Jump to content

தமிழர்களை தொடர்ந்து முஸ்லிம்களையும் விட்டு வைக்காத பயங்கரவாத தடைச்சட்டம்  :  அம்பிகா சற்குணநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை தொடர்ந்து முஸ்லிம்களையும் விட்டு வைக்காத பயங்கரவாத தடைச்சட்டம்  :  அம்பிகா சற்குணநாதன்

ஆரம்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது பயன்படுத்தப்பட்டபோதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீதும் பயன்படுத்தப்படுகின்றது என  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.  

வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் கூறினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எத்தனையோ நபர்களுக்கு எதிராக வழங்கு தொடுக்கப்படவில்லை. 

அவ்வாறு வழக்கு தொடுக்கப்படவும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. அவர்களின் குற்றங்களை கண்டுபிடிக்க 10 - 12 வருடங்களுக்கு மேல் உரிய தரப்பினருக்கு செல்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலைக் காண.....

https://www.virakesari.lk/article/115537

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையினை அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை

2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

இது சிறுபான்மை குழுவை வெளிப்படையாக குறிவைக்கும் அரசாங்கக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எரியும் வீடுகள் முதல் எரியும் உடல்கள் வரை இலங்கையில் முஸ்லிம் துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறை, சிங்கள- பெளத்த தேசியவாதத்தின் மத்தியில் 2013 முதல் இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வின் வளர்ச்சியைக் கண்டறிந்துள்ளது. 

இந்த பாகுபாடு, தண்டனையின்றி தொடர்ச்சியான கும்பல் தாக்குதல்களிலிருந்து, முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக பாகுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைகளாக உருவானது.

இதில் கொவிட் -19 இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது மற்றும் நிகாப் (முகத்திரை) மற்றும் மதரசாக்கள் (மதப் பாடசாலைகள்) இரண்டையும் தடை செய்ய தற்போதைய திட்டங்கள் ) போன்ற திட்டங்களும் உள்ளடங்கும்.

இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு ஒன்றும் புதிதல்ல என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் நிலைமை கடுமையாக பின்னடைவை சந்தித்துள்ளது. 

இலங்கை அதிகாரிகள் இந்த ஆபத்தான போக்கை கைவிட்டு, முஸ்லிம்களை மேலும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது, குற்றவாளிகளை பொறுப்பேற்கச் செய்வது மற்றும் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, துன்புறுத்துதல் மற்றும் பாகுபாடு காட்டுவதற்கான அரசாங்கக் கொள்கைகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையினை அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழர்களை வைத்தே முஸ்லிம்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கிறது வீரகேசரி. 

பயங்கரவாத தடை சட்ட காலத்தில் அதை கொடூரமாக தமிழர்கள்மீது ஏவிவிட  புலனாய்வாளர்களாக, ராணுவத்தினராக, பொலிஸ் அதிகாரிகளாக  தமிழர்கள்பற்றி தகவல் கொடுப்போராக , பல படுகொலைகள் காணாமல் போதலுக்கு சிங்களவர்களுடன்  தோளோடு தோள் நின்று பாடுபட்டது இஸ்லாமிய சமூகம்.

அந்நாட்களின் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி முஸ்லீம்களை வைத்து ஒரு நேர்காணலை வீரகேசரி நடத்தியதாக நினைவிலேயே இல்லை.

இலங்கை மட்டுமல்ல உலகம் எங்கிலும் முஸ்லீம்கள் தினசரி  இந்த உலகுக்கு இழைக்கும் அநீதிகளைபற்றி பேசுவதைக்காட்டிலும், முஸ்லீம்களுக்கு சிறு அநீதி இழைக்கப்பட்டால் அதை உலகம் முழுவதும் பாரிய மனித உரிமை மீறலாக பார்க்கப்படுவதே அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம் இந்த உலகில் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அநீதி இழைக்கப்படுகின்றது. முஸ்லீம்கள் பத்தரை மாற்றுத் தங்கங்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.