Jump to content

`சந்தன கடத்தல்' வீரப்பனின் நிறைவேறாத இறுதி ஆசை - எப்படி இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சந்தன கடத்தல்' வீரப்பனின் நிறைவேறாத இறுதி ஆசை - எப்படி இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
18 அக்டோபர் 2021
வீரப்பன்

தமிழ்நாடு அதிரடிப்படையால் `சந்தனக் கடத்தல்' வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ` காடுகள் மற்றும் அவற்றையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போதும் அதே சூழலில்தான் பழங்குடிகள் வசிக்கின்றனர்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம். என்ன நடக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில்?

2004 அக்டோபர் 18. தமிழ்நாடு அதிரடிப்படையினரின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே `ஆபரேஷன் கக்கூன்' என்ற பெயரில் தமிழ்நாடு அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜய்குமார் ஐ.பி.எஸ், வீரப்பனுக்கு முடிவு கட்டிய நாளாகவும் இதனைக் கொண்டாடுகின்றனர். அதேநேரம், வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தாலும், அதுகுறித்து அதிரடிப்படை தரப்பிலோ அந்தக் காலகட்டத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டைக்காகச் சென்றவர்களிடம் இருந்தோ எந்தப் பதிலும் வெளிவரவில்லை. அன்றைய காலகட்டத்தில் தனது ஆட்சியின் சாதனையாகவும் இதனை ஜெயலலிதா கருதினார்.

184 வழக்குகள்; 15 கொலைகள்

சந்தன மரம் கடத்தல், யானை தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் எனப் பல்வேறு முகங்களைக் கொண்ட வீரப்பன், 108 நாள்கள் `கன்னட சூப்பர் ஸ்டார்' ராஜ்குமாரை சிறை வைத்ததை மிகப் பெரிய கடத்தலாக காவல்துறையினர் கருதுகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மூன்று மாநில வனத்துறைக்கும் சிம்ம சொப்பனமாக வீரப்பன் இருந்தாலும் கேரளாவில் ஒரே ஒரு குற்ற வழக்கு மட்டுமே அவர் மீது பதிவாகியுள்ளது. வாளையார் சோதனைச் சாவடியில் பதிவாகியுள்ள அந்த வழக்கு, அந்தப் பகுதியில் அவர் ஆயுதங்களோடு சுற்றியதாக விவரிக்கிறது.

வீரப்பன் மீது பதிவாகியுள்ள 184 வழக்குகளில் 99 வழக்குகள் தமிழ்நாட்டிலும் 84 வழக்குகள் கர்நாடகாவிலும் ஒரே ஒரு வழக்கு கேரளாவிலும் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் பதிவான வழக்குகளில் 15 வழக்குகள் கொலைகள் தொடர்புடையவை. மற்றவை ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இதில் முக்கியமான வழக்குகள் என்றால் தமிழ்நாடு டி.எஸ்.பி சிதம்பரநாதன் கடத்தல், கர்நாடக அமைச்சர் நாகப்பா கடத்தல், நடிகர் ராஜ்குமார் கடத்தல் ஆகியவை.

`தமிழ்நாட்டின் ஒகேனக்கல், பாலக்கோடு முதல் கர்நாடகாவின் குடகு மலை வரையிலும் கேரள மாநிலம் வரையில் சுமார் 200 கிலோமீட்டருக்கு மேல், வீரப்பனைப் போல காடுகளை அளந்து நடந்தவர் யாருமில்லை' என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். காடுகளில் வாழும் மக்களின் பழக்கவழக்கம், விலங்குகள், பறவைகள், நீர்வழிப் பாதைகள் என அனைத்தையும் துல்லியமாக அறிந்தவராகவும் பார்க்கப்படுகிறார். வீரப்பன் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் ஆனாலும், தற்போதும் அவரை கொண்டாடும் வழக்கம், வட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் உள்ளது.

அதிகரித்த நிலங்களின் மதிப்பு

வீரப்பன்

`` வீரப்பன் இல்லாத காடுகளின் தற்போதைய நிலை என்ன?" என மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். இவர் பலமுறை வீரப்பனை பேட்டி எடுத்தவர். இதற்காக சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது, அரசு தூதுவராக காட்டுக்குள் சென்றவர். தற்போது `வீரப்பன்; வாழ்ந்ததும் வீழ்ந்ததும்' என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக புத்தகங்களை எழுதியுள்ளார்.

`` வீரப்பன் உயிரோடு இருந்தவரையில், தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதி, பர்கூர் ஆகிய பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் நிலம் என்பது 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரையில் விலை போனது. 2004 ஆம் ஆண்டு வீரப்பன் மறைவுக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டில் இருந்து ஒரு ஏக்கர் நிலம் 2 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரையில் விலை போனது. அதாவது, சமவெளியில் வசித்த மக்கள், காடுகளில் உள்ள பழங்குடிகளிடம் இருந்து நிலங்களை வாங்கினார்கள். தற்போது 25 லட்ச ரூபாய் வரையில் ஒரு ஏக்கர் நிலம் விலை போகிறது. நிலத்தின் விலை உயர்ந்தாலும் பூர்வகுடி மக்களின் நிலங்கள் பறிபோய்விட்டன" என்கிறார் சிவசுப்ரமணியம்.

தொடர்ந்து பேசியவர், `` காடுகளில் வசித்த மக்கள் தங்களின் உணவுத் தேவைக்காக ராகியை பயிரிட்டு வாழ்ந்தனர். கொஞ்சம் தேவைப்பட்டால், மொச்சை, தட்டைப் பயிர் எனப் பணப் பயிர்களை பயிரிடுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. தங்களின் உணவுக்காக மட்டும் விளைவித்து வாழ்ந்த அந்த சமூகத்திடம் பண ஆசை உள்பட பல்வேறு காரணங்களைக் காட்டி சமவெளியில் உள்ளவர்கள் நிலம் வாங்கிக் கொண்டனர். தற்போது பழங்குடி மக்களின் நிலங்கள் என ஓரளவுக்கு மட்டுமே உள்ளன. பழங்குடிகளுக்கு என கொடுக்கப்பட்ட செட்டில்மெண்ட் நிலங்களும் உள்ளன.

வனக்கொள்ளை அதிகரித்ததா?

அவர்களிடம் நிலங்கள் இருந்த வரையில் மானாவாரி பயிர்களை மட்டும் விளைவித்தனர். சமவெளியில் இருந்து அங்கு சென்றவர்கள், 1,200 அடி வரையில் போர் போட்டு வாழை, கரும்பு, உருளைக் கிழங்கு, இஞ்சி எனப் பணப் பயிர்களை விளைவிக்கின்றனர். இதனால் கடந்த 2,3 ஆண்டுகளாக வனப்பகுதியில் உள்ள பெரும்பாலான சிற்றோடைகள் எல்லாம் வறட்சியை நோக்கிச் செல்கின்றன. மழைக்காலத்தில் மட்டுமே அங்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் விலங்குகள் எல்லாம் மடைமாற்றப்படுகின்றன.

பழங்குடிகளின் மேய்ச்சல் தொழிலும் அருகிப் போய்விட்டது. அடுத்த தலைமுறை பழங்குடிகள் எல்லாம் லாரி டிரைவர்களாகவும் ஜே.சி.பி இயந்திரம் ஓட்டுபவர்களாகவும் மாறிவிட்டனர். அவர்களின் பாரம்பரியமான ராகி, கம்பு, சோளம் என்பது கடந்துபோய் ரேசன் அரிசியை வாங்கி சாப்பிடத் தொடங்கிவிட்டனர். மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் விலங்குகளும் உணவுக்காக ரெவின்யூ நிலங்களுக்கு வரத் தொடங்கிவிட்டன. வீரப்பன் இருந்த வரையில் அங்கு நிலம் வாங்குவதற்கே சமவெளி மக்கள் அச்சப்பட்டனர்" என்கிறார்.

``யானை தந்தம் கடத்தல் உள்பட வனக் கொள்ளைகளும் அதிகரித்துவிட்டதை அறிய முடிகிறதே?" என்றோம். `` உண்மைதான். வீரப்பன் என்ற தனி நபரைத் தேடி கர்நாடகா அதிரடிப்படை தரப்பில் ஆயிரம் போலீஸாரும் தமிழ்நாடு அதிரடிப்படையில் 750 போலீஸாரும் இருந்தனர். அந்த 1,750 பேரும் காட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்ததால் வனக் கொள்ளை என்பது அறவே இல்லாமல் இருந்தது. வீரப்பன் மறைவுக்குப் பிறகு இவர்கள் 1,750 பேரும் வெளியே வந்துவிட்டதால் வனக்கொள்ளை அதிகரித்துவிட்டது.

பழங்குடிகளுக்கு பாதிப்பா?

வீரப்பன்

வீரப்பன் உயிரோடு இருந்த வரையில் கர்நாடகா அரசியல் தலைவர்களும் வனத்துறையும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி காட்டுக்குள் சென்றது கிடையாது. தற்போது அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் செல்கின்றனர். வீரப்பன் இருந்திருந்தால் மேக்கேதாட்டு பக்கம் அணை கட்டுவதற்கு அவர்கள் வந்திருக்க மாட்டார்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிரடிப்படை அதிகாரிகளே வருத்தப்படுகின்றனர்" என்கிறார்.

இதையடுத்து, காடுகளில் வசிக்கும் பழங்குடிகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக பேசிய சிவசுப்ரமணியம், `` கடந்த ஒரு வாரகாலமாக தருமபுரி வனக்கோட்டத்தில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு வனத்துறையினர் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். 1847 ஆம் ஆண்டு வன உயிரின சட்டத்தின்படி, `இந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது, நீங்கள் எல்லாம் குடும்பத்துடன் வெளியேற வேண்டும்' எனக் கூறி வருகின்றனர். அங்கு 180-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் குடும்பத்தினர் அனைவரும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளையொட்டி வசிக்கின்றனர். தண்ணீர் வடிந்த பிறகு விவசாயம் செய்வது அவர்களின் வழக்கம். மற்ற நேரங்களில் ஆடு, மாடுகளை மேய்ப்பது அவர்களின் வழக்கம்.

இவர்களில் பலர் 100 மாடுகளை வைத்திருக்கிறார்கள். இந்த மாடுகள் சராசரியாக ஆண்டுக்கு 40 கன்றுக் குட்டிகளை போடும். பால் கறப்பதற்கு இவர்கள் மாடுகளை பயன்படுத்த மாட்டார்கள். இவர்கள் மாடுகளை விட்டு வெளியேறினால் நாட்டு மாடு இனங்கள் அழியும். வீரப்பன் இல்லாததால்தான் வன எல்லையைப் பெருக்குகிறோம் என்ற பெயரில் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர்" என்கிறார்.

வீரப்பனின் நிறைவேறாத ஆசை

``வீரப்பனோடு நீங்கள் நெருங்கிப் பழகியவர். அவருக்கு என்று எதாவது விருப்பங்கள் இருந்ததா?" என்றோம். `` ஆமாம். வீரப்பனுக்கு நிறைவேறாத ஆசை ஒன்றும் இருந்தது. வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானார்கள். வீரப்பன் தேடுதல் வேட்டை குறித்தும் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் 2000 ஆம் ஆண்டில் சதாசிவம் கமிஷன் அமைக்கப்பட்டது.

இப்படியொரு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 97 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டது. ஆணையமானது, 2004 வரையில் விசாரணை நடத்தியது. 2007 ஆம் ஆண்டில் 89 குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக 295 பேர் கொடுத்த புகார்களை வடிகட்டி அதில் 195 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அதிரடிப்படையின் நடவடிக்கையால் கண் பார்வை பறிபோனது, கால் இழந்தது, நடை பிணமாக மாறியவர்கள் என 89 பேரின் துயரங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டது. மற்றவர்களின் பாதிப்புகளுக்கு போதிய ஆதாரம் இல்லை.

இதற்குக் காரணம், காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது போலீஸ் அழைத்துச் சென்றது மட்டுமே தெரியும். அவர்கள் கொல்லப்பட்டு எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரால் நிரூபிக்க முடியவில்லை. `அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும்' என்பது வீரப்பனின் விருப்பமாக இருந்தது. அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. இந்தக் கொடூர சம்பவங்களுக்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும் சதாசிவம் கமிஷன் முன்வைத்தது. அது இன்றளவும் கிடப்பில்தான் உள்ளது" என்கிறார்.

வீரப்பனின் கடைசி நிமிடங்கள்

வீரப்பன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடர்ந்து வீரப்பனின் கடைசி நிமிடங்கள் குறித்துப் பேசிய சிவசுப்ரமணியம், `` அவர் பலமிழந்த நிலையிலும் உடல் மெலிந்த நிலையிலும் தடுமாற்றத்தில் இருந்ததாக காவல்துறையினர் சொல்கின்றனர். அது நம்பும்படியாக இல்லை. அவரின் கூட்டாளிகளின் எண்ணிக்கையும் நான்காக குறைந்துவிட்டது. தமிழ்நாடு மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் புரட்சிகர எண்ணம் கொ

ண்ட இளைஞர்களைக் காட்டுக்குள் கூட்டி வந்து ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இருந்தார். அதற்காக ஆயுதங்கள் வாங்குவது, ஆள்களை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்" என்கிறார்.

அடுத்ததாக, வீரப்பனின் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்த `ஆபரேஷன் கக்கூன்' குறித்துப் பேசியவர், `` கைகள் கட்டப்பட்ட நிலையில் வீரப்பன் பிடிபட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாடகம்தான் அது. 2002 ஆம் ஆண்டு `ஆபரேஷன் ரூட்ஸ்' என்ற பெயரில் வீரப்பனின் வேர்களைத் தேடி என்ற நடவடிக்கையை அதிரடிப்படை தொடங்கியது. அது 2004 ஆம் ஆண்டு வீரப்பன் மரணத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. வீரப்பனுக்குத் தேவையான ஆயுதங்களை ஒரு பிரிவினர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு நடந்த குண்டு வெடிப்பு பயிற்சியில் ஒரு கிரானேடை வெடிக்கச் செய்து வீரப்பனை சாய்த்துள்ளனர். பின்னர் ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் அவரை வைத்த பிறகு மறுநாள் அதிரடிப்படை அரங்கேற்றிய நாடகம்தான் `ஆபரேஷன் கக்கூன்'.

டி.எஸ்.பி உசேன் தலைமையிலான 12 பேர் கொண்ட கமாண்டோ படையினர், பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீரப்பன் சென்றதாகச் சொல்லப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த 12 பேரில் 7 பேரை நான் சந்தித்துப் பேசிவிட்டேன். அந்த ஏழு பேரும், `எங்களை எதற்காக சுடச் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், ஆம்புலன்ஸில் இருந்து வீரப்பன் எதிர்த் தாக்குதல் நடத்தவில்லை' என்றனர். அந்த ஆம்புலன்ஸில் வீரப்பன் உயிரோடு இருந்ததற்கான எந்தத் தடயங்களும் இல்லை. அந்த ஆம்புலன்ஸில் இருந்து கைப்பற்றப்பட்ட நான்கு துப்பாக்கிகளும் கடைசி நேரத்தில் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த முரண்பாடுகளை எல்லாம் `வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்' புத்தகத்தில் விரிவாகக் கூறியிருக்கிறேன்" என்கிறார் சிவசுப்ரமணியம்.

வீரப்பன் புதைத்து வைத்த பணம்

வீரப்பன்

``ஆள் கடத்தல் மூலம் கிடைத்த பெரும் பணத்தை காடுகளுக்குள் வீரப்பன் புதைத்து வைத்திருந்ததாகவும் அதனைத் தேடி சிலர் சென்றதாகவும் கூறப்பட்டதே, உண்மையா?" என்றோம். `` ஆமாம். வீரப்பன் புதைத்து வைத்த பணத்தைத் தேடி பொதுமக்களில் சிலர் சென்றனர். அவர் வழக்கமாக தங்கும் பாறைகள், நீர் நிலைகளையொட்டியுள்ள பகுதிகளில் சென்று பார்த்தனர். ஒரு சில இடங்களில் அரிசி, பேட்டரி செல்கள், மைக்ரோ டேப்ரிகார்டர் போன்றவற்றை எடுத்துள்ளனர். ஆனால், பணம் யாருக்கும் கிடைக்கவில்லை.

அவருடைய பணம் அதிகப்படியாக சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் புதைத்து வைக்கப்பட்டதாகவும், ` எனக்கு உதவி செய்தவர்களுக்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை' என 2004 ஆம் ஆண்டு வாக்கில் பென்னாகரம் காட்டுப்பகுதியில் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் வீரப்பன் கூறியிருக்கிறார். மேலும், `இனி சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்குச் சென்று வந்தால்தான் பணம் கிடைக்கும்' எனவும் கூறியுள்ளார்.

அந்தப் பணத்தை தற்போது கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். காட்டுப்பகுதிகளில் நீர் நிலைகளின் அருகில் புதைத்து வைத்திருந்தால் மண் சரிவு, மண் அரிப்பு போன்றவற்றால் அந்தப் பணம் புதைந்து போயிருக்கும். இவர்கள் எப்போதும் மேட்டுப்பகுதிகளில் மண் மூடாத பகுதிகளில்தான் புதைத்து வைப்பார்கள். தொடர்ந்து மழை பெய்தாலும் அந்தப் பணத்துக்கு எந்த சேதாரமும் ஏற்படாது. அந்தப் பகுதிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கும் வாய்ப்பில்லை. அவை மண்ணோடு புதைந்து போவதற்கே வாய்ப்புகள் அதிகம். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அந்தப் பணமும் செல்லாததாக ஆகிவிட்டன" என்கிறார்.

அரசு செய்யத் தவறியது என்ன?

வீரப்பன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

``காடுகள் மற்றும் காடுகளையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போது அதே சூழலில்தான் அந்தப் பகுதிகள் உள்ளன. அங்குள்ள பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. காட்டுக்குள் பாதுகாப்பாக அவர்கள் வாழ்வதற்கான சூழல்கள் இல்லை. அங்குள்ள இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. வனத்துறையில் பழங்குடிகளை பணியமர்த்தினால், அவர்கள் காட்டுக்கு விசுவாசமாக இருப்பார்கள். இதன்மூலம் வெளியில் இருந்து வருகிறவர்கள் நடத்தும் வனக்கொள்ளை தடுப்பதில் அவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.

காட்டில் மூங்கில்களை வெட்டவே கூடாது என தமிழ்நாடு வனத்துறை சொல்கிறது. ஒரு மூங்கிலை வெட்டினால் அது ஆறாகப் பெருகும். அதை வெட்டி கூடை பின்னி விற்பார்கள். காடு காடாகவே இருக்க வேண்டும் என வனத்துறை நினைப்பதால் அவர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதேநேரம், காட்டைவிட்டு பழங்குடிகள் வெளியே செல்லாதவாறு அவர்களின் வாழ்வாரத்தை கர்நாடக அரசு பாதுகாக்குகிறது. ஆனால், தமிழ்நாடு வனத்துறை அவர்களை வெளியே தள்ளுவதற்கே விரும்புகிறது. வீரப்பனை போன்று இன்னொரு நபர் உருவாகக் கூடாது என்றால், அதற்கான பிரச்னைகளை களைவதுதானே சிறப்பான ஒன்றாக இருக்கும்?" என்கிறார் பெ.சிவசுப்ரமணியம்.

https://www.bbc.com/tamil/india-58951331

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.