Jump to content

மனித உரிமைகள் பேரவையின், உறுப்பினராக... இந்தியா மீண்டும் தெரிவு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து சிறப்பு கூட்டம் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்

மனித உரிமைகள் பேரவையின், உறுப்பினராக... இந்தியா மீண்டும் தெரிவு !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நடைபெற்றது.

2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்த நிலையில் பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தெரிவாகியுள்ளது.

இதேவேளை மூன்று ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீள இணைந்துள்ளது.

இதன்போது 193 நாடுகளில் 168 நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீள இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

https://athavannews.com/2021/1245162

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.