Jump to content

வட்டுவாகலில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுவாகலில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்!

October 16, 2021

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில், தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து வெளியாகிய தகவலில், வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் மகள்கள் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவற்துறையினர் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைது செய்துள்ளார்கள்.

ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு பதின்ம அகவை சிறுமிகள் தாயின் மூன்றாவது கணவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளகிவந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தாயின் கணவரையும் சிறுமிகளின் தாயினையும் கைதுசெய்த முல்லைத்தீவு காவற்துறையினர் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது, தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது.

இவர்களை கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2021/167316

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படியான அரசியல் தலைமையற்ற நாதியற்ற இனமாகிவிட்டதால்..இப்படி ஈனத்தனங்கள் மலியத்தான் செய்கிறது.

ஒழுங்கான அரசன் இல்லா ஊர் இப்படித்தான் ஆகும்.. என்பதற்கு இன்று நம்ம இனமும் மண்ணும் ஒரு சாட்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களிடையேயும்  பதின்ம வயசு பெண் பிள்ளைகளுடன் கணவரை பிரிந்து அல்லது விவாகரத்து பெற்று வாழும் பெண்கள்மேல் எம் கருணையே உருவான  வாலிபர்கள் குடும்பஸ்தர்கள் உட்பட  விரட்டி விரட்டி அன்பை பொழிவார்கள், ஓடி ஓடி உதவி செய்வார்கள் ,வாழ்நாள் முழுக்க உங்களுக்கு ஒரு நல்ல துணையாக இருப்பேன் என்று சொல்லி வாக்குறுதிகள்கூட வழங்குவார்கள்.

அத்தனையும் தாய் மகள் உட்பட அனைவரையும் தப்பான ஒரு உறவுமுறை பொறிக்குள் விழுத்துவதற்கே என்பதை காலம் கடந்த பின்னரே புரிந்து கொள்கிறார்கள், சிலர் கொந்தளித்து காவல்துறைவரை போகிறார்கள், சிலர் கண்டும் காணாமல் காலத்தை ஓட்டுகிறார்கள்.

சில தாய்மார் பிரிவின் பின்னர் மிக மிக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்கிறார்கள், சிலர் ஒரு கட்டத்தின் பின்னர் தனிமை உடல் உணர்வு சம்பந்தபட்ட பிரச்சனைகளால் இன்னொரு துணையை தேடி ஒட்டுமொத்தமாக குடும்பத்தை சீர் குலைக்கிறார்கள்.

போர்க்கால சூழலினால் விபத்துக்களால் அகால மரணங்களால் துணையினை இழந்தவர்கள் இன்னொரு துணையை தேடுவது தப்பில்லை, ஆனால் சின்ன சின்ன குடும்ப தகராறுக்காக பிரிந்து சென்று தனியே வாழ்ந்து காமுகர்களிடம் சிக்கி பெற்ற மகள்களையும் அவர்களுக்கு இரையாக்கும் பலரை தாயகம் புலத்தில் எல்லாம் கண்டிருக்கிறோம்,

அதற்காக அனைத்து ஆண்களும் உத்தமர்கள் யோக்கியர்கள் என்றும் இல்லை, பல ஆண்களின் முழுநேர குடி, அடி உதை , , ஊர் சுற்றல் வேலை வெட்டிக்கு போகாமை , செயற்கை வறுமை ஏற்படுத்தல் எனும் பழக்க வழக்கங்களினால்  இப்படி ஒருவனோடு இனி வாழவே முடியாது என்ற நிலைமையும் பல பெண்களை பிரிந்து போய் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வழி வகுக்கிறது.

வெளிநாட்டில் வாழும் பெண் பிள்ளைகளை பொறுத்தவரை   கல்யாணம் என்று வரும்போது  முன்பு என்ன நிலையில் வாழ்ந்திருந்தாலும் கடந்தகாலம் பற்றி கவலைபடாது நிகழ்காலம் பற்றியே சிந்தித்து இளைய தலைமுறை வாழ்வதால் பெரும்பாலும் இங்குள்ள தலைமுறைக்கு அது ஒரு பிரச்சனையாக இல்லாமல் போய்விட்டது.

தாயகத்தில் அப்படியல்ல திருமணம் என்று வரும்போது முதல் கேள்வியே அந்த பெண் பிள்ளைகளின் கடந்த காலம் பற்றியே இருக்கும். நல்ல ஒரு சம்மந்தம் அமைவது கண்டிப்பாக எட்டாக்கனியாகவே  இருக்கும்.

அதுவும்  பொருளாதாரத்திலும் அழகிலும் பெரிதாக சோபிக்காது இருந்தால் அதலபாதாளத்தில் விழுந்த நிலைதான்.

இந்த இழிநிலைக்கும் அவர்கள் குழந்தைகளின் கேள்விகுறியாகிவிட்ட எதிர்காலத்திற்கும் அவர்களின் பொறுப்பற்ற பெற்றோர்களே  பொறுப்பாகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

இங்கு வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களிடையேயும்  பதின்ம வயசு பெண் பிள்ளைகளுடன் கணவரை பிரிந்து அல்லது விவாகரத்து பெற்று வாழும் பெண்கள்மேல் எம் கருணையே உருவான  வாலிபர்கள் குடும்பஸ்தர்கள் உட்பட  விரட்டி விரட்டி அன்பை பொழிவார்கள், ஓடி ஓடி உதவி செய்வார்கள் ,வாழ்நாள் முழுக்க உங்களுக்கு ஒரு நல்ல துணையாக இருப்பேன் என்று சொல்லி வாக்குறுதிகள்கூட வழங்குவார்கள்.

அத்தனையும் தாய் மகள் உட்பட அனைவரையும் தப்பான ஒரு உறவுமுறை பொறிக்குள் விழுத்துவதற்கே என்பதை காலம் கடந்த பின்னரே புரிந்து கொள்கிறார்கள், சிலர் கொந்தளித்து காவல்துறைவரை போகிறார்கள், சிலர் கண்டும் காணாமல் காலத்தை ஓட்டுகிறார்கள்.

சில தாய்மார் பிரிவின் பின்னர் மிக மிக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்கிறார்கள், சிலர் ஒரு கட்டத்தின் பின்னர் தனிமை உடல் உணர்வு சம்பந்தபட்ட பிரச்சனைகளால் இன்னொரு துணையை தேடி ஒட்டுமொத்தமாக குடும்பத்தை சீர் குலைக்கிறார்கள்.

போர்க்கால சூழலினால் விபத்துக்களால் அகால மரணங்களால் துணையினை இழந்தவர்கள் இன்னொரு துணையை தேடுவது தப்பில்லை, ஆனால் சின்ன சின்ன குடும்ப தகராறுக்காக பிரிந்து சென்று தனியே வாழ்ந்து காமுகர்களிடம் சிக்கி பெற்ற மகள்களையும் அவர்களுக்கு இரையாக்கும் பலரை தாயகம் புலத்தில் எல்லாம் கண்டிருக்கிறோம்,

அதற்காக அனைத்து ஆண்களும் உத்தமர்கள் யோக்கியர்கள் என்றும் இல்லை, பல ஆண்களின் முழுநேர குடி, அடி உதை , , ஊர் சுற்றல் வேலை வெட்டிக்கு போகாமை , செயற்கை வறுமை ஏற்படுத்தல் எனும் பழக்க வழக்கங்களினால்  இப்படி ஒருவனோடு இனி வாழவே முடியாது என்ற நிலைமையும் பல பெண்களை பிரிந்து போய் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வழி வகுக்கிறது.

வெளிநாட்டில் வாழும் பெண் பிள்ளைகளை பொறுத்தவரை   கல்யாணம் என்று வரும்போது  முன்பு என்ன நிலையில் வாழ்ந்திருந்தாலும் கடந்தகாலம் பற்றி கவலைபடாது நிகழ்காலம் பற்றியே சிந்தித்து இளைய தலைமுறை வாழ்வதால் பெரும்பாலும் இங்குள்ள தலைமுறைக்கு அது ஒரு பிரச்சனையாக இல்லாமல் போய்விட்டது.

தாயகத்தில் அப்படியல்ல திருமணம் என்று வரும்போது முதல் கேள்வியே அந்த பெண் பிள்ளைகளின் கடந்த காலம் பற்றியே இருக்கும். நல்ல ஒரு சம்மந்தம் அமைவது கண்டிப்பாக எட்டாக்கனியாகவே  இருக்கும்.

அதுவும்  பொருளாதாரத்திலும் அழகிலும் பெரிதாக சோபிக்காது இருந்தால் அதலபாதாளத்தில் விழுந்த நிலைதான்.

இந்த இழிநிலைக்கும் அவர்கள் குழந்தைகளின் கேள்விகுறியாகிவிட்ட எதிர்காலத்திற்கும் அவர்களின் பொறுப்பற்ற பெற்றோர்களே  பொறுப்பாகவேண்டும்.


உண்மை. சிறப்பானதொரு குமுகாய நோக்கு. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

தாயின் கணவரையும் சிறுமிகளின் தாயினையும் கைதுசெய்த முல்லைத்தீவு காவற்துறையினர் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது, தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது.

தாய் மூன்றாவது கணவருடன் வாழ்க்கை நடத்துகின்றார் எனும் போது.......
அந்த பிள்ளைகளை பார்த்து பரிதாபப்பட முடியுமே தவிர வேறொன்றுமில்லை.

இதே பிரச்சனை வெளிநாடுகளாய் இருந்தால் (இந்தியா அல்ல) அந்த பிள்ளைகளை அரசு தத்தெடுத்துக்கொள்ளும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.