Jump to content

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்


Recommended Posts

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்

Peiris-750x375.jpg

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் உலக தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரசு சார்பற்ற அமைப்புக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தவகையில் 2021 ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பர் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய கவுன்சில், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியன தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1245154

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் ஆயுதங்களை கீழே போட்டால் தான் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று நிபந்தனை வைத்தார்கள்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தடைகளை நீக்கிவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்யப்படாத அமைப்புகள் எண்டால் எதை  குடுத்தாலும்  சந்தோசப்படுற அமைப்பாய்த்தான் இருக்கும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இயங்கும் எந்த அமைப்பும் நம்பகத்தன்மை உள்ள அமைப்பாய் தெரியவில்லை.
இவர்களை யார் தெரிவுசெய்கிறார்கள், மக்களின் கருத்து உள்வாங்கப்படுகிறதா என்ற கேள்விக்கே  விடையில்லை. யாராலோ திணிக்கப்படும் இணக்க அரசியலுக்குள் விழுந்து தமது சுய லாபத்தை மட்டுமே காப்பாற்றக்கூடிய அமைப்புகளாய் தான் இயங்குகின்றார்கள்.
அரசாங்கத்தோடு போச்சுக்களில் ஈடு படவேண்டிய சூழ்நிலை வந்தால் எல்லா அமைப்பும் ஒரு அணி சேர்ந்து ஒரே அம்சங்கள் கொண்ட அடிப்படை கோரிக்கைகள், திட்டங்கள் வைத்துக்கொண்டே பேச்சுவார்த்தைக்கு போகவேண்டும் அதில் தாயகத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒரு அங்கமாக செயல் படவேண்டும்.
இது சாத்தியமா தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய கவுன்சில், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியன தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களோடு இல்லையென்றால், யாரோடு பேசப்போகிறார்கள்? இவர்களுக்கு விழுந்து, விழுந்து வக்காலத்து வாங்கும் ஒரு சில தனி நபர்களுடனா? அல்லது யாருமே பேச்சுக்கு போகாததால் அடித்து விடுகிறாரோ?

12 hours ago, nunavilan said:

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை மறைமுகமாய் பேசப்போகினம் போல! உப்பிடி எத்தினை பேசுவினம்? வெளிநாட்டுக்கொன்று, ஐ. நா . வுக்கொன்று, வடக்கிற்கொன்று, தெற்கிற்கொன்று  என பலவேடம் பாத்தாச்சு. எங்களை சுத்த அறளையள் என்று சிங்களவன் கணக்கு போட்டுள்ளான்.

Link to comment
Share on other sites

9 minutes ago, satan said:

இவர்களோடு இல்லையென்றால், யாரோடு பேசப்போகிறார்கள்? இவர்களுக்கு விழுந்து, விழுந்து வக்காலத்து வாங்கும் ஒரு சில தனி நபர்களுடனா? அல்லது யாருமே பேச்சுக்கு போகாததால் அடித்து விடுகிறாரோ?

ஒருவேளை மறைமுகமாய் பேசப்போகினம் போல! உப்பிடி எத்தினை பேசுவினம்? வெளிநாட்டுக்கொன்று, ஐ. நா . வுக்கொன்று, வடக்கிற்கொன்று, தெற்கிற்கொன்று  என பலவேடம் பாத்தாச்சு. எங்களை சுத்த அறளையள் என்று சிங்களவன் கணக்கு போட்டுள்ளான்.

முன்னுக்கு பின் முரணாக கருத்து சொல்வதில்  சிங்களவருக்கு நிகராக யாரும் உள்ளதாக நான் அறியவில்லை.

11 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஒரு காலத்தில் ஆயுதங்களை கீழே போட்டால் தான் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று நிபந்தனை வைத்தார்கள்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தடைகளை நீக்கிவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடலாமே.

தடையை வைத்து சிங்கள மக்களை குசிப்படுத்தும் சிங்கள இனவாதிகளிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

தடையை வைத்து சிங்கள மக்களை குசிப்படுத்தும் சிங்கள இனவாதிகளிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்??

வேண்டும் போது தடை விதிப்பு, வேண்டாத போது தடை எடுப்பு. ஹா..... ஹா.... சிங்களவன் மகா புத்திசாலி இல்லாவிட்டாலும் நாங்கள் இருக்கிறோம் சொல்லிக்கொடுக்க!

Link to comment
Share on other sites

1 minute ago, satan said:

வேண்டும் போது தடை விதிப்பு, வேண்டாத போது தடை எடுப்பு. ஹா..... ஹா.... சிங்களவன் மகா புத்திசாலி இல்லாவிட்டாலும் நாங்கள் இருக்கிறோம் சொல்லிக்கொடுக்க!

1000 க்கு மேலான வருடங்களாக எட்டப்பர்கள் இருந்த வண்ணமே உள்ளது தான் எமது இனத்தின் சாபக்கேடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

இனத்தின் சாபக்கேடு.

இன உணர்வு இல்லாவிடினும் நீதி, நியாயம், தர்மம் கூட இல்லாதவர்களாயிருப்பதாலே அவர்களால் அப்படி செயற்பட முடிகிறது. அநிஞாயத்தை நிஞாயப்படுத்தவும், தலையில் வைத்து கொண்டாவும் முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

முன்னுக்கு பின் முரணாக கருத்து சொல்வதில்  சிங்களவருக்கு நிகராக யாரும் உள்ளதாக நான் அறியவில்லை.

தடையை வைத்து சிங்கள மக்களை குசிப்படுத்தும் சிங்கள இனவாதிகளிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்??

நிச்சயம் மாற்றம் ஏற்படும் கால ஓட்டத்தில்.

புதிய தலைமுறைகளின் வருகை, மற்றும் தமிழ் மக்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றாலும் சர்வதேச அளவில் விரிந்து, பரந்து கால் பதித்துள்ளமை சிங்களவர் மனப்பான்மையில் மாற்றத்தை கொண்டு வரும்.

22 hours ago, Sasi_varnam said:

வெளிநாடுகளில் இயங்கும் எந்த அமைப்பும் நம்பகத்தன்மை உள்ள அமைப்பாய் தெரியவில்லை.
இவர்களை யார் தெரிவுசெய்கிறார்கள், மக்களின் கருத்து உள்வாங்கப்படுகிறதா என்ற கேள்விக்கே  விடையில்லை. யாராலோ திணிக்கப்படும் இணக்க அரசியலுக்குள் விழுந்து தமது சுய லாபத்தை மட்டுமே காப்பாற்றக்கூடிய அமைப்புகளாய் தான் இயங்குகின்றார்கள்.
அரசாங்கத்தோடு போச்சுக்களில் ஈடு படவேண்டிய சூழ்நிலை வந்தால் எல்லா அமைப்பும் ஒரு அணி சேர்ந்து ஒரே அம்சங்கள் கொண்ட அடிப்படை கோரிக்கைகள், திட்டங்கள் வைத்துக்கொண்டே பேச்சுவார்த்தைக்கு போகவேண்டும் அதில் தாயகத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒரு அங்கமாக செயல் படவேண்டும்.
இது சாத்தியமா தெரியவில்லை.

பல கட்சிகள் போல பல அமைப்புக்கள் உள்ளமை ஒரு மோசமான நிலையாக பார்க்கபடத்தேவை இல்லை. அவரவர் தமக்கு பிடித்தமான, நம்பிக்கை உள்ள அமைப்பில் ஈடுபாடு, அக்கறை கொள்ளலாம். அல்லது புதிய அமைப்பையும் உருவாக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப யாரோடு கதைக்கப் போயினம்.. ஒட்டுக்குழு பினாமிகளோடா. அவை எதுக்கும் தலையாட்டுவினம். அவை ஊரில செய்ததே தலையாட்டு தொழில் தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

அப்ப யாரோடு கதைக்கப் போயினம்.. ஒட்டுக்குழு பினாமிகளோடா. அவை எதுக்கும் தலையாட்டுவினம். அவை ஊரில செய்ததே தலையாட்டு தொழில் தானே. 

அதே.....! சொந்தநாட்டில் சோரம்போனதுகளை வைத்து தமிழரை ஏமாற்றுவதுபோல், புலம்பெயர் தேசத்திலும் களமிறக்கப்பட்டவர்களை ஒரு அமைப்பாக, ஏதோ ஒரு பெயரில் அழைத்து பேசலாம். என்ன பேசப்போகினம்? கூடியிருந்து கதைபேசி, கூத்தடித்துவிட்டு சிங்களம் ஒரு அறிக்கை விடும், இவர்களும் ஆமாம் போடுவினம். தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டாச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.