Jump to content

ஓஷோயிசம் – சில குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓஷோயிசம் – சில குறிப்புகள்

osho-647_011916120010.jpg

சென்ற நுாற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் ஓஷோ. இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு மனிதர்களின் மனங்களைப் பாதிக்கும் காரியங்களைச் செய்துவிட்டு சென்றிருக்கிறார். ஓஷோ பூரணர். ஆயினும் முரண்கள் நிறைந்தவர்.  அரிதியிட்டு நிறுவிச் சென்றவற்றை மறுக்க வேண்டிய தருணங்களில் தயக்கமின்றி நிராகரித்தவர். பிரபஞ்சத்தில் ஒளியும் இருளும் உள்ளதைப்போல அவரின் சொற்களிலும் அவை உண்டு.

ஒளியின் சமகாலத்தில் இருளை உங்களால் அறிந்து கொள்ள இயலாது. ஒளியின் முன் இருள் இல்லாமல் போகும். அஞ்சித் தன்னைத்தானே மறைத்துக் கொள்ளும். ஒளி விடைபெற்ற மறுகணம் தன்னை பூதாகரப்படுத்தி நிறைத்துக் கொள்ளும். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவை. ஓஷோவிடம் காணப்படும் முரண்கள் இவ்வகைப்பட்டதே.

ஓஷோ ஞானமடைந்தவர். அவர் சொல்லியிருக்கிறார். அதை நான் பிரதிபலிக்கிறேன். சிலர் அதை ஏற்பதில்லை. குறிப்பாக ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சீடர்கள். அவர்களுக்கு ஓஷோ பெரிய படிப்பாளி. சிறந்த சிந்தனைவாதி. உரையாடல்காரர், தத்துவவாதி. ஆனால் ஞானி அன்று. உண்மை எதுவென்று சாமானியர்களான நமக்குத் தெரிவதில்லை. தெரியாததை அரிதியிட்டுப் பேசுவது அறிவுலக ஒழுக்க மீறல்.

ஓஷோவும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் அவர்கள் பேசிச்சென்றுள்ள சொற்கள் ஊடாகத்தான் இன்று நமக்கு அறியக் கிடைக்கிறார்கள். ஓஷோவையும், ஜிட்டுவையும் ஏற்பதும் மறுப்பதும் அவரவர் மனோலயத்தின் பாற்பட்டது. ஜிட்டு முழுக்க அகம் சார்ந்து உரையாடிச் சென்றவர். குருவே தேவையில்லை. தியானம் முயன்று செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என்பார். ஓஷோ குருவின் அவசியம் குறித்தும், தியானத்தின் தேவை குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இருவரும் சமகாலத்தவர்கள். இருவரும் சமமானவர்கள் தானா? ஒப்பிட முடியாத பேராளுமைகள். என் நோக்கில் ஜிட்டு போன்சாய் மரங்களை ஒத்தவர். ஓஷோ புறம்போக்கில் தன்போக்கில் வளர்ந்து செழித்திருக்கும் ஆலமரம் போன்றவர். தங்கி இளைப்பாற ஓஷோவிடமே நிழலும் போதிய இடமும் இருக்கிறது.

ஓஷோ ஒளியால் ஆன உலகத்தைப் பற்றிப் பேசும் போது, அவை இருள் உறைந்த பாதாள உலகங்களை புறக்கணிக்கின்றன. ஒளியின் சொற்கள் இருளைப் புரிந்து கொள்ள உதவுவதில்லை. ஒளி துல்லியமானது. வெளிப்படைத்தன்மை மிகுந்தது. காந்தி ததும்புவது. ரச்மிகள் கண்களைக் கூசச்செய்யும். இவற்றைக்கொண்டு இருளைப் புரிந்து கொள்ள முடியாது. இருளின் இருப்பு வேறுவிதமானது.

இருள் புதிர்கள் நிரம்பியது. வழித்தடங்களின் மீது அச்சங்களைப் போர்த்தியிருப்பது. திசைகளை மறுதலிப்பது. அடுத்த காலடியின் சாத்தியத்தை கேள்விக்குட்படுத்துவது. நிச்சயமி்ன்மைகளை வெகுமதியாக வழங்குவது. அவநம்பிக்கையை தன் இயல்பெனக் கொண்டிருப்பது.

இருவேறு உலகம். ஆனால் அவை இரண்டும் ஊடாடி முயங்கும் நடனத்தில் உள்ளன. தனித்த பேரியக்கங்கள். ஓஷோவையும் இவ்விதமே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு லட்சியங்களை சுமந்து கொண்டு செயல் புரிவது, உயரிய நோக்கமொன்றிற்காக தன் வாழ்நாட்களை அர்ப்பணிப்பது கைவிடப்பட வேண்டிய மடத்தனம். அறிவுத்தேடலை குப்பைகள் என்று அறிவுறுத்தி கைவிட்டுவிடத் துாண்டுவார். தியானம் ஒன்றே உனக்குப் போதும் என்பார். மனம் கடந்த நிலைக்கு உன்னைத் தயார் செய் என்பார். ஆனால் வாழ்நாளெல்லாம் அறிவை வாசிப்பதன் வழியாக சம்பாதித்துக்கொண்டே இருந்தார். மனிதர்களுக்கு ஞானமடைதல் குறித்து போதிக்கும் குன்றாத லட்சியவாதத்தைக் கொண்டிருந்தார். தன் உபதேசத்தை முற்றாக மீறும் ஒருவராக அவரே இருந்தார்.

ஆம். அவை சரியானவையே. மனம் ஒரு மாளாத் தொந்தரவு. மனம் என எளிதாக சொல்லி விடுவதைப்போல அத்தனை எளிதானதல்ல மனதைப் புரிந்து கொள்வது. மனமே இங்குள்ள அத்தனையும். மனதிற்காகவே இங்குள்ள அத்தனையும். கவிதைகள், காவியங்கள், பேரிலக்கியங்கள், இசைப் பேரின்பங்கள்,  ஓவியங்கள், அரசியல் பேருரைகள், மனிதப் படுகொலைகள், காதலின் உன்மத்தங்கள், கருணையின் கண்ணீர்த் தளும்பல்கள். உண்மைக்கான தேடல்கள். ஆம். மனமே இங்குள்ள அனைத்திற்கும் ஆதிமூலம். மனித வாழ்வின் விளைநிலம். மனத்திற்காகவே ஒட்டுமொத்த அறிவியலும் கண்டுபிடிப்புகளும்.

மனமே மனிதன் என்கிறார் ஓஷோ. ஒருவர் இந்தியனாக, ஐரோப்பியனாக, ஆப்பிரிக்கனாக, இருக்கலாம். ஆனால் அவன் மனிதன். மனத்தால் வழி நடத்தப்படுபவன் என்ற நோக்கில் மனதைப் புரிந்துகொண்டால் போதும் மனிதனைப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். மனித வரலாற்றின் கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் கூட மனதைப் புரிந்து கொள்வதன் மூலம் சாத்தியப்படும் என்கிறார்.

மனித மனம் ஐந்து நிலைகளை உடையது. முன் மனம், சமூக மனம், தனி மனம், பிரபஞ்ச மனம், புத்த மனம்.

முன் மனம் குழந்தைகளுக்குரியது. மூன்றில் இருந்து நான்கு வயதுவரை இயற்கையாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை சதா அந்த மனதோடுதான் இருக்கிறது. அதில் கலங்கம் இல்லை. கற்பிதங்கள் காணப்படுவதில்லை. ஐயங்களும் குழப்பங்களும் தடுமாற்றங்களும் கிடையாது. முன் மனம் ஐந்தாவது மனமான புத்த மனத்திற்கு இணையானது. பேரின்பம் நிறைந்தது. குழந்தைகளைப் போல நீங்கள் மாறா விட்டால் தேவனின் ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது என்கிற இயேசுவின் சொற்களை நினைவில் கொள்ளுங்கள். தேவனின் ராஜ்ஜியம் என்று அவர் சொல்வது ஐந்தாவது மனதை. புத்த மனதை. இயேசுவின் மனதை. குழந்தையின் மனதை.

முன் மனதிற்கு பொறுப்புகள் இல்லாத காரணத்தால், கடமைகள் நிர்ப்பந்திக்காத காரணத்தால் துயரங்களும் இல்லை. கண்ணியம், நேர்மை , லட்சியம், கடவுள் என ஏதொன்றும் குழந்தையின் உலகில் இருப்பதில்லை. குழந்தை தன்னியல்பில் ததும்பிக்கொண்டே இருக்கிறது. புராதனமான மகத்துவம். இங்கு பிறக்கும் அத்தனை உயிர்களுக்கும் உரியது. அதைப்பெற குழந்தை எந்த வித முன்தயாரிப்புகளும் மேற்கொள்ள வேண்டியதில்லை. அதைத் தக்க வைக்க குழந்தையால் ஆவதுமில்லை. ஒரு பருவ காலத்தைப்போல குழந்தைமை. வாழ்வில் ஒரே முறை. மறு வாய்ப்பு ஞானமடைவதில் உள்ளது. விலங்கு நிலைக்கும் மனித நிலைக்கும் இடையே உள்ள இணைப்பாக குழந்தைமை உள்ளது. மதி நுட்பம் குழந்தைமையின் இயல்பே. ஆனால் அது புத்திக்கூர்மை அல்ல. களங்கமின்மை அதற்கு சாத்தியப்பட்டதே ஆனால் அதில் தியான நிலை இல்லை என்கிறார் ஓஷோ.

புராதன காலத்தில் இருந்து மனிதன் கடந்து வந்த அத்தனை நிலைகளையும் குழந்தை தன் தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் ஒன்பது மாதங்களில் கடந்து விடுகிறது. லட்சோப லட்ச ஆண்டுகளாக நிகழ்ந்துள்ள பரிணாம வளர்ச்சியினை மின்னல் கடக்கும் வேகத்தில் குழந்தை தாண்டி வருகிறது. முன் மனம் ஒருவனிடம் வாழ்நாள் முழுக்க உள்ளே ஒரு ஒரத்தில் தங்கிவிடுகிறது. ஒரு பேரிழப்போ, கொடுங்கணமோ நிகழும்போது அவன் முதல் மனதில் வந்து விழுகிறான். குழந்தையைப் போல கண்ணீர் விட்டு அழத்தொடங்குகிறான். ஒரு புத்தனாக ஆவாத போது ஒருவனால் முதல் மனதில் இருந்து வெளியே வர முடிவதில்லை. தியான நிலையால் மட்டுமே முன் மனதைக் கடந்து வர இயலும். அல்லாத போது அது அவனுக்குள் என்றுமே இருந்து கொண்டிருக்கும்.

download-3.jpg

மனதில் இரண்டாவது நிலை சமூக மனம். தொகுப்பு மனம். இதை சுமை துாக்கும் ஒட்டகம் என்கிறார் நீட்சே. நம் பண்பாட்டில் கழுதை. எவ்வளவு சுமைகளை நீ ஏற்றுக் கொள்கிறாயோ அவ்வளவு மதிப்பும் மரியாதையும் வழங்கப்படுகிறது.

சமூக மனதில்தான் நம்மில் தொண்ணுாறு விழுக்காட்டினர் இருக்கிறோம். சராசரிகள் என்று அறிவுஜீவிகள் சுட்டும் நிலை. வரையறை செய்யப்பட்ட பாட்டைகளில் பொறுப்புகள் ஏதுமற்று அக்கடா என்று பயணித்தல். தேடல்களே இல்லாத ஆனால் விடைகள் ஏராளமாக குவிந்து கிடக்கும் நிலை. கடவுள் யார் என்றால் பல்வேறு விடைகள் ஏற்கனவே தயாரித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. பண்பாடு என்ற பெயரில் கலாச்சாரம் என்ற பெயரில் சுற்றி இருப்பவை எல்லாம் இரண்டாம் நிலை மனதின் வெளிப்பாடுகள். கூட்டு மனம் என்றாலும் தகும்.

மனிதர்கள் தங்களை தனித்த ஒரு உயிராக நினைப்பதில்லை. இந்தியன் என்றோ தமிழன் என்றோ இந்து என்றோ முகமதியன் என்றோ கிறிஸ்தவன் என்றோ மார்க்சியன் என்றோ பெரியாரியன் என்றோ நினைக்கிறார்கள்.

சமூக மனதில் தனி மனித பிரக்ஞை வலுப்பெற்றிருப்பதில்லை. சமூகம் அதை அனுமதிப்பதும் இல்லை. எங்களோடு சேர்ந்திரு. எங்களைப் போல இதைச் செய். அவற்றைச் செய்யாதே. உன் இனக்குழுவிற்கு இவை விதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை மட்டும் பின்பற்று. கட்டளை இடப்படுகின்றன. விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சாத்தியங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வாழ்நாளுக்கும் தினசரி நாட்காட்டிகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிறப்பில் இருந்து மாசானம் செல்வது வரை திசைகாட்டிகளும் செயல்குறிப்புகளும் மாறாத் தன்மையோடு காத்திருக்கின்றன. மீறினால் நீ ஒழுிந்து போவாய். புறக்கணிக்கப்படுவாய். வரலாற்றில் இருந்து அழித்தொழிக்கப்படுவாய். தனியனாக கைவிடப்படுவாய்.

விதியாகவும் மதமாகவும் சட்டங்களாகவும் இங்கே முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளவை தொகுப்பு மனதைக் கருதியே. இரண்டாவது மனம் பொருட்படுத்த வேண்டியவை இவையே. சமூக மனம் தேடல்கள் அற்றது. மீறல்களை அஞ்சுவது. புரட்சி, உலகைப் புரட்டும் நெம்புகோல்களை ஐயத்தோடு பார்ப்பது. குழந்தைமை சுயநலத்தால் மட்டுமே வாழ்வது. தன் இன்பங்களை மட்டுமே கருத்தில் கொள்வது. இரண்டாவது மனம் சமூகத்தின் மீது அக்கறை வேண்டி நிற்பது. அது பொதுநலத்தை உன்னிடம் எதிர்பார்க்கிறது. சமூகத்திற்காக ஏதேனும் செய் என்று நிர்ப்பந்திக்கிறது. கட்டளை இடுகிறது. தியாகங்கள் செய்யத் துாண்டுகிறது. லட்சியங்களை சுமந்து கொண்டு களப்பணியாற்ற அழைக்கிறது.

நாகரீகம், பண்படுதல் என்பதே ஒரு விதத்தில் தனித்த பிரக்ஞையை மட்டுறுத்தி குழுவாக வாழ்வது சார்ந்து செயல்களை அமைத்துக்கொள்வதே. தன்னியல்பில் காணப்படும் பிசிறுகளைச் செதுக்கிவைப்பதே. நான்கு அறைகளுக்குள் நீ உன்னியல்பில் இரு. பொதுவெளி என்று வந்துவிட்டால் மற்றவர்களையும் கவனத்தில் கொள் என்கிறது இரண்டாவது மனம். அல்லது தொகுப்பு மனம்.

இரண்டாவது மனதிற்கு தேடல்கள் தேவையில்லை. ஆனால் ஒப்பீடுகள் உள்ளன. மற்றவர்களோடு ஒப்பிட்டுத் தன்னைத்தானே மதிப்பீட விழைகிறது. ஏற்றத்தாழ்வுகள் கண்களில் பட அவற்றை மாற்றிவிட விரும்புகிறது. தன் செயல்களால் அகங்காரம் கொள்கிறது. இரண்டாவது நிலையில் தனித்த அடையாளங்களை மனிதர்கள் தேடிக்கொள்கிறார்கள். நீ யார் என்ற கேள்விகளுக்கு அவர்கள் நிலையான பதிலை அமைத்துக்கொள்கிறார்கள். பணக்காரன், ஓவியன், ஆட்சியாளன், மதவாதி, அரசியல்வாதி, மருத்துவர், பொறியாளர், கொள்ளையன், சாமியார் என்று ஏதோ ஒரு அடையாளமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த தனி்த்த அடையாளங்கள் மேலோட்டமாக சரிதான். உள்ளார்ந்த தளத்தில் மனிதன் இந்த மேலோட்டங்கள் மட்டுமானவன் அல்லன். அவனுக்கு அதைத்தாண்டிய நிலையும் உள்ளது. மனிதன் ஒரு சாத்தியம் மேலே கடவுள் நிலை கீழே மிருக நிலை. ஏணியில் அவன் தங்கிவிட முடியாது. பயணத்தை தொலைத்து தேங்கிவிடக் கூடாது என்கிறார் ஓஷோ.

இந்த சமூக மனம் பாமரர்களில் ஒருவனாக்கி, ஒருவித அடிமையாக்கி. உன்னிடம் அபாயகரமானதாகத் தென்படும் குழப்பம், விடுதலை, பொறுப்பின்மை ஆகியவற்றை எடுத்துவிட்டு, ஒரு வகையான சிறைத் தண்டனை கொடுத்து உன்னை கடமையுணர்வு உள்ளோனாக, பொறுப்புள்ளோனாக, நல்லது எது? கெட்டது எது? என்ற மதிப்பீட்டைத் தந்து புறாக் கூண்டில் அடைத்து வகைப்படுத்தி விடுகிறது. சமுதாயத்தின் பணி இப்போது முடிந்து விட்டது. அமைதியாக வாழ்ந்து கொண்டு அலுவலகம் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பி, உன் குழந்தைகளை உன் பெற்றோரை கவனித்துக்கொண்டு, அப்படி இப்படி வாழ்ந்து ஒரு நாள் மடிந்து விடு உனது இருத்தல் முழுமையாயிற்று. இது ஒரு தவறான முற்றுப் பெறல். வழக்கமான வாழ்வு முறை இது என்கிறார் ஓஷோ.

இந்தியக் கிராமங்களில், இந்திய மனதில் காணப்படும் சாந்தம் என்பது இந்த இரண்டாம் நிலை மனதினால் வழங்கப்படுவது. தங்களைத் தாங்களே வரையறை செய்துகொள்ளும் எளிய புரிதல்களால் ஆனது. மனு சொல்லிச் சென்றவற்றைக் கேள்விக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்வது. தன் நிலைக்குத் தானே காரணம் என்று நம்புவது. மேலை நாடுகளில் இந்த நிலை இல்லை. அவர்கள் இந்த நிலையைக் கடந்து விட்டார்கள். தங்களைத் தனித்த ஓர் உயிரியாக கருதத் தொடங்கி விட்டார்கள். அதுவே அங்கே நிறைவின்மையைத், தேடல்களை உண்டாக்கி வைத்திருக்கிறது. பைத்தியம் ஆகும் வாய்ப்பு மேலை நாட்டினருக்கே அதிகச் சாத்தியம் என்கிறார் ஓஷோ. அமெரிக்காவின் கஷ்டம் ஒருவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இரண்டாம் மன நிலையை தந்தைக்கு ஒப்பிடுகிறார் ஓஷோ. ஒரு மரபான குடும்பத்தில் தந்தையின் இடம் என்னவோ அதுவே மனதின் இரண்டாம் நிலைக்கும். தந்தை தன் மகனைப் பாதுகாப்பதும் தண்டிப்பதும் ஏற்கனவே இங்கே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. செய்ய வேண்டியவற்றை கேள்விகள் அற்று செய்து முடித்து வெற்றி பெரும் மகனை தந்தை உச்சி முகர்ந்து கொண்டாடுகிறார். அவனுக்கு வழங்க வேண்டிய அத்தனை மரியாதைகளும் கிடைக்கிறது. அவனோ தந்தையின் சொற்களை எதிர்த்து கேள்விகள் கேட்பவனாக இருப்பான் எனில் தந்தையால் அவன் வேட்டையாடப்படுவான். கைவிடப்படுவான். அவமரியாதை செய்யப்படுவான். புறக்கணிக்கப்படுவான். மரபான மரியாதைகள் அவனுக்கு மறுக்கப்படும்.

மூன்றாவது மனதை ஓஷோ தனி மனம் என்கிறார். நீட்சே இதனை சிங்கத்தோடு ஒப்பிடுகிறார். இது சுதந்திர நிலை. தன் விருப்பங்களைத் தானே முடிவு செய்யும் நிலை. தேடல்களும் பொறுப்புகளும் நிறைந்த நிலை.ஆகவே சவால்களும் தத்தளிப்புகளும் கொண்டாட்டங்களும் மேலும் அதிகப்படும் நிலை.

மூன்றாவது நிலை தன்னைத் தனி ஆளுமையாக உணரும் நிலை. வரலாற்றின் முன் தன் இடத்தை பகுப்பாய்வு செய்துகொள்ளும் வாய்ப்பினை பெறுவது. பிறப்பால், சூழலால் விதிக்கப்பட்டுள்ளவற்றை மீறும் பேறு. சிங்கம் தன் வலிமையாலே காட்டுக்கு ராஜா ஆவதைப்போல. ஒருவன் மீது சுமத்தப்படும் அத்தனை அடையாளப்படுத்துதலில் இருந்தும் விடுதலையாகும் எத்தனிப்பினால் ஆகும் சாத்தியம். மரபென்றும் பண்பாடு என்றும் மதம் என்றும் முன் தீர்மானங்களால் வகுக்கப்பட்டுள்ளவற்றை மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாக வேண்டிய கட்டாயம் இந்நிலைக்கு உண்டு.

குழந்தை மனதில் தெளிவற்ற ஒரு மையம் உண்டு. இரண்டாவது சமூக மனதில் வெளியில் இருந்து வழங்கப்பட்ட ஒரு கூட்டு மையம் உள்ளது. மூன்றாவது மனதில் தனக்கேயான ஓர் உள் மையம் கட்டமைக்கப்படுகிறது. மூன்றாவதில் தோன்றும் மையத்திற்கு சகோதரத்துவம் இயல்பென்றாகிறது. யாரும் உன்னைக் கட்டுப்படுத்த முடியாது. யாரையும் நீ கட்டுப்படுத்த விரும்புவதும் இல்லை. உன்னைப்போல பிறரையும் மதிக்கும் பெருங்குணம் மூன்றாவது மனதின் தன்மை. இந்த மூன்றாவது நிலையே தனித்த ஆளுமை உருவாகும் காலம். அறிவுஜீவியாக, கலைஞர்களாக, கண்டுபிடிப்பாளர்களாக மனிதர்கள் பரிணாமம் கொள்கிறார்கள். இரண்டாம் நிலை தந்தைகளுக்கு உரியது. அதைத்தாண்டிய நிலையில் தந்தை இறந்து விடுகிறார். நீட்சே இறைவன் இறந்து விட்டான் என்று சொன்னது இதைக்குறித்துத்தான். தந்தையாக இருந்தவன் மடிந்து விட்டான். மூன்றாவது மனதில் பொறுப்புகள் எழுகின்றன. தனக்குத்தானே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. தான் நடந்து செல்வதே தனக்கான முன்னோடித் தடமாக அமைகிறது.

மூன்றாவது மனநிலையை வந்தடைந்த பின்னர் ஒருவரால் இரண்டாவது நிலைக்குத் திரும்ப முடிவதில்லை. அதற்கான கதவுகள் முற்றாக அடைக்கப்படுகின்றன. கடந்து வந்த பாலங்களை உடைத்த பின்னரே மூன்றாவது நிலையை ஒருவன் அடைகிறான். சமூகத்தைப் புறக்கணிக்கிறான். இணையாக சமூகமும் அவனைப் புறக்கணிக்கிறது. ஆல்பெர் காம்யு கூறிய அந்நியமாதல் இந்நிலையில்தான் வாய்க்கிறது. மூன்றாம் நிலை வரை கடந்து வருவது மிகச்சாதாரணமாக சாத்தியமாகக் கூடியது. அறுபது விழுக்காட்டினர் இரண்டாம் மனநிலையில் தேங்கிவிடுகிறார்கள். மீதமுள்ள நாற்பது விழுக்காட்டினர் மூன்றாம் நிலைக்கு முன்னேறி விடுகிறார்கள். மேலைநாடுகளில் இந்நிலை மனிதர்கள் அதிகம். கீழைத் தேயங்களில் இரண்டாம் மனநிலையே இன்று அதிகம் காணப்படுகிறது.

மூன்றாம் நிலையில் அகங்காரம் வலுவாக உருப்பெறுகிறது. இரும்புக்கோட்டை போன்று நிலைத்துவிடுகிறது. அதன்பின்னர் நான்காம் நிலையாகிய பிரபஞ்ச மனநிலையை அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு குருவானர் தேவைப்படுகிறார். தியானமும் ஆன்மீகமான உள்முகத் தேடல்களும் ஆரம்பிக்கப்பட்டாக வேண்டியுள்ளது. அவை அமையாமல் போனால் பைத்தியம் பிடிக்கும் சாத்தியம் உள்ளது. நீட்சே பைத்தியம் ஆனது அதனால்தான் என்கிறார் ஓஷோ. நீட்சேக்கு புத்தரைப் போன்ற ஒருவர் தேவைப்பட்டார். ஆனால் மேற்கில் அது சாத்தியமாகவில்லை. எனவே அவர் கர்ஜித்து கர்ஜித்து முடிவில் பைத்தியம் ஆனார். ஆன்மீகமாக வழிகாட்டுதல்கள் அவருக்கு இல்லாமல் போனதன் விளைவே அவரின் பைத்திய நிலை என்கிறார் ஓஷோ.

download-2.jpg

நாற்பத்திரெண்டு வயதிற்கு மேலே இந்த நிலை ஆரம்பிக்கிறது. அவநம்பிக்கை கொண்டு விலகி வந்தவனை, அவிசுவாசி என்றாகியவனை நான்காம் நிலையே ஆற்றுப்படுத்தும். காரல் குஷ்தவ் ஜங்க் இந்த நிலையையே “நாற்பதில் இருந்து நாற்பத்து ஐந்து வயதானவர்கள் எப்போதுமே ஒரு சமய நெருக்கடியைச் சந்திக்கின்றனர்” என்று வரையறை செய்திருக்கிறார். அந்த வயதின் காலகட்டத்தில் மனிதன் நான்காவது நிலையைத் தேடத் தொடங்குகிறான். நான்காவது அவனுக்குச் சாத்தியமானால் கட்டற்ற ஆனந்தமும் சாத்தியமாகிறது. அல்லாது போனால் பைத்தியமாகி தன்னைத்தானே கைவிடுகிறான். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையம் வீணடிக்கிறான்.

மனதின் இந்த நான்காவது நிலையை ஓஷோ பிரபஞ்ச மனம் என்கிறார். இந்த நிலையில் அகங்காரம் கரைந்து விடுகிறது. கனிவு இயல்பாகிறது. அகங்காரம் வலுப்பெற்றால் மட்டுமே அது கரைந்து விடுவதும் சாத்தியம். அகங்காரம் முதிர்ந்தால் மட்டுமே கரையவும் கூடும். நம் தனித்தன்மையே நம் அகங்காரம் அகங்காரம் ஒரு முகமூடி. நீயாக உருவாக்கிக்கொண்டது, ஆனாலும் கைவிடப்படவேண்டியது.

ஐந்தாவது நிலையை புத்த மனம் என்கிறார் ஓஷோ. தான் என்கிற உணர்வையும் கைவிட்டு அறிபவரும் அறியப்படுதலும் ஒன்றாதல். நான்காம் நிலை படைப்பூக்கம் நிறைந்த நிலை. அகங்காரத்தின் நிழலற்ற படைப்புக்களை தோற்றுவிக்கும் பரிபூரணம்.

மனித மனம் குறித்த இந்து ஐந்து நிலைகளும் ஒட்டுமொத்த மனித வாழ்வையும் புரிந்து கொள்ள ஒரு கையேடாக உதவக்கூடும். தேடல் உள்ளவர்களுக்கு மேலம் ஒரு கைவிளக்காக விளங்கும். நீந்துவது எப்படி என விளக்கும் புத்தகங்களைப் போன்றதுதான் ஓஷோவின் சொற்களும். நீந்த வேண்டும் என்றால் உயிரைப் பணயம் வைத்து நீரில் குதித்துவிட வேண்டும்.

புகழ் வாய்ந்த ஜென் குருவின் பதிலோடு இதை முடிக்கலாம்.

“ஜென் படிப்பதற்கு முன்னர் மலைகள் மலைகளே, ஆறுகள் ஆறுகளே. ஜென்னை கற்கும்போது மலைகள் ஒரு போதும் மலைகளாக இருக்கப் போவதில்லை. ஆறுகளும் ஒரு போதும் ஆறுகள் அல்ல. ஜென்னைக் கற்றுக்கொண்ட பின்னர் மலைகள் மீண்டும் மலைகளாகவும், ஆறுகள் மீண்டும் ஆறுகளாகவுமே உள்ளன”

ஓஷோ வாழ்நாள் முழுக்க கற்கச் சாத்தியமுள்ள தொடர் பயணம். நான் இங்கே தந்திருப்பது ஒரு மணிநேர பயண அனுபவம்.

 

 

https://mayir.in/essays/rayakirisankar/1760/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:

. தன் உபதேசத்தை முற்றாக மீறும் ஒருவராக அவரே இருந்தார்

இதைத்தான் அவருக்கு எதிராக பயன்படுத்தினார்கள் என்பதை Netflixன் Wild Wild County என்ற ஓஷோவைப்பற்றிய விவரணப்படத்தில் பார்க்கமுடிந்தது.. 

ஆனாலும் “ மனமே மனிதன்” 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விரைவில் பைத்தியம் பிடித்துவிடும் போல..🙁

 

//மூன்றாவது மனநிலையை வந்தடைந்த பின்னர் ஒருவரால் இரண்டாவது நிலைக்குத் திரும்ப முடிவதில்லை. அதற்கான கதவுகள் முற்றாக அடைக்கப்படுகின்றன. கடந்து வந்த பாலங்களை உடைத்த பின்னரே மூன்றாவது நிலையை ஒருவன் அடைகிறான். சமூகத்தைப் புறக்கணிக்கிறான். இணையாக சமூகமும் அவனைப் புறக்கணிக்கிறது. ஆல்பெர் காம்யு கூறிய அந்நியமாதல் இந்நிலையில்தான் வாய்க்கிறது. மூன்றாம் நிலை வரை கடந்து வருவது மிகச்சாதாரணமாக சாத்தியமாகக் கூடியது. அறுபது விழுக்காட்டினர் இரண்டாம் மனநிலையில் தேங்கிவிடுகிறார்கள். மீதமுள்ள நாற்பது விழுக்காட்டினர் மூன்றாம் நிலைக்கு முன்னேறி விடுகிறார்கள். மேலைநாடுகளில் இந்நிலை மனிதர்கள் அதிகம். கீழைத் தேயங்களில் இரண்டாம் மனநிலையே இன்று அதிகம் காணப்படுகிறது.

மூன்றாம் நிலையில் அகங்காரம் வலுவாக உருப்பெறுகிறது. இரும்புக்கோட்டை போன்று நிலைத்துவிடுகிறது. அதன்பின்னர் நான்காம் நிலையாகிய பிரபஞ்ச மனநிலையை அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு குருவானர் தேவைப்படுகிறார். தியானமும் ஆன்மீகமான உள்முகத் தேடல்களும் ஆரம்பிக்கப்பட்டாக வேண்டியுள்ளது. அவை அமையாமல் போனால் பைத்தியம் பிடிக்கும் சாத்தியம் உள்ளது. நீட்சே பைத்தியம் ஆனது அதனால்தான் என்கிறார் ஓஷோ. நீட்சேக்கு புத்தரைப் போன்ற ஒருவர் தேவைப்பட்டார். ஆனால் மேற்கில் அது சாத்தியமாகவில்லை. எனவே அவர் கர்ஜித்து கர்ஜித்து முடிவில் பைத்தியம் ஆனார். ஆன்மீகமாக வழிகாட்டுதல்கள் அவருக்கு இல்லாமல் போனதன் விளைவே அவரின் பைத்திய நிலை என்கிறார் ஓஷோ.

நாற்பத்திரெண்டு வயதிற்கு மேலே இந்த நிலைஆரம்பிக்கிறது. அவநம்பிக்கை கொண்டு விலகி வந்தவனை, அவிசுவாசி என்றாகியவனை நான்காம் நிலையே ஆற்றுப்படுத்தும். காரல் குஷ்தவ் ஜங்க் இந்த நிலையையே “நாற்பதில் இருந்து நாற்பத்து ஐந்துவயதானவர்கள் எப்போதுமே ஒரு சமய நெருக்கடியைச் சந்திக்கின்றனர்” என்று வரையறை செய்திருக்கிறார். அந்த வயதின் காலகட்டத்தில் மனிதன் நான்காவது நிலையைத் தேடத் தொடங்குகிறான். நான்காவது அவனுக்குச் சாத்தியமானால் கட்டற்ற ஆனந்தமும் சாத்தியமாகிறது. அல்லாது போனால் பைத்தியமாகி தன்னைத்தானே கைவிடுகிறான். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையம் வீணடிக்கிறான்.//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2021 at 02:10, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு விரைவில் பைத்தியம் பிடித்துவிடும் போல..🙁

எதனால் அப்படி கூறுகிறீர்கள்? 

 

Link to comment
Share on other sites

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள் (புரிந்துகொண்ட அளவில்) சில பிடிக்கும்.

செக்ஸ் சாமியார் என அழைக்கப்பட்ட ஓஷோ கோடிக்கணக்கான பணத்தில் ஆடம்பரக் கார்கள் பெண்கள் என அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்தவர். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எதனால் அப்படி கூறுகிறீர்கள்? 

 

//

மூன்றாம் நிலையில் அகங்காரம் வலுவாக உருப்பெறுகிறது. இரும்புக்கோட்டை போன்று நிலைத்துவிடுகிறது. அதன்பின்னர் நான்காம் நிலையாகிய பிரபஞ்ச மனநிலையை அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு குருவானர் தேவைப்படுகிறார். தியானமும் ஆன்மீகமான உள்முகத் தேடல்களும் ஆரம்பிக்கப்பட்டாக வேண்டியுள்ளது. அவை அமையாமல் போனால் பைத்தியம் பிடிக்கும் சாத்தியம் உள்ளது. நீட்சே பைத்தியம் ஆனது அதனால்தான் என்கிறார் ஓஷோ. நீட்சேக்கு புத்தரைப் போன்ற ஒருவர் தேவைப்பட்டார். ஆனால் மேற்கில் அது சாத்தியமாகவில்லை. எனவே அவர் கர்ஜித்து கர்ஜித்து முடிவில் பைத்தியம் ஆனார். ஆன்மீகமாக வழிகாட்டுதல்கள் அவருக்கு இல்லாமல் போனதன் விளைவே அவரின் பைத்திய நிலை என்கிறார் ஓஷோ.

நாற்பத்திரெண்டு வயதிற்கு மேலே இந்த நிலைஆரம்பிக்கிறது. அவநம்பிக்கை கொண்டு விலகி வந்தவனை, அவிசுவாசி என்றாகியவனை நான்காம் நிலையே ஆற்றுப்படுத்தும். காரல் குஷ்தவ் ஜங்க் இந்த நிலையையே “நாற்பதில் இருந்து நாற்பத்து ஐந்துவயதானவர்கள் எப்போதுமே ஒரு சமய நெருக்கடியைச் சந்திக்கின்றனர்” என்று வரையறை செய்திருக்கிறார். அந்த வயதின் காலகட்டத்தில் மனிதன் நான்காவது நிலையைத் தேடத் தொடங்குகிறான். நான்காவது அவனுக்குச் சாத்தியமானால் கட்டற்ற ஆனந்தமும் சாத்தியமாகிறது. அல்லாது போனால் பைத்தியமாகி தன்னைத்தானே கைவிடுகிறான். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையம் வீணடிக்கிறான்.//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பழைய நினைவுகளைக் கிளறி விட்ட திரியும் பதிவுகளும். ஜே.கே யின் எழுத்துகளும், பேச்சுகளும் மிகவும் உற்றுக் கவனித்தால் மட்டுமே கொஞ்சம் விளங்கிக் கொள்ள முடிபவை - வாசித்து முடிய பக்க விளைவாகத் தலை வலி வரும்😎.

ஓஷோவின் தத்துவங்கள் , இதற்கு நேரெதிராக, எந்த மொழியில் கேட்டாலும் வாசித்தாலும் விளங்கிக் கொள்ளக் கூடியளவு இலகுவானவை -ஏனெனில் "truth is a pathless land" என்று ஜே.கே சொன்னாலும், ஓஷோ தான் அதனை மக்களுக்கு விளங்கக் கூடியவாறு வெளிக்கொண்டு வந்தாரென நினைக்கிறேன்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு வழிகளில் சொன்னதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்துச் சொன்னவர் கௌதம சித்தார்த்தர் என்று நினைக்கிறேன். இதை மிக எளிமையாக விளக்கும் ஒரு நூல்  ஹேர்மன் ஹெஸ் படைத்த "சித்தார்த்த" என்ற நாவல்! - விரும்பினால் வாசித்து அனுபவியுங்கள்! (தயவு செய்து இந்த நாவலை தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்து விடாதீர்கள் - விடய தானமேயற்ற ஒருவர் ஹெஸ்ஸின் நாவலைக் குதறியெறிந்திருக்கிறார்!).

41gdqzKm2oL._SY291_BO1,204,203,200_QL40_FMwebp_.jpg

இன்னொரு விடயம்: ஓஷோவினை வாசித்த பெரும்பாலானோர் மறைந்த தமிழக எழுத்தாளர் பாலகுமாரனையும் விரும்பி வாசிக்க முனைந்திருப்பரென நினைக்கிறேன். பாலகுமாரனும் ஓஷோ போல நாம் மறைக்க முனையும் மனித பலவீனங்களை வர்ணமயமான அனுபவங்களாகச் சித்திரித்து வாழ்க்கையை ஒரு mystic அனுபவமாகக் காட்டியிருப்பார். பாலகுமாரனின் சில கதைகளில் வரும் "விசிறி சாமியார்"  (இவர் திருவண்ணாமலையில் உண்மையிலேயே வாழ்ந்த ஒரு சாமியார், யோகி ராம்சுரத் குமார் எனும் பெயர்) கூட Osho lite என்று அழைக்கப் படக் கூடியவர் போல தெரிவார்! 

புத்தக முகப்பு: நன்றியுடன் அமேசன் தளத்திலிருந்து  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2021 at 20:40, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு விரைவில் பைத்தியம் பிடித்துவிடும் போல..🙁

ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம்.

ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க.

https://ta.wikipedia.org/wiki/இரமண_மகரிசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

செக்ஸ் சாமியார் என அழைக்கப்பட்ட ஓஷோ கோடிக்கணக்கான பணத்தில் ஆடம்பரக் கார்கள் பெண்கள் என அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்தவர். 🙂

சாமியார் என்றால் கடவுளின் தூதுவர் தானே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

இன்னொரு விடயம்: ஓஷோவினை வாசித்த பெரும்பாலானோர் மறைந்த தமிழக எழுத்தாளர் பாலகுமாரனையும் விரும்பி வாசிக்க முனைந்திருப்பரென நினைக்கிறேன். பாலகுமாரனும் ஓஷோ போல நாம் மறைக்க முனையும் மனித பலவீனங்களை வர்ணமயமான அனுபவங்களாகச் சித்திரித்து வாழ்க்கையை ஒரு mystic அனுபவமாகக் காட்டியிருப்பார். பாலகுமாரனின் சில கதைகளில் வரும் "விசிறி சாமியார்"  (இவர் திருவண்ணாமலையில் உண்மையிலேயே வாழ்ந்த ஒரு சாமியார், யோகி ராம்சுரத் குமார் எனும் பெயர்) கூட Osho lite என்று அழைக்கப் படக் கூடியவர் போல தெரிவார்! 

என்னைப்பொறுத்தவரை நீங்கள் கூறியது சரியே.. பாலகுமாரனின் புத்தகங்களை தேடி வாசித்த காலங்களும் உள்ளது.. பாலகுமாரன் எழுதிய “ இது போதும்” என்ற 📖  வாங்கி வைத்துள்ளேன் .. இன்னமும் வாசிக்க தொடங்கவில்லை🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

//

மூன்றாம் நிலையில் அகங்காரம் வலுவாக உருப்பெறுகிறது. இரும்புக்கோட்டை போன்று நிலைத்துவிடுகிறது. அதன்பின்னர் நான்காம் நிலையாகிய பிரபஞ்ச மனநிலையை அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு குருவானர் தேவைப்படுகிறார். தியானமும் ஆன்மீகமான உள்முகத் தேடல்களும் ஆரம்பிக்கப்பட்டாக வேண்டியுள்ளது. அவை அமையாமல் போனால் பைத்தியம் பிடிக்கும் சாத்தியம் உள்ளது. நீட்சே பைத்தியம் ஆனது அதனால்தான் என்கிறார் ஓஷோ. நீட்சேக்கு புத்தரைப் போன்ற ஒருவர் தேவைப்பட்டார். ஆனால் மேற்கில் அது சாத்தியமாகவில்லை. எனவே அவர் கர்ஜித்து கர்ஜித்து முடிவில் பைத்தியம் ஆனார். ஆன்மீகமாக வழிகாட்டுதல்கள் அவருக்கு இல்லாமல் போனதன் விளைவே அவரின் பைத்திய நிலை என்கிறார் ஓஷோ.

நாற்பத்திரெண்டு வயதிற்கு மேலே இந்த நிலைஆரம்பிக்கிறது. அவநம்பிக்கை கொண்டு விலகி வந்தவனை, அவிசுவாசி என்றாகியவனை நான்காம் நிலையே ஆற்றுப்படுத்தும். காரல் குஷ்தவ் ஜங்க் இந்த நிலையையே “நாற்பதில் இருந்து நாற்பத்து ஐந்துவயதானவர்கள் எப்போதுமே ஒரு சமய நெருக்கடியைச் சந்திக்கின்றனர்” என்று வரையறை செய்திருக்கிறார். அந்த வயதின் காலகட்டத்தில் மனிதன் நான்காவது நிலையைத் தேடத் தொடங்குகிறான். நான்காவது அவனுக்குச் சாத்தியமானால் கட்டற்ற ஆனந்தமும் சாத்தியமாகிறது. அல்லாது போனால் பைத்தியமாகி தன்னைத்தானே கைவிடுகிறான். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையம் வீணடிக்கிறான்.//

நீங்கள் அப்படி எழுதியதற்கான காரணத்தை இன்றுதான் விளங்கிக்கொண்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, இணையவன் said:

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள் (புரிந்துகொண்ட அளவில்) சில பிடிக்கும்.

செக்ஸ் சாமியார் என அழைக்கப்பட்ட ஓஷோ கோடிக்கணக்கான பணத்தில் ஆடம்பரக் கார்கள் பெண்கள் என அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்தவர். 🙂

அவர் அதற்கு கூறும் விளக்கங்களையும் உங்களால் விளங்கிக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.. 

Sermons in Stones என்ற அவருடைய புத்தகத்தின் விமர்சனங்கள் நன்றாக இருப்பதால் படிக்கலாம் என நினைக்கிறேன்.. பார்ப்போம்..

என்னைப்பொறுத்தவரை மனம் பற்றிய கருத்துகளை ஏற்பதால் அவரைப்பற்றி மேலும் அறியவிரும்புவதுண்டு.. 

“ மனிதனின் மனதைத் தவிர எங்குமே பயமில்லை” என்ற அவருடைய கருத்து மிகவும் பிடித்த ஒன்று.. இதை அனுபவிப்பவர்களுக்கே விளங்கும்.

 

Link to comment
Share on other sites

15 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர் அதற்கு கூறும் விளக்கங்களையும் உங்களால் விளங்கிக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.. 

Sermons in Stones என்ற அவருடைய புத்தகத்தின் விமர்சனங்கள் நன்றாக இருப்பதால் படிக்கலாம் என நினைக்கிறேன்.. பார்ப்போம்..

என்னைப்பொறுத்தவரை மனம் பற்றிய கருத்துகளை ஏற்பதால் அவரைப்பற்றி மேலும் அறியவிரும்புவதுண்டு.. 

“ மனிதனின் மனதைத் தவிர எங்குமே பயமில்லை” என்ற அவருடைய கருத்து மிகவும் பிடித்த ஒன்று.. இதை அனுபவிப்பவர்களுக்கே விளங்கும்.

 

தத்துவங்களை மேலும் படித்தோ அவற்றைப் பின்பற்றியோ வாழ்வதாக இல்லை. சாதாரண வாழ்க்கை முறை, சுற்றியிருப்பவர்கள் மூலமாகக் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு என்னைச் சூழலுக்கேற்ப திருத்திக் கொண்டு திட்டமிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ இருக்கிறேன். தியானம் மன அமைதி கட்டுப்பாடு பலருக்கும் நல்லதாக இருக்கலாம். எனது தெரிவு இவையல்ல.  

அணுக்கலாலும் மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட நான் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். இறந்தபின்னும் வேறு மூலக்கூறுகளாக இதே பிரபஞ்சத்துடன் ஐக்கியமாகி விடுவேன்.  என்னை நானே புரிந்து கொண்டுள்ள விதம் தவறாக இருக்கலாம். எனக்குப் புரியாதவற்றை நானே என்மீது திணிக்க விரும்பவில்லை. 🙂

Link to comment
Share on other sites

நான் யார், எதற்கு வந்தேன், எங்கிருந்து வந்தேன், எங்கு செல்ல போகின்றேன், இதற்கு முதல் என்னவாக இருந்தேன், இனி என்னவாக ஆகுவேன் போன்ற தத்துவ விசாரங்கள் எல்லாம் என்னைப் பொறுத்தவரைக்கும் கடும் சுயநலம் சார்ந்த எண்ணங்கள். தனக்கு அருகில், தன் சமூகத்தில், தன் அருகாமையில் நிகழும், நடக்கும் விடயங்கள் மீது அக்கறை இல்லாமல், சமூக பிரக்ஞை இல்லாமல், தன்னை மையப்புள்ளியாகக் கொண்டு தன்னை மட்டுமே சுற்றிக் கொண்டு இருக்கும் ஒரு நீர்ப்பந்து போன்றவர்களின் எண்ணங்கள் என்றே நான் இவர்களைப் பற்றி நினைக்கின்றேன். 

இந்த தத்துவவிசாரங்கள் எல்லாம் தன்னைப் பற்றிய புரிதலை ஒரு போதும் ஏற்படுத்தப் போவதில்லை, அப்படி ஏற்படுத்துவதாக நினைப்பதே ஒரு போதை என்றே என் புரிதல்.

தன்னை சுற்றி இருப்பவர்கள் மீதான அக்கறை, தன் சமூகம் சார்ந்த அக்கறை, தான் சார்ந்த அக்கறை, இந்த ரம்மியமான உலகத்தினை ரசிக்கும் ரசனை, காதல் மீதான ரசனை, காமம் மீதான ஈடுபாடு போன்றவையே ஒவ்வொருவருக்கும் சுய திருப்தியையும் நிம்மதியையும் கொடுக்க கூடியன என நம்புகின்றேன்.

இது என் எண்ணம் மற்றும் புரிதல் மட்டுமே. மற்றவர்களுக்கு இது முழுத் தவறாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, இணையவன் said:

தத்துவங்களை மேலும் படித்தோ அவற்றைப் பின்பற்றியோ வாழ்வதாக இல்லை. சாதாரண வாழ்க்கை முறை, சுற்றியிருப்பவர்கள் மூலமாகக் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு என்னைச் சூழலுக்கேற்ப திருத்திக் கொண்டு திட்டமிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ இருக்கிறேன். தியானம் மன அமைதி கட்டுப்பாடு பலருக்கும் நல்லதாக இருக்கலாம். எனது தெரிவு இவையல்ல.  

அணுக்கலாலும் மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட நான் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். இறந்தபின்னும் வேறு மூலக்கூறுகளாக இதே பிரபஞ்சத்துடன் ஐக்கியமாகி விடுவேன்.  என்னை நானே புரிந்து கொண்டுள்ள விதம் தவறாக இருக்கலாம். எனக்குப் புரியாதவற்றை நானே என்மீது திணிக்க விரும்பவில்லை. 🙂

உண்மைதான் அண்ணா! 

விடயங்களை திணிக்ககூடாது.. அதேபோல எனக்கு தெரியாதவற்றை தேடி அறியமுற்படுவதுண்டு.. பிடித்தால் நடைமுறையில் பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான்.. 

தியானம் என்பது எனக்கும் சரிவரவில்லை ஆனால் தனிமையை விரும்புவதுண்டு.. நானும் எனது எண்ணங்களும் மட்டும் இருக்கும் நேரத்தை ஆர்வமாக எதிர்நோக்குவதுண்டு.. 

நன்றி அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தத்துவங்களை மேலும் படித்தோ அவற்றைப் பின்பற்றியோ வாழ்வதாக இல்லை. சாதாரண வாழ்க்கை முறை, சுற்றியிருப்பவர்கள் மூலமாகக் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு என்னைச் சூழலுக்கேற்ப திருத்திக் கொண்டு திட்டமிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ இருக்கிறேன். தியானம் மன அமைதி கட்டுப்பாடு பலருக்கும் நல்லதாக இருக்கலாம். எனது தெரிவு இவையல்ல.  

அணுக்கலாலும் மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட நான் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். இறந்தபின்னும் வேறு மூலக்கூறுகளாக இதே பிரபஞ்சத்துடன் ஐக்கியமாகி விடுவேன்.

👍

இணையவனின் நல்ல கருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.