Jump to content

சீல் உடைத்தார் – பலவந்தமாக திறந்தார்- ஜீவன் தொண்டமான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீல் உடைத்தார் – பலவந்தமாக திறந்தார்- ஜீவன் தொண்டமான்!

October 20, 2021

spacer.png

ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமை தொடர்பில், சீல் வைக்கப்பட்ட ஹற்றன்- டன்பார் பிரதேசத்திலுள்ள உடற்பயிற்சி கூடமொன்று, தோட்ட
வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் சீல்
உடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஹற்றன்- டிக்கோயா நகர சபை மூலம் நிர்வகிக்கப்படும் ஹற்றன்- டன்பார் மைதானத்தின்
நடத்திச் செல்லப்படும் உடற்பயிற்சி நிலையத்திலிருந்து இந்த வருடத்துக்கான வரி,
செலுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் இதற்கமைய, நகர சபை நிதிக் குழுவில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த நிலையத்தை சீல் வைத்து மூட நேற்று முன்தினம் (18.10.21) நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், 1இலட்ச ரூபாய் வரியை செலுத்திய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
நேற்று முன்தினம் இரவே இந்த உடற்பயிற்சி நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற நகர சபையின் அதிகாரியொருவர், அங்கிருந்த அடையாளம்
தெரியாத நபர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இது தொடர்பில் நாளை (21.10.21) நகர
சபையின் தவிசாளரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த
அதிகாரி தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் கருத்துரைத்த நகர சபையின் தவிசாளர் எஸ். பாலச்சந்திரன், “குறித்த
உடற்பயிற்சி நிலையத்தை வரி முறையின் கீழ் பெற்றுக்கொண்ட நபர், இந்த வருடத்துக்கான
எவ்வித வரியையும் செலுத்தியிருக்கவில்லை. இதற்கமைய, நகர சபை நிதிக்குழு கூட்டத்தில் இந்த நிலையத்தை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைப்பதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நபருடன் பல தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் பலனளிக்காத நிலையில், அந்த நிலையத்துக்கு சீல் வைத்தோம். எனினும் சீல் வைத்து மூடப்பட்ட அன்றிரவே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையிட்டு, ஒரு இலட்சம் ரூபாய் வரியை செலுத்தி அதனை திறக்க நடவடிக்கை எடுத்தார்” எனவும் குறிப்பட்டுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றால் உடற்பயிற்சி நிலையம் மூடப்பட்ட காலப்பகுதிக்கான வரியை குறைக்குமாறு அதனை நிர்வகிக்கும் நபர் கோரிக்கை விடுத்தால், அது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநரின் ஆலோசனையைப் பெற்று, ஏதாவது சலுகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த சம்பவத்தின் போது பெண் அதிகாரி ஒருவரே சம்பவம் இடத்துக்குச் சென்றதாகவும் இதன்போது, குறித்த அதிகாரியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் பட்டாசுகள் கொளுத்தி அவரை அவமானப்படுத்தி உள்ளனர் என ஹற்றன் ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் குற்றம் சுமத்தினர்.

ஜீவன் தொண்டமானின் இந்த அராஜக சம்பவத்தை ஹற்றன் வர்த்தகர்கள் கடுமையாக
கண்டிப்பதாகவும். இந்த சம்பவத்துக்கு உடனடியாக விசாரணை வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் இ.தொ.காவின் இப்படியான அராஜக அடாவடி செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் ஹற்றன் ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

https://globaltamilnews.net/2021/167464

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீல் உடைத்தார் எண்டோண நான் வேற எதையோ யோசிச்சிட்டுடன்👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

சீல் உடைத்தார் எண்டோண நான் வேற எதையோ யோசிச்சிட்டுடன்👀

நானும் நினைச்சேன் ஆனா வெளிய சொல்லல 😁

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

சீல் உடைத்தார் – பலவந்தமாக திறந்தார்- ஜீவன் தொண்டமான்!

'சீல் உடைத்தார்' என்றால் சீல் கொண்டுள்ளவர் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.😛

பலவந்தமாகத் திறப்பது வன்முறை அல்லவா.....???🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

குறித்த அதிகாரியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் பட்டாசுகள் கொளுத்தி அவரை அவமானப்படுத்தி உள்ளனர் என ஹற்றன் ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் குற்றம் சுமத்தினர்.

இது வெற்றிகளிப்பின் உச்சக்கட்டத்தின் அறிகுறியல்லவா?அதாவது வெற்றியை விழாவாக கொண்டாடும் முறை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.