Jump to content

தமிழர் தாய் சமயங்களுக்குத் திரும்ப சீமான் அழைப்பு சர்ச்சையானது ஏன்? சைவம், வைணவம்தான் தமிழர் சமயங்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாய் சமயங்களுக்குத் திரும்ப சீமான் அழைப்பு சர்ச்சையானது ஏன்? சைவம், வைணவம்தான் தமிழர் சமயங்களா?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
17 அக்டோபர் 2021, 12:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்
சீமான்

பட மூலாதாரம்,@SEEMANOFFICIAL

 
படக்குறிப்பு,

சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

கிறிஸ்துவம் ஐரோப்பிய சமயம், இஸ்லாம் அரேபிய சமயம். சைவமும் மாலியமும்தான் (வைணவம்) தமிழர் சமயம். செக்கு எண்ணெய்க்கு திரும்பி வருவதைப் போல தாய் சமயத்துக்கு திரும்பி வரவேண்டும் என்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியுள்ளது.

சைவம், வைணவம் மட்டுமல்ல, சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் என்று பல்வேறு சமயங்களை தமிழர்களின் பல பிரிவினர் பல்வேறு காலகட்டங்களில் தழுவியுள்ளனர்.

வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்கம், வைகுண்டரின் அய்யாவழி போன்ற மார்க்கங்களும் தமிழர்களை ஈர்த்துள்ளன. இதைத்தவிர பரவலாக இருக்கும் நாட்டார் வழிபாட்டு மரபுகள் உள்ளன.

இவற்றில் ஒன்றையோ, சிலதையோ தமிழர்களின் தாய் சமயம் என்று கூற முடியுமா?

அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? நாம் தமிழர் கட்சியின் பதில் என்ன?

மரச்செக்கு எண்ணெய், கருப்பட்டி

நாம் தமிழர் கட்சியின் சார்பாக `பனை திருவிழா' நிகழ்ச்சியை கடந்த 16 ஆம் தேதி சென்னையில் சீமான் தொடங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்கள் இந்துக்களே இல்லை, அவர்களை இந்துக்கள் எனக் கூறுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்" என கூறினார். மேலும், "தமிழர்கள் தங்களின் சமயங்கள் மீது பூசப்பட்ட இந்து என்ற அடையாளத்தை விடுத்து சைவம், மாலியம் (வைணவம்) என்று மீண்டு வர வேண்டும்" என்றார்.

அப்போது, `கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களைப் பற்றி நீங்கள் பேசுவதில்லையே?' என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, `அவை வெளியில் இருந்து வந்த சமயங்கள்தானே. அதில் ஒன்று ஐரோப்பிய சமயம், இன்னொன்று அரேபிய சமயம்' என்றார். அத்துடன், ``மரச்செக்கு எண்ணெய்க்கும் கருப்பட்டிக்கும் மாறியதுபோல, தமிழர்கள் மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்" என்று சீமான் கூறினார்.

வலுக்கும் எதிர்ப்பு

சீமானின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளிப்பட தொடங்கியுள்ளன. இது தொடர்பாக, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள எழுத்தாளர் இரா.முருகவேள், `சைவம், வைணவத்துக்கு திரும்புங்கள் என்ற சீமானின் அழைப்பு, மதத்தை சீர்திருத்தும் நோக்கம் கொஞ்சமும் இல்லாத வெற்று உரை. சீமான் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இன்று இந்து மதத்தின் அடிப்படையாக சைவமும் வைணவமும்தான் இருக்கின்றன. சைவத்திலும் வைணவத்திலும் இன்னும் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கின்றன' எனக் குறிப்பிட்டுள்ளார்.

`உதாரணமாக, வைதீக கோவில்கள், மடங்களின் அன்றாட பூசைகள், நிர்வாகம், பரம்பரை உரிமை எல்லாவற்றிலும் பிராமணர்கள், சைவ பிள்ளைமார்கள் ஆகியோரின் ஆதிக்கமே இருக்கிறது. தலித்துகள், பெண்கள் இதை நினைத்துப் பார்க்க முடியாத நிலையே உள்ளது. சைவத்தையும் வைணவத்தையும் சுற்றி பின்னப்பட்டுள்ள ஜோதிடமும் அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்து பஞ்சாங்கமும் சமூகத்துக்கு பெரும் சுமையாக இருக்கின்றன. சாதி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதையெல்லாம் சரிசெய்யும் முயற்சிகளை எடுக்காமல் பெயரை மட்டும் மாற்றி தாய் மதம் திரும்புங்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது,' என்கிறார் முருகவேள்.

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

மேலும், `எந்தப் பொறுப்புணர்வும் அக்கறையும் இல்லாமல் இப்போது உள்ள வடிவத்திலேயே பெயரை மட்டும் மாற்றி சைவத்தையும் வைணவத்தையும் பின்பற்ற வேண்டும் என சீமான் சொல்கிறார். கிறிஸ்துவம், இஸ்லாம் தவிர எண்ணற்ற தாய் தெய்வ வழிபாடுகள், பழங்குடி வழிபாடுகள் இருக்க சைவமும் வைணவமும் மட்டுமே தமிழர்களின் அடையாளம் என்பது அபாயகரமான ஒன்று. சீமானின் பார்வையில் மதுரை வீரன் வழிபாடு எந்த இடத்தை பெறும்? சீமானுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வேறு நபர்களின் கட்டுப்பாட்டில் மதம் இருக்க, அங்கே போய் சேர்ந்து கொள் என்பது விசித்திரமானது. இதுதான் இந்துத்துவம்," என பதிவிட்டுள்ளார்.

தமிழர்களின் தாய் மதம் எது?

இதையடுத்து, எழுத்தாளர் இரா.முருகவேளிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``சைவமும் வைணவமும் தமிழர் மதங்கள் என சீமான் சொல்கிறார். சைவமும் வைணவமும் இல்லாவிட்டால் இந்து மதம் என்பதே இல்லை. தேவாரம், திருவாசகம் எல்லாம் சமஸ்கிருத்தத்தில் உள்ளவற்றின் தமிழ் பதிப்புகள்தான். கைலாயம், கங்கை, திருவிளையாடல் போன்றவை எல்லாம் இந்தியா முழுக்க உள்ள பொதுவான ஒன்றுதான். எனவே, சைவமும் வைணவமும் தமிழர் மதம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது," என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், ``தமிழர் மதம் என எதுவும் சொல்லப்படவில்லை. சைவம், வைணவம் ஆகியவற்றில் தமிழர், தெலுங்கர், வங்காளிகள் தொடங்கி பலர் இருக்கின்றனர். இந்து மதத்தையே இன்னொரு வடிவில் தமிழர் மதம் என சீமான் சொல்கிறார். அடுத்ததாக, `தமிழர் மதம்' என புதிதாக ஒரு வழிபாட்டு முறையை இவர்கள் சொல்லவில்லை. ஏற்கெனவே உள்ள தஞ்சை பெரிய கோவில், வடபழனி முருகன் கோவில் ஆகியவற்றையும் அதன் நிர்வாக முறைகளையும் அர்ச்சகர், பண்டாரம், சமஸ்கிருதம் ஆகியவற்றையும் அப்படியே வைத்துவிட்டு, `இது தமிழர் மதம்' என்பதை மட்டும் ஏற்க வேண்டும் என்கின்றனர். இது அபத்தமானது," என்கிறார்.

``அப்படியானால், தமிழர்களுக்கான தாய் மதம் எது?" என்றோம். `` அப்படியெல்லாம் எதுவும் இல்லை. தமிழர்களில் சைவர், வைணவர், பைளத்தர்கள், சமணர்கள், நாட்டார் தெய்வங்களை வழிபடுகிறவர்கள், தாய் வழிபாடு, மதத்தை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் எனப் பலர் இருந்துள்ளனர். அதனால் தமிழர்களுக்கு ஒரு மதம், இரு மதங்கள் என்ற அடையாளம் எதுவும் கிடையாது. இவர்கள் சொல்லும் சைவத்தையும் வைணவத்தையும் பின்பற்றியவர்கள் 20 சதவிகிதம் பேர்தான் இருந்தனர். மற்றவர்கள் எல்லாம் மாரியம்மன் உள்பட தாய் தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். அப்படியானால், கோவிலுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படாதவர்கள் எல்லாம் யார்?

நாட்டார் தெய்வங்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் மதுரை வீரன் கோவிலில் சீமான், தனது மகனுக்கு காது குத்தும் நிகழ்வை நடத்தியிருக்கலாமே? தேவாரம், திருவாசகத்துக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை மதுரை வீரன் கதைப் பாடலுக்கு இவர் எங்காவது கொடுத்துள்ளாரா? இவர்கள் பேசுவது வைதீக மதம். `முப்பாட்டன் முருகன்', `பெரும்பாட்டன் சிவன்' என்றுதான் பேசி வருகிறார். சீமான் பேசுவது இந்துத்துவ அரசியல்தான்" என்கிறார்.

இந்து என்பதற்கான அடையாளம் இல்லை

சீமான்

பட மூலாதாரம்,@NAAMTAMILARORG

"சீமான் மேற்கொள்ளும் பணிகள் எல்லாம் ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. பூனைக் குட்டி இப்போதுதான் வெளியே வந்து கொண்டிருக்கிறது. "தமிழர்கள் எல்லாம் இந்துக்களாகத்தான் இருக்க முடியும். இந்துக்கள்தான் தமிழர்களாக இருக்க முடியும்' என்ற கருத்து அவர்களிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது. கீழடி உள்பட அகழ்வாராய்ச்சி நடக்கக் கூடிய இடங்களில் எல்லாம் சாமி சிலைகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. தமிழர்கள், இந்துக்களாக இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்கிறார், பச்சைத் தமிழகம் அமைப்பின் நிறுவனர் சுப.உதயகுமார்.

தொடர்ந்து பேசியவர், "தமிழர்கள், முன்னோர்களையும் காவல் தெய்வங்களையும் வணங்கி வந்தனர். அந்த வழிபாடு இன்றளவும் நடக்கிறது. இது முழுக்க மக்களின் அரசியலை மடைமாற்றும் வேலையாகத்தான் பார்க்கிறேன். அடிப்படையில், ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவராக சீமான் இருக்கிறார். இவரது தந்தையின் பெயர் செபாஸ்டியன். இவரது பெயர் சைமன்.

இவரின் வீட்டு முற்றத்திலேயே லூர்து மாதா சிலை உள்ளது. நான் நேரடியாக சென்று பார்த்திருக்கிறேன். கிறிஸ்துவ மதத்தில் இருந்து இவர் மாறியுள்ளதைப் பார்க்கிறேன். இவரைப் பற்றிய மத அடையாளமே கேள்விக்குள்ளாக இருக்கும்போது யாரை மகிழ்ச்சிப்படுத்த இவ்வாறு பேசுகிறார் எனத் தெரியவில்லை. அடையாள அரசியலை பேசிவிட்டு அடிப்படை அரசியலை காலி செய்வது என வலதுசாரி அரசியலை முன்னெடுக்கிறார்," என்கிறார்.

திரிக்கப்பட்டதா சீமானின் கருத்து?

நாம் தமிழர் சீமான்

பட மூலாதாரம்,IDUMBAVANAM KARTHIK

 
படக்குறிப்பு,

இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் பொறுப்பாளர்

"சீமானின் கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதே?" என நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் கேட்டோம்.

"சீமானின் பேச்சை தெளிவுபடுத்த விரும்புகிறேன், செய்தியாளர் சந்திப்பில், தமிழ் இந்து என்ற கேள்வி எழுப்பப்பட்டது. `அந்தக் கருத்தில் எங்களுக்கும் ஐயா மணியரசனுக்கும் முரண்பாடு உள்ளது, அவர் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை' என்றார். மேலும், `தமிழர்கள் இந்துக்களே இல்லை என்பதுதான் எங்களின் கோட்பாடு. வில்லியம் ஜோன்ஸ் என்ற வெள்ளைக்காரர் போட்ட கையொப்பத்தின்படிதான் நாங்கள் இந்துக்களாக ஆக்கப்பட்டோம். வரலாற்றின்படி, நாங்கள் இந்துக்கள் இல்லை' என்பதை விளக்கினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் இடைமறித்துக் கேள்வி எழுப்பியபோது, `இஸ்லாம், கிறிஸ்துவம் என்பது தமிழர் சமயங்களே இல்லை, ஒன்று அரேபிய சமயம், இன்னொன்று ஐரோப்பிய சமயம்' என்று குறிப்பிட்டார். அதன் பொருள், `இஸ்லாம், கிறிஸ்துவ சமயங்களை தமிழர்கள் பின்பற்றக்கூடாது என்பதல்ல. இந்து மதம் குறித்தான கேள்விகள் அம்மதங்களுக்கு பொருந்தாது' என்பதாகும்.

இதனைக் கூறிவிட்டு முந்தைய கேள்விக்கான பதிலின் தொடர்ச்சியாக, `சைவத்தையும், வைணவத்தையும் தழுவிக்கொள்ள வேண்டும் எனக்கூறுவது இந்து மதத்தை தழுவியுள்ளவர்களைத்தானே தவிர, இஸ்லாம், கிறிஸ்துவத்தை தழுவியுள்ளவர்களை அல்ல. சீமான் கூறியது தவறாகத் திரித்துப் பரப்பப்படுகிறது" என்றார் இடும்பாவனம் கார்த்தி.

தொடர்ந்து பேசியவர், ``முதன்முதலாக நடந்த மதமாற்றம் என்பது தமிழர்களை இந்துக்களாக மாற்றியதுதான். ஆகவே, தமிழர்களின் சமயங்களான சைவத்துக்கும் மாலியம் எனக் கூறப்படும் வைணவத்துக்கும் இந்து மதத்திலிருந்து திரும்ப வேண்டும் என்கிறோம். இந்தக் கருத்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர்களை தாய் மதத்துக்குத் திரும்புமாறு கூறியதாக திரிக்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் பொறுப்பாளராக பெஞ்சமின் என்பவர் இருக்கிறார். அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராகவே இயக்கப்பணியில் தொடர்கிறார். அதேபோல, வீரத்தமிழர் முன்னணியின் மற்ற பொறுப்பாளர்களாக உள்ள அலாவுதீன், நூர்ஜகான் போன்றோரும் இஸ்லாமிய மதத்தை தழுவிக்கொண்டேதான் அப்பொறுப்பில் இருக்கிறார்கள்.

சீமான் அறிவித்தது ஏன்?

அவர்கள் சைவத்துக்கும் மாலியத்துக்கும் மாறவுமில்லை. அவர்களை யாரும் மாறச் சொல்லவும் இல்லை. இந்து மதம் என்பது வருணாசிரமக் கொள்கைகளைக் கொண்டதாக இருக்கிறது. அதற்கு மாற்று மதமாகத்தான், தமிழர் சமயங்களை முன்வைக்கிறோம். தெய்வத்தின் குரலில், `நாங்கள் இந்துக்கள் என்று கூறியதால் தப்பித்தோம்' என்கிறார் காஞ்சி சங்கராச்சாரியார். இந்த ஆரிய சதியைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான், கர்நாடகத்தில் லிங்காயத்துகள் அறிவித்ததுபோல இந்துக்கள் இல்லையெனும் பரப்புரையை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது" என்றார் இடும்பாவனம் கார்த்தி.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

"தமிழர்களை இந்துக்கள் எனக்கூறி, ஒட்டுமொத்த மக்களையும் ஆரியம் அபகரித்துக்கொண்டது. ஆரிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்க மத நம்பிக்கை கொண்டவர்களுக்காக, இந்து மதத்திற்கு மாற்றாக சைவம், மாலியம் எனும் தமிழர் சமயங்களை முன்வைக்கிறோம். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். சீக்கியர்களுக்கென ஒரு மதம் இருப்பதைப் போல, தமிழர்களுக்கென இருந்த சமயங்களை மீட்டுருவாக்கம் செய்கிறோம்.

இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் அவர்கள் மதத்திலேயே தொடரலாம். இது அவர்களுக்குப் பொருந்தாது. எல்லோரையும் இந்துக்கள் எனக்கூறி, தங்களோடு இணைத்துக்கொண்டு இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களையும் பகையாளிகளாகக் காட்ட முனையும் இந்துத்துவத்தை பலவீனப்படுத்தவே இந்துக்கள் இல்லையெனும் அறிவிப்பை செய்கிறோம். இந்து மதத்திலிருந்து சைவத்துக்கும் மாலியத்துக்கும் திரும்பக் கோருகிறோம்" என்று இடும்பாவனம் கார்த்தி கூறினார்.

இந்தியச் சட்டப்படி இந்துதான்

இதையடுத்து, ``சைவத்திலும் வைணவத்திலும் ஏராளமான பிரச்னைகள் இருக்கும்போது, பெயரை மட்டும் மாற்றிவிட்டு தாய் மதத்துக்கு திரும்புங்கள் எனக் கூறுவது சரியல்ல என்கிறார்களே?" என்றோம்.

அதற்கு இடும்பாவனம் கார்த்தி, ` இஸ்லாமியர், கிறிஸ்துவர் அல்லாதவர்களை இந்து என்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வந்துவிட்டனர். நான் பௌத்த மதத்தைத் தழுவுகிறேன் என அம்பேத்கர் கூறினாலும் அதுவும் இந்தியச் சட்டப்படி இந்துதான். மத மறுப்பாளரும், கடவுள் மறுப்பாளரும் சட்டப்படி இங்கு இந்துதான். தான் விரும்பாவிட்டாலும் இந்து என்ற சொல் திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள்தான் என்ற வேர் ஊன்றப்பட்டிருப்பதால் அதனை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் பேசும்போது, `மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்கள் எனப் பதிவு செய்யக் கூடாது' என்றார். `கம்பராமாயணமும் பெரியபுராணமும் சைவர்களையும் வைணவர்களையும் இந்துக்களாக மடைமாற்றம் செய்கின்றன, தமிழர்கள் இந்துக்களே அல்ல' என அண்ணா பதிவு செய்கிறார். ஆனால், 90 சதவிகிதம் இந்துக்களைக் கொண்ட கட்சி என தங்களைப் பதிவுசெய்கிறது திமுக.

'திராவிட நாட்டில் இந்துக்களுக்கு என்ன வேலை? சமத்துவத்தை விரும்புபவன் எப்படி தன்னை இந்து என கூறிக்கொள்வான்?' என அண்ணா கேட்டார். இன்றைக்கு அவரது கட்சியிலே பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கிறார்கள் என பேசுகின்றனர்" என்றார்.

கண்ணன், முருகனை மீட்கும் முயற்சி

நாம் தமிழர் கட்சி

பட மூலாதாரம்,@NAAMTAMILARORG

"நாட்டார் தெய்வங்கள் என சில வழிபாட்டு முறைகள் இருக்கும்போது `தமிழர் சமயம்' என தனியாக ஒன்றைக் கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?" என்றோம்.

``மூத்தோர் வழிபாடு, இயற்கை வழிபாடு என்பது ஆதித் தொன்ம வழிபாடு. நடுகல் வழிபாடு போன்றவை அதில் வருகின்றன. சைவம், வைணவம் போன்ற தமிழர் சமயங்களை, இதுதான் தாய் மதம் என நாங்கள் கூறவில்லை. இந்து என்ற கட்டமைப்பை உடைக்க வேண்டிய அவசியம் உள்ளது. நாட்டார் வழிபாட்டை கையில் எடுக்காத ஆரியம், முருகன், கண்ணன், வருணன், இந்திரன், கொற்றவை போன்றோரைக் கையில் எடுத்துக்கொண்டது. மராட்டிய சிவாஜியை, இந்துத்துவவாதி இல்லை எனக்கூறி எவ்வாறு கோவிந்த பன்சாரே மீட்க முயன்றாரோ, அதேபோல,கண்ணன், முருகன் போன்றோரை மீட்க வேண்டிய பெரும்பணி உள்ளது.

இதில் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் அவர்களின் வழிபாட்டுக்கான ஜனநாயக உரிமையை 100 சதவிகிதம் நாம் தமிழர் கட்சி உறுதிசெய்து வருகிறது. இந்து என்ற சொல்லை மடைமாற்றுவதற்கு வேறு ஒரு பெயர் தேவைப்படுகிறது. இந்து என்பது ஆரியத்துக்குத்தான் வலிமைசேர்க்கும் என்பதை வலியுறுத்துகிறோம்.

சைவம், வைணவம் மட்டுமில்லாமல் இஸ்லாம், கிறிஸ்துவ மதத்துக்குக்கூட தமிழர்கள் திரும்பலாம். அதேநேரம், இந்து என்ற அடையாளம் வேண்டாம் என்கிறோம். அந்த மதமே தீண்டாமையின் அடிப்படையில்தான் கட்டப்பட்டுள்ளது. ஆய்வாளர் தொ.பரமசிவன் கூறியது போல, `இந்து என்பது ஆரிய மாயை. அதிலிருந்து உளவியல் விடுதலை வேண்டும்' என்கிறார். அதனைத்தான் நாங்கள் கோருகிறோம்" என்று கூறினார் இடும்பாவனம் கார்த்தி.

"சைவம், வைணவம்தான் அடையாளம் என்றால் மதுரை வீரன் வழிபாட்டை சீமான் எப்படிப் பார்க்கிறார் என்கிறார்களே?" என்றோம்.

"இறந்து போன முன்னோர்கள், எங்களின் தெய்வம். இந்து என்கிற அடையாளம் வேண்டாம் என்பதுதான் கூறுகிறோம். ஆரியத்தால் திருடி சிதைக்கப்பட்ட தமிழர் சமயங்களை மீட்டுருவாக்கம் செய்து, இந்து எனும் அடையாளத்திற்குள் தமிழர்கள் கரைந்துபோகாது தடுக்க சைவத்துக்கும் மாலியத்துக்கும் மடைமாற்றம் செய்கிறோம். இது இந்து மதத்திற்கு மாற்றாக எதிர்ப்புரட்சி மூலம் இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களைத் தழுவி நிற்போருக்குப் பொருந்தாது. ஆனால், அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பது போல தி.மு.கவினர் கருத்துருவாக்கம் செய்வது இழிவான அரசியலாகத்தான் பார்க்கிறேன்" என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-58946411

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

சைவம், வைணவம் மட்டுமில்லாமல் இஸ்லாம், கிறிஸ்துவ மதத்துக்குக்கூட தமிழர்கள் திரும்பலாம். அதேநேரம், இந்து என்ற அடையாளம் வேண்டாம் என்கிறோம்.

ம்..இப்ப ஒரு சில யாழ் கருத்தாளர்களுக்கு மெல்லவும் விழுங்கவும் முடியாத நிலை! 😂

 

Link to comment
Share on other sites

உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் கொடுத்த மரண அடி சீமானை மேலும் மென்டல் ஆக்கி விட்டது போல உள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு திரி நூலாக ஓடிட்டு இருக்கிறது அதுக்குள்ள இது வேறையா...ஏராளன் தம்பி..சீமானை விட குளப்படி கூடிட்டு.just joke.😄👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BBC Tamil, நடுநிலைமை தவறுகிறதோ என்றுதோன்றுகிறது.

தீம்கா, சங்கி சீமான் என டீவீட் பண்ண, நாதக, சங்கி ஸ்ராலின் என பதில் டீவீட் பண்ண, பின்னது, இரண்டு இலட்சம் தாண்டி இந்திய அளவில் முதலிடம்.

பொய் நீண்ட நேரம் நிற்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஆகிய நாம் இயற்கை வழிபாட்டு முறைக்குள் அமையும் சைவத்தை பிரதான மதமாகக் கொண்டவர்கள்.

இங்கு கருத்தெழுதுபவர்கள் ஊரில் சைவ சமயத்தில் பெயில் போல.. சீமான் பாஸ் பண்ணி இருக்கிறார்.

ஐந்திணை- நிலம், தொழில், மக்கள், கடவுள் - YouTube

இந்தக் கருத்துக்காக சீமானை திட்டுறவை.. விகடனுக்கு என்ன சொல்லப் போகினமோ...??!

https://www.vikatan.com/spiritual/temples/87628-tamil-peoples-homeland-gods-and-worship-methods

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகள். திணைக்கடவுள்கள் பற்றி தொல்காப்பியம்,

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
' என்கிறது.

இதில்  பாலைத் திணை தவிர்த்து நான்கு திணைக் கடவுள்கள் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஏனெனில், `பாலை’ என்பது தனி நிலம் அல்ல. குறிஞ்சியும் முல்லையும் மழை இல்லாமல் காய்ந்து போன நிலமே பாலை எனப்படும். எனினும், பாலைக்கும் தெய்வம் உண்டு. ஒவ்வொரு திணை மக்களும் ஒவ்வொரு கடவுளை வழிபட்டனர். அவை மாயோன், சேயோன், வேந்தன் , வருணன், கொற்றவை ஆகியன. ஐந்திணை மக்களின் வழிபாட்டு முறையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

https://www.vikatan.com/spiritual/temples/87628-tamil-peoples-homeland-gods-and-worship-methods

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

`கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களைப் பற்றி நீங்கள் பேசுவதில்லையே?' என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, `அவை வெளியில் இருந்து வந்த சமயங்கள்தானே. அதில் ஒன்று ஐரோப்பிய சமயம், இன்னொன்று அரேபிய சமயம்' என்றார்.

 

1 hour ago, Justin said:

சைவம், வைணவம் மட்டுமில்லாமல் இஸ்லாம், கிறிஸ்துவ மதத்துக்குக்கூட தமிழர்கள் திரும்பலாம். அதேநேரம், இந்து என்ற அடையாளம் வேண்டாம் என்கிறோம்.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் வெளியில் இருந்து வந்த சமயங்கள் என்றால் இந்நாளைய கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் அந்நாளைய தாய்மதம்  சைவம் வைஸ்ணவமாகதானே இருக்கவேண்டும்.

சீமான் மென்று முழுங்காமல் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தாய் மதமான சைவத்துக்கு வரவேண்டும் என்று பகிரங்கமாக அழைப்புவிட அவரை தடுப்பது எது?

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான அளவு முஸ்லிம்கள் கிறிஸ்தவ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், அப்படி ஒரு அறிக்கை விடுத்தால் அடுத்தநாளே பெரும் பிரளயம் வெடிக்கும்.

புரட்சியாளர்களாக காட்டிக்கொண்டு கறுப்பு சட்டையுடன் முழங்கிய  பெரியார் தொடக்கம் கருணாநிதி வீரமணி சுபவீரபாண்டியன்  சீமான்வரை இந்துக்கள் பற்றி மட்டுமே இரத்தம் கொப்பளிக்க விமர்சனங்கள் வைக்க முடியும்

அதே வேகத்துடன் இஸ்லாம் கிறிஸ்தவர்கள் பற்றி திருத்தங்கள் பேசினால் தமிழக அளவில் கொதி நிலை ஏற்பட்டு கட்சி தடை செய்யபடும் அளவிற்குகூட போகலாம்.

அரசியல் யாரும் செய்யலாம் அது அவரவர் உரிமை ஆனால்  எதிர் தாக்குதல் பலமாக இருக்கும்  என்ற திசையை தவிர்த்து மறுபக்கம் அரசியல் செய்வது சிரிப்பு அரசியலாகிவிடும். 

 

 

Link to comment
Share on other sites

வரலாற்றை பின்னோக்கி கொண்டு போனால் தமிழருக்கு சமயமே இருக்காது. அண்மைய கீழடி அகழ்வாய்வில் கூட மத அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அனால் இங்கு அதுவல்ல பிரச்சனை இன்றைய நடைமுறையில் தமிழர்கள் தாய்மதம் திரும்பவேண்டும் தமிழ்கள் என்றால் சைவ மத்ததினர் தான் என்று கூறுவதற்கு ஒரு மனிதனுக்கு விசர் பிடித்திருக்க வேண்டும். 

தமிழகத்தின் தீய சக்தி சீமான். அதை புரிந்து கொண்டு அவரை நிராகரித்த தமிழக மக்கள் பாராட்டுக்குரியவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் வரலாற்றை றோட்டில போறது வாறது எல்லாம் பின்னோக்கி பார்த்தால்.. ஒன்றுமே இருக்காது. ஏனெனில் அதுகளின் தலைக்குள் இருப்பதே தமிழர் விரோத சிந்தனை மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

வரலாற்றை பின்னோக்கி கொண்டு போனால் தமிழருக்கு சமயமே இருக்காது. அண்மைய கீழடி அகழ்வாய்வில் கூட மத அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அனால் இங்கு அதுவல்ல பிரச்சனை இன்றைய நடைமுறையில் தமிழர்கள் தாய்மதம் திரும்பவேண்டும் தமிழ்கள் என்றால் சைவ மத்ததினர் தான் என்று கூறுவதற்கு ஒரு மனிதனுக்கு விசர் பிடித்திருக்க வேண்டும். 

தமிழகத்தின் தீய சக்தி சீமான். அதை புரிந்து கொண்டு அவரை நிராகரித்த தமிழக மக்கள் பாராட்டுக்குரியவர்கள். 

May be an image of text that says '1998 Admk &Bjp கூட்டணி 1999- Dmk &Bjp கூட்டணி 2004-Admk &Bjp கூட்டணி 2014- மதிமுக, தேமுதிக &Bjp கூட்டணி 2019-a Admk &Bjp கூட்டணி இப்புடி எல்லாரும் மாத்தி மாத்தி "அவாளோட கள்ள சவகாசம்" வச்சுகிட்டு 2021ல- நாம் தமிழர் *Bjp யோட B team *Rss ன் கைக்கூலி *சீமான் ஆபத்தானவர்'

தமிழகத்தின் தீயசக்தி சீமான் நல்ல சக்தி திருட்டுத் திராவிடக் கும்பல் அப்படித்தானே.நீண்ட கால திராவிட ஆட்சியில் தமிழர் என்ற அடையாளம் அழிந்து திராவிட சாயம் பூசப்பட்டிருக்கிறது. அதை அழித்து நாம் தமிழர் என்ற  இன அடையாளத்தை சீமான் தூக்கிப்பிடிப்பது திராவிடத்திற்கு கசக்கிறது. அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nedukkalapoovan said:

தமிழரின் வரலாற்றை றோட்டில போறது வாறது எல்லாம் பின்னோக்கி பார்த்தால்.. ஒன்றுமே இருக்காது. ஏனெனில் அதுகளின் தலைக்குள் இருப்பதே தமிழர் விரோத சிந்தனை மட்டுமே. 

இயற்கை வழிபாட்டில் இருந்த தமிழர் இறையியல் குறித்து மேலே விகடன் லிங்கை குடுத்த பின்னும், இந்து மத சிலை வழிபாட்டை பேசிக் கொண்டு, ஆதாரம் இல்லை என்றால் என்ன சொல்வது.

இந்து மதம் உருவாகியதாக சொல்லப்படும், இந்து சமவெளி நாகரிக பகுதியில் இன்று வரை வழிபாட்டு சான்றே கிடைக்கவில்லை.

வாசிப்பதும் இல்லை. வாசித்தவர் லிங்க் கொடுத்தால் பார்ப்பதும் இல்லை.

சும்மா நாமும் இருக்கிறம் என்று அலம்பறை பண்ணுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

புரட்சியாளர்களாக காட்டிக்கொண்டு கறுப்பு சட்டையுடன் முழங்கிய  பெரியார் தொடக்கம் கருணாநிதி வீரமணி சுபவீரபாண்டியன்  சீமான்வரை இந்துக்கள் பற்றி மட்டுமே இரத்தம் கொப்பளிக்க விமர்சனங்கள் வைக்க முடியும்

உண்மை தான்
சீமான் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு விசேட சலுகைகள் கொடுப்பது ஏனோ?

3 hours ago, tulpen said:

உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் கொடுத்த மரண அடி சீமானை மேலும் மென்டல் ஆக்கி விட்டது போல உள்ளது. 

அப்படி தான் நானும் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், நாதமுனி, புலவர்,

நீங்கள் சமய தீட்சை எடுத்தீர்களோ? திருநீறு, உருத்திராக்கம் அணிவதோ? திருவைந்தெழுத்து உச்சாடனம் செய்வதோ?

சைவசமயம் என்பது வெறும் எழுத்தில் இல்லை. சீமான் சைவ சமய அனுட்டானங்களை கடைப்பிடித்து ஒழுகும் ஒருத்தரா? 

கடைசி கைலாசாவில் உள்ள நித்தியானந்தா சைவமே தமிழர்களின் சமயம் என்று கூறினால் அதற்கு ஒரு அர்த்தம் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நெடுக்காலபோவான், நாதமுனி, புலவர்,

நீங்கள் சமய தீட்சை எடுத்தீர்களோ? திருநீறு, உருத்திராக்கம் அணிவதோ? திருவைந்தெழுத்து உச்சாடனம் செய்வதோ?

சைவசமயம் என்பது வெறும் எழுத்தில் இல்லை. சீமான் சைவ சமய அனுட்டானங்களை கடைப்பிடித்து ஒழுகும் ஒருத்தரா? 

கடைசி கைலாசாவில் உள்ள நித்தியானந்தா சைவமே தமிழர்களின் சமயம் என்று கூறினால் அதற்கு ஒரு அர்த்தம் உள்ளது. 

நான் தீட்சை கேட்ட சைவ சமயத்தவன்.
ஆனாலும் எம்மதமும் சம்மதம் என்ற புரிந்துணர்வு உள்ளவன்.

இருந்தாலும் அனுஸ்டானங்கள் தேவையில்லாத ஒன்று என்பது என் கருத்து. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.