Jump to content

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும்

spacer.png

 

யாழ்ப்பாணத்தின் மருத்துவச் சரித்திரத்தில் இரண்டு பெயர்கள் முக்கியமானவை. ஒன்று Dr.சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr.Samuel Fisk Green); இரண்டாவது Dr.சத்தியமூர்த்தி.  

1800இன் பிற்பகுதியில் Dr.கிறீன் யாழ்ப்பாணத்தின் மருத்துவத்துறையில் ஒரு புதிய பாதையைத் திறந்தார்.  

அதுவரையும் தமிழ் வைத்தியம் அல்லது கை வைத்தியம் என்று சொல்லப்படும் மரபுவழியான சித்த மருத்துவமே நடைமுறையிலிருந்தது.  

Dr.கிறீனுடைய காலகட்டத்திலேயே ஆங்கிலமருத்துவத்துறை யாழ்ப்பாணத்தில் பரவலாக்கமடைந்தது. 

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மருத்துவத்துறையில் பயின்ற Dr.கிறீன் இலங்கைக்கு வந்து பருத்தித்துறை, வட்டுக்கோட்டை, மானிப்பாய் ஆகிய இடங்களில் அமெரிக்க மிஷனில் பணியாற்றினார். அப்பொழுதுதான் மானிப்பாயில் ஒரு மருத்துவமனையை Dr.கிறீன் ஆரம்பித்தார். இன்றும் அது Dr.கிறீனின் ஞாபகார்த்த மருத்துவமனையாக இருப்பதைக் காணலாம். அந்த மருத்துவமனையை ஆரம்பித்ததோடு Dr.கிறீன் நிற்கவில்லை. யாழ்ப்பாணத்தில் முறைப்படுத்தப்பட்ட மருத்துவக் கற்கையை அவர் ஆரம்பித்தார். அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 115 பேர் பட்டம்பெற்று வெளியேறிச் சேவையாற்றினார்கள். இதைத் தவிர Dr.கிறீனின் பணிகள் வேறு துறைகளிலும் இருந்தன.  

அவைபற்றி இன்னொரு போது பார்க்கலாம். ஆனால் Dr.கிறீனின் மருத்துவப் பங்களிப்பே யாழ்ப்பாணத்தின் பெருந்திரள் சமூகத்தின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் முறைமையைத் திறந்தது. இதுவே இன்றுவரை தொடர்கிறது. 

Dr.கிறீனைப் போன்ற இன்னொரு ஆளுமையாகவே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி இன்று விளங்குகிறார். Dr.சத்தியமூர்த்திக்கு முன்னரும் சமகாலத்திலும் மிகச் சிறந்த, அர்ப்பணிப்பு மிக்க பலர் யாழ்ப்பாணத்தில் மருத்துவப் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். நெருக்கடி காலத்தில் அளப்பரிய சேவைகளை ஆற்றியிருக்கின்றனர். ஆனால் அவர்களைக் கடந்த ஒரு ஆளுமையாக Dr.சத்தியமூர்த்தி விளங்குகிறார் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

சத்தியமூர்த்தியாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைப் பொறுப்பேற்ற 2015 ஒக்ரோபருக்குப் பின்னரான ஆறு ஆண்டு காலத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  

மாற்றங்களை யார் உருவாக்குகிறார்களோ, அவர்களே புதிய வாசல்களைத் திறக்கின்றனர். இந்தப் புதிய வழிகளில்தான் மக்கள் உச்சமான பயனைப் பெறமுடிகிறது. இந்த மாற்றங்களை இரண்டு பிரதான வகையாக  நோக்க முடியும். 

1. மருத்துவச் சேவையில் ஏற்பட்ட மாற்றமும் வளர்ச்சியும். 

2. மருத்துவமனையின் நிர்மாணம் மற்றும்  கட்டமைப்பு விரிவாக்க வளர்ச்சியும் மருத்துவச் சேவையில் ஏற்பட்ட மாற்றமும் வளர்ச்சியும். 

நோயாளர்களை முதன்மையாகக் கொண்ட, மக்கள் நலனை  மையப்படுத்திய மருத்துவச் சேவையும் நிர்வாகமும் என்ற எண்ணக் கருவில் போதனா மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சேவை முறைமையும் Dr.சத்தியமூர்த்தி உருவாக்கினார். இதனால் தேவையற்ற விதமாக இறுக்கமாக்கப்பட்டிருந்த மருத்துவப் பணிகளும் மருத்துவமனை நிர்வாகமும் நெகிழ்ச்சியடைந்து அனைவருக்கும் சுமையற்ற விதமாகின. 

இதனால் நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களான பொதுமக்களும் நிறைவடைந்தனர். இந்த நிறைவு  பலரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடவே எவரும் பணிப்பாளரையும் பொறுப்பான உத்தியோகத்தர்களையும் சந்தித்துத் தேவையான விடயங்களைப் பற்றி நட்புணர்வுடன் பேசவும் ஆலோசனைகளைப் பெறவும் முடியும் என்ற நிலையையும் உருவாக்கினார் சத்தியமூர்த்தி. குறைபாடுகளைக் களையவும் மருத்துவப் பணிக்குழுவினர் புத்தூக்கம் பெறவும் இந்த நடைமுறை உதவியது. இது மேலும் உற்சாகத்தை மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கியது. இன்று யாழ்ப்பாணம் மருத்துவமனை பலருடைய பாராட்டுக்கும் உரியதாக மாறியதற்கு இது அடிப்படைக் காரணமாகும். 

எனினும் போதனா மருத்துவமனையில் போதிய ஆளணி இல்லை. வளப்பற்றாக்குறையும் உண்டு. முக்கியமாக தாதியர் பற்றாக்குறை உண்டு. இருந்தாலும் இதைக் கடந்து தாதியர்கள் மிகுந்த வேலைச்சுமையோடு பணியாற்றி வருகின்றனர். ஆனால் அதை அவர்கள் நிறைவோடு, மகிழ்ச்சியோடுதான் செய்து கொண்டிருக்கின்றனர். 

முன்பு மேலதிக மருத்துவச் சிகிச்சைகளுக்காக கண்டி, கொழும்பு நோக்கிச் செல்லவேண்டியிருந்தது. அந்த நிலையை மாற்றியதில் Dr.சத்தியமூர்த்தியின் பங்களிப்புப் பெரிது. இப்பொழுது திறந்த இருதய அறுவைச் சிகிச்சையைக் கூட யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஏறக்குறைய ஒரு தேசிய மருத்துவமனையின் சேவைகளையும் வளங்களையும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இன்று கொண்டுள்ளது. 

மருத்துவர்களில் பெரும்பாலானோர் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். அதற்கான மனநிலையும் சூழற் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருப்பது இதற்கான அடிப்படையாகும். மக்கள் இன்று இந்த மருத்துவர்களை மிக அந்நியோன்னியமாக நேசிக்கின்றனர். குறிப்பாக கொரோனா நெருக்கடி நிலையில் தளர்வின்றி பணிசெய்யும் மருத்துவர்களும் பணியாளர்களும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர். இதில் பணிப்பாளர் கொண்டிருக்கும் சிரத்தையும் களத்தில் அவர் முன்மாதிரியாக நடந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது. 

மருத்துவமனையின் நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு விரிவாக்க வளர்ச்சியும் 

2015க்குப் பின்னர் துரிதகதியில் போதனா மருத்துவமனையில் பல்வேறு நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று யாழ்ப்பாணம் மருத்துவமனை பெற்றிருக்கும் மிகப் பிரமாண்டமான வளர்ச்சியானது  மக்களுடைய நம்பிக்கையின் குறியீடேயாகும்.  

மருத்துவமனை வரலாற்றில் இது ஒரு பொற்காலமே. நவீன மருத்துவமனைக்கான உள்ளடக்கத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்ட – சிறந்த நிர்மாணிப்பணிகளை தான் நிர்வாகப் பொறுப்பை ஏற்றகையோடு சத்தியமூர்த்தி ஆரம்பித்தார். இதற்காக அவர் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றினார். ஒன்று, அரச உதவிகளைப் பெற்றுக்கொண்டமை. இரண்டாவது, வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்வது. மூன்றாவது புலம்பெயர் சமூகத்தினரின் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து உதவிகளைப்  பெறுவது. இந்த மூன்று வகையான உதவிகள் மற்றும் நிதிப்பங்களிப்புகளின் மூலமாக துரிதகதியில் மருத்துவமனையின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக சுகாதார அமைச்சினால் உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட இலகு கடன் மூலம் ஆறு தளங்களைக் கொண்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் இரண்டு தளங்களும் 2019இல் திறந்து வைக்கப்பட்டன. இதன் பெறுமதி 590 பில்லியனாகும். மீதி நான்கு தளங்களுக்குமான ஒதுக்கீடு 1300 பில்லியன். 

இன்னொன்று குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் நிதிப்பங்களிப்பினால் 530 பில்லியன் ரூபாய் பெறுமதியான மீள்வாழ்வுச் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சேவைகள் இன்றைய நிலையில் முக்கியத்துவமாக உள்ளன. கூடவே ஆஸ்பத்தியோடு ஆஸ்பத்திரி வீதியோரத்தில் அரச ஒசுசல என்ற அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தியின் விற்பனையகத்தையும் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் திறந்துள்ளார் Dr.சத்தியமூர்த்தி. இதன் மூலம் குறைந்த விலையில் மருந்துப் பொருட்களையும் மருத்துவப் பொருட்களையும் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். 

இதைவிட சுகாதார அமைச்சின் நிதியில் சுமார் 100க்கு மேற்பட்ட தாதியர்கள் தங்கக் கூடிய தாதியர் உள்ளக விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

புலம்பெயர்ந்திருக்கும் தமிழ்ச் சமூகத்தின் நிதிப்பங்களிப்பைப் பெற்று 112.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 160 ஸ்லைஸ் சி.ரி ஸ்கானர் வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச உதவியின் மூலம் ரூபா 350 மில்லியன் பெறுமதி வாய்ந்த எம். ஆர். ஐ ஸ்கான் இயந்திரம் பொருத்தப்பட்டு 2020 சனவரி முதல் யாழ் போதனா மருத்துவமனையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எம்.ஆர். ஸ்கான் செய்வதற்காக நோயாளர்கள் கொழும்புக்கு அல்லது கண்டிக்கே எடுத்துச் செல்லப்பட்டனர். இன்று அந்தச் சிரமம் இல்லை. 

மேலும் புதிய துறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அதற்கான ஆளணி ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்பது உண்மை. இதைப் புரிந்து கொண்டு பலரும் புரியாமற் சிலரும் நடந்து கொள்கின்றனர். ஆனால், சிலர் இதை  தமக்குச் சுமையெனக் கருதி ஒரு விவகாரமாக்க முயற்சிக்கின்றனர்.  

மக்களின் (நோயாளரின்) நிலைமையை மனதிற் கொண்டு சிந்தித்தால் இவ்வாறு இவர்கள் சிந்திக்க வேண்டியிருக்காது. 

இன்று யாழ்.போதனா மருத்துவமனையில் 100க்கு மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த விசேட மருத்துவ நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். மொத்தமாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றும் மிகப் பெரிய நிறுவனம் இந்தப் போதனா மருத்துவமனையாகும். 24 மணி நேரமும் இயங்கும் இந்த மருத்துவனையில் தினமும் சராசரியாக 5000க்கும் அதிகமானோருக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது. சில சிகிச்சைகளுக்காக திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர். 

யாழ்.போதனாவில் தொலை மருத்துவம் (TH Jaffna hosts Telemedicine) 

உலகில் இணைய வழியாகப் பொருட்கள்– சேவைகள் பரிமாற்றங்கள்கல்விச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.  

யாழ்.போதனா வைத்தியசாலையானது நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதுடன் மருத்துவர்கள், தாதியர்கள் முதலானோருக்கான கற்றல் செயற்பாடுகளையும் பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான தொலை மருத்துவ (Telemedicine) சேவை 2019இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது தொலை மருத்துவ சேவைகள் 3 நிலைகளில் நடைபெறுகின்றன. 

 உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர்கள்வைத்திய நிபுணர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் தன்னார்வமாக,நிபுணத்தவ ஆலோசனைகளை எமக்கு வழங்கிவருவது மகிழ்ச்சிக்குரியது. இவர்கள் அனைவருக்கும் யாழ்போதனா வைத்தியசாலை சார்பில் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். 

 2019 செப்ரெம்பர்- 2021 செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் வடபகுதி மருத்துவர்களுடன் பன்னாட்டு விசேட வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்ட 200 இற்கும் அதிமான தொலைமருத்துவக் கருத்தரங்குகள் யாழ். போதனா வைத்தியசாலையால் ஒழுங்குபடுத்தப்பட்டு நிறைவேறியுள்ளன. வடபகுதியின் பல்வேறு வதை்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் 1500இற்கும் அதிகமானவர்களது  (CT and MRI)  வரைவுகளுக்கு பன்னாட்டு பல்துறைசார்  விசேட வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்ட multidisciplinary team (MDT) கலந்துரையாடல்களில் தீர்வுகள் காணப்பட்டமை மிகவும் தனித்துவம் வாய்ந்துதும் இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமுமாகும். இவ்வாறான உலகின் முன்னணி துறைசார் மருத்துவப் பேராசிரியர்களது கருத்தமர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுவது இலங்கையில் யாழ். போதனாவில் மட்டுமே என்பது சிறப்புடன் குறிப்பிடத்தக்கது. இதற்கான தொழிநுட்ப வசதியையும் நிபுணர்களது தொடர்பையும் ஏற்படுத்திக்கொடுத்தவர் வைத்தியநலாநிதி சத்தியமூர்த்தி என்பதை வைத்திய நிபுணர்களும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் நன்றியுடன் தெரிவிக்கின்றனர்.  

சத்தியமூர்த்திக்கு முன்னர் போதனா மருத்துவமனையின் இயங்கு நிலை குறித்த அனுபவத்தை இரண்டு வகையாக நோக்க முடியும். 

1.நோயாளர்களின் அனுபவத்தின் வழியாக 

2.மருத்துவ ஊழியர்களின் அனுபவம் மூலமாக. 

நோயாளர்களின் அனுபவத்தின் வழியாக 

போதனா மருத்துவனையை பொலிஸ் நிலையத்தைப்போல அச்சத்துடன் பார்த்த காலமொன்று இருந்துள்ளதையும் பலரும் அறிவர். அந்தளவுக்குக் கெடுபிடிகள் கோலோச்சியிருந்தன. அல்லது திருப்தியற்ற மனதுடன் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலை இன்று  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மக்களைப் பொறுத்தவரையில் இது முக்கியமான ஒன்று. பொது மருத்துவமனையில் உரிய மருத்துவசேவையை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது எவ்வளவு பெரிய சங்கதி. இதனால்தான் வெளிமாவட்ட மக்களும் நம்பிக்கையோடு இந்தப் போதனா மருத்துவமனைக்கு வருகின்றனர். மட்டுமல்ல கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வடமாகாணத்தின் ஏனைய மாவட்ட, ஆதார, பிரதேச மருத்துவமனைகளுக்கான தாய்மருத்துவமனையாகவும் யாழ் போதனா மருத்துவமனையே விளங்குகிறது. இங்கிருந்து வருகின்ற மக்களின் மனதிலும் இன்று யாழ் போதனா மருத்துவமனை திருப்திகரமானநிலையைப்பெற்றுள்ளது. 

மருத்துவ ஊழியர்களின் அனுபவம் மூலமாக 

முப்பத்தெட்டு ஆண்டுகளாக இந்தப் போதனாமருத்துவமனையில் பணியாற்றும் மூத்த பணியாளர் ஒருவர் சொன்னார், தன்னுடைய சேவைக்காலத்தில் ஏழுக்கும் அதிகமான பணிப்பாளர்களின் கீழ் பணியாற்றியபோதும் இப்போதுள்ளதைப்போன்ற ஒரு முன்னேற்றமான நிலையை தான் காணவில்லை என்றார். முக்கியமாக ஊழலற்ற நிர்வாகத்தை சிரமங்களின் மத்தியில் Dr.சத்தியமூர்த்தி உருவாக்கியுள்ளார். மேலும் புரிந்துணர்வுடன் மதித்து பணியாளர்களையும் மருத்துவக்குழுவினரையும்நடத்துகின்ற நிர்வாகத்தையிட்டு தான் ஓய்வு பெறுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் மகிழ முடிகிறது என்று. அவர்குறிப்பிட்டுள்ள முக்கியமான விசயம், ஊழல் முறைகேடுகள் தொடர்பானது. நீண்டகாலமாகவே கண்டு பிடிக்கவும் கட்டுப்படுத்துவும் கடினமான முறையிலான ஊழல் இந்த மருத்துவமனையில் நிலவியதைப் பலரும் அறிவர். 

ஊழலுக்கு எதிரானவர் Dr.சத்தியமூர்த்தி என்பதால்தான் அவருக்கு ட்ரான்பரன்ஸி இன்ரநாஷனல் அமைப்பினால் இன்டக்கிறிட்டி ஐக்கன் 2019 விருது வழங்கப்பட்டது. இதைப்போல சத்தியமூர்த்தியின் தன்னலமற்ற மனிதாபிமான சேவைக்கு மதிப்பளித்து அமெக்காவின் இன்ரர் அக்ஸன் போரம் A united voice for Global Change விருதினை வழங்கியது. 

மாற்றம், வளர்ச்சி, புதுமை, அர்ப்பணிப்பான சேவைஎன்றெல்லாம் ஒரு செயற்பாட்டு அடையாளத்தைஉருவாக்கினாலும் நெருக்கடிகளை ஏற்படுத்த முனையும் சக்திகளின் சதி வலை இன்று போதனா மருத்துவமனையை அபாயத்திற் தள்ளியுள்ளது. இதற்குச் சில ஊடகங்களும் பொறுப்பற்ற முறையில் துணைபோகின்றன. இது மக்கள் விரோதச் செயற்பாடாகும். தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு சவாலாக போதனா மருத்துவமனையைஇவர்கள் கருதுகிறார்கள். இதன் வெளிப்பாடே இதுவாகும்.  

இந்தத் தவறான – அபாயமான போக்குக்கு யாழ்ப்பாணச் சமூகம் இடமளிக்குமானால் அது மிகப்பெரிய வீழ்ச்சியிற்தான் கொண்டுபோய் விடும். இதனால் முதலில் நேரடியாகப் பாதிப்படைவது ஏழை மக்களும் இடைநிலையாளர்களுமேயாகும். இதைக்குறித்துச் சிந்திக்க வேண்டிய – செயற்பட வேண்டிய அவசியத்தில் வடக்கின் புலமையாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

https://arangamnews.com/?p=6610

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஆனால் அவர்களைக் கடந்த ஒரு ஆளுமையாக Dr.சத்தியமூர்த்தி விளங்குகிறார் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

சத்தியமூர்த்தியாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைப் பொறுப்பேற்ற 2015 ஒக்ரோபருக்குப் பின்னரான ஆறு ஆண்டு காலத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன

இப்படியெல்லாம் விலாவாரியாக எழுதினால்
மற்றவர்களுக்கு கோபம் வந்து ஏதாவது சிக்கலைக் கொண்டு வர முயற்சிப்பார்கள்.

வைத்தியர் ஐயா புகழ் விரும்பி அல்ல.
மிக்க தன்னடக்கம் கொண்ட ஒரு பேராளுமை.
அவருடைய அர்ப்பணிப்பான சேவை அந்த மக்களுக்கு நீண்ட காலத்திற்குத் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்......!  😁

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா வைத்தியசாலையின் MRI Scanner மூலம் பயன்பெற்றவன் என்ற வகையில் இதனை பொருத்துவதற்கு உதவியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அவ்வளவு நோயாளர் வந்து செல்லும் இடத்தில் ஒழுங்கான ஒரு canteen இல்லை 
இருக்கும் ரெண்டிலும் விலைகள் தலை கீழ், காலையில் போய் கேட்டால் சுடுதண்ணி தரமாடடார்கள் அவர்களின் தேநீர் வியாபாரம் குறைந்து விடும் என்பதால். ஒரு பால் தேநீர் 40 ரூ கடந்த பங்குனி மாதத்தில், இப்போது நிலைமை என்னவோ தெரியல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அபராஜிதன் said:

அவ்வளவு நோயாளர் வந்து செல்லும் இடத்தில் ஒழுங்கான ஒரு canteen இல்லை 
இருக்கும் ரெண்டிலும் விலைகள் தலை கீழ், காலையில் போய் கேட்டால் சுடுதண்ணி தரமாடடார்கள் அவர்களின் தேநீர் வியாபாரம் குறைந்து விடும் என்பதால். ஒரு பால் தேநீர் 40 ரூ கடந்த பங்குனி மாதத்தில், இப்போது நிலைமை என்னவோ தெரியல. 

சிற்றுண்டிச் சாலையை ஏலத்தில் விடாது, உள்ளூர் கூட்டுறவுச் சங்கங்களோ அல்லது பெண் தலைமைத்துவ(அம்மாச்சில செய்வது) அமைப்புகளோ நடாத்த உதவலாமே.

Link to comment
Share on other sites

நோயாளர்  நலன் புரி சங்கம் தான் எடுத்து நடத்துகிறது என நினைக்கிறேன் ஆனால் ஏதும் ஒழுங்கமைப்பாக இல்லை. இவ்வளவு பெரிய வைத்தியசாலையில் காண்டீன் அமைப்பு மட்டும் இப்பிடி சொதப்பல் ஆக வைத்துள்ளார்கள்  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.