நிறுத்தியது. ஏப்ரல், மே மாதத்தில் எவ்வளவு தென் இந்தியர்கள் கொழும்பு வந்து, கள்ள பாஸ்போர்ட் எடுத்து, இங்கே வந்து சேர்ந்தார்கள் என்று விபரத்தினை, தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் தர்மகத்தா, ஆறு திருமுருகனை சந்தித்தால்  கேட்டு பாருங்கள். 

திருமுருகன், கனடா செல்ல, அமெரிக்க பிசினஸ் விசா எடுத்து இருந்தார். ஆசை யாரை விட்டது.

அப்படியே சுவிஸ் போய், நண்பர்கள், உறவினர்களை பார்த்து, போவம் என்று சுவிஸ் எம்பஸி போய், அவர் அமெரிக்கன் எமபசிக்கு கொடுத்த ஆவணத்தில் இருந்த தவறை கண்டுபிடித்த, சிங்கள பெண், விசா தாறன் இரு என்று சொல்லி, உள்ள போய் அமெரிக்கன் எம்பசிக்கு தகவல் கொடுக்க, வந்து கான்சல் பண்ணி விட்டு போனார்கள்.

பிறகு விசா எடுத்து, சகல நாடுகளுக்கும் ஆன்மிகவாதியாக வந்த அவர், அந்த சம்பவம், தன்னை துர்க்கை அம்மன் தடுத்து ஆட்க்கொண்ட தருணம் என்று சொன்னார் பின்னர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய சிங்களவர்களும் தாம் தமிழர் என்று சொல்லி அசேலம் கேட்டதும் உண்டு. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நிறைய சிங்களவர்களும் தாம் தமிழர் என்று சொல்லி அசேலம் கேட்டதும் உண்டு. 😁

கண பேர்... இருக்கினம்....

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நிரந்தர வதிவிட உரிமை கொடுக்கும் போது போலீஸ் Clearance (எந்த நாட்டில்  இருந்து வந்தாரோ அந்த நாட்டு ..) இவர் ஆபத்தானவர் இல்லை, என்ற  விளக்கம், விபரம். திரடட மாடடார்களோ ? .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிலாமதி said:

 நிரந்தர வதிவிட உரிமை கொடுக்கும் போது போலீஸ் Clearance (எந்த நாட்டில்  இருந்து வந்தாரோ அந்த நாட்டு ..) இவர் ஆபத்தானவர் இல்லை, என்ற  விளக்கம், விபரம். திரடட மாடடார்களோ ? .
 

அகதிகளாக வந்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

இப்போது நீங்கள் கனடாவுடன் மேலதிகமாக இலங்கை குடிஉரிமை கேட்டால், அதுக்கு, கனடிய போலீஸ் clearance கொடுக்க வேண்டும்.

பிரித்தானியாவுக்கு, கடந்த வாரம் இருநாட்களில் மட்டும் 1200 அளவில், அகதிகள் பிரான்சில் இருந்து வந்துள்ளனர். 

உயிரை கையில் பிடித்தபடி கடலில் மிதக்கும் ரப்பர் படகுகளில் வருகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனிதாபிமானம் இங்கே இருக்கிறது.

போலந்து நாட்டில் இன்று சட்டம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளார்கள். தமது நாட்டுக்குள் அகதியாக வரும் யாரையும், வந்த வழியே 24 மணிநேரத்தினில் திருப்பி அனுப்ப போவதாக.

அவரகள் இணைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் தவறான சட்டம் என்று எச்சரித்துள்ளது. அதேவேளை, போலந்து நாட்டின் எல்லையோரத்தில், தங்கி மறைவாக, இருந்தவர்களில் குளிரில் இறந்த 6 பேர் உடலை கண்டு எடுத்துள்ளார்கள்.

கடந்த வாரம், பெலாரஸ் நாட்டு எல்லை காவல் படை லிதுவேனியா நாட்டினுள் துரத்தி அடித்த வகையில், ஒரு இலங்கையர் இறந்து போனார்.

அகதி வாழ்வு அவலமிக்கது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்  கொடுத்த...பரிசீலனை கடிதங்கள்,
அயல் நாட்டு, உயர் பதவிகளில் இருக்கும் தமிழரை சென்றடைந்து...
அதன் மூலம், பலன் கிட்டியிருக்கலாம்.

அதனை... இப்போது வெளிப்படையாக சொல்வது, சரியல்ல.

அதன் மூலம்... அவர்களின், குடியுரிமை... 
மீண்டும்,  பறிக்கப் படக் கூடிய.. வாய்ப்புகள் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

சீமான்  கொடுத்த...பரிசீலனை கடிதங்கள்,
அயல் நாட்டு, உயர் பதவிகளில் இருக்கும் தமிழரை சென்றடைந்து...
அதன் மூலம், பலன் கிட்டியிருக்கலாம்.

அதனை... இப்போது வெளிப்படையாக சொல்வது, சரியல்ல.

அதன் மூலம்... அவர்களின், குடியுரிமை... 
மீண்டும்,  பறிக்கப் படக் கூடிய.. வாய்ப்புகள் உள்ளது.

மீராவுக்கு மேலே, taken out of context ஆக இருக்கலாம் என்று சொல்லி இருந்தேன்.

அதுதான் கதை போலுள்ளது. யாரோ தமக்கு தேவையானதை வெட்டி, ஒட்டி உள்ளனர்.

15:30 யில் இருந்து கேட்டுப்பாருங்கள்.

என்ன சொல்கிறார் என்றால், சுருக்கமாக, ஒரு ஆங்கீகாரம் கொண்ட அரசியல் கட்சியாக தான் கொடுக்க கூடிய கடிதங்களை வெளிநாடுகளில் அகதி விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றன. 

ஆனால் 35 வருடமாக இங்கே அகதி முகாமில் இருக்கும் ஈழத்தமிழனுக்கு வைக்கும் குடியுரிமைக் கோரிக்கை மீது எதுவுமே நடக்கவில்லை என்கிறார்.

இதனை தான் சொல்வது....தோப்பை விட்டு, தனி மரத்தினை மட்டும் பார்க்கும் வேலை என்று.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

அகதிகளாக வந்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

இப்போது நீங்கள் கனடாவுடன் மேலதிகமாக இலங்கை குடிஉரிமை கேட்டால், அதுக்கு, கனடிய போலீஸ் clearance கொடுக்க வேண்டும்.

பிரித்தானியாவுக்கு, கடந்த வாரம் இருநாட்களில் மட்டும் 1200 அளவில், அகதிகள் பிரான்சில் இருந்து வந்துள்ளனர். 

உயிரை கையில் பிடித்தபடி கடலில் மிதக்கும் ரப்பர் படகுகளில் வருகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனிதாபிமானம் இங்கே இருக்கிறது.

போலந்து நாட்டில் இன்று சட்டம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளார்கள். தமது நாட்டுக்குள் அகதியாக வரும் யாரையும், வந்த வழியே 24 மணிநேரத்தினில் திருப்பி அனுப்ப போவதாக.

அவரகள் இணைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் தவறான சட்டம் என்று எச்சரித்துள்ளது. அதேவேளை, போலந்து நாட்டின் எல்லையோரத்தில், தங்கி மறைவாக, இருந்தவர்களில் குளிரில் இறந்த 6 பேர் உடலை கண்டு எடுத்துள்ளார்கள்.

கடந்த வாரம், பெலாரஸ் நாட்டு எல்லை காவல் படை லிதுவேனியா நாட்டினுள் துரத்தி அடித்த வகையில், ஒரு இலங்கையர் இறந்து போனார்.

அகதி வாழ்வு அவலமிக்கது....

கனடாவில் நிரந்தர விஸாகொடுக்க இலங்கை  யை சேர்ந்த படியால்  இலங்கை clearance    கேட்பர் இந்திய நாட்டுக்கு காரன் இலங்கைபாஸ் போட்டில் போய் பிரான்சில் நிரந்தர விசா கேடடால் எந்த நாட்டு போலீஸ் கிளியரன்ஸ் கொடுப்பார்   .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் சிலர் வெளிநாட்டில் இருந்து இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்து பணம் டிபபோசிட் செய்து குடியுரிமை பெற்று கொண்டனர் என்று கேள்விபட்டேன் . நான் அதை  அவர்கள் இலங்கை  Citizenship  தான் பெற்று கொண்டார்கள் என்று விளங்கி கொண்டுவிட்டேன்.   இப்போது சீமானின் தம்பிகள் சொன்ன பின்பு தான் தெரியும் குடியுரிமை என்றால் அகதியாக இருப்பதிற்கான அனுமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தியாகிராமப்புற மக்களுக்கு அகதிஅந்தஸ்த்து எண்டா என்னெண்டு தெரியா.. குடி உரிமைஎண்டா கொஞ்சம் விளங்கும்.. அவங்களுக்கு ஏற்றமாதிரி பேசி இருக்கிறார்..

ஆகவே இந்தியாகிராமப்புற தமிழ் மக்களை முட்டாளாக வைத்திருந்தே அரசியல் செய்ய விரும்புகிறர் சீமான்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆகவே இந்தியாகிராமப்புற தமிழ் மக்களை முட்டாளாக வைத்திருந்தே அரசியல் செய்ய விரும்புகிறர் சீமான்.😂

இப்ப தமிழ் நாட்டிலை இருக்கிற  பெரிய/சின்னக் கட்சிகள் என்ன செய்யுது? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிலாமதி said:

கனடாவில் நிரந்தர விஸாகொடுக்க இலங்கை  யை சேர்ந்த படியால்  இலங்கை clearance    கேட்பர் இந்திய நாட்டுக்கு காரன் இலங்கைபாஸ் போட்டில் போய் பிரான்சில் நிரந்தர விசா கேடடால் எந்த நாட்டு போலீஸ் கிளியரன்ஸ் கொடுப்பார்   .  

உங்கள் சந்தேகம் எனக்கும் இருந்தது ஆனால் குறித்த பெயரில் உள்ள நபர் இலங்கையை சேர்ந்தவர் ஆனால் சரியான தரவுகள் அற்றவர்  அல்ல என்று முடித்துக்கொள்வார்களாம் .கொஞ்சம் குழப்பம்தான் .

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

கள்ள உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழனை கழுத்தறுத்தவர்கள் மீது வராத ரோசமும் மானமும் சீமான் என்றவுடன் கொம்பாய் முளைச்சு நிக்குது.😶

வணக்கம் அண்ணா,

கள்ள உண்ணாவிரதம் இருந்தவர்கள் யாரும், ஈழத்தமிழர்களை இரட்சிக்க வந்ததாகவும், தலைவரின் அவதாரமாகவும் சொல்லிக் கொள்வதில்லையே? அதனால் அவர்கள் எப்படிப் போனால் நமக்கென்ன?

பலரும் அகதி அந்தஸ்தா, குடியுரிமையா என்ற ஆராய்சியில் இறங்கி விட்டிருப்பது தெரிகின்றது.. அது தேவையற்றது என்பது என் கருத்து... பல கடித, ஆவணங்களில் ஒன்றாக சிலருக்கு நாம் தமிழர் கடிதமும் உதவி இருக்கலாம்... முன்னாளில் நாம் தமிழரில் இணைந்து பயணித்த அய்யநாதன் தான் பலமுறை சீமான் கையெத்துப் பெற்று கடிதங்களை நாடு கடத்தப்பட இருந்தவர்களுக்கு அனுப்பியதாக கூறியுள்ளார்...

சரி. திரு.சீமான் இப்போது இதனை கூற காரணம் என்ன? என் தனிப்பட்ட ஆய்வு (my own analysis).

நாம் தமிழர் இயக்கம் பின்னர் கட்சி, ஈழத்தமிழர் பொருளாதாரத்தைக் கொண்டு கட்டி எழுப்பபட்ட, வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கென தனியான ஆராய்ச்சி எதுவும் தேவையற்றது...

கட்சி ஓரளவில் வளர்ந்து பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்கத்தொடங்கியதும் நாம் தமிழர் தொனி (tone) கொஞ்சம் மாறத்தொடங்கியது.. ஈழத்தமிழரும் கொஞ்சம் தருவதாக...

இன்று, ஈழத்தமிழருக்கு குடியுரிமை பெற்றுக்கொடுத்ததே நான் தான் என சொல்வதன் பொருள், நாளை நான் ஈழத்தை பெற்றுத் தருவேணே இல்லையே, பணம் தரவேண்டியது உங்கள் கடமை என ஒரு கருத்தியலை உருவாக்குவதற்கான முதற்படி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் வைக்கோ கடிதம் கொடுத்து, தமிழகத்தில் ஈழ அகதி முகாமில் இருந்து வந்து அகதி அந்தஸ்து கிடைத்த ஒருவரை எனக்கு தெரியும். 

பிரபாகரன் அண்ணர், மனோகரன், கப்பலில் வேலை செய்து, தமிழகத்துக்கு, தாய், தந்தை பார்க்க போய் வந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவரை கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்த திட்டம் போட்டது, மத்திய அரசு.

நாம் தமிழரின் பொது செயலாளர், அய்யா தடா சந்திரசேகர், டெல்லிக்கு அழைத்து போய், UNHRC மூலம் டென்மார்க் தூதரகத்தினை அணுகி, தேவையான கடிதங்களை, பத்திரங்களை கொடுத்து, அகதி அந்தஸ்து வாங்கி கொடுத்து, அனுப்பி வைத்தனர்.

அது எப்படி நடந்தது? 🤔

***

அகதிகளாக, வந்திருந்தால் தெரியும், அவர்கள் அவலம். கிடைக்கும் எந்த கடிதத்தினையும் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

கிடைத்த பின்னர், அதனால் தான் கிடைத்தது என்று, நன்றியுடன் சொல்லி இருப்பார்கள். கொடுத்தவர்கள் மகிழ்வுடன், வேறு யாருக்கும் அதே உதவி செய்வார்கள் என்று.

அட, நாம வந்து சேர்ந்து விட்டோம்.... அகதி அந்தஸ்து கிடைத்து, பிள்ளைகளையும் வளர்த்து விட்டோம். யாரு எக்கேடு கேட்டால் என்ன என்று நினைப்பது, துடிக்கும் அகதிகளுக்கு கிடைக்கும், சிறு, கொழு கொம்பை இல்லாமல் செய்யும் ஈனச் செயல்.

உதவி செய்யாவிடில், உபத்திரவம் செய்யாமல், கடந்து போவது நல்லது. 

நான். விசா எடுத்து, மேல் படிப்பு படிக்க வந்தனான் எல்லோ, பல்கலைக்கழக படிப்பு முடித்து, migrate பண்ணின ஆள் எல்லோ என்று அடித்து விடுபவர்களானால்.... பெரும் தன்மையுடன் நகர்ந்து செல்லலாமே...

திரியை ஆரம்பித்தவரோ, தென்பகுதியில் பிறந்த... மத்திய கிழக்கில்....வேலை பார்க்கும், அகதி அவலம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவர்.

 

 

நாதம் இன்னும் கள விதிகளைப் படிக்கவில்லைப் போல:

ஒருவர் உங்கள் கருத்துக்குப் பதில் எழுதிய பின்னர் மீளப் போய் உங்கள் கருத்தை மாற்றுவது தவறு!

பொதுவான திரியில் "எனக்கு முதுகு சொறி அல்லது விலகிப் போ" என்பதும் விதி மீறல்! இதை பற்றி ஒரு நாற்சந்திக் காவியமே இருக்கிறது!

எனவே காணொளி வடிவில் வரும் வரை இருக்காமல் போய் விதிகளை வாசியுங்கோ!

தவித்த அகதிக்குக் கிடைத்த சிறு குச்சி "நான் மட்டும் தான் கொம்பானேன்" என்று பொய் சொல்வது மிகுந்த "பெருந்தன்மை" என நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?😎 முடிவாக நாம் சொல்வது, சீமானின் வழமையான புழுகு மூட்டைகளில் இது ஒன்று அவ்வளவே!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் வழமை போல் சீமான் பொய் சொல்கிறார் என்று நாம் சொன்னால் - “ஐயோ அகதிகள் பாவம்” என சம்பந்தமில்லாமல் நீலிகண்ணீர் வடிக்கிறார்🤣.

மேலே யார் அகதிகள் பற்றி தப்பாக பேசியது? யாருமில்லை.

இங்கே பேச்சு சீமானின் பொய்யை பற்றி மட்டுமே.

அகதிகள் பற்றிய கரிசனை எல்லாருக்கும் உண்டு. 

மேலே மிக தெளிவாக குறிப்பிட்டேன் சீமான் கடிதம் கொடுத்திருந்தால் அது ஒரு வழக்கின் ஆதாரம் என்பதாக மட்டுமே கருதப்பட்டிருக்கும். 

ஏற்கனவே இலங்கையில் உயிராபத்து உள்ளவராக உள்ள இலங்கையர் ஒருவரை - அவரின் உயிருக்கு ஆபத்து என்பதை நிறுவ சீமானின் கடிதத்தையும் ஒரு சாட்சியாக நீதி மன்றம் ஏற்றிருக்கலாம்.  இலங்கை எம்பிகள் கொடுக்கும் கடிதம், இலங்கை வக்கீல்கள் கொடுக்கும் கடிதம் போல, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சின்ன கட்சியின் தலைவரின் கடிதம் என்ற அளவில் அதை நீதி மன்று கையாண்டிருக்கும்

ஆனால் சீமான் சொல்வது போல் ஏதோ இவர் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் உடனே அந்தஸ்து கொடுத்தது என்பது விளக்கம் இல்லாத மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலைதான்.

அதில் கூட 10 வருடத்துக்கு முன் ஒரு தடவை இலங்கை போன சீமானுக்கு - இப்போ இலங்கையில் ஒருவருக்கு உயிராபத்து என்பது எப்படி தெரியும் என்ற கேள்வி நிச்சயம் எழும். 

ஆகவே 400 பேர் என்பதும் நம்பவியலாதது.

மூன்று நாட்டில் 400 கடிதம் என்றால் ஒரு நாட்டில் அண்ணளவாக 125 கடிதம். 

கொடுக்கும் கடிதம் ஒவ்வொன்றிலும் அந்த நபரை தனக்கு எப்படி தனிப்பட்டு தெரியும், அவருக்கு என்ன ஆபத்து, அதைதான் இந்தியாவில் இருந்தபடி எப்படி தனிப்பட்டு அறிந்தேன் என விளக்க வேண்டும்.  சும்மா போட்டோ கொப்பி மாரி அடித்து அனுப்பினால் அதை கனம் பண்ண மாட்டார்கள். அல்லது கூலிக்கு கடிதம் கொடுக்கும் professional witness என்றே கருதுவார்கள்.

ஏலவே சீமான் பல பொய்களை நா கூசாமல் சொல்பவர் என்பதால் இதையும் ஒரு மிகைப்படுத்தல் என்றே பார்க்க முடியும்.

கெளரவம்,  விதி, போன்ற சினிமா படங்கள் போலன்றி evidence ஐ ஒரு நீதி மன்று எப்படி அணுகும் என்ற அடிப்படை புரிதல் இருந்தாலே சீமானின் 400 பேர், கப்ஸா என்பது வடிவாக புரியும். 

சீமான் இலங்கையில் சந்தித்த ஒரு சிலரின் வழக்குகளுக்கு இப்படி கடிதம் கொடுத்திருக்கலாம்.

சீமான் பின் வருமாறு கூறி இருந்தால் அதில் யாரும் பிழை காண முடியாது. 

“எனக்கு தெரிந்த சில ஈழத்தமிழர்களுக்கு உயிராபத்து என்பதை உறுதி செய்து நான் கொடுத்த்த கடிதத்தை, ஆதாரங்களில் ஒன்றாக ஏற்று இந்த நாடுகள் அவர்களுக்கு தஞ்சம் அளித்தன”. 

ஆனால் சீமான் சொன்னது? ஏதோ தான் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் எல்லாம் உடனே குடியுரிமை கொடுக்கும் என்பதான சோடிப்பு.

இதைதான் கருணாநிதியும் செய்தார். 

ஆனால் கருணாநிதி பரம்பரை கள்ளன் - லேசில் மாட்ட மாட்டார்.

சீமான் பஞ்சத்துக்கு கள்ளன் - பொய் சொல்லி மக்களை ஏய்க்க வேண்டும் என்று தெரிகிறது ஆனால் எப்படி மாட்டு படாமல் பொய் சொல்வது என தெரியவில்லை🤣.

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

அன்று மட்டுமல்ல இன்றும் தலைவர் பிரபாகரனையும் ஆமை ,ஆமைக்கறி என நக்கலடிக்கும் கோஷ்டிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

தலைவர் பிரபாகரன் என்ற மனிதரை புரிந்து கொள்ளாத உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

சீமான் மீதான உங்கள் பக்தியை நீங்கள் வெளிப்படுத்துங்கோ. இல்லை சீமானே கடவுளாகவே வணங்குங்கள். அது உங்கள் உரிமை. யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

10 hours ago, Nathamuni said:

எழுத்தில் கண்ணியம் இல்லையே அக்கா.... 🤗

இங்கே சீமானை எதிர்ப்பவர்கள் கூட, ஒருமையில் பேசி எல்லை தாண்டுவதில்லையே.... 🙂

பாருங்கள், தாயக உள்ளூர் அதிகளுக்காக, நேசக்கரம் அமைப்பு நடத்தும், உங்கள் சமூக பொறுப்பு நிலைப்பாடு, உங்கள் இந்த தேவையில்லாத கருத்துக்களால் சிக்கலுக்கு உள்ளாகும் என்று முன்பு, உரிமையுடன் சொல்லி இருந்தேன்.

மேலே முல்லைநிலவன் கேள்வியினை நீங்களே கேட்டு பெற்றுக் கொண்டீர்கள் என்று கருதுகிறேன்.

வருந்தத்தக்கது. 😰

முதலில் உங்கள் தெய்வம் சீமானை நாகரீகமான அரசியலை செய்யச் சொல்லுங்கோ நாதமுனி. உங்கள் தலைவர் சீமான் வார்த்தையில் வராத ஒருமையா நான் எழுதிவிட்டேன். 

நிலவு இருட்டு வெளிச்சம் என பக்கம் பக்கமாக நீட்டி புலம்பும் அனாமதேயம்  என் கருத்துக்கு பதில் சொல்லாமல் புலம்புகிறது. தனது இயலாமை 🐢 அல்லது நீங்கள் என்ன சொன்னாலும் எனது கருத்து இதுதான்.

இன்னும் அப்பாவித்தனமாக 🐢 நம்பும் உங்களுடன் கோபிக்கவில்லை. மன்னிக்கவும் இப்படி எழுதியமைக்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

 

திரியை ஆரம்பித்தவரோ, தென்பகுதியில் பிறந்த... மத்திய கிழக்கில்....வேலை பார்க்கும், அகதி அவலம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவர்.

 

 

நாதமுனி என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? செய்தியை யார் வேண்டுமென்றாலும் இணைக்கலாம்
அவருடைய பின்புலத்தை ஏன் ஆராய்கின்றீர்கள்? தென்னிலங்கையில் பிறந்தேன், மத்திய கிழக்கில் வேலை செய்கின்றேன். ஆகவே எனக்கு யூ கே அகதி வாழ்வைபற்றி தெரியாது அப்படியா? சமீப‌ காலமாக இப்படியான கருத்துக்கள் எழுதி ஏன் அம்பானைக்கு பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டு போகின்றீர்கள்?

நீங்கள் இருக்கும் ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன், எனக்கு தெரியாதா? என்னுடன் அறையில் இருந்தவர் டொலொயிலட்டுக்குள் போனால் லேசில் வரவேமாட்டர், இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு வந்த பின் பலவருடம் மனைவியை அழைக்க முயச்சித்தார் முடியவில்லை. சில வருங்களுக்கு முன்பு இறந்து போனார். வீசா இல்லாமல் மன அழுத்தத்தில் சிலர் குடித்தே இறந்து போனது எனக்கு தெரியும். இவர்களுடன் நானும் ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டு குடித்தவன் என்ற அடிப்ப்டயில் எனக்கு எல்லமே தெரியும்.
நிறைய விடயங்கள் எழுத முடியாது. 

குரைடனில் உள்ள் தென் இந்திய தமிழ் சட்ட விரோத குடியேடிகள் சிலர் இவ்வாறு தமிழ் நாட்டில் இருந்து வருபவர்களிடம் கேஸ் எழுதி பணம் கரைப்பதியும் கண்டுள்ளேன். பல்வேறு மலையாளிகளயும், இந்தியர்களியும் எனக்கு தெரியும், அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன், (எல்லேரும் அல்ல சில நல்ல உள்ளங்களையும் கண்டுள்ளேன்) 

மே 2009ல் நானும் எதுவும் செய்ய திறணியற்று தலையில் கை வைத்துக்கொண்டு  க்றைடன் ஸ்டேசனில் பல மணி நேரம் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தவந்தான்.

இலங்கையில் எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உட்படதவர்கள் சந்தோசமா விசாவுடன் இருக்கும்போது, பலர் உண்மையாக பாதிக்கப்ட்டு எந்தவித வீசாவும் இன்றி உள்ளார்கள். 

இங்கு கருதாடுவது சீமான் செய்தது சரியா பிழையா? ஆனாவசியமாக இணைத்தவர்க்கு ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினத்தல் தவறு. தவாறாக எடை போட்டு விட்டீர்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

 

நாதமுனி என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? செய்தியை யார் வேண்டுமென்றாலும் இணைக்கலாம்
அவருடைய பின்புலத்தை ஏன் ஆராய்கின்றீர்கள்? தென்னிலங்கையில் பிறந்தேன், மத்திய கிழக்கில் வேலை செய்கின்றேன். ஆகவே எனக்கு யூ கே அகதி வாழ்வைபற்றி தெரியாது அப்படியா? சமீப‌ காலமாக இப்படியான கருத்துக்கள் எழுதி ஏன் அம்பானைக்கு பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டு போகின்றீர்கள்?

நீங்கள் இருக்கும் ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன், எனக்கு தெரியாதா? என்னுடன் அறையில் இருந்தவர் டொலொயிலட்டுக்குள் போனால் லேசில் வரவேமாட்டர், இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு வந்த பின் பலவருடம் மனைவியை அழைக்க முயச்சித்தார் முடியவில்லை. சில வருங்களுக்கு முன்பு இறந்து போனார். வீசா இல்லாமல் மன அழுத்தத்தில் சிலர் குடித்தே இறந்து போனது எனக்கு தெரியும். இவர்களுடன் நானும் ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டு குடித்தவன் என்ற அடிப்ப்டயில் எனக்கு எல்லமே தெரியும்.
நிறைய விடயங்கள் எழுத முடியாது. 

குரைடனில் உள்ள் தென் இந்திய தமிழ் சட்ட விரோத குடியேடிகள் சிலர் இவ்வாறு தமிழ் நாட்டில் இருந்து வருபவர்களிடம் கேஸ் எழுதி பணம் கரைப்பதியும் கண்டுள்ளேன். பல்வேறு மலையாளிகளயும், இந்தியர்களியும் எனக்கு தெரியும், அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன், (எல்லேரும் அல்ல சில நல்ல உள்ளங்களையும் கண்டுள்ளேன்) 

மே 2009ல் நானும் எதுவும் செய்ய திறணியற்று தலையில் கை வைத்துக்கொண்டு  க்றைடன் ஸ்டேசனில் பல மணி நேரம் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தவந்தான்.

இலங்கையில் எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உட்படதவர்கள் சந்தோசமா விசாவுடன் இருக்கும்போது, பலர் உண்மையாக பாதிக்கப்ட்டு எந்தவித வீசாவும் இன்றி உள்ளார்கள். 

இங்கு கருதாடுவது சீமான் செய்தது சரியா பிழையா? ஆனாவசியமாக இணைத்தவர்க்கு ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினத்தல் தவறு. தவாறாக எடை போட்டு விட்டீர்கள்.

நன்றி.

100% உண்மை 👏👏👏👏👏👏 .

ஆனால் சோனகர்களும் இதற்கு விதி விலக்கல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரோவில் ஒரு தமிழ் பிரக்கிராசியார் இருந்தார். அவரது கடையை இழுத்து மூடிவிட்டார்கள்

இவர், பல தமிழ் கூட்டமைப்பு, தமிழக அரசியல்வாதிகள் கடிதங்களை வாங்கி வைத்து இருப்பார்.

ஒவ்வொரு கேசுக்கும், ஒவ்வொரு விதமா கடிதம் எழுதி, இந்த அரசியல் வாதிகள் கடிதங்கள் உடன் அனுப்பி வைப்பார்.

நாளைடைவில், பிரைன் செனிவிரத்னா போன்ற சிங்களவர் கடிதம் எல்லாம் கொடுத்தார்.

ஊர் விதானையார் கடிதம்..... டாக்குத்தர் கடிதம் எண்டு நீண்டது.....

கடைசீல, கடித விபரம் எப்படி முடிவுக்கு வந்தது எண்டால், பிரிட்டிஸ் தூதரகம், காத்திரமான நடவடிக்கை எடுத்து, தனியார் நிறுவனம் மூலமாக, கடிதங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு நடத்த தொடங்கிய பின்பு.

ஆகவே..... ஒரு அரசியல் கட்சித்தலைவராக சீமான், திருமாவளவன், வைக்கோ பொய் சொல்ல முடியாது. இல்லாத ஒன்றை நடந்ததாக கடிதம் கொடுத்து தமது நாடுகளில் சட்ட சிக்கலில் மாட்டமாட்டார்கள்.

ஒருவர் தமிழக அகதி முகாமில் இருந்தார் என்றால் குறித்த நாட்டு தூதரக அதிகாரிகள் அல்லது அவர்கள் முகவர்கள் விசாரிப்பார்கள்.

தவறான தகவல்களை கொடுத்த காலம் மலையேறி விட்டது.

இதனை இமிக்கிறேசன் பிராக்டிஸ் செய்யும் எந்த பிரக்கிராசியாரும் சொல்வார்.

பிரிட்டிஸ் தூதரகம் போலவே அணைத்து தூதரகமும் விசாரிக்கின்றன்.

அப்பாவை கொன்று விட்டார்கள், நான் தோணியில் ஏறி இந்தியா தப்பி இங்கே வந்தேன்.

அம்மாவும், தம்பியும் எங்கே என்றே தெரியவில்லை என்ற சோக கதைகளை, அப்பா, ஊரிலை விவசாயம் செய்யும் படத்தையும், தவறணைக்குள போய் கள் அடிக்கும் படத்தையும் காட்டி, அம்மா, தம்பி ஊர் வீட்டில் இருந்து கோவில் போற படத்தையும் காட்டி, இந்தியாவே போகவில்லை, ஏத்திய ஏஜன்சி விபரமும் கொடுத்து, பொய் சொன்னதாக கேசை நிராகரித்துள்ளார்கள்.

வை ஜி மகேந்திரன் நாடகம் நடாத்துகின்றோம் என்று, இலண்டணில், ரொரோண்டோவில் ரேடியோ விளம்பரம் செய்திருந்தார்.

அந்த திகதியில் நடக்கவில்லை. பார்த்தால், நாடக குழுவில் இருந்த சுமார் 34 பேருக்கு காசை வாங்கி விசா எடுத்து இருக்கிறார்.

அவர்களை ஏத்தி அனுப்பிவிட்டு, அவர் வரவில்லை, நாடகமும் நடக்கவில்லை.

இறுதியில் அமெரிக்க தூதரகம் அவர் மேல், விசா மோசடி செய்ததாக போலிஸ் முறைப்பாடு செய்தது.

மச்சான் ரஜனியை பிடித்து, கலைஞரை சந்தித்து தப்பினார்.

சீமானுக்கு அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, shanthy said:

தலைவர் பிரபாகரன் என்ற மனிதரை புரிந்து கொள்ளாத உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

நான் நானகவே இருக்கின்றேன். மற்றவர்களை புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.