Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு மொழிவெறி உண்டா இல்லையா என்பதைப் போல நண்பர் சுரேஷ் வெங்கடாத்ரி ஒரு பதிவு எழுதி இருந்தார். அதன் எதிர்நிலையில் இருக்கும் இன்னொரு முகமாக இந்தப் பதிவை வாசிக்கலாம்.

நான் தற்போது வசிப்பது பெங்களூரு ரூரல் பகுதியில். முழுக்க கன்னடம் மட்டுமே சார்ந்து இயங்கக்கூடிய ஒரு கிராமப்பகுதி. இங்கு நகுலனுக்கு விளையாட்டுத் தோழர்கள் என ஓரிருவர் மட்டுமே இருக்க மற்றவர்கள் பெரும்பாலும் தோழிகளே (அது குறித்த விசாரணையைப் பின்னர் வைத்துக் கொள்வோம்.) அவர்களில் ஒரு பெண்ணுக்கு பத்து அல்லது பனிரெண்டு வயது இருக்கலாம். 

ஒரு நாள் மாலை சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று என்னிடம் வந்து பேசியவள் சொன்ன வார்த்தைகள் இவை: 

“அங்கிளுக்கு ஒரு விசயம் தெரியுமா? கூகிளில் உலகின் மிகக் கேவலமான மொழிகளில் ஒன்றெனத் தமிழைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

முதலாவது கேள்வி:  சில நாட்களுக்கு முன்னால் கன்னடம் சார்ந்து கூகிளில் வந்த சர்ச்சையை யாரோ அவளிடம் திரித்துச் சொல்லி இருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஆனால் அதில் ஏன் தமிழை இழுக்கிறார்கள்? எந்தப் புள்ளியில் தமிழ்/தமிழன் மீதான விரோதம் இங்கு உருவாகுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சிறு குழந்தைகளிடம் கூடவா?

இரண்டாவது கேள்வி: அந்த சங்கதியை என்னைத் தேடி வந்து சொல்ல வேண்டும் என அந்தப் பெண்ணுக்கு ஏன் தோன்றியது? நான் தமிழன் என்பதால்தானே? நீ இங்கு பிழைக்க வந்திருக்கிறாய், உன்னைச் சிறுமைப்படுத்தினாலும் நீ அதைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்கிற மனப்பான்மை அந்தச் சிறுமிக்கு எப்படி வந்தது? 

அந்தக் கேள்வியைக் கேட்ட மறுகணம் ஆத்திரமாக வந்தாலும் அடக்கிக் கொண்டு பொறுமையாகவே அவளுக்கு பதில் சொன்னேன். 

“ஒவ்வொரு மொழிக்கும் தனித்த அழகு உண்டு கண்ணா. எந்த மொழியும் எதனோடும் ஒப்பிடத் தாழ்ந்ததல்ல. யாரையும் மட்டம் தட்டிப் பேசக்கூடாது, சரியா?”

ஒரு இளக்காரச் சிரிப்புடன் அந்தச் சிறுமி தலையாட்டிச் சென்றாள். பேசாமல் கூகிளில் வந்த கன்னடம் குறித்த சர்ச்சையை அவளிடம் எடுத்துக் காட்டலாமா என்று தோன்றியது? பிறகு அவளுக்குச் சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என விட்டு விட்டேன்.

https://www.facebook.com/profile.php?id=1773270303

தோழமை மாநிலங்களில் தங்கள் மொழி உணர்வு, மாநில உணர்வைவிட தமிழை சிறுமைப்படுத்துவதில் ஒருவித சந்தோஷம் கிடைப்பதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். எங்கும் பராபரமாய் மொழி உணர்வு வியாபித்திருக்கும் கர்னாடகத்தில் அதுபிற மொழி குறிப்பாக சமஸ்கிருதமாகிவிடாத, தமிழின் மீதும், தமிழனின் மீது வெறுப்பாக பொதுபுத்தியில் இருக்கிறது. என்னுடைய கன்னட நண்பர்கள் எவ்வளவு நெருங்கியவர்களானாலும் நேரம் பார்த்து என்னை தமிழன் என்று கேலி செய்வதைக் கவனித்திருக்கிறேன். சொந்த நண்பனாச்சே அவனைக் காயப்படுத்தக்கூடாது என்றில்லாமல் திடுக்கென்று எதையாவது உளருவார்கள். ஒருமுறை தமிழ் வேறு நாடுகளில் தமிழர்கள் உள்ளார்களா என்று பேச்சு வந்தது நான் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே, அருகிருந்தவன் பொறுக்கமாட்டாமல், சரிவிடு பா நீங்கதான் உலகம் பூராவும் பரவி இருக்கீங்க. சுரண்டித் தின்ன பெங்களூரப்போல என்றான். எனக்கு அதை வளர்க்க விருப்பமில்லாமல் வேதனையுற்றேன். அதேபோல செல்வி ஜெயலலிதா ஜெயிலுக்குச் சென்ற சமயம்,  எனக்கு ஒரு இனம்புரியாத பயம். கலவரம் ஏதாவது நடக்குமா, அப்போது பிணக்கமாய் இருந்த மத்திய அரசு ஆட்சியைக் கைப்பற்ற பார்க்குமா என்று பலவித அச்சம். அந்த நேரமென்று பார்த்து என் கன்னட நண்பன் வந்து, உங்கம்மா இனி கர்னாநாடகா தண்ணிதான் குடிப்பா என்றான். அங்கிருக்கும் முதிர்ச்சியற்ற தேசிய உணர்வாளர்கள், அதை மாநில உணர்வாக பதிலீடு செய்கிறார்கள். நவம்பர் ஒன்று அதை இன்னும் தூபம் போடுகிறது. நமக்கு நாம் தமிழர் கட்சி இருந்தாலும், அது சித்தாந்த ரீதியில் தெளிவுள்ளவர்களால் ஓரளவு பகடி செய்யப்பட்டு கடந்து போக முயற்சிகள் நடக்கின்றன. கர்நாடகத்தின் அது பழத்தில் ஏற்றும் ஊசியப்போலத் தன் வேலையைப் பார்க்கிறது. அடிப்படை மானுடனற செய்யச்செய்கிறது. ஆந்திராவில் அதிகாரிகள், கல்விப் புலத்தார், ஆய்வாளர்கள் மத்தியிலும் இந்தப் போக்கு அதிகம்.

https://www.facebook.com/profile.php?id=100008528536874

தமிழர்களது மொழி குறித்த பெருமிதம் ஏனைய மாநிலங்களில் பெரும் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால் கொடுமை என்னவென்றால் தமிழ் இங்கே தள்ளாடி தத்தளித்துக்கொண்டு உள்ளது. தமிழர்களையும் தமிழையும் வெறுக்கக் காரணம் நமது மொழிப்பெருமிதமே. 

https://www.facebook.com/mani.jayaprakashvel

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தமிழ்மொழியினை சிதைத்து அழிய விடுவது மறைமுகமாக நடக்கிறது. தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் இல்லையாமே?

Link to comment
Share on other sites

On 23/10/2021 at 09:43, ஏராளன் said:

தமிழ்நாட்டில் தமிழ்மொழியினை சிதைத்து அழிய விடுவது மறைமுகமாக நடக்கிறது. தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் இல்லையாமே?

இலங்கையில் 1974ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு முதல்வரை   தாய்மொழி தமிழில் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தமிழரை இனவெறி சிங்கள அரசு கட்டாயப்படுத்தியது. இதனால் தமிழருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ்நாடு தமிழ்மக்களுக்கு மொழி சுதந்திரம் கொடுத்து வாழ வழிசெய்திருக்கிறது. அதனால் சுந்தர் பிச்சை இன்று கூகிள் நிறுவனத்தின் அதியுயர் நிறைவேற்று அதிகாரியாக முடிந்திருக்கிறது. சிங்கள அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு தமிழில் படித்த நானும் நீங்களும் யாழ் களத்தில் குப்பை கொட்டத்தான் தகுதியடைந்திருக்கிறோம்.🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இலங்கையில் 1974ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு முதல்வரை   தாய்மொழி தமிழில் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தமிழரை இனவெறி சிங்கள அரசு கட்டாயப்படுத்தியது. இதனால் தமிழருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ்நாடு தமிழ்மக்களுக்கு மொழி சுதந்திரம் கொடுத்து வாழ வழிசெய்திருக்கிறது. அதனால் சுந்தர் பிச்சை இன்று கூகிள் நிறுவனத்தின் அதியுயர் நிறைவேற்று அதிகாரியாக முடிந்திருக்கிறது. சிங்கள அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு தமிழில் படித்த நானும் நீங்களும் யாழ் களத்தில் குப்பை கொட்டத்தான் தகுதியடைந்திருக்கிறோம்.🥲

ஒழுங்கா படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் சிங்களவன் அது இது என்று கதை வேறு .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2021 at 17:43, ஏராளன் said:

தமிழ்நாட்டில் தமிழ்மொழியினை சிதைத்து அழிய விடுவது மறைமுகமாக நடக்கிறது. தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் இல்லையாமே?

தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்வி கட்டாயம் இல்லாமலேயே சிறந்த இலக்கியங்கள், அறிவியல் கட்டுரைகள் என்று நிறைய தமிழில் வந்துகொண்டிருக்கின்றது. கணியம் என்ற அறக்கட்டளை அமைப்பு கணிநுட்பத்தை தமிழில் கொண்டுவருகின்றது. 

ஆக, கட்டாயமோ, கட்டாயமில்லையோ மொழி வளர அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும், கல்விச் செயற்பாட்டாளர்களும் வேலைசெய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்வி கட்டாயம் இல்லாமலேயே சிறந்த இலக்கியங்கள், அறிவியல் கட்டுரைகள் என்று நிறைய தமிழில் வந்துகொண்டிருக்கின்றது. கணியம் என்ற அறக்கட்டளை அமைப்பு கணிநுட்பத்தை தமிழில் கொண்டுவருகின்றது. 

ஆக, கட்டாயமோ, கட்டாயமில்லையோ மொழி வளர அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும், கல்விச் செயற்பாட்டாளர்களும் வேலைசெய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

 

அப்படி இல்லை.

பெரு நகரங்களை் தாண்டிணால், தமிழ் மொழிக் கல்வி தானே இன்னும்.

இவர்கள் செய்ய தவறியது என்னவெனில், இலங்கையில் உள்ளது போல, நீஙகள் எம்மொழியிலும் படிக்கலாம். ஆனால் தாய் மொழி சித்தியடையாவிடில், ஓ லெவல் முமுவதும் பெயில்.... ( இது அண்மையில் கேள்விப்பட்டது, தவறானதல்ல என நிணைக்கிறேன்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இலங்கையில் உள்ளது போல, நீஙகள் எம்மொழியிலும் படிக்கலாம். ஆனால் தாய் மொழி சித்தியடையாவிடில், ஓ லெவல் முமுவதும் பெயில்.... ( இது அண்மையில் கேள்விப்பட்டது, தவறானதல்ல என நிணைக்கிறேன்)

ஆறு கட்டாய பாடங்களில் முதல்மொழியும் உள்ளது.  இக் கட்டாய பாடங்களில் ஒன்றில் சித்தியடையாவிட்டாலும் ஒ லெவெல் சித்தி கிடையாது.

கட்டாய பாடங்கள்:

முதல் மொழி, சமயம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக தமிழ் மொழி திட்டமிட்டு நாசூக்காக ஓரங்கட்டப்படுகின்றது.......புலம்பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் எழுத வாசிக்க படிப்பதெல்லாம் மிக குறைவானதே .......ஆனால் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் எண்ணத்தை சொல்வது......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ஆறு கட்டாய பாடங்களில் முதல்மொழியும் உள்ளது.  இக் கட்டாய பாடங்களில் ஒன்றில் சித்தியடையாவிட்டாலும் ஒ லெவெல் சித்தி கிடையாது.

கட்டாய பாடங்கள்:

முதல் மொழி, சமயம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு

சமய பாடத்தில் , பொழிப்புரை எழுத வந்த தேவாரம்; கோழி கூவ.... பொருது வெண் சங்கே......

காலையில எதையோ நிணைத்துப் பார்த்தேன்.... வந்தது.... பாஸ்....

சோதணைகள்...... அதிஸ்டமும் வேணும்.... 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

பொதுவாக தமிழ் மொழி திட்டமிட்டு நாசூக்காக ஓரங்கட்டப்படுகின்றது.......புலம்பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் எழுத வாசிக்க படிப்பதெல்லாம் மிக குறைவானதே .......ஆனால் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் எண்ணத்தை சொல்வது......!   

ஆங்கில கல்வி முக்கியமானது.....

ஆனாலும் தமிழை கட்டாய பாடமாக்கினால்..... அதுவே சரியான நடவடிக்கை. தமிழகம், இலங்கையை பின்பற்ற வேண்டும்.

அங்குள்ள சிக்கல், தமிழ் என்ற சொல்லை விடுத்து, தாய் மொழி என்றால், பல மொழியில் கற்பிக்க வேண்டிய சிக்கல். இலங்கையில், இரு மொழிகள், என்பதால் பிரச்சணை இல்லை.

என்னதான் சொன்னாலும், இலங்கை கல்விக் கொள்கை மிக தரமானது. உலகில், (அவரவர்) சமயக்கல்வியை மூன்றாம் வகுப்பில் இருந்து பல்கலைகழகம் வரை கற்பிப்பது இலங்கை மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடபகுதியில், 85% வீதமானோர் தமிழகத்தில் இருந்து வரும் டிவி குப்பைகளை பார்பதால், கல்விச் சீரழிவு நடக்கின்றது என இலங்கை அரச அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற சந்திப்பில் சொல்லி உள்ளனர்.

தமிழ் மாணவருக்காக கல்வி்ச் சானல் ஒன்றை ரூபவாகினி நடாத்துவதாகவும், அதனைப் பயன்படுத்துமாறும் கோரி உள்ளனர்.

https://www.dailymirror.lk/latest_news/85-of-northern-people-accustomed-to-watching-Indian-television-channels/342-223168

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒழுங்கா படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் சிங்களவன் அது இது என்று கதை வேறு .🤣

சிரித்து… வயிறு நோகுது. 😂 🤣

3 hours ago, கற்பகதரு said:

சிங்கள அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு தமிழில் படித்த நானும் நீங்களும் யாழ் களத்தில் குப்பை கொட்டத்தான் தகுதியடைந்திருக்கிறோம்.🥲

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பொதுவாக தமிழ் மொழி திட்டமிட்டு நாசூக்காக ஓரங்கட்டப்படுகின்றது.......புலம்பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் எழுத வாசிக்க படிப்பதெல்லாம் மிக குறைவானதே .......ஆனால் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் எண்ணத்தை சொல்வது......!   

புலம்பெயரில் எங்கள்  விரலால் எங்கள் கண்களை குத்திக்கொள்கிறோம் .

அநேக புலம்பெயர் பிள்ளைகள் தமிழ் வேப்பம்காயாக்கி  உள்ளனர் அவர்களுக்கு படிப்பிக்க என்று போன  ஆசிரியர்கள் செய்த வேலையால் .

தெரிந்த சிறுவனிடம் ஏன்  இரண்டாவது பாடமாக தமிழை  தெரிவு செய்யாமல் பிரஞ்சு மொழியை தெரிவு செய்தாய் அது தமிழை விட  கஷ்டமல்லவோ ? பதில் அது கஷ்ட்டம் தான் ஆனால் எனக்கு தமிழ் மொழி படிப்பிக்கும் டீச்சரை பிடிக்கவில்லை அவ தடியுடன் தான் எப்பவும் பாடம் சொல்லிக்கொள்கிறார் மற்றைய கிளாஸ் டீச்சர்கள் அப்படி இல்லை என்கிறார் .

பிரச்சனை  எங்கு என்று தெரிந்தும் தெரியாதது போல் நடித்துக்கொண்டு இருப்பது பெரியவர்களாகிய நாம்தான் .

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

இலங்கையின் வடபகுதியில், 85% வீதமானோர் தமிழகத்தில் இருந்து வரும் டிவி குப்பைகளை பார்பதால், கல்விச் சீரழிவு நடக்கின்றது என இலங்கை அரச அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற சந்திப்பில் சொல்லி உள்ளனர்.

என்ன நாதம்ஸ், இங்கிலிசு மக்கரடிக்குது? லங்காவில படிச்சதோ? அப்பிடியே தெரியுது.


It has been revealed that about 85% of the people in the North are accustomed to watching Indian television channels and as a result children in those areas have less general knowledge of events in the country.

நீங்கள் தந்த இணைப்பில் தமிழகம் பற்றியோ, அங்கிருந்து வரும் டிவி “குப்பை” என்றோ, கல்வி “சீரழிவு” என்றோ எதுவுமே இல்லையே? மேலே அப்பிடியே இங்கிலிசிலேயே தந்திருக்கிறேன் மீண்டும் பாருங்கள். சரியான மொழிபையர்ப்பின்படி    சொல்லப்பட்டிருப்பது, வடக்கில் உள்ள 85 வீதமான மக்கள் இந்திய தொலைக்காட்சி பார்ப்பதால் அவர்களுக்கு நாட்டில் இடம்பெறும் விடயங்கள் பற்றிய பொது அறிவு குறைவாக இருக்கிறது என்பதாகும். அதன் விளக்கம், வடக்கு தமிழருக்கு இந்திய தொலைக்காட்சி தாராளமாக கல்வியையும், உலகறிவையும், இந்தியா பற்றிய அறிவையும் வளங்கிவருகிறது, ஆனால் சிங்களநாட்டில் நடப்பதை மக்கள் அறிய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

புலம்பெயரில் எங்கள்  விரலால் எங்கள் கண்களை குத்திக்கொள்கிறோம் .

அநேக புலம்பெயர் பிள்ளைகள் தமிழ் வேப்பம்காயாக்கி  உள்ளனர் அவர்களுக்கு படிப்பிக்க என்று போன  ஆசிரியர்கள் செய்த வேலையால் .

தெரிந்த சிறுவனிடம் ஏன்  இரண்டாவது பாடமாக தமிழை  தெரிவு செய்யாமல் பிரஞ்சு மொழியை தெரிவு செய்தாய் அது தமிழை விட  கஷ்டமல்லவோ ? பதில் அது கஷ்ட்டம் தான் ஆனால் எனக்கு தமிழ் மொழி படிப்பிக்கும் டீச்சரை பிடிக்கவில்லை அவ தடியுடன் தான் எப்பவும் பாடம் சொல்லிக்கொள்கிறார் மற்றைய கிளாஸ் டீச்சர்கள் அப்படி இல்லை என்கிறார் .

பிரச்சனை  எங்கு என்று தெரிந்தும் தெரியாதது போல் நடித்துக்கொண்டு இருப்பது பெரியவர்களாகிய நாம்தான் .

ஒன்றிரண்டு பாடசாலைகளில் இங்கு பிறந்து வளர்ந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகள் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் படிப்பிக்கின்றனர். அவர்களின் கற்பித்தல் முறை சிறுவர்களைக் கவர்வதால், தமிழ் படிப்பதிலும் விருப்பம் இளவயதிலேயே ஊட்டப்படுகின்றது.

புலம்பெயர் நாட்டு கற்பித்தல் முறைகளுக்கு பரிச்சயமற்ற outdated syllabus உடன் கற்பிக்கும் ஆசிரியர்களால் தமிழ் படிப்பதில் சிறுவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போவது உண்மைதான். 

Link to comment
Share on other sites

10 minutes ago, கிருபன் said:

ஒன்றிரண்டு பாடசாலைகளில் இங்கு பிறந்து வளர்ந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகள் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் படிப்பிக்கின்றனர். அவர்களின் கற்பித்தல் முறை சிறுவர்களைக் கவர்வதால், தமிழ் படிப்பதிலும் விருப்பம் இளவயதிலேயே ஊட்டப்படுகின்றது.

புலம்பெயர் நாட்டு கற்பித்தல் முறைகளுக்கு பரிச்சயமற்ற outdated syllabus உடன் கற்பிக்கும் ஆசிரியர்களால் தமிழ் படிப்பதில் சிறுவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போவது உண்மைதான். 

என் பிள்ளைகள் இருவரும் தமிழ் சரளமாக கதைப்பார்கள். ஆனால் ஒரு சில தமிழ் (வயதான) ஆசிரியைகளால் தமிழ் பாடசாலைக்கு செல்வதை எப்பவோ நிப்பாட்டியதால் எழுத வாசிக்க முடியாது அவர்களுக்கு. ஒரு தமிழ் ஆசிரியை சனியன், மூதேசி என்றெல்லாம் திட்டியதால் நாங்களே புகார் கொடுக்க வேண்டி வந்தது.

இப்ப கேட்டால், Google translator கொண்டு வாசிப்போம் என்று பதில் தருகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

என்ன நாதம்ஸ், இங்கிலிசு மக்கரடிக்குது? லங்காவில படிச்சதோ? அப்பிடியே தெரியுது.


It has been revealed that about 85% of the people in the North are accustomed to watching Indian television channels and as a result children in those areas have less general knowledge of events in the country.

நீங்கள் தந்த இணைப்பில் தமிழகம் பற்றியோ, அங்கிருந்து வரும் டிவி “குப்பை” என்றோ, கல்வி “சீரழிவு” என்றோ எதுவுமே இல்லையே? மேலே அப்பிடியே இங்கிலிசிலேயே தந்திருக்கிறேன் மீண்டும் பாருங்கள். சரியான மொழிபையர்ப்பின்படி    சொல்லப்பட்டிருப்பது, வடக்கில் உள்ள 85 வீதமான மக்கள் இந்திய தொலைக்காட்சி பார்ப்பதால் அவர்களுக்கு நாட்டில் இடம்பெறும் விடயங்கள் பற்றிய பொது அறிவு குறைவாக இருக்கிறது என்பதாகும். அதன் விளக்கம், வடக்கு தமிழருக்கு இந்திய தொலைக்காட்சி தாராளமாக கல்வியையும், உலகறிவையும், இந்தியா பற்றிய அறிவையும் வளங்கிவருகிறது, ஆனால் சிங்களநாட்டில் நடப்பதை மக்கள் அறிய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதாகும்.

யூட்டர்,

நான் எனது கருத்தை செய்தியின் பின்னனியாக பதிந்தால், அது தந்த இணைப்பில் இல்லை எண்டால் என்னத்தை சொல்ல?

தவிர நான் மொழிபெயர்ப்பு என்று எங்கும் சொல்லவில்லை.

இந்தியாவில்பல மொழிகள் உண்டு. வடக்கே உள்வர்கள் பார்க்கும் மொழி தமிழகத்தின் சீரியல் நாடக குப்பை தான் என்று உங்களுக்கு புரிய வைக்க, மேலே பெருமாள் சொன்னதை தான் சொல்ல வேணும்....

படிக்கிற காலத்தில, ஒழுங்கா படியாம, சிங்களம், இன வெறி அரசு எண்டு இப்ப கதை விடப்படாது....

வடக்கில் மட்டுமல்ல, புலம் பெயர்தேசத்திலும், அந்த குப்பை ஓக்டோபஸ் மாதிரி கையை விரித்து பரவி விட்டது.

தவிர, வேற்று மொழியாளர்கள் என்பதால், கொழும்பில் சற்று நாகரிகமாக சொல்லியிருக்கிறார்கள்.

நான் அப்படி சொல்ல வேண்டிய தேவையில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

என் பிள்ளைகள் இருவரும் தமிழ் சரளமாக கதைப்பார்கள். ஆனால் ஒரு சில தமிழ் (வயதான) ஆசிரியைகளால் தமிழ் பாடசாலைக்கு செல்வதை எப்பவோ நிப்பாட்டியதால் எழுத வாசிக்க முடியாது அவர்களுக்கு. ஒரு தமிழ் ஆசிரியை சனியன், மூதேசி என்றெல்லாம் திட்டியதால் நாங்களே புகார் கொடுக்க வேண்டி வந்தது.

இப்ப கேட்டால், Google translator கொண்டு வாசிப்போம் என்று பதில் தருகின்றார்கள்.

நிழலி உதொரு கதையோ.. கவிதை கட்டுரை எண்டு தமிழில் புலமை உள்ள நீங்களே இப்படி சொல்லலாமா..? சனியன் மூதேசி எண்டா என்ன குறைஞ்சுபோமோ..? அந்நிய நாட்டில இப்படியாவது ஒரு சான்ஸ் தமிழ் படிக்க என் பிள்ளைக்கு கிடைக்குமானால் நான் பிள்ளைக்கு ரீச்சற்ற குணம் நமக்கு தேவை இல்லை நமக்கு மொழிதான் தேவை கொஞ்சநாள் பல்ல கடிச்சுகொண்டு படி வேற ரீச்சர் வந்தா மாறுவம் எண்டு சமாளிச்சு அனுப்பி இருப்பன்.. எனக்கு என் பிள்ளை எப்படியாவது என் மொழியை கற்கவேணும்.. அதை இழந்துவிட்டு இப்ப நீங்கள் சொல்லுறமாரி என்ர பிள்ளை தமிழ்வாசிக்கமாட்டான் எண்டு வந்து நான் சொல்லுறதை என்னால கனவிலும் நினைச்சு பாக்கமுடியாது ஜீரணிக்கவும் முடியாது.. என்னால என் பிள்ளைக்கு தமிழில் என் உணர்வுகளை எண்ணங்களை சிந்தனைகளை என் கனவுகளை அதே உயிர்ப்போடு பரிமாறிக்கொள்வதுபோல் வேறு எந்த மொழியிலும் பரிமாறுவதை நினைத்துகூட பார்க்கமுடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்குப் போய்த் தான் தமிழ் படிக்க வேண்டுமென்பதில்லை.

பிள்ளைகளுக்கு தமிழ் தெரிய வேண்டுமென்றால் அதை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

அதைத் தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு செய்தோம்.

Link to comment
Share on other sites

10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நிழலி உதொரு கதையோ.. கவிதை கட்டுரை எண்டு தமிழில் புலமை உள்ள நீங்களே இப்படி சொல்லலாமா..? சனியன் மூதேசி எண்டா என்ன குறைஞ்சுபோமோ..? அந்நிய நாட்டில இப்படியாவது ஒரு சான்ஸ் தமிழ் படிக்க என் பிள்ளைக்கு கிடைக்குமானால் நான் பிள்ளைக்கு ரீச்சற்ற குணம் நமக்கு தேவை இல்லை நமக்கு மொழிதான் தேவை கொஞ்சநாள் பல்ல கடிச்சுகொண்டு படி வேற ரீச்சர் வந்தா மாறுவம் எண்டு சமாளிச்சு அனுப்பி இருப்பன்.. எனக்கு என் பிள்ளை எப்படியாவது என் மொழியை கற்கவேணும்.. அதை இழந்துவிட்டு இப்ப நீங்கள் சொல்லுறமாரி என்ர பிள்ளை தமிழ்வாசிக்கமாட்டான் எண்டு வந்து நான் சொல்லுறதை என்னால கனவிலும் நினைச்சு பாக்கமுடியாது ஜீரணிக்கவும் முடியாது.. என்னால என் பிள்ளைக்கு தமிழில் என் உணர்வுகளை எண்ணங்களை சிந்தனைகளை என் கனவுகளை அதே உயிர்ப்போடு பரிமாறிக்கொள்வதுபோல் வேறு எந்த மொழியிலும் பரிமாறுவதை நினைத்துகூட பார்க்கமுடியாது..

நான் தமிழில் எழுதுவதற்கு காரணம் தமிழ் மொழி தவிர எனக்கு வேறு மொழிகள் தெரியாமையால் தான். ஆங்கில அறிவு அன்றாடம் என் தொழிலை செய்வதற்கான அளவு தான் உள்ளதால் தமிழில் எழுதுகின்றேன். 

ஆனால் இங்குள்ள பிள்ளைகளுக்கு தமிழ் மொழி என்பது இரண்டாம் மூன்றாம் பட்சம் தான். தம் நண்பர்களுடன், மச்சான் / மச்சாள்களுடன் மற்றும் எங்கு வெளியே சென்றாலும் அவர்கள் கதைப்பது ஆங்கிலம் அல்லது அந்தந்த நாடுகளில் உள்ள முதன்மை மொழியில் தான். அப்படி இருக்கும் போது, 'உன் தாய் மொழி தமிழ் ஆகவே அதை நீ எவ்வளவு மோசமான ஆசிரியர்கள் கிடைத்தாலும் அதைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டும்' என்று திணிக்க முடியாது. அவ்வாறு திணிப்பதால் ஒரு பலனும் ஏற்படாது - வெறுப்பு மட்டுமே வளரும்.

அத்துடன் என் கனவை, ஆசையை, உணர்வை என் பிள்ளைகள் மீது திணிப்பது என் பண்பும் அல்ல. அவர்களுக்கான உலகை அவர்களே உருவாக்கட்டும்.

உங்கள் பிள்ளைகள் தமிழ் கற்று தமிழ் மொழியை வளர்க்க என் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

இங்குள்ள ஒரு தமிழ் அமைப்புக்காக  அண்மையில் என் உறவினர் ஒருவரின் இரண்டு பிள்ளைகள் நவராத்திரியின் பெருமை பற்றி ஒரு சிறு பேச்சை பேசியும் ஆத்திசூடியை முழுமையாக சொல்லியும் ஒரு காணொளி நவராத்திரிக்காக தயாரித்து வெளியிட்டு இருந்தார்கள். சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு லைக்குகளை அள்ளியும் பாராட்டுகளையும் பெற்று இருந்தார்கள்.

கடந்த வாரம் அச் சிறுவர்களை கண்டு கதைக்கும் போது, ஆத்திசூடியில் சொல்லப்பட்ட சிலவற்றின் அர்த்தம் / பொருள் என்ன என்று கேட்க, அவர்களுக்கு எதுவுமே தெரிந்து இருக்கவில்லை. நவராத்திரி என்ற சொல்லில் இருக்கும் 'நவம்' என்றதன் அர்த்தம் கூட தெரிந்து இருக்கவில்லை. கிளிப்பிள்ளை போன்று தாய் மற்றும் ஆசிரியை சொன்னதை அப்படியே நிகழ்ச்சியில் ஒப்புவித்து இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

இவ்வாறுதான் இங்குள்ளவர்களின் தமிழ் படிப்பித்தலும் தமிழ் பேசும் பெருமையும் வளர்கின்றது போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

இங்குள்ள ஒரு தமிழ் அமைப்புக்காக  அண்மையில் என் உறவினர் ஒருவரின் இரண்டு பிள்ளைகள் நவராத்திரியின் பெருமை பற்றி ஒரு சிறு பேச்சை பேசியும் ஆத்திசூடியை முழுமையாக சொல்லியும் ஒரு காணொளி நவராத்திரிக்காக தயாரித்து வெளியிட்டு இருந்தார்கள். சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு லைக்குகளை அள்ளியும் பாராட்டுகளையும் பெற்று இருந்தார்கள்.

கடந்த வாரம் அச் சிறுவர்களை கண்டு கதைக்கும் போது, ஆத்திசூடியில் சொல்லப்பட்ட சிலவற்றின் அர்த்தம் / பொருள் என்ன என்று கேட்க, அவர்களுக்கு எதுவுமே தெரிந்து இருக்கவில்லை. நவராத்திரி என்ற சொல்லில் இருக்கும் 'நவம்' என்றதன் அர்த்தம் கூட தெரிந்து இருக்கவில்லை. கிளிப்பிள்ளை போன்று தாய் மற்றும் ஆசிரியை சொன்னதை அப்படியே நிகழ்ச்சியில் ஒப்புவித்து இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

இவ்வாறுதான் இங்குள்ளவர்களின் தமிழ் படிப்பித்தலும் தமிழ் பேசும் பெருமையும் வளர்கின்றது போலும்.

மன்னிக்க வேணும்.....

எனக்கும் ஆத்திசூடி தெரியாது.....

தவிர... நவ(ம்) என்பது... வடமொழிச் சொல் தானே....

Link to comment
Share on other sites

Just now, Nathamuni said:

 

தவிர... நவ(ம்) என்பது... வடமொழிச் சொல் தானே....

நவராத்திரியே வடமொழிச் சொல் மட்டுமல்லாது ஆரிய பெண் கடவுள்களை கொண்டாடும் ஒன்று தானே.

2 minutes ago, Nathamuni said:

...எனக்கும் தெியாது...

 

இதன் அர்த்தமும் அம்மான எனக்கு தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

இதன் அர்த்தமும் அம்மான எனக்கு தெரியாது

சரியா எழுதி விட்டேன்.... 😂

இரண்டு 20 வயதுப் பெடியள்.... ரஜனியின் அண்ணாத்தே பார்பது குறித்து பேசுவதை கேட்டு....

எனக்கென்னவோ... இந்த தமிழ் படங்கள் இருக்கும் வரை, தமிழ் வாழும் போலுள்ளது.... 😁

Link to comment
Share on other sites

8 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேணும்.....

எனக்கும் ஆத்திசூடி தெரியாது.....

 

ஆத்திசூடி தெரியாமல் இருப்பது தவறல்ல நாதம். ஆனால் அதன் அர்த்தம் தெரியாது கிளிப்பிள்ளை போல அதை மனனம் செய்து ஒப்புவித்து விட்டு 'எனக்கு என் பிள்ளைக்கு தமிழ் தெரியும்' என உலகத்தை ஏமாற்ற நினைப்பது தான் தவறு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.