Jump to content

விவேக் மரணம் : தடுப்பூசி காரணமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் மரணம் : தடுப்பூசி காரணமா?

 

spacer.png

நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த தேசிய குழு கூறியுள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக இருந்த மார்ச், ஏப்ரல் காலகட்டத்தில், பொது மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான அச்சமும் அதிகமாக இருந்தது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகைச்சுவை நடிகர் விவேக் 2021 ஏப்ரல் 15ஆம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக ஓய்விலிருந்த அவர் 17ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தடுப்பூசி போட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என்று வதந்திகள் பரவி மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான அச்சம் அதிகரித்தது. இதனால் விவேக் மரணம் குறித்து மருத்துவ ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், விவேக் மரணம் தடுப்பூசி தொடர்பானதல்ல என்று ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு கண்டறிந்துள்ளது. விவேக்கின் மரணம் தற்செயலானது என்றும் அவரது மரணத்துக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும் சம்மந்தமில்லை. உயர் ரத்த அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும் இந்த நோய்த்தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

விவேக்கின் எக்மோ மற்றும் ஈசிஜி அறிக்கைகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் உள்ள மருந்துக்குப்பின் ஏற்படும் பாதக விளைவை ஆராயும் தேசியக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், இந்த இரு குழுக்களும் விவேக் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என ஒரே மாதிரியான முடிவைத் தெரிவித்ததாகவும் தமிழக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

https://minnambalam.com/politics/2021/10/22/17/vivek-death-not-related-vaccine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசிகளின் விளவுகள் பற்றிய திரி என்பதால் இதை இணைக்கிறேன். 

தடுப்பூசிகள் பற்றிய பயமூட்டும் வதந்திகளை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அன்ட்ரூ வேக்பீல்ட் என்ற பிரிட்டன் மருத்துவர். போலியாக ஒரு ஆய்வுக் கட்டுரையை வக்சீன்களை விரும்பாத ஒரு தாயுடன் இணைந்து உருவாக்கி, அதன் மூலம் இன்று பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகத் திகழும் வக்சீன் எதிர்ப்புக் கும்பலை உருவாக்கிய "பெருமை" இவருடையது. இவரைப் பற்றிய குறுகிய காணொளி - இதன் முழு வடிவம் பிரிட்டனில் வாழ்வோர் மட்டும் பார்க்கக் கூடியதாக இருக்குமென நினைக்கிறேன். 

https://www.bbc.com/reel/video/p09zhlch/the-origins-of-one-of-the-biggest-frauds-in-the-world- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

தடுப்பூசிகளின் விளவுகள் பற்றிய திரி என்பதால் இதை இணைக்கிறேன். 

தடுப்பூசிகள் பற்றிய பயமூட்டும் வதந்திகளை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அன்ட்ரூ வேக்பீல்ட் என்ற பிரிட்டன் மருத்துவர். போலியாக ஒரு ஆய்வுக் கட்டுரையை வக்சீன்களை விரும்பாத ஒரு தாயுடன் இணைந்து உருவாக்கி, அதன் மூலம் இன்று பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகத் திகழும் வக்சீன் எதிர்ப்புக் கும்பலை உருவாக்கிய "பெருமை" இவருடையது. இவரைப் பற்றிய குறுகிய காணொளி - இதன் முழு வடிவம் பிரிட்டனில் வாழ்வோர் மட்டும் பார்க்கக் கூடியதாக இருக்குமென நினைக்கிறேன். 

https://www.bbc.com/reel/video/p09zhlch/the-origins-of-one-of-the-biggest-frauds-in-the-world- 

தடுப்பூசிகள் நூறில் ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் உண்மை தானே 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தடுப்பூசிகள் நூறில் ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் உண்மை தானே 
 

நூறில் ஒருவருக்கு என்பது மிக அதிகமாக தெரிகிறது.

தடுப்பூசி மட்டும் அல்ல சகல மருத்துகளுமே, ஏன் கத்தரிகாய், இறால், கச்சான் போன்றவையும் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தடுப்பூசிகள் நூறில் ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் உண்மை தானே 
 

 

14 minutes ago, goshan_che said:

நூறில் ஒருவருக்கு என்பது மிக அதிகமாக தெரிகிறது.

தடுப்பூசி மட்டும் அல்ல சகல மருத்துகளுமே, ஏன் கத்தரிகாய், இறால், கச்சான் போன்றவையும் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

அலேர்ஜி என்பது சாதாரணமானது - பல வடிவங்களில் இருக்கலாம், எல்லாமே உயிருக்கு ஆபத்தானவையல்ல. உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய anaphylaxis நிலை ஒரு லட்சத்தில் ஒருவருக்கு வரலாம் - இதனால் தான் எந்தத் தடுப்பூசியும் போட்ட பின்னர் 20 நிமிடம் அமரச் செய்து பார்த்து அனுப்புவர். வந்தால் உடனே மருந்து கொடுப்பர். 20 நிமிடம் கழித்து anaphylaxis வருவதில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Actor Vivek Sir. by Sivakumar S on Dribbble

விவேக் மரணத்தில்.... மருத்துவ சம்பந்தப் பட்ட,  காரணிகள் பல  இருக்கலாம்.

ஆனால்... அன்றைய நாளில், விவேக் ஒரு படப் பிடிப்பில் கலந்து கொண்டிருந்தவரை,
தமிழக அன்றைய அரசு... தனது  "கொரோனா" தடுப்பூசி விளம்பரத்துக்காக...
அவரை... அழைத்துச்  சென்று.. ஊசி, போட்டது....  மிகப் பெரிய தவறு. 😡

அந்த நேரங்களில்... அல்ல, இப்பவும் கூட...
ஒரு ஊசியை... போடுவதா இல்லையா.... என்பதனை,
சம்பந்தப் பட்டவர் மட்டுமே... தீர்மானிக்க முடியும்.

அப்படி இருக்கும் போது... விவேக்கை,
அன்றைய  தமிழக அரசு... தனது,    சுயலாபத்திற்காக  கொலை செய்து விட்டது என்றே கருதுகின்றேன்.

சரி... இறந்தவன், திரும்பி வரப் போவதில்லை என்று தெரிந்தாலும்,
நாலு பெண் பிள்ளைகளின் ஒரு, தகப்பனுக்கு...
இந்த  முட்டாள்  அரசியல் வாதிகள்... வழி காட்டி, விட வேண்டும் என்பதே...
என் பிரார்த்தனை.  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

 

அந்த நேரங்களில்... அல்ல, இப்பவும் கூட...
ஒரு ஊசியை... போடுவதா இல்லையா.... என்பதனை,
சம்பந்தப் பட்டவர் மட்டுமே... தீர்மானிக்க முடியும்.

 

 

தடுப்பூசி போடுவதை தனி நபர்கள் தீர்மானிக்க வேண்டும் -உண்மை!

உரிய மருத்துவ காரணமின்றி தடுப்பூசி போடாமல் இருப்போர் சமூகத்தின் ஏனையோரோடு கலக்காமல் எங்காவது போய் வனவாசம் வாழும் படி சொல்ல சமூகத்தில் இருக்கும் ஏனையோருக்கும் மக்களைக் காக்க வேண்டிய அரசுக்கும் உரிமையிருக்கிறது! -ஏனெனில் இது ஒரு தொற்று நோய், பொதுச்சுகாதாரப் பிரச்சினை.

இதுவே தனி நபர் நோயான நீரிழிவாக இருந்தால் "கட்டாயம் இன்சுலின் எடு" என்று யாரும் சட்டம் போடப் போவதில்லை - விரும்பினால் எடுங்கள் இல்லா விட்டால் கையைக் காலைக் கழட்டி விட்டு செத்துப் போங்கள் என்று பேசாமல் இருப்பர்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

தடுப்பூசி போடுவதை தனி நபர்கள் தீர்மானிக்க வேண்டும் -உண்மை!

உரிய மருத்துவ காரணமின்றி தடுப்பூசி போடாமல் இருப்போர் சமூகத்தின் ஏனையோரோடு கலக்காமல் எங்காவது போய் வனவாசம் வாழும் படி சொல்ல சமூகத்தில் இருக்கும் ஏனையோருக்கும் மக்களைக் காக்க வேண்டிய அரசுக்கும் உரிமையிருக்கிறது! -ஏனெனில் இது ஒரு தொற்று நோய், பொதுச்சுகாதாரப் பிரச்சினை.

இதுவே தனி நபர் நோயான நீரிழிவாக இருந்தால் "கட்டாயம் இன்சுலின் எடு" என்று யாரும் சட்டம் போடப் போவதில்லை - விரும்பினால் எடுங்கள் இல்லா விட்டால் கையைக் காலைக் கழட்டி விட்டு செத்துப் போங்கள் என்று பேசாமல் இருப்பர்!😎

நீங்கள்.... ஜனநாயக நாட்டில்  வாழ்ந்து கொண்டு,
"வனவாசம்"  பற்றி கதைப்பது... வேடிக்கையாக உள்ளது. 🤠 

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள்.... ஜனநாயக நாட்டில்  வாழ்ந்து கொண்டு,
"வனவாசம்"  பற்றி கதைப்பது... வேடிக்கையாக உள்ளது. 🤠 

****

நான் மட்டுமல்ல, நீங்களும் உலகின் சிறந்த ஜனநாயகம், சுதந்திரம் கொண்ட நாட்டில் தானே சிறியர்? ஜனநாயகம் இயங்க எல்லாரும் வடம் பிடிக்க வேண்டுமென்பது தான் சிறி லங்காவில் வாழ்ந்து பின்னர் மேற்கில் வாழ்ந்து எங்கள் அனுபவத்தில் கண்டது?

"தடுப்பூசி எடுக்காமல் நோய் பெறுவேன், ஏனையோருக்குப் பரப்புவேன், அவர்களுள் சிலரை சாகடிப்பேன், ஏனென்றால் ஜனநாயக உரிமை எனக்கிருக்கிறது" என்பது ஜனநாயகம் அல்ல - தனிமனித அராஜகம்!

சில அரசுகளும், கம்பனிகளும் இவர்களை வேலையை விட்டுத் தூக்கி வீட்டில் முடக்குவது பொது நன்மை கருதிய ஜனநாயக ரீதியான செயல் என்பது என் கருத்து!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎-‎10‎-‎2021 at 00:49, Justin said:

தடுப்பூசி போடுவதை தனி நபர்கள் தீர்மானிக்க வேண்டும் -உண்மை!

உரிய மருத்துவ காரணமின்றி தடுப்பூசி போடாமல் இருப்போர் சமூகத்தின் ஏனையோரோடு கலக்காமல் எங்காவது போய் வனவாசம் வாழும் படி சொல்ல சமூகத்தில் இருக்கும் ஏனையோருக்கும் மக்களைக் காக்க வேண்டிய அரசுக்கும் உரிமையிருக்கிறது! -ஏனெனில் இது ஒரு தொற்று நோய், பொதுச்சுகாதாரப் பிரச்சினை.

இதுவே தனி நபர் நோயான நீரிழிவாக இருந்தால் "கட்டாயம் இன்சுலின் எடு" என்று யாரும் சட்டம் போடப் போவதில்லை - விரும்பினால் எடுங்கள் இல்லா விட்டால் கையைக் காலைக் கழட்டி விட்டு செத்துப் போங்கள் என்று பேசாமல் இருப்பர்!😎

நீங்கள் சொல்வது சரி ...இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வருவதற்கு சான்ஸ் இருக்குதல்லவா?...என்னைப் பொறுத்த வரை அவர்களாலும் கொரோனா பரவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் சொல்வது சரி ...இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வருவதற்கு சான்ஸ் இருக்குதல்லவா?...என்னைப் பொறுத்த வரை அவர்களாலும் கொரோனா பரவும் 

அமெரிக்க கணக்கெடுப்பின் படி, தடுப்பூசி எடுத்தோரில் 5% பேருக்கு கோவிட் வந்திருக்கிறது, எடுக்காதோரில் 95% பேருக்கு கோவிட் வந்திருக்கிறது. எனவே, யார் அதிகம் சமூகப் பரவலுக்கு காரணமாக இருப்பர் என்று ஊகிக்க றொக்கட் விஞ்ஞானம் அவசியமில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் குடும்பம் கூட தடுப்பூசியினால் அவர் இறந்ததாக சொல்லவில்லை.
ஸ்ரான்லின் சீமான் கோவிட் தடுப்பூசி வந்த போது அதற்கு எதிராக சந்தேகங்கள் வரும்படி பேசியவர்கள். அதன் பாதிப்புக்கள் எம்மவர்களில் வந்துள்ளது.

On 23/10/2021 at 16:25, Justin said:

"தடுப்பூசி எடுக்காமல் நோய் பெறுவேன், ஏனையோருக்குப் பரப்புவேன், அவர்களுள் சிலரை சாகடிப்பேன், ஏனென்றால் ஜனநாயக உரிமை எனக்கிருக்கிறது" என்பது ஜனநாயகம் அல்ல - தனிமனித அராஜகம்!

இப்படியான அராஜகம் தான் யேர்மனியில் நடைபெற்றது. தடுப்பூசிக்கு எதிரான ஒரு நேஸ் appointment  எடுத்து சென்ற பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசிக்கு பதிலாக உப்பு தண்ணீரை குத்தி அனுப்பினார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் கோவிட் தடுப்பூசி வந்த போது அதற்கு எதிராக சந்தேகங்கள் வரும்படி பேசியவர்கள்

எங்கே ஆதாரம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

எங்கே ஆதாரம் ?

ஸ்ரான்லின் சீமான் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக சந்தேகங்கள் வரும்படி பேசியவை தமிழில் தான் வந்தது நீங்களும் வாசித்து இருப்பீர்கள். விவேக் தடுப்பூசி போட்டதும் எப்படி இறந்தார் என்ற சீமான் பேசிய பேச்சு யாழ்களத்தில் முதலில் வந்து பின்பு அதை அகற்றிவிட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஸ்ரான்லின் சீமான் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக சந்தேகங்கள் வரும்படி பேசியவை தமிழில் தான் வந்தது நீங்களும் வாசித்து இருப்பீர்கள். விவேக் தடுப்பூசி போட்டதும் எப்படி இறந்தார் என்ற சீமான் பேசிய பேச்சு யாழ்களத்தில் முதலில் வந்து பின்பு அதை அகற்றிவிட்டனர்.

ஏன் அகற்றினார்கள் ?

39 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஸ்ரான்லின் சீமான் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக சந்தேகங்கள் வரும்படி பேசியவை தமிழில் தான் வந்தது நீங்களும் வாசித்து இருப்பீர்கள்.

சீமான் சொல்லாத விடயங்களை சீமான் சொன்னது போல் சமூக ஊடகங்களில் யாராலும் சொல்ல முடியும் என்பதாவது உங்களுக்கு தெரியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

ஏன் அகற்றினார்கள் ?

கோவிட்  தடுப்பூசிக்கு எதிராக தவறான தகவல்களை சொல்லி பீதியை உருவாக்கும் சீமானினின் பேச்சை அகற்ற வேண்டிய பொறுப்புணர்வு அவர்களுக்கு உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.