Jump to content

இலங்கை வருகின்றார்... இந்திய கோடீஸ்வரர், கவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வருகின்றார் இந்திய கோடீஸ்வரர் கவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

இலங்கை வருகின்றார்... இந்திய கோடீஸ்வரர், கவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

இந்திய அதானி குழுமத்தின் தலைவர் கௌவுதம் அதானி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோளிட்டு இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒரு மாதத்திற்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிலையில் இலங்கையின் துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான திட்டங்களில் முதலிடுவதற்கு அதானி ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கும் போது இந்த துறைகளில் சாத்தியமான திட்டங்கள் குறித்து அதானி விவாதிப்பார் என்றும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2021/1246681

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானி குழுமத்தின் தலைவர் இன்று ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கிறார் | Virakesari.lk

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்தை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

kviGoDga?format=jpg&name=small

கொழும்பு மற்றும் புதுடில்லியில் உள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கொள்காட்டி இந்த தகவலை 'தி இந்து' தெரிவித்துள்ளது.

"இது ஒரு தனிப்பட்ட விஜயம் மற்றும் மேற்கு கொள்கலன் முனையம் திட்டம் பற்றி விவாதிக்க திரு. அதானி ஜனாதிபதியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தி இந்துவிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

அதேநேரம் இலங்கை வந்துள்ள அதானி, நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

அதானி குழுமம் ஒரு மெய்நிகர் விழாவில், அதன் இலங்கைப் பங்காளியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) ஆகியவற்றுடன் ஒரு ஒப்பந்தத்தில் (BOT) கையெழுத்திட்ட ஒரு மாதத்திற்குள் அதானியின் விஜயம் அமைந்துள்ளது.

அதானி குழுமத்தின் தலைவர் இன்று ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கிறார் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பிழம்பு said:

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்தை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

அதானி  ஐயா  நீங்கள் ஏன் நெடுந்தீவிலை ஒரு துறைமுகம் கட்டக்கூடாது?  😎

625.298.560.350.160.300.053.800.522.160.90%2B%252825%2529.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வாருங்கோ! வந்து பாருங்கோ! வேண்டியதுக்கு தீருங்கோ விலையை,  நான் கைச்சாத்திடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுச் சூழல் பற்றிச் சற்றும் கண்ச்க்கிலெடுக்காத ஒரு ஒப்பந்தக் காரர் இவர்.இந்தியாவில் இவர் கொங்கிறீற் கழிவுகளைக் கடலுக்குள் கொட்டுவது வழக்கம். அவுஸில் ஒரு நிலக்கரி அகழ்வுத் திட்டம் ஒன்றைப் பொறுப்பெடுத்திருக்கிறார். இவரது கொம்பனியை ஒரு ட்ரஸ்ற் அமைப்பாக அமைத்துள்ளார். உலகின் மிகப் பெரிய பவளப் பாறைத்தொடர் இவரது கப்பல் கழிவுகளால் பாதிக்கப் பட்டால், இவரது கம்பனியைச் சட்டத்தால் குற்றவாளியாக்க இயலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அதானி  ஐயா  நீங்கள் ஏன் நெடுந்தீவிலை ஒரு துறைமுகம் கட்டக்கூடாது?  😎

மன்னிக்கவும்.

அது ஏற்கனவே சீனாக்காரனுக்கு கொடுத்தாகிவிட்டது.

வேற இடம் பிடித்தா சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு முனையம் மாத்திரமல்ல ஏனைய உட்கட்டமைப்புகளிலும் கூட்டாண்மை - கௌதம் அதானி

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும் என்று அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் பிரபல வர்த்தகருமான கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ள கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் பிரபல வர்த்தகருமான கௌதம் அதானி நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

249119346_1002163396997127_7745831921358

'இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ராஜபக்ஷவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும். இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.' என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

242903187_419737142866174_48782946913619

பிரத்தியேக இரண்டு விமானங்களில் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கௌதம் அதானி, மேற்கு முனைய அபிவிருத்தி மாத்திரமின்றி, எரிசக்தி துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக 'த இந்து'  செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் செவ்வாயன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது , ' இலங்கைக்குள் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்காக செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் அத்தியாவசியமானவையாகும். நாம் எதிர்கொள்ளும் டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாகவும் , நாட்டின் அபிவிருத்திக்காகவும் குறித்த முதலீடுகளை பெற்றுக் கொள்வது விசேட காரணியாகும்.

தற்போது காணப்படுகின்ற நிலைமைகளின் கீழ் உலக நாடுகள் பலவற்றுடன் செயற்படும் போது முதலீட்டார்கள் குறைவாகக் காணப்படுகின்ற நாடு இலங்கை என்ற நிலைமையை சீராக்கி , நாட்டுக்கு முதலீட்டார்களை வரவேற்பது அவசியமாகும். அதற்கான வாய்ப்பினை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.' என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.

இந்நிலையில் துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளதாகவும் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 

இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் செவ்வாய்கிழமை மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர். இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளது. 

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார வலயத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியான கௌதம் அதானியின் மகன், அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னர் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.

 

https://www.virakesari.lk/article/116088

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2021 at 12:03, புங்கையூரன் said:

. அவுஸில் ஒரு நிலக்கரி அகழ்வுத் திட்டம் ஒன்றைப் பொறுப்பெடுத்திருக்கிறார். இவரது கொம்பனியை ஒரு ட்ரஸ்ற் அமைப்பாக அமைத்துள்ளார். உலகின் மிகப் பெரிய பவளப் பாறைத்தொடர் இவரது கப்பல் கழிவுகளால் பாதிக்கப் பட்டால், இவரது கம்பனியைச் சட்டத்தால் குற்றவாளியாக்க இயலாது.

இன்னமும் இது தொடர்பான வழக்கு நடந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.. சுற்றுபுற சூழல் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமைப்பான ACF (Australian Conservation Foundation) Suttor ஆற்றிலிருந்து இந்த coal mineற்கு தண்ணீர் எடுப்பது சம்பந்தமான வழக்கில் வெற்றி பெற்றுள்ளது. Traditional owners வழக்கிலும் பிரச்சனைகள்.. 

இவருடைய இந்த Carmichael coal mine பற்றிய விபரங்களை அறியும் பொழுது, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு செய்யும் செயல்களை பார்க்கும் பொழுது ஆபத்தான ஒருவர் என்பது தெரிகிறது.. 

 

@குமாரசாமிஅண்ணா இவரை ஏன் நெடுந்தீவிற்கு எல்லாம் போகசொல்கிறீர்கள்.. இருப்பதையும் அழிப்பதற்காகவா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.