Jump to content

கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படும்-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படும்-பா.உதயன் 

அதிகாரம், அடக்குமுறை, நாடுகளுக்கு இடையிலான அதிகார ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார சுயநலன்களுக்கு இடையிலான போட்டிகள் இவை தவிர இயற்கை அழிவுகளாலும் நோய் நொடிகளாலும் இந்த உலகு பல அழிவுகளை சந்தித்து வருகின்றது. பல கோடி மக்கள் இதனால் இறந்திருக்கிறார்கள் இன்னும் இறந்து கொண்டே இருக்கிறார்கள். மனிதத் தவறுகளினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் இந்த உலகு மிகக் கொடிய மனித அவலங்களை சந்தித்து வருகின்றது.

 தர்மமும் நீதியும் சார்ந்து இந்த உலகம் சுழலுவதில்லை. மனித அவலம் மனிதக் கொடுமைகள் நடந்த பொழுதெல்லாம் பலர் கண்ணை மூடி இறந்தவர்கள் போல் தங்கள் சுய நலன் கருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள் பல ஜனநாயகத்தின் காவலர்கள். எங்கு தான் என்ன மனித அழிவுகளும் மானிடத் துயரம் நடந்தாலும் மானிடம் கொண்ட மக்கள் இரங்காமல் இருக்க முடியாது. இன்று உலகையும் அதன் மனித வாழ்வையும் பெரும் அழிவையும் அவலத்தையும் மனித இறப்புக்களையும் உண்டாக்கி வரும் கொரோனா என்ற பெரும் தொற்றால் மனிதனின் அவலக் குரல் எங்கும் கேக்கிறது. 

இந்த அடிப்படையிலே ஸ்ரீ லங்காவையும் இந்த கொடிய கோவிட் வாட்டி வதைக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கிறது தேசம். இந்த நோய் மாத்திரம் இன்றி அந்த நாட்டின் அரசியல் ஸ்திரத்தின்மை பொருளாதார நிலைமை என்பன மேலும் பல சுமையை இந்த மக்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். வறுமைக்கும்,சமூகச் சீர் கேடுகளுக்கும், இன ஐக்கியமின்மைக்கும், பெண்கள் சமத்துவமின்மை, மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும், ஊழலும் லஞ்சமும் ஆனதொரு ஆட்சி உருவாகுவதற்கும், வன்முறையும் வன்மவும் மிக்கதொரு நீதி நியாயம் இல்லாத சமுதாயம் உருவாக முழுக்க முழுக்க  காரணமானவர்கள் யார்? சிறி லங்காவின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் யார் How did Sri Lanka become bankrupt? 

இராஜதந்திரங்களில் வல்லவர்கள் என்று பலர் புகழும் பொழுது ஏன் இந்தத் தேசத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள். இந்த சிறிய தீவை எப்படி பொருளாதாரா சுரண்டல் காரர்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு இராஜதந்திரமும் அறிவும் ஆற்றலும் கொண்ட சிங்கள தலைவர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து மாற்றங்களோடு கூடிய எல்லா மக்களும் சுதந்திரத்தோடும் கௌரவத்தோடும் கூடிய பொருளாதார வளச்சி கொண்ட தேசமாக ஏன் இந்த சிறிய தேசத்தை மாற்றாமல் இன்றும் பேரினவாதம் அளித்துக்கொண்ட இருக்கிறதே இந்த சிறிய தீவை. இன்னும் ஆழமாக சிந்திக்கும் அறிவை இச் சிறிய தீவில் எம் தலைவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லையா? எத்தனை துயர வரலாறுகளை இந்த தீவு கடந்தும் கடக்காமல் செல்கிறது. பல இனங்களும் வாழக் கூடிய தேசமாக இன்னும் ஏன் ஒருவரின் மனங்களை ஒருவர் வெல்ல முடியாமல் இருக்கிறது. படித்த குழாம்(educated elites) என்று இருந்த தலைவர்கள் பிரிவினையையும் வெறுப்புகளையும் ஏன் சம்பாதித்தார்கள்? எங்கிருந்து இந்த இராஜதந்திரங்களை கற்றுக்கொண்டார்கள்.

இந்த நாட்டை ஆட்சி செய்த தலைமைகளும் அந்த நாட்டின் புத்த மதத்தை பிழையான பாதையில் கொண்டு சென்று இனங்களுக்கு இடையில் பகைமையை உண்டாக்கி  இந்த மக்களை சிந்திக்க விடாமல் தவறான பாதையில் கொண்டு போய் இனவாதம் என்றதொரு பெரும் பூதத்தை வளர்த்து விட்ட பெளத்த துறவிகளுமே காரணம். நீதி, நிர்வாகம், சட்டம் இவை அனைத்து துறைகளும் இன்று சுயமாக இயங்கவில்லை. separation of power என்று சொல்லக் கூடிய அதிகாரப் பிரிவுகள் இங்கு சுயமாக இயங்கவில்லை. எல்லாவற்றிலும் அரசியலும் அதிகார ஆதிக்கமுமே தலையீடு செய்கின்றன. ஜனாதிபதியின் அதி கூடிய அதிகாரத்தின் மூலம் அவரே எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார்.

இன்று ஈழத் தமிழர் நிலைமை என்றும் இல்லாத அளவுக்கு பின் நோக்கி போய்க்கொண்டிருகிறது ஒரு காலம் ஒற்றுமையோடு பயணித்த இனம் இன்று ஒற்றுமை குலைந்து ஒரு வித இலக்கும் இன்றி நிலத்திலும் புலத்திலும் மாறி மாறி ஒருவரை ஒருவர் சண்டை போட்டு எதிரிக்கு சாதகமான நிலையை உண்டு பண்ணி பட்டு வேட்டி கட்டும் கனவோடு இருந்து இன்று நாம் கட்டிய கோவணம் களவாடப் பட்ட நிலையில் உள்ளோம். எதிர் காலம் இனி சரியான தலைமையின் கீழ் ஒன்று பட்டு பயணிக்காவிடில் மீண்டும் இருள் சூழ்ந்த காலமாகவே ஈழத் தமிழர் காலம் அமையலாம். புலம் பெயர்ந்த  தமிழர் போல் ஏதிலிகளாக அகதி வாழ்வாக எந்தத் தேசமும் இல்லாதவனாக இன்னும் இந்த இனம் அலையுமோ.

இன்று கொரோனாவின் திரிபுபடுத்தப்பட்ட (Mutation ) அலை நாடு முழுவதும் பரவி இதை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாளாந்தம் பெருமளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். சுகாதார வசதி இன்மை பொருளாதாரப் பிரச்சினை கொரோனா தடுப்பூசிக்காக இன்னும் ஒரு நாட்டை நம்பி இருத்தல் இப்படி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படியே நிலைமை தொடர்ந்தால் நாடு பெரும் பொருளாதர பிரச்சினையை எதிர் நோக்க வேண்டிய நிலைமை வரும். இன்று அன்றன்றாடு கூலி வேலை செய்து பிழைக்கும் மக்கள் ஒரு வேளை உணவுக்கே கஸ்ரப்படும் நிலைமையை பார்க்கிறோம்.

 ஒரு காலம் தன்னிறைவுப் பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்து வந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர காரணமானவர்கள் இவர்கள் தான். ஸ்ரீ லங்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இன்று பல லட்ஷம் கடனோடே பிறக்கின்றனர். வளர்ச்சி அடைந்து வரும் சில வறிய நாடுகள் கூட கொரோனாவின் தாக்கம் இருந்தும் ஓரளவுக்கு பொருளாதாரத்தில் தாக்குப் பிடிக்கின்றனர். ஆனால் இலங்கையில் கொரோனா மட்டும் இப்போ இருக்கும் நிலைக்கு காரணம் என கூற முடியாது சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து இது பெரும் பொருளாதார முடக்கத்தை உண்டு பண்ணி இருந்தாலும் இவர்களது பிழையான பொருளாதார கொள்கைகள் மேலும் நாட்டை ஒரு பெரும் பொருளாதார அவசரகாலா (Economic emergency ) நிலைமைக்கு தள்ள வைத்திருக்கிறது.

இனங்களுக்கிடையிலானா ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தும் இன்னும் கூட பொருளாதார அபிவிருத்தியோ இனப்பிரச்சினைக்கான தீர்வோ இன்னும் ஏற்படவில்லை. இது தீர்க்கப்பட்டிருந்தால் இன்று புலம் பெயர் தமிழ் மக்கள் கூட முதலீடு அபிவிருத்தி என்று செய்ய முன் வந்திருப்பார்கள். அமைதி சமாதானம் எதுகும் இன்றி கடன் சுமைகளை காவிக் கொண்டு இன்றும் வெளி நாட்டுக் கடனுக்காக எப்போதும் கை ஏந்தும் நிலையில் உள்ளது. போலியான வாக்குறுதிகளை சர்வதேசத்துக்கும் தம் மக்களுக்கும் வழங்காமல் இனியும் இந்த சிங்கள ஆட்சியாளர்களும் இந்த மக்களும் தம் நாடு பற்றி சிந்திப்பார்களா. இனங்களுக்கிடையே சமாதானத்தை உண்டு பண்ணி ஐக்கியத்தை வளர்ப்பார்களா ஒரு மாற்றங்களோடு வளர்ச்சிப் பாதையில் செல்வார்களா. இல்லை  இந்த மக்களின் கட்டி இருக்கும் கோவணமும் களவாடப்படுமா.

பா.உதயன் ✍️
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.