Jump to content

லண்டன் லூசியம் பகுதியில் பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில் திருட்டு! வெளியானது வீடியோ காட்சிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் லூசியம் பகுதியில் வசித்து வரும் பிரபல தமிழ் வர்த்தகரின் காரொன்று அண்மையில் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் தனது காரினை விற்பனை செய்வதற்காக இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்வையிட்ட மூவர் காரினை வாங்குவதாக கூறி குறித்த வர்த்தகரை நாடியுள்ளனர்.

குறித்த காரினை பார்வையிடுவதற்காக வர்த்தகரின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் காரினை பார்வையிட்டப் பின்னர் அதன் மேலதிக இணைப்புச் சாவியை எவரும் காணாத சமயம் லாவகமாக எடுத்துள்ளனர்.

அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த பிறிதொரு சாவியை வைத்தும் சென்றுள்ள போதும் இதனை யாரும் அறிந்திருக்கவும் இல்லை.

அதன் பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் அங்கு வருகை தந்த சந்தேகநபர்கள் மேலதிக இணைப்பு சாவியை வைத்து காரை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது சிசிடிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் குறித்த காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.

 

இந்த சம்பவம் வாகன விற்பனைக்காக இணையத்தளங்களில் விளம்பரங்கள் செய்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் திருடப்படுகின்ற வாகனங்களுக்கு பதிலாக காப்புறுதி நிறுவனங்களால் புதிய வாகனங்கள் வழங்கப்படுகின்றதால் வாகனங்களுக்கான அடுத்த வருடத்திற்கான காப்புறுதி தொகை அதிகரிக்கிறது.

இதனால் வாகனங்களை பறிகொடுப்பவர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் இவ்வாறான வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை போட்ட பின்னர் அதனை பார்த்து கொள்வனவு செய்வதற்காக வருபவர்களில் ஒரு சிலர் வாகனத்தின் இரண்டாவது இணைப்பு சாவியையும் (Spare Key), காரினுடைய புத்தகத்தையும் மிகவும் லாவகமாக திருடிச் செல்கின்றனர். இந்த இடத்தில் தான் வாகனத்தின் உரிமையாளர்கள் இராண்டாவது இணைப்பு சாவி மற்றும் வாகன புத்தகம் ஆகிய இரு விடயங்களிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த சம்பவம் பல்வேறு விடயங்களை எமக்கு பல்வேறு விடயங்களை எமக்கு பாடமாக கற்றுத் தந்திருக்கிறது. இவ்வாறு விற்பனைக்கான விளம்பரங்கள் செய்பவர்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

குறிப்பாக புலம்பெயர்ந்து பிற தேசங்களில் வாழும் மக்கள் அதீத கஸ்டங்களுக்கு மத்தியில் உழைத்து தங்களுக்கான பொருட்களை ஈட்டும்போது அவை தொடர்பான அதீத கவனம் தேவை என்பது வலியுறுத்தப்படுகின்றது.

எப்பொழுதும் புலம்பெயர் நாடுகளிலன் காப்புறுதிகள் வைத்திருக்கிறோம் என்பதற்காக திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்களை கவனயீனமாக எடுக்காமலம் இவ்வாறான விடயங்களில் அவதானமாக இருத்தல் கட்டாயமாகும். 

https://tamilwin.com/article/car-theft-cctv-footage-1634728837

Link to comment
Share on other sites

மேலதிக சாவியை இவர்கள் ஏன் காருக்குள் வைத்து இருந்தனர்? அல்லது ஏன் இவர்களுக்கு அதை காட்டினர்?

ஆனாலும் லண்டன் கார் திருடர்கள் கொஞ்சம் பழைய முறைகளை பயன்படுத்துகின்றனர். இங்கு கனடாவில் வாகனக் களவு உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடக்கின்றது. வீட்டுக்குள் இருக்கும் வாகனங்களின் key fobs இல் இருந்து வரும் சிக்னல்களை அவர்கள் கொண்டுவரும் Receiver களின் மூல பெற்று அதன் மூலம் வாகன கதவுகளை திறந்தும் ஸ்ரார்ட் பண்ணியும் வாகனத்தை திருடுகின்றனர். அல்லது வாகனத்தில் தெளிவாக தெரியும் VIN number இனை பெற்று, தாம் கொண்டு வந்திருக்கும் மென்பொருள் மூலம் அதை குளோனிங் (Cloning) செய்து வாகனத்தை இயக்கி திருடுகின்றனர்.

வாகனம் களவாகி சில மணி நேரங்களில் துண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப தயார் செய்யப்படுகின்றது இங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

மேலதிக சாவியை இவர்கள் ஏன் காருக்குள் வைத்து இருந்தனர்? அல்லது ஏன் இவர்களுக்கு அதை காட்டினர்?

ஆனாலும் லண்டன் கார் திருடர்கள் கொஞ்சம் பழைய முறைகளை பயன்படுத்துகின்றனர். இங்கு கனடாவில் வாகனக் களவு உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடக்கின்றது. வீட்டுக்குள் இருக்கும் வாகனங்களின் key fobs இல் இருந்து வரும் சிக்னல்களை அவர்கள் கொண்டுவரும் Receiver களின் மூல பெற்று அதன் மூலம் வாகன கதவுகளை திறந்தும் ஸ்ரார்ட் பண்ணியும் வாகனத்தை திருடுகின்றனர். அல்லது வாகனத்தில் தெளிவாக தெரியும் VIN number இனை பெற்று, தாம் கொண்டு வந்திருக்கும் மென்பொருள் மூலம் அதை குளோனிங் (Cloning) செய்து வாகனத்தை இயக்கி திருடுகின்றனர்.

வாகனம் களவாகி சில மணி நேரங்களில் துண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப தயார் செய்யப்படுகின்றது இங்கு.

இந்த 2 மாதத்தில் மட்டும் எனது 3 தமிழ் நண்பர்களின் புத்தம் புதிய லெக்சஸ் RX350  வாகனங்கள், நீங்கள் மேலே சொன்னது போலவே அபேஸ் செய்யப்பட்டன.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

வீடியோவில் இருப்பவர்கள் கிழக்கு ஐரோப்பியர்கள் பிரிவுக்கு முன் ஐந்து வருடங்கள் இங்கிலாந்து வந்தவர்கள் இங்கேயே தங்கிவிட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

அப்போ லண்டனகரார் களவு எடுப்பதில்லையா? மேலும் யூரோவில் இணைய முதல் லண்டனில் களவு இடம்பெறவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

அப்போ லண்டனகரார் களவு எடுப்பதில்லையா? மேலும் யூரோவில் இணைய முதல் லண்டனில் களவு இடம்பெறவில்லையா?

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

வெள்ளையா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான் சாமியர்.. அதுமாதிரிதான் பிரிட்டிஸ்காரர் களவெடுக்கமாட்டான்.. களவு எல்லாம் உந்த யூரோப்பிய ஒன்றியத்தால வந்தது..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

வெள்ளைக்காரனுக்கு... வெள்ளை அடிக்கும் வேலை நடக்கும் போது...
ப்ளீஸ்.... நீங்கள், குழப்பாதீர்கள்.  🤣

6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெள்ளையா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான் சாமியர்.. அதுமாதிரிதான் பிரிட்டிஸ்காரர் களவெடுக்கமாட்டான்.. களவு எல்லாம் உந்த யூரோப்பிய ஒன்றியத்தால வந்தது..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமெண்டா என்ர காரை எடுக்கட்டும் பார்ப்பம்.திறப்பை கதவிலேயே விடுறன் ஒரு பய தொடுறானா பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

ஏலுமெண்டா என்ர காரை எடுக்கட்டும் பார்ப்பம்.திறப்பை கதவிலேயே விடுறன் ஒரு பய தொடுறானா பார்ப்பம்.

இப்ப என்ன......லண்டன்லை கள்ளர் இல்லை எண்டு சொல்ல வாறியள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் ரெஸ்லா.. பெராரி.. லம்பகினியை கூட ரோட்டில விட்டிட்டு.. கம்முன்னு போறான். இது ஒரு டப்பாக்காருக்கு...??! பெரிய பில்டப்பு.

நம்மாக்களே லண்டனில திருடி.. பாகம் பாகமாக்கி.. விக்கிறாங்கள்.. இதில... கள்ளனை வெளில வேற தேடுறாய்ங்களாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இப்ப என்ன......லண்டன்லை கள்ளர் இல்லை எண்டு சொல்ல வாறியள் 🤣

என்ர பழைய காரை யாலும் தொடமாட்டார்கள்.பளபளப்பாய் கார் வைச்சு மினுக்கினால் கைவைக்காமல் விடுவாங்களா. என்ர காரைத்தூக்கினால் காசைக் கட்டித்தான் நெரிக்க வேண்டும்'.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2021 at 19:19, குமாரசாமி said:

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

சொன்னால் நம்பமாட்டியள் உந்த கிழக்கு ஐரோப்பா காரரை 2000 க்கு பிறகுதான் உள்ள விட்டது - அதுக்கு முதல் £50 பவுண் கட்டு கட்டா ரோட்டில கிடந்தாலும் சனம் எடுத்து கொண்டு போய் பொலிசில கொடுக்கும்🤣.

இப்பவும் எங்கட சிறிலங்கன் சனம்? மேலே கையால தாங்கள் இன்னொரு £50 தாளை சேர்த்துதான் பொலிசில கொடுப்பது வழமை🤣.

On 21/10/2021 at 22:39, Kandiah57 said:

அப்போ லண்டனகரார் களவு எடுப்பதில்லையா? மேலும் யூரோவில் இணைய முதல் லண்டனில் களவு இடம்பெறவில்லையா?

 

On 21/10/2021 at 22:47, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

 

16 minutes ago, புலவர் said:

என்ர பழைய காரை யாலும் தொடமாட்டார்கள்.பளபளப்பாய் கார் வைச்சு மினுக்கினால் கைவைக்காமல் விடுவாங்களா. என்ர காரைத்தூக்கினால் காசைக் கட்டித்தான் நெரிக்க வேண்டும்'.

பழசெண்டாலும் கட்டலிக் கொன்வேட்டர் இருந்தா கழட்டி போடுவாங்கள். 

எனக்கு ஒரு உண்மையை யாரும் விளங்க படுத்த முடியுமே ?

பிரபலம் என்றால் எல்லாருக்கும் தெரிந்த என்று அர்த்தம்? உந்த வர்த்தகர் ஏப்படி “பிரபலம்” என்ற வரையறைக்குள் வாறார்? 

ரிச்சர் பிரான்சன், அலன் சுகர் அட்லீஸ்ட் லைக்கா ஓனர் பிரபலம் எண்டால் ஓகே, புண்ணாக்கு யாவாரி எல்லாம் பிரபலம் எண்டால் என்ன கதை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சொன்னால் நம்பமாட்டியள் உந்த கிழக்கு ஐரோப்பா காரரை 2000 க்கு பிறகுதான் உள்ள விட்டது - அதுக்கு முதல் £50 பவுண் கட்டு கட்டா ரோட்டில கிடந்தாலும் சனம் எடுத்து கொண்டு போய் பொலிசில கொடுக்கும்🤣.

இப்பவும் எங்கட சிறிலங்கன் சனம்? மேலே கையால தாங்கள் இன்னொரு £50 தாளை சேர்த்துதான் பொலிசில கொடுப்பது வழமை🤣.

மட்டை போட்டு இழுக்கிற பணம் எல்லாம் களவுக்குள் அடங்காதா?அது கை ரெக்னோலொஜிக்குள் அடங்குமாம்.இந்தியர்களும் தமிழர்களும் கள்ள மட்டை பேட்டு விட்டு(எல்லோரும் அல்ல)ஐரோப்பியர்களை கள்ளர்என்பது விந்தை. அவர்களில் பலர் கடின உழைப்பாளிகள்.ஒரு சிலர் களவெடுப்பதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் கள்ளர் என்பது ஏற்புடையதாகுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

மட்டை போட்டு இழுக்கிற பணம் எல்லாம் களவுக்குள் அடங்காதா?அது கை ரெக்னோலொஜிக்குள் அடங்குமாம்.இந்தியர்களும் தமிழர்களும் கள்ள மட்டை பேட்டு விட்டு(எல்லோரும் அல்ல)ஐரோப்பியர்களை கள்ளர்என்பது விந்தை. அவர்களில் பலர் கடின உழைப்பாளிகள்.ஒரு சிலர் களவெடுப்பதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் கள்ளர் என்பது ஏற்புடையதாகுமா?

👆🏼இதை சொன்னால் - கோஷான் தமிழர்களை இளக்காரமாக எழுதுகிறார் என்று பிராது வாசிக்கிறாங்க எசமான்🤣.

21 minutes ago, புலவர் said:

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 

வடிவா தெரியேல்லா ஆனால் 95 க்கு பிறகு வந்த அநேக காரில் இருக்கு எண்டு நினைகிறன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

👆🏼இதை சொன்னால் - கோஷான் தமிழர்களை இளக்காரமாக எழுதுகிறார் என்று பிராது வாசிக்கிறாங்க எசமான்🤣.

 

 

ஆம் மிக உண்மை. தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்துவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பழசெண்டாலும் கட்டலிக் கொன்வேட்டர் இருந்தா கழட்டி போடுவாங்கள். 

 

1 hour ago, புலவர் said:

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 

இங்கும் பரவலாக 2010 க்கு உள்பட்ட கொண்டா வாகனத்தில் அறுத்தெடுக்கிறார்கள்.

அதற்குள் கூடுதலான பிளாட்டினம் இருப்பதாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 

எனது இரண்டு ஹைபிரிட் காருக்கும் சென்ஸரோடு சேர்த்து வெட்டினவங்கள். முதலாவது ஜோன் லூயிஸ் கார்ப் பார்க்கில். கிறிஸ்மஸ் பிரசண்ட் வாங்கப்போன 15 நிமிஷத்தில நடந்தது.

அடுத்தது இன்னும் மோசமானது.. கிறிஸ்மஸுக்கு முதல் ஒரு வெள்ளி பின்னேரம் வீட்டு டிரைவேயில் காரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்து சில நிமிடங்களில் வெளியே வேஸ்ற்பின்னை யாரோ மூவ் பண்ணுவது மாதிரி இருக்க, வெளியே போய்ப் பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை. காரையெல்லாம் சுத்திப் பார்த்துவிட்டு ரிலாக்ஸாக சனிக்கிழமை வெளியே போகாமல் இருந்துவிட்டு ஞாயிறு காரை ஸ்ரார்ட் பண்ணத்தான் கற்றலிக் கொன்வேட்டரை வெட்டினது தெரியும்.🤬

இரண்டுக்கும் சேர்த்து 1200 பவுண்ட்ஸ் தண்டம். இவைகளுக்கு சில வருடங்களுக்கு முதல் வீட்டில் பின்பக்கமாக ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகள்,  வேலை லாப்டப், பல ஃபோன்கள், எனது Gucci சன்கிளாஸ்,  Oxford Street Selfridges இல் வாங்கிய தொப்பி (அது ஒன்று மட்டும்தான் அங்கு வாங்கியது!) என்று கொள்ளைபோனது. பக்கத்து வீட்டுக்காரி கிழக்கு ஐரோப்பியன் வெளியேறியதைப் பார்த்தும் இருந்தார்! இவையும் நான் Brexit க்கு ஆதரவாக வாக்களிக்கக் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சொன்னால் நம்பமாட்டியள் உந்த கிழக்கு ஐரோப்பா காரரை 2000 க்கு பிறகுதான் உள்ள விட்டது - அதுக்கு முதல் £50 பவுண் கட்டு கட்டா ரோட்டில கிடந்தாலும் சனம் எடுத்து கொண்டு போய் பொலிசில கொடுக்கும்🤣.

இப்பவும் எங்கட சிறிலங்கன் சனம்? மேலே கையால தாங்கள் இன்னொரு £50 தாளை சேர்த்துதான் பொலிசில கொடுப்பது வழமை🤣.

Latest No Comment GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்கள் முன்னர்வரை....ஏன் இன்றும் கூட சில இடங்களில் 

கார் ஓடியோ செட் திருட்டு , வங்கி தானியங்கி இயந்திரங்களில்  திருட்டு, எரிபொருள் நிலையங்களில் திருட்டு, சீட்டு காசு திருட்டு , கடன் அட்டை திருட்டு, வீடுகளில் நகை திருட்டு, கள்ள அட்டையில் உயர் ரக எலெக்ரோனிக் சாதனங்கள் கொள்வனவு திருட்டு,

கள்ள போன் காட் திருட்டு .நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்களில் திருட்டு, போலி விபத்து இழப்பீடுகள் கோரல் திருட்டு..... வேலை பார்க்கும் பண்ணை, உணவங்களின் களஞ்சியஙளில் திருட்டு..சிகரெட், உயர் ரக மது போத்தல்கள் திருட்டு.. ஆரம்ப காலத்தில் பாரீஸ் போன்ற நாடுகளில் போதை பொருள் விற்பனையிலும் கொடிகட்டி பறந்தவர்கல் தமிழர்கள் என்று ஒரு கதை உண்டு.

இப்படி கனடா மற்றும் ஐரோப்பா உட்பட்ட புலம் பெயர் நாடுகளில் வகை வகையாக திருட்டில் உலக இனங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர்கள் ஈழ தமிழர்கள் என்பதை பெருமையோடு நினைத்து பார்க்க வேண்டிய தருணமிது.

நாம் எமது தற்பெருமை பேசாத ஒரு இனம் என்பதால் எம் சாதனைகள் கடலுக்குள் அடிச்ச ஒண்ணுக்கு போல் ஊருக்கு தெரியாமல் மறைஞ்சு போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

எனது இரண்டு ஹைபிரிட் காருக்கும் சென்ஸரோடு சேர்த்து வெட்டினவங்கள். முதலாவது ஜோன் லூயிஸ் கார்ப் பார்க்கில். கிறிஸ்மஸ் பிரசண்ட் வாங்கப்போன 15 நிமிஷத்தில நடந்தது.

அடுத்தது இன்னும் மோசமானது.. கிறிஸ்மஸுக்கு முதல் ஒரு வெள்ளி பின்னேரம் வீட்டு டிரைவேயில் காரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்து சில நிமிடங்களில் வெளியே வேஸ்ற்பின்னை யாரோ மூவ் பண்ணுவது மாதிரி இருக்க, வெளியே போய்ப் பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை. காரையெல்லாம் சுத்திப் பார்த்துவிட்டு ரிலாக்ஸாக சனிக்கிழமை வெளியே போகாமல் இருந்துவிட்டு ஞாயிறு காரை ஸ்ரார்ட் பண்ணத்தான் கற்றலிக் கொன்வேட்டரை வெட்டினது தெரியும்.🤬

இரண்டுக்கும் சேர்த்து 1200 பவுண்ட்ஸ் தண்டம். இவைகளுக்கு சில வருடங்களுக்கு முதல் வீட்டில் பின்பக்கமாக ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகள்,  வேலை லாப்டப், பல ஃபோன்கள், எனது Gucci சன்கிளாஸ்,  Oxford Street Selfridges இல் வாங்கிய தொப்பி (அது ஒன்று மட்டும்தான் அங்கு வாங்கியது!) என்று கொள்ளைபோனது. பக்கத்து வீட்டுக்காரி கிழக்கு ஐரோப்பியன் வெளியேறியதைப் பார்த்தும் இருந்தார்! இவையும் நான் Brexit க்கு ஆதரவாக வாக்களிக்கக் காரணம்.

அடபாவமே. இப்படி பறிகொடுத்தா கடுப்பு வரத்தான் செய்யும் ஜி, ஆனால் அதுக்காக ஒரு நாட்டவரையே குற்றம் சொல்வது, அதனடிப்படையில் வாக்களிப்பது யூதருக்கு ஹிட்லர், எங்களுக்கு இனவாதிகள் செய்த மாரி வேலைதானே? Racial stereotyping.

நல்ல வேளையாக நான் ஹைபிரிட் இதுவரை வாங்கவில்லை.

எனக்கு மைக்கள் சூமாக்கர் எண்ட நினைப்பு 🤣. அதனால் எப்பவும் பதிவான கார்தான், அதனாலோ என்னமோ இன்னும் கைவைக்கவில்லை.

கூச்சி சன்கிளாசில நீங்கள் அன்பே வா எம் ஜி ஆர் போல இருந்திருப்பியள் என்ன🤣.

 

Link to comment
Share on other sites

நல்ல காலம்  எமக்கு இப்படியான அனுபவங்கள் இல்லை. நண்பர்கள் மட்டத்திலும் இப்படியெல்லாம் கேள்விப்படவில்லை. அதற்காக அறவே இல்லை என்று கூறமுடியாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.