Jump to content

காமசூத்ராவிற்கு மிகையான தமிழ் படைப்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்டு .உண்டு .உண்டு .

ஆனால் நாம் தான் அந்த புத்தகத்தை கையில் இருந்தும் படிக்காமல் இருக்கிறோம்

main-qimg-2b70572e1cab0028afb5041dc13dd9a8-lq

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொன்னால் செல்லக்கிளி என் மேல் மறுபடியும் கோரா பாக்கியராஜ் என்று முத்திரை குத்தப்படும். இருந்தாலும் சொல்கிறேன். என்னத்தச் சொல்ல?

main-qimg-37710705b120242a1badc1766803940b-lq

நாம் தான் அந்த புத்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்து விட்டு அதற்கு இணையான படைப்புகள் வெளியே இருக்கின்றனவா? வெளியே இருக்கின்றனவா ?என்று தேடிக்கொண்டிருக்கிறோம்

கட்டிய மனைவியும் ,மனைவியினுள் காதலியும் காதலிக்கும் மங்கையை விட காமசூத்ரா பெரிதா ?என்ன ?

லேசாக கலைந்த கூந்தல்

தூங்கி எழுந்த முகம்

ஒரு மேக்கப்பும் இல்லாமல் முகம் கழுவி பளிச்சென்று இருக்கும் அழகு

தண்ணீர் எடுக்கும் பொழுது தூக்கி செருகிய சேலை

அரை குறையாக தெரியும் உள்ளாடைகள்

main-qimg-d3af1f862ae974a2d08fb688e42975e2-lq

என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன ஆனால் நாம் தான் இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறோம் ஞான தங்கம் போல

main-qimg-520c42c526dee92015fcc8bbc2f15e9c-lq

உலகம் ரசனையானது .காலகாலத்துல கல்யாணம் முடிங்க சாமி .புத்தகம் உங்க கிட்டே தான் இருக்குது .

ஆனா ஒண்ணு பழக்க தோஷத்துல புத்தகம் படிக்குறப்பவே தூங்கி தொலைச்சுராதிங்க எஜமான்

மூலம்:  https://qr.ae/pGVgqp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பராமாயணமும் அகநானூறு புறநானூறு என்று நிறைய உண்டு.ஆனால் எல்லாம் பாடல்களாக இருப்பதால் இன்றைய தலைமுறைக்கு அவற்றை படித்து புரிந்து அனுபவிக்க நேரம் இருப்பதில்லை......!  😁

இணைப்புக்கு நன்றி சசி.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

கம்பராமாயணமும் அகநானூறு புறநானூறு என்று நிறைய உண்டு.ஆனால் எல்லாம் பாடல்களாக இருப்பதால் இன்றைய தலைமுறைக்கு அவற்றை படித்து புரிந்து அனுபவிக்க நேரம் இருப்பதில்லை......!  😁

இணைப்புக்கு நன்றி சசி.....! 

பாடல்களின் விரிவாக்கத்தை எங்களுக்கும் சொல்லலாம்தானே, சங்கத்தலைவர் சுயநலவாதியாய் இருப்பதற்கு சங்கத்தின் சார்பில்  வன்மையான கண்டனங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நந்தன் said:

பாடல்களின் விரிவாக்கத்தை எங்களுக்கும் சொல்லலாம்தானே, சங்கத்தலைவர் சுயநலவாதியாய் இருப்பதற்கு சங்கத்தின் சார்பில்  வன்மையான கண்டனங்கள் 

மாம்பழம் சுவையானதுதான் அதன் சுவையை அவரவர்தான் ரசித்து சுவைத்து அனுபவிக்க வேண்டும்.....அவரவரும் சின்னவீடு பெரியவீடு வைப்பு சொப்பு எல்லாம் வைத்துக் கொண்டு பிறகும் அலையுறார்களே எதற்காக ஒன்றுபோல் இன்னொன்று இல்லை ஒவ்வொன்றும் தனித்துவமானது என்பதினால்தான்.......!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2021 at 11:11, suvy said:

மாம்பழம் சுவையானதுதான் அதன் சுவையை அவரவர்தான் ரசித்து சுவைத்து அனுபவிக்க வேண்டும்.....அவரவரும் சின்னவீடு பெரியவீடு வைப்பு சொப்பு எல்லாம் வைத்துக் கொண்டு பிறகும் அலையுறார்களே எதற்காக ஒன்றுபோல் இன்னொன்று இல்லை ஒவ்வொன்றும் தனித்துவமானது என்பதினால்தான்.......!😎

கமலா, கல்யாணி, வசந்தா வந்தாளாம் 3 னும் 3 பொண்ணுங்க  
ஒருத்தி BA ஆம்  ஒருத்தி MA ஆம் ரெண்டையும் சேர்த்தாக்கா வருவது BAMA வாம் 
ஒரு தட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு அந்த 3க்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.