Jump to content

சூடானில் பதற்றம்: பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது இராணுவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூடானில் பதற்றம்: பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது இராணுவம்!

சூடானில் பதற்றம்: பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது இராணுவம்!

சூடானில் உள்ள இராணுவப் படைகள் பிரதமர் அப்தல்லா ஹம்தோக்கை, வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அல் ஹதாத் தொலைக்காட்சி செய்தியின் படி, இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டின் சிவில் தலைமையின் பல உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் தொலைத்தொடர்பு அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ளவர்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்டூம் நகரத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளையும் பாலங்களையும் இராணுவம் தடுத்துள்ளது. இங்குதான் அரச நிறுவனங்கள் உள்ளன. அங்குதான் ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்கள் உள்ளன.

சூடான் அரச தொலைக்காட்சி தேசபக்தி பாடல்களை ஒளிபரப்பியதுடன், இராணுவத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.

இதற்கிடையில், நாட்டின் முக்கிய ஜனநாயக சார்பு அரசியல் குழுவான சூடான் தொழில்முறை சங்கம், இராணுவத்தின் நகர்வுகளை வெளிப்படையான இராணுவ சதி என்று அழைத்தது மற்றும் பொதுமக்களை வீதிகளில் இறங்க போராட அழைப்பு விடுத்தது.

அடையாளம் தெரியாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, சவுதிக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனம், இன்று அதிகாலை பிரதமரை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்பு அவரது வீட்டை இராணுவம் முற்றுகையிட்டதாகக் கூறியுள்ளது.

கைத்தொழில் அமைச்சர் இப்ராஹிம் அல்-ஷேக் மற்றும் சூடானின் தலைநகர் கார்ட்டூமின் ஆளுநர் அய்மன் காலித் ஆகியோர் கைது செய்யப்பட்ட மற்ற சிவிலியன் அதிகாரிகளில் அடங்குவதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

தகவல் அமைச்சர் ஹம்ஸா பலூல், பிரதமரின் ஊடக ஆலோசகர் பைசல் முகமது சாலே மற்றும் சூடானின் ஆளும் இறையாண்மை சபையின் செய்தித் தொடர்பாளர் முகமது அல்-ஃபிகி சுலிமானும் கைது செய்யப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூடானின் பொதுமக்கள் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு இடையே பல வாரங்களாக அதிகரித்து வரும் பதற்றங்களுக்குப் பிறகு இந்த கைதுகள் வந்துள்ளன.

சூடானின் நீண்டகாலத் தலைவரான உமர் அல்-பஷீரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இராணுவம் மற்றும் சிவிலியன் குழுக்களுக்கு இடையே கசப்பான குற்றச்சாட்டுகள் கட்டவிழ்த்துவிட்டு வந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பல மாதங்களாக நடந்த வீதிப் போராட்டங்களுக்குப் பிறகு அல்-பஷீர் தூக்கியெறியப்பட்டார். மேலும் 2023ஆம் ஆண்டின் இறுதியில் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் அவரை அகற்றிய பின்னர் அரசியல் மாற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

https://athavannews.com/2021/1246719

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்கள் மீது சூடான் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் பலி

சூடானின் இராணுவம் ஒரு இடைக்கால அரசாங்கத்திடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Image

இதனால் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதடன், 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை அதிகாலையில் இடைக்கால பிரதமர் அப்தல்லா ஹம்டோக் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை பாதுகாப்புப் படையினர் தடுப்பு காவலின் கீழ் கொண்டு வந்தனர்.

இதனால் தலைநகர் கார்ட்டூம் மற்றும் அதன் இரட்டை நகரமான ஓம்டுர்மன் தெருக்களில் இராணுவக் கையகப்படுத்தலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் பேரணிகளில் இணைந்தனர். 

Image

இதன்போது இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி ஹம்டாக், 2019 ஆகஸ்ட்டில் நாட்டின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். 

அவர் நீண்டகால சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீரை பதவி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தினார். 

அடுத்த ஆண்டு இறுதியில் நாடு தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் இராணுவ சதிப்புரட்சி தற்சமயம் அரங்கேறியுள்ளது.
 

https://www.virakesari.lk/article/116016

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.