Jump to content

மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து

October 23, 2021
 
menike song மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்கு வதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது.

இலங்கையில் இதுவரை பிரபலமாகாத அந்த பாடலுக்குத் திட்டமிட்ட அடிப்படையில் பிரச்சாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர், அமி தாப்பச்சன் மாத்திரமல்ல, சல்மான்கான்போன்றோரும் இதற்கு உதவி வருகின்றனர்.

இந்தியத் திரை கலைஞர்கள் தன்னிச்சையாக உதவவில்லை. சிலர் அவர்களை வழிநடத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா என்பது இலங்கையை விட மிகவும் திட்டமிட்டு வேலை செய்யக் கூடிய நாடு. அந்நாட்டின் நிர்வாக அதிகாரிகள், உளவுப் பிரிவுகள் என்பன வேலை செய்கின்றன எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த அதிருப்தியைப் போக்க இந்தியா இலங்கை பாடகியைத் தெரிவு செய்துள்ளது. அந்த பாடகி, முக்கிய பிரமுகர் ஒருவரின் மகள் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

இலங்கையில் கூட பிரபலமாக இல்லாத பாடலுக்கு இந்தியாவில் குறித்த பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளம்பரப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

https://www.ilakku.org/manike-mage-hithe-song-comment-by-nalin-de-silva/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய்த்தான் இந்த பாட்டு பிரபலமானது போல கிடக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தப்பாடல் செயற்கையாகத்தான் பரப்பப்பட்டிருக்கிறது. மக்கள் விரும்பி பார்க்காமல் அவர்களுடைய யூரியூப் ஊட்டத்தில் இது யுரியூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஏதேனும் உள்நோக்கத்திற்காக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடல் எழுந்தமானமாக பாடப்பட்டிருந்தாலும்.. அது பரந்தளவில் விசிறிகளைச் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில்.. தமிழ்.. மலையாளத்திலும் கலப்பு மொழிப் பாட்டுக்களாகவும் வெளியிடப்பட்டிருந்தது.

இதில்.. ஒரு போர்க்குற்றவாளியின் மகளின் பாடலை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தை தூய்மைப்படுத்திக் காட்டும் உள்நோக்கமும் நிறைந்திருக்கிறது.

அதன் பின்னணியில் ஹிந்திய போர்க்குற்றவாளிகளும் குறிப்பாக றோ போன்ற சக்திகளும்.. பரப்புகைக்கு உதவி இருக்கலாம். 

றோ மற்றும் இஸ்ரோ முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவில் நேரடியாகப் பங்காற்றியமை உலகறிந்த விடயமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தப்பாடல் செயற்கையாகத்தான் பரப்பப்பட்டிருக்கிறது. மக்கள் விரும்பி பார்க்காமல் அவர்களுடைய யூரியூப் ஊட்டத்தில் இது யுரியூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஏதேனும் உள்நோக்கத்திற்காக!

இது உண்மையா என்பது தெரியவில்லை ஆனால், சிந்திக்க வைக்கக்கூடிய கருத்து.

Link to comment
Share on other sites

பாடல் பிலபல்யமான விடயம் சிங்கள தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை,  தமிழ் தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை.

ஆனால் ………

உலகெங்கும் வாழும் இசை ரசிகர்களுக்கு மொழி வேறுபாடுன்றி பிடித்திருக்கிறது. அது தான் இசையின் வலிமை. இத்த பாடல் பிடித்தவர்கள் இதைக் கேட்டு மகிழலாம். பிடிக்காதவர்கள் தமக்கு பிடித்த வேறு பாடலை கேட்டு மகிழலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக இசை ரசிகர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடலில் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது?

Link to comment
Share on other sites

25 minutes ago, வாலி said:

உலக இசை ரசிகர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடலில் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது?

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

அதைத்தான் நான் கேட்கிறேன். கொலவெறி பாடலிலும் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது.  நான் எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இந்த கொலவெறி பாடலை ஒரு பாடலாகவே எடுத்துக்கொண்டது கிடையாது.

அது போக, ஒரு தவறு விடப்பட்டால் அந்தத் தவற்றை மேற்கோள்காட்டி இன்னொரு தவறு விடப்படவேண்டுமா? 

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக் பட்டதாரியும் , போர்க்குற்றவாளி ஒருவரின் மகளையும் தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் தமிழ்ச் சமுகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?. 

இதுவே இராணுவத்துடன் எந்தவகையிலும் தொடர்பு இல்லாத ஒரு சாதாரண சிங்களப்பெண்ணாக இருந்தால் தூக்கிக் கொண்டாடியிருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் அதன் மூலப்பாடல் கடந்த வருடம் வந்திருந்தது. யாரும் கவனிக்கப்படாமல்

இந்த பாடலின் பிரபல்யத்துக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கு என்றேபடுகிறது. (ஒரு தமிழனை சேர்ந்து பாட வைத்தது உட்பட)

அதில் எமக்குள் புடுங்குப்படுவதும் ஒன்றாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

18 minutes ago, வாலி said:

அதைத்தான் நான் கேட்கிறேன். கொலவெறி பாடலிலும் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது.  நான் எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இந்த கொலவெறி பாடலை ஒரு பாடலாகவே எடுத்துக்கொண்டது கிடையாது.

அது போக, ஒரு தவறு விடப்பட்டால் அந்தத் தவற்றை மேற்கோள்காட்டி இன்னொரு தவறு விடப்படவேண்டுமா? 

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக் பட்டதாரியும் , போர்க்குற்றவாளி ஒருவரின் மகளையும் தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் தமிழ்ச் சமுகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?. 

இதுவே இராணுவத்துடன் எந்தவகையிலும் தொடர்பு இல்லாத ஒரு சாதாரண சிங்களப்பெண்ணாக இருந்தால் தூக்கிக் கொண்டாடியிருக்கலாம்.

 

வாலி உங்களுக்கு பிடிக்காத ஒரு பாடலை ரசிக்குமறு கட்டாயப்படுத்தும் உரிமை  எவருக்கும் இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

பாடல் பிலபல்யமான விடயம் சிங்கள தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை,  தமிழ் தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை.

ஆனால் ………

உலகெங்கும் வாழும் இசை ரசிகர்களுக்கு மொழி வேறுபாடுன்றி பிடித்திருக்கிறது. அது தான் இசையின் வலிமை. இத்த பாடல் பிடித்தவர்கள் இதைக் கேட்டு மகிழலாம். பிடிக்காதவர்கள் தமக்கு பிடித்த வேறு பாடலை கேட்டு மகிழலாம். 

உங்களுக்கு இந்தப் பாடல் பிடித்ததோ இல்லையோ, சிங்களத்தைக் குறை கூறுவது பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இந்தப் பாடல் எழுந்தமானமாக பாடப்பட்டிருந்தாலும்.. அது பரந்தளவில் விசிறிகளைச் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில்.. தமிழ்.. மலையாளத்திலும் கலப்பு மொழிப் பாட்டுக்களாகவும் வெளியிடப்பட்டிருந்தது.

இதில்.. ஒரு போர்க்குற்றவாளியின் மகளின் பாடலை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தை தூய்மைப்படுத்திக் காட்டும் உள்நோக்கமும் நிறைந்திருக்கிறது.

அதன் பின்னணியில் ஹிந்திய போர்க்குற்றவாளிகளும் குறிப்பாக றோ போன்ற சக்திகளும்.. பரப்புகைக்கு உதவி இருக்கலாம். 

றோ மற்றும் இஸ்ரோ முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவில் நேரடியாகப் பங்காற்றியமை உலகறிந்த விடயமே. 

 

கலைஞர் யோகானி மூன்று வருடங்களுக்கு முன் யூரியூப்பில் பகிர்ந்த நேர்காணல் பார்த்தேன். நாம் அறியவில்லை. ஆனால், அப்போதே அவர் பிரபலமாகி விட்டார். இப்போது இன்னோர் படிமுறையில் செல்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் சிங்களம் இந்த பாடலையும் அரசியல் ஆயுதமாக எடுத்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சில்லறைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாலேயே இது பிரபல்யமாகிறது. பாத்தோமா போனோமா என்று போய்க்கொண்டே இருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடல் நிச்சயமாக ஏதோ ஒரு மறை நோக்கத்துக்காக் வலிந்து பரப்பபட்டுள்ளது என்பது கண்கூடு.

பெரும் எண்ணிக்கையில் பின் தொடர்பாளர்களை கொண்ட அமிதாப்பச்சன் போன்றவர்களின் ஒவ்வொரு endorsement உம் மிக பெரும் பண மதிப்புக்கு உரியது. அவர்கள் யாரோ ஒரு முகம் தெரியாத இலங்கை பாடகியின், சப்பையான ஒரு பாடலை இப்படி முன்னுரிமை கொடுத்து இலவசமாக promote பண்ணும் போதே இதன் பின்னான திட்டம் அம்பலமாகி விடுகிறது.

யாழ் உட்பட தமிழ் தளங்களிலும் தமிழர் மத்தியில் சமூக வலைதளங்களிலும் இதை காவி வந்தவர்களை கூர்ந்து அவதானித்தால் - இந்த சந்தேகம் மேலும் உறுதியாகும்.

யாழில் இந்த சந்தேகம் ஆகஸ்டு 17 அன்றே எழுப்பபட்டுவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

யாழ் உட்பட தமிழ் தளங்களிலும் தமிழர் மத்தியில் சமூக வலைதளங்களிலும் இதை காவி வந்தவர்களை கூர்ந்து அவதானித்தால் - இந்த சந்தேகம் மேலும் உறுதியாகும்.

யாழில் இந்த சந்தேகம் ஆகஸ்டு 17 அன்றே எழுப்பபட்டுவிட்டது.

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

யோகானியின் பாடல், ஐரோப்பா, அமெரிக்கா, ரஷியா, பிரேசில், துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று உலகம் முழுக்க பார்க்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இல்லை.

வெள்ளை, கறுப்பு என்று பேதம் இல்லாமல் பார்க்கிறார்கள்.

15 கோடி பேர் பார்த்து, இன்னும் வளர்கிறது. நான் முன்னரே சொல்லி விட்டேன். இவர் முன்னரும் பாடி உள்ளார். அவை சோபிக்கவில்லை. இனியும் சோபிக்காது என்றே நினைக்கிறேன்.

தனுசின் வை திஸ் கொலைவெறி, ரவுடி பேபி, உலகெல்லாம் பில்லியன் தடவைக்கு அதிகமாக பார்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன் அதனை promote பண்ணவில்லை. அவரது பேத்தி தான், அவரது நடனத்தினை இந்த பாடலுடன் இணைத்து, வீடியோ வெளியிட்டார். பேத்தியின் திறமையினை புளுகவே அவர் அதனை வெளியிட்டார்.

சும்மா, யாரு ஒரு பைத்தியம், நளின் டீ சில்வா இதுக்கும், ரோவுக்கும் தொடர்பு எண்டவுடன், இங்கே கிளப்பி அடிக்கிறார்கள். 

மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு.  இதைத்தான் சொல்வது, வேலை இல்லாத டெய்லர், பூனைக்கு கோவணம் தைச்சு போட்டு ரசிச்சான், எண்டு.

கொஞ்ச நாளைக்கு இங்கே வராமல் இருப்பம்.... வேலை இருக்குது எண்டு பார்த்தால், வம்புக்கு இழுக்கிறதே வேலையா போச்சுது. 😁

*****

நண்பனின் பார்ட்டியில் சந்தித்த, பயங்கரவாதத்தினை அழித்ததால், நாம் வந்து, ஊர் போய் வரக்கூடியதாக உள்ளது என்று சொன்ன, சிஙகள ராணுவ அதிகாரிக்கு, தீவில் தெலுங்கு நாயக்கர்கள் எப்படி, தமிழர்கள் போல வந்து, சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பெரும் பிரிவினையினை உண்டாக்கினர் என்று தெளிவாக்கினேன். அவருக்கு அந்த புரிதல் இருக்கவில்லை. 

அவரது கருத்தினை மாத்திய வகையில் இன்றும் மகிழ்ச்சி.

அதனால், மறுநாள் தேடி வந்து இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சி என்று புத்தகத்தினை பரிசாக, தந்து போனார் என்றும் சொல்லி இருந்தேன். 

இதனை எல்லாம் விட்டு விட்டு, சிங்கள ராணுவ அதிகாரியுடன் தண்ணி அடித்தவர் என்று தூக்கி பிடிக்க முடிகிறது நம்மாளுக்கு. 

SJV செல்வநாயகம் நாயக்கர் இல்லையா என்று திரி திறந்து, தனது திராவிட பாசம் காட்டியவர் நம்மாளு.....

ஆக, நாம் திராவிடர்!!. 🤑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

இண்டைக்கு பைட்ஸ் அவ்வளவு உறைப்பா மாட்டேல்லையோ🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்த பாட்டு முதலில் பிரபல்யமாகாதற்கு காரணம் ஏற்கனவே பிரபல்யமாய் இருந்த பாடகர்கள் இந்த பாடலை பிரபல்யப்படுத்த விரும்பவில்லை.
இந்த பாட்டு பிரபல்யமானதற்கு காரணம் குருட்டு அதிஸ்டம் ...கொஞ்ச நாளில் எல்லாம் ஓய்ந்து விடும்...இதில் தமிழர்கள் ஏன் குத்தி முறியினம் என்று தெரியவில்லை.
விருப்பம் என்டால் கேளுங்கோ இல்லாட்டில் பேசாமல் இருங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரே தெலுங்கர் என்ற நிலையிலிருந்து "தெலுங்கு நாயக்கர், சிங்களவர், தமிழர்"  என்று மூன்று பிரிவுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்திருப்பது மகிழ்ச்சி! 😄

(பாட்டைப் பார்க்கவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சிங்களவரே தெலுங்கர் என்ற நிலையிலிருந்து "தெலுங்கு நாயக்கர், சிங்களவர், தமிழர்"  என்று மூன்று பிரிவுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்திருப்பது மகிழ்ச்சி! 😄

(பாட்டைப் பார்க்கவில்லை)

செல்வநாயகம் திரி தன் இலக்கை அடைந்தது 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அமிதாப்பச்சன் அதனை promote பண்ணவில்லை. அவரது பேத்தி தான், அவரது நடனத்தினை இந்த பாடலுடன் இணைத்து, வீடியோ வெளியிட்டார். பேத்தியின் திறமையினை புளுகவே அவர் அதனை வெளியிட்டார்.

 

 

நானும் இப்படித்தான் நினைத்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, tulpen said:

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

தேடுதல் இணைய தேடுதல் பொறிமுறை கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது, அதாவது முன்பெல்லாம் ஒரு தகவல் தொழில்னுட்பவியலாளரை வேலைகமர்த்தினால் உங்களது இணைய தளத்தினையோ அல்லது இணைய ஒளிப்பதிவு தளத்தினை தேடுதல் பக்கத்தில் முன் பக்கத்தில் கொண்டு வரலாம், ஆனால் இப்போது நிலமை அவ்வாறில்லை, உங்களது சரக்கு தரமாக இருந்தாலும் உங்களால் தேடுதல் பொறிமுறையைத்தாண்டி  வரமுடியாது.

பொதுவாக உங்களுக்கென ஏற்கனவே இணைய விசிறிகள் காணப்படவேண்டும், இதற்கு காரணம் செயற்கை கணனி பார்வை மற்றும் SEO களை தவிர்க்க Google இவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது.

இதில் கூறப்பட்டுள்ள தமிழ்ப்பாடலுக்கு அந்த வகையான சாதக அமைப்பு காணப்படுகிறதோ தெரியவில்லை, ஆனால் அந்த சாதகமற்ற இந்தப்பாடலை கோசான் கூறியது போல வட இந்திய விசிறிகள் பின்புலம் கொண்டவர்களின் (Organic viewers)  மூலம் இந்த பாடலை திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.