Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு மொழிவெறி உண்டா இல்லையா என்பதைப் போல நண்பர் சுரேஷ் வெங்கடாத்ரி ஒரு பதிவு எழுதி இருந்தார். அதன் எதிர்நிலையில் இருக்கும் இன்னொரு முகமாக இந்தப் பதிவை வாசிக்கலாம்.

நான் தற்போது வசிப்பது பெங்களூரு ரூரல் பகுதியில். முழுக்க கன்னடம் மட்டுமே சார்ந்து இயங்கக்கூடிய ஒரு கிராமப்பகுதி. இங்கு நகுலனுக்கு விளையாட்டுத் தோழர்கள் என ஓரிருவர் மட்டுமே இருக்க மற்றவர்கள் பெரும்பாலும் தோழிகளே (அது குறித்த விசாரணையைப் பின்னர் வைத்துக் கொள்வோம்.) அவர்களில் ஒரு பெண்ணுக்கு பத்து அல்லது பனிரெண்டு வயது இருக்கலாம். 

ஒரு நாள் மாலை சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று என்னிடம் வந்து பேசியவள் சொன்ன வார்த்தைகள் இவை: 

“அங்கிளுக்கு ஒரு விசயம் தெரியுமா? கூகிளில் உலகின் மிகக் கேவலமான மொழிகளில் ஒன்றெனத் தமிழைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

முதலாவது கேள்வி:  சில நாட்களுக்கு முன்னால் கன்னடம் சார்ந்து கூகிளில் வந்த சர்ச்சையை யாரோ அவளிடம் திரித்துச் சொல்லி இருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஆனால் அதில் ஏன் தமிழை இழுக்கிறார்கள்? எந்தப் புள்ளியில் தமிழ்/தமிழன் மீதான விரோதம் இங்கு உருவாகுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சிறு குழந்தைகளிடம் கூடவா?

இரண்டாவது கேள்வி: அந்த சங்கதியை என்னைத் தேடி வந்து சொல்ல வேண்டும் என அந்தப் பெண்ணுக்கு ஏன் தோன்றியது? நான் தமிழன் என்பதால்தானே? நீ இங்கு பிழைக்க வந்திருக்கிறாய், உன்னைச் சிறுமைப்படுத்தினாலும் நீ அதைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்கிற மனப்பான்மை அந்தச் சிறுமிக்கு எப்படி வந்தது? 

அந்தக் கேள்வியைக் கேட்ட மறுகணம் ஆத்திரமாக வந்தாலும் அடக்கிக் கொண்டு பொறுமையாகவே அவளுக்கு பதில் சொன்னேன். 

“ஒவ்வொரு மொழிக்கும் தனித்த அழகு உண்டு கண்ணா. எந்த மொழியும் எதனோடும் ஒப்பிடத் தாழ்ந்ததல்ல. யாரையும் மட்டம் தட்டிப் பேசக்கூடாது, சரியா?”

ஒரு இளக்காரச் சிரிப்புடன் அந்தச் சிறுமி தலையாட்டிச் சென்றாள். பேசாமல் கூகிளில் வந்த கன்னடம் குறித்த சர்ச்சையை அவளிடம் எடுத்துக் காட்டலாமா என்று தோன்றியது? பிறகு அவளுக்குச் சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என விட்டு விட்டேன்.

https://www.facebook.com/profile.php?id=1773270303

தோழமை மாநிலங்களில் தங்கள் மொழி உணர்வு, மாநில உணர்வைவிட தமிழை சிறுமைப்படுத்துவதில் ஒருவித சந்தோஷம் கிடைப்பதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். எங்கும் பராபரமாய் மொழி உணர்வு வியாபித்திருக்கும் கர்னாடகத்தில் அதுபிற மொழி குறிப்பாக சமஸ்கிருதமாகிவிடாத, தமிழின் மீதும், தமிழனின் மீது வெறுப்பாக பொதுபுத்தியில் இருக்கிறது. என்னுடைய கன்னட நண்பர்கள் எவ்வளவு நெருங்கியவர்களானாலும் நேரம் பார்த்து என்னை தமிழன் என்று கேலி செய்வதைக் கவனித்திருக்கிறேன். சொந்த நண்பனாச்சே அவனைக் காயப்படுத்தக்கூடாது என்றில்லாமல் திடுக்கென்று எதையாவது உளருவார்கள். ஒருமுறை தமிழ் வேறு நாடுகளில் தமிழர்கள் உள்ளார்களா என்று பேச்சு வந்தது நான் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே, அருகிருந்தவன் பொறுக்கமாட்டாமல், சரிவிடு பா நீங்கதான் உலகம் பூராவும் பரவி இருக்கீங்க. சுரண்டித் தின்ன பெங்களூரப்போல என்றான். எனக்கு அதை வளர்க்க விருப்பமில்லாமல் வேதனையுற்றேன். அதேபோல செல்வி ஜெயலலிதா ஜெயிலுக்குச் சென்ற சமயம்,  எனக்கு ஒரு இனம்புரியாத பயம். கலவரம் ஏதாவது நடக்குமா, அப்போது பிணக்கமாய் இருந்த மத்திய அரசு ஆட்சியைக் கைப்பற்ற பார்க்குமா என்று பலவித அச்சம். அந்த நேரமென்று பார்த்து என் கன்னட நண்பன் வந்து, உங்கம்மா இனி கர்னாநாடகா தண்ணிதான் குடிப்பா என்றான். அங்கிருக்கும் முதிர்ச்சியற்ற தேசிய உணர்வாளர்கள், அதை மாநில உணர்வாக பதிலீடு செய்கிறார்கள். நவம்பர் ஒன்று அதை இன்னும் தூபம் போடுகிறது. நமக்கு நாம் தமிழர் கட்சி இருந்தாலும், அது சித்தாந்த ரீதியில் தெளிவுள்ளவர்களால் ஓரளவு பகடி செய்யப்பட்டு கடந்து போக முயற்சிகள் நடக்கின்றன. கர்நாடகத்தின் அது பழத்தில் ஏற்றும் ஊசியப்போலத் தன் வேலையைப் பார்க்கிறது. அடிப்படை மானுடனற செய்யச்செய்கிறது. ஆந்திராவில் அதிகாரிகள், கல்விப் புலத்தார், ஆய்வாளர்கள் மத்தியிலும் இந்தப் போக்கு அதிகம்.

https://www.facebook.com/profile.php?id=100008528536874

தமிழர்களது மொழி குறித்த பெருமிதம் ஏனைய மாநிலங்களில் பெரும் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால் கொடுமை என்னவென்றால் தமிழ் இங்கே தள்ளாடி தத்தளித்துக்கொண்டு உள்ளது. தமிழர்களையும் தமிழையும் வெறுக்கக் காரணம் நமது மொழிப்பெருமிதமே. 

https://www.facebook.com/mani.jayaprakashvel

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தமிழ்மொழியினை சிதைத்து அழிய விடுவது மறைமுகமாக நடக்கிறது. தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் இல்லையாமே?

Link to comment
Share on other sites

On 23/10/2021 at 09:43, ஏராளன் said:

தமிழ்நாட்டில் தமிழ்மொழியினை சிதைத்து அழிய விடுவது மறைமுகமாக நடக்கிறது. தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் இல்லையாமே?

இலங்கையில் 1974ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு முதல்வரை   தாய்மொழி தமிழில் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தமிழரை இனவெறி சிங்கள அரசு கட்டாயப்படுத்தியது. இதனால் தமிழருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ்நாடு தமிழ்மக்களுக்கு மொழி சுதந்திரம் கொடுத்து வாழ வழிசெய்திருக்கிறது. அதனால் சுந்தர் பிச்சை இன்று கூகிள் நிறுவனத்தின் அதியுயர் நிறைவேற்று அதிகாரியாக முடிந்திருக்கிறது. சிங்கள அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு தமிழில் படித்த நானும் நீங்களும் யாழ் களத்தில் குப்பை கொட்டத்தான் தகுதியடைந்திருக்கிறோம்.🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இலங்கையில் 1974ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு முதல்வரை   தாய்மொழி தமிழில் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தமிழரை இனவெறி சிங்கள அரசு கட்டாயப்படுத்தியது. இதனால் தமிழருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ்நாடு தமிழ்மக்களுக்கு மொழி சுதந்திரம் கொடுத்து வாழ வழிசெய்திருக்கிறது. அதனால் சுந்தர் பிச்சை இன்று கூகிள் நிறுவனத்தின் அதியுயர் நிறைவேற்று அதிகாரியாக முடிந்திருக்கிறது. சிங்கள அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு தமிழில் படித்த நானும் நீங்களும் யாழ் களத்தில் குப்பை கொட்டத்தான் தகுதியடைந்திருக்கிறோம்.🥲

ஒழுங்கா படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் சிங்களவன் அது இது என்று கதை வேறு .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2021 at 17:43, ஏராளன் said:

தமிழ்நாட்டில் தமிழ்மொழியினை சிதைத்து அழிய விடுவது மறைமுகமாக நடக்கிறது. தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் இல்லையாமே?

தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்வி கட்டாயம் இல்லாமலேயே சிறந்த இலக்கியங்கள், அறிவியல் கட்டுரைகள் என்று நிறைய தமிழில் வந்துகொண்டிருக்கின்றது. கணியம் என்ற அறக்கட்டளை அமைப்பு கணிநுட்பத்தை தமிழில் கொண்டுவருகின்றது. 

ஆக, கட்டாயமோ, கட்டாயமில்லையோ மொழி வளர அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும், கல்விச் செயற்பாட்டாளர்களும் வேலைசெய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்வி கட்டாயம் இல்லாமலேயே சிறந்த இலக்கியங்கள், அறிவியல் கட்டுரைகள் என்று நிறைய தமிழில் வந்துகொண்டிருக்கின்றது. கணியம் என்ற அறக்கட்டளை அமைப்பு கணிநுட்பத்தை தமிழில் கொண்டுவருகின்றது. 

ஆக, கட்டாயமோ, கட்டாயமில்லையோ மொழி வளர அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும், கல்விச் செயற்பாட்டாளர்களும் வேலைசெய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

 

அப்படி இல்லை.

பெரு நகரங்களை் தாண்டிணால், தமிழ் மொழிக் கல்வி தானே இன்னும்.

இவர்கள் செய்ய தவறியது என்னவெனில், இலங்கையில் உள்ளது போல, நீஙகள் எம்மொழியிலும் படிக்கலாம். ஆனால் தாய் மொழி சித்தியடையாவிடில், ஓ லெவல் முமுவதும் பெயில்.... ( இது அண்மையில் கேள்விப்பட்டது, தவறானதல்ல என நிணைக்கிறேன்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இலங்கையில் உள்ளது போல, நீஙகள் எம்மொழியிலும் படிக்கலாம். ஆனால் தாய் மொழி சித்தியடையாவிடில், ஓ லெவல் முமுவதும் பெயில்.... ( இது அண்மையில் கேள்விப்பட்டது, தவறானதல்ல என நிணைக்கிறேன்)

ஆறு கட்டாய பாடங்களில் முதல்மொழியும் உள்ளது.  இக் கட்டாய பாடங்களில் ஒன்றில் சித்தியடையாவிட்டாலும் ஒ லெவெல் சித்தி கிடையாது.

கட்டாய பாடங்கள்:

முதல் மொழி, சமயம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக தமிழ் மொழி திட்டமிட்டு நாசூக்காக ஓரங்கட்டப்படுகின்றது.......புலம்பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் எழுத வாசிக்க படிப்பதெல்லாம் மிக குறைவானதே .......ஆனால் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் எண்ணத்தை சொல்வது......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ஆறு கட்டாய பாடங்களில் முதல்மொழியும் உள்ளது.  இக் கட்டாய பாடங்களில் ஒன்றில் சித்தியடையாவிட்டாலும் ஒ லெவெல் சித்தி கிடையாது.

கட்டாய பாடங்கள்:

முதல் மொழி, சமயம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு

சமய பாடத்தில் , பொழிப்புரை எழுத வந்த தேவாரம்; கோழி கூவ.... பொருது வெண் சங்கே......

காலையில எதையோ நிணைத்துப் பார்த்தேன்.... வந்தது.... பாஸ்....

சோதணைகள்...... அதிஸ்டமும் வேணும்.... 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

பொதுவாக தமிழ் மொழி திட்டமிட்டு நாசூக்காக ஓரங்கட்டப்படுகின்றது.......புலம்பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் எழுத வாசிக்க படிப்பதெல்லாம் மிக குறைவானதே .......ஆனால் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் எண்ணத்தை சொல்வது......!   

ஆங்கில கல்வி முக்கியமானது.....

ஆனாலும் தமிழை கட்டாய பாடமாக்கினால்..... அதுவே சரியான நடவடிக்கை. தமிழகம், இலங்கையை பின்பற்ற வேண்டும்.

அங்குள்ள சிக்கல், தமிழ் என்ற சொல்லை விடுத்து, தாய் மொழி என்றால், பல மொழியில் கற்பிக்க வேண்டிய சிக்கல். இலங்கையில், இரு மொழிகள், என்பதால் பிரச்சணை இல்லை.

என்னதான் சொன்னாலும், இலங்கை கல்விக் கொள்கை மிக தரமானது. உலகில், (அவரவர்) சமயக்கல்வியை மூன்றாம் வகுப்பில் இருந்து பல்கலைகழகம் வரை கற்பிப்பது இலங்கை மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடபகுதியில், 85% வீதமானோர் தமிழகத்தில் இருந்து வரும் டிவி குப்பைகளை பார்பதால், கல்விச் சீரழிவு நடக்கின்றது என இலங்கை அரச அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற சந்திப்பில் சொல்லி உள்ளனர்.

தமிழ் மாணவருக்காக கல்வி்ச் சானல் ஒன்றை ரூபவாகினி நடாத்துவதாகவும், அதனைப் பயன்படுத்துமாறும் கோரி உள்ளனர்.

https://www.dailymirror.lk/latest_news/85-of-northern-people-accustomed-to-watching-Indian-television-channels/342-223168

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒழுங்கா படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் சிங்களவன் அது இது என்று கதை வேறு .🤣

சிரித்து… வயிறு நோகுது. 😂 🤣

3 hours ago, கற்பகதரு said:

சிங்கள அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு தமிழில் படித்த நானும் நீங்களும் யாழ் களத்தில் குப்பை கொட்டத்தான் தகுதியடைந்திருக்கிறோம்.🥲

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பொதுவாக தமிழ் மொழி திட்டமிட்டு நாசூக்காக ஓரங்கட்டப்படுகின்றது.......புலம்பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் எழுத வாசிக்க படிப்பதெல்லாம் மிக குறைவானதே .......ஆனால் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் எண்ணத்தை சொல்வது......!   

புலம்பெயரில் எங்கள்  விரலால் எங்கள் கண்களை குத்திக்கொள்கிறோம் .

அநேக புலம்பெயர் பிள்ளைகள் தமிழ் வேப்பம்காயாக்கி  உள்ளனர் அவர்களுக்கு படிப்பிக்க என்று போன  ஆசிரியர்கள் செய்த வேலையால் .

தெரிந்த சிறுவனிடம் ஏன்  இரண்டாவது பாடமாக தமிழை  தெரிவு செய்யாமல் பிரஞ்சு மொழியை தெரிவு செய்தாய் அது தமிழை விட  கஷ்டமல்லவோ ? பதில் அது கஷ்ட்டம் தான் ஆனால் எனக்கு தமிழ் மொழி படிப்பிக்கும் டீச்சரை பிடிக்கவில்லை அவ தடியுடன் தான் எப்பவும் பாடம் சொல்லிக்கொள்கிறார் மற்றைய கிளாஸ் டீச்சர்கள் அப்படி இல்லை என்கிறார் .

பிரச்சனை  எங்கு என்று தெரிந்தும் தெரியாதது போல் நடித்துக்கொண்டு இருப்பது பெரியவர்களாகிய நாம்தான் .

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

இலங்கையின் வடபகுதியில், 85% வீதமானோர் தமிழகத்தில் இருந்து வரும் டிவி குப்பைகளை பார்பதால், கல்விச் சீரழிவு நடக்கின்றது என இலங்கை அரச அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற சந்திப்பில் சொல்லி உள்ளனர்.

என்ன நாதம்ஸ், இங்கிலிசு மக்கரடிக்குது? லங்காவில படிச்சதோ? அப்பிடியே தெரியுது.


It has been revealed that about 85% of the people in the North are accustomed to watching Indian television channels and as a result children in those areas have less general knowledge of events in the country.

நீங்கள் தந்த இணைப்பில் தமிழகம் பற்றியோ, அங்கிருந்து வரும் டிவி “குப்பை” என்றோ, கல்வி “சீரழிவு” என்றோ எதுவுமே இல்லையே? மேலே அப்பிடியே இங்கிலிசிலேயே தந்திருக்கிறேன் மீண்டும் பாருங்கள். சரியான மொழிபையர்ப்பின்படி    சொல்லப்பட்டிருப்பது, வடக்கில் உள்ள 85 வீதமான மக்கள் இந்திய தொலைக்காட்சி பார்ப்பதால் அவர்களுக்கு நாட்டில் இடம்பெறும் விடயங்கள் பற்றிய பொது அறிவு குறைவாக இருக்கிறது என்பதாகும். அதன் விளக்கம், வடக்கு தமிழருக்கு இந்திய தொலைக்காட்சி தாராளமாக கல்வியையும், உலகறிவையும், இந்தியா பற்றிய அறிவையும் வளங்கிவருகிறது, ஆனால் சிங்களநாட்டில் நடப்பதை மக்கள் அறிய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

புலம்பெயரில் எங்கள்  விரலால் எங்கள் கண்களை குத்திக்கொள்கிறோம் .

அநேக புலம்பெயர் பிள்ளைகள் தமிழ் வேப்பம்காயாக்கி  உள்ளனர் அவர்களுக்கு படிப்பிக்க என்று போன  ஆசிரியர்கள் செய்த வேலையால் .

தெரிந்த சிறுவனிடம் ஏன்  இரண்டாவது பாடமாக தமிழை  தெரிவு செய்யாமல் பிரஞ்சு மொழியை தெரிவு செய்தாய் அது தமிழை விட  கஷ்டமல்லவோ ? பதில் அது கஷ்ட்டம் தான் ஆனால் எனக்கு தமிழ் மொழி படிப்பிக்கும் டீச்சரை பிடிக்கவில்லை அவ தடியுடன் தான் எப்பவும் பாடம் சொல்லிக்கொள்கிறார் மற்றைய கிளாஸ் டீச்சர்கள் அப்படி இல்லை என்கிறார் .

பிரச்சனை  எங்கு என்று தெரிந்தும் தெரியாதது போல் நடித்துக்கொண்டு இருப்பது பெரியவர்களாகிய நாம்தான் .

ஒன்றிரண்டு பாடசாலைகளில் இங்கு பிறந்து வளர்ந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகள் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் படிப்பிக்கின்றனர். அவர்களின் கற்பித்தல் முறை சிறுவர்களைக் கவர்வதால், தமிழ் படிப்பதிலும் விருப்பம் இளவயதிலேயே ஊட்டப்படுகின்றது.

புலம்பெயர் நாட்டு கற்பித்தல் முறைகளுக்கு பரிச்சயமற்ற outdated syllabus உடன் கற்பிக்கும் ஆசிரியர்களால் தமிழ் படிப்பதில் சிறுவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போவது உண்மைதான். 

Link to comment
Share on other sites

10 minutes ago, கிருபன் said:

ஒன்றிரண்டு பாடசாலைகளில் இங்கு பிறந்து வளர்ந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகள் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் படிப்பிக்கின்றனர். அவர்களின் கற்பித்தல் முறை சிறுவர்களைக் கவர்வதால், தமிழ் படிப்பதிலும் விருப்பம் இளவயதிலேயே ஊட்டப்படுகின்றது.

புலம்பெயர் நாட்டு கற்பித்தல் முறைகளுக்கு பரிச்சயமற்ற outdated syllabus உடன் கற்பிக்கும் ஆசிரியர்களால் தமிழ் படிப்பதில் சிறுவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போவது உண்மைதான். 

என் பிள்ளைகள் இருவரும் தமிழ் சரளமாக கதைப்பார்கள். ஆனால் ஒரு சில தமிழ் (வயதான) ஆசிரியைகளால் தமிழ் பாடசாலைக்கு செல்வதை எப்பவோ நிப்பாட்டியதால் எழுத வாசிக்க முடியாது அவர்களுக்கு. ஒரு தமிழ் ஆசிரியை சனியன், மூதேசி என்றெல்லாம் திட்டியதால் நாங்களே புகார் கொடுக்க வேண்டி வந்தது.

இப்ப கேட்டால், Google translator கொண்டு வாசிப்போம் என்று பதில் தருகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

என்ன நாதம்ஸ், இங்கிலிசு மக்கரடிக்குது? லங்காவில படிச்சதோ? அப்பிடியே தெரியுது.


It has been revealed that about 85% of the people in the North are accustomed to watching Indian television channels and as a result children in those areas have less general knowledge of events in the country.

நீங்கள் தந்த இணைப்பில் தமிழகம் பற்றியோ, அங்கிருந்து வரும் டிவி “குப்பை” என்றோ, கல்வி “சீரழிவு” என்றோ எதுவுமே இல்லையே? மேலே அப்பிடியே இங்கிலிசிலேயே தந்திருக்கிறேன் மீண்டும் பாருங்கள். சரியான மொழிபையர்ப்பின்படி    சொல்லப்பட்டிருப்பது, வடக்கில் உள்ள 85 வீதமான மக்கள் இந்திய தொலைக்காட்சி பார்ப்பதால் அவர்களுக்கு நாட்டில் இடம்பெறும் விடயங்கள் பற்றிய பொது அறிவு குறைவாக இருக்கிறது என்பதாகும். அதன் விளக்கம், வடக்கு தமிழருக்கு இந்திய தொலைக்காட்சி தாராளமாக கல்வியையும், உலகறிவையும், இந்தியா பற்றிய அறிவையும் வளங்கிவருகிறது, ஆனால் சிங்களநாட்டில் நடப்பதை மக்கள் அறிய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதாகும்.

யூட்டர்,

நான் எனது கருத்தை செய்தியின் பின்னனியாக பதிந்தால், அது தந்த இணைப்பில் இல்லை எண்டால் என்னத்தை சொல்ல?

தவிர நான் மொழிபெயர்ப்பு என்று எங்கும் சொல்லவில்லை.

இந்தியாவில்பல மொழிகள் உண்டு. வடக்கே உள்வர்கள் பார்க்கும் மொழி தமிழகத்தின் சீரியல் நாடக குப்பை தான் என்று உங்களுக்கு புரிய வைக்க, மேலே பெருமாள் சொன்னதை தான் சொல்ல வேணும்....

படிக்கிற காலத்தில, ஒழுங்கா படியாம, சிங்களம், இன வெறி அரசு எண்டு இப்ப கதை விடப்படாது....

வடக்கில் மட்டுமல்ல, புலம் பெயர்தேசத்திலும், அந்த குப்பை ஓக்டோபஸ் மாதிரி கையை விரித்து பரவி விட்டது.

தவிர, வேற்று மொழியாளர்கள் என்பதால், கொழும்பில் சற்று நாகரிகமாக சொல்லியிருக்கிறார்கள்.

நான் அப்படி சொல்ல வேண்டிய தேவையில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

என் பிள்ளைகள் இருவரும் தமிழ் சரளமாக கதைப்பார்கள். ஆனால் ஒரு சில தமிழ் (வயதான) ஆசிரியைகளால் தமிழ் பாடசாலைக்கு செல்வதை எப்பவோ நிப்பாட்டியதால் எழுத வாசிக்க முடியாது அவர்களுக்கு. ஒரு தமிழ் ஆசிரியை சனியன், மூதேசி என்றெல்லாம் திட்டியதால் நாங்களே புகார் கொடுக்க வேண்டி வந்தது.

இப்ப கேட்டால், Google translator கொண்டு வாசிப்போம் என்று பதில் தருகின்றார்கள்.

நிழலி உதொரு கதையோ.. கவிதை கட்டுரை எண்டு தமிழில் புலமை உள்ள நீங்களே இப்படி சொல்லலாமா..? சனியன் மூதேசி எண்டா என்ன குறைஞ்சுபோமோ..? அந்நிய நாட்டில இப்படியாவது ஒரு சான்ஸ் தமிழ் படிக்க என் பிள்ளைக்கு கிடைக்குமானால் நான் பிள்ளைக்கு ரீச்சற்ற குணம் நமக்கு தேவை இல்லை நமக்கு மொழிதான் தேவை கொஞ்சநாள் பல்ல கடிச்சுகொண்டு படி வேற ரீச்சர் வந்தா மாறுவம் எண்டு சமாளிச்சு அனுப்பி இருப்பன்.. எனக்கு என் பிள்ளை எப்படியாவது என் மொழியை கற்கவேணும்.. அதை இழந்துவிட்டு இப்ப நீங்கள் சொல்லுறமாரி என்ர பிள்ளை தமிழ்வாசிக்கமாட்டான் எண்டு வந்து நான் சொல்லுறதை என்னால கனவிலும் நினைச்சு பாக்கமுடியாது ஜீரணிக்கவும் முடியாது.. என்னால என் பிள்ளைக்கு தமிழில் என் உணர்வுகளை எண்ணங்களை சிந்தனைகளை என் கனவுகளை அதே உயிர்ப்போடு பரிமாறிக்கொள்வதுபோல் வேறு எந்த மொழியிலும் பரிமாறுவதை நினைத்துகூட பார்க்கமுடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்குப் போய்த் தான் தமிழ் படிக்க வேண்டுமென்பதில்லை.

பிள்ளைகளுக்கு தமிழ் தெரிய வேண்டுமென்றால் அதை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

அதைத் தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு செய்தோம்.

Link to comment
Share on other sites

10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நிழலி உதொரு கதையோ.. கவிதை கட்டுரை எண்டு தமிழில் புலமை உள்ள நீங்களே இப்படி சொல்லலாமா..? சனியன் மூதேசி எண்டா என்ன குறைஞ்சுபோமோ..? அந்நிய நாட்டில இப்படியாவது ஒரு சான்ஸ் தமிழ் படிக்க என் பிள்ளைக்கு கிடைக்குமானால் நான் பிள்ளைக்கு ரீச்சற்ற குணம் நமக்கு தேவை இல்லை நமக்கு மொழிதான் தேவை கொஞ்சநாள் பல்ல கடிச்சுகொண்டு படி வேற ரீச்சர் வந்தா மாறுவம் எண்டு சமாளிச்சு அனுப்பி இருப்பன்.. எனக்கு என் பிள்ளை எப்படியாவது என் மொழியை கற்கவேணும்.. அதை இழந்துவிட்டு இப்ப நீங்கள் சொல்லுறமாரி என்ர பிள்ளை தமிழ்வாசிக்கமாட்டான் எண்டு வந்து நான் சொல்லுறதை என்னால கனவிலும் நினைச்சு பாக்கமுடியாது ஜீரணிக்கவும் முடியாது.. என்னால என் பிள்ளைக்கு தமிழில் என் உணர்வுகளை எண்ணங்களை சிந்தனைகளை என் கனவுகளை அதே உயிர்ப்போடு பரிமாறிக்கொள்வதுபோல் வேறு எந்த மொழியிலும் பரிமாறுவதை நினைத்துகூட பார்க்கமுடியாது..

நான் தமிழில் எழுதுவதற்கு காரணம் தமிழ் மொழி தவிர எனக்கு வேறு மொழிகள் தெரியாமையால் தான். ஆங்கில அறிவு அன்றாடம் என் தொழிலை செய்வதற்கான அளவு தான் உள்ளதால் தமிழில் எழுதுகின்றேன். 

ஆனால் இங்குள்ள பிள்ளைகளுக்கு தமிழ் மொழி என்பது இரண்டாம் மூன்றாம் பட்சம் தான். தம் நண்பர்களுடன், மச்சான் / மச்சாள்களுடன் மற்றும் எங்கு வெளியே சென்றாலும் அவர்கள் கதைப்பது ஆங்கிலம் அல்லது அந்தந்த நாடுகளில் உள்ள முதன்மை மொழியில் தான். அப்படி இருக்கும் போது, 'உன் தாய் மொழி தமிழ் ஆகவே அதை நீ எவ்வளவு மோசமான ஆசிரியர்கள் கிடைத்தாலும் அதைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டும்' என்று திணிக்க முடியாது. அவ்வாறு திணிப்பதால் ஒரு பலனும் ஏற்படாது - வெறுப்பு மட்டுமே வளரும்.

அத்துடன் என் கனவை, ஆசையை, உணர்வை என் பிள்ளைகள் மீது திணிப்பது என் பண்பும் அல்ல. அவர்களுக்கான உலகை அவர்களே உருவாக்கட்டும்.

உங்கள் பிள்ளைகள் தமிழ் கற்று தமிழ் மொழியை வளர்க்க என் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

இங்குள்ள ஒரு தமிழ் அமைப்புக்காக  அண்மையில் என் உறவினர் ஒருவரின் இரண்டு பிள்ளைகள் நவராத்திரியின் பெருமை பற்றி ஒரு சிறு பேச்சை பேசியும் ஆத்திசூடியை முழுமையாக சொல்லியும் ஒரு காணொளி நவராத்திரிக்காக தயாரித்து வெளியிட்டு இருந்தார்கள். சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு லைக்குகளை அள்ளியும் பாராட்டுகளையும் பெற்று இருந்தார்கள்.

கடந்த வாரம் அச் சிறுவர்களை கண்டு கதைக்கும் போது, ஆத்திசூடியில் சொல்லப்பட்ட சிலவற்றின் அர்த்தம் / பொருள் என்ன என்று கேட்க, அவர்களுக்கு எதுவுமே தெரிந்து இருக்கவில்லை. நவராத்திரி என்ற சொல்லில் இருக்கும் 'நவம்' என்றதன் அர்த்தம் கூட தெரிந்து இருக்கவில்லை. கிளிப்பிள்ளை போன்று தாய் மற்றும் ஆசிரியை சொன்னதை அப்படியே நிகழ்ச்சியில் ஒப்புவித்து இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

இவ்வாறுதான் இங்குள்ளவர்களின் தமிழ் படிப்பித்தலும் தமிழ் பேசும் பெருமையும் வளர்கின்றது போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

இங்குள்ள ஒரு தமிழ் அமைப்புக்காக  அண்மையில் என் உறவினர் ஒருவரின் இரண்டு பிள்ளைகள் நவராத்திரியின் பெருமை பற்றி ஒரு சிறு பேச்சை பேசியும் ஆத்திசூடியை முழுமையாக சொல்லியும் ஒரு காணொளி நவராத்திரிக்காக தயாரித்து வெளியிட்டு இருந்தார்கள். சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு லைக்குகளை அள்ளியும் பாராட்டுகளையும் பெற்று இருந்தார்கள்.

கடந்த வாரம் அச் சிறுவர்களை கண்டு கதைக்கும் போது, ஆத்திசூடியில் சொல்லப்பட்ட சிலவற்றின் அர்த்தம் / பொருள் என்ன என்று கேட்க, அவர்களுக்கு எதுவுமே தெரிந்து இருக்கவில்லை. நவராத்திரி என்ற சொல்லில் இருக்கும் 'நவம்' என்றதன் அர்த்தம் கூட தெரிந்து இருக்கவில்லை. கிளிப்பிள்ளை போன்று தாய் மற்றும் ஆசிரியை சொன்னதை அப்படியே நிகழ்ச்சியில் ஒப்புவித்து இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

இவ்வாறுதான் இங்குள்ளவர்களின் தமிழ் படிப்பித்தலும் தமிழ் பேசும் பெருமையும் வளர்கின்றது போலும்.

மன்னிக்க வேணும்.....

எனக்கும் ஆத்திசூடி தெரியாது.....

தவிர... நவ(ம்) என்பது... வடமொழிச் சொல் தானே....

Link to comment
Share on other sites

Just now, Nathamuni said:

 

தவிர... நவ(ம்) என்பது... வடமொழிச் சொல் தானே....

நவராத்திரியே வடமொழிச் சொல் மட்டுமல்லாது ஆரிய பெண் கடவுள்களை கொண்டாடும் ஒன்று தானே.

2 minutes ago, Nathamuni said:

...எனக்கும் தெியாது...

 

இதன் அர்த்தமும் அம்மான எனக்கு தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

இதன் அர்த்தமும் அம்மான எனக்கு தெரியாது

சரியா எழுதி விட்டேன்.... 😂

இரண்டு 20 வயதுப் பெடியள்.... ரஜனியின் அண்ணாத்தே பார்பது குறித்து பேசுவதை கேட்டு....

எனக்கென்னவோ... இந்த தமிழ் படங்கள் இருக்கும் வரை, தமிழ் வாழும் போலுள்ளது.... 😁

Link to comment
Share on other sites

8 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேணும்.....

எனக்கும் ஆத்திசூடி தெரியாது.....

 

ஆத்திசூடி தெரியாமல் இருப்பது தவறல்ல நாதம். ஆனால் அதன் அர்த்தம் தெரியாது கிளிப்பிள்ளை போல அதை மனனம் செய்து ஒப்புவித்து விட்டு 'எனக்கு என் பிள்ளைக்கு தமிழ் தெரியும்' என உலகத்தை ஏமாற்ற நினைப்பது தான் தவறு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.