Jump to content

எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத் தான் இருக்கும் - காரணத்தை கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத் தான் இருக்கும் - காரணத்தை கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ்

(நா.தனுஜா)

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத்தான் இருக்கும். 

இருப்பினும் இலங்கைக்கு தற்போது ஏனைய தரப்புக்களின் உதவிகள் பெருமளவிற்குத் தேவைப்படுகின்றன. எனவே அத்தகைய உதவிகளை வழங்குவதற்கு முன்வருகின்ற தரப்பினரிடமிருந்து அவற்றைப்பெற்று நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம். 

May be an image of one or more people and indoor

அதற்கு பலவாறு உள்நோக்கம் கற்பிப்பதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. சீனாவுடனான தொடர்புகள் குறித்து ஒவ்வொருவரும் பல்வேறு விடயங்களைக் கூறலாம். 

ஆனால் அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை என்று கடற்றொழில்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தகவல் திணைக்களத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'அமைச்சரிடம் கேளுங்கள்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கேள்வி - அண்மையில் நாட்டிற்கு வருகைதந்த இந்திய வெளியுறவுச்செயலருடனான சந்திப்பின்போது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசினீர்களா?

பதில் - ஆம், மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசினேன். ஏனைய தமிழ்க்கட்சிகளில் பெரும்பாலானவை ஏற்கனவே இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணாமல் அவற்றைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கே விரும்புகின்றன.

இருப்பினும் பிரச்சினைகளுக்குரிய தீர்வைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். அந்தவகையில் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை விவகாரத்தில் இராஜதந்திர ரீதியான அணுகுமுறையைப் பின்பற்றல், சம்பந்தப்பட்ட இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடாத்துதல், இப்பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வை வழங்குவதில் கவனம்செலுத்தல் ஆகிய அணுகுமுறைகளையே நான் கையாண்டுவருகின்றேன்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் ஸ்வாமியிடமும் எடுத்துரைத்தேன். இவ்விவகாரத்திலே அவர் எனது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டார். குறிப்பாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இருதரப்பிற்கும் எந்தவொரு பயனுமில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன், தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இத்தகைய செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதையும் அவரிடம் வலியுறுத்தினேன். இதுபற்றி அவர் மாநிலங்களவையில் பேசுவதாக வாக்குறுதியளித்திருக்கின்றார்.

கேள்வி - இந்திய வெளியுறவுச்செயலருடன் மாகாணசபைத்தேர்தல் குறித்துப் பேசினீர்களா?

பதில் - இல்லை. ஏனெனில் இவ்விடயம் தொடர்பில் நான் கடந்த 30 வருடங்களுக்கு முன்பிருந்தே வலியுறுத்தி வருகின்றேன். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தமே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்று நான் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றேன். தற்போது இந்திய வெளியுறவுச்செயலரும் அதனையே வலியுறுத்தியிருக்கின்றார்.

ஆனால் கடந்த காலத்தில் 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவேமாட்டோம் என்று கூறியவர்கள், இப்போது அனைத்துத்தரப்புக்களினதும் தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து 13 ஆவது திருத்தத்தை தமக்கான ஓர் கவசமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றார்கள்.

கேள்வி - மாகாணசபை முறைமை ஓர் 'வெள்ளையானை' என்று வர்ணிக்கப்படுகின்றது. அதனை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது?

பதில் - அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை மூலம் கடந்த காலங்களில் ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்தந்த மாகாணங்களும் மக்களுக்கும் தேவையானவற்றைச் செய்திருக்கின்றார்கள். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் அது சாத்தியப்படவில்லை என்றால், அது யாருடைய தவறு?

கேள்வி - இன்றைய தினத்திலிருந்து (நேற்று) பெரும்போகச்செய்கை ஆரம்பிக்கப்படவிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் அறிவித்திருக்கின்றார். இருப்பினும் வடக்கிலும் உரத்திற்கான தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில், மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு அரசாங்கம் எத்தகைய தீர்வை வழங்கப்போகின்றது?

பதில் - விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதால் உடலுக்குப் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனால், அதன் பயன்பாட்டைக் குறைத்து சேதனப்பசளையின் பயன்பாட்டை ஊக்குவிக்கவேண்டும் என்பது ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த கொள்கைகளில் ஒன்றாகும். அதனைக் கட்டம் கட்டமாக முன்னெடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடபகுதியில் உரத்திற்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக நான் அறியவில்லை. ஆகவே இதுகுறித்து உடனடியாகக் கேட்டறிந்து, அதற்கான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கின்றேன்.

கேள்வி - இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரித்துவருகின்ற சூழ்நிலையில், அடுத்தடுத்து இந்திய உயர்மட்டப் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயம் முக்கிய அவதானத்தைப் பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இந்திய வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் சுப்ரமணியன் ஸ்வாமி ஆகியோருடனான சந்திப்பின்போது, இலங்கையில் சீனாவின் தலையீடு குறித்து அவர்களால் பிரஸ்தாபிக்கப்பட்டதா?

பதில் - இல்லை, அதுபற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை. சீனாவா? இந்தியாவா? என்றால், எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத்தான் இருக்கும். இருப்பினும் இலங்கைக்கு தற்போது ஏனைய தரப்புக்களின் உதவிகள் பெருமளவிற்குத் தேவைப்படுகின்றன.

ஆகவே அத்தகைய உதவிகளை வழங்குவதற்கு முன்வருகின்ற தரப்பினரிடமிருந்து அவற்றைப்பெற்று நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம். அதற்கு பலவாறு உள்நோக்கம் கற்பிப்பதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. சீனாவுடனான தொடர்புகள் குறித்து வௌ;வேறு தரப்பினர் பல்வேறு விடயங்களைக் கூறலாம். ஆனால் அவை அனைத்திலும் உண்மை இல்லை என்று குறிப்பிட்டார்.

 

https://www.virakesari.lk/article/115389

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூளைமேடு அடிக்கடி கனவில வந்து தொலைக்கிது.  அத எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லையே சாமி ? 

😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

ஏனைய தமிழ்க்கட்சிகளில் பெரும்பாலானவை ஏற்கனவே இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணாமல் அவற்றைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கே விரும்புகின்றன

இவருடைய தலையாய பிரச்சனை: ஏனைய தமிழ்க்கட்சிகளே! இதையே மீனவரிடம் போனாலென்ன, விவசாயிகளிடம் போனாலென்ன, பல்கலைக்கழகம் போனாலென்ன தன் பிரச்சனையை முதலில் புலம்பி அவர்களிடம் தீர்வு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இவரோ கடற்தொழில் அமைச்சர். தங்கள் பிரச்சனையை தீர்க்கவில்லை என்று சம்பந்தப்படடவர்கள் குறைகூறுகின்றனர். இவரிடம் போய் விவசாயிகள் பிரச்சனையை கூறும் கூறு கெட்டவர்களா இவர்கள்?

11 hours ago, கிருபன் said:

விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதால் உடலுக்குப் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனால், அதன் பயன்பாட்டைக் குறைத்து சேதனப்பசளையின் பயன்பாட்டை ஊக்குவிக்கவேண்டும் என்பது ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த கொள்கைகளில் ஒன்றாகும்.

   அதுவரை விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டும் என்பது இவரது ஆலோசனை. எந்த அறிவும் இல்லாதவர்களிடம் அமைச்சுப்பதவி, மாற்று வழி காணாமல் தடை போட்டதன் காரணம்: நாட்டின் வங்குரோத்து நிலைமை. அதை மறைக்க முட்டாள்த்தனமான விளக்கம். வெறும்பானையில சோறு அள்ளப்போகினமாமல்லே!      

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.