Jump to content

ட்விட்டர், பேஸ்புக்குக்கு போட்டியாக தனி சமூக ஊடகம் தொடங்கும் டிரம்ப்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (TRUTH Social) என்ற புதிய சமூக ஊடக வலைதளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக இந்த தளம் நிற்கும்" என்று கூறிய அவர், அமெரிக்காவில் எதிர்ப்புக் குரல்களை அந்த நிறுவனங்கள் அமைதிப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

அமெரிக்க அதிபர் போட்டிக்கு டிரம்ப் முன்னின்றபோது, அதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்காற்றின. அவர் அதிபராக பதவி வகித்த காலத்தில், உலகை தொடர்பு கொள்ளும் சாதனமாக சமூக ஊடகங்களையே அவர் பயன்படுத்தினார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வாரங்களில் டிரம்ப் ட்விட்டர் நிறுவனத்தால் தடை செய்யப்பட்டார். அமெரிக்க செனட் இயங்கி வந்த கேப்பிடல் ஹில் கட்டடத்துக்குள் டிரம்பின் ஆதரவாளர்கள் புகுந்த பிறகு டிரம்பின் கணக்கை ஃபேஸ்புக் முடக்கியது.

டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் அவரது இடுகைகள் பலவும் அவமதிக்கும் வகையிலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் பொய்யுரைகளை ஆராதிக்கும் வகையில் இருந்ததால் , அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஊடக நிறுவனங்களுக்கு பல தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

 

கடந்த ஆண்டு ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவை, டிரம்பின் சில இடுகைகளை நீக்கின அல்லது அவரது பதிவின்கீழ் 'இது தவறாக வழிநடத்தப்படக்கூடிய இடுகை' என்ற வரியை இடம்பெறச் செய்தன. ஃப்ளூ காய்ச்சலை விட குறைவான ஆபத்தை கொரோனா கொண்டிருந்தது" போன்ற இடுகைகளை அவர் அந்த நாட்களில் பகிர்ந்து வந்தார்.

இதன் உச்சமாக அதிபர் தேர்தல் முடிவுகளை ஒரு மோசடி என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார் டிரம்ப். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் நடந்த கலவரத்துக்குப் பிறகு டிரம்புக்கு தடை விதிக்க அல்லது இடைநீக்கம் செய்ய இந்த சமூக வலைதள நிறுவனங்கள் முடிவெடுத்தன.

கலவரங்களுக்கு பதிலளித்த டிரம்ப், கலவரத்தில் ஈடுபடுவோரை கேப்பிடல் பற்றாளர்கள் என்று அழைத்தார். தேர்தல் முடிவை ஏற்கும் எந்த அறிகுறியையும் அவர் வெளிக்காட்டவில்லை. இந்த காரணத்துக்காக அவர் தொடர்ந்து தங்களுடைய தளங்களை பயன்படுத்த அனுமதிப்பது மிகவும் ஆபத்தாகலாம் என்ற முடிவுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை வந்ததாகக் கூறின.

இதையடுத்து இந்த சமூக ஊடகங்களுக்கு போட்டியாக ஒரு சமூக ஊடக தளத்தை உருவாக்கப்போவதாக அப்போதே அறிவித்திருந்தார் டொனால்ட் டிரம்ப்.

முன்னதாக இந்த ஆண்டு ஜுன் மாதம் 'டொனால்ட் டிரம்பின் மேஜையில் இருந்து' என்ற பெயரில் ஒரு மக்கள்தொடர்பு வலைதளத்தை டிரம்ப் தொடங்கினார். டிரம்பை ஆதரிக்கும் பார்வையாளர்களை மட்டுமே அது ஈர்த்த வேளையில், தொடங்கிய ஒரு மாதத்திலேயே அந்த வலைதளம் நிரந்தரமாக மூடப்பட்டது.

இந்த வலைதலம் தொடங்கப்பட்டபோது, டிரம்பின் மூத்த உதவியாளர் ஜேசன் மில்லர், "இந்த வலைதளம் டிரம்பின் பரந்த முயற்சிகளுக்கு துணையாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிரம்ப் உருவாக்கியிருக்கும் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில், பார்வையாளர்கள் சேருவதற்கான அழைப்பு அடுத்த மாதம் விடுக்கப்படும் என்றும் 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கை அதில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

"ட்விட்டரில் தாலிபன்கள் அதிக அளவில் இருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம், ஆனாலும் உங்களுக்கு பிடித்த அதிபர் அமைதிப்படுத்தப்பட்டுள்ளார்," என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

"பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக ஏன் யாரும் எழுச்சி பெறுவதில்லை என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். சரி, விரைவில் நாமே அதை செய்வோம்," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் புதிய சமூக ஊடக தள முயற்சி குறித்து வட பிபிசியின் அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் கூறும்போது, "இதை பெரிய முயற்சியாக டிரம்பின் குழு காட்டுகிறது. ஆனால், இந்த புதிய சமூக ஊடக தளம் எப்படி இயங்கும் என்பதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை. இப்போதைக்கு அது வெறும் பதிவுப்பக்கம் மட்டுமே," என்று கூறியுள்ளார்.

பேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக ஒரு சமூக ஊடக தளத்தை உருவாக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார். ஆனால், நடைமுறையில் அது எளிதாக நடக்கக் கூடிய விஷயமல்ல என்றும் ஜேம்ஸ் கிளேட்டன் தெரிவித்தார்.

ஆரம்பிக்கும் தொனியைப் பார்க்கும்போதே, அது அரசியல் மிகுதியான தளமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ட்விட்டரின் சந்தனைகள் போலவோ ஃபேஸ்புக் போல மொத்த குடும்பமும் உறுப்பினராக இருக்கும் தளம் போலவோ அது இருக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது.

வேண்டுமானால், Parler அல்லது Gab போன்ற சமூக பேச்சு சுதந்திரம் மிகுந்த பிற சமூக ஊடகங்களை விட மிகையான வெற்றிகர தளமாக அது வரலாம்.

டொனால்ட் டிரம்ப்புக்கு திரும்பவும் தனது குரலை பிரதிபலிக்க ஒரு தளம் தேவை. இந்த தளம் அதற்கு பயன்படலாம். ஆனால், இந்த தளம் மூலம் நிச்சயம் அவரது கருத்துகள் கேட்கப்படும். ஆனால், அவரது குரல் உண்மையிலேயே கேட்கப்பட வேண்டுமானால், அதற்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவு டிரம்புக்குத் தேவை. அது இப்போதைக்கு நடக்காது என்றே தோன்றுகிறது என்கிறார் ஜேம்ஸ் கிளேட்டன்.

 

டொனால்ட் டிரம்ப்: ட்விட்டர், பேஸ்புக்குக்கு போட்டியாக தனி சமூக ஊடகம் தொடங்கும் முன்னாள் அதிபர் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. பேஸ்புக் டிவிட்டர் யூடியூப் காரனுவளுக்கு திமிர்கூடிப்போச்சு… போட்டியா வேறும் பல தளங்கள் வந்து பேமஸ் ஆகவேணும்.. அஞ்சு இயக்கப்பாட்டு ஏத்திவச்சிருந்ததால முன்னூறு நானூறு வீடியோ இருபதாயிரம் பலோயர் எண்டிருந்த என்ர யூரியூப் கணக்கையும் முடக்கினவன் குரங்கன்..😡😡 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (TRUTH Social) என்ற புதிய சமூக ஊடக வலைதளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நானும் இதிலை இணையலாமெண்டு இருக்கிறன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 'ட்ரூத் சோஷியல்' (TRUTH Social) தளத்துக்கு வாழ்த்துக்கள்......எதுக்கும் இருக்கட்டும் ......!   😎

Link to comment
Share on other sites

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாழ்த்துக்கள்.. பேஸ்புக் டிவிட்டர் யூடியூப் காரனுவளுக்கு திமிர்கூடிப்போச்சு… போட்டியா வேறும் பல தளங்கள் வந்து பேமஸ் ஆகவேணும்.. அஞ்சு இயக்கப்பாட்டு ஏத்திவச்சிருந்ததால முன்னூறு நானூறு வீடியோ இருபதாயிரம் பலோயர் எண்டிருந்த என்ர யூரியூப் கணக்கையும் முடக்கினவன் குரங்கன்..😡😡 

உங்களது கோபம் விளங்குது. க்கிரைக்கடைக்கு எதிர்க்கடை இருந்தே ஆகவேண்டும். ஆனாலும் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட நிலைக்குப் போகக் கூடாது. எனக்கு TRUTH Social இல் கணக்கு ஆரம்பிப்பதில் பிரச்சனை இல்லை. அதன் முதலாளிதான் பிரச்சனை 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, இணையவன் said:

உங்களது கோபம் விளங்குது. க்கிரைக்கடைக்கு எதிர்க்கடை இருந்தே ஆகவேண்டும். ஆனாலும் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட நிலைக்குப் போகக் கூடாது. எனக்கு TRUTH Social இல் கணக்கு ஆரம்பிப்பதில் பிரச்சனை இல்லை. அதன் முதலாளிதான் பிரச்சனை 🙂 

உண்மைதான் இணையவன்... அவன் ஒரு மொக்கன்… அவனை நம்பி போய் அசிங்கபடவேண்டியும் வரும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.