Jump to content

இந்திரா காந்தி அம்மையாருடன் ஒரு நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

16/11/1978 இல் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு நேர்காணல். 
தேம்ஸ் டெலிவிஷன்ஸ் ஜொனாதன் டிம்பிள்பி, இந்திய அரசியல் மற்றும் அவர் பிரதமராக இருந்தபோது பத்திரிகைகள் மீதான ஒடுக்குமுறை குறித்து திருமதி காந்தியிடம் சில சங்கடமான கேள்விகளைக் கேட்டார். திருமதி காந்தி எவ்வளவு லாவகமாக அவரின் பேட்டி காண்பவரின் குறுக்கு விசாரணை போன்ற கேள்விகளை கையாள்கிறார் பாருங்கள். 👌

Indira Gandhi Interview | TV Eye | 1978

https://youtu.be/q8aETK5pQR4

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி சசிவர்ணம்.  இந்திரா காந்தி உலகில் மிக சிறந்த தலைவர்களில் ஒருவர் என்பது நேர்காணலில் தெரிகிறது. எமேர்ஜென்சி காலம் என்பது அவரது அரசியல் வாழ்விலும் அவரது தலைமைத்துவத்திற்கும் ஏற்பட்ட  ஒரு சறுக்கல் என கூறலாம். 

இருப்பினும் அவரது திறமையான தொலை நோக்கு அரசியல் அணுகுமுறை,  தனது தவறுகளில் இருந்து பாடம் கற்று குறுகிய காலத்தில் மீண்டுவர முடிந்தது. 

இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால், ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தில் பல நல்விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பது எனது எண்ணம். 1983 இனக்கலவரத்தின் பின்னர், “இனப்படுகொலை” என்ற வார்ததையை முதன்  முதலில் பயன்படுத்திய உலக தலைவர் திருமதி இந்திரா காந்தியாவார். இந்திய சுதந்திர தின விழாவுக்கு அன்றைய தமிழர்விடுதலை கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தை  உத்தியோகபூர்வ விருந்தாளியாக அழைத்ததன் மூலமும்,  அந்த நிகழ்வில் திரு அமிர்தலிங்கத்தை நேரடியாக பலர் முன் வரவேற்று உரையாடியதன் மூலமும்,   தமிழர் பிரச்சனையில் தனக்குள்ள விசேட ஆர்வத்தை வெளிப்படுத்தி மறைமுகமாக ஜே. ஆர். ஜெவர்தனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இருவரதும் மரணங்கள் ஈழத்தமிழர் வாழ்வியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  இரண்டு மரணங்களுமே தமிழர் போரட்டத்தை அழிக்க நினைத்த எதிரிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இருவரது மரணத்தையும் தமிழரின் எதிரிகள் மிக சிறப்பாக கையாண்டனர். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மோசமான தலைவர் தவறுக்கு முன்னோடி இந்திரா காந்தி என்று அறிகிறேன்.
Tulpen இப்படி சொல்வது 😭

Link to comment
Share on other sites

10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியாவின் மோசமான தலைவர் தவறுக்கு முன்னோடி இந்திரா காந்தி என்று அறிகிறேன்.
Tulpen இப்படி சொல்வது 😭

நீங்கள் கூறுவது அவரது எமேஜன்சி கால ஆட்சியை பற்றியது. அது தொடர்பாக பல விமர்சனங்கள் உள்ளது. அதுவே 1977 ல் அவரது தோல்விக்கும் காரணமாக அமைந்தது. அதை தாண்டி உலகில் மதிப்பு மிக்க சிறந்த தலைவராக அவர் விளங்கினர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.