Jump to content

தமிழ் தேசியம் என்பது தடம் மாறலாம் ஆனால் தடம்புரள கூடாது காலம் சூழ்நிலைக்கேற்றவாறு சிந்திக்க வேண்டும். – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியம் என்பது தடம் மாறலாம் ஆனால் தடம்புரள கூடாது காலம் சூழ்நிலைக்கேற்றவாறு சிந்திக்க வேண்டும். – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

தமிழ் தேசியம் என்பது தடம் மாறலாம் தமிழ் தேசியம் ஒருபோதும் தடம்புரள கூடாது இதுதான் யதார்த்தம். 1983 இற்கு முதல் அகிம்சை வழி சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் தேசியம் ஆயுதம் தூக்காத போராட்டமாக இருந்திருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கு அமைவாக “ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தினூடாக ஆயித்தியமலை மணிபுரம் தணிகாச்சலம் வீதியினை கொங்கிறீட் வீதியாக
புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று(19) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சிபார்சில் 2.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள 875 மீற்றர் வீதிக்கான வேலைத்திட்டத்தினை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தி கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துகின்ற அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற உரிமை சார்ந்த விடயங்களில் நாங்கள் சாணக்கியமாக ராஜதந்திரமாக நகர்த்துவோம் அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

எமது தமிழ் தலைமைகளால் பிரச்சினையை மாத்திரம் தான் சொல்ல முடியும் 72 வருடங்கள் அல்ல 700 வருடங்கள் சென்றாலும் எமது மக்களுக்கான பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியாது. ஆண்டாண்டு காலமாய் அதே பொய் அதே பித்தலாட்டம் எனக்கு வாக்களித்த அந்த 34 ஆயிரம் மக்களால் தான் இந்த மாகாணத்திற்கு இந்த மாவட்டத்திற்கு ஒட்டுமொத்த மக்களுக்கும் இன்று நல்லது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால் தான் அந்த 34 ஆயிரம் பேரையும் என்னால் மறக்க முடியாது. அந்த 34 ஆயிரம் பேர் இல்லாவிட்டால் இந்த மாகாணத்துக்கு ஒரு இராஜாங்க அமைச்சரை இந்த மாவட்டத்துக்கு ஒரு இராஜாங்க அமைச்சரை, உங்கள் முன்னால் சதாசிவம் வியாழேந்திரன் இல்லை.

தமிழ் தேசியம் என்பது தடம் மாறலாம் தமிழ் தேசியம் தடம்புரள கூடாது இதுதான் யதார்த்தம் 1983 இற்கு முதல் அகிம்சை வழி சாத்வீகப் போராட்டம் அதுதான் தமிழ் தேசியம். 1983 முதல் ஆயுதம் தூக்காத போராட்டம் அதுதான் தமிழ் தேசியத்தின் பாதை. 1983 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு விடுதலை புலிகள் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். அகிம்சையில் இருந்து ஆயுதப்போராட்டம். 2009 மே மாதத்திற்கு பிறகு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாறியது. வரலாற்றில் தமிழ் தேசியம் தடம்மாறி வந்திருக்கின்றது ஆனால் தடம்புரள கூடாது காலம் சூழ்நிலைக்கேற்றவாறு நாம் சிந்திக்க வேண்டும்.

விடிய விடிய போராடினாலும் அம்பாறையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள முடியாது இன்று முஸ்லிம் சமூகம் அங்கு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கின்றார்கள் அதேபோல் விடிய விடிய முயற்சித்தாலும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை மாத்திரமே திருகோணமலையில் எம்மால் பெற்றுக்கெள்ள முடியும். அதேபோன்று இன்னும் பத்து வருடங்களின் பின்பு அந்த ஒருவர் கூட வர முடியுமா என்று சந்தேகம் இருக்கின்றது. எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்த மாகாணம். நான் இனவாதம் பேசவில்லை என் சார்ந்த சமூகத்தின் நிலைமை தொடர்பிலேயே பேசிக்கொண்டிருக்கிறேன் என்றார்

.C0172T01-300x169.jpg?6bfec1&6bfec1

C0168T01-300x169.jpg?6bfec1&6bfec1

C0201T01-300x169.jpg?6bfec1&6bfec1

C0198T01-300x169.jpg?6bfec1&6bfec1



https://www.meenagam.com/தமிழ்-தேசியம்-என்பது-தடம/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவினதும் போர்குற்றவாளி கொத்தபாயவினதும் கால்களை நக்கிக்கிடக்க எப்போது ஆரம்பித்தீரோ அன்றிலிருந்து உமக்கு தமிழ், தமிழ்தேசியம் பற்றிய சொல்லாடலுக்கான எந்த அருகதையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் கேட்ட வசனந்தான், கொஞ்சம் மாற்றி பேசுகிறார். எல்லா அடிமைகளும்  பேசும் வசனம். இப்போ இவர்களின் எஜமானர்களுக்கு இவர்களை வைத்து பொம்மலாட்டம் ஆட நேரமில்லை. எப்படி புலம்பெயர்ந்தவர்களை தன் வலையில் வீழ்த்துவது என்பதே கவலை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.