Jump to content

கொரிய ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு - எத்தனை பேர் பாத்திருக்கிறார்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரிய ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு - எத்தனை பேர் பாத்திருக்கிறார்கள்?

ஸ்க்விட் கேம் காட்சிகள்

பட மூலாதாரம், NETFLIX

 
படக்குறிப்பு, ஸ்க்விட் கேம் காட்சிகள்

2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரமாரியாக அதிகரித்துள்ளது. அதற்கு ஸ்க்விட் கேம் தொடர் பலரால் தொடர்ந்து பார்க்கப்பட்டதே காரணமென்று கூறப்படுகிறது.

அமெரிக்க ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்று மாத காலத்தில் 44 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய காலாண்டில் பணம் சேர்த்த சந்தாதாரர்கள் எண்ணிக்கையை விட, இரு மடங்கை விட அதிகம்.

கொரிய தொலைக்காட்சித் தொடரான ஸ்க்விட் கேம் வெளியான முதல் நான்கு வாரத்தில் 142 மில்லியன் (14.2 கோடி) குடும்பங்கள் பார்த்துள்ளனர். இதுவரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பேரால் காணப்பட்ட தொடர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது ஸ்க்விட் கேம்.

இந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சற்றே மந்தமாக செயல்படத் தொடங்கிய நெட்ஃப்ளிக்ஸ் மெல்ல வேகமெடுத்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சந்தாதாரர்கள் எண்ணிக்கை உயர்வும் காலப் போக்கில் நீர்த்துப் போனது.

உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்பைத் தாண்டி, இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் 8.5 மில்லியன் (85 லட்சம்) சந்தாதாரர்கள் சேர்வர் என எதிர்பார்க்கிறது. 

ஸ்க்விட் கேம் காட்சி

பட மூலாதாரம், NETFLIX

 
படக்குறிப்பு, ஸ்க்விட் கேம் காட்சி

ஸ்க்விட் கேம் தொடருக்கு முன், ப்ரிட்ஜெர்டன் தான் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடராக இருந்தது. அதை எல்லாம் ஓரங்கட்டி, பணத்துக்காக பல அபாயங்களோடு குழந்தைகள் விளையாட்டை விளையாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்க்விட் கேம் தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

21.4 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்து எடுக்கப்பட்ட ஸ்க்விட் கேம் தொடர், தற்போது சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கலாம் என ப்ளூம்பெர்க் நிறுவனம் கணித்துள்ளது.

ஸ்க்விட் கேமைப் போலவே, மணி ஹெய்ஸ்ட் தொடரும் பரவலாக வெற்றி பெற்றது. அத்தொடரின் ஐந்தாவது சீசனின் முதல் பாகம் வெளியான முதல் நான்கு வார காலத்தில் 69 மில்லியன் (6.9 கோடி) பேரால் பார்க்கப்பட்டது. இவை இரண்டுமே ஆங்கில மொழியில் பிரதானமாக தயாரிக்கப்படாத தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"நாங்கள் இப்போது 45 நாடுகளில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் சினிமா படங்களை தயாரித்து வருகிறோம். மேலும் உலகம் முழுக்க உள்ள படைப்பாளர்கள் சமூகத்தினரோடும் ஆழமான உறவை ஏற்படுத்தி உள்ளோம்" என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தன் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

'கோப்ரா கை', 'டைகர் கிங்' போன்ற பிரபல தொடர்களின் அடுத்தடுத்த சீசன்கள் வரவிருப்பதால் கிறிஸ்துமஸ் காலத்தில் நிறைய புது பயனர்களை எதிர்பார்ப்பதாகவும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

அது போக ரொஆல்ட் தால் (Roald Dahl) கதை நிறுவனத்தையும் கையகப்படுத்த இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கான நெறிமுறை சார் அனுமதிகள் பெற வேண்டியுள்ளன. இந்த நிறுவனத்தை கையகப்படுத்திய பின், 'சார்லி', 'சாக்லேட் ஃபேக்டரி' 'மடில்டா' போன்ற தலைப்புகள் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.bbc.com/tamil/arts-and-culture-59005870

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஸ்க்விட் கேம் (தொடரை ) இங்கிலாந்து பள்ளிகள் தடை பண்ணும் முடிவில் இருக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

இந்த வார இறுதியில் பார்க்க இருக்கும் தொடர் இது

என் 16 வயது மகன் பார்த்து விட்டு, அப்படி ஒன்றும் பெரிசா நல்லா இல்லையப்பா என்று சொல்கின்றான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்கள் இரண்டுபேரும் பார்த்துமுடித்துவிட்டார்கள்.. நானும் லீவு நாளில் பார்க்கும் திட்டமுடன் உள்ளேன். இப்போது The Expanse தொடரை binge watching செய்கின்றேன்!

—-

02B1AA70-EAD6-4FF8-833C-2BE86C3FEAFB.webp
 
3B4884FC-3B1C-4E86-9ADB-5928D0A3C990.jpeg
 

 

Squid Games இணைய தொடரை இன்று தான் பார்த்து முடித்தேன் - நான் தொடர்ச்சியாக பார்த்த இரண்டாவது தொடர் இது.

 

1) கண்காணிப்பு சமூகத்தை எப்படி முதலீட்டியம் உண்டு பண்ணுகிறது, எப்படி நமது தன்னிலையை ஒரு பண்டமாகவும், வாழ்க்கையை ஒரு போட்டியாகவும் அது உருமாற்றுகிறது என்பதை கவனிப்பதில் எனக்கு ஒரு தனி ஆர்வமுண்டு. அது இந்த இணைய தொடர் என்னை ஈர்க்க ஒரு காரணம்.

 

2) அடுத்து, மிக அதிகமான தேய்வழக்குகளை தயக்கமின்றி பயன்படுத்துகிற தொடர் இது. அதே நேரம், காட்சிகளை பரபரப்பாக வேகமாக கொண்டு செல்லும் இதன் நேர்த்தியான திரைக்கதையையும் பாராட்ட வேண்டும். 

 

3) பெரும்பாலான காட்சிகள் கனமற்றவை, ஆனால் நன்றாக எடிட் செய்து ஒரு பதற்றத்தில் நம்மை வைக்கிறார்கள். உ.தா., போட்டி பங்கேற்பாளரான ஒரு நாற்பது வயதுப் பெண் கழிப்பறைக்கு சென்று தன் புழைக்குள் கையை விட்டு எதையோ சிரமப்பட்டு எடுக்கிறார். ஏதோ என்னமோ ஒருவேளை சின்ன சைஸ் துப்பாக்கியோ என நாம் இருக்கை நுனிக்கு வரும் போது பார்த்தால் சிகரெட் பாக்கெட். அநாயசமாக ஒரு சிகரெட்டை உருவி சாவதானமாக புகைக்கிறார். அடுத்து அங்கு கழிப்பறைக்குள் வந்து ஒரு இளம்பெண்ணான பங்கேற்பாளர் வந்து கூரையை உடைத்து மேலே ஏறுகிறார். மேலே ஏதோ நடக்கிறது, அந்த உண்மையை கண்டுபிடிக்கப் போகிறேன் என்கிறார். இந்த அம்மா தோளில் ஏறி நின்று மேலே செல்லுகிறார். அப்படி போராடி அவர் ஒரு சாதாரண விசயத்தை கண்டுபிடிக்கிறார். பெரிய குண்டான்களில் சர்க்கரைப் பாகை காய்ச்சுகிறார்கள். ஏன் எதற்கு, இதற்கும் அடுத்த நாள் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. ஆனால் அந்த பெண் கீழே இறங்கி பாதுகாப்பாக மீளும் வரை நமக்கு பக்குபக்கென இருக்கிறது. இப்படித்தான் ஒன்றுமில்லாத விசயத்தை வைத்து பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார்கள். இந்த தொடரில் சீக்வென்ஸ்கள் நிறைய இப்படி குட்டிக்குட்டியான கனமற்ற திகில் காட்சிகள் உள்ளன. முதல் முறை பார்க்க செமையாக இருக்கும்.

 

4) தேய்வழக்கான சங்கதிகள் அதிகம் என்றாலும் உள்ளீடாக (Shawshank Redemptionஇக் போல) ஒரு இருத்தலிய சரடு ஓடுகிறது. அது இத்தொடருக்கு ஒரு விழுமியத்தை, “ஆழத்தை” அளிக்கிறது.

 

5) இந்த தொடரில் நல்லவன் என யாருமே இல்லை. நாயகனிடம் அவன் தவறு செய்யும் போதும் ஒரு சின்ன தத்ததளிப்பு இருக்கிறது. அது அவனை களங்கமற்றவனாக காட்டுகிறது. இதை வைத்து ஒரு எதிர்-நாயக பாத்திரமாக ஆகாமல் அவனை நாயகனாக மாற்றி இருக்கிறார்கள் - அதற்கென்றே சில பல காட்சிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். நூலில் நடப்பது போன்ற காரியம் இது. ஜெயித்திருக்கிறார்கள். விளையாட்டுகளில் தன் பாதுகாப்புக்காக மற்றவரைக் கொன்றே நாயகன் கடைசி வரை நீடிக்க முடியும், வெல்ல முடியும். ஆனால் அப்படி அவன் சாதிக்கும் போது நமக்கு அவனிடத்து வெறுப்பு வராதபடி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது “புதுப்பேட்டை” உலகத்தினுள் “வேலையில்லா பட்டதாரி” தனுஷை நுழைத்தது போன்ற ஒரு திரைக்கதை இது.

 

6) இதில் ஒரு துப்பறிவாளர் வருகிறார். காணாமல் போன தன்னுடைய சகோதரனைத் தேடி விளையாட்டு நடக்கும் தீவுக்கு வருகிறார். அந்த பகுதி முழுக்க திராபையாக உள்ளது. Frontman எனப்படும் வில்லன் அவருடைய சகோதரன் என மொக்கையான திருப்பம் வேறு. இந்த துப்பறிவாளரை தீவுக்கு வெளியே விசாரிக்க செய்து இந்த விளையாட்டுகளை நடத்தும் கும்பலை அம்பலபடுத்த முயல்வதாக இருந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக கதை அமைந்திருக்கும்.

 

7) இத்தொடரின் கிளைமேக்ஸின் திருப்பங்கள் இன்னும் மொக்கையானவை. திரைக்கதையை எழுதும் போது நூற்றுக்கு மேல் பங்கேற்பாளர்கள் கரணம் தப்பினால் மரணம் விளையாட்டுகள் நடக்கும் தீவுக்கு அனுப்பப்பட்டால் என்னவாகும் எனும் ஒற்றைக் கேள்வியை வைத்து களமிறங்கி விட்டார்கள். அதன் பிறகு விளையாட்டுக்கு வெளியே பெரிய நெருக்கடிகளை உருவாக்க இயக்குநர் Hwang Dong-hyukக்குக்கு தெரியவில்லை என நினைக்கிறேன். முக்கியமாக நாயகனின் பிரதான விழைவை, ஆன்மீக நெருக்கடியை கதையின் துவக்கத்தில் நிறுவவில்லை. அதனாலே விளையாட்டுகளில் நாயகன் பெரும் தொகையை ஜெயித்த பின் பொருத்தமான கிளைமேக்ஸை உருவாக்கவும் தெரியாமல் சொதப்பி விட்டார்.

 

8. இத்தொடர் ஆரம்பிக்கும் போதே நாயகனே ஜெயிக்கப் போகிறான் எனத் தெரிகிறது. அப்படியே நடக்கிறது என்பதால் பெரிய திகைப்பு காட்சிகளின் முடிவில் இல்லை. இதுவே நமது “புதுப்பேட்டையில்” என்றால் பல இடங்களில் தனுஷ் எதிலாவது மாட்டிக்கொள்ளும் போது பிழைக்கவே வாய்ப்பில்லை எனத் தோன்றும். அங்கிருந்து அவர் எதையோ ஒன்றை பறிகொடுத்து உயிரையும் கூடுதல் அதிகாரத்தையும் பெறுவதை செல்வராகவனும் பாலகுமாரனும் நன்றாக சித்தரித்திருப்பார்கள். அப்படியான கச்சிதமான சவால்-வீழ்ச்சி-மீட்சி எனும் காட்சி அமைப்புகள் இத்தொடரில் இல்லை. கொஞ்சம் முயன்றால் தமிழர்களாலும் தெலுங்கர்களாலும் கொரியர்களை விஞ்ச முடியும் என எனக்கு இத்தொடரை பார்க்கும் போது தோன்றியது.

http://thiruttusavi.blogspot.com/2021/10/squid-games_16.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரே இரவில விடியவிடிய இருந்து பாத்துமுடிச்சனான்.. அதமாதிரிதான் மணிகெய்ஸ்ட் ஒரே இரவில் விடியவிடிய பாத்து முடிச்சனான்.. என்னால சஸ்பென்ஸ் எல்லாம் வச்சு வெயிட் பண்ணி பாக்கமுடியாது.. அதாலதான் தொடருவள் பாக்குரேல்ல.. படம் எண்டா ரெண்டு மணித்தியாலத்தில கேம் பினிஷ்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.