Jump to content

மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து

October 23, 2021
 
menike song மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்கு வதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது.

இலங்கையில் இதுவரை பிரபலமாகாத அந்த பாடலுக்குத் திட்டமிட்ட அடிப்படையில் பிரச்சாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர், அமி தாப்பச்சன் மாத்திரமல்ல, சல்மான்கான்போன்றோரும் இதற்கு உதவி வருகின்றனர்.

இந்தியத் திரை கலைஞர்கள் தன்னிச்சையாக உதவவில்லை. சிலர் அவர்களை வழிநடத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா என்பது இலங்கையை விட மிகவும் திட்டமிட்டு வேலை செய்யக் கூடிய நாடு. அந்நாட்டின் நிர்வாக அதிகாரிகள், உளவுப் பிரிவுகள் என்பன வேலை செய்கின்றன எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த அதிருப்தியைப் போக்க இந்தியா இலங்கை பாடகியைத் தெரிவு செய்துள்ளது. அந்த பாடகி, முக்கிய பிரமுகர் ஒருவரின் மகள் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

இலங்கையில் கூட பிரபலமாக இல்லாத பாடலுக்கு இந்தியாவில் குறித்த பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளம்பரப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

https://www.ilakku.org/manike-mage-hithe-song-comment-by-nalin-de-silva/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய்த்தான் இந்த பாட்டு பிரபலமானது போல கிடக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தப்பாடல் செயற்கையாகத்தான் பரப்பப்பட்டிருக்கிறது. மக்கள் விரும்பி பார்க்காமல் அவர்களுடைய யூரியூப் ஊட்டத்தில் இது யுரியூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஏதேனும் உள்நோக்கத்திற்காக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடல் எழுந்தமானமாக பாடப்பட்டிருந்தாலும்.. அது பரந்தளவில் விசிறிகளைச் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில்.. தமிழ்.. மலையாளத்திலும் கலப்பு மொழிப் பாட்டுக்களாகவும் வெளியிடப்பட்டிருந்தது.

இதில்.. ஒரு போர்க்குற்றவாளியின் மகளின் பாடலை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தை தூய்மைப்படுத்திக் காட்டும் உள்நோக்கமும் நிறைந்திருக்கிறது.

அதன் பின்னணியில் ஹிந்திய போர்க்குற்றவாளிகளும் குறிப்பாக றோ போன்ற சக்திகளும்.. பரப்புகைக்கு உதவி இருக்கலாம். 

றோ மற்றும் இஸ்ரோ முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவில் நேரடியாகப் பங்காற்றியமை உலகறிந்த விடயமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தப்பாடல் செயற்கையாகத்தான் பரப்பப்பட்டிருக்கிறது. மக்கள் விரும்பி பார்க்காமல் அவர்களுடைய யூரியூப் ஊட்டத்தில் இது யுரியூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஏதேனும் உள்நோக்கத்திற்காக!

இது உண்மையா என்பது தெரியவில்லை ஆனால், சிந்திக்க வைக்கக்கூடிய கருத்து.

Link to comment
Share on other sites

பாடல் பிலபல்யமான விடயம் சிங்கள தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை,  தமிழ் தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை.

ஆனால் ………

உலகெங்கும் வாழும் இசை ரசிகர்களுக்கு மொழி வேறுபாடுன்றி பிடித்திருக்கிறது. அது தான் இசையின் வலிமை. இத்த பாடல் பிடித்தவர்கள் இதைக் கேட்டு மகிழலாம். பிடிக்காதவர்கள் தமக்கு பிடித்த வேறு பாடலை கேட்டு மகிழலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக இசை ரசிகர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடலில் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது?

Link to comment
Share on other sites

25 minutes ago, வாலி said:

உலக இசை ரசிகர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடலில் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது?

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

அதைத்தான் நான் கேட்கிறேன். கொலவெறி பாடலிலும் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது.  நான் எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இந்த கொலவெறி பாடலை ஒரு பாடலாகவே எடுத்துக்கொண்டது கிடையாது.

அது போக, ஒரு தவறு விடப்பட்டால் அந்தத் தவற்றை மேற்கோள்காட்டி இன்னொரு தவறு விடப்படவேண்டுமா? 

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக் பட்டதாரியும் , போர்க்குற்றவாளி ஒருவரின் மகளையும் தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் தமிழ்ச் சமுகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?. 

இதுவே இராணுவத்துடன் எந்தவகையிலும் தொடர்பு இல்லாத ஒரு சாதாரண சிங்களப்பெண்ணாக இருந்தால் தூக்கிக் கொண்டாடியிருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் அதன் மூலப்பாடல் கடந்த வருடம் வந்திருந்தது. யாரும் கவனிக்கப்படாமல்

இந்த பாடலின் பிரபல்யத்துக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கு என்றேபடுகிறது. (ஒரு தமிழனை சேர்ந்து பாட வைத்தது உட்பட)

அதில் எமக்குள் புடுங்குப்படுவதும் ஒன்றாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

18 minutes ago, வாலி said:

அதைத்தான் நான் கேட்கிறேன். கொலவெறி பாடலிலும் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது.  நான் எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இந்த கொலவெறி பாடலை ஒரு பாடலாகவே எடுத்துக்கொண்டது கிடையாது.

அது போக, ஒரு தவறு விடப்பட்டால் அந்தத் தவற்றை மேற்கோள்காட்டி இன்னொரு தவறு விடப்படவேண்டுமா? 

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக் பட்டதாரியும் , போர்க்குற்றவாளி ஒருவரின் மகளையும் தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் தமிழ்ச் சமுகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?. 

இதுவே இராணுவத்துடன் எந்தவகையிலும் தொடர்பு இல்லாத ஒரு சாதாரண சிங்களப்பெண்ணாக இருந்தால் தூக்கிக் கொண்டாடியிருக்கலாம்.

 

வாலி உங்களுக்கு பிடிக்காத ஒரு பாடலை ரசிக்குமறு கட்டாயப்படுத்தும் உரிமை  எவருக்கும் இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

பாடல் பிலபல்யமான விடயம் சிங்கள தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை,  தமிழ் தேசியவாதிக்கும் பிடிக்கவில்லை.

ஆனால் ………

உலகெங்கும் வாழும் இசை ரசிகர்களுக்கு மொழி வேறுபாடுன்றி பிடித்திருக்கிறது. அது தான் இசையின் வலிமை. இத்த பாடல் பிடித்தவர்கள் இதைக் கேட்டு மகிழலாம். பிடிக்காதவர்கள் தமக்கு பிடித்த வேறு பாடலை கேட்டு மகிழலாம். 

உங்களுக்கு இந்தப் பாடல் பிடித்ததோ இல்லையோ, சிங்களத்தைக் குறை கூறுவது பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இந்தப் பாடல் எழுந்தமானமாக பாடப்பட்டிருந்தாலும்.. அது பரந்தளவில் விசிறிகளைச் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில்.. தமிழ்.. மலையாளத்திலும் கலப்பு மொழிப் பாட்டுக்களாகவும் வெளியிடப்பட்டிருந்தது.

இதில்.. ஒரு போர்க்குற்றவாளியின் மகளின் பாடலை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தை தூய்மைப்படுத்திக் காட்டும் உள்நோக்கமும் நிறைந்திருக்கிறது.

அதன் பின்னணியில் ஹிந்திய போர்க்குற்றவாளிகளும் குறிப்பாக றோ போன்ற சக்திகளும்.. பரப்புகைக்கு உதவி இருக்கலாம். 

றோ மற்றும் இஸ்ரோ முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவில் நேரடியாகப் பங்காற்றியமை உலகறிந்த விடயமே. 

 

கலைஞர் யோகானி மூன்று வருடங்களுக்கு முன் யூரியூப்பில் பகிர்ந்த நேர்காணல் பார்த்தேன். நாம் அறியவில்லை. ஆனால், அப்போதே அவர் பிரபலமாகி விட்டார். இப்போது இன்னோர் படிமுறையில் செல்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் சிங்களம் இந்த பாடலையும் அரசியல் ஆயுதமாக எடுத்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சில்லறைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாலேயே இது பிரபல்யமாகிறது. பாத்தோமா போனோமா என்று போய்க்கொண்டே இருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடல் நிச்சயமாக ஏதோ ஒரு மறை நோக்கத்துக்காக் வலிந்து பரப்பபட்டுள்ளது என்பது கண்கூடு.

பெரும் எண்ணிக்கையில் பின் தொடர்பாளர்களை கொண்ட அமிதாப்பச்சன் போன்றவர்களின் ஒவ்வொரு endorsement உம் மிக பெரும் பண மதிப்புக்கு உரியது. அவர்கள் யாரோ ஒரு முகம் தெரியாத இலங்கை பாடகியின், சப்பையான ஒரு பாடலை இப்படி முன்னுரிமை கொடுத்து இலவசமாக promote பண்ணும் போதே இதன் பின்னான திட்டம் அம்பலமாகி விடுகிறது.

யாழ் உட்பட தமிழ் தளங்களிலும் தமிழர் மத்தியில் சமூக வலைதளங்களிலும் இதை காவி வந்தவர்களை கூர்ந்து அவதானித்தால் - இந்த சந்தேகம் மேலும் உறுதியாகும்.

யாழில் இந்த சந்தேகம் ஆகஸ்டு 17 அன்றே எழுப்பபட்டுவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

யாழ் உட்பட தமிழ் தளங்களிலும் தமிழர் மத்தியில் சமூக வலைதளங்களிலும் இதை காவி வந்தவர்களை கூர்ந்து அவதானித்தால் - இந்த சந்தேகம் மேலும் உறுதியாகும்.

யாழில் இந்த சந்தேகம் ஆகஸ்டு 17 அன்றே எழுப்பபட்டுவிட்டது.

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

யோகானியின் பாடல், ஐரோப்பா, அமெரிக்கா, ரஷியா, பிரேசில், துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று உலகம் முழுக்க பார்க்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இல்லை.

வெள்ளை, கறுப்பு என்று பேதம் இல்லாமல் பார்க்கிறார்கள்.

15 கோடி பேர் பார்த்து, இன்னும் வளர்கிறது. நான் முன்னரே சொல்லி விட்டேன். இவர் முன்னரும் பாடி உள்ளார். அவை சோபிக்கவில்லை. இனியும் சோபிக்காது என்றே நினைக்கிறேன்.

தனுசின் வை திஸ் கொலைவெறி, ரவுடி பேபி, உலகெல்லாம் பில்லியன் தடவைக்கு அதிகமாக பார்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன் அதனை promote பண்ணவில்லை. அவரது பேத்தி தான், அவரது நடனத்தினை இந்த பாடலுடன் இணைத்து, வீடியோ வெளியிட்டார். பேத்தியின் திறமையினை புளுகவே அவர் அதனை வெளியிட்டார்.

சும்மா, யாரு ஒரு பைத்தியம், நளின் டீ சில்வா இதுக்கும், ரோவுக்கும் தொடர்பு எண்டவுடன், இங்கே கிளப்பி அடிக்கிறார்கள். 

மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு.  இதைத்தான் சொல்வது, வேலை இல்லாத டெய்லர், பூனைக்கு கோவணம் தைச்சு போட்டு ரசிச்சான், எண்டு.

கொஞ்ச நாளைக்கு இங்கே வராமல் இருப்பம்.... வேலை இருக்குது எண்டு பார்த்தால், வம்புக்கு இழுக்கிறதே வேலையா போச்சுது. 😁

*****

நண்பனின் பார்ட்டியில் சந்தித்த, பயங்கரவாதத்தினை அழித்ததால், நாம் வந்து, ஊர் போய் வரக்கூடியதாக உள்ளது என்று சொன்ன, சிஙகள ராணுவ அதிகாரிக்கு, தீவில் தெலுங்கு நாயக்கர்கள் எப்படி, தமிழர்கள் போல வந்து, சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பெரும் பிரிவினையினை உண்டாக்கினர் என்று தெளிவாக்கினேன். அவருக்கு அந்த புரிதல் இருக்கவில்லை. 

அவரது கருத்தினை மாத்திய வகையில் இன்றும் மகிழ்ச்சி.

அதனால், மறுநாள் தேடி வந்து இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சி என்று புத்தகத்தினை பரிசாக, தந்து போனார் என்றும் சொல்லி இருந்தேன். 

இதனை எல்லாம் விட்டு விட்டு, சிங்கள ராணுவ அதிகாரியுடன் தண்ணி அடித்தவர் என்று தூக்கி பிடிக்க முடிகிறது நம்மாளுக்கு. 

SJV செல்வநாயகம் நாயக்கர் இல்லையா என்று திரி திறந்து, தனது திராவிட பாசம் காட்டியவர் நம்மாளு.....

ஆக, நாம் திராவிடர்!!. 🤑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் நாதமுனியர் சிங்களத்தின்ரை அடியாள் எண்டுறியள்? 🤣

 

இண்டைக்கு பைட்ஸ் அவ்வளவு உறைப்பா மாட்டேல்லையோ🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்த பாட்டு முதலில் பிரபல்யமாகாதற்கு காரணம் ஏற்கனவே பிரபல்யமாய் இருந்த பாடகர்கள் இந்த பாடலை பிரபல்யப்படுத்த விரும்பவில்லை.
இந்த பாட்டு பிரபல்யமானதற்கு காரணம் குருட்டு அதிஸ்டம் ...கொஞ்ச நாளில் எல்லாம் ஓய்ந்து விடும்...இதில் தமிழர்கள் ஏன் குத்தி முறியினம் என்று தெரியவில்லை.
விருப்பம் என்டால் கேளுங்கோ இல்லாட்டில் பேசாமல் இருங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரே தெலுங்கர் என்ற நிலையிலிருந்து "தெலுங்கு நாயக்கர், சிங்களவர், தமிழர்"  என்று மூன்று பிரிவுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்திருப்பது மகிழ்ச்சி! 😄

(பாட்டைப் பார்க்கவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சிங்களவரே தெலுங்கர் என்ற நிலையிலிருந்து "தெலுங்கு நாயக்கர், சிங்களவர், தமிழர்"  என்று மூன்று பிரிவுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்திருப்பது மகிழ்ச்சி! 😄

(பாட்டைப் பார்க்கவில்லை)

செல்வநாயகம் திரி தன் இலக்கை அடைந்தது 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அமிதாப்பச்சன் அதனை promote பண்ணவில்லை. அவரது பேத்தி தான், அவரது நடனத்தினை இந்த பாடலுடன் இணைத்து, வீடியோ வெளியிட்டார். பேத்தியின் திறமையினை புளுகவே அவர் அதனை வெளியிட்டார்.

 

 

நானும் இப்படித்தான் நினைத்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, tulpen said:

வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

தேடுதல் இணைய தேடுதல் பொறிமுறை கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது, அதாவது முன்பெல்லாம் ஒரு தகவல் தொழில்னுட்பவியலாளரை வேலைகமர்த்தினால் உங்களது இணைய தளத்தினையோ அல்லது இணைய ஒளிப்பதிவு தளத்தினை தேடுதல் பக்கத்தில் முன் பக்கத்தில் கொண்டு வரலாம், ஆனால் இப்போது நிலமை அவ்வாறில்லை, உங்களது சரக்கு தரமாக இருந்தாலும் உங்களால் தேடுதல் பொறிமுறையைத்தாண்டி  வரமுடியாது.

பொதுவாக உங்களுக்கென ஏற்கனவே இணைய விசிறிகள் காணப்படவேண்டும், இதற்கு காரணம் செயற்கை கணனி பார்வை மற்றும் SEO களை தவிர்க்க Google இவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது.

இதில் கூறப்பட்டுள்ள தமிழ்ப்பாடலுக்கு அந்த வகையான சாதக அமைப்பு காணப்படுகிறதோ தெரியவில்லை, ஆனால் அந்த சாதகமற்ற இந்தப்பாடலை கோசான் கூறியது போல வட இந்திய விசிறிகள் பின்புலம் கொண்டவர்களின் (Organic viewers)  மூலம் இந்த பாடலை திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.