Jump to content

உடல்நலத்தை பாதுகாக்க தினமும் விட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விட்டமின் மாத்திரைகள் தயாரிக்கும் தொழில்துறை மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது.

மிண்டல் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, பிரிட்டனில் உள்ளவர்களில் பாதி பேர் விட்டமின் மற்றும் தாது சத்து மாத்திரைகளை தினமும் உட்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

பலரும் அதனை ஒரு குறைபாட்டை சரிசெய்துகொள்ள எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, நம் உடல் ஆரோக்கியத்துக்கு அது பலம் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

பெரும்பாலானவை விட்டமின்களும் தாதுக்களும் கலந்த மல்டி-விட்டமின் மாத்திரைகளாக கிடைக்கும்பட்சத்தில், எது உடலுக்கு நன்மை (அப்படி ஏதெனும் இருந்தால்) தரும் என்பதை அறிவது கடினம்.

உங்கள் உடல் நலத்தை காக்க மொத்தம் 13 விட்டமின்கள் தேவை. ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் மாத்திரை வடிவத்தில் உட்கொள்ள வேண்டுமா?

தினமும் நீங்கள் விட்டமின்களை எடுத்துக்கொள்ள வேண்டுமா?

இரண்டு வகையான விட்டமின்கள் உள்ளன: ஒன்று, கொழுப்பில் கரைகின்றவை மற்றும் நீரில் கரைகின்றவை.

1. கொழுப்பில் கரைகின்ற விட்டமின்கள் (விட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே) நம் உடலால் சேமிக்கப்படுபவை. அதனால், இந்த விட்டமின்களை மாத்திரை உட்கொள்ளாமலே பேணிக் காத்துக்கொள்ள முடியும். இதன் மற்றொரு விளைவு என்னவென்றால், அளவுக்கு அதிகமாக நீங்கள் உட்கொண்டு விடலாம். இதனால், அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் அவசியம்.

2. நீரில் கரைகின்ற விட்டமின்கள் (ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின் சி மற்றும் பி) உங்கள் உடலால் சேமிக்க முடியாதவை. இதனை, நீங்கள் சீராக உட்கொள்ளவேண்டும். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை தேவைக்கு அதிகமான அளவில் உட்கொண்டால், அவற்றை சிறுநீர் மூலம் அதிகம் வெளியேற்றுவீர்கள். ஆனால், விட்டமின் பி12-ஐ கல்லீரல் சேமித்து வைத்துக்கொள்ளும்.

மல்டி-விட்டமின் மாத்திரைகளில் சில தாதுச் சத்துகளையும், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் (Zinc) போன்றவையும் உள்ளன. நீங்கள் உட்கொள்ளும் உணவு மூலம் இந்த தாதுச்சத்துகள் கிடைக்கும். அதனால், இந்தச் சத்துகள் அதிகமாக தேவைப்படும் நிலையில் நீங்கள் இல்லாத பட்சத்தில், இதுவே போதுமானது.

கால்சியம் - வலுவான எலும்புக்கு உங்களுக்கு ஒரு நாளைக்கு கால்சியம் 700 மில்லி கிராம் (எம்.ஜி) தேவைப்படும்.

துத்தநாகம் - துத்தநாகம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் செரிமானத்துக்கும் தேவைப்படும். ஒரு நாளைக்கு பெண்களுக்கு 7 எம்.ஜியும், ஆண்களுக்கு 9.5 எம்.ஜியும் தேவை.

இரும்புச்சத்து - உணவு மூலம் கிடைத்த ஆற்றலை உடலுக்கு பரப்பவும், ஆக்சிஜனை ரத்தம் முழுவதும் கொண்டு சேர்க்கவும் இரும்புச்சத்து தேவை. 19 வயது முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு ஒரு நாளைக்கு 14.8 எம்.ஜியும், ஆண்களுக்கு 8.7 எம்.ஜியும் தேவை.

உங்கள் உடல்நலத்தை பாதுகாக்க எவ்வளவு விட்டமின் தேவை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாத்திரை உட்கொள்வதால் யாருக்கு நன்மை?

இலையுதிர் காலத்திலும், குளிர் காலத்திலும், விட்டமின்-டி மாத்திரையை உட்கொள்ளலாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அந்நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது. விட்டமின் டி கால்சியத்தை உறிஞ்ச உதவும்; இது நம் பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். விட்டமின்-டி மக்னீசியத்தையும் பாஸ்பேட்டையும் உறிஞ்ச உதவும்.

பசியின்மை இருப்பவர்களும் முதியோரும் ஒரு குறிப்பிட்ட மல்டி விட்டமினை எடுத்துக்கொள்வதன் மூலம் பயனடையலாம். உங்களின் மருத்துவர் உங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தலாம். முதியோரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களும் விட்டமின்-டி மாத்திரைகளை ஆண்டு முழுவதும் உட்கொள்ளலாம். உணவிலிருக்கும் கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு இது உதவும்.

நீங்கள் உங்கள் விருப்பமாகவோ அல்லது உடல் எடை குறைக்கவோ, டயட் காரணமாக சில உணவுகளை தவிர்த்தால், அத்தகைய உணவுகளில் காணப்படும் சத்துகளைக் கொண்ட மாத்திரைகளை உட்கொள்ளலாம். நீங்கள் மிகவும் குறைவான கலோரி கொண்ட டயட்டில் இருந்தால், மல்டி -விட்டமின் மாத்திரைகளை பயன்படுத்த நிச்சயம் பரிசீலிக்கலாம்.

மாத்திரைகள் தேவைப்படும் உணவு முறைகள் மற்றும் உடல்நிலை

1. பால் பொருட்கள் சேர்க்காத டயட்டில் உள்ளவர்கள், கால்சியம் மற்றும் அதன் வலுக்கொண்ட மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

2. இறைச்சி முட்டை, பால் பொருட்களை உண்ணாத 'வீகன்' உணவர்களுக்கு விட்டமின் பி12 மற்றும் கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை ஈடுகட்ட மாத்திரைகள் அல்லது டானிக் எடுத்துக்கொள்ளலாம்.

3. மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள், அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு இரும்புச்சத்து எடுத்துக் கொள்ள முடியாமல் இருக்கலாம். 35 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 4.8 சதவீத பேருக்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை உள்ளது. 12 சதவீத பேருக்கு மிகவும் குறைவான இரும்புச்சத்து உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரை அணுகவும்.

How many vitamins do you need?

4. பெண்களில் கருவுற முயல்பவர்கள், முதல் 12 வாரங்களில் இருக்கும் கர்ப்பிணிகளும் ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை உட்கொள்ளலாம். இது பிறக்கும் குழந்தைக்கு முதுகு நாண் பிறவி குறைபாடு உட்பட நரம்புக் குழாய் சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.

விட்டமின் சி மாத்திரைகள் - உயிரை காப்பதா? நேரத்தை வீண்டிப்பதா?

பல ஆண்டுகளாக குளிரை எதிர்கொள்ள மக்கள் விட்டமின்- சி உட்கொண்டு வருகின்றனர். இது எதிர் ஆக்சிகரணிகள் (antioxidant) என்பதானால், சிறந்த உணவாக பெயர் எடுத்திருக்கிறது. ஆனால், தொற்று., நோய் கடுங்குளிருக்கான அறிகுறிகள் ஆகியவற்றை தடுக்கும் என்பதற்கு மிகக் குறைந்த ஆதாரமே உள்ளது. நம் உடல் அதிக அளவிலான வைட்டமின் சியை சேகரிக்க இயலாது. அதனால், நீங்கள் அதிக அளவு உட்கொள்ளும்போது, அதிக அளவு சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.

காய்கறிகளிலும் பழங்களிலும் விட்டமின்-சி பரவலாக உள்ளது. ஓர் ஆரஞ்சுப் பழத்தில் கிட்டத்தட்ட 70 எம்.ஜி உள்ளது. அதனால், குறைபாடு என்பது மிகவும் அரிதே.

எவ்வளவு விட்டமின்கள் உங்களுக்கு தேவை?

விட்டமின்களும் தாதுக்களும் தேவைப்படும் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இது உங்களின் வயது, செயற்பாடு அளவு, பாலினம் மற்றும் பிற வேறுபாடுகளைப் பொறுத்தது.

விட்டமின்-டி தவிர நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் ஆரோக்கியமான சரியான உணவு பழக்கவழக்கங்கள் மூலம் பெற முடியும் என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆனால், பலரும் பரிந்துரை செய்யப்படும் அளவில் (Reference Nutrient Intakes - RNI) ஊட்டச்சத்துகளை உட்கொள்ளத் தவறுகின்றனர் என்று தேசிய திட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு காட்டுகிறது. அவர்கள் முறையான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றவதை தவிர்த்து அவர்களே மல்டி-விட்டமின் மாத்திரைகளை உட்கொண்டு சரிசெய்ய முயற்சிக்கின்றனர்.

நீங்கள் உரிய நேரத்தில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதே உங்கள் உடலை ஊட்டச்சத்துடன் வைத்துக் கொள்ள சிறந்த வழி!

உடல்நலத்தை பாதுகாக்க தினமும் விட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாமா? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.