Jump to content

லண்டன் லூசியம் பகுதியில் பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில் திருட்டு! வெளியானது வீடியோ காட்சிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் லூசியம் பகுதியில் வசித்து வரும் பிரபல தமிழ் வர்த்தகரின் காரொன்று அண்மையில் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் தனது காரினை விற்பனை செய்வதற்காக இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்வையிட்ட மூவர் காரினை வாங்குவதாக கூறி குறித்த வர்த்தகரை நாடியுள்ளனர்.

குறித்த காரினை பார்வையிடுவதற்காக வர்த்தகரின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் காரினை பார்வையிட்டப் பின்னர் அதன் மேலதிக இணைப்புச் சாவியை எவரும் காணாத சமயம் லாவகமாக எடுத்துள்ளனர்.

அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த பிறிதொரு சாவியை வைத்தும் சென்றுள்ள போதும் இதனை யாரும் அறிந்திருக்கவும் இல்லை.

அதன் பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் அங்கு வருகை தந்த சந்தேகநபர்கள் மேலதிக இணைப்பு சாவியை வைத்து காரை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது சிசிடிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் குறித்த காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.

 

இந்த சம்பவம் வாகன விற்பனைக்காக இணையத்தளங்களில் விளம்பரங்கள் செய்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் திருடப்படுகின்ற வாகனங்களுக்கு பதிலாக காப்புறுதி நிறுவனங்களால் புதிய வாகனங்கள் வழங்கப்படுகின்றதால் வாகனங்களுக்கான அடுத்த வருடத்திற்கான காப்புறுதி தொகை அதிகரிக்கிறது.

இதனால் வாகனங்களை பறிகொடுப்பவர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் இவ்வாறான வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை போட்ட பின்னர் அதனை பார்த்து கொள்வனவு செய்வதற்காக வருபவர்களில் ஒரு சிலர் வாகனத்தின் இரண்டாவது இணைப்பு சாவியையும் (Spare Key), காரினுடைய புத்தகத்தையும் மிகவும் லாவகமாக திருடிச் செல்கின்றனர். இந்த இடத்தில் தான் வாகனத்தின் உரிமையாளர்கள் இராண்டாவது இணைப்பு சாவி மற்றும் வாகன புத்தகம் ஆகிய இரு விடயங்களிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த சம்பவம் பல்வேறு விடயங்களை எமக்கு பல்வேறு விடயங்களை எமக்கு பாடமாக கற்றுத் தந்திருக்கிறது. இவ்வாறு விற்பனைக்கான விளம்பரங்கள் செய்பவர்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

குறிப்பாக புலம்பெயர்ந்து பிற தேசங்களில் வாழும் மக்கள் அதீத கஸ்டங்களுக்கு மத்தியில் உழைத்து தங்களுக்கான பொருட்களை ஈட்டும்போது அவை தொடர்பான அதீத கவனம் தேவை என்பது வலியுறுத்தப்படுகின்றது.

எப்பொழுதும் புலம்பெயர் நாடுகளிலன் காப்புறுதிகள் வைத்திருக்கிறோம் என்பதற்காக திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்களை கவனயீனமாக எடுக்காமலம் இவ்வாறான விடயங்களில் அவதானமாக இருத்தல் கட்டாயமாகும். 

https://tamilwin.com/article/car-theft-cctv-footage-1634728837

Link to comment
Share on other sites

மேலதிக சாவியை இவர்கள் ஏன் காருக்குள் வைத்து இருந்தனர்? அல்லது ஏன் இவர்களுக்கு அதை காட்டினர்?

ஆனாலும் லண்டன் கார் திருடர்கள் கொஞ்சம் பழைய முறைகளை பயன்படுத்துகின்றனர். இங்கு கனடாவில் வாகனக் களவு உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடக்கின்றது. வீட்டுக்குள் இருக்கும் வாகனங்களின் key fobs இல் இருந்து வரும் சிக்னல்களை அவர்கள் கொண்டுவரும் Receiver களின் மூல பெற்று அதன் மூலம் வாகன கதவுகளை திறந்தும் ஸ்ரார்ட் பண்ணியும் வாகனத்தை திருடுகின்றனர். அல்லது வாகனத்தில் தெளிவாக தெரியும் VIN number இனை பெற்று, தாம் கொண்டு வந்திருக்கும் மென்பொருள் மூலம் அதை குளோனிங் (Cloning) செய்து வாகனத்தை இயக்கி திருடுகின்றனர்.

வாகனம் களவாகி சில மணி நேரங்களில் துண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப தயார் செய்யப்படுகின்றது இங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

மேலதிக சாவியை இவர்கள் ஏன் காருக்குள் வைத்து இருந்தனர்? அல்லது ஏன் இவர்களுக்கு அதை காட்டினர்?

ஆனாலும் லண்டன் கார் திருடர்கள் கொஞ்சம் பழைய முறைகளை பயன்படுத்துகின்றனர். இங்கு கனடாவில் வாகனக் களவு உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடக்கின்றது. வீட்டுக்குள் இருக்கும் வாகனங்களின் key fobs இல் இருந்து வரும் சிக்னல்களை அவர்கள் கொண்டுவரும் Receiver களின் மூல பெற்று அதன் மூலம் வாகன கதவுகளை திறந்தும் ஸ்ரார்ட் பண்ணியும் வாகனத்தை திருடுகின்றனர். அல்லது வாகனத்தில் தெளிவாக தெரியும் VIN number இனை பெற்று, தாம் கொண்டு வந்திருக்கும் மென்பொருள் மூலம் அதை குளோனிங் (Cloning) செய்து வாகனத்தை இயக்கி திருடுகின்றனர்.

வாகனம் களவாகி சில மணி நேரங்களில் துண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப தயார் செய்யப்படுகின்றது இங்கு.

இந்த 2 மாதத்தில் மட்டும் எனது 3 தமிழ் நண்பர்களின் புத்தம் புதிய லெக்சஸ் RX350  வாகனங்கள், நீங்கள் மேலே சொன்னது போலவே அபேஸ் செய்யப்பட்டன.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

வீடியோவில் இருப்பவர்கள் கிழக்கு ஐரோப்பியர்கள் பிரிவுக்கு முன் ஐந்து வருடங்கள் இங்கிலாந்து வந்தவர்கள் இங்கேயே தங்கிவிட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

அப்போ லண்டனகரார் களவு எடுப்பதில்லையா? மேலும் யூரோவில் இணைய முதல் லண்டனில் களவு இடம்பெறவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

அப்போ லண்டனகரார் களவு எடுப்பதில்லையா? மேலும் யூரோவில் இணைய முதல் லண்டனில் களவு இடம்பெறவில்லையா?

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

வெள்ளையா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான் சாமியர்.. அதுமாதிரிதான் பிரிட்டிஸ்காரர் களவெடுக்கமாட்டான்.. களவு எல்லாம் உந்த யூரோப்பிய ஒன்றியத்தால வந்தது..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

வெள்ளைக்காரனுக்கு... வெள்ளை அடிக்கும் வேலை நடக்கும் போது...
ப்ளீஸ்.... நீங்கள், குழப்பாதீர்கள்.  🤣

6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெள்ளையா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான் சாமியர்.. அதுமாதிரிதான் பிரிட்டிஸ்காரர் களவெடுக்கமாட்டான்.. களவு எல்லாம் உந்த யூரோப்பிய ஒன்றியத்தால வந்தது..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமெண்டா என்ர காரை எடுக்கட்டும் பார்ப்பம்.திறப்பை கதவிலேயே விடுறன் ஒரு பய தொடுறானா பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

ஏலுமெண்டா என்ர காரை எடுக்கட்டும் பார்ப்பம்.திறப்பை கதவிலேயே விடுறன் ஒரு பய தொடுறானா பார்ப்பம்.

இப்ப என்ன......லண்டன்லை கள்ளர் இல்லை எண்டு சொல்ல வாறியள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் ரெஸ்லா.. பெராரி.. லம்பகினியை கூட ரோட்டில விட்டிட்டு.. கம்முன்னு போறான். இது ஒரு டப்பாக்காருக்கு...??! பெரிய பில்டப்பு.

நம்மாக்களே லண்டனில திருடி.. பாகம் பாகமாக்கி.. விக்கிறாங்கள்.. இதில... கள்ளனை வெளில வேற தேடுறாய்ங்களாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இப்ப என்ன......லண்டன்லை கள்ளர் இல்லை எண்டு சொல்ல வாறியள் 🤣

என்ர பழைய காரை யாலும் தொடமாட்டார்கள்.பளபளப்பாய் கார் வைச்சு மினுக்கினால் கைவைக்காமல் விடுவாங்களா. என்ர காரைத்தூக்கினால் காசைக் கட்டித்தான் நெரிக்க வேண்டும்'.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2021 at 19:19, குமாரசாமி said:

பிரெக்சிட்டுக்கு பிறகும் லண்டன்லை கார் களவு போகுது எண்டால்........? 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

சொன்னால் நம்பமாட்டியள் உந்த கிழக்கு ஐரோப்பா காரரை 2000 க்கு பிறகுதான் உள்ள விட்டது - அதுக்கு முதல் £50 பவுண் கட்டு கட்டா ரோட்டில கிடந்தாலும் சனம் எடுத்து கொண்டு போய் பொலிசில கொடுக்கும்🤣.

இப்பவும் எங்கட சிறிலங்கன் சனம்? மேலே கையால தாங்கள் இன்னொரு £50 தாளை சேர்த்துதான் பொலிசில கொடுப்பது வழமை🤣.

On 21/10/2021 at 22:39, Kandiah57 said:

அப்போ லண்டனகரார் களவு எடுப்பதில்லையா? மேலும் யூரோவில் இணைய முதல் லண்டனில் களவு இடம்பெறவில்லையா?

 

On 21/10/2021 at 22:47, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ கந்தையர்! 
லண்டன்காரர் சேரக்கு முதலும் களவு இருந்தது
லண்டன்காரர் சேர்ந்த பிறகும் களவு இருந்தது
லண்டன்காரர் பிரிஞ்ச பிறகும் களவு இருக்குது
ஆனால் லண்டன்காரர் களவெடுக்கிறேல்லை....இதுதான் மெயின் பொயின்ற் 😎

ஏதாவது விளங்கிச்சா😉

 

16 minutes ago, புலவர் said:

என்ர பழைய காரை யாலும் தொடமாட்டார்கள்.பளபளப்பாய் கார் வைச்சு மினுக்கினால் கைவைக்காமல் விடுவாங்களா. என்ர காரைத்தூக்கினால் காசைக் கட்டித்தான் நெரிக்க வேண்டும்'.

பழசெண்டாலும் கட்டலிக் கொன்வேட்டர் இருந்தா கழட்டி போடுவாங்கள். 

எனக்கு ஒரு உண்மையை யாரும் விளங்க படுத்த முடியுமே ?

பிரபலம் என்றால் எல்லாருக்கும் தெரிந்த என்று அர்த்தம்? உந்த வர்த்தகர் ஏப்படி “பிரபலம்” என்ற வரையறைக்குள் வாறார்? 

ரிச்சர் பிரான்சன், அலன் சுகர் அட்லீஸ்ட் லைக்கா ஓனர் பிரபலம் எண்டால் ஓகே, புண்ணாக்கு யாவாரி எல்லாம் பிரபலம் எண்டால் என்ன கதை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சொன்னால் நம்பமாட்டியள் உந்த கிழக்கு ஐரோப்பா காரரை 2000 க்கு பிறகுதான் உள்ள விட்டது - அதுக்கு முதல் £50 பவுண் கட்டு கட்டா ரோட்டில கிடந்தாலும் சனம் எடுத்து கொண்டு போய் பொலிசில கொடுக்கும்🤣.

இப்பவும் எங்கட சிறிலங்கன் சனம்? மேலே கையால தாங்கள் இன்னொரு £50 தாளை சேர்த்துதான் பொலிசில கொடுப்பது வழமை🤣.

மட்டை போட்டு இழுக்கிற பணம் எல்லாம் களவுக்குள் அடங்காதா?அது கை ரெக்னோலொஜிக்குள் அடங்குமாம்.இந்தியர்களும் தமிழர்களும் கள்ள மட்டை பேட்டு விட்டு(எல்லோரும் அல்ல)ஐரோப்பியர்களை கள்ளர்என்பது விந்தை. அவர்களில் பலர் கடின உழைப்பாளிகள்.ஒரு சிலர் களவெடுப்பதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் கள்ளர் என்பது ஏற்புடையதாகுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

மட்டை போட்டு இழுக்கிற பணம் எல்லாம் களவுக்குள் அடங்காதா?அது கை ரெக்னோலொஜிக்குள் அடங்குமாம்.இந்தியர்களும் தமிழர்களும் கள்ள மட்டை பேட்டு விட்டு(எல்லோரும் அல்ல)ஐரோப்பியர்களை கள்ளர்என்பது விந்தை. அவர்களில் பலர் கடின உழைப்பாளிகள்.ஒரு சிலர் களவெடுப்பதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் கள்ளர் என்பது ஏற்புடையதாகுமா?

👆🏼இதை சொன்னால் - கோஷான் தமிழர்களை இளக்காரமாக எழுதுகிறார் என்று பிராது வாசிக்கிறாங்க எசமான்🤣.

21 minutes ago, புலவர் said:

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 

வடிவா தெரியேல்லா ஆனால் 95 க்கு பிறகு வந்த அநேக காரில் இருக்கு எண்டு நினைகிறன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

👆🏼இதை சொன்னால் - கோஷான் தமிழர்களை இளக்காரமாக எழுதுகிறார் என்று பிராது வாசிக்கிறாங்க எசமான்🤣.

 

 

ஆம் மிக உண்மை. தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்துவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பழசெண்டாலும் கட்டலிக் கொன்வேட்டர் இருந்தா கழட்டி போடுவாங்கள். 

 

1 hour ago, புலவர் said:

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 

இங்கும் பரவலாக 2010 க்கு உள்பட்ட கொண்டா வாகனத்தில் அறுத்தெடுக்கிறார்கள்.

அதற்குள் கூடுதலான பிளாட்டினம் இருப்பதாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

கட்டலிக் கொன்வேட்டர் கழட்டிறதுக்கு 3 நிமிடம் போதுமாம்.அது மின்சாரத்தில் ஓடும் அல்லது கைபிறிட் கார்களுக்களுக்குத்தான் அதைக்கழட்டுவார்கள். நம்ம கார் நோ சான்ஸ்.
 

எனது இரண்டு ஹைபிரிட் காருக்கும் சென்ஸரோடு சேர்த்து வெட்டினவங்கள். முதலாவது ஜோன் லூயிஸ் கார்ப் பார்க்கில். கிறிஸ்மஸ் பிரசண்ட் வாங்கப்போன 15 நிமிஷத்தில நடந்தது.

அடுத்தது இன்னும் மோசமானது.. கிறிஸ்மஸுக்கு முதல் ஒரு வெள்ளி பின்னேரம் வீட்டு டிரைவேயில் காரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்து சில நிமிடங்களில் வெளியே வேஸ்ற்பின்னை யாரோ மூவ் பண்ணுவது மாதிரி இருக்க, வெளியே போய்ப் பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை. காரையெல்லாம் சுத்திப் பார்த்துவிட்டு ரிலாக்ஸாக சனிக்கிழமை வெளியே போகாமல் இருந்துவிட்டு ஞாயிறு காரை ஸ்ரார்ட் பண்ணத்தான் கற்றலிக் கொன்வேட்டரை வெட்டினது தெரியும்.🤬

இரண்டுக்கும் சேர்த்து 1200 பவுண்ட்ஸ் தண்டம். இவைகளுக்கு சில வருடங்களுக்கு முதல் வீட்டில் பின்பக்கமாக ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகள்,  வேலை லாப்டப், பல ஃபோன்கள், எனது Gucci சன்கிளாஸ்,  Oxford Street Selfridges இல் வாங்கிய தொப்பி (அது ஒன்று மட்டும்தான் அங்கு வாங்கியது!) என்று கொள்ளைபோனது. பக்கத்து வீட்டுக்காரி கிழக்கு ஐரோப்பியன் வெளியேறியதைப் பார்த்தும் இருந்தார்! இவையும் நான் Brexit க்கு ஆதரவாக வாக்களிக்கக் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சொன்னால் நம்பமாட்டியள் உந்த கிழக்கு ஐரோப்பா காரரை 2000 க்கு பிறகுதான் உள்ள விட்டது - அதுக்கு முதல் £50 பவுண் கட்டு கட்டா ரோட்டில கிடந்தாலும் சனம் எடுத்து கொண்டு போய் பொலிசில கொடுக்கும்🤣.

இப்பவும் எங்கட சிறிலங்கன் சனம்? மேலே கையால தாங்கள் இன்னொரு £50 தாளை சேர்த்துதான் பொலிசில கொடுப்பது வழமை🤣.

Latest No Comment GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்கள் முன்னர்வரை....ஏன் இன்றும் கூட சில இடங்களில் 

கார் ஓடியோ செட் திருட்டு , வங்கி தானியங்கி இயந்திரங்களில்  திருட்டு, எரிபொருள் நிலையங்களில் திருட்டு, சீட்டு காசு திருட்டு , கடன் அட்டை திருட்டு, வீடுகளில் நகை திருட்டு, கள்ள அட்டையில் உயர் ரக எலெக்ரோனிக் சாதனங்கள் கொள்வனவு திருட்டு,

கள்ள போன் காட் திருட்டு .நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்களில் திருட்டு, போலி விபத்து இழப்பீடுகள் கோரல் திருட்டு..... வேலை பார்க்கும் பண்ணை, உணவங்களின் களஞ்சியஙளில் திருட்டு..சிகரெட், உயர் ரக மது போத்தல்கள் திருட்டு.. ஆரம்ப காலத்தில் பாரீஸ் போன்ற நாடுகளில் போதை பொருள் விற்பனையிலும் கொடிகட்டி பறந்தவர்கல் தமிழர்கள் என்று ஒரு கதை உண்டு.

இப்படி கனடா மற்றும் ஐரோப்பா உட்பட்ட புலம் பெயர் நாடுகளில் வகை வகையாக திருட்டில் உலக இனங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர்கள் ஈழ தமிழர்கள் என்பதை பெருமையோடு நினைத்து பார்க்க வேண்டிய தருணமிது.

நாம் எமது தற்பெருமை பேசாத ஒரு இனம் என்பதால் எம் சாதனைகள் கடலுக்குள் அடிச்ச ஒண்ணுக்கு போல் ஊருக்கு தெரியாமல் மறைஞ்சு போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

எனது இரண்டு ஹைபிரிட் காருக்கும் சென்ஸரோடு சேர்த்து வெட்டினவங்கள். முதலாவது ஜோன் லூயிஸ் கார்ப் பார்க்கில். கிறிஸ்மஸ் பிரசண்ட் வாங்கப்போன 15 நிமிஷத்தில நடந்தது.

அடுத்தது இன்னும் மோசமானது.. கிறிஸ்மஸுக்கு முதல் ஒரு வெள்ளி பின்னேரம் வீட்டு டிரைவேயில் காரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்து சில நிமிடங்களில் வெளியே வேஸ்ற்பின்னை யாரோ மூவ் பண்ணுவது மாதிரி இருக்க, வெளியே போய்ப் பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை. காரையெல்லாம் சுத்திப் பார்த்துவிட்டு ரிலாக்ஸாக சனிக்கிழமை வெளியே போகாமல் இருந்துவிட்டு ஞாயிறு காரை ஸ்ரார்ட் பண்ணத்தான் கற்றலிக் கொன்வேட்டரை வெட்டினது தெரியும்.🤬

இரண்டுக்கும் சேர்த்து 1200 பவுண்ட்ஸ் தண்டம். இவைகளுக்கு சில வருடங்களுக்கு முதல் வீட்டில் பின்பக்கமாக ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகள்,  வேலை லாப்டப், பல ஃபோன்கள், எனது Gucci சன்கிளாஸ்,  Oxford Street Selfridges இல் வாங்கிய தொப்பி (அது ஒன்று மட்டும்தான் அங்கு வாங்கியது!) என்று கொள்ளைபோனது. பக்கத்து வீட்டுக்காரி கிழக்கு ஐரோப்பியன் வெளியேறியதைப் பார்த்தும் இருந்தார்! இவையும் நான் Brexit க்கு ஆதரவாக வாக்களிக்கக் காரணம்.

அடபாவமே. இப்படி பறிகொடுத்தா கடுப்பு வரத்தான் செய்யும் ஜி, ஆனால் அதுக்காக ஒரு நாட்டவரையே குற்றம் சொல்வது, அதனடிப்படையில் வாக்களிப்பது யூதருக்கு ஹிட்லர், எங்களுக்கு இனவாதிகள் செய்த மாரி வேலைதானே? Racial stereotyping.

நல்ல வேளையாக நான் ஹைபிரிட் இதுவரை வாங்கவில்லை.

எனக்கு மைக்கள் சூமாக்கர் எண்ட நினைப்பு 🤣. அதனால் எப்பவும் பதிவான கார்தான், அதனாலோ என்னமோ இன்னும் கைவைக்கவில்லை.

கூச்சி சன்கிளாசில நீங்கள் அன்பே வா எம் ஜி ஆர் போல இருந்திருப்பியள் என்ன🤣.

 

Link to comment
Share on other sites

நல்ல காலம்  எமக்கு இப்படியான அனுபவங்கள் இல்லை. நண்பர்கள் மட்டத்திலும் இப்படியெல்லாம் கேள்விப்படவில்லை. அதற்காக அறவே இல்லை என்று கூறமுடியாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.