Jump to content

மரம் நடுவோம் மழை பெறுவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

40  பேருக்கு ஐந்து வகையான மரங்கள் வழங்கப்பட்டுள்ளது .இதில் 75 வீதமான மரங்கள் தப்பி பிழைத்து பயனாளிகள் நன்மை அடைந்தால் மிக சிறப்பு...50 வீதம் தப்பி பிழைத்தால் சிறப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

අනි මට සතුටුයි ගොඩක් ඔබට දිර්ඝ ආයුෂ ලැබේවා පින්සිද්ද වෙන්නවා obata budusaranai

2 hours ago, putthan said:

40  பேருக்கு ஐந்து வகையான மரங்கள் வழங்கப்பட்டுள்ளது .இதில் 75 வீதமான மரங்கள் தப்பி பிழைத்து பயனாளிகள் நன்மை அடைந்தால் மிக சிறப்பு...50 வீதம் தப்பி பிழைத்தால் சிறப்பு

அந்த புலம்பெயர் அவுஸ் உறவு நீங்களோ புத்தன்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சமூகசேவை .....பாராட்டுக்கள்.....!  💐

இணைப்புக்கு நன்றி புத்ஸ் .....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

අනි මට සතුටුයි ගොඩක් ඔබට දිර්ඝ ආයුෂ ලැබේවා පින්සිද්ද වෙන්නවා obata budusaranai

அந்த புலம்பெயர் அவுஸ் உறவு நீங்களோ புத்தன்? :cool:

புலனாய்வு செய்யப்படாது🤣....அந்த யூடியூப்புக்கு லைக் போட்டு விடுங்கள் ...இளைஞர்கள் சமுக நோக்குடன் செயல்படுகிறார்கள் அவர்களை ஊக்க படுத்த சிறு உதவி செய்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

புலனாய்வு செய்யப்படாது🤣....அந்த யூடியூப்புக்கு லைக் போட்டு விடுங்கள் ...இளைஞர்கள் சமுக நோக்குடன் செயல்படுகிறார்கள் அவர்களை ஊக்க படுத்த சிறு உதவி செய்தேன்.

லைக் மட்டுமல்ல வாழ்த்தும் தெரிவித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சமூகசேவைக்கு பாராட்டுக்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2021 at 05:14, putthan said:

புலனாய்வு செய்யப்படாது🤣....அந்த யூடியூப்புக்கு லைக் போட்டு விடுங்கள் ...இளைஞர்கள் சமுக நோக்குடன் செயல்படுகிறார்கள் அவர்களை ஊக்க படுத்த சிறு உதவி செய்தேன்.

புத்தண்ணாவின் முயற்சி அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையட்டும்.வாழ்த்துக்கள் புத்தண்ணா☺️👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2021 at 11:57, putthan said:

40  பேருக்கு ஐந்து வகையான மரங்கள் வழங்கப்பட்டுள்ளது .இதில் 75 வீதமான மரங்கள் தப்பி பிழைத்து பயனாளிகள் நன்மை அடைந்தால் மிக சிறப்பு...50 வீதம் தப்பி பிழைத்தால் சிறப்பு

வாழ்த்துக்கள் அண்ணை, எனக்கு தெரிந்த தம்பி தான் கிராமசேவையாளர். சேவை மனப்பான்மை உள்ளவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

வாழ்த்துக்கள் அண்ணை, எனக்கு தெரிந்த தம்பி தான் கிராமசேவையாளர். சேவை மனப்பான்மை உள்ளவர்.

இப்படியான இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்... மிகவும் பிரயோசனமான வேலையை செய்திருக்கிறீர்கள்.
அதிலும்... மரத்தை, நன்கு பராமரிப்பவர்களுக்கு... ஊக்கப் பரிசை அறிவித்ததன் மூலம்,
அனைத்து மரத்தையுமே... அவர்கள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையுண்டு.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சமூகத்திற்கும் இயற்கைக்கும்  நல்ல சேவை புத்தண்ணா நல்ல பெயர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகளும் பாராட்டுக்களும் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்றி புத்தன் ...வாழ்த்துக்களும் , நன்றிகளும் 

Link to comment
Share on other sites

 

எல்லாமாக எவ்வளவு அண்ணா முடிஞ்சுது? ஊக்கத்தொகையாக எவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் அண்ணா. சின்ன கலைவாணர் விவேக்கும் மனதில் வந்து போனார். 🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2021 at 11:13, Knowthyself said:

 

எல்லாமாக எவ்வளவு அண்ணா முடிஞ்சுது? ஊக்கத்தொகையாக எவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளீர்கள்?

எல்லாமாக 22 ஆயிரம் ரூபா வந்தது ...25 குடும்பங்களுக்கு   வழங்கப்பட்டது,ஒரு குடும்பத்துக்கு ஐந்து மரக்கன்றுகள் வீதம் 
இரண்டாம் கட்டமாகவும் அடுத்த கிழமை வழங்க இருக்கிறேன் ..இப்ப மழைக்காலம் என்ற படியால் இப்ப நட்டால் நல்லது என தாயக உறவுகள் சொன்னார்கள் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

எல்லாமாக 22 ஆயிரம் ரூபா வந்தது ...25 குடும்பங்களுக்கு   வழங்கப்பட்டது,ஒரு குடும்பத்துக்கு ஐந்து மரக்கன்றுகள் வீதம் 
இரண்டாம் கட்டமாகவும் அடுத்த கிழமை வழங்க இருக்கிறேன் ..இப்ப மழைக்காலம் என்ற படியால் இப்ப நட்டால் நல்லது என தாயக உறவுகள் சொன்னார்கள் ....

மழைக்கு முதல் நட்டால் மழையோட வேர் பிடிச்சிடும், வெள்ளம் நிக்காத இடத்தில் வைத்தால் வேர் அழுகாமல் தப்பிவிடும்.

Link to comment
Share on other sites

On 3/11/2021 at 06:48, putthan said:

எல்லாமாக 22 ஆயிரம் ரூபா வந்தது ...25 குடும்பங்களுக்கு   வழங்கப்பட்டது,ஒரு குடும்பத்துக்கு ஐந்து மரக்கன்றுகள் வீதம் 
இரண்டாம் கட்டமாகவும் அடுத்த கிழமை வழங்க இருக்கிறேன் ..இப்ப மழைக்காலம் என்ற படியால் இப்ப நட்டால் நல்லது என தாயக உறவுகள் சொன்னார்கள் ....

 

நாங்களும் உதவிசெய்ய விரும்பினால் நேரடியாக உந்த Youtube channel ஐ தொடர்புகொண்டு காசை அனிப்பினால் 25/50 குடும்பங்களுக்கு செய்வார்களா? நீங்கள் கதைத்துவிட முடியுமா? இதை எப்படி அணுகுவதென்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2021 at 10:01, Knowthyself said:

 

நாங்களும் உதவிசெய்ய விரும்பினால் நேரடியாக உந்த Youtube channel ஐ தொடர்புகொண்டு காசை அனிப்பினால் 25/50 குடும்பங்களுக்கு செய்வார்களா? நீங்கள் கதைத்துவிட முடியுமா? இதை எப்படி அணுகுவதென்று தெரியவில்லை.

அவருடைய நம்பர்
contact us on whatsapp :- 0717225451
பெயர்: தணுஷ் 
இவருடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.