Jump to content

இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு

20 அக்டோபர் 2021
கோலி ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, "எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போன்றதே.", என்று விராட் கோலி பதிலளித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய இந்த கருத்தை 'விதிவிலக்காக' எடுத்துக் கொள்ளலாம்.

சுமார் 28 மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும். மேலும் அவர்களுக்கு இடையேயான 'மோதல்' குறித்து எல்லை முழுவதும் கடுமையான விவாதம் நடைபெறுகிறது.

பிசிபி தலைவர் ரமீஸ் ராஜாவும் இது 'சாதாரண போட்டி' அல்ல என்றும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றால், 'நாட்டின் மன உறுதியும் உயரும்' எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவிலும் இந்த போட்டி பற்றிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், 'பல அரசியல் கட்சிகள் 'இந்த போட்டியை ரத்து செய்ய' கோருகின்றன.

ரமீஸ் ராஜா கூறியது என்ன?

தனது அணிக்கும் தனது நாட்டிற்கும் இது ஒரு சிறப்பு வாய்ந்த போட்டி என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா கருதுகிறார்.

இது தொடர்பாக, ரமீஸ் ராஜா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார், அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது.

இதில், பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளிக்குமாறு ரமீஸ் ராஜா ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரமீஸ்

பட மூலாதாரம்,TWITTER/@IRAMIZRAJA

ரமீஸ் ராஜா கூறுகையில், "போட்டி நடைபெறுவது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். நீங்கள் பாகிஸ்தான் அணிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று நான் ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் இது மிகவும் முக்கியமான போட்டி. ஒரு வகையில், இந்த போட்டியில் நாம் வெற்றி பெற்றால்; இன்ஷா அல்லாஹ் வெற்றி பெற்றால் - ஒரு முழு சமூகத்திற்கும் ஒரு நல்ல செய்தியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி ஒருநாள் உலகக் கோப்பையில் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் நாளன்று நடைபெற்றது. அந்த போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை மோசமாக வீழ்த்தியது.

இப்போது அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டி பற்றிய விவாதம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது, இது கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள், விளையாட்டு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டும் சம்பந்தப்படவில்லை. அரசியலில் உள்ள பெரும் தலைவர்களும் போட்டி குறித்த கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

போட்டியில் விளையாட வேண்டாம் என்ற கோரிக்கை

இந்தியாவில் பாகிஸ்தானுடனான கசப்பான உறவு மற்றும் ஜம்மு -காஷ்மீரில் சமீபக்காலமாக சந்தேகிக்கப்படும் தீவிரவாத சம்பவங்களை மேற்கோள் காட்டி, இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை விடுக்கும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

பாபர் ஆசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாபர் ஆசம்

எதிர்க்கட்சித் தலைவர்களுடன், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்களும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடக்கூடாது என்று கூறிவருகின்றனர்.

இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், எந்த ஐசிசி போட்டியிலும் இந்த இரண்டு அணிகளும் மோதும்போது, எல்லை முழுவதும் நிலவரம் உச்சத்தை எட்டிவிடுகிறது. வேறு எந்த விளையாட்டிலும் இது நடக்காது.

'அதிகரிக்கும் டிக்கெட்டின் தேவை'

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்த டி20 போட்டி வடிவத்தில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக இந்திய கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார். விராட் கோப்பையை வெல்ல விரும்புகிறார். இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்.

பல நாட்களாக போட்டியின் மீதான எதிர்பார்ப்புக்கு மாறாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியைப் பற்றி 'ஒருபோதும் வித்தியாசமாக உணரவில்லை' என்று கோலி கூறுகிறார்.

செய்தி முகமையான பிடிஐயின் செய்திப்படி, கோலி, "உண்மையைச் சொல்வதானால், நான் எப்போதும் அப்படி உணர்ந்ததில்லை", என்று தெரிவித்துள்ளார்.

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கிரிக்கெட்டில் மற்ற போட்டிகளைப் போலவே நான் எப்போதும் இதை கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.

மேலும், 'இது ரசிகர்களுக்கு சாதாரண போட்டி அல்ல' என்பதை அறிந்திருப்பதாக இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார். அத்தகைய நபர்களில் அவரது நண்பர்களும் அடங்குவர்.

"இந்த போட்டி குறித்து பெரும் பரபரப்பு உள்ளது என்று எனக்கு தெரியும், டிக்கெட்டுகளுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. மேலும், டிக்கெட் விலைகள் இப்போது மிக அதிகமாக உள்ளது. என் நண்பர்களும் டிக்கெட் கேட்கின்றனர், நான் 'இல்லை' என்று பதிலளிக்கிறேன். ", என்று கோலி கூறியுள்ளார்.

எந்த அணி பலம் வாய்ந்தது?

பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாமும் போட்டிக்கு முன்னதாக 'மைண்ட் கேமி'ல் ஈடுபட்டுள்ளார். பிசிபி தலைவரைப் போலவே, அவரது அணியின் வெற்றியில் தீவிரமாக இருக்கிறார்.

பாகிஸ்தானின் ஊடகங்களும் ரசிகர்களும் பாபர் ஆசாமுடன் இந்திய கேப்டன் விராட் கோலியை ஒப்பிடுகின்றனர்.

ரசிகர்கள்

பட மூலாதாரம்,REUTERS

தரவரிசை மற்றும் பதிவுகளில், இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. டி20 தரவரிசையில், இந்தியா இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

பதிவுகளின் அடிப்படையில், டி20 போட்டிகளில் இந்தியா எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

செளரவ்-ஜெய் ஷாவுடனான சந்திப்பு குறித்து ரமீஸ் ராஜா

ஆனால், இந்த போட்டி முனையில், பாகிஸ்தானின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பின்தங்கியிருக்க விரும்பவில்லை.

இந்திய அணிக்கு அழுத்தம் கொடுப்பதன் காரணம் இதுவா? கிரிக்கெட் மற்றும் அரசியல் வல்லுநர்கள் இதை மறுக்கவில்லை.

ரமீஸ் ராஜா வெளியிட்டுள்ள கருத்தில், பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி மற்றும் வாரிய செயலாளர் ஜெய் ஷா உடனான சந்திப்பையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரமீஸ் ராஜா, "நான் செளரவ் கங்குலியை சந்தித்தேனோ? என்ற கேள்வி நிலவி வருகின்றது. நிச்சயமாக சந்தித்தேன். நான் ஜெய் ஷாவையும் சந்தித்தேன்."

"பாருங்கள், நாங்கள் ஒரு கிரிக்கெட் பந்தத்தை நிறுவ வேண்டும். அரசியலில் இருந்து கிரிக்கெட் எவ்வளவு விலகி இருக்கிறதோ அவ்வளவு நன்மை என்று நான் எப்போதும் நினைக்கிறேன்.", என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ரமீஸ் ராஜா கிரிக்கெட்டை 'அரசியலில் இருந்து விலக்கி வைப்பது' பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால் அதைச் செய்வது எளிதல்ல. வல்லுநர்கள் ரமீஸ் ராஜாவின் கருத்து கூறிய நேரத்திலிருந்து இதையே யூகிக்கின்றனர்.

மற்ற விளையாட்டுகளை விட இரு நாடுகளிலும் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் மூலம் பல நேரங்களில் உணர்ச்சிகளின் அலை அதிகரித்து வருகிறது.

கோப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிபுணர்களின் கருத்துப்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கிரிக்கெட்டையும் அரசியலையும் தனித்தனியாக வைத்திருக்கும் முயற்சிகள் பெரும்பாலும் வெற்றிபெறாததற்கு இதுவே காரணம்.

பாகிஸ்தானில் நாட்டின் நிலைமை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் கையில் உள்ளது. அதே நேரத்தில், தற்போதைய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் தந்தை அமித் ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து அவரிடமும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

சுப்பிரமணியன் சுவாமியின் கேள்வி

திங்கள்கிழமையன்று பிசிபியின் ட்விட்டர் கணக்கில் ரமீஸ் ராஜாவின் அறிக்கை வெளியிடப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்வீட் செய்தார்.

அதில், அவர் கேள்வி அம்புகளை வீசினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.

சுப்பிரமணியன் சுவாமி, "பயங்கரவாதத்தை விற்கும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிக்கு என்ன அவசரம்? பிசிசிஐயின் ஜெய் ஷாவுக்கு அவரது தந்தை உள்துறை அமைச்சராக என்ன சொல்கிறார் என்று தெரியுமா? துபாயில் தாதாக்கள் கிரிக்கெட் பந்தயம் மூலம் பணம் சம்பாதிப்பது முக்கியம். இந்த கிரிக்கெட்டை ரத்து செய்து நாட்டின் மதிப்பை காப்பாற்றுங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையை எழுப்பியது சுப்பிரமணியன் சுவாமி மட்டுமல்ல.

சுப்பிரமணியன் சுவாமி

தொழிலதிபரும் எழுத்தாளருமான சுஹைல் சேத்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சுஹைல் சேத், "எல்லை தாண்டி காஷ்மீரில் அப்பாவி இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போட்டியை அவசியம் நடந்தவேண்டுமா? அல்லது பாகிஸ்தானின் எந்த ஆப்-களை நாம் தடை செய்யலாம் என்று பார்ப்போமா?. அல்லது கிரிக்கெட் என்று வரும்போது, நாட்டை விட வணிகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா?

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியின் சரியான தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நரேந்திர மோதி அரசின் அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் பீகாரின் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் ஆகியோர் எழுப்பியுள்ளனர்.

சமீபத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டு பீகார் மக்கள் மீது குறிவைக்கப்பட்டது. பீகாரைச் சேர்ந்த இந்த இரண்டு தலைவர்களும் இந்த காரணத்திற்காக போட்டி குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர் என்று நம்பப்படுகிறது.

மறுபுறம், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டாம் என்று கோரியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் மூலமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறி வைத்து பதிவிட்டுள்ளார்.

அவர், "இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பாஜக தலைவர்கள் சிலர் எதிர்க்கின்றனர். இந்த நிலையில், முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, இந்த போட்டி நடத்தப்பட வேண்டும் என்று முயற்சிக்கிறார். என்ன நடக்கிறது?", என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக பேசுவது இல்லை.

காங்கிரஸ் தலைவரும் பிசிசிஐ துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லாவின் கருத்துப்படி, 'ஐசிசியுடன் இருக்கும் கடமை காரணமாக நீங்கள் எந்த அணிக்கும் எதிராக விளையாட மறுக்க முடியாது. நீங்கள் ஐசிசி போட்டிகளில் விளையாட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிகளுடன் பதற்றமும் அழுத்தமும் நிலவி வருகின்றது. தற்போதைய வீரர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் பல முன்னாள் வீரர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி ஒரு போட்டி போல இல்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

சச்சினின் தூங்கா நாட்கள்

பல நேரங்களில், மன அழுத்தம் காரணமாக, வீரர்கள் தூக்கத்தை தொலைக்கின்றனர்.

பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையான 'ப்ளேயிங் இட் மை வே' என்ற புத்தகத்திலும் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடந்த உலகக் கோப்பை போட்டியைப் பற்றி எழுதியுள்ளார். அதில், "இரு அணிகளுக்கும் இது ஒரு பெரிய போட்டியாக இருக்கும். உணர்ச்சிகள் மிகவும் வலுவாக இருந்ததால் போட்டிக்கு முந்தைய மூன்று இரவுகள் என்னால் சரியாக தூங்கமுடியவில்லை. நாங்கள் ஏதாவது ஒரு போட்டியில் வெல்ல விரும்பினால், அது இந்த போட்டிதான். " என்ற் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த ஒருநாள் போட்டியாக கருதப்படுகிறது. அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். சோயிப் அக்தரின் பந்தில் சச்சின் அடித்த சிக்ஸர் இன்றும் நினைவில் உள்ளது.

"(அப்போது) நாடு தோல்வியைத் தாங்க முடியாது. இது எங்களுடைய பல ரசிகர்களின் உண்மையான இறுதிப் போட்டி. நாங்கள் பாகிஸ்தானை செஞ்சுரியனில் வீழ்த்தினால், மீதமுள்ள போட்டிகளில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு முக்கியமல்ல.", என்று சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த போட்டி முடிந்து 18 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் 'வெற்றி பெறுவதற்கான பிடிவாதம்' எல்லைகளை தாண்டி அப்படியே உள்ளது.

சச்சின் டெண்டுல்கருடன் பல ஆண்டுகளாக உடை மாற்றும் அறையைப் பகிர்ந்து கொண்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் வீடியோ சமீபத்தில் வைரலானது.

இதில், ஹர்பஜன் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவுடன் டி20 போட்டிகளில் விளையாட வேண்டாம் என்றும், போட்டியை விட்டு விலகி செல்லுங்கள் எனவும் வேடிக்கையாக அறிவுறுத்தியுள்ளார்.

ஹர்பஜன், "நான் சோயப் அக்தரிடம் சொன்னேன், இந்த முறை விளையாடுவதால் என்ன பயன்? நீங்கள் விலகி விடுங்கள். நீங்கள் எங்களுடன் விளையாடுவீர்கள், பிறகு நீங்கள் தோல்வியடைவீர்கள், பிறகு நீங்கள் ஏமாற்றமடைவீர்கள், எங்கள் அணி மிகவும் வலிமையானது, எங்கள் வீரர்கள் ஜெயித்துவிடுவார்கள்! " என்று கூறியுள்ளார்.

ஆனால், இப்போது இந்த போட்டி குறித்து வெளியிடப்படும் கருத்துகளை வைத்து, யாரும் விட்டுக் கொடுக்கவோ விலகி செல்லவோ தயாராக இருப்பதாகத் தெரியவில்லை - அது களத்திற்கு உள்ளாக இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி!

https://www.bbc.com/tamil/sport-58981094

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2021 ஐசிசி டி-20 உலக கிண்ணம் ; இந்தியா - பாகிஸ்தான் மோதல் இன்று

முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும் பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடக்கும் டி-20 உலகக் கிண்ணத்தின் பிளாக்பஸ்டரில் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன.

Image

ஒட்டுமொத்தமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டமானது கிரிக்கெட் உலகில் நடைபெறும் ஒரு யுத்தமாகவே ரசிகர்களல் கருத்தப்படுகிறது.

இந்திய அணித் தலைவர் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் இதை மற்றொரு விளையாட்டு என்று அழைத்தனர். ஆனால் அது தொடர்பில் தெளிவான விளக்கம் இல்லை.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து அணு ஆயுத அண்டை நாடுகள் மூன்று முறை போருக்குச் சென்றன, மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவும் பாரிய விரிசலில் உள்ளது.

இந்தியா கடைசியாக 2013 இல் பாகிஸ்தானை இருதரப்பு தொடரில் சந்தித்தது. அதன் பின்னர் அவர்கள் சர்வதேச போட்டிகளில் மாத்திரம் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டுள்ளனர்.

இறுதியாக 2019 இல் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ண ஆட்டத்தில் இரு அணியும் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தியது.

எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2007 இல் தொடங்கப்பட்ட டி-20 உலகக் கிண்ணத்தில் இந்தியா தனது பரம எதிரிகளுக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றுள்ளது.

Image

தற்செயலாக அந்த அனைத்து போட்டிகளையும் இந்திய அணி மகேந்திர சிங் தோனியின் தலைமையில் வென்றிருக்கிறது.

2007 இல் டி-20 உலகக் கிண்ணத்தின் தொடக்கப் பதிப்பை இந்தியா வென்றது, பாகிஸ்தானும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் கிண்ணத்தை வென்றது. 

டி-20 தரவரிசையில் இந்தியாவும் பாகிஸ்தானும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. 

சர்வதேச போட்டிகளில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதுடன், அண்டை நாடுகளுக்கு எதிராக 50 ஓவர் மற்றும் டி-20 உலகக் கிண்ணத்திலும் தோல்வியடையவில்லை. 

டி-20 உலக கிண்ணத்தில் இந்தியா மோதிய அனைத்து ஆட்டத்திலும் (5 போட்டி) பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது. 

2012 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் மட்டும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்று இருந்தது. இந்த ஒரு முறை மட்டுமே 20 ஓவரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது.

மேலும் 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த டி-20 உலகக் கிண்ணத்தின் போது இறுதிப் போட்டி உட்பட இருமுறை பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது.

இதேவளை டி-20 உலகக் கிண்ணத்தில்  முதல் முறையாக இந்திய அணியின் தலைவராக இருக்கும் விராட் கோலி மீது அனைத்து கண்களும் இருக்கும். 

33 வயதான அவர் டி-20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 56.33 சராசரியில் 169 ஓட்டங்களை குவித்து சிறப்பான சாதனை படைத்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/115900

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிகொண்டு பழிதீர்த்தது பாகிஸ்தான்

இருபதுக்கு - 20 உலகக்கிண்ண சுப்பர் 12 சுற்றின் பரபரப்பான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின.

Virat Kohli and Babar Azam head to the toss, India vs Pakistan, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, October 24, 2021

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பொறுப்புடன் ஆடிய பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஜோடி 151 என்ற வெற்றி இலக்கை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்து பாகிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

Mohammad Rizwan celebrates after reaching his half-century, India vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 24, 2021

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று இரவு டுபாயில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

Shaheen Shah Afridi takes off after nabbing Rohit Sharma for a first-ball duck, India vs Pakistan, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, October 24, 2021

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் நிதானமாக ஆடினர். ரிஷப் பண்ட் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Virat Kohli anchored India, India vs Pakistan, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, October 24, 2021

நிதானத்துடனும் பொறுப்புடனும் ஆடிய அணித்தலைவர் விராட் கோலி 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்தியா அணி 20 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை பெற்றது.

Shaheen Shah Afridi accounted for Virat Kohli, India vs Pakistan, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, October 24, 2021

பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

Babar Azam and Mohammad Rizwan walk out to bat, India vs Pakistan, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, October 24, 2021

இதையடுத்து, 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்களாக பாபர் அசாம், மொகமது ரிஸ்வான் இறங்கினர்.

Mohammad Rizwan and Babar Azam put together a strong opening stand, India vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 24, 2021

ஆரம்பத்தில் இருந்தே இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விரட்டியடித்தனர். இருவரும் அரை சதமடித்து இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்வதற்கு இந்திய அணி பல வியூகங்களையும் வகுத்த போதிலும் அவை கைகூடவில்லை.

Mohammad Rizwan and Babar Azam both cracked half-centuries in a spectacular opening partnership, India vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 24, 2021

இறுதியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. 

Pakistan get into a huddle after registering their first win in a World Cup over India, India vs Pakistan, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, October 24, 2021

இப்போட்டியில் பாகிஸ்தானின் ஷாகீன் அப்ரிடி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Time for a selfie to commemorate Pakistan's historic win, India vs Pakistan, Men's T20 World Cup 2021, Super 12s, Dubai, October 24, 2021

Pakistan fans celebrate as Babar Azam and Mohammad Rizwan cruise, India vs Pakistan, T20 World Cup, Group 2, Dubai, October 24, 2021
 

https://www.virakesari.lk/article/115938

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.