Jump to content

“பூதம் கிளம்பிச்சு“ - Dr.T.கோபிசங்கர்


Recommended Posts

“ பூதம் கிளம்பிச்சு “ 

“ சின்னவா அண்ணா இண்டைக்கு முட்டாள் வேலைக்கு போட்டான் நீ வாறியா” , எண்டு நான் கேக்க முதல் அவன் ஓடிப்போய் வெறும் காச்சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு வந்தான் . “ இவன் சின்னவன் என்னத்துக்கு பக்கத்து வீட்டு ராசையா அண்ணையை கேளுங்கோவன் “ எண்டு மனிசி சொல்ல, அவன் மூஞ்சை சுருங்கிச்சுது. அவரையும் கேக்கிறன் இவனும் வந்து பழகட்டும் எண்டு கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டன் . 

பிளாஸ்டிக் bagக்குக்குள்ள சாவிகள் மூண்டு , குறுக்கால வாற கொப்புக்களையும் சிவரில முளைக்கிற ஆலமரத்தையும் வெட்டக் கத்தி, சிங்கர் ஒயில் சூப்பிக்குள்ள பெற்றோல் , பழைய plugகுகள் , மிசினுக்க விட மண்ணெண்ணை போத்தில் , இரண்டு பக்கமும் முடிச்சுப் போட்ட நைலோன் கயிறு ,பழைய துணி எல்லாம் எடுத்து வைச்சிட்டு , கறுத்த நீட்டுக்குழாயை சுத்தி வட்டமாக்கி குறுக்கால கைத்தைக் கட்டி தூக்கி தோளில பலன்ஸா வைச்சிட்டு சைக்கிளை உருட்டத் தொடங்க கட கட சத்தத்தோட கரியில கொளுவின மிசினும் உருளத் தொடங்கினது. பள்ளிக்கூட நீலக்காச்சட்டைக்கு மனிசி நெஞ்சு சட்டை பின்னை இறுக்கிக்குத்தி , கவனம் எண்டு சொல்லி அனுப்பி விட்ட சின்னவனோ பின்னாலை மிசினை தள்ளிக் கொண்டு வந்தான் . 

போன கிழமையே “ தம்பி திங்கக்கிழமை முப்பத்தொண்டு , ஞாயிற்றுக்கிழமை காலமை கீரிமலைக்கு போட்டு பதினொரு மணிக்கு வந்திடுவினம் ,நேரத்துக்கு வந்து இறைச்சு விட்டாத்தான் மிச்ச வேலை செய்யலாம்“ ,எண்டு சொன்னதை ஞாபகமாக்கி , தார் சூடும் சேர்ந்து துரத்த கொஞ்சம் எட்டி நடக்கத் தொடங்கினன். ஊரில செத்தவீடு நடந்தா சந்தோசப்படுற ஆக்களில நாங்களும் இருந்தம் . 

வீட்டுக்குப் பின் பக்கமா போய் மூலைச் சுவரோட சைக்கிளை சாத்தீட்டு சட்டையை கழட்டி சுருட்டி கவனமா வைச்சிட்டு எட்டிப் பாக்க வீட்டு அம்மா வந்தா. “ரெண்டு போத்தில் எண்ணை வேணும்” எண்டு பேரம் தொடங்க அவ என்ன இப்ப தானே பொங்கலுக்கு இறைச்சனான் எண்டு குறைக்க வெளிக்கிட , இல்லை அம்மா போன மாசம் பெஞ்ச மழையால நீர் முட்ட நிக்குது எண்டு சொல்லி ஒரு மாதிரி காசுக்கு மேல அரைப்போத்தில் மண்ணெண்ணையும் கிடைக்கிற சந்தோசத்தில குழாயை அவிட்டு புட்வால்வ் ஐ மெல்ல கிணத்துக்க இறக்கினன். சின்னவன் அவிட்ட குறுக்கு கயிறு ஒண்டு குழாயில கட்டி இருக்க மற்றதை தென்னையை சுத்திக் கட்டினான் . இவன் கெட்டிக்காரன் மூத்தவன் மாதிரி இல்லாமல் டக்கெண்டு விசயத்தை பிடிக்கிறான் எண்டு ராசையாண்ணை சொல்ல கொஞ்சம் பெருமையா இருந்திச்சு. 

எப்பிடியும் பொங்கலுக்கு முதல் ஒருக்கா ( மாரி மழை முடிய நிறைய தண்ணி இருக்கும்) , வருசப்பிறப்புக்கு முதல் , ( இப்ப சேறு வாரி எடுக்காட்டி வெய்யில் கூடக் கூட தண்ணி வத்திறதோட ஒரு மணமும் வரும்.) மற்றது நல்லூர் திருவிழாவுக்கு எண்டு வருசத்திக்கு மூண்டு தரம் அக்கம் பகத்தில கிணறு இறைப்பினம் . 

அதோட அந்திரட்டி , துடக்கு கழிவு , வீடு குடிபுகுதல் எண்டு அப்பப்ப ஏதாவது வரும். சில வேளை பூனை விழுந்தது , கோழி விழுந்தது, சாமாங்கள் விழுந்திச்செண்டு வருவினம் . போன வரியம் ஒருக்கா ,ஒருபக்கம் இழுத்திருந்த மனிசன் ஒண்டு விழுந்திட்டெண்டு கூப்பிட்டவை . நல்ல வேளை ஊர்பெடியள் எல்லாம் நிண்ட படியா கதிரையை இறக்கி ஆளை வச்சுக்கட்டி தூக்கி எடுத்தது. 

முந்தி கிணத்துக்க விழுந்த சாமாங்கள் எடுக்க கைமருந்து மாதிரி வீட்டையே சாமாங்கள் இருந்தது. மிதக்கிறதுகளை வாளியாலயே எடுக்கலாம் . வாளி விழுந்தா தான் மான் கொம்பு , இல்லாட்டி பாதாளக்கறண்டி தேவை. ஊர்ப்பக்கம் மம்பட்டியயை கட்டியும் வாளி எடுக்கிறவை. மத்தியான நேரங்களில விழுந்த வாளி தெரியாது , குடையை பிடிச்சுக்கொண்டு தான் விழுந்த இடம் தேடுறது. எல்லாம் பிழைச்சா ஆள் தான் இறங்கிறது. 

பெற்றோல் குப்பியை அமத்தி ஓட்டைக்குள்ள அடிச்சிட்டு , சோக்கை இழுத்துப் பிடிச்சுக்கொண்டு , இரண்டு பக்கமும் முடிச்சுப் போட்ட நைலோன் கயித்தை கட்டி இழுக்க அதிசியமா ரெண்டு அடியோட start ஆகிட்டு. திறந்து இருந்த சோக்கை கொஞ்சம் மூடி மிசினை இறுக்கி தண்ணி வாற குழாயை பொத்திப்பிடிக்க தண்ணி கையைத்தள்ளிக் கொண்டு பாயத் தொடங்கிச்சு. 

“ஓடிற மிசின் காத்திழுக்காமல் பாக்கோணும் இல்லாட்டி திருப்பயும் தண்ணி விட்டு நிரப்பி start பண்ண வேணும் “எண்டு சின்னவனுக்கு சொன்னபடி ராசையா அண்ணையிட்டை மண்ணெண்ணையை போத்திலை குடுத்தன் பாத்து விடச்சொல்லி . “தம்பி இந்த தண்ணியை கொஞ்சம் வாழைக்கு வெட்டிவிடும் “ எண்டு வந்தா வீட்டம்மா.  

குடுத்த extra மண்ணெண்ணை காசை பிடிக்க மனிசியும் வேலை வாங்குது எண்டு தெரிஞ்சபடிநானும் சின்னவனை நிமிந்து பாக்க அவனும் பாத்தியை வாழைக்கு திருப்பி விட்டான் . சிலவேளை இறைக்கிற தண்ணீல தான் கழுவாத வீட்டைக்கழுவி குளிக்காத ஆக்கள் குளிப்பினம். கிணத்தையே மீன் தொட்டியாக்கி மீன் விட்டு வளக்கிற சின்னனுகள் சட்டியோட நிக்கும் மீன்குஞ்சு பிடிக்க. 

கொஞ்சம் மிசினைக் கூட்டி விட்டிட்டு தண்ணி வத்த கிணத்துக்க இறங்க ஆயித்தப்படுத்தினன். தென்னையில கட்டின கயித்தை இழுத்துப் பாத்திட்டு கிணத்தை எட்டிப் பாத்தன் . என்ன தான் பழகின கிணறு எண்டாலும் இறங்க முதல் ஒருக்கா ஆழம் பாக்க வேணும் . கிணறுகள் கட்டேக்க கல்லுவைச்சு கட்டிறது ஏற இறங்க வசதியாய். எண்டாலும் பழைய கிணறு எண்டால் கல்லுக்கு பதில் பள்ளம் தான் இருக்கும். பள்ளத்துக்கு கால் வைச்சு பூரான் கடிச்சு பட்ட பாடுகள் நிறைய இருக்கு. உள்ளுக்க இறங்கி் பள்ளம் பாத்து foot valve ஐ மாத்தி வைச்சிட்டு நிமிந்து பாக்க விளக்கு மாறும் சட்டி ஒண்டும் வந்து விழுந்திச்சு. 

விளக்குமாத்தால சிவரைத் தேச்சு தண்ணியை எத்திப் பாசியை கழுவி விட தண்ணி கலங்கலாய் வரும். கடைசீல மக்கி சின்னக்கல்லு எல்லாம் சேந்து வர குழாய்க்குள்ள காத்திழுக்கத் தொடங்க இஞ்சினை நிப்பாட்டி விட்டுட்டு கஞ்சல், விழிந்திருந்த மாபிள்கள் எல்லாம் அள்ளிப்போட்டு வாளியோட மேல அனுப்ப ,சாம்பிராணியும் தணலும் கீழ வந்திச்சுது . தம்பி வடிவாக்காட்டும் எண்டு சொல்லிக்கொண்டு செய்த வேலை திருப்தியா எண்டு அம்மா எட்டிப் பாத்து சந்தோசப்பட திருப்பி மேல ஏறினன். கிணறு இறைக்கிறது இந்தப்பாடெண்டால் அதை வெட்டிக் கட்டிறது எந்தப்பாடு எண்ட யோச்சபடி மேல ஏறினன்.

கிணறு வெட்டிக்கட்டிறதும் ஒரு பெரிய வேலை . கிணத்தை வெட்டேக்க அதுக்கு மட்டும் எண்டு நிலையம்பாக்கிற சாத்திரி மார் சிலர் இருந்தவை , வளவுக்க இருக்கிற தென்னை மரத்தில தென்னோலை ஒண்டை புடுங்கி ஒலையை கிழிச்சு ஈக்கிலை எடுத்து இரண்டு முழங்கையையும் இடுப்போட அணைச்சுக் கொண்டு ரெண்டு கையாலேம் பிடிச்ச, ஈக்கிலை வண்டி வைச்ச மாதிரி வளைச்சு வளவின்டை வட கிழக்கு , (ஈசான ) மூலைப்பக்கம் நடப்பினம் . ஊத்து வர , ஓலை தன்டபாட்டில சுத்த தொடங்கும் . ஊத்துக்கு கிட்ட வரேக்க ஓலை கட கட வெண்டு சுத்தும் , உள்ளுக்க இருந்து வெளிப்பக்கம் சுத்தினா நல்ல தண்ணி இல்லாட்டி சில நேரம் உவர் தான்.

முதல்ல கிணத்தை ஆழமா வெட்டி ஊத்தைக்கண்டோன்ன ஒரு பொங்கல் போட்டு தான் மிச்ச கட்டிற வேலை செய்யிறது . கிண்டத் தொடங்க முதல்ல கல்லும் மண்ணும் கலந்து வரும் . நிலத்துக்கு ஏத்த மாதிரி பதினைஞ்சு அடி ஆழம் கிட்ட முட்ட வர கல்லுப்பாறை வரத்தொடங்கீடும். தனிப்பாறை கண்டு இன்றும் வெட்டிக்கொண்டு போக ஒரு மூண்டடிக்குள்ள தண்ணி வரும். 

கிணறு வெட்டிறாக்களின்டை வேலை தண்ணி கண்டோன்ன முடிஞ்சிடும். அச்செழு காரர் தான் அப்ப கூட கிணறு வெட்டிற வேலை செய்யிறவை. பிறகு கிணத்தைக் கட்டிறது மேசன் மார் . அடிக்கல்லுப் பாறை மூண்டடிக்கு இருக்கும் அதுக்கு மேல பாறை விளிம்பில இருந்து உள்ளுக்க மண்ணை வாரி கிணத்தை அகட்டிப் போட்டு பாறைக்கு மேல தான் கல்லு வைச்சு கட்டிறது. கிணத்துக்க கட்டிற பொளிகல்லு நுணாவில் வேம்பிராய் பக்கம் தான் இருக்கும் . பாறைக்கு மேல பாரமான பொளிகல்லை வைச்சுக்கட்டிறது கஸ்டம். வெளீல மரம் வைச்சு ஊஞ்சல் மாதிரிக்கட்டி கிணத்துக்க இறக்கி அதில இருந்து தான் கிணத்துக்கு சுத்திச்சுத்தி சிவர் கட்டிறது. 

வெள்ளம் வாற இடங்களில மட்டும் நிலத்துக்கு மேல கிணத்தடிக்கட்டை உயத்திக் கட்டுவினம் இல்லாட்டி ரெண்டடி தான் . அதோட கிணத்தடியில உடுப்பு தோய்க்கிற ஒரு கல்லும் ஒரு தொட்டியும் கட்டித்தான் கிணத்தடி வேலை முடிக்கிறது.

கிணத்துக்கு தூண் போட்டு , குறுக்கால மரம் வைச்சு கட்டின கப்பீல வாளியைக் கட்டிறதிலும் முறை இருக்கு . வாளி கட்டேக்க வளையத்தின்டை நடுவில ரெண்டு முடிச்சுத்தான் போடுறது , இல்லாட்டி தண்ணி அள்ளேக்க வாளி பிரளாது. வாளி பிரண்டாத்தான் தண்ணி கோலும். கப்பீல ஓடிற கயித்தின்டை கைய அப்பிடியே விட தண்ணீல போய் மோதி கொஞ்சம் தண்ணி மட்டும் உள்ள போக, திருப்பி கொஞ்சம் இழுத்திட்டு ரெண்டு தரம் தண்ணீல குத்தீட்டு கையை விட ,வாளி தண்ணிக்கு மேல ஒயில் மாதிரி இருந்த படையையும் ( அப்பவும் சுன்னாகம் Company இருந்ததோ? ) மிதக்கிற பூவரசு இலையையும் தாண்டி உள்ள போகும் . உள்ள போன வாளியை ரெண்டு இழுவையில வெளீல இழுத்திட்டு, ஒரு கையால வாளியை கவிட்டுப்பிடிக்க புழுதி பிரண்ட மற்றகையால கோலிப்பிடிச்சபடி குடிக்கிற தண்ணி , நுவரேலியா lion pub beer இலும் பாக்க ஜில் எண்டு இருக்கும். ( புழுதிக்கையும் கிணத்துத்தண்ணியும் secret of my energy) .

 

Dr.T.கோபிசங்கர்

யாழ்ப்பாணம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.