Jump to content

இலங்கை அரசு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது. கவிஞர் காசி ஆனந்தன் சாடல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது. கவிஞர் காசி ஆனந்தன் சாடல்! .

இந்திய அரசுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள நட்புறவைச் சிதைத்தழிக்கும் நோக்கோடு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது சிறிலங்கா அரசு என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார்.

மீனுக்கு அல்ல இலங்கையில் வாழும் மீனவர்களுக்குத் தூண்டில் போடப்படுகிறது. ஏன் அவர்கள் தூண்டில் போடுகிறார்கள் என்பதை மறந்து சிங்கள சிறிலங்கா அரசுக்குத் துணை போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,received_433433928123304-214x300.jpeg?6b

received_268816515141156-213x300.jpeg?6b

 

https://www.meenagam.com/இலங்கை-அரசு-தமிழ்நாடு-மீ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு கவிஞரே!

ஒரு சூழ்ச்சியும் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புங்கையூரன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு கவிஞரே!

ஒரு சூழ்ச்சியும் இல்லை!

 

மனுசரை கொலை செய்யலாம்  ஆனால் மாடுகளை அறுக்க கூடாது

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

மனுசரை கொலை செய்யலாம்  ஆனால் மாடுகளை அறுக்க கூடாது

புத்தனுக்கு கெளதம புத்தரைத் தெரியும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் சிங்கள புத்த பிக்குகளைத் தெரியாதென்பது எனக்கும் தெரியாது. 😲 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு கவிஞரே!

ஒரு சூழ்ச்சியும் இல்லை!

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

Link to comment
Share on other sites

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

பிறகு சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்க வேண்டி வருமே?

Link to comment
Share on other sites

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

அடுத்தவன் வளவா....?வரலாறு அப்படிச் சொல்லவில்லையே....?? 

Link to comment
Share on other sites

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அடுத்தவன் வளவுக்குள் அத்துமீறுவது களவு அதை செய்யாதீர்கள் என்று தமிழக மீனவரிடம் வேண்டுகோள் விட கண்டிக்க முடியாத ஒரு கவிஞர் 🤦‍♂️

யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே - கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசி ஆனந்தன் அவர்கள் தானாகவே இலங்கை திரும்ப முடிவெடுத்தாலும் சென்னை பரங்கிமலயிலுள்ள தமிழக காவல்துறையின் வெளிநாட்டுப்பிரிவில் சட்டவிரோதக் குடியேறி எனும் பட்டப்பெயருடன் லோக்கல் போலீஸ் ஸ்ரேசன் துண்டையும் காவிக்கொண்டு கால்கடுக்க நிற்கவேண்டும் தவிர சென்னை சாஸ்திரி பவனிலும் காயவேண்டும் மத்திய புலனாய்வுத்துறையிடம் நோ ஒப்ஜெக்சன் சான்றிதழ் வாங்குவதற்கு அவன் சொல்லுவான் நீ வீட்டுக்குப் போ அங்க நான் வந்து விசாரிக்கிறன் எனச்சொல்லிப்போட்டு மாதக்கணக்கில் வரமாட்டான் ஆனால் கியூ பிராஞ்ச் வரும் விசாரிக்கும்.

பில்ரர் வில்ஸ் சிகரட்டும் கமலா ஆரஞ்சும் வாங்க்கி கொடுக்கவேணும் சிலவேளை பர்மா பயாரில் விற்கும் வெளிநாட்டுச்சரக்கும் கேட்பாங்கள் அதையும் அழவேண்டும்.

அப்ப காசி அண்ணர் சொல்லுவார் எல்லாம் சட்டப்படிதான் நடக்குது என ஆனால் கோமணத்துண்டு போல ஒரு கடல் அதில சிங்களவன் மறிச்சுக்கட்டினது போக எஞ்சியதில் மீன்பிடிக்க வேணும் அதுக்குள்ள சீனாக்காரன் அட்டை வளர்க்கிறான். வயித்தில அடிச்சால் பறுவாயில்லை கடலையே இரட்டை மடிப்பு வலைபோட்டுப் பவளப்பாறைகளை அழிக்கிறான் தவிர எமது மீனவர்களது வலைகளை அழிக்கிறான் அடியும் போடுறான் 

இவர் மறுகன்னத்தைக் காட்டச்சொல்லுகிறார்.

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

இவர் மறுகன்னத்தைக் காட்டச்சொல்லுகிறார்.

மறுகன்னம் வேறு எதுக்கு இருக்கு - உச்சா வாங்க என்று நினைத்தீர்களா? தருமஅடி கிடைக்குமே? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே - கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது.

சிலருக்கு சௌக்கியமடான இடத்தில் தாங்கள் இருப்பதால் களவு, கொள்ளைகளினால் பாதிக்கபடுபவர்களின் வேதனைகள் விளங்குவது இல்லை. அவர்களது கனவு உலகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.