Jump to content

ஐ.எம்.எவ் கடன்: மூன்றாமுலகக் கடன் பற்றிய கதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.எம்.எவ் கடன்: மூன்றாமுலகக் கடன் பற்றிய கதைகள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, இன்னும் கடனை வாங்குவதன் மூலம் தீர்த்து விடலாம் என்று பலரும் நம்புகிறார்கள். 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது, பொருளாதாரக் கொள்கை; இரண்டாவது, அதன்வழியமைந்த பொருளாதாரக் கட்டமைப்பு. 

இவை இரண்டிலும், அடிப்படையான மாற்றங்களைச் செய்யாத வரை, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வில்லை. கடன் வாங்குவது, தற்காலிகமான ஆறுதலைத் தரும். ஆனால், வாங்கிய கடனையும் அதற்கான வட்டியையும் சேர்த்தே மீளச்செலுத்த வேண்டும் என்பதே யதார்த்தம். 

இன்று தனிமனிதர்கள் வாழ்வில், நிதிநிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை ஆழமாக யோசித்தால், செயற்பாட்டில் சர்வதேச நிதி நிறுவனங்கள் கொஞ்சமும் சளைத்தவையல்ல என்பது புலனாகும். ஐ.எம்.எவ், ஒரு கந்துவட்டிக்காரனுக்கு எவ்வகையிலும் சளைத்ததல்ல. 

இன்று உலகெங்கும், மூன்றாமுலக நாடுகள் கடனில் அகப்பட்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் கொண்ட இந்நாடுகள், ஏன் கடனாளியாகின என்ற கேள்வி, பெரும்பாலும் கேட்கப்படுவதில்லை. 

மாறாக, கடன் என்பது சமூக அசைவியக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. கடன் வாங்குவதை ஊக்குவிப்பதே, இன்றைய பொருளாதார முறையின் முக்கியமான அம்சமாக உள்ளது. இது கடன் வாங்காத ஒருவரை விட, கடன் வாங்கித் தட்டுத்தடுமாறி மீளச்செலுத்துகின்ற ஒருவரை, நம்பிக்கையானவராகப் பார்க்கிறது. 

ஒருவரைத் தொடர்ச்சியாகக் கடனுக்குள் வைத்திருப்பதை, நிதிநிறுவனங்களும் அரசும் உறுதி செய்கின்றன. இதனால் கடனுக்கான வட்டி என்பது, மிகப்பெரிய இலாபமாகிறது. எனவே, இந்த விஷச் சுழலில் மக்களைச் சிக்கவைப்பதில், இந்தப் பொருளாதார முறை வெற்றிகண்டுள்ளது. இதன் நீட்சியே, சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகும்.

கடந்தாண்டு தொடக்கத்தில், கொரோனா தொற்றுக்கு முன்வரை, மூன்றாமுலக நாடுகளின் வெளியகக் கடனின் மொத்தத்தொகை அண்ணளவாக 11 ரில்லியன் அமெரிக்க டொலராகும். பெருந்தொற்றும் விலைவாசி ஏற்றமும் காலநிலை மாற்றமும், இந்தத் தொகையைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளன. ஆனால், இதற்கு முன்னர், இவ்வளவு கடனுக்கு இந்நாடுகள் எவ்வாறு ஆளாகின என்ற கதையைப் பார்க்க வேண்டியுள்ளது. 

நாடுகளின் வளர்ச்சி மாதிரிகளும் அவை மேற்கொண்ட பொருளாதாரச் சமூகத் தேர்வுகளுமே, மூன்றாமுலக நாடுகளின் கடன்களுக்கான பிரதான காரணமாகும். மூன்றாமுலக நாடொன்றின் தேசிய கடன், எவ்வாறு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து, அந்நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பது புதிர்போல் தோன்றினாலும், அதுதான் கடந்த பல தசாப்தங்களாக மூன்றாமுலக நாடுகளின் கதையாக உள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் தோற்றம்பெற்ற தாராளவாதமும் உலகமயமாக்கலும், அரசின் வகிபாகத்தைக் குறைப்பதை நோக்காகக் கொண்டிருந்தன. சோசலிச அரசுகளில் ஆழமாக ஊன்றியிருந்த ‘சமூக நல அரசுகள்’ என்ற கருத்தாக்கத்துக்கு மாறாக, திறந்த சந்தையையும் அரசுகளின் கட்டுப்பாடற்ற நிலையையும் முன்னிறுத்தின. இதன் ஒரு பகுதியாக, ‘வளர்ச்சி’ என்பது பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல, உலகமயமாக்கல் நுகர்வைப் பிரதானமாக்கியது.  

கொலனியாதிக்கத்துக்குப் பிந்தைய அரசுகள், இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கின. இதன் விளைவால், ‘வளர்ச்சி’ பற்றிய தவறான புதிதலுக்கு ஆளாகின. வளர்ச்சி என்பது எதற்கானது, யாருக்கானது ஆகிய கேள்விகள் கேட்கப்படவேயில்லை. 

காலப்போக்கில் இது, ‘நவீனமயமாதல்’ என்ற புதிய பெயரைச் சூடிக் கொண்டது. மூன்றாமுலக நாடுகள், இந்தக் கவர்ச்சிகரமான சொல்லாடலில் வீழ்ந்தன. தங்கள் பொருளாதாரத்தின் அடிப்படைகளை, மாற்றிக் கொள்ளத் துணிந்தன. விவசாயத்தை மையமாகக் கொண்ட நாடுகள், தொழில்மயமாகின; தொழில்மயமான நாடுகள், சேவைமயமாகின.

இவ்வாறு, தங்களின் பொருளாதார பலங்களில் இருந்து விடுபட்டு, புதியவகை பொருளாதார அடிப்படைகளை நோக்கி அவை நகர்ந்தன. இதனால், அவர்களின் பொருளாதார பலம் கேள்விக்குள்ளானது. எனவே, ‘நவீனமயமாகுவதற்காக’ சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டன.  

இதன் தொடர்ச்சியாக, வட்டியுடன் கடனை மீளச் செலுத்துவது என்ற நிதி நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள், இந்த நாடுகள் ஆட்பட்டன. அரச நிறுவனங்களை ‘மீள்கட்டமைப்பு’ செய்வதும் ‘சீர்திருத்தங்களை’ மேற்கொள்வதும் இதன் பகுதியாகின. இவற்றின் மோசமான பலன்களை அனுபவிப்பது, இந்நாடுகளில் உள்ள ஏழை மக்களாவர். 

வளர்ச்சிக்காக வாங்கப்படும் கடனில் பெரும்பகுதி, ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை நிரப்பும். எனவே, திட்டமிட்ட திட்டத்துக்குரிய பணம் அரசிடம் இருப்பதில்லை. பின்னர், அக்கடனைத் திருப்பிச் செலுத்த புதிய கடனை நாடுகள் வாங்கும்; அவையும் ஆட்சியாளர்களின் தனிப்பட்ட கஜனாக்களை நிரப்பும். அதன் பின்னர் வாங்கிய கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கு, புதிய கடன்கள் வாங்கப்படும். இது ஒரு முடிவற்ற தொடராக விரியும். 1980களில் பிலிப்பைன்ஸ், நிக்கரகுவா, ஆர்ஜென்டீனா போன்ற ஏராளமான நாடுகளின் கதை இதுதான். 

1970களின் இறுதிப்பகுதியில், சிலியில் செப்புச் சுரங்கங்களின் வருமானம் உப்பிப்பெருத்த பொருளாதாரமாக உருமாறியது. சிலியின் நாணயத்தின் (பெசோ) பெறுமதி, திட்டமிட்டு வலுவானதாகக் காட்டப்பட்டது. அமெரிக்க டொலருக்கு எதிரான பெசோவின் பெறுமதி உயர்வாக, இதனால் இறக்குமதி செய்வது மலிவானது போன்றதொரு தோற்றம் உருவாகியது. 

இதனால் சிலியின் மத்தியதர வர்க்கம், அளவற்ற நுகர்வில் இறங்கியது. பொருளாதாரம் சில ஆண்டுகளில் இறக்குமதியில் நம்பியிருக்குமாறு மாறியது. இதனால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். மெதுமெதுவாக, இறக்குமதிக்குக் கடன் வாங்கும் நிலைக்கு, சிலி தள்ளப்பட்டது. 

உள்ளூர் உற்பத்தியாளர்கள் தொழிலற்றவர்களாகினர். ஏற்றுமதி அதிகரிக்காத நிலையில், இறக்குமதி பலமடங்கு அதிகரித்தது. இதனால் தொடர்ந்தும் கடன்வாங்க வேண்டிய நிலைக்கு சிலி ஆளாகியது. அப்போது, சர்வதேச நாணய நிதியம் உதவிக்கு வந்தது. 

இதன் இன்னொரு வடிவம், நிக்கரகுவாவில் அரங்கேறியது. 1970களில் ஆட்சியில் இருந்த ‘சமோசா’ குடும்பத்தினர் சுருட்டிய பணம் அளவில்லாதது. 1972ஆம் ஆண்டு, நிக்கரகுவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து உதவித்தொகைகளையும் இக்குடும்பம் சுருட்டிக்கொண்டது. 

1979ஆம் ஆண்டு, ‘சண்டனிஸ்டா’ புரட்சியாளர்கள், இவர்களைத் துரத்தும்வரை இக்குடும்பம் ஆட்சியில் இருந்தது. இவர்கள் துரத்தப்படும் போது, அரசாங்கக் கையிருப்பு  300 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே! ஆனால், மொத்தக் கடன் 4,000 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

1980களில் பிலிப்பைன்சில், மார்க்கோசின் ஊழல்களும் சுரண்டல்களும் உலகறிந்த விடயங்கள். 1986இல் பிலிப்பைன்சின் மொத்தக் கடன் 26,000 மில்லியன் டொலர். இதில் 15 சதவீதமானவை, மார்க்கோசின் மனைவி இமெல்லாடவின் ஆடம்பரச் செலவுக்கானவை. 

இன்னொருபுறம், பிலிப்பைன்ஸ் அணுசக்தித் திட்டமொன்றைத் தொடங்கியது. இதற்காக வாங்கப்பட்ட கடனுக்கு கொடுக்கப்பட்ட ஒருநாள் வட்டி 3,50,000 அமெரிக்க டொலர் ஆகும். இவ்வட்டி 1989ஆம் ஆண்டு 5,00,000 ஆக உயர்ந்தது. வாங்கிய கடன் மார்க்கோசினால் சுருட்டப்பட்டது. 

இதேபோலவே, இன்னும் பல மூன்றாமுலக நாடுகளில் வாங்கப்படும் கடன், ஆட்சியாளர்களால் சுருட்டப்படுகிறது. 1979 முதல் 1983 வரையான நான்கு ஆண்டு காலத்தில் மெக்சிக்கோவிலிருந்து வெளியேறிய மொத்தப் பணம் 9,000 பில்லியன் அமெரிக்க டொலராகும். ஆனால், மெக்சிக்கோ கடனில் தத்தளித்தது. கடனை அடைக்க மேலும் கடன் வாங்கிய வண்ணம் இருந்தது. 

ஆர்ஜென்டீனாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற வேளை, பெரும்பாலான கடன் இராணுவச் செலவீனங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டது. பெருவின் கதையும் இதுதான். எனவே, மூன்றாமுலக நாடுகள் எவ்வாறு கடனாளியாகின்றன என்பதற்கான ஒரு குறுக்குவெட்டுச் சித்திரமே, மேற்சொன்ன உதாரணங்கள் ஆகும்.

இதன் பின்னணியில், கடன் வழங்குனர்களாக உள்நுழையும் சர்வதேச நிதி நிறுவனங்கள் குறிப்பாக, சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளுடன் கடன்களை வழங்குகின்றது. அந்நிபந்தனைகளாக, அரச சேவைகளைத் தனியார்மயமாக்கல், சமூகநலன்களைக் குறைத்தல், தனியார்துறைக்கு வரி குறைப்பு, வரிச்சலுகைகளை அறிமுகப்படுத்தல் போன்றவற்றை வேண்டுகிறது. 

மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், பெருவாரியான தருணங்களில் சமூகப் பாதுகாப்பினது காவலனும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவோனும் என்ற தனது வகிபாகத்தில் தவறி விட்டன. இதற்கு மூன்றாமுலகக் கடன் மிகவும் முக்கியமான காரணியாகும். 

மேற்சொன்ன கதைகள், பல வகைகளில் இலங்கையைப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறான கடன்கள் மூலம், ஏற்கெனவே மக்கள் அனுபவித்து வந்த சமூகப் பாதுகாப்புகளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் மூலம், இலங்கையர்கள் இழந்து விட்டார்கள். 

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்திக் கடன்வாங்கிய ஒவ்வொரு தடவையும் அதற்குப் பாரிய விலையை இலங்கை கொடுத்துள்ளது. எம்மிடம் எஞ்சியிருப்பது, இலவசக் கல்வியும் இலவச மருத்துவமும் தான். அதையும் நாம் தனியாரிடம் கையளிக்கும் நாள் தூரத்தில் இல்லை. அதைச் சாத்தியமாக்கவே ஐ.எம்.எவ் கடனை இலங்கை பெறவேண்டும் என்று வற்புறுத்துவோர் நினைக்கிறார்கள். மறைமுகமாக,  இலங்கையின் ஏழைக் குடிமகனை, சுடுகாட்டுக்குச் கூட்டிச் செல்லும் வழியையே காட்ட முனைகிறார்கள்.  
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐ-எம்-எவ்-கடன்-மூன்றாமுலகக்-கடன்-பற்றிய-கதைகள்/91-283722

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.