Jump to content

வெளிநாடு செல்வதற்காக மக்கள் முண்டியடிப்பு ; நாட்டின் எதிர்காலம் கேள்விகுறியில் என்கிறார் சஜித்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

அண்மைக்காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டைப் பெறுவதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு ஐம்பது சதவீதம் என்ற அளவில் சடுதியாக அதிகரித்திருக்கின்றது. 

பெருமளவான இளைஞர், யுவதிகள் நாட்டைவிட்டுச் செல்வதற்கு விரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அடுத்த தலைமுறையினர் நாட்டைவிட்டு வெளியேறும்பட்சத்தில் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நேற்று புதன்கிழமை கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேசத்தில் அன்னாசி பயிர்ச்செய்கையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களினாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் விவசாயிகள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த நாட்டுமக்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

குறிப்பாக விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை உரியவாறு முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான உரம் மற்றும் கிருமிநாசினிகள் என்பவற்றின் இறக்குமதியைத் தடைசெய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாகச் சீர்குலைக்கும் வகையிலான செயற்பாட்டை அரசாங்கம் இப்போது முன்னெடுத்துள்ளது.

உர இறக்குமதித்தடை காரணமாகப் பாதிப்பை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு நட்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. 

ஆனால் அதிபர், ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதற்கு நிதியொதுக்கீடு செய்யமுடியாதளவிற்குப் பாரிய நிதிநெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய அரசாங்கம், விவசாயிகளுக்கான நட்டஈட்டை எவ்வாறு வழங்கும்?

அதுமாத்திரமன்றி பெருமளவான இளைஞர், யுவதிகள் நாட்டைவிட்டுச் செல்வதற்கு விரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதற்கமைய அண்மைக்காலத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகளவானோர் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதனை அவதானிக்கமுடிகின்றது. 

வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டைப் பெறுவதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதத்தினால் சடுதியாக அதிகரித்திருக்கின்றது. இவ்வாறு அடுத்த தலைமுறையினர் நாட்டைவிட்டு வெளியேறும்பட்சத்தில் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? இவையனைத்தும் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திறனற்ற நிர்வாகத்தின் விளைவுகளேயாகும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான உரம், கிருமிநாசினி உள்ளிட்ட அனைத்தும் உரியவாறு பெற்றுக்கொடுக்கப்படும். 

அதுமாத்திரமன்றி பொருட்களின் சடுதியான விலையேற்றத்தினால் மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்து, வறுமைநிலை மேலோங்கியிருக்கின்றது. எமது அரசாங்கத்தின்கீழ் இவையனைத்தையும் மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து, நாட்டை மீளகட்டியெழுப்புவோம் என்று சூளுரைத்தார்.

அதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஒருவர் கருத்து வெளியிடுகையில், 'நாம் வங்கிகளில் கடன்பெற்று, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே விவசாயத்தில் ஈடுபடுகின்றோம். அதன்மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்திலேயே எமது வாழ்க்கையை முன்கொண்டுசெல்கின்றோம். 

இருப்பினும் அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளினால் நாம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். சேதனப்பசளையைப் பயன்படுத்தும் திட்டம் சிறந்ததாகும். 

ஆனால் சேதனப்பசளையை நினைத்த மாத்திரத்தில் தயாரித்துவிடமுடியாது. குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு தீர்மானங்களை மேற்கொள்பவர்களால் இதனைப் புரிந்துகொள்ளமுடியாது' என்று குறிப்பிட்டார். 

வெளிநாடு செல்வதற்காக மக்கள் முண்டியடிப்பு ; நாட்டின் எதிர்காலம் கேள்விகுறியில் என்கிறார் சஜித் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை இப்பிடியிருக்க இஞ்சை ஒரு குறூப்பும் அங்கை நாட்டிலை ஒரு குறூப்பும் புலம்பெயர் தமிழர்கள் சொந்த நாட்டுக்கு போகணுமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

இவ்வாறு அடுத்த தலைமுறையினர் நாட்டைவிட்டு வெளியேறும்பட்சத்தில் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குத்தானே முண்டியடித்தீர்கள் அனுபவியுங்கள்.

7 hours ago, பிழம்பு said:

பெருமளவான இளைஞர், யுவதிகள் நாட்டைவிட்டுச் செல்வதற்கு விரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாட்டுப்பற்றற்றவர்கள். பரவாயில்லை, சீனன் முன்னேற்றுவான் அவர்கள் ஓய்வெடுக்க திரும்பி வருவார்கள். நாடு வெறும் நாடானாலும் தமிழருக்கு மட்டும் இடம் கொடோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.