Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன்… இது, 200’வது பதிவை தொட்டுள்ளது. 😁

சீமான் என்றாலே… கெத்து தான். 👍🏼

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

கோஷான்,

தமிழ் ரசிகர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்ட  'மெனிக்கே மகே ஹித்தே...' என்ற பாடல் சிங்கள இராணுவத்தை புகழ்ந்து பாடப்பட்ட பாடல் அல்ல. அது ஒரு பெண்ணைப் பற்றிய சாதாரண பாடல்.

சிங்கள இராணுவத்தை புகழ்ந்த வரிகளைக் கொண்ட பாடல் பெரியளவில் பிரபலமாகவில்லை. மெனிக்கே பாடலின் பின் தான் அவர் முன்னர் பாடிய பாடல்களை தேடிப் பார்த்து கேட்க முனைகின்றனர்.

மெனிக்கே பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

 

 

https://www.lyricstrip.com/manike-mage-hithe-lyrics-english-translation/

தெளிவாக்கியமைக்கு நன்றி நிழலி. இந்த பாடல் வெளி வந்ததும் ஒருக்கா சில வரிகள் கேட்டேன் குரல் manufactured pop போல செயற்கையாக இருந்தது நூத்து விட்டேன்.

பிறகு பிரசன்ன சில்வாவின் மகள் என வாசித்தேன். அத்தோடு அதை விட்டு விட்டேன். பின்னர் பொஎன்சேக்கா கூறியதை பற்றி வாசித்தேன்.

அவர்கள் அப்படித்தனே இருப்பார்கள் என நினைத்து கடந்து போனேன். 

மேலே சசி எழுதியதை இந்த பாடலில்ன் வரிகள் என தவறாக புரிந்து கொண்டேன்.

ஆனால் என் பார்வையில் மாற்றம் இல்லை.

பிரசன்ன சில்வாவின் மகள் இந்த நிலைப்பாட்டில் இருப்பது, கோட்டவுக்கு பாடி காட்டுவது அதிசயம் இல்லை. இதற்கு மாறான நிலைப்பாட்டில் அவர் இருந்தால்தான் அதிசயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

தான் கொடுத்த கடிதத்திற்கு பிரான்ஸ் டென்மார்க் சுவிஸ்லாந்து நாடுகள் குடியுரிமை கொடுக்கின்றது என்ற முழுமையான பொய்  பாடல் இசையால் திசைமாறியது சீமானுக்கு நல்ல  நிம்மதி😂

வணக்கம் விளங்க நினைப்பவர்,
இது பொதுவாக சொல்லப்பட்ட கருத்து உங்களையோ அல்லது யாரையும் குறிப்பிட்டு அல்ல. 🙏

சீமான், ஜாமான், தேசியம், ஜோசியம் எல்லா திரிகளுக்கும் இது பொருந்தும். யாழ்கள நிபந்தனைகளில் அனைத்து விடயங்களும் தெளிவாக விளங்கப்படுத்தியும் மீண்டும் மீண்டும் ஆரோக்கியமற்ற கருத்துகளும் பதில்களுமாக இருப்பதும், அதுவே தனிநபர் தாக்குதல்களாக மாறுவதும் கவலைக்குரியதாகவே உள்ளது. 
யாழ்களம்  பக்க சார்பான செய்திகள் இட்டு, கள உறவுகளிடையே கருத்து மோதல்களை வளரவிட்டு சுகம் காணும் 3ஆம் தர களமல்ல. இதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.

இந்தப் போக்கு நீடித்தால் நிச்சயமாக யாழ்களத்தை காலவோட்டத்தில்  மூட வைக்கும் அபாயம் உள்ளது. இது பற்றி நிர்வாகம் ஓரளவுக்கு புரிந்தும் கொண்டிருக்கும். 
ஒரு சிறு குழுவாக இருந்து கள உறுப்பினர்கள் தமக்குள் தேவையற்று தொடர்ச்சியாக அடிபடுவதும், பாவம் மட்டுறுத்தினர்கள்  தங்கள் பொன்னான நேரத்தை இக்குழுவாதங்களை கண்காணிப்பதற்கும், மட்டுறுத்துவதற்கும்  மினக்கெடுவதும் தொடர்ந்து சாத்தியப்படாது. 
எனவே இவற்றை புரிந்து கொண்டு ஆக்கபூர்வமாக கருத்தாடல் செய்வோம்.

எமக்கிருக்கும் ஒரு நல்ல தளத்தையும் வலுவிழக்கப்பண்ணாமல் இருப்பது நமது கடமை இல்லையா? 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

சீமான், ஜாமான், தேசியம், ஜோசியம் எல்லா திரிகளுக்கும் இது பொருந்தும்.

இதுல சில நல்ல திரியள நான் மிஸ் பண்ணிட்டன் போல இருக்கே🤣.

Link to comment
Share on other sites

On 19/10/2021 at 01:13, goshan_che said:

நிச்சயமாக இல்லை துல்பன்.

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு சாதாரண சிங்கள பாடகியின் ஏதோ ஒரு பாட்டுக்கும், ஒரு படைதளபதியின் மகள் தன் தந்தையை, அவரின் படைகளை புகழ்ந்து glorify பண்ணி பாடிய பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

@goshan_che @பிரபா ஏற்கனவே நிழலி கூறியபடி நான் குறிப்பிட்டது “மெனிக்கே மஹே ஹித்தா” என்ற ஜனரஞ்சக பாடலை மட்டும் தான். தமிழ் ரசிகர்களும் அந்த பாடலின் இசையை மட்டுமே ரசிக்கின்றனர். விரும்பிய இசையை ரசிக்கும் ரசிகர்களிடம் இந்த இசையை ரசி, இதை ரசிக்காதே என்று எப்படி கூறமுடியும்.  

ரவுடி பேபி உட்பட பல தமிழ் ஜனரஞ்சக பாடல்கள் சிங்கள ரசிகர்களிடம் பிரபல்யம். சிங்கள தொலைக்காட்சி நிகழ்வுகளில் கூட தாம் ரசித்த தமிழ் பாடலை பாடுவதும் நடனம் ஆடுவதும் நடக்கிறதே. 70 களில் எத்தனையோ ரி எம் எஸ் இன் எம்ஜிஆர் பாடல்கள் சிங்களத்தில் பிரபல்யம். 

 தாம் ரசிக்கும் இசையை கொண்டாடுவது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இயல்பு. இந்த இயல்பிற்கு தமிழ் ரசிகர்கள் விதிவிலக்காக இருக்க மாட்டார்கள் தானே. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.