Jump to content

சிறுமி வன்புணர்வு ; யாழ்.நகர ஒளிப்படப்பிடிப்பாளர் தொடர்பில் தீவிர விசாரணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி வன்புணர்வு ; யாழ்.நகர ஒளிப்படப்பிடிப்பாளர் தொடர்பில் தீவிர விசாரணை

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளரினால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் சில ஒளிப்படங்களை வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் ஒளிப்படப்பிடிப்பு (ஸ்ருடியோ) நடத்துபவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக உறவினரான சந்தேக நபர் பல தடவைகள் தன்னை வன்புணர்ந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் கீழ் பணியாற்றும் சிலர் சிறுமியின் ஒளிப்படங்களை வைத்திருந்தமை தொடர்பில் கண்டறிந்தனர்.

அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னேடுக்கப்படவேண்டும் என்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

 

https://www.virakesari.lk/article/115542

 

Link to comment
Share on other sites

சிறுமி மீதான வன்புணர்வு வினோதச் செய்தியா கிருபன்ஜீ க்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நிழலி said:

சிறுமி மீதான வன்புணர்வு வினோதச் செய்தியா கிருபன்ஜீ க்கு?

இதில் வினோதம் இல்லை. சாதாரணமாக தினமும் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாக வந்துகொண்டிருக்கின்றது. 

இன்று வாசித்த செய்திகளில் சில:

அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டல் விடுத்த இளைஞன் அதிரடியாக கைது

சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கீறிய சிறுவன் கைது!

இவற்றை யாழில் ஒட்டவில்லை

Link to comment
Share on other sites

10 minutes ago, கிருபன் said:

இதில் வினோதம் இல்லை. சாதாரணமாக தினமும் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாக வந்துகொண்டிருக்கின்றது. 

இன்று வாசித்த செய்திகளில் சில:

அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டல் விடுத்த இளைஞன் அதிரடியாக கைது

சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கீறிய சிறுவன் கைது!

இவற்றை யாழில் ஒட்டவில்லை

தாயகத்தில் தமிழர்கள் மத்தியில் பாலியல் வரட்சியும் அதன் பலனாக பாலியல் வன்முறையும் அதிகரித்துச் செல்கின்றதன் விளைவுகள் தான் இவை. இவற்றை சாதாரணச் செய்திகளாக கடந்து செல்ல முடியாது. அதுவும் சிறுவர் மீதான பாலியல் வன்முறை செய்தி திரட்டிப் பகுதியில் இடம்பெறுவது தொடர்பாக எனக்கு கேள்விகளும் உள்ளன. அரசியல் செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இவற்றுக்கும் கொடுக்கப்படல் நல்லதென நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

தாயகத்தில் தமிழர்கள் மத்தியில் பாலியல் வரட்சியும் அதன் பலனாக பாலியல் வன்முறையும் அதிகரித்துச் செல்கின்றதன் விளைவுகள் தான் இவை. இவற்றை சாதாரணச் செய்திகளாக கடந்து செல்ல முடியாது. அதுவும் சிறுவர் மீதான பாலியல் வன்முறை செய்தி திரட்டிப் பகுதியில் இடம்பெறுவது தொடர்பாக எனக்கு கேள்விகளும் உள்ளன. அரசியல் செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இவற்றுக்கும் கொடுக்கப்படல் நல்லதென நினைக்கின்றேன்.

அதேவேளை மித்திரன் ரேஞ்சில் ரப்லொயிட் செய்திகளாக இல்லாமல் சமூக கூட்டுமனநிலையை கேள்விக்குட்படுத்தும் தரமான செய்திகளாக இருக்கவேண்டும்.

 வீரகேசரி செய்தி கட்டுப்பாடுடன் வந்துள்ளது. ஆனால் சாதாரண பொலிஸ், நீதிமன்ற தகவலாக உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒளிப்படப்பிடிப்பாளர் விளக்கமறியலில்!

யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒளிப்படப்பிடிப்பாளர் விளக்கமறியலில்!

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளரினால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் சில ஒளிப்படங்களை வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் ஒளிப்படப்பிடிப்பு (ஸ்ருடியோ) நடத்துபவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக உறவினரான சந்தேக நபர் பல தடவைகள் தன்னை வன்புணர்ந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் கீழ் பணியாற்றும் சிலர் சிறுமியின் ஒளிப்படங்களை வைத்திருந்தமை தொடர்பில் கண்டறிந்தனர்.

அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னேடுக்கப்படவேண்டும் என்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1245589

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

தாயகத்தில் தமிழர்கள் மத்தியில் பாலியல் வரட்சியும் அதன் பலனாக பாலியல் வன்முறையும் அதிகரித்துச் செல்கின்றதன் விளைவுகள் தான் இவை. இவற்றை சாதாரணச் செய்திகளாக கடந்து செல்ல முடியாது. அதுவும் சிறுவர் மீதான பாலியல் வன்முறை செய்தி திரட்டிப் பகுதியில் இடம்பெறுவது தொடர்பாக எனக்கு கேள்விகளும் உள்ளன. அரசியல் செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இவற்றுக்கும் கொடுக்கப்படல் நல்லதென நினைக்கின்றேன்.

பாலியல் வரட்சியினால் இது நடக்கின்றது என்று சொல்ல முடியாது...

பாலியல் பசுமையாக செழித்து இருக்கும் வெளிநாடுகளிலும் இது நடக்கின்றது...

அன்றும் நடந்தது இன்றும் நடக்கின்றது.....இனிமேலும் நடக்கும் .....வெளிய தெரியவந்தால் விவாவதம் ,செய்தி.....

வெளியே தெரியவரவில்லை என்றால் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி வன்புணர்வு ; யாழ்.நகர ஒளிப்படப்பிடிப்பாளர் மனைவியும் கைது

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவில் உள்ள ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒளிப்படங்களை வெளியிட்டு சிறுமியை பிழையானவராக வெளிப்படுத்த முற்பட்ட வேளை அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் துரித நடவடிக்கையின் காரணமாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதுடன் மற்றொருவரும் கைது செய்யப்படவுள்ளார் என்று அறிய முடிகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் ஒளிப்படப்பிடிப்பு (ஸ்ருடியோ) நடத்துபவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக உறவினரான சந்தேக நபர் பல தடவைகள் தன்னை வன்புணர்ந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் சிறுமியின் ஒளிப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் சந்தேக நபருக்கு சாதகமாக மாற்றப்படவுள்ளமை தொடர்பில் கண்டறிந்தனர்.

அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில் சந்தேக நபரின் மனைவி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மற்றொருவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 

https://www.virakesari.lk/article/115582

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சிறுமி வன்புணர்வு ; யாழ்.நகர ஒளிப்படப்பிடிப்பாளர் மனைவியும் கைது

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவில் உள்ள ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒளிப்படங்களை வெளியிட்டு சிறுமியை பிழையானவராக வெளிப்படுத்த முற்பட்ட வேளை அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவன் செய்த இந்த… கெட்ட வேலைக்கு, முட்டுக் கொடுக்கும் மனைவியை என்ன வகையில் சேர்ப்பது.

முன்பெல்லாம்… இப்படிப் பட்டவர்களை, வீட்டை விட்டே துரத்தி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சிறுமி வன்புணர்வு ; யாழ்.நகர ஒளிப்படப்பிடிப்பாளர் மனைவியும் கைது

 குளிர் விட்டு போச்சு...,

😟

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.