Jump to content

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நெடுக்கர்…. அப்பக்கடை நடத்தியவரா?

இவ்வளவு நாளும், இது தெரியாமல் போச்சே…. 🤣

நெடுக்கர் நடாத்தவில்லை அங்கு சாப்பிட்டு நொந்து இங்குவந்து கலவரம் பண்ணியவர் 😀

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

வெந்தயம் ஊற வைச்சு சாப்பிடுவதிலும் பார்க்க அப்படியே வெறும் வயித்தில் மென்று சாப்பிட்டால் தான் பலனாம் 
நான் ஊரில் இருக்கும் போது முருங்கை இலையை திரும்பியும் பார்ப்பதில்லை ...அதில் இருக்கும் சத்து வேறு எதிலும் இல்லை ...அதையும் இடைக்கிடை கருஞ் சீரகத்தோடு சேர்த்து  அவித்துக் குடிப்பது உண்டு 

தெரிந்த நண்பர் ஒருத்தர் விடிகாலையில் வெந்தயம் தானும் உண்டு எங்களையும் சாப்பிட சொல்லி வற்புறுத்துவார் நமக்கு தான் கோப்பியின்றி விடியாதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 10வருசமா முளைகட்டிய வெந்தயத்தை காலமை சாப்பிடுறனான். என்ர GPயும் இரத்த பரிசோதனையில் அடி ஆழம் வரை போய் டயாபடீஸ் இருக்கா என்டுதேடிப்பாக்கிறார்.சிங்கன் சிக்கினால் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இதை சாப்பிட்டால் என்னென்ன நோய்க்கு நல்லது.....என்ன  நோய் வராது எண்டு உங்கடை அனுபவத்தை சொன்னால் goshan_che போன்ற பாமரமக்கள் பயன் பெறுவினம் எல்லோ...😎

நீங்கள் மேட்டுகுடியள் அண்ணை உந்த நைட்டி ரைஸ் எல்லாம் உங்களுக்கு சர்வசாதாரணம். பாமரன் நான் இன்னும் கூப்பன் அரிசிதான். கேட்டு அறிய ஒரு ஆவல் அவ்வளவுதான் 🤣. சுகர் குறையும் எண்டால் 2 பிளேட்டை பழையபடி 3 பிளேட் ஆக கூட்டலாம் எண்டு பாக்கிறன்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

 சுகர் குறையும் எண்டால் 2 பிளேட்டை பழையபடி 3 பிளேட் ஆக கூட்டலாம் எண்டு பாக்கிறன்🤣.

மூன்று பிளேட் சோறா… 😂

சோறு போட்டே… கை உழைஞ்சிடும் போலை கிடக்கே… 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு அரிசி, சிவப்பரிசி, பிறவுண் அரிசி - இவை எல்லாமே தீட்டிய வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானவை. இதன் காரணம், அரிசித் தானியத்தின் மேல் படையான தவிட்டில் (bran) தான் அனேகமான நுண் போசணைகள் இருக்கின்றன, அத்தோடு நார்ச்சத்தும் தவிட்டில் தான் அதிகம். தவிட்டை தீட்டுதல் மூலம் அகற்றி விட்டால் கிடைப்பது சுவையான, ஆனால் நார்ச்சத்தும் போசணைகளும் அற்ற சுத்திகரித்த மாச்சத்து! இது உடனடியாக உடலினுள் உறிஞ்சப் பட சீனி உடலில் ஏறும், இன்சுலினும் ஏறும் - இது மீள மீள நடந்தால் இரண்டாம் வகை நீரிழிவு (T2D) காலப் போக்கில் வரலாம்! 

 

Longitudinal cross section of grain [21] | Download Scientific Diagram

 

பட உதவி : நன்றியுடன்:Arlina Prima Putri

இந்த கறுப்பரிசியின் தவிட்டில் அந்தொசயனின் என்ற நிறப்பொருள் இருப்பதால் கரிய அல்லது நாவல் நிறம். இந்த அந்தோசயனின் antioxidant என்பதால் இது புற்று நோயிலிருந்து காக்கும் எனவும் சொல்லப் படுகிறது - ஆனால் அனேக ஆய்வுகள் ஆய்வு கூட மட்டத்தில் மட்டும் செய்யப் பட்டவை. 

ஆனால், நீரிழிவு வராமலிருக்க கறுப்பு, சிவப்பு, பிறவுண் அரிசி வகைகள் உதவும் என்பது நிரூபணமான தரவு. 

Link to comment
Share on other sites

50 minutes ago, நந்தன் said:

கடந்த 10வருசமா முளைகட்டிய வெந்தயத்தை காலமை சாப்பிடுறனான். என்ர GPயும் இரத்த பரிசோதனையில் அடி ஆழம் வரை போய் டயாபடீஸ் இருக்கா என்டுதேடிப்பாக்கிறார்.சிங்கன் சிக்கினால் தானே

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

யோவ் என்னய்யா பயப்புடுத்திறொயள்… நானும் முளைகட்டினதுதான் ரெண்டுவருசமா சாப்பிடுறன்.. ஒருத்தனும் சொல்லேல்ல உப்பிடி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

எழுதுவமோ விடுவமோ எண்டு நான் யோசிக்க நீங்கள் எழுதியே விட்டீர்கள்.

இலங்கை போன நேரம் ஒரு வகையான தேனீரை எல்லாரும் சொல்லி வாங்கி வந்தேன். ஒரு மாசம் போன பின் சுகரும் கொஞ்சம் குறைந்தது, ஆனால் “ஆர்வமும்” குறைந்தது போல ஒரு பீலிங்.

கெதியெண்ட்டு செத்தாலும் பரவாயில்லை கம்பீரமாக சாவோம் எண்டு நிப்பாட்டி போட்டன் 🤣.

பாவிச்சத ஜி பியுடம் சொல்லவே இல்லை. டோஸ் விழும் என்ற பயத்தில்.

இதே போல் மஞ்சள்தூளும். எங்கள் வீட்டில் எல்லாம் ஆம்பிளை பிள்ளையளுக்கு முட்டை பொரியல் மஞ்சள் இல்லாமல் தனியா செய்வார்கள்.

உண்மை பொய் தெரியவில்லை.  

பிகு

எனக்கு தெரிஞ்ச ஒருவருக்கு தலை முடி கொட்டுது எண்டு ஒரே கவலை. எங்கயோ £5000 கட்டி டிரீட்மெண்ட் எண்டு போனவர். போன இடத்தில் இப்படி ஒரு பக்க விளைவு வரலாம் எண்டு சொன்னார்களாம்.

” நான் தலை மயிர் வளர வேண்டும் எண்டு ஆசை படுறதே இதற்குத்தான், இதில்லாமல் நான் தலைமயிரை வைத்து என்ன கொண்டையா கட்ட முடியும்” எண்டு ஆள் விட்டுட்டு வந்துட்டு🤣.

 

ஜேர்மனி வாசிகள் முடிந்தால் உறுதிப்படுத்தவும். அங்கே இப்போ டயபிடிஸ் என உறுதி செய்தால் அதன் பின் மாத்திரைகள் கொடுப்பதில்லையாம்? நேரே ஊசிதானாம். உள்ளதில் பக்கவிளைவு குறைவான விடயம் என்பதாலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

 

14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யோவ் என்னய்யா பயப்புடுத்திறொயள்… நானும் முளைகட்டினதுதான் ரெண்டுவருசமா சாப்பிடுறன்.. ஒருத்தனும் சொல்லேல்ல உப்பிடி..

பாலபத்ரர் நீங்கள் அவசரத்தில் நிழலியின் கேள்வியை சரியாக உள்வாங்கவில்லைபோல் தெரிகிறது......ரெண்டு வருடமாய் சாப்பிடுகிற நீங்கள்தான் சொல்லவேணும் ......!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

 

பாலபத்ரர் நீங்கள் அவசரத்தில் நிழலியின் கேள்வியை சரியாக உள்வாங்கவில்லைபோல் தெரிகிறது......ரெண்டு வருடமாய் சாப்பிடுகிற நீங்கள்தான் சொல்லவேணும் ......!   😎

🤣 அடி மடியில கைவைத்தா பதறுமா இல்லையா 🤣

Link to comment
Share on other sites

54 minutes ago, suvy said:

 

பாலபத்ரர் நீங்கள் அவசரத்தில் நிழலியின் கேள்வியை சரியாக உள்வாங்கவில்லைபோல் தெரிகிறது......ரெண்டு வருடமாய் சாப்பிடுகிற நீங்கள்தான் சொல்லவேணும் ......!   😎

அவருக்கு முதல் 10 வருசமா ஒருவர் சாப்பிடுகிறார்... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கறுப்பு அரிசி, சிவப்பரிசி, பிறவுண் அரிசி - இவை எல்லாமே தீட்டிய வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானவை. இதன் காரணம், அரிசித் தானியத்தின் மேல் படையான தவிட்டில் (bran) தான் அனேகமான நுண் போசணைகள் இருக்கின்றன, அத்தோடு நார்ச்சத்தும் தவிட்டில் தான் அதிகம். தவிட்டை தீட்டுதல் மூலம் அகற்றி விட்டால் கிடைப்பது சுவையான, ஆனால் நார்ச்சத்தும் போசணைகளும் அற்ற சுத்திகரித்த மாச்சத்து! இது உடனடியாக உடலினுள் உறிஞ்சப் பட சீனி உடலில் ஏறும், இன்சுலினும் ஏறும் - இது மீள மீள நடந்தால் இரண்டாம் வகை நீரிழிவு (T2D) காலப் போக்கில் வரலாம்! 

 

Longitudinal cross section of grain [21] | Download Scientific Diagram

 

பட உதவி : நன்றியுடன்:Arlina Prima Putri

இந்த கறுப்பரிசியின் தவிட்டில் அந்தொசயனின் என்ற நிறப்பொருள் இருப்பதால் கரிய அல்லது நாவல் நிறம். இந்த அந்தோசயனின் antioxidant என்பதால் இது புற்று நோயிலிருந்து காக்கும் எனவும் சொல்லப் படுகிறது - ஆனால் அனேக ஆய்வுகள் ஆய்வு கூட மட்டத்தில் மட்டும் செய்யப் பட்டவை. 

ஆனால், நீரிழிவு வராமலிருக்க கறுப்பு, சிவப்பு, பிறவுண் அரிசி வகைகள் உதவும் என்பது நிரூபணமான தரவு. 

இந்த கறுப்பு,பிறவுண், சிவப்பு அரிசிகள் சாப்பிட்டால் ஒரே சத்தி வாற மாதிரி இருக்கு..செமிபாடும் குறைவு என்ன தான் செய்வது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மூன்று பிளேட் சோறா… 😂

சோறு போட்டே… கை உழைஞ்சிடும் போலை கிடக்கே… 🤣

சிறித்தம்பி! அது சும்மா கை இல்லை...அன்னமிட்ட கை ......ஒருத்தராலையும் அசைக்கேலாது 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நான் ஊரில் இருக்கும் போது முருங்கை இலையை திரும்பியும் பார்ப்பதில்லை ...

உப்பிடியான ஆக்கள் கன பேர் திரியினம்.
கோபுரத்தின் அழகு கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாதாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, யாயினி said:

இந்த கறுப்பு,பிறவுண், சிவப்பு அரிசிகள் சாப்பிட்டால் ஒரே சத்தி வாற மாதிரி இருக்கு..செமிபாடும் குறைவு என்ன தான் செய்வது..

நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். 

ஒருவர் வெள்ளை அரிசி சாப்பிடும் அளவில் மூன்றிலொரு பங்கு தான் தீட்டாத அரிசி சாப்பிட முடியும் - ஏனெனில் நார்ச்சத்துக் காரணமாக சமிக்க நேரமெடுக்கும். இது நல்லது, இதனால் தான் நீரிழிவு வாய்ப்புக் குறைகிறது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். 

ஒருவர் வெள்ளை அரிசி சாப்பிடும் அளவில் மூன்றிலொரு பங்கு தான் தீட்டாத அரிசி சாப்பிட முடியும் - ஏனெனில் நார்ச்சத்துக் காரணமாக சமிக்க நேரமெடுக்கும். இது நல்லது, இதனால் தான் நீரிழிவு வாய்ப்புக் குறைகிறது. 
 

ஒரு குழந்தை பிள்ளைகளுக்கு பீட் பண்ற அளவு அதிகமா....

என்ட சாப்பாட்டு முறை(வித்தியாசம்) ரொம் குறைவு..

Link to comment
Share on other sites

12 minutes ago, யாயினி said:

ஒரு குழந்தை பிள்ளைகளுக்கு பீட் பண்ற அளவு அதிகமா....

என்ட சாப்பாட்டு முறை(வித்தியாசம்) ரொம் குறைவு..

 யாயினி சாப்பிட முதல் ஒரு   shot எடுத்திட்டு சாப்பிட்டு பாருங்கோ. சிவனே எண்டு சமிச்சிடும். 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பியர்! நீங்கள் இருக்கிற இடத்திலையும் எக்கச்சக்கமான  ஏசியன் அரிசிக்கடை இருக்கெண்டு கூகிள் சொல்லுது....😁

Food-Inspiration international: Internationale Supermärkte

Dhl GIF | Gfycat Deutsche Post DHL Group | Produkte

குமாரசாமி அண்ணை...  அனுப்பிய, கவுனி அரிசி...
இன்று DHL எக்ஸ்பிரஸ் பொதிமூலம் கிடைத்தது. :)
மிக்க நன்றி அண்ணா. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

Dhl GIF | Gfycat Deutsche Post DHL Group | Produkte

குமாரசாமி அண்ணை...  அனுப்பிய, கவுனி அரிசி...
இன்று DHL எக்ஸ்பிரஸ் பொதிமூலம் கிடைத்தது. :)
மிக்க நன்றி அண்ணா. 🙏

மறக்காமல் பாஞ்ச்  அண்ணருக்கும் கொண்டுபோய் குடுத்து விடுங்கோ.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

 

3266
7
 

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | Karuppu Kavuni rice benefits

கருப்பு கவுணி அரிசியின் முக்கியத்துவம் சமீப காலங்களில் அனைத்து மக்களிடமும் சென்றடைந்திருக்கின்றது. இந்த அரிசியை நாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கவுனி அரசியில் உள்ள சத்துக்கள் (Kavuni Arisi)

இந்த கருப்பு கவுணி அரசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, மற்ற வகை அரிசிகளை விட இதில் கூடுதலாக  ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் அந்தோசயினின் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இதய நோயை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 1 (Kavuni Arisi Benefits)

அதிகளவு நார்ச்சத்து (Fibre) நிறைந்துள்ளது. ஒவ்வொரு 1/2 கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் குடல் அசைவுகளை செரிக்க பயன்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது, வயிற்று போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 2 (Karuppu Kavuni Arisi Benefits)

குண்டான உடலை குறைப்பதற்கு இந்த கருப்பு கவுணி அரிசி ஒரு சிறந்த உணவாக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கருப்பு கவுணி அரிசியில் செய்த உணவுகளை உண்பதன் மூலம் மிக எளிதாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 3 (Karuppu Kavuni Arisi Benefits)
இந்த அரிசி நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. கவுணி அரிசியில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதுடன், கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்குகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 4 (Karuppu Kavuni Arisi Benefits)
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கருப்பு கவுணி அரிசியை உண்பதால் நம் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது. நமது உடல் எடையும் கண்காணித்து ஆற்றலை அதிகரிப்பதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 5 (Karuppu Kavuni Arisi Benefits)

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளை அரிசியை சாப்பிடுவதற்கு பதிலாக இந்த கருப்பு கவுணி அரிசியை தினசரி உணவாக சாப்பிடுவதன் மூலம் நமது உடலானது நீரிழிவு நோய் எதிர்த்து போராட உதவுகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 6 (Karuppu Kavuni Arisi Benefits)
இந்த கருப்பு கவுணி அரிசியில் உயிர்ச்சத்து விட்டமின் பீ/ஈ அதிகளவு நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு சிறந்தது.

கருப்பு கவுனி அரிசியை கொண்டு என்னென்ன உணவுகளை சமைக்கலாம்?

இனிப்பு பொங்கல், பாயசம், சாதம், கஞ்சி, இட்லி மற்றும் தோசை ஆகியவைகளை செய்து சாப்பிடலாம்.

https://kallaru.com/karuppu-kavuni-rice-benefits/?__cf_chl_jschl_tk__=pmd_4FV7h1Lk0egShPvBNFv3GB2J0SBcrhZxH6WJ4vLdXSs-1635182613-0-gqNtZGzNAmWjcnBszQi9

Link to comment
Share on other sites

3 hours ago, Justin said:

கறுப்பு அரிசி, சிவப்பரிசி, பிறவுண் அரிசி - இவை எல்லாமே தீட்டிய வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானவை. இதன் காரணம், அரிசித் தானியத்தின் மேல் படையான தவிட்டில் (bran) தான் அனேகமான நுண் போசணைகள் இருக்கின்றன, அத்தோடு நார்ச்சத்தும் தவிட்டில் தான் அதிகம். தவிட்டை தீட்டுதல் மூலம் அகற்றி விட்டால் கிடைப்பது சுவையான, ஆனால் நார்ச்சத்தும் போசணைகளும் அற்ற சுத்திகரித்த மாச்சத்து! இது உடனடியாக உடலினுள் உறிஞ்சப் பட சீனி உடலில் ஏறும், இன்சுலினும் ஏறும் - இது மீள மீள நடந்தால் இரண்டாம் வகை நீரிழிவு (T2D) காலப் போக்கில் வரலாம்! 

 

Longitudinal cross section of grain [21] | Download Scientific Diagram

 

பட உதவி : நன்றியுடன்:Arlina Prima Putri

இந்த கறுப்பரிசியின் தவிட்டில் அந்தொசயனின் என்ற நிறப்பொருள் இருப்பதால் கரிய அல்லது நாவல் நிறம். இந்த அந்தோசயனின் antioxidant என்பதால் இது புற்று நோயிலிருந்து காக்கும் எனவும் சொல்லப் படுகிறது - ஆனால் அனேக ஆய்வுகள் ஆய்வு கூட மட்டத்தில் மட்டும் செய்யப் பட்டவை. 

ஆனால், நீரிழிவு வராமலிருக்க கறுப்பு, சிவப்பு, பிறவுண் அரிசி வகைகள் உதவும் என்பது நிரூபணமான தரவு. 

இணையத்தில் தேடி வாசித்தபோது நீங்கள் சொன்ன antioxidant இன் அளவுதான் ஏனைய அரிசி வகைகளிலிருந்து வேறுபடுகிறது. 

வெள்ளை அரிசி தவிர ஏனைய அரிசிகள் நீரிழிவு வராமல் இருக்க ஓரளவு உதவுமே தவிர நிவாரணி அல்ல.

சில அரிசி வகைகள் நீரிழிவுக்கு 'நல்லதாம்' என்ற தவறான கருத்தால் நீரிழிவு உள்ளவர்கள் இந்த அரிசி வகைகளைத் தாராளமாக உண்ணுகின்றனர். இது நீரிழிவு நோயைக் குணப்படுத்தாது. Glycemic Indexe இல்தான் வித்தியாசங்கள் உள்ள்ளனவே தவிர கலோரிகளின் அளவுகளில் (glucide - சீனி) மிகக் குறைவான வித்தியாசமே உள்ளது.

உதாரணமாக வெள்ளை அரிசிக்கும் தீட்டாத அரிசிக்கும் உள்ள வேறுபாடு
100 கிராம் தீட்டாத அரிசி 326 KCal  -  வெள்ளை அரிசி 320 KCal

Glycemic அளவு  தீட்டாத அரிசி 50/100 - வெள்ளை அரிசி 70/100 

சரியான வழி சோறு குறைவாகவும் மரக்கறி வகைகளைத் தாராளமாகவும், பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இணையவன் said:

இணையத்தில் தேடி வாசித்தபோது நீங்கள் சொன்ன antioxidant இன் அளவுதான் ஏனைய அரிசி வகைகளிலிருந்து வேறுபடுகிறது. 

வெள்ளை அரிசி தவிர ஏனைய அரிசிகள் நீரிழிவு வராமல் இருக்க ஓரளவு உதவுமே தவிர நிவாரணி அல்ல.

சில அரிசி வகைகள் நீரிழிவுக்கு 'நல்லதாம்' என்ற தவறான கருத்தால் நீரிழிவு உள்ளவர்கள் இந்த அரிசி வகைகளைத் தாராளமாக உண்ணுகின்றனர். இது நீரிழிவு நோயைக் குணப்படுத்தாது. Glycemic Indexe இல்தான் வித்தியாசங்கள் உள்ள்ளனவே தவிர கலோரிகளின் அளவுகளில் (glucide - சீனி) மிகக் குறைவான வித்தியாசமே உள்ளது.

உதாரணமாக வெள்ளை அரிசிக்கும் தீட்டாத அரிசிக்கும் உள்ள வேறுபாடு
100 கிராம் தீட்டாத அரிசி 326 KCal  -  வெள்ளை அரிசி 320 KCal

Glycemic அளவு  தீட்டாத அரிசி 50/100 - வெள்ளை அரிசி 70/100 

சரியான வழி சோறு குறைவாகவும் மரக்கறி வகைகளைத் தாராளமாகவும், பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வதே.

 சரியான தகவல்கள் இணையவன் - இதை வேறு இடங்களில் நான் எழுதியிருப்பதால் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் 3 வழிகளில் தீட்டாத அரிசி நீரிழிவு போன்ற நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கும்:

1. இயற்கையாகவே ஒருவர் உள்ளெடுக்கும் அளவு தீட்டாத அரிசி சாப்பிடும் போது குறையும் - வயிறு நிறைந்து விடுவதால் -இங்கே உள்ளெடுக்கும் கலோரி குறையும். வெள்ளை அரிசி போன்ற அளவில் சாப்பிட்டால் இந்த வழி வேலை செய்யாது.

2. சமிபாடடையும் வேகம், குடலினூடாக நகரும் வேகம் தீட்டாத அரிசிக்குக் குறைவு. எனவே குளூக்கோஸ் உறிஞ்சுதல் குறைவு, இரத்த குளூக்கோஸ் உடனே கூடாது. இது கணையத்திற்கு நல்லது. 

3. நார்ச்சத்துள்ள எந்த உணவும் - தீட்டாத அரிசி உட்பட - எங்கள் குடலில் இருக்கும் நுண்ணங்கிகளின் (microbiome)  பரம்பலை, வகைகளை மாற்றும். இது, நீண்ட காலப் போக்கில் உடலுக்கு நல்லது. இந்த குடல் நுண்ணங்கிகளினால் உருவாக்கப் படும் SCFA எனப்படும் கொழுப்பமிலங்கள் பல உடற் தொழிற்பாடுகளில் பங்களிப்புச் செலுத்துகின்றன. 

ஆனால், சோத்தால் அணைகட்டி, குழம்பால் குளம் கட்டிச் சாப்பிட்டால் தீட்டாத அரிசியும் நஞ்சு தான் என்பதை நினைவிற் கொள்ள வேணும்! 😄 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு சாப்பிடமுன்னம் நார்மலா இருக்கும் சுகர் சாப்பிட்டவுடன் சடன் எண்டு ஏறி 150,200 க்கு வந்துடும்.. இப்படி சுகர் அதிகரிப்பவர்களுக்கு நிண்டு நிதானமா மெதுவா சமிபாட்டடையும் உணவுகள்தான் சரி.. இவைதான் மெதுமெதுவாக சமிபாடடைவதால் இவற்றில் இருந்து வரும் கார்ப்பும் மெதுவாக உடம்பில் சேரும்.. அதனால் சுகரும் மெதுவாகத்தான் அதிகரிக்கும்.. அந்தவகையில் மெதுவாகசமிபாடடையும் முழுத்தானியங்கள் கறுப்பரிசி உள்ளடங்களாக நல்லதே.. நான் கீழ் உள்ள தானியங்களை மிக்ஸ் பண்ணி ( மிக்ஸ் பண்ணி விக்கிறார்கள் விதும்பினால் தனித்தனிய வாங்கியும் மிக்ஸ் பண்ணலாம்) அதோட ஒரு கைப்பிடி சிவப்பு பச்சை அரிசியும் சேத்து சமைச்சு தனி அரிசிச்சோறுக்கு பதிலா சோறா பாவிக்கிறனான்… அதே ரேஸ்ற்றா இருக்கு.. எவ்வளா சாப்புட்டாலும் சுகர் முதல் நாலு அவறுக்கு 125 ஜ தாண்டவில்லை.. சாப்பிட்டு ஒவ்வொரு மணித்தியாலமும் பரிசோதித்து பார்த்தேன் பலமுறை..

buckwheat, red lentils, squash seeds, green lentils, bulgur, millet, sunflower seeds, red quinoa, white quinoa, black quinoa+ நம்ம அரிசி

1 hour ago, nunavilan said:

 யாயினி சாப்பிட முதல் ஒரு   shot எடுத்திட்டு சாப்பிட்டு பாருங்கோ. சிவனே எண்டு சமிச்சிடும். 🤣🤣🤣

இதுக்கு வைன் மாதிரி ஒண்டும் வராது.. எவ்வளா சாப்பிட்டாலும் பூரா செமிச்சுடும் ஒண்டும் நடக்காத மாதிரி.. ஒரு கப் வைன் சாப்பாட்டுக்கு முன் கீல வெடக் நா புள்ள

 

2 hours ago, யாயினி said:

ஒரு குழந்தை பிள்ளைகளுக்கு பீட் பண்ற அளவு அதிகமா....

என்ட சாப்பாட்டு முறை(வித்தியாசம்) ரொம் குறைவு..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.