Jump to content

நண்பிக்கு அஞ்சலிகள். (தமிழினி கண்மணி யின் சகோதரி )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Quellbild anzeigen

கண்மணி அக்கா தமிழினி ஆகியோரின் சகோதரியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா, தமிழினி  உங்கள் துயரில் நாங்களும்பங்குகொள்கின்றோம் உங்களுக்கும் உறவுகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா மற்றும் தமிழினி ஆகியோரினது சகோதரியின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா, தமிழினி  உங்கள் துயரில் நாங்களும்பங்குகொள்கின்றோம் உங்களுக்கும் உறவுகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புகள் எப்பவுமே துயரமானவை, ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

சகோதரியின் இழப்பினால் துயருற்றுள்ள கண்மணி அக்காவுக்கும், தமிழினியிற்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

நெருக்கமான உறவுகளில் இடம்பெற்றுள்ள அடுத்தடுத்த மரணங்கள் தரும் கவலையை காலம் ஆற்றும் என நம்புகின்றேன். தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தோழியர் கண்மணி தமிழினிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு சில வருடங்களாக துயர் சூழ்ந்த காலத்தில் மூழ்கி இருப்பதை அறிவேன். பொலிற்றாவிற்கு ஆத்ம சாந்தியையும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனத்திடத்தையும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  கண்மணி அக்கா, தமிழினி குடும்பத்தினருக்கு எமது  ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

மரண அறிவித்தல்
21-616c7ce2a9645.webp
பிறப்பு13 AUG 1956
இறப்பு17 OCT 2021
திருமதி கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன்

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன் அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், சுகிர்தம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மரியதாசன் செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

யுவன், நவீன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

மெலோனி, லிஷ்க்கா ஆகியோரின் அன்புநிறை மாமியும்,

Ayva, Saphirra, Sierra, Nila ஆகியோரின் நேசமிகு அப்பம்மாவும்,

கிளீட்டஸ், ஜெனிற்றா, அருட்சகோதரி பெலிசிற்றா(Good Shepherd), கமிலஸ், குயின்ரஸ், ஜொவிற்றா, விஜிற்றா, மெரிற்றா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கிளாறட், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஜஸ்ரினா, டீலியா, டொன்பொஸ்கோ, அருள், ராம்நாத் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சறோசா- மரியதாசன், காலஞ்சென்ற ராசமலர் மற்றும் ராஜரட்ணம், ராசபாலன்- யுவான், ராசபுஸ்பம்- ஜெறாட் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction
பார்வைக்குGet Direction
திருப்பலிGet Direction
நல்லடக்கம்Get Direction

https://ripbook.com/clarice-hippolita-mariathasan-616c772c73ea5/notice/obituary-616c77c0bf004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கண்மணி , தமிழினி குடும்பத்தினருக்கு எமது  ஆழ்ந்த அனுதாபங்கள்.......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

கண்மணி, தமிழினி துயரிலிருந்து மீண்டு வரும் ஆன்ம பலத்தை நீங்கள் பெற வேண்டும். ஆழ்ந்த இரங்கல். 

Link to comment
Share on other sites

எமது சகோதரியின் இழப்பினால் துன்புற்றிருக்கும் இவ் வேளையில் எமக்கு ஆறுதல் வார்க்தைகள் மூலம் தம் அனுதாபங்களை தெரிவித்த அத்தனை அன்புறவுகளுக்கும் எம் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறோம். எமது யாழ்இணையம் சார்பாக சகோதரன் நிழலி இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டது எமக்கு யாழ் இணைய நண்பர்கள் அனைவருமே பங்குபற்றியதான் உணர்வை ஏற்படுத்தியது. நிழலிக்கு விசேடமான நன்றிகள். அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றான்.

Link to comment
Share on other sites

58 minutes ago, KavaloorKanmani said:

எமது சகோதரியின் இழப்பினால் துன்புற்றிருக்கும் இவ் வேளையில் எமக்கு ஆறுதல் வார்க்தைகள் மூலம் தம் அனுதாபங்களை தெரிவித்த அத்தனை அன்புறவுகளுக்கும் எம் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறோம். எமது யாழ்இணையம் சார்பாக சகோதரன் நிழலி இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டது எமக்கு யாழ் இணைய நண்பர்கள் அனைவருமே பங்குபற்றியதான் உணர்வை ஏற்படுத்தியது. நிழலிக்கு விசேடமான நன்றிகள். அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றான்.

நன்றி அக்கா. 

சசிவர்ணமும் நான் அங்கு நிற்கும் நேரம் வந்து இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கடந்து போகும்…..

 

நீல வானம் நிர்மலமான இரவு ஒளி சிந்தும் நிலவு

மின்மினியாய் நட்சத்திரங்கள் ஓயாத அலையோசை

தேவன் ஆலய மணியோசை இத்தனையும் சிந்தையில் இனித்திருக்க

எம் சொந்தங்கள் மட்டும் தொட்டுவிட முடியாத துரரத்தில்…

எங்கோ தொலைவில் உங்கள் ஆன்ம கீதங்கள் எம் காதுகளில் ரீங்காரமிட்டபடி

பிரிவு என்பது தீராத வலி வலியுடன் வாழ்வதே எமது விதி

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் உங்கள் வாசமும்

கதவிடுக்குகளைக் கடந்து உங்கள் சுவாசமும் எம் மூச்சை முட்டுகிறது

உங்கள் கலகலக்கும் சிரிப்பும் அன்பான உபசரிப்பும்

எம் நினைவுகளில் உரசி நித்தமும் மனம் உருகுகிறது

நீங்கள் எம்முடன் இல்லை என்பது பொய்

என்றும் எம்முடன் இணைந்தே வாழ்கிறீர்கள் என்பது மெய்

இன்று நிஜம் நிழலாகிப் போனது

நிரப்ப முடியாத இடைவெளியுடன் இமைகளில் ஈரமுடன் நெஞ்சினில் பாரமுடன்

இனிவரும் காலங்கள் இதுவும் கடந்திடும் என்றொரு

முத்தான தத்துவத்தின் நினைப்புடன்

என்றென்றும் பொய்யான புன்னகையின் முகத்துடன்

ஓற்றுமையின் பலத்துடன் பாசத்தின் பரிவுடன்

வாழும் காலம் வரை வாழ்த்திட்டால் அது போதும்

காலம் வரும் போது கையசைத்து விடைபெறுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி அக்கா மற்றும் தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரியின் பிரிவால் துயருற்று இருக்கும் சகோதரிக்களுக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

31 நாட்கள் பறந்தோடிவிட்டன. இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. கவிதைக்கு விருப்பிட்ட புங்கையூரன் குமாரசாமி நிழலி விசுகு மோகன் மற்றும் விசுகு தனி இணையவன் அன்புத்தம்பி அனைவருக்கும் நன்றிகள். நிலாமதிக்கும் விசேடமாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.