Jump to content

இலங்கை குறித்த இந்திய வெளியறவு கொள்கையில் மாற்றம் வருமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை குறித்த இந்திய வெளியறவு கொள்கையில் மாற்றம் வருமா?

–ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி மேலும் மேலும் அதிகரிக்கும். ஆனால் இதற்குத் தீர்வு 13 அல்ல என்பதை புதுடில்லி புரிந்துகொள்ளாதவரை, இலங்கையின் துணிச்சலும் இந்தியாவைப் புறக்கணித்துச் செயற்படும் தன்மையும் மேலும் கையோங்கும்–

-அ.நிக்ஸன்- 

இலங்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகக் காலம் கடந்து இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்தியில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான சுப்பிரமணியன் சுவாமியின் கொழும்பு வருகை ஆரோக்கியமான உறவை உருவாக்குமெனக் கூறமுடியாது.

ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்ற முறையில் மகிந்த ராஜபக்சவின் பிரதமர் மாளிகையில் இடம்பெற்ற சரஸ்வதி பூஜையில் முக்கிய பிரமுகராகக் கலந்துகொள்ள சுப்பிரமணியன் சுவாமி கொழும்புக்கு வந்திருந்தார். இவருடைய வருகை தனிப்பட்ட முறையில் அமைந்திருந்தாலும் இதன் மூலம் இந்தியாவுடன் ஒத்துச் செல்ல வேண்டுமென்ற நெருக்கத்தை இலங்கைக்கு ஏற்படுத்தாது.

அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஓன்று- சுப்பிரமணியன் சுவாமி தனிப்பட்ட முறையில் ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருக்கலாம். ஆனால் இந்தியாவைக் கடந்து தமது அரசியல். பொருளாதார நகர்வுகளை அமெரிக்கா. சீனா போன்ற வல்லாதிக்க நாடுகளுடன் முன்னெடுக்க வேண்டுமென்ற சிந்தனை சிங்கள ஆட்சியாளர்களிடம் 2009 இற்குப் பின்னர் வலுப்பெற்றுள்ளது.

இரண்டாவது- இந்தியாதான் தங்கள் இரத்த உறவு என்று காலம் காலம் காலமாக நம்புகின்ற ஈழத்தமிழ் மக்கள், சுப்பிரமணியன் சுவாமி தொடர்பாக ஆரோக்கியமான கருத்தைக் கொண்டிருப்பதில்லை. இதனால் இந்தியா தற்போது எடுக்கும் குறைந்தபட்ச முயற்சிகூட பயனளிக்காதென்றே அவர்கள் கருதுகின்றனர்.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை 2009 இல் முற்றாக அழித்தவர் மகிந்த ராஜபக்ச என்ற அடிப்படையிலேயே ராஜபக்ச குடும்பத்தோடு சுப்பிரணியன் சுவாமிக்கு மேலும் நெருக்கம் ஏற்பட்டதாக ஈழத்தமிழர்கள் நம்புகின்றனர்.

ஆகவே இவ்வாறான பின்புலத்தில் சுப்பிரமணியன் சுவாமி இலங்கையோடு உறவைப் பேணும் நிலையில், அவர் அங்கம் வகிக்கும் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கம், இலங்கையோடு உறவை அல்லது தமது கட்டுப்பாட்டுக்குள் இலங்கையைக் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள் எல்லாமே இந்திய நலன் சார்ந்தது என்ற உணர்வே தமிழர்களுக்கு உருவாகும்.

இந்தியா மீதான நம்பிக்கையீனம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்கனவே வேரூன்றியிருக்கும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் கொழும்போடு வைத்திருக்கும் உறவு, இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்குமிடையேயான உறவை மேலும் தூரத் தள்ளிவைக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

அத்துடன் சுப்பிரமணியன் சுவாமி கொழும்போடு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தோடு நெருக்கமாகவும் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார் என்பதற்காகச் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு இலங்கையில் சிறந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கவும் முடியாது.

எனவே இவற்றை உற்று ஆராய்ந்து தமது நகர்வுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்யாமல், குறிப்பாக பாராமபரியமான மரபுவழி வெளியுறவுக் கொள்கையை மாத்திரம் வைத்துக் கொண்டு, இலங்கையைத் தமது கட்டுப்பாட்டில் அல்லது புதுடில்லியோடு ஒத்துப்போகக்கூடிய முறைமையை உருவாக்கவே முடியாது என்பது பட்டறிவு.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த உணர்வுகளுக்கு எதிரான இந்தியப் பிரமுகர்கள் மூலமாக இலங்கையை இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தமக்குச் சாதமாகக் கொண்டுவரலாம் அல்லது சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தலாமென நம்புவதும் இந்திய நகர்வுக்கு நல்லதல்ல.

இந்தோ- பசுபிக் மற்றும் தென்சீனக் கடல் பிராந்திய விவகாரங்களில்கூட அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகள் தமது வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களையும் காலத்தின் தேவை கருதிய திருத்தங்களையும் மேற்கொள்ளும்போது, அந்தப் போட்டியின் பங்குதாரராக இருக்க விரும்பும் இந்தியாவும், இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் ஏன் மாற்றங்களைச் செய்ய முடியாதென்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா. பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட இராணுவப் பாதுகாப்புக்கூட்டணியான அக்கியூஸ் ஒப்பந்தம் ஆசியான் உறுப்பு நாடுகளிடையே பிளவுகளைக் கொண்டு வருமெனவும் தமது ஆயுதபலத்தைக் குறைக்கும் என்றும் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் வெளிப்படையாகவே கூறுகின்றன. பிலிப்பைன்ஸைத் தவிர ஏனைய உறுப்பு நாடுகள் விமர்சிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரை இந்தியா அக்கியூஸ் ஒப்பந்தம் குறித்து தமது அதிகாரபூர்வமான கருத்தை வெளியிடவில்லை.

ஆனால் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் ஆசியாவின் நேட்டோ இரணுவ அணியென வர்ணிக்கப்படும் குவாட் அமைப்புக்கு ஆசியான் நாடுகளின் ஆதரவு உண்டு. ஏனெனில் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற உணர்வு பல ஆசியான் உறுப்பு நாடுகளிடம் இருக்கின்றன.

ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்தியத்தை மையமாக் கொண்டு அவ்வப்போது புதிய வியூகங்களை வகுத்து வரும் அமெரிக்கா, தனது வெளியுவுக் கொள்கையிலும் தேவையான அளவு மாற்றங்களை அல்லது விட்டுக் கொடுப்புகளைச் செய்து வருகின்றது என்பது சமீபகால வெளிப்பாடு.

உதாரணமாக அவுஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கி இந்தோ- பசுபிக் மற்றும்  தென் சீனக் கடல் விவகாரங்களில் மாற்ங்களைக் கையாள்கின்றது. (ஆப்கானிஸ்தானில் இருந்து படைவிலகிய பின்னர்)

அது மாத்திரமல்ல அமெரிக்கச் சீனப் பேச்சுக்கள் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியல். பொருளாதார வளர்ச்சி மற்றும் இராணுவச் செயற்பாடுகள். பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் சீனாவுடன் விரிவாக ஆராய அமெரிக்க முற்படுகின்றது. சீனாவுடனான வர்த்தக உறவுக்குச் சாத்தியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார்.

அக்கியூஸ் ஒப்பந்தம் தெற்காசியப் பிராந்தியத்தில் அச்சுறுத்தல்களை உருவாக்கும் என்று பல ஆசியான் உறுப்பு நாடுகள் எச்சரிக்கை செய்து வரும் நிலையில், அமெரிக்கா சீனாவுடனான உறவு குறித்துப் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளமை. அதன் வெளியுறவுக் கொள்கையின் மாற்றம் என்றே கருத இடமுண்டு.

நீண்டதூர நோக்கில் அமெரிக்கா முன்னெடுக்கும் தற்பாகாப்புச் சமாதான முயற்சி என்று கருதினாலும், பிரந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் செயற்பாடாகவே நோக்கலாம். ஏனெனில் அக்கியூஸ் ஒப்பந்தத்தின் பின்னரான ஆசியான் உறுப்பு நாடுகளின் கருத்து வெளிப்பாடுகள், அமெரிக்காவை சீனாவோடு பேசுவதற்கும் தூண்டியிருக்கலாம்.

ஏனெனில், அடுத்த மாதம் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தப் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியாவும் கலந்துகொள்ளும். ஆகவே அதற்கு முன்னராக ஆசியான் நாடுகளைச் சமாதானப்படுத்தக்கூடிய ஏற்பாட்டுக்கு அமெரிக்கா முற்பட்டதன் விளைவே  அமெரிக்கச் சீனப் பேச்சுவாத்தைக்குக் காரணமெனலாம்.

ஆனாலும் ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு அக்கியூஸ் ஒப்பந்தத்திற்குப்; பின்னரான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துமென மலேசிய ஊடகமான தி ஸ்டார் தெரிவித்துள்ளது. மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹசைன், ஆசியானில் உள்ள தனது கூட்டாளிகளுடனான சந்திப்பு அடுத்த மாதம் நடத்தப்படுமெனச் சென்ற செவ்வாய்க்கிழமை மலேசிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா சீனாவிற்கு இடையேயான அதிகாரச் சமநிலையைப் பொருட்படுத்தாமல், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே இச் சந்திப்பின் நோக்கமெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஆயுதப் போட்டி மற்றும் மின்சார அபிவிருத்தித் திட்டங்களை இந்தோனேசியா விரும்பவில்லை என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி கூறியுள்ளார்.

ஆகவே அமெரிக்கா தனித்து முடிவெடுக்கும் வல்லாதிக்க நாடாக இருந்தாலும்கூட,  அக்கியூஸ்  ஒப்பந்தத்தின் பின்னரான அரசியல் நிலமைகளை ஆராய்ந்தும் அல்லது அந்த ஒப்பந்தத்தைக் கையில் வைத்துக் கொண்டு எச்சரிக்கை விடுவது போன்றதொரு தொனியிலும் சீனாவோடும் மற்றும் ஆசியான் நாடுகள் சமாதானமடையும்  முறையிலும் தனது அணுகுமுறைகளில் மாற்றங்களைக் கையாள்கிறது.

ஆகவே தனது வெளியுறவுக் கொள்கையில் நெகழ்ச்சித் தன்மையை அமெரிக்கா சமீபகாலமாகக் கையாண்டு வரும்போது, ஏன் இந்தியாவும் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்சாந்து இலங்கை தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்ற கேள்விகள் எழுகின்றன.

டொனாலட் ட்ரமப் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அதிரடியாக அவ்வப்போது மாறியது. இஸ்ரேல், ரஷியா போன்ற நாடுகளுடன் உறவைப் பேணியது.

ஜி-7 மற்றும் நேட்டோ அணிகளின் கூட்டுறவுகளை மீறியும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இயங்கியது. யோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றதில் இருந்து இன்றுவரைகூட அமெரிக்க வெளியுவுக் கொள்கைகள் அவசியம் கருதி இறங்கிச் செல்கிறது அல்லது மாற்றமடைகிறது.

குறிப்பாக கொவிட் 19 இன் பின்னரான சூழலில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வு குறித்து, சீனாவின் அணுகுமுறையை அமெரிக்கா ஆராய்ந்ததாக குளோபல் ரைம்ஸ் செய்தித் தளம் கூறுகின்றது. இதனால் வர்த்தக உறவு அதிகரித்தாகவும் கூறப்பட்டுள்ளது.

spacer.png

குறிப்பாகச் சீன-அமெரிக்க வர்த்தக அளவு கடந்த ஆண்டைவிட ஜனவரி முதல் செப்டம்பர் வரை டொலர் அடிப்படையில் 35.4 சதவீதம் அதிகரித்துள்ளது, சீன சுங்க புள்ளிவிவரங்கள் புதன்கிழமை வெளிப்படுத்தின.

முதல் எட்டு மாதங்களில் 36.6 சதவிகித வளர்ச்சியைவிட வளர்ச்சி விகிதம் சற்று குறைவாக இருந்தாலும், இருதரப்பு வர்த்தக அளவு ஜனவரி முதல் செப்டம்பர் வரை $ 543 பில்லியனை எட்டியது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதால், 2018 ஆம் ஆண்டு சீனா- அமெரிக்க வர்த்தகப் போருக்கு முன் இந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 700 பில்லியன் டொலர்களை எட்டும் என்று குளோபல் ரைமஸ் கூறுகின்றது.

எனவே இதன் பின்னணியில் இலங்கை சீனாவிடம் இருந்து பெருமளவு கடன்களைக் பெற்றாலும் துறைமுகங்கள். மின்சார அபிவிருத்தித் திட்டங்களைச் சீனாவுக்கு வழங்கினாலும் இந்தோ- பசுபிக் பாதுகாப்பில் இலங்கை தம்மோடு நிற்கும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு உண்டு. அத்துடன் இலங்கையில் தமக்குரிய தளங்களையும் அமெரிக்கா அமைத்து வருகின்றது.

அதற்கேற்ப இலங்கையுடனான தனது கொள்கையில் அமெரிக்கா மாற்றங்களைச் செய்தும் வருகின்றது. அதாவது ஈழத்தமிழர் பிரச்சினையை இலங்கையின் உள்ளக விவகாரமாகவே பார்ப்பது என்ற நம்பிக்கை இலங்கைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா சொல்வதைக் கேட்டு வந்த அமெரிக்கா, தற்போது இலங்கையோடு நேரடியாகவும் இலங்கையின் தேவைக்கு ஏற்றவாறும் செயற்பட்டால். பிராந்தியத்தில் தமது நலன்களைப் பெறலாம் என்பதைப் பட்டறிவாகக் கண்டிருக்கிறது. இதன் விளைவுதான் இலங்கைக்குத் தற்போது ஏற்பட்டுள்ள துணிச்சல்.

இந்த இடத்தில் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி மேலும் மேலும் அதிகரிக்கும். ஆனால் இதற்குத் தீர்வு 13 அல்ல என்பதை இந்தியா புரிந்துகொள்ளாதவரை, இலங்கையின் துணிச்சலும் இந்தியாவைப் புறக்கணித்துச் செயற்படும் தன்மையும் மேலும் கையோங்கும்.

 

http://www.samakalam.com/இலங்கை-குறித்த-இந்திய-வெ/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.