Jump to content

–மலையகத் தமிழர்களின் போராட்டங்களை  எடுத்துக்கூறும் ”வெந்து தணியாத பூமி”​​​​​​​


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

–மலையகத் தமிழர்களின் போராட்டங்களை  எடுத்துக்கூறும் ”வெந்து தணியாத பூமி”

spacer.png

-அ.நிக்ஸன்-

இலங்கைத்தீவின் மலையகத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த வரதன் கிருஸ்ணா என்ற மூத்த ஊடகவியலாளர், வெந்து தணியாத பூமி என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கனடாவில் வாழும் வரதன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் பங்கெடுத்த ஒருவர். மலையகத் தமிழர்களின் விடுதலையும் போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்ற கருத்தைக் கொண்ட வரதன். ஆரம்பகாலங்களில் மலையகத்தில் வாழ்ந்த காலங்களில். அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறைகள் பற்றி இந்த நூலில் விபரிக்கிறார்.

குறிப்பாகத் தனது போராட்ட வாழ்வு. போராட்டத்தினால் சிறைக்குச் சென்ற  அனுபவங்கள் பற்றியெல்லாம் நூலில் விபரிக்கிறார் வரதன் கிருஸ்ணா.

கொழும்பில் இருந்து வெளிவந்த சிந்தாமணி, பின்னர் வீரகேசரி, தினகரன், ஆகிய வார இதழ்களில் எழுதிய ஆக்கங்களும் இந்த நூலில் உள்ளடங்கியுள்ளன. தினகரன், சுடர் ஒளி மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைகளில் செய்தியாளராகவும் கடமையாற்றிய வரதன், அந்தப் பத்திரிகைகளிலும் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

குறிப்பாக மலையக மக்களின் வெளிக்கொணரப்படாத போராட்டங்கள் பற்றிய தகவல்கள் இந்த நூலில் அதிகமாகக் காணப்படுகின்றன. கொழும்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் கல்வித்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அணிந்துரை எழுதியுள்ளார்.

பத்திரிகையாளரும் அரசியல் விஞ்ஞான ஆசிரியருமான அ.நிக்ஸன் நூலில் வாழ்த்துக் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த வாழ்த்துக் குறிப்பு வருமாறு–

பத்திரிகையாளர் ஒருவருக்குத் (செய்தியாளன்) தனது சமூகம் சார்ந்த மற்றும் அதற்குரிய ஆழமான சிந்தனையும் அறிவும் இருக்க வேண்டும். வெறுமனே அன்றாடம் நடக்கும் செய்திகளை மாத்திரம் வெளியிடுபவனாக இருக்க முடியாது. அதுவும் பாதிக்கப்பட்ட சமூகம் ஒன்றின் அல்லது விடுதலை கோரி நிற்கும் தேசிய இனம் ஒன்றைச் சேர்ந்த பத்திரிகையாளன் ஒருவன், அனைத்து விவகாரங்களையும் புரிந்தவனாக இருத்தல் அவசியம். ஆனால் சமீபகாலத்தில் இலங்கை இதழியல் செயற்பாடுகளில் அவ்வாறான பத்திரிகையாளர்களைக் காண்பது அரிது

இவ்வாறனதொரு சூழலில் இலங்கைத்தீவில் சிங்களம், தமிழ் என்று ஊடகம் இன்று இரண்டு வகையாகப் பிரிந்துள்ளது. சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களின் பிரச்சினைகளையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தையுமே முக்கியப்படுத்துகின்றன.

தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விடயங்களையே பிரதானப்படுத்துகின்றன. (சிங்களப் பிரதேசச் செய்திகளையும் தமிழ் ஊடகங்கள் வெளியிடத் தவறுவதில்லை) குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் வடக்குக் கிழக்கு தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டங்கள் பற்றியே அதிகமாகப் பேசுகின்றன.

இலங்கைத் தீவில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கென்று தனியான பண்பாடு, கலை கலாச்சாரம் உண்டு. அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் வேறு. வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தோடு மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒப்பிட முடியாது.

ஆனால், இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே, வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களும் மலையகத்தில் வாழும் தமிழர்களும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் மூலம் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தனர். 1920 இல் இலங்கைத் தேசிய இயக்கத்தின் பிளவோடு ஆரம்பித்த தமிழ்- சிங்கள இன மோதல், 1958 ஆம் ஆண்டு கொழும்பில் வன்முறையாக மாறியது. இப்படிக் கொழும்பில் அவ்வப்போது  இடம்பெற்ற ஒவ்வொரு வன்முறைச் சம்பவங்களின்போது மலையகத் தமிழர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அகிம்சைப் போராட்டம் தோல்விகண்ட நிலையில் 1983 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும் மலையகத் தமிழர்கள் அதிகளவு பாதிப்புகளை கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் மலையகத்திலும் எதிர்கொண்டிருந்தனர். இன்றுவரைகூட மலையகத் தமிழர்களை நோக்கிய அந்த வன்முறை தொடருகின்றது.

இந்த இடத்திலேதான் பத்திரிகையாளர் வரதன் கிருஸ்ணா எழுதிய நூல் முக்கியம் பெறுகின்றது. இந்த நூல் நான்கு விடயங்களைப் பிரதானப்படுத்துகின்றது.

1) ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தில் மலையகத் தமிழ் இளைஞர்களின் பங்களிப்பு-

2) இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையும் வன்முறையும் இலங்கைத் தமிழர்கள் என்ற அடிப்படையிலானவை. (வடக்குக் கிழக்குத் தமிழர், மலையகத் தமிழர் வேறு என்று தெரிந்தும். தமிழன் என்ற நோக்கிலான திட்டமிடப்பட்ட தாக்குதல்)

3) மலையகத் தமிழர் மீதான ஒடுக்குமுறை என்பது தனியே இலங்கை அரசினால் மாத்திரமல்ல, இலங்கைத்தீவில் வாழ்ந்த ஏனைய சமூகங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது.

4) மலையகத் தமிழ் அரசியல் கட்சிகள், மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் என்ற அடையாளத்தோடு இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குக் கொடுக்கப்பட்ட ஆதரவுத்தளம் பற்றியது.

இந்த நான்கு உள்ளடக்கங்களையும் ஒவ்வொரு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில் உணர்ந்துகொள்ள முடியும். மலையக மக்களின் அபிலாஷைகள் 1985 ஆம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுக்களில் பிரதிபலித்திருந்தன. (அங்கேதான் தமிழ்த்தேசியம் என்பது வரையறுக்கப்படுகின்றது)

இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களை ஈழத்தமிழர்கள் என்று கூற முடியும். ஏனெனில் ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும். ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அது குற்றமாகாது. முன்னைய பாடத்திட்டங்களில் ஈழம் என்றே காணப்படுகின்றது. ஆகவே ஈழத்தமிழர்கள் என்றால் அது பிரிவினையல்ல. தமிழ் ஈழம் என்று சொன்னாலும் அது தனிநாடு அல்ல. தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியைத் தமிழ் ஈழம் என்று அழைக்க முடியுமென தொல்லியல் ஆய்வாளர்கள பலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

தொல்லியல் ஆய்வாளரான பேராசிரியர் பத்மநாதன், ஈழம் என்ற சொல் ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்திய காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டதென்கிறார். ஈழம் என்பது இலங்கைத்தீவு முழுவதையும் குறிக்கும் என்கிறார் மற்றுமொரு தொல்லியல் ஆய்வாளரான சிவா தியாகராஜா.

இங்கே வரதன் கிருஸ்ணா எழுதிய இந்த நூலில் மலையகத் தமிழர்களுக்குத் தனித்த அடையாளம் உண்டு என்ற வரலாறும், தனித் தேசிய இனம் என்ற அங்கீகாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டியதொன்று என்ற தொனி வெளிப்பட்டுகின்றது. (ஆனால் ஈழத்தமிழர்கள் என்பதில் மலையகத் தமிழர்களையும் உள்ளடக்க முடியுமா என்பது விவாதத்துக்குரியது)

குறிப்பாக ஈரோஸ் இயக்கத்தில் மலையக இளைஞர்கள் இணைந்து கொண்டமை, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சண்முகதாசனுடன் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளினால் மலையக இளைஞர்கள் கீழைக்காற்று இயக்கம் ஒன்றை ஆரம்பித்து, இந்தியாவில் உள்ள நக்சலைட் பாணியில் செயற்பட முற்பட்டமை போன்ற தகவல்களை வரதன் கிருஸ்ணா தனது நூலில் குறிப்பிடுவதன் மூலம் மலையகத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றார்.

சுயநிர்ணய உரிமை தமிழர்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே கீழைக்காற்று இயக்கம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பதை ‘கீழைக்காற்று இயக்கம் ஆரம்பமும் முடிவும்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் உள்ளடக்கம் சுட்டி நிற்கின்றது.

இந்த நூலின் ஊடே அன்றும் இன்றும் மலையக அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் பற்றிய வரதன் கிருஸ்ணாவின் பார்வை என்பது, எதிர்கால மலையகத் தமிழச் சமூகத்துக்கான அரசியல் பொருளாதார விடிவுக்கு உகந்ததாக இல்லை என்பதேயாகும். அதற்கான மாற்றத்தின் அவசியத்தையே வரதன் கிருஸ்ணா, தனது கட்டுரைகள் மூலமாகச் சொல்லாமல் சொல்கிறார்.

இறுதியாக ஒன்றைச் சுட்டிக்காட்டுவது எனது கடமை.

வரதன் கிருஸ்ணாவின் இயற்பெயர் பெயர் ஆறுமுகம் வரதராஜா, ஆனால் வரதன் என்ற பெயர் ஈரோஸ் இயக்கத் தலைவர் மறைந்த பாலகுமாரன் அவர்களினால் சூட்டப்பட்து. பின்னால் வரும் கிருஸ்ணா என்ற பெயர், ஈரோஸ் இயக்கத்தின் மூத்த தோழர் கிருஸ்ணாவினுடையது. அவர் உயிரிழப்பதற்கு முன்னரே கிருஸ்ணா என்ற பெயரை வரதன் சூட்டிக்கொண்டமை, சமூக மாற்றத்திற்கான  வரதனுடைய சிந்தனை வெளிப்பாட்டையே உணர்த்துகிறது.

 

http://www.samakalam.com/மலையகத்-தமிழர்களின்-போர/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.