Jump to content

Lauterbrunnen - கொள்ளை அழகு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

மூன்று அடுத்தடுத்த அருவிகளுடன் பசுமை பள்ளத்தாக்கு நம் மனதை போட்டுத் தாக்குகிறது. இயற்கையின் கொள்ளை அழகு.. திரும்பி வர மனம் இல்லை..!

 

 

  • Like 12
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்...
ஒரு நாட்டிற்கு செல்லும் போது....  அந்த நாட்டின், கிராமங்களுக்கு செல்லும் போது தான்...
அந்நாட்டின்... அழகை, உண்மையாக  தரிசிக்க முடியும். அதனை குறுகிய காலத்தில்... 
நன்றாக திட்டமிட்டு... ரசித்துள்ளீர்கள். 👍 :)

Link to comment
Share on other sites

உணவை உண்ணும்போது அறு சுவைகளையும், அதாவது இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு. என ஒவ்வொன்றின் சுவையையும் தனித்தனியாக உணர்ந்து உண்ணக்கூடியவனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதுபோல்... கண்கள் காணும் அழகில் இருக்கும் காட்சிகளையும் உணர்ந்து ரசிப்பவனது உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அது பிறரையும் மகிழவைக்கும் என்பதற்கு கள உறவு ராசவன்னியர் ஒரு சாட்சி. 🙌 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சலாந்தின் மலைகளும், ஏரிகளும் எப்போதும் ரம்மியமானவை. கோடையிலும், பனிக்காலத்திலும் போகவேண்டிய இடங்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2021 at 21:56, ராசவன்னியன் said:

இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது?

Link to comment
Share on other sites

22 minutes ago, குமாரசாமி said:

ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது?

வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Paanch said:

வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.? 🤔

எனக்கு திண்ணையை தடை செய்துள்ளார்கள். அதனால் ஒன்றுமே தெரிவதில்லை.

இது மட்டும் தெரியும்...  You can not chat because you're in block list. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு திண்ணையை தடை செய்துள்ளார்கள். அதனால் ஒன்றுமே தெரிவதில்லை.

இது மட்டும் தெரியும்...  You can not chat because you're in block list. 🤣

அட பாவமே சாமிக்கே இந்த நிலை என்றால்...... பக்தகோடிகள் நிலை என்ன...? 

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் வேலைப்பழு முடிந்ததும் யாழுடன் இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது?

சுவிட்சர்லாந்து வருகை முதலில் இரண்டு நாள் திட்டமாக இருந்தது. பின்னர் பலரும் சொல்லிய இடங்களை சுற்றிப்பார்க்க அதாவது சுவிஸ் ஆல்ப்ஸ் (Top of Europe), இன்டெர்லகன் மற்றும் லுசன்ட் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகள் மிகவம் ரம்யமானவை, வாழக்கையில் தவறவிடக்கூடாது என சொல்லியதால், நான்கு நாட்கள் சூரிட்சில் தங்கியிருந்து அலுவலக வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு இரண்டு முறை இன்டர்லகன் மற்றும் லுசன்ட் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளை பார்த்துவிட்டு ஞாயிறு அதிகாலை துபாய் திரும்பினேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது?

 

7 hours ago, Paanch said:

வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.? 🤔

என்னுடைய சுவிஸ் வருகை திட்டமிடாத திடீர் அலுவலக விசயமான பயணம்தான்..

ஒருத்தரின் தொடர்பு எண் இருந்ததது சூரிட்ஸ் இறங்கியதும் அழைத்தேன், மற்ற அண்மித்த உறவுகளின் தொடர்பு எண்கள் இல்லாதபடியால் அழைக்க இயலவில்லை.

வருத்தமாகவே இருந்தது. மன்னிக்க வேண்டுகிறேன்.

 

photo0jpg.jpg  

TheBlindList4.jpg?ssl=1

படத்திலுள்ள இரு இடங்களுக்குள்ளும் இரண்டு முறை சென்று வந்தேன்.😝

3 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் வேலைப்பழு முடிந்ததும் யாழுடன் இணைந்திருங்கள்.

நிச்சயம் கலந்துகொள்வேன்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

சுவிற்சலாந்தின் மலைகளும், ஏரிகளும் எப்போதும் ரம்மியமானவை. கோடையிலும், பனிக்காலத்திலும் போகவேண்டிய இடங்கள்.  

Lauterbrunnen  மற்றும் Grindelwald ஆகிய இரு இடங்களும் அவசியம் கால்நடையாக நடந்து ரசிக்கக் கூடிய அற்புதமான இடங்கள். என்னுடன் வந்த இருவருடனும் சில தூரம் நடந்துவிட்டு, பின்னர் காரிலேயே சுற்றிப் பார்த்தோம்.

895636de-4261-4000-a278-20042ddf3a50.jpg?impolicy=resizecrop&rw=1005&rh=565 

Jungfraujoch-Top-of-Europe-in-Switzerland-inspiration-and-practical-tips-for-your-visit.jpg.webp

"Top of Europe"  இன்னும் அற்புதம்..!

 

நேரம் கிட்டும்போது சுவிட்சர்லாந்து பயண நினைவுகளை எழுதுகிறேன்.

Edited by ராசவன்னியன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ராசவன்னியன் said:

 

என்னுடைய சுவிஸ் வருகை திட்டமிடாத திடீர் அலுவலக விசயமான பயணம்தான்..

ஒருத்தரின் தொடர்பு எண் இருந்ததது சூரிட்ஸ் இறங்கியதும் அழைத்தேன், மற்ற அண்மித்த உறவுகளின் தொடர்பு எண்கள் இல்லாதபடியால் அழைக்க இயலவில்லை.

வருத்தமாகவே இருந்தது. மன்னிக்க வேண்டுகிறேன்.

 

photo0jpg.jpg  

TheBlindList4.jpg?ssl=1

படத்திலுள்ள இரு இடங்களுக்குள்ளும் இரண்டு முறை சென்று வந்தேன்.😝

நிச்சயம் கலந்துகொள்வேன்.

ஹூட்டர்ஸ் ரெஸ்டாரண்டில் என்னவெல்லாம் பார்த்து ரசித்தீர்கள்?
எனக்கு ஒரு நமீதா பாட்டின் வரி ஞாபகம் வருகுது வன்னியன் சார் :)
"இம்மாம் பெரிய பஞ்சு மெத்தை இதுவரைக்கும் பார்த்ததில்லை   😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

ஹூட்டர்ஸ் ரெஸ்டாரண்டில் என்னவெல்லாம் பார்த்து ரசித்தீர்கள்?
எனக்கு ஒரு நமீதா பாட்டின் வரி ஞாபகம் வருகுது வன்னியன் சார் :)
"இம்மாம் பெரிய பஞ்சு மெத்தை இதுவரைக்கும் பார்த்ததில்லை   😀

உண்மையை சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..?

எங்களுக்கு ஒரே தாகமாக இருந்தது.

முதல்முறை, உடன் வந்த அரபி வற்புறுத்தி கூப்பிட்டதால் (எனக்கு காஃபி சாப்பிடும் பழக்கம் இல்லாவிட்டாலும் )உள்ளே அவர்களுடன் சென்று உட்கார்ந்திருந்தேன்.சிறிது நேரம் கழித்து வந்துவிட்டேன். மறுபடியும் உள்ளே சென்று வந்தேன், தப்பா நினைக்காதீங்க, ரெஸ்ட் ரூமிற்குத்தான்..! 😜

மற்ற எதையும் கவனிக்கவில்லை..! 🤣

பாஞ் அவர்களிடம் வாட்ஸ் அப்பில் கேட்டேன், அவரும் இங்கிருக்கும் விசேசம் மற்றி ஒன்றும் சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடி நடையாக இந்த கிராமத்தில் புல்வெளியினூடாக சிறு பாதைகளில் நடந்தால் இன்னும் பல இடங்களை ரசிக்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"டாப் ஆஃப் ஈரோப் - Jungfraujoch " செல்ல Lauterbrunnen ரயில் நிலையத்திற்கு வந்து மலை ரெயிலில் ஏறி, மலை மேலே மூன்று இடங்களில் ரயிலில் மாறி செல்ல வேண்டும்.

உச்சம் தொட்டு மேலே சென்றால் நின்றால் பனி மூடிய மலைகள், சறுக்கு விளையாடுமிடங்கள்.. வெண்பனி மூடிய பல இடங்கள்..

வெற்று மணல் பாலைவனத்தையே 23 வருடங்களாக பார்த்திருந்த எனக்கு இந்த பனிமலைகளை தொட்டு சறுக்கி சிலிர்த்த அனுபவத்தை இன்னமும் ரசிக்கிறேன்..!

கீழே இணைத்துள்ள காணொளி அவ்விடத்தை பற்றி சொல்லும்..

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ராசவன்னியன் said:

பொடி நடையாக இந்த கிராமத்தில் புல்வெளியினூடாக சிறு பாதைகளில் நடந்தால் இன்னும் பல இடங்களை ரசிக்கலாம்.

அது சரி காய்ஞ்சு போன துபாயிலையிருந்து குளிர்ச்சியான சுவீஸ் போனால் எல்லாம் சொர்க்கமாய்த்தான் தெரியும்.🤣
உண்மையிலேயே சுவீஸ் வடிவான நாடுதான்.👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அது சரி காய்ஞ்சு போன துபாயிலையிருந்து குளிர்ச்சியான சுவீஸ் போனால் எல்லாம் சொர்க்கமாய்த்தான் தெரியும்.🤣
உண்மையிலேயே சுவீஸ் வடிவான நாடுதான்.👍🏽

என்ன சாமிகளே, படால்ன்னு இப்பிடி தீர்ப்பு எழுதிட்டீங்க..? 😜

சுவிஸ் உண்மையிலேயே இயற்கை தன் அழகை அள்ளித் தெளித்த சொர்க்கபுரிதான். சந்தேகமே வேண்டாம்..!

இன்டர்லகன் நகரத்தின் தெருக்களினூடாக நாங்கள் நடந்து செல்கையில், பல இடங்களில் வயதானவர்களையே அதிகம் காண முடிந்தது. ஓய்வு பெற்றவுடன் இந்த சொர்க்கபுரியில் வீடு வாங்கி மீதமுள்ள நாட்களை ரசித்து அனுபவிக்கிறார்கள் போலும்..!

என்னால் அவர்களை, அவர்களின் மலைசரிவின் வீடுகளை பார்த்து சிறு பொறாமையுடன் பெருமூச்சுதான் விட முடிந்தது.😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ராசவன்னியன் said:

என்ன சாமிகளே, படால்ன்னு இப்பிடி தீர்ப்பு எழுதிட்டீங்க..? 😜

சுவிஸ் உண்மையிலேயே இயற்கை தன் அழகை அள்ளித் தெளித்த சொர்க்கபுரிதான். சந்தேகமே வேண்டாம்..!

இன்டர்லகன் நகரத்தின் தெருக்களினூடாக நாங்கள் நடந்து செல்கையில், பல இடங்களில் வயதானவர்களையே அதிகம் காண முடிந்தது. ஓய்வு பெற்றவுடன் இந்த சொர்க்கபுரியில் வீடு வாங்கி மீதமுள்ள நாட்களை ரசித்து அனுபவிக்கிறார்கள் போலும்..!

என்னால் அவர்களை, அவர்களின் மலைசரிவின் வீடுகளை பார்த்து சிறு பொறாமையுடன் பெருமூச்சுதான் விட முடிந்தது.😍

ஐயனே! இந்தியாவில் இல்லாத அழகும் அதிசயமும் உலகில் வேறெங்கும் இல்லை என்பது எனது அனுமானம். என்ன ஒன்று சிறந்த ஸ்திரமான அரசியல் இருந்தால் எல்லாமே சிறப்பாகத்தான் தெரியும். எல்லாவற்றையும் விட சுவீஸ் ஒரு குட்டி நாடு. அதை பேணி பாதுகாக்க அவர்களால் முடிகின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2021 at 01:47, குமாரசாமி said:

ஐயனே! இந்தியாவில் இல்லாத அழகும் அதிசயமும் உலகில் வேறெங்கும் இல்லை என்பது எனது அனுமானம். ............:)

இந்தியாவா............ஆஆஆ..........................?  ugh-shout.gif

எனக்கு தமிழ்நாடு மட்டும்தான் தெரியும்..!  digilah-digifun.gif 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2021 at 12:32, Paanch said:

அட பாவமே சாமிக்கே இந்த நிலை என்றால்...... பக்தகோடிகள் நிலை என்ன...? 

***

அவர்கள் என்னை கள்ளச்சாமியார் என நினைக்கின்றார்கள்  போலும்....🤣
சொன்னால் நம்புங்கள் நான் நல்லசாமி.குமாரசாமி :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரமின்மையாலும், வயதின் காரணமாக பயத்தாலும் தவறவிட்ட அருமையான பயணம், கிரிண்டல்வாடில் (Grindelwald) உள்ள இந்த த்ரிலிங் ஜிப் ட்ரைவ்(Zip drive)பயணம்தான்.

நாங்கள் கேபிள் கார் மூலம் மட்டுமே பயணம் செய்து பசுமை பள்ளத்தாக்குகளை ரசித்தோம்.

உறவுகள் யாரும் அங்கு சென்றால், தவறாமல் ஜிப் ட்ரைவில் பயணம் செய்யுங்கள்.😍

 

 

Link to comment
Share on other sites

On 28/10/2021 at 16:42, குமாரசாமி said:

அவர்கள் என்னை கள்ளச்சாமியார் என நினைக்கின்றார்கள்  போலும்....🤣
சொன்னால் நம்புங்கள் நான் நல்லசாமி.குமாரசாமி :cool:

குமாரசாமி என்று பெயரைக் கொண்டவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்பது என் கணிப்பு, என் பெரியப்பா ஒருவர் பெயரும் குமாரசாமி. பிள்ளையாரைப்போல் குண்டாக வண்டியும், தொந்தியும் கொண்டவர். திருநெல்வேலியிலுள்ள பழங்கிணற்றடிப் பிள்ளையார் கோவிலில் பூனூல் அற்ற பூசாரியாக இருந்து பூசைகளை மேற்கொண்டு வந்தவர். எல்லோரும் அவரைச் சாமியார் என்று அன்போடு அழைப்பார்கள். அத்தனை மென்மையான உள்ளமும் கொண்டவர். எங்கள் யாழ்கள உறவு சாமியாரிடம் உள்ள மென்மையான உள்ளத்தையும் கள உறவுகள் பலரும் அறிவார்களே ஐயா.🙏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் காணாமல் போவதற்கு முன் சிறிய பகிர்வு..!

சார்ந்த தொழிற் கல்வியின் மூலம் என்னிடம் தொற்றிக்கொண்ட பருந்துப் பார்வையின் மூலம் தமிழ் நாட்டின் சில மலைப்பகுதிகளை கண்டிருக்கிறேன். அதன் மூலம் இயற்கையாகவே சில குறிப்பிட்ட கட்டிடமோ அல்லது சிறப்பான அமைப்பு கொண்ட வடிவங்கள், ஓடைகள், அணைகள், பாலங்கள் போன்றவற்றை காணும்போது (Area of Interest) சாட்டிலைட் படங்களிலோ அல்லது கூகிள் மேப்பில் குறித்துவைத்து மனதில் நிறுத்திக்கொண்டால் அவை என்றும் மனதைவிட்டு நீங்காது.

அப்படியான சிலவற்றின் வடிவங்களை மறுபடியும் ட்ரோன் காணொளி மூலம் காணும்போது நிச்சயம் அடையாளம் காண முடியும்.

அப்படி சுவிட்சர்லாந்தின் லாடர்ப்ரூனென்(lauterbrunnen),வென்ஞன்(Wengen),கிரிண்டெல்வாட்(Grindalwald) போன்ற பகுதிகளில் நான் பார்த்து ரசித்து குறித்துக்கொண்ட சில பகுதிகளை இக்காணொளியில் காணும்போது ஏற்படும் இனிமையான அனுபவம் அலாதியானது.

காலங்கள் மாறலாம், ஆனால் என் சுவிஸ் பயணத்தின் இனிமை நினைவுகள் என்றும் மறையாதிருக்கும். அதற்கு இதுபோன்ற காணொளிகள் உதவும்.

மீண்டும் பிறிதொரு நாளில் சந்திப்போம்..! 🙏

 

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2021 at 21:56, ராசவன்னியன் said:

இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

நீங்கள் நல்ல காலம் ஒக்ரோபரில் சுவிட்சலாந்து சென்று வந்துவிட்டீர்கள் இப்போது கொரோனா ஐரோப்பாவில் அதிகம் சுவிட்சலாந்தில் மேலும் அதிகமாம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.