Jump to content

தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்!

spacer.png

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், தேசிய மொழியான இந்தியை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதை சுட்டிக் காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(அக்டோபர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் உணவு வினியோகிக்கும் தனியார் நிறுவனத்தின் சேவை பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும் போது, இந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்க வேண்டும் என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சேவை வழங்காதது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை கற்றிருக்க வேண்டும் என்று அந்நிறுவன பிரதிநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல... நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்று தான். அலுவல் மொழியாக இந்தி இருந்தாலும் கூட, பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.

ஆனாலும் பல்வேறு வழிகளில் தமிழர்கள் மீது இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தனியார் உணவு வினியோக நிறுவனம் தான் இத்தகைய முயற்சியில் முதலில் ஈடுபட்டது என்று கூற முடியாது. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ‘‘ இந்தியனாக இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாதா?’’ என்ற அவமதிக்கும் வகையிலான கேலி வினாக்கள் தமிழர்களை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

தமிழகத்தில் இந்தி தெரியாததால் தமிழர் ஒருவருக்கு வீட்டுக் கடன் மறுக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. இவை ஏற்க முடியாதவை.

தமிழ்நாட்டில் இத்தகையக் கொடுமைகள் இனியும் நடக்கக்கூடாது என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். இந்த எதிர்பார்ப்புகளை தமிழக அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் மிகவும் எளிதாக நிறைவேற்றி விட முடியும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்றுவதன் மூலம் இச்சிக்கலை தீர்க்க முடியும்.

ஆனால், அதைச் செய்ய தமிழ்நாடு அரசு தயங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணி இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக தனிச் சட்டம் இயற்றப் பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை கிடைப்பது மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் அனைத்து நிலைப் பணியாளர்களும் தமிழ் மொழியில் பேசுவர் என்பதால் இத்தகைய மொழிச் சிக்கல்களும், அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் தடுக்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாட்டை திமுகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்தால்,‘‘தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

அதை நிறைவேற்றுவதன் மூலம் இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். அதேபோல், 100% அரசு வேலைவாய்ப்புகளும் தமிழர்களுக்கே கிடைக்க வகை செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை தவிர்த்த பிற பணிகள் முழுக்க முழுக்க தமிழர்களுக்கே வழங்கப்படுவதும், மத்திய அரசு அலுவலகங்களில் இடை நிலைப் பணிகளில் 50% இடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் மொழி சார்ந்து அவமதிக்கப்படுவதற்கு முடிவு கட்டப்படும்.

எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் அரசு பணிகளில் 100 விழுக்காடும், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனப் பணிகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப் படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
 

https://minnambalam.com/politics/2021/10/20/17/pmk-ramadoss-says-job-should-be-allocate-to-only-tamil-people

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்தியனுக்கு என்ன வேலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

 

1 hour ago, கிருபன் said:

கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏனைய மாநிலங்கள் கன்னடிகா, தெலுங்கு, குஜராத், மராட்டிய இன மக்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கி உள்ளனவா?

அல்லது உள்ளூர் மக்களுக்கு இடம் ஒதுக்கி உள்ளனவா?

மற்றைய மாநிலங்கள் போல தமிழ்நாடும் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான்.

ஆனால் ராமதாஸ் இங்கே வார்த்தைகளை வைத்து ஜில்மால் பண்ணுவதாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நல்ல காலம் சுவிற்சர்லாந்து இப்படி எல்லாம் கிறுக்கு தனமாக யோசிக்கவில்லை.  இப்படி சட்டம் இங்கு கொண்டுவந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காது. இங்கு பல தமிழ் இளைய தலைமுறையினர் அரசு பணிகளில்  வேலை செய்கின்றனர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமதாஸ் சொல்லியிருப்பது உண்மைதான்.

தமிழ்நாட்டில் மட்டுமே இன்றுவரை அரசுப்பணிகளில் தமிழர் அல்லாதோர் பணியில் சேர முடியும். பிற மாநிலங்களில் உள்ள அரசுப்பணிகளில் விண்ணப்பிக்க, அம்மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான தகுதி சான்றிதழை இணைக்க வேண்டும்.

நான் அரசுப் பணியில் இருந்தபோது மல்லுகள், கொல்டிகள், அல்லி பாலா போன்ற பிற மாநிலத்தவர்களும் தமிழக அரசுப் பணியில் இருந்தனர்.

சமீபத்தில் திருச்சி ரயில்வே பணிமனை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள வேலைகளில் 90% சதவீததிற்கும் மேலானவர்கள் அயல் மாநில மக்களே பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்வளவு ஏன், இங்கே அமீரகத்தில் ஓரளவு படித்திருந்தால் போதும், அவர்தான் அந்த பிரிவிற்கு முதிர் (மேலாளர்).

எனது அலுவலகத்தில் உள்ள இயக்குநர் உள்ளூர் பெண்ணிற்கு வயது 26 அல்லது 27 தான் இருக்கும். அவரின் கீழ்தான் அனைத்து நாட்டவரும் பணி புரிய வேண்டும்.

Link to comment
Share on other sites

15 minutes ago, ராசவன்னியன் said:

ராமதாஸ் சொல்லியிருப்பது உண்மைதான்.

தமிழ்நாட்டில் மட்டுமே இன்றுவரை அரசுப்பணிகளில் தமிழர் அல்லாதோர் பணியில் சேர முடியும். பிற மாநிலங்களில் உள்ள அரசுப்பணிகளில் விண்ணப்பிக்க, அம்மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான தகுதி சான்றிதழை இணைக்க வேண்டும்.

நான் அரசுப் பணியில் இருந்தபோது மல்லுகள், கொல்டிகள், அல்லி பாலா போன்ற பிற மாநிலத்தவர்களும் தமிழக அரசுப் பணியில் இருந்தனர்.

சமீபத்தில் திருச்சி ரயில்வே பணிமனை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள வேலைகளில் 90% சதவீததிற்கும் மேலானவர்கள் அயல் மாநில மக்களே பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்வளவு ஏன், இங்கே அமீரகத்தில் ஓரளவு படித்திருந்தால் போதும், அவர்தான் அந்த பிரிவிற்கு முதிர் (மேலாளர்).

எனது அலுவலகத்தில் உள்ள இயக்குநர் உள்ளூர் பெண்ணிற்கு வயது 26 அல்லது 27 தான் இருக்கும். அவரின் கீழ்தான் அனைத்து நாட்டவரும் பணி புரிய வேண்டும்.

தமிழ் நாட்டில்  உள்ளூர் மக்களை புறக்கணித்து அயல் மாநிலங்களில் இருந்து இங்கு அழைத்து வந்து வேலை நியமனம் வழங்குவது என்றால் அது மிக மிக தவறான செயல்.  அதை பற்றி மட்டும் ராம்தாஸ் கூறி இருந்தால் அவரது கருத்து நியாயமானது தான். வரவேற்க்கப்படவேண்டியது.  

ஆனால் தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழும் மக்களை தமிழரில்லை என்று வேலையில் பாரபட்சம் காட்டுவது  தவறானது. அது சரி என்று யாராவது இங்கு வாதாடினால் இலங்கையில் சிங்களவரிடன் இனவாத பாரபட்சமும் சரி என்றாகிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

தமிழ் நாட்டில்  உள்ளூர் மக்களை புறக்கணித்து அயல் மாநிலங்களில் இருந்து இங்கு அழைத்து வந்து வேலை நியமனம் வழங்குவது என்றால் அது மிக மிக தவறான செயல்.  அதை பற்றி மட்டும் ராம்தாஸ் கூறி இருந்தால் அவரது கருத்து நியாயமானது தான். வரவேற்க்கப்படவேண்டியது.  

ஆனால் தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழும் மக்களை தமிழரில்லை என்று வேலையில் பாரபட்சம் காட்டுவது  தவறானது. அது சரி என்று யாராவது இங்கு வாதாடினால் இலங்கையில் சிங்களவரிடன் இனவாத பாரபட்சமும் சரி என்றாகிவிடும். 

துல்பன், பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நிரந்தர குடிமக்களாகி, பள்ளிகளில் தமிழை படித்திருந்து அதில் தேர்ச்சியும் பெற்றிருந்தால், தமிழ்நாடு அரசுப் பணிகளில் இதுவரை சேருவதை யாரும் தடுக்கவில்லை.

ஆனால் தமிழே தெரியாமல், நேரடியாக தமிழ்நாடு அரசுப்பணிகளில் அனுமதிப்பது தவறுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ராசவன்னியன் said:

ராமதாஸ் சொல்லியிருப்பது உண்மைதான்.

தமிழ்நாட்டில் மட்டுமே இன்றுவரை அரசுப்பணிகளில் தமிழர் அல்லாதோர் பணியில் சேர முடியும். பிற மாநிலங்களில் உள்ள அரசுப்பணிகளில் விண்ணப்பிக்க, அம்மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான தகுதி சான்றிதழை இணைக்க வேண்டும்.

நான் அரசுப் பணியில் இருந்தபோது மல்லுகள், கொல்டிகள், அல்லி பாலா போன்ற பிற மாநிலத்தவர்களும் தமிழக அரசுப் பணியில் இருந்தனர்.

சமீபத்தில் திருச்சி ரயில்வே பணிமனை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள வேலைகளில் 90% சதவீததிற்கும் மேலானவர்கள் அயல் மாநில மக்களே பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்வளவு ஏன், இங்கே அமீரகத்தில் ஓரளவு படித்திருந்தால் போதும், அவர்தான் அந்த பிரிவிற்கு முதிர் (மேலாளர்).

எனது அலுவலகத்தில் உள்ள இயக்குநர் உள்ளூர் பெண்ணிற்கு வயது 26 அல்லது 27 தான் இருக்கும். அவரின் கீழ்தான் அனைத்து நாட்டவரும் பணி புரிய வேண்டும்.

மண்ணின் மைந்தர்களுக்கு கொடுப்பதில் ஒரு தவறும் இல்லை வன்னியன்சார்.

ஆனால் அதை குறித்த மொழி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் அமல்படுத்துவதே நியாயமாக இருக்கும்.

”உள்ளூர்” வாசி என்பதற்கும் “இந்த இன உரிமையுள்ளவர்” என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

சில நன்கு தெரிந்த உதாரணங்களை தருகிறேன்.

1. அன்புமணி இராமதாஸ் (வன்னியர் சாதி - தமிழ் வம்சாவழி)

2. துரை வையாபுரி ( தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக வாழும் - நாயக்கர் தெலுங்கு வம்சாவவழி)

3. ரங்கராஜ் பாண்டே (ஒரு தலைமுறைக்குள் தமிழ் நாட்டுக்கு வந்த, ஆனால் தமிழ் புலமையுள்ள வெளி மாநிலத்தவர்) 

4. பியூஸ் மனூஸ் - அதிகம் தமிழ் மொழி ஆற்றல் அற்ற வெளி மாநிலத்தவர், ஆனால் தமிழ்நாட்டில் வசிக்கிறார். சுற்று சூழல் ஆர்வலர்.

5. தமிழ் நாட்டில் வசிக்காத வெளிநாட்டவர்.

இதில், 5ம்  வகையினரை, 4 ம் வகையினரை பின் தள்ளுவதில் அதிக நியாய கேடு இருக்காது.

ஆனால் 2ம் வகையினரை பிந்தள்ளுபது சரிவருமா?

அதே போல் மொழி தேர்ச்சி அடிப்படையில் தேரும் போது 3 ம் வகையினரை தவிர்க்க முடியாது.

அரபு தேசங்களில் பெண்ணடிமைதனம், கையை வெட்டல் என பல மிலேச்சங்கள் உள்ளன, அதில் ஒரு அங்கம்தான் இதுவும். 

3 minutes ago, ராசவன்னியன் said:

துல்பன், பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நிரந்தர குடிமக்களாகி, பள்ளிகளில் தமிழை படித்திருந்து அதில் தேர்ச்சியும் பெற்றிருந்தால், தமிழ்நாடு அரசுப் பணிகளில் இதுவரை சேருவதை யாரும் தடுக்கவில்லை.

ஆனால் தமிழே தெரியாமல், நேரடியாக தமிழ்நாடு அரசுப்பணிகளில் அனுமதிப்பது தவறுதான்.

இது மிக நியாயமான கோரிக்கை.

ஆனால் தமிழ் நாட்டில் இதையும் பன்னெடுங்காலமாக வசிக்கும் மக்களையும் ஒன்றாக போட்டு குழப்பி ஒரு சிலர் விஷமம் பண்ணுவதால் - இந்த நியாயமான கோரிக்கையும் அடிபட்டு போகிறது 🙁.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நல்ல காலம் சுவிற்சர்லாந்து இப்படி எல்லாம் கிறுக்கு தனமாக யோசிக்கவில்லை.  இப்படி சட்டம் இங்கு கொண்டுவந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காது. இங்கு பல தமிழ் இளைய தலைமுறையினர் அரசு பணிகளில்  வேலை செய்கின்றனர்.  

ஆனால் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேலே செல்வது கடினம் இல்லையா ?

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

ஆனால் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேலே செல்வது கடினம் இல்லையா ?

 சுவிஸ்  சமஸ்டி அரசின் சுகாதார அமைச்சில் கூட தமிழ் பெண் வேலை செய்கிறார். இவ்வாறாக சட்டம் போடுவது சுவிஸ் அரசியல் அமைப்பை மீறுவதாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிந்தனை ஒன்றும் உலகத்திற்குப் புதிதல்ல. காலம் முழுவதும் உலகெங்கும் இந்தச் சிந்தனை உயிர் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை பேணவே விரும்புகின்றனர். 

தனக்கு மிஞ்சினால் தானம் என்பதில் தவறு இல்லை. 

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

இந்த சிந்தனை ஒன்றும் உலகத்திற்குப் புதிதல்ல. காலம் முழுவதும் உலகெங்கும் இந்தச் சிந்தனை உயிர் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை பேணவே விரும்புகின்றனர். 

தனக்கு மிஞ்சினால் தானம் என்பதில் தவறு இல்லை. 

நீங்கள் கூறும் விடயத்திற்கு ராஜவன்னினுடனானான உரையாடலில் அவரும் தெளிவாக பதிலளித்துள்ளார். கோசானும் அதை தெளிவாக விளக்கி உள்ளார்.  உள்ளூரில் வாழும் மக்களுக்கு முதன்மை அளிக்கப்படல் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

நல்ல காலம் சுவிற்சர்லாந்து இப்படி எல்லாம் கிறுக்கு தனமாக யோசிக்கவில்லை.  இப்படி சட்டம் இங்கு கொண்டுவந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காது. இங்கு பல தமிழ் இளைய தலைமுறையினர் அரசு பணிகளில்  வேலை செய்கின்றனர்.  

மாற்றம் ஒன்றே மாறாதது.அதை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பது  நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டங்களும் தீர்ப்புகளும் சீரழிந்த நாடுகள் சிறிலங்காவும் இந்தியாவும்......அந்த நாடுகளில் நடப்பவற்றை சுவீஸ் நாட்டு  சட்டங்களோடும் நீதி நியாயங்களோடும் ஒப்பிட்டு சிந்திப்பது எவ்வளவு மூடத்தனம்?

சுவிற்சலாந்தில் ஒரு சிறிய சட்ட நிறைவேற்றலுக்கும் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவார்கள்ள். மக்களின் தீர்ப்பு அங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.
ஆனால் இலங்கை அல்லது இந்தியாவில்......??????

தமிழ்நாட்டுக்கு தண்ணி குடுக்காத அயல் மாநிலங்கள் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் சகலருக்கும் சம உரிமை எந்தளவில் நியாயம்?

Link to comment
Share on other sites

23 minutes ago, குமாரசாமி said:

சட்டங்களும் தீர்ப்புகளும் சீரழிந்த நாடுகள் சிறிலங்காவும் இந்தியாவும்......அந்த நாடுகளில் நடப்பவற்றை சுவீஸ் நாட்டு  சட்டங்களோடும் நீதி நியாயங்களோடும் ஒப்பிட்டு சிந்திப்பது எவ்வளவு மூடத்தனம்?

சுவிற்சலாந்தில் ஒரு சிறிய சட்ட நிறைவேற்றலுக்கும் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவார்கள்ள். மக்களின் தீர்ப்பு அங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.
ஆனால் இலங்கை அல்லது இந்தியாவில்......??????

தமிழ்நாட்டுக்கு தண்ணி குடுக்காத அயல் மாநிலங்கள் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் சகலருக்கும் சம உரிமை எந்தளவில் நியாயம்?

மிக தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. அந்த மாநிலத்தில் பல தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டுவது என்பது தவறானது என்பதை  ராஐவன்னியர் கோசான் ஆகிய இருவரும் மிக தெளிவாக விளக்கிய பிறகும் இந்த சின்ன விடயம் புரியாமல் இருப்பது ஏனோ? 😂😂

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

மிக தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. அந்த மாநிலத்தில் பல தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டுவது என்பது தவறானது என்பதை  ராஐவன்னியர் கோசான் ஆகிய இருவரும் மிக தெளிவாக விளக்கிய பிறகும் இந்த சின்ன விடயம் புரியாமல் இருப்பது ஏனோ? 😂😂

எந்த சந்தேகமுமில்லை  எல்லாம் வாசித்த பின் தான்  எனது கருத்தை எழுதினேன்.

 எனது கேள்வி சுவீஸ் நாட்டைப்போல் எல்லா விடயத்திற்கும் சர்வசன வாக்கெடுப்பு இலங்கை இந்தியாவில் சாத்தியமா?

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

எந்த சந்தேகமுமில்லை  எல்லாம் வாசித்த பின் தான்  எனது கருத்தை எழுதினேன்.

 எனது கேள்வி சுவீஸ் நாட்டைப்போல் எல்லா விடயத்திற்கும் சர்வசன வாக்கெடுப்பு இலங்கை இந்தியாவில் சாத்தியமா?

நீங்கள் கூறிய வியத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அடுத்த மாநில தண்ணீர்ப்பிரச்சனைக்காக அந்த மாநிலத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டவேண்டும் என்று நீங்கள் கூட கூறமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

 சுவிஸ்  சமஸ்டி அரசின் சுகாதார அமைச்சில் கூட தமிழ் பெண் வேலை செய்கிறார். இவ்வாறாக சட்டம் போடுவது சுவிஸ் அரசியல் அமைப்பை மீறுவதாகும். 

ஆனால் theory &  practice இரண்டுமே வேறு வேறானவைதானே. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சட்டங்களும் தீர்ப்புகளும் சீரழிந்த நாடுகள் சிறிலங்காவும் இந்தியாவும்......அந்த நாடுகளில் நடப்பவற்றை சுவீஸ் நாட்டு  சட்டங்களோடும் நீதி நியாயங்களோடும் ஒப்பிட்டு சிந்திப்பது எவ்வளவு மூடத்தனம்?

சுவிற்சலாந்தில் ஒரு சிறிய சட்ட நிறைவேற்றலுக்கும் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவார்கள்ள். மக்களின் தீர்ப்பு அங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.
ஆனால் இலங்கை அல்லது இந்தியாவில்......??????

தமிழ்நாட்டுக்கு தண்ணி குடுக்காத அயல் மாநிலங்கள் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் சகலருக்கும் சம உரிமை எந்தளவில் நியாயம்?

வாய்க்கால் தண்ணீரை பக்கத்து வயலுக்கு  பாத்தி கட்ட  மனம் ஒப்பாது ஆனால் ஆவனுடைய பிள்ளைகளுக்கு என்னுடைய வயல் அறுவடை  வேண்டும். 

நல்ல நீதி நல்ல நியாயம். 😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனதொகை குறைந்த சுவிஸுடன் மக்கள் தொகையில் கூடிய தமிழ்நாட்டை ஒப்பிட்டு பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு முக்கிய சந்தில் நின்று வெளி மாவட்ட மக்களுக்கும் வேலை வேணும் என்று போட்  பிடித்தால் அடுத்தநிமிடம் அங்குள்ள சனம்  பின்னி பெடலெடுத்து விடும் அளவில் தமிழ் நாட்டு வேலையில்லா திண்டாட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

நீங்கள் கூறிய வியத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அடுத்த மாநில தண்ணீர்ப்பிரச்சனைக்காக அந்த மாநிலத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டவேண்டும் என்று நீங்கள் கூட கூறமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். 

 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்ன மாநிலத்தில் வாழும் தமிழர்களை அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகளை நீங்கள் காணாவிட்டால் நீங்கள் ஒரு கிணற்று தவளை.

பல சான்று காணொளிகள் இருக்கின்றன. அதை உங்களுக்காக இணைத்து பயனில்லை. எருமை மாட்டில் மழை பெய்த கதையாகத்தான் முடியும்.

Link to comment
Share on other sites

15 minutes ago, குமாரசாமி said:

 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்ன மாநிலத்தில் வாழும் தமிழர்களை அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகளை நீங்கள் காணாவிட்டால் நீங்கள் ஒரு கிணற்று தவளை.

பல சான்று காணொளிகள் இருக்கின்றன. அதை உங்களுக்காக இணைத்து பயனில்லை. எருமை மாட்டில் மழை பெய்த கதையாகத்தான் முடியும்.

 அடுத்தவன் நட்டில் வந்து வாழ்ந்து பிள்ளைகளையும் படிப்பித்து வளமுடன் வாழும் நீங்கள் அடுத்த நாட்டில் பல தலைமுறையாக  வாழும் மக்கள் மீது இவ்வளவு வன்மத்துடன் பேசுகின்றீர்களே. உங்களை விட கோட்டபாய மகிந்த கும்பல் எவ்வளோ மேல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

 அடுத்தவன் நட்டில் வந்து வாழ்ந்து பிள்ளைகளையும் படிப்பித்து வளமுடன் வாழும் நீங்கள் அடுத்த நாட்டில் பல தலைமுறையாக  வாழும் மக்கள் மீது இவ்வளவு வன்மத்துடன் பேசுகின்றீர்களே. உங்களை விட கோட்டபாய மகிந்த கும்பல் எவ்வளோ மேல். 

அடுத்தவன் நாட்டில் நான் வாழ்ந்தாலும் நான் தற்போது வாழும் நாட்டைப்போல் சகல அரசியல் உரிமைகளும் தனி மனித சுதந்திரமும் நான் பிறந்த நாட்டிலும்  இருக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கின்றது ஐயா?

மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை நானும் கேட்டால் உங்களுக்கு வன்மமாகத்தான் தெரியும்.

சுவீஸ் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் உள்ள உரிமை வடகிழக்கு பகுதி வாழ் தமிழ் மக்களுக்கு இருக்கின்றதா???

Link to comment
Share on other sites

8 minutes ago, குமாரசாமி said:

அடுத்தவன் நாட்டில் நான் வாழ்ந்தாலும் நான் தற்போது வாழும் நாட்டைப்போல் சகல அரசியல் உரிமைகளும் தனி மனித சுதந்திரமும் நான் பிறந்த நாட்டிலும்  இருக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கின்றது ஐயா?

மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை நானும் கேட்டால் உங்களுக்கு வன்மமாகத்தான் தெரியும்.

சுவீஸ் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் உள்ள உரிமை வடகிழக்கு பகுதி வாழ் தமிழ் மக்களுக்கு இருக்கின்றதா???

உரிமையை கேட்கும் நீங்கள் அடுத்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு இயல்பாக இருக்கும் உரிமையை மறுக்கும் உரிமை உங்களுக்கு அறவே இல்லை.  இங்கு அடுத்த மாநில மக்களைப்பற்றிய பேச்சே இல்லை. அது வேறு விடயம் . அது பற்றி விரிவாக உரையாடப்பட்டு விட்டது. 

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

சனதொகை குறைந்த சுவிஸுடன் மக்கள் தொகையில் கூடிய தமிழ்நாட்டை ஒப்பிட்டு பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு முக்கிய சந்தில் நின்று வெளி மாவட்ட மக்களுக்கும் வேலை வேணும் என்று போட்  பிடித்தால் அடுத்தநிமிடம் அங்குள்ள சனம்  பின்னி பெடலெடுத்து விடும் அளவில் தமிழ் நாட்டு வேலையில்லா திண்டாட்டம் .

அவ்வாறு நான்  கூறவில்லை என்பது தெரிந்தும்   போக்கில் உங்கள் பங்களிப்பாக  ஒரு  படுபொய்யை கூறிவிட்டு செல்வதேன்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.