Jump to content

இனி இது ரகசியம் அல்ல


Recommended Posts

இன்று வெள்ளிக்கிழமை (22/10/21), தனது “காலைக்கதிர்” மின்-ஏட்டில், நண்பர் வித்யாதரன், “இனி இது ரகசியம் அல்ல”, என்ற வழமையான அங்கத்தில் கொஞ்சம் நீட்டி நீளமாக ஒரு சம்பவத்தை எழுதியுள்ளார்.
அதை என் கவனத்துக்கு நியுசிலாந்து நண்பர் “வரதா” கொண்டு வந்துள்ளார். (செய்தி யாழ்ப்பாணத்திலிருந்து, நியுசிலாந்து ஓக்லன்ட் சென்று கொழும்புக்கு வந்துள்ளது.!)
எனது கட்சி/கூட்டணியில் இன்று இல்லாத, “திரு. பிரபா கணேசனை சந்தித்து நான் அரசியல் பேசியுள்ளேன்” என்பதே செய்தி சுருக்கம்.
1970 களிலிருந்து கொழும்பில் வாழும், யாழ் நல்லூரை சேர்ந்த எமது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்தாவின் தனிப்பட்ட விவகாரம் ஒன்றின் தொடர்பாக, பிரபாவை நீண்ட காலத்தின் பின், நண்பர் ஸ்ரீகாந்தின் அழைப்பின் பேரில் சந்தித்தேன்.
பின்னர் எமது சகோதரி கெளரியின் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் வைபவம் ஒன்றிற்கு போன போது அங்கு பிரபாவும் வந்திருந்தார்.
“கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயற்பட இருவரும் இணங்கி இருக்கின்றார்கள்” என்ற காலைக்கதிர் செய்தி, ஒரு அரசியல் செய்தி.
இதில் உண்மையில்லை. இந்த செய்தி தவறு. அரசியல் தொடர்பில் ஒரு வார்த்தைகூட பேசப்படவில்லை. சிந்திக்கவும் இல்லை.
எங்கள் நண்பர் ஸ்ரீகாந்தாவின் விவகாரம் தொடர்பாக இருவரும் பேசினோம். எங்களது நேரடி ஆலோசனைகளை, நண்பர் ஸ்ரீகாந்தா பெற்றுக்கொண்டார். அதுவே அந்த சந்திப்பின் நோக்கம்.
தனிப்பட்ட அவ்விவகாரம் பற்றி பகிரங்கமாக இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை.
எனது பாதை கரடுமுரணானது. ஆனால், நேரானது.
2005 முதல் 2020 வரை என் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்ட படுகொலை முயற்சிகள் உட்பட, உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் ஏற்பட்ட எல்லா சவால்களையும் வெற்றிக்கரமாக எதிர்கொண்டு, இன்று தென்னிலங்கையில், தேசிய மட்டத்தில், தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் வீச்சு பெற்று, வளர்ச்சியடைந்த ஒரு கூட்டணியின், தலைமை பொறுப்பில் நான் இருக்கிறேன்.
ஆகவே சும்மா, எடுத்தேன், கவிழ்த்தேன், என்று நான் முடிவுகளை எடுப்பதில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளே இருக்கும் தமிழரசு கட்சியுடனும், அதற்குள்ளே முடிவுகளை எடுப்பவர்களுடனும் நெருக்கமான உறவு கொண்டவரும், என்னுடனும் தனிப்பட்ட நெருக்கமுள்ள நண்பர் வித்யாதரன் காலைக்கதிரின் பிரதம ஆசிரியர் என எண்ணுகிறேன்.
சந்திப்பதும், பேசுவதும், சிரிப்பதும், மரியாதை நிமித்தம் கைலாகு கொடுப்பதும் எல்லாமே சமூக- அரசியல் வாழ்க்கைதான். நண்பர் வித்திக்கு தெரியாததா?
தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்புதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதில் விடுதலை புலிகளால் “துரோகிகள்” என்று குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியினரும் உள்ளார்கள்.
2009ம் வருட இறுதிப்போர் வரை மகிந்த அரசுடன் இருந்தவர்களும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள்.
ஆயுதப்போர் என்பது அழிவுப்போர் என்று சொல்பவர்களும் உள்ளார்கள்.
இவையெல்லாம் ஒன்று சேர்ந்தது காலத்தின் கட்டாயங்கள். “எது சரி, எது பிழை” என இன்று நாம் தீர்ப்பு சொல்ல முடியாது. வரலாறுதான் தீர்ப்பு வழங்கும்.
அதுபோல், ஜனநாயக மக்கள் முன்னணிக்குள், தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் புதுவரவு, புதுபித்தல் வரவு மாற்றங்கள் வருமாயின், காலத்தின் கட்டாயங்கள் ஏற்படுமாயின், நான் பகிரங்கமாக சொல்வேன்.
என்னிடம் எந்தவித ஒளிவு மறைவும் கிடையாது. நண்பர் வித்திக்குதான் முதலில் சொல்வேன். ஹஹா..!
ஆனால், இந்த செய்தியில் சொல்லப்பட்டதன்படி, எமது கட்சி/கூட்டணியில் எதுவும் நடக்கவில்லை. அரசியல் சந்திப்பு எதுவும் நிகழவில்லை.
தனது மூல செய்திக்கு தந்த அதே முக்கியத்துவத்துடன் இந்த விளக்க செய்தியையும் நண்பர் வித்தி, காலையும், மாலையும் பிரசுரிப்பார் என நம்புகிறேன்.

 

247422875_10215887471698849_682935457962

246417980_10215887472618872_252924679040

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.