Jump to content

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும்

spacer.png

 

யாழ்ப்பாணத்தின் மருத்துவச் சரித்திரத்தில் இரண்டு பெயர்கள் முக்கியமானவை. ஒன்று Dr.சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr.Samuel Fisk Green); இரண்டாவது Dr.சத்தியமூர்த்தி.  

1800இன் பிற்பகுதியில் Dr.கிறீன் யாழ்ப்பாணத்தின் மருத்துவத்துறையில் ஒரு புதிய பாதையைத் திறந்தார்.  

அதுவரையும் தமிழ் வைத்தியம் அல்லது கை வைத்தியம் என்று சொல்லப்படும் மரபுவழியான சித்த மருத்துவமே நடைமுறையிலிருந்தது.  

Dr.கிறீனுடைய காலகட்டத்திலேயே ஆங்கிலமருத்துவத்துறை யாழ்ப்பாணத்தில் பரவலாக்கமடைந்தது. 

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மருத்துவத்துறையில் பயின்ற Dr.கிறீன் இலங்கைக்கு வந்து பருத்தித்துறை, வட்டுக்கோட்டை, மானிப்பாய் ஆகிய இடங்களில் அமெரிக்க மிஷனில் பணியாற்றினார். அப்பொழுதுதான் மானிப்பாயில் ஒரு மருத்துவமனையை Dr.கிறீன் ஆரம்பித்தார். இன்றும் அது Dr.கிறீனின் ஞாபகார்த்த மருத்துவமனையாக இருப்பதைக் காணலாம். அந்த மருத்துவமனையை ஆரம்பித்ததோடு Dr.கிறீன் நிற்கவில்லை. யாழ்ப்பாணத்தில் முறைப்படுத்தப்பட்ட மருத்துவக் கற்கையை அவர் ஆரம்பித்தார். அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 115 பேர் பட்டம்பெற்று வெளியேறிச் சேவையாற்றினார்கள். இதைத் தவிர Dr.கிறீனின் பணிகள் வேறு துறைகளிலும் இருந்தன.  

அவைபற்றி இன்னொரு போது பார்க்கலாம். ஆனால் Dr.கிறீனின் மருத்துவப் பங்களிப்பே யாழ்ப்பாணத்தின் பெருந்திரள் சமூகத்தின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் முறைமையைத் திறந்தது. இதுவே இன்றுவரை தொடர்கிறது. 

Dr.கிறீனைப் போன்ற இன்னொரு ஆளுமையாகவே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி இன்று விளங்குகிறார். Dr.சத்தியமூர்த்திக்கு முன்னரும் சமகாலத்திலும் மிகச் சிறந்த, அர்ப்பணிப்பு மிக்க பலர் யாழ்ப்பாணத்தில் மருத்துவப் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். நெருக்கடி காலத்தில் அளப்பரிய சேவைகளை ஆற்றியிருக்கின்றனர். ஆனால் அவர்களைக் கடந்த ஒரு ஆளுமையாக Dr.சத்தியமூர்த்தி விளங்குகிறார் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

சத்தியமூர்த்தியாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைப் பொறுப்பேற்ற 2015 ஒக்ரோபருக்குப் பின்னரான ஆறு ஆண்டு காலத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  

மாற்றங்களை யார் உருவாக்குகிறார்களோ, அவர்களே புதிய வாசல்களைத் திறக்கின்றனர். இந்தப் புதிய வழிகளில்தான் மக்கள் உச்சமான பயனைப் பெறமுடிகிறது. இந்த மாற்றங்களை இரண்டு பிரதான வகையாக  நோக்க முடியும். 

1. மருத்துவச் சேவையில் ஏற்பட்ட மாற்றமும் வளர்ச்சியும். 

2. மருத்துவமனையின் நிர்மாணம் மற்றும்  கட்டமைப்பு விரிவாக்க வளர்ச்சியும் மருத்துவச் சேவையில் ஏற்பட்ட மாற்றமும் வளர்ச்சியும். 

நோயாளர்களை முதன்மையாகக் கொண்ட, மக்கள் நலனை  மையப்படுத்திய மருத்துவச் சேவையும் நிர்வாகமும் என்ற எண்ணக் கருவில் போதனா மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சேவை முறைமையும் Dr.சத்தியமூர்த்தி உருவாக்கினார். இதனால் தேவையற்ற விதமாக இறுக்கமாக்கப்பட்டிருந்த மருத்துவப் பணிகளும் மருத்துவமனை நிர்வாகமும் நெகிழ்ச்சியடைந்து அனைவருக்கும் சுமையற்ற விதமாகின. 

இதனால் நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களான பொதுமக்களும் நிறைவடைந்தனர். இந்த நிறைவு  பலரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடவே எவரும் பணிப்பாளரையும் பொறுப்பான உத்தியோகத்தர்களையும் சந்தித்துத் தேவையான விடயங்களைப் பற்றி நட்புணர்வுடன் பேசவும் ஆலோசனைகளைப் பெறவும் முடியும் என்ற நிலையையும் உருவாக்கினார் சத்தியமூர்த்தி. குறைபாடுகளைக் களையவும் மருத்துவப் பணிக்குழுவினர் புத்தூக்கம் பெறவும் இந்த நடைமுறை உதவியது. இது மேலும் உற்சாகத்தை மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கியது. இன்று யாழ்ப்பாணம் மருத்துவமனை பலருடைய பாராட்டுக்கும் உரியதாக மாறியதற்கு இது அடிப்படைக் காரணமாகும். 

எனினும் போதனா மருத்துவமனையில் போதிய ஆளணி இல்லை. வளப்பற்றாக்குறையும் உண்டு. முக்கியமாக தாதியர் பற்றாக்குறை உண்டு. இருந்தாலும் இதைக் கடந்து தாதியர்கள் மிகுந்த வேலைச்சுமையோடு பணியாற்றி வருகின்றனர். ஆனால் அதை அவர்கள் நிறைவோடு, மகிழ்ச்சியோடுதான் செய்து கொண்டிருக்கின்றனர். 

முன்பு மேலதிக மருத்துவச் சிகிச்சைகளுக்காக கண்டி, கொழும்பு நோக்கிச் செல்லவேண்டியிருந்தது. அந்த நிலையை மாற்றியதில் Dr.சத்தியமூர்த்தியின் பங்களிப்புப் பெரிது. இப்பொழுது திறந்த இருதய அறுவைச் சிகிச்சையைக் கூட யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஏறக்குறைய ஒரு தேசிய மருத்துவமனையின் சேவைகளையும் வளங்களையும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இன்று கொண்டுள்ளது. 

மருத்துவர்களில் பெரும்பாலானோர் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். அதற்கான மனநிலையும் சூழற் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருப்பது இதற்கான அடிப்படையாகும். மக்கள் இன்று இந்த மருத்துவர்களை மிக அந்நியோன்னியமாக நேசிக்கின்றனர். குறிப்பாக கொரோனா நெருக்கடி நிலையில் தளர்வின்றி பணிசெய்யும் மருத்துவர்களும் பணியாளர்களும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர். இதில் பணிப்பாளர் கொண்டிருக்கும் சிரத்தையும் களத்தில் அவர் முன்மாதிரியாக நடந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது. 

மருத்துவமனையின் நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு விரிவாக்க வளர்ச்சியும் 

2015க்குப் பின்னர் துரிதகதியில் போதனா மருத்துவமனையில் பல்வேறு நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று யாழ்ப்பாணம் மருத்துவமனை பெற்றிருக்கும் மிகப் பிரமாண்டமான வளர்ச்சியானது  மக்களுடைய நம்பிக்கையின் குறியீடேயாகும்.  

மருத்துவமனை வரலாற்றில் இது ஒரு பொற்காலமே. நவீன மருத்துவமனைக்கான உள்ளடக்கத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்ட – சிறந்த நிர்மாணிப்பணிகளை தான் நிர்வாகப் பொறுப்பை ஏற்றகையோடு சத்தியமூர்த்தி ஆரம்பித்தார். இதற்காக அவர் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றினார். ஒன்று, அரச உதவிகளைப் பெற்றுக்கொண்டமை. இரண்டாவது, வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்வது. மூன்றாவது புலம்பெயர் சமூகத்தினரின் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து உதவிகளைப்  பெறுவது. இந்த மூன்று வகையான உதவிகள் மற்றும் நிதிப்பங்களிப்புகளின் மூலமாக துரிதகதியில் மருத்துவமனையின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக சுகாதார அமைச்சினால் உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட இலகு கடன் மூலம் ஆறு தளங்களைக் கொண்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் இரண்டு தளங்களும் 2019இல் திறந்து வைக்கப்பட்டன. இதன் பெறுமதி 590 பில்லியனாகும். மீதி நான்கு தளங்களுக்குமான ஒதுக்கீடு 1300 பில்லியன். 

இன்னொன்று குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் நிதிப்பங்களிப்பினால் 530 பில்லியன் ரூபாய் பெறுமதியான மீள்வாழ்வுச் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சேவைகள் இன்றைய நிலையில் முக்கியத்துவமாக உள்ளன. கூடவே ஆஸ்பத்தியோடு ஆஸ்பத்திரி வீதியோரத்தில் அரச ஒசுசல என்ற அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தியின் விற்பனையகத்தையும் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் திறந்துள்ளார் Dr.சத்தியமூர்த்தி. இதன் மூலம் குறைந்த விலையில் மருந்துப் பொருட்களையும் மருத்துவப் பொருட்களையும் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். 

இதைவிட சுகாதார அமைச்சின் நிதியில் சுமார் 100க்கு மேற்பட்ட தாதியர்கள் தங்கக் கூடிய தாதியர் உள்ளக விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

புலம்பெயர்ந்திருக்கும் தமிழ்ச் சமூகத்தின் நிதிப்பங்களிப்பைப் பெற்று 112.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 160 ஸ்லைஸ் சி.ரி ஸ்கானர் வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச உதவியின் மூலம் ரூபா 350 மில்லியன் பெறுமதி வாய்ந்த எம். ஆர். ஐ ஸ்கான் இயந்திரம் பொருத்தப்பட்டு 2020 சனவரி முதல் யாழ் போதனா மருத்துவமனையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எம்.ஆர். ஸ்கான் செய்வதற்காக நோயாளர்கள் கொழும்புக்கு அல்லது கண்டிக்கே எடுத்துச் செல்லப்பட்டனர். இன்று அந்தச் சிரமம் இல்லை. 

மேலும் புதிய துறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அதற்கான ஆளணி ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்பது உண்மை. இதைப் புரிந்து கொண்டு பலரும் புரியாமற் சிலரும் நடந்து கொள்கின்றனர். ஆனால், சிலர் இதை  தமக்குச் சுமையெனக் கருதி ஒரு விவகாரமாக்க முயற்சிக்கின்றனர்.  

மக்களின் (நோயாளரின்) நிலைமையை மனதிற் கொண்டு சிந்தித்தால் இவ்வாறு இவர்கள் சிந்திக்க வேண்டியிருக்காது. 

இன்று யாழ்.போதனா மருத்துவமனையில் 100க்கு மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த விசேட மருத்துவ நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். மொத்தமாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றும் மிகப் பெரிய நிறுவனம் இந்தப் போதனா மருத்துவமனையாகும். 24 மணி நேரமும் இயங்கும் இந்த மருத்துவனையில் தினமும் சராசரியாக 5000க்கும் அதிகமானோருக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது. சில சிகிச்சைகளுக்காக திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர். 

யாழ்.போதனாவில் தொலை மருத்துவம் (TH Jaffna hosts Telemedicine) 

உலகில் இணைய வழியாகப் பொருட்கள்– சேவைகள் பரிமாற்றங்கள்கல்விச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.  

யாழ்.போதனா வைத்தியசாலையானது நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதுடன் மருத்துவர்கள், தாதியர்கள் முதலானோருக்கான கற்றல் செயற்பாடுகளையும் பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான தொலை மருத்துவ (Telemedicine) சேவை 2019இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது தொலை மருத்துவ சேவைகள் 3 நிலைகளில் நடைபெறுகின்றன. 

 உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர்கள்வைத்திய நிபுணர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் தன்னார்வமாக,நிபுணத்தவ ஆலோசனைகளை எமக்கு வழங்கிவருவது மகிழ்ச்சிக்குரியது. இவர்கள் அனைவருக்கும் யாழ்போதனா வைத்தியசாலை சார்பில் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். 

 2019 செப்ரெம்பர்- 2021 செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் வடபகுதி மருத்துவர்களுடன் பன்னாட்டு விசேட வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்ட 200 இற்கும் அதிமான தொலைமருத்துவக் கருத்தரங்குகள் யாழ். போதனா வைத்தியசாலையால் ஒழுங்குபடுத்தப்பட்டு நிறைவேறியுள்ளன. வடபகுதியின் பல்வேறு வதை்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் 1500இற்கும் அதிகமானவர்களது  (CT and MRI)  வரைவுகளுக்கு பன்னாட்டு பல்துறைசார்  விசேட வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்ட multidisciplinary team (MDT) கலந்துரையாடல்களில் தீர்வுகள் காணப்பட்டமை மிகவும் தனித்துவம் வாய்ந்துதும் இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமுமாகும். இவ்வாறான உலகின் முன்னணி துறைசார் மருத்துவப் பேராசிரியர்களது கருத்தமர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுவது இலங்கையில் யாழ். போதனாவில் மட்டுமே என்பது சிறப்புடன் குறிப்பிடத்தக்கது. இதற்கான தொழிநுட்ப வசதியையும் நிபுணர்களது தொடர்பையும் ஏற்படுத்திக்கொடுத்தவர் வைத்தியநலாநிதி சத்தியமூர்த்தி என்பதை வைத்திய நிபுணர்களும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் நன்றியுடன் தெரிவிக்கின்றனர்.  

சத்தியமூர்த்திக்கு முன்னர் போதனா மருத்துவமனையின் இயங்கு நிலை குறித்த அனுபவத்தை இரண்டு வகையாக நோக்க முடியும். 

1.நோயாளர்களின் அனுபவத்தின் வழியாக 

2.மருத்துவ ஊழியர்களின் அனுபவம் மூலமாக. 

நோயாளர்களின் அனுபவத்தின் வழியாக 

போதனா மருத்துவனையை பொலிஸ் நிலையத்தைப்போல அச்சத்துடன் பார்த்த காலமொன்று இருந்துள்ளதையும் பலரும் அறிவர். அந்தளவுக்குக் கெடுபிடிகள் கோலோச்சியிருந்தன. அல்லது திருப்தியற்ற மனதுடன் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலை இன்று  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மக்களைப் பொறுத்தவரையில் இது முக்கியமான ஒன்று. பொது மருத்துவமனையில் உரிய மருத்துவசேவையை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது எவ்வளவு பெரிய சங்கதி. இதனால்தான் வெளிமாவட்ட மக்களும் நம்பிக்கையோடு இந்தப் போதனா மருத்துவமனைக்கு வருகின்றனர். மட்டுமல்ல கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வடமாகாணத்தின் ஏனைய மாவட்ட, ஆதார, பிரதேச மருத்துவமனைகளுக்கான தாய்மருத்துவமனையாகவும் யாழ் போதனா மருத்துவமனையே விளங்குகிறது. இங்கிருந்து வருகின்ற மக்களின் மனதிலும் இன்று யாழ் போதனா மருத்துவமனை திருப்திகரமானநிலையைப்பெற்றுள்ளது. 

மருத்துவ ஊழியர்களின் அனுபவம் மூலமாக 

முப்பத்தெட்டு ஆண்டுகளாக இந்தப் போதனாமருத்துவமனையில் பணியாற்றும் மூத்த பணியாளர் ஒருவர் சொன்னார், தன்னுடைய சேவைக்காலத்தில் ஏழுக்கும் அதிகமான பணிப்பாளர்களின் கீழ் பணியாற்றியபோதும் இப்போதுள்ளதைப்போன்ற ஒரு முன்னேற்றமான நிலையை தான் காணவில்லை என்றார். முக்கியமாக ஊழலற்ற நிர்வாகத்தை சிரமங்களின் மத்தியில் Dr.சத்தியமூர்த்தி உருவாக்கியுள்ளார். மேலும் புரிந்துணர்வுடன் மதித்து பணியாளர்களையும் மருத்துவக்குழுவினரையும்நடத்துகின்ற நிர்வாகத்தையிட்டு தான் ஓய்வு பெறுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் மகிழ முடிகிறது என்று. அவர்குறிப்பிட்டுள்ள முக்கியமான விசயம், ஊழல் முறைகேடுகள் தொடர்பானது. நீண்டகாலமாகவே கண்டு பிடிக்கவும் கட்டுப்படுத்துவும் கடினமான முறையிலான ஊழல் இந்த மருத்துவமனையில் நிலவியதைப் பலரும் அறிவர். 

ஊழலுக்கு எதிரானவர் Dr.சத்தியமூர்த்தி என்பதால்தான் அவருக்கு ட்ரான்பரன்ஸி இன்ரநாஷனல் அமைப்பினால் இன்டக்கிறிட்டி ஐக்கன் 2019 விருது வழங்கப்பட்டது. இதைப்போல சத்தியமூர்த்தியின் தன்னலமற்ற மனிதாபிமான சேவைக்கு மதிப்பளித்து அமெக்காவின் இன்ரர் அக்ஸன் போரம் A united voice for Global Change விருதினை வழங்கியது. 

மாற்றம், வளர்ச்சி, புதுமை, அர்ப்பணிப்பான சேவைஎன்றெல்லாம் ஒரு செயற்பாட்டு அடையாளத்தைஉருவாக்கினாலும் நெருக்கடிகளை ஏற்படுத்த முனையும் சக்திகளின் சதி வலை இன்று போதனா மருத்துவமனையை அபாயத்திற் தள்ளியுள்ளது. இதற்குச் சில ஊடகங்களும் பொறுப்பற்ற முறையில் துணைபோகின்றன. இது மக்கள் விரோதச் செயற்பாடாகும். தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு சவாலாக போதனா மருத்துவமனையைஇவர்கள் கருதுகிறார்கள். இதன் வெளிப்பாடே இதுவாகும்.  

இந்தத் தவறான – அபாயமான போக்குக்கு யாழ்ப்பாணச் சமூகம் இடமளிக்குமானால் அது மிகப்பெரிய வீழ்ச்சியிற்தான் கொண்டுபோய் விடும். இதனால் முதலில் நேரடியாகப் பாதிப்படைவது ஏழை மக்களும் இடைநிலையாளர்களுமேயாகும். இதைக்குறித்துச் சிந்திக்க வேண்டிய – செயற்பட வேண்டிய அவசியத்தில் வடக்கின் புலமையாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

https://arangamnews.com/?p=6610

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஆனால் அவர்களைக் கடந்த ஒரு ஆளுமையாக Dr.சத்தியமூர்த்தி விளங்குகிறார் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

சத்தியமூர்த்தியாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைப் பொறுப்பேற்ற 2015 ஒக்ரோபருக்குப் பின்னரான ஆறு ஆண்டு காலத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன

இப்படியெல்லாம் விலாவாரியாக எழுதினால்
மற்றவர்களுக்கு கோபம் வந்து ஏதாவது சிக்கலைக் கொண்டு வர முயற்சிப்பார்கள்.

வைத்தியர் ஐயா புகழ் விரும்பி அல்ல.
மிக்க தன்னடக்கம் கொண்ட ஒரு பேராளுமை.
அவருடைய அர்ப்பணிப்பான சேவை அந்த மக்களுக்கு நீண்ட காலத்திற்குத் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்......!  😁

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா வைத்தியசாலையின் MRI Scanner மூலம் பயன்பெற்றவன் என்ற வகையில் இதனை பொருத்துவதற்கு உதவியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அவ்வளவு நோயாளர் வந்து செல்லும் இடத்தில் ஒழுங்கான ஒரு canteen இல்லை 
இருக்கும் ரெண்டிலும் விலைகள் தலை கீழ், காலையில் போய் கேட்டால் சுடுதண்ணி தரமாடடார்கள் அவர்களின் தேநீர் வியாபாரம் குறைந்து விடும் என்பதால். ஒரு பால் தேநீர் 40 ரூ கடந்த பங்குனி மாதத்தில், இப்போது நிலைமை என்னவோ தெரியல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அபராஜிதன் said:

அவ்வளவு நோயாளர் வந்து செல்லும் இடத்தில் ஒழுங்கான ஒரு canteen இல்லை 
இருக்கும் ரெண்டிலும் விலைகள் தலை கீழ், காலையில் போய் கேட்டால் சுடுதண்ணி தரமாடடார்கள் அவர்களின் தேநீர் வியாபாரம் குறைந்து விடும் என்பதால். ஒரு பால் தேநீர் 40 ரூ கடந்த பங்குனி மாதத்தில், இப்போது நிலைமை என்னவோ தெரியல. 

சிற்றுண்டிச் சாலையை ஏலத்தில் விடாது, உள்ளூர் கூட்டுறவுச் சங்கங்களோ அல்லது பெண் தலைமைத்துவ(அம்மாச்சில செய்வது) அமைப்புகளோ நடாத்த உதவலாமே.

Link to comment
Share on other sites

நோயாளர்  நலன் புரி சங்கம் தான் எடுத்து நடத்துகிறது என நினைக்கிறேன் ஆனால் ஏதும் ஒழுங்கமைப்பாக இல்லை. இவ்வளவு பெரிய வைத்தியசாலையில் காண்டீன் அமைப்பு மட்டும் இப்பிடி சொதப்பல் ஆக வைத்துள்ளார்கள்  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.