Jump to content

மனிதருக்கு பன்றி சிறுநீரகம்: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதருக்கு பன்றி சிறுநீரகம்: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை

  • மிஷெல் ராபர்ட்ஸ்
  • சுகாதார ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

பட மூலாதாரம்,NYU LANGONE

 
படக்குறிப்பு,

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

அமெரிக்க அறுவை சிகிச்சை வல்லுநர்கள், ஒரு மனிதருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சோதித்தனர். இது உடல் உறுப்பு தான பற்றாக்குறையை தீர்க்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவக் கருவிகளின் உதவியோடு சுவாசித்துவந்த நபருக்கு இந்த பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி அதை உடல் ஏற்றுக்கொள்கிறதா அல்லது நிராகரிக்கிறதா என்று மருத்துவர்கள் சோதித்தனர்.

முன்னதாக, பன்றியிடம் இருந்து வந்த சிறுநீரகத்தை, மனித உடல் நிராகரித்து விடக் கூடாது என்பதற்காக மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த ஆய்வினை சக வல்லுநர்கள் சீராய்வு செய்யவில்லை. சீராய்வு செய்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் சஞ்சிகைகளிலும் இந்த ஆய்வு வெளியாகவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில், இதுவரை மேற்கொள்ளப்பட்டவைகளில் இது ஒரு மிகப் பெரிய சோதனை முயற்சி என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு பயன்படுத்துவது இது ஒன்றும் முதல் முறையல்ல. பன்றியின் இதய வால்வுகள் பரவலாக மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர்

பட மூலாதாரம்,NYU LANGONE

 
படக்குறிப்பு,

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர்

பொதுவாக பன்றியின் உடல் உறுப்புகள், அளவின் அடிப்படையில் மனிதர்களுக்கு சிறப்பாக பொருந்திப் போகக்கூடியவை.

அந்த சிறுநீரகத்தை மனிதருக்குப் பொருத்திய பிறகு அடுத்த இரண்டரை நாட்களுக்கு சிறுநீரகத்தை தீவிரமாக கண்காணித்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை வல்லுநர்கள் மேற்கொண்டனர்.

ஒரு பன்றியின் சிறுநீரகம், மனிதர்களின் சிறுநீரகத்தைப் போலவே செயல்படுவதைக் கண்டோம் என மருத்துவர் ராபர்ட் மான்ட்கொமெரி பிபிசி வேர்ல்ட் டுனைட் நிகழ்ச்சியில் கூறினார்.

"அந்த சிறுநீரகம் சீராக வேலை செய்தது, மனித உடல் அதை நிராகரிப்பது போலத் தெரியவில்லை" என்றார்.

அறுவை சிகிச்சை வல்லுநர்கள், சிறுநீரகத்தோடு பன்றியின் ஒரு சிறு பகுதி தைமஸ் சுரப்பியையும் மாற்றியுள்ளனர். நீண்ட காலத்தில், மனித உடல் சிறுநீரகத்தை நிராகரிப்பதிலிருந்து காப்பாற்ற, பன்றியின் திசுக்களோடு போராடும் மனித உடலின் எதிர்ப்புத் திறன் கொண்ட செல்களை திரட்டி, நிராகரிப்பைத் தடுக்க இந்த பாகம் உதவும் என மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வழக்கமாக ஒருவர் உறுப்பு தானம் பெற வேண்டுமானால், தானம் கொடுப்பவர் இறக்க வேண்டும், அப்போது தான் மற்றொருவர் வாழ முடியும். இது நீண்ட காலத்துக்கு சரிப்பட்டு வராது என்கிறார் மருத்துவர் ராபர்ட்.

தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 40 சதவீத நோயாளிகள், அவர்களுக்கான உறுப்பு கிடைப்பதற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள். நாம் பன்றியை உணவாக உட்கொள்கிறோம், பன்றியை மருத்துக்காகவும், அதன் ரத்த நாளங்களையும் பயன்படுத்துகிறோம். எனவே பன்றியின் உறுப்பை மனிதர்களுக்கு பயன்படுத்துவதும் பெரிய விஷயமல்ல என்கிறார் ராபர்ட்.

இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகள் தொடக்க கட்டத்தில்தான் இருக்கின்றன என்றும், இது குறித்து நிறைய ஆய்வுகள் தேவை என்றும் கூறியுள்ளார் மருத்துவர் ராபர்ட்.

இந்த அறுவை சிகிச்சையைப் மேற்கொள்ளப்பட்டவரின் குடும்பத்தினர், இந்த சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் எஃப்.டி.ஏ என்கிற உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பும் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை இது போன்ற ஆய்வுகளுக்கு பயன்படுத்த அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்தாண்டு காலத்தில் பன்றியின் இதயம், நுரையீரல், கல்லீரல் மனிதர்களுக்கு வழங்கப்படலாம் என நம்புகிறார் மருத்துவர் ராபர்ட்.

https://www.bbc.com/tamil/science-59020822

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.