Jump to content

திருமணத்திற்கு பிறகு பெண்களின் காதல் தற்கொலைகள்


Recommended Posts

திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.
 

 

சாந்தி அக்கா! எனக்கு இதனைப்பற்றி சில கேள்விகள் உண்டு ஒன்று

இன்னொன்று இந்த உரையாடலில் நீங்கள் இன்னமும் சில விடயங்களை அழுத்தி கூறியிருக்கலாம் என நினைக்கிறேன்..

இந்த வாரம் முழுவதும் வேலை அதிகம் என்பதால் நான் நினைப்பதை எழுத முடியுமா தெரியவில்லை, ஆனாலும் இந்த மாதிரியான சம்பவங்களில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் என்றாலும் கூட இந்த மாதிரியான நிலைக்கு கணவனை தூண்டுவதும் பெண்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

 

Link to comment
Share on other sites

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சாந்தி அக்கா! எனக்கு இதனைப்பற்றி சில கேள்விகள் உண்டு ஒன்று

இன்னொன்று இந்த உரையாடலில் நீங்கள் இன்னமும் சில விடயங்களை அழுத்தி கூறியிருக்கலாம் என நினைக்கிறேன்.

இவ்விடயம் பற்றி தொடர்ந்து பேச இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் குழப்பம் தரும் தலைப்பும்..... நடந்த கலந்துரையாடலும்....

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

வேலையில் இருக்கும் கணவர், வேலை தானே செய்ய முடியும். வீட்டில் கதைக்க முடியாத விடயத்தை வேலையில் எப்படி கதைக்க முடியும்? புரியவில்லையே.....

தவறான விடயம் தொடர்பில், கணவருடன் அல்லது மணைவியுடன் அல்லது பிள்ளைகள் உடன், என்ன, எப்படி பேசுவது?

பழைய காதலன் அல்லது காதலி பயமுறுத்தினால், முதலில் பிளக் பண்ணணும். அந்த சமுகவலை ஊடகத்தில் முறையிட்டாலே, அவர்கள் கணக்கை, முடக்குவர்.  அதையும் மீறீனால்.... சட்டபூர்வமான உதவி பெறலாம்.

முதலில் இதையல்லாவா விளங்கப்படுத்த வேண்டும். 

இருவரும் சேர்ந்தே...... என்ன செய்கிறார்கள் என புரிந்து, சமூக வளைத்தளத்தில் நல்ல காதல் தொடர்பில் இருந்தால், பிறகென்ன, இரண்டு பக்கமும் விவாகரத்து பிரக்கிராசியாரை பார்த்து பிரிந்து, கலியாணம் பணண வேண்டியது தானே.

இதுக்கு தற்கொலை தீர்வல்ல என்று சொல்லாமல்.... குழப்பம் தரும் கருத்தாடல் போலவே தோன்றியது.

குடும்பத்தில் வரும் நாளாந்த பிரச்சணைக்கு தீர்வா அல்லது திருமணத்துக்கு பின்னான, முறறிலும் தவறான, காதலால் விளையும் பிரச்சணைகளுக்கு தீர்வா என்று கடைசி வரை புரியவில்லை.

இது எனது அபிப்பிராயம்.  தவறாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

மிகவும் குழப்பம் தரும் தலைப்பும்..... நடந்த கலந்துரையாடலும்....

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

வேலையில் இருக்கும் கணவர், வேலை தானே செய்ய முடியும். வீட்டில் கதைக்க முடியாத விடயத்தை வேலையில் எப்படி கதைக்க முடியும்? புரியவில்லையே.....

தவறான விடயம் தொடர்பில், கணவருடன் அல்லது மணைவியுடன் அல்லது பிள்ளைகள் உடன், என்ன, எப்படி பேசுவது?

பழைய காதலன் அல்லது காதலி பயமுறுத்தினால், முதலில் பிளக் பண்ணணும். அந்த சமுகவலை ஊடகத்தில் முறையிட்டாலே, அவர்கள் கணக்கை, முடக்குவர்.  அதையும் மீறீனால்.... சட்டபூர்வமான உதவி பெறலாம்.

முதலில் இதையல்லாவா விளங்கப்படுத்த வேண்டும். 

இருவரும் சேர்ந்தே...... என்ன செய்கிறார்கள் என புரிந்து, சமூக வளைத்தளத்தில் நல்ல காதல் தொடர்பில் இருந்தால், பிறகென்ன, இரண்டு பக்கமும் விவாகரத்து பிரக்கிராசியாரை பார்த்து பிரிந்து, கலியாணம் பணண வேண்டியது தானே.

இதுக்கு தற்கொலை தீர்வல்ல என்று சொல்லாமல்.... குழப்பம் தரும் கருத்தாடல் போலவே தோன்றியது.

குடும்பத்தில் வரும் நாளாந்த பிரச்சணைக்கு தீர்வா அல்லது திருமணத்துக்கு பின்னான, முறறிலும் தவறான, காதலால் விளையும் பிரச்சணைகளுக்கு தீர்வா என்று கடைசி வரை புரியவில்லை.

இது எனது அபிப்பிராயம்.  தவறாகவும் இருக்கலாம்.

வெல் சேய்ட்.. இன்னொரு காதல் செய்ய விருப்பம் இருந்தால் யாரையும் ஏமாற்றாமல் கெளரவமாக விவாகரத்து செய்துவிட்டு தமக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம்.. அதுதான் நேர்மையானது.. அதைத்தான் சொல்லிக்கொடுக்கவேணும்.. இல்லை இரண்டுகால் தோணி என்றால் பிள்ளைகள் உட்பட அந்தகுடும்பத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோர் நிம்மதியும் போய்விடும்..

Link to comment
Share on other sites

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனாலும் இந்த மாதிரியான சம்பவங்களில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் என்றாலும் கூட இந்த மாதிரியான நிலைக்கு கணவனை தூண்டுவதும் பெண்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

கணவனை இந்த மாதிரி நிலைக்கு தூண்டுவது என்பது பற்றி விளக்கமாக சொல்லுவீங்களோ?

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

தவறு அல்ல அது ஒரு தடுமாற்றம். அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு உறவு வந்து அதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் என்று நாம் ஒதுக்காமல் அவர்களை வாழ விட வேண்டும். 

இப்படி ஒருவர் தடுமாறினால் அதை பெரும் குற்றமாக நான் கருதமாட்டேன். 

இவ்விடயம் பற்றி கருத்தாடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில்.

இந்த வீடியோவை நான் விளங்கி கொண்ட விதத்துக்கும், நாதமும் ஓணாண்டியாரும் விளங்கி கொண்ட விதத்துக்கும் வேறுபாடு உண்டென நினைக்கிறேன்.

ஆனால் இதை நெறியாளரும் சாந்தி அக்காவும் இன்னும் கொஞ்சம் தெளிவாக விளங்கபடுத்தி இருக்கலாம்.

திருமணத்துக்கு பின்னான காதல்(?) இல்லை தடுமாற்றம் என்பதே சரி, தவறானதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. திருமண பந்தத்தில் இருந்தபடி வேறு உறவை வளர்ப்பது நம்பிக்கை சம்பந்தபட்ட விடயம்.

ஒரு குடும்பத்தில் எந்த உறவும் பரஸ்பரம் நம்பிக்கை கேடு வராமல் இருக்க வேண்டும் என்பது அடிப்படை.

ஆனால் முறைதவறிய காதலை செய்யுங்கோ ஆனால் பாதுகாப்பாக செய்யுங்கோ என இங்கே சாந்தி அக்காவோ நெறியாளரோ சொல்லவில்லை.

என் பார்வையில், இப்படியான தடுமாற்றம் எமது சமுகத்தில் நிகழாமல் தடுக்க இது தவறு (நாதமுனி சொன்னது போல்) என்பதை மட்டும் சொல்லுவதை விட, ஓணாண்டி சொல்வது போல் கண்ணியமாக பிரிந்து போங்கள் என மட்டும் சொல்வதைவிட, இவற்றோடு சேர்த்து இந்த “தற்காலிக தடுமாற்றத்தில்” இருந்து மீள்வது எப்படி, என்ன வகையில் ஆபத்துக்களை எதிர்கொள்ளலாம் என்பதை சொல்வதும் உதவிகளுக்கு signpost பண்ணுவதும் வினைதிறனா இருக்கும்.

ஒரு உதாரணம் - எயிட்சை கட்டுப்படுத்த ஒருவரோடு மட்டும் உறவு வையுங்கள் என்பதே மிக சரியான ஆலோசனை. ஆனாலும் அடுத்த வழியால் (alternative) அட்லீஸ்ட் பாதுகாப்பு சாதனங்களையாவது பாவியுங்கள் என கூறி அதை இலவசமாகவும் கொடுப்பது போலவே இதுவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, shanthy said:

தவறு அல்ல அது ஒரு தடுமாற்றம். அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு உறவு வந்து அதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் என்று நாம் ஒதுக்காமல் அவர்களை வாழ விட வேண்டும். 

இப்படி ஒருவர் தடுமாறினால் அதை பெரும் குற்றமாக நான் கருதமாட்டேன். 

இவ்விடயம் பற்றி கருத்தாடுவோம்.

நீஙகள் என்ன கருதுகிறீர்கள் என்பதல்ல இங்கே முக்கியமான விடயம்.

எது சரி, எது பிழை என்பதனை புரிந்த நிலையிலே சரியான ஆலோசணை தர முடியும்.

இங்கே, சிற்றிசன் அட்வைஸ் பீரோ எனும் அமைப்புக்கு முதலில் செல்ல வேண்டும். அவர்கள் சரியான ஆலோசணை தரக்கூடியவர்களை காட்டுவார்கள்.

ஆலோசணை தரக்கூடியவர், அதற்கான பயிற்சி மட்டுமல்ல, காப்புறுதியும், தேவையான அனுமதிப்பத்திரமும் வைத்திருப்பர்.

ஏனெனில், இந்த கலந்துரையாடல், குழப்பம் தந்தது.

தனிப்பட்ட ரீதியில் யாரையும் விமரசிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான ஒரு பிரச்சினையைப் பேசியிருக்கிறார் சாந்தி. மேலே ஓணாண்டியும், நாதமும் "சம்பவத்தில்" தங்கி நின்று விட்டார்களென நினைக்கிறேன் - அதனால் அந்தக் கருத்துக்கள். ஆனால் சாந்தி கலந்துரையாடியிருப்பது பெரும்பாலும் சம்பவம் நடந்த பின்னர் உயிரிழப்பு அவலங்கள் ஏற்படாமல் என்ன செய்வதென்பதைப் பற்றியதாக இருக்கிறது! மொழிப் பரிச்சயம் இருக்கும் நாடுகளிலேயே இப்படியானவர்கள் உதவிகள் பெற முடியாத நிலை இருக்கும் போது, ஜேர்மன், ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழ்வோரின் நிலை இன்னும் மோசமாகத் தான் இருக்குமென நினைக்கிறேன். உங்கள் பணி இன்றியமையாதது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

மிகச்சரியான கருத்து. 👍🏽

Link to comment
Share on other sites

14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெல் சேய்ட்.. இன்னொரு காதல் செய்ய விருப்பம் இருந்தால் யாரையும் ஏமாற்றாமல் கெளரவமாக விவாகரத்து செய்துவிட்டு தமக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம்.. அதுதான் நேர்மையானது.. அதைத்தான் சொல்லிக்கொடுக்கவேணும்.. இல்லை இரண்டுகால் தோணி என்றால் பிள்ளைகள் உட்பட அந்தகுடும்பத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோர் நிம்மதியும் போய்விடும்..

இன்னொரு காதலை யாரும் திட்டமிட்டு செய்வதில்லை. சூழ்நிலை மனங்களில் இன்னொரு ஈர்ப்பினுள் வீழ்த்திவிடுகிறது. 

பலர் ஒளித்து நடிப்பதை சிலர் வெளிப்படையாக செய்கிறார்கள். வெளிப்படையாக இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவது. 

இதற்கு நிரந்தர தீர்வு வராது. ஆனால் goshan_che சொன்ன எய்ட்ஸ் சிறந்த உதாரணம். 

நாம் இதுபற்றி பேசுவதால் யாரோ ஒருவரேனும் பயனடைவார். 

Link to comment
Share on other sites

இவ்வாறான வெளிப்படையான உரையாடலே சந்தர்பப சூழ்நிலைகளால் தவறிழைப்பவர்களுக்கான ஒரு விழிப்புணர்வுதான்.ஆகவே வரவேற்கப்பட வேண்டிய ஒரு சமூக விழிப்புணர்வு உரையாடல் இது. 

எமது விருப்பங்களுக்கப்பால் இவ்வாறான விடயங்கள் நாம் வாழும் சமுதாயத்தில் இன்று மட்டுமல்ல எல்லா காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நடைபெற்ற   ஓரு சிறிய தவறுக்காக அவர்களது வாழ்க்கை பலியாக கூடாது. அதிலிருந்து அவர்கள் மீண்டுவந்து சமூகத்தில் இணைந்து இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதையே இந்த உரையாடல் வலியுறுத்துகிறது. ஆகவே இவ்வாறாற உரையாடல்கள் சமுகத்திற்கு தேவையானது.

இப்படியான சம்பவங்கள் நடைபெற்று அவை குடும்பங்களில் கொலை, தற்கொலை போன்ற விடயங்கள் நடக்கும் போது அதை பரிகசிக்கும் வசன நடையுடன் கொசிப் செய்தியாக  இங்கு  பல முறை இணைக்கப்பட்டுள்ளது. அதை வாசித்து நக்கல் நளினங்களும் பகிரப்பட்ட சம்பவங்களும் அவை நிர்வாகத்தால் நீக்கப்படவேண்டிய நிலையும் ஏற்பட்டது.  ஆனால் இது அப்படியானதல்ல.

 பாதிக்கப்பட்ட மனிதர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர விரும்பும் சமூக பார்வையுடனான உரையாடல்.  

அத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் இப்படியான தவறுகள் சமூகத்தில் நடைபெறும் போது ஆண்/ பெண் என்ற இரு சாராரும் சம அளவில் இதுல் பங்கு பெற்றாலும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை. மிக விரைவாக அவர்களது துணையால்  மன்னிக்கப்பட்டு எதுவும் நடக்காதது போல் இயல்பு வாழ்ககையை தமது குடும்பத்துடன் நடத்துவதை கண்டிருக்கிறேன். அதற்கு சமூகமும் உதவி செய்கிறது. தவறில் சம பங்காளியான ஒருவர் அதை மறந்து குற்றமனப்பான்மையற்று வாழும் போது மற்றவர் அத்தவறுக்காக தனது வாழ்ககையை பலியாக்கவேண்ட நிலையை சமூகம் தான் உருவாக்கி உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன்பான காதலும் பின்பான காதலும் ஒன்றே என்பது எனது கருத்து காரணம் எதிர்பாலினம் அன்பான விசாரிப்புகளாலேயே மற்றவரை வசீகரித்துவிடலாம்.

 அண்மையில் ஒரு பெண் சமூக ஊடகமொன்றில் கூறியிருந்தார் எந்தப்பெண்ணையும் பார்த்து (அவர் திருமணமாகியிருக்கிறார இல்லையா என்பது வேறுவிடையம்) நீங்கள் அழகாக இருக்கிறேர்கள் எனக்கூறினாலே  அப்பெண் மறுபடியும் அந்த ஆண்மகனைப் ஓரக்கண்ணாலேயோ அல்லது தூரப்பார்வையிலோ பார்ப்பாள் அல்லது அவதானிப்பாள் என.

தமிழ் சமூகத்தில் "கிணத்துத் தண்ணியை வெள்ளமா கொண்டுபோய்விடப்போகிறது" எனும் மனப்பாண்மை ஆண்களிடம் உண்டு என்னதான் கஸ்டப்பட்டுக் காதலித்து மனம் உருகி மன்றாடித் திருமணம் முடித்தாலும் திருமணத்தின் பின்பான வாழ்கை என்பது பெண்களுக்கு நரகம்தான் இந்தச்சந்தர்ப்பத்தைத்தான் பிற ஆண்மகன் தனதாக்கிக்கொள்கிறான். இதில் அவன் திருமணமானவனாக இருந்தாலும் அவனது மனைவியும் அவனுக்கு நெருக்கமானவளாக அவன் கருதமாட்டான். இதுவே தப்புக்கு வழிவகுக்கிறது.

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

 

அத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் இப்படியான தவறுகள் சமூகத்தில் நடைபெறும் போது ஆண்/ பெண் என்ற இரு சாராரும் சம அளவில் இதுல் பங்கு பெற்றாலும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை. மிக விரைவாக அவர்களது துணையால்  மன்னிக்கப்பட்டு எதுவும் நடக்காதது போல் இயல்பு வாழ்ககையை தமது குடும்பத்துடன் நடத்துவதை கண்டிருக்கிறேன். அதற்கு சமூகமும் உதவி செய்கிறது. தவறில் சம பங்காளியான ஒருவர் அதை மறந்து குற்றமனப்பான்மையற்று வாழும் போது மற்றவர் அத்தவறுக்காக தனது வாழ்ககையை பலியாக்கவேண்ட நிலையை சமூகம் தான் உருவாக்கி உள்ளது. 

இந்த திரியில் இக் கருத்தைத் தான் நான் எழுத இருந்தேன், நீங்கள் எழுதி விட்டீர்கள். 

எம் சமூகத்தில் ஆண் ஒருவர் திருமணத்துக்கு அப்பால் இவ்வாறான உறவில் ஈடுபட்டு அது தெரிய வந்தால் மிக சிறிய அளவில் மட்டுமே ஆணுக்கு பாதிப்பு வருகின்றது. எந்த ஆணும் இதனால் தற்கொலை செய்வதோ வாழ்க்கையை தொலைப்பதோ கிடையாது. அத்துடன் அந்த ஆணை ஏதோ பெரிய காரியம் ஒன்றை செய்த வீரன் போல போற்றுவதற்கும் அவ் ஆணிற்கு சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அதே ஆணுடன் திருமணத்துக்கு அப்பால் உறவு வைத்த பெண்ணுக்குத்தான் எல்லாப் பிரச்சனைகளும் எல்லா மட்டத்தில் இருந்தும் வந்து மன அழுத்தத்தை அதிகரிக்க வைக்கும்.

திருமணத்துக்கு அப்பாலான காதல் / உறவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஓணாண்டி சொல்லியது போல, பிரிந்து போய் தனக்கான ஒன்றை தேடிக் கொள்வதே சரியான வழி. ஆனால் திருமணம் செய்த பின் பிரிவது என்பது எந்தளவுக்கு வலியானது என்பதை என் நண்பர்கள் சிலரது வாழ்வில் நான் கண்டுள்ளேன். சிலர் அந்த வலியை சந்திக்க விருப்பின்றி குறுக்கு வழியில் இவ்வாறான திருமணத்துக்கு அப்பாலான உறவுகளை வைத்துக் கொள்ள முயல்கின்றார்கள்.

திருமணத்துக்கு அப்பாலான உறவு தவறானது என்று வெறும் தட்டையாக சொல்லிவிட்டு அகலாமல். அவ்வாறான உறவில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைப்பவர்கள் அதில் இருந்து மீள்வதற்கான முறைகளை உரையாடும் சமூக பிரக்ஞை உள்ள ஒரு உரையாடலாகவே இதை பார்க்கின்றேன். 

நல்ல முயற்சி இது சாந்தி.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகரட் பெட்டியில் புகைப்பதால் புற்றுநோய் வரும் என்று பெரிய எழுத்துக்களில் போட்டிருந்தும் அதையும் பார்த்துவிட்டு புகைக்காதே என்று சொல்லும் டாக்ரரில் இருந்து கூடுதலானோர் 

பெட்டியில் எழுதியதை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை.

இந்திய சினிமாபாணியில் குடிக்கும் போது குடி உடல் நலத்துக்கு கேடு என்று போட்டுடுட்டு குடிப்பது போல இருக்கு.

திருடனா பார்த்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

கணவனை இந்த மாதிரி நிலைக்கு தூண்டுவது என்பது பற்றி விளக்கமாக சொல்லுவீங்களோ?

57-D9-BE30-A066-47-C1-9475-9304-EBB78-FC
 

Insecure Women.

ஒரு insecure பெண் தன்மீதும் தன் எண்ணங்கள்/பண்புகள் மீதும் நம்பிக்கை இல்லாத ஒரு பெண், அவள் தன் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைக் கட்டுப்படுத்த ஆசைப்படுவாள். அவளுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் அவளுடைய துணையாக இருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரியான பெண்கள் தங்களது துணை கொண்டு பிள்ளைகள் வரை அதீத கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இவர்களுடைய துணைக்கு தனிமனித சுதந்திரமே இருக்காது..தனித்த விருப்பு வெறுப்புகள் தொடக்கம் சம்பளம் வரை இந்த மாதிரியான பெண்களின் கட்டுப்பாட்டிலேதான் இருக்கும். இவற்றை மீறும் பட்சத்தில் குடும்பத்தில் உள்ளவர்களை குற்றவாளிகளாக காட்டியும் தன்னை பாதிக்கப்பட்டவளாக காட்டியும் மற்றவர்களின் அனுதாபத்தை பெறுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். 

ஆரம்பத்தில் இவர்களது துணை இவர்களை அனுசரித்தாலும் உறவில் விரிசல் வந்துவிடும், நாளடைவில் இவர்களது துணை ஒன்றில் தற்கொலை
செய்வார்கள் அல்லது வீட்டை விட்டு வெளியேறியோ அல்லது ஒரு affairலோ தங்களது வாழ்க்கையை கழிப்பார்கள்.. 

இந்த மாதிரியான பெண்களைப்பற்றி அதிகம் கேள்விப்படமாட்டோம் காரணம், இவர்களால் பாதிக்கப்படும் ஆண்கள் தங்கள் கவலைகளை வெளியே கூறுவதில்லை ஏனெனில் அதற்கு அவர்களது சுய கெளரவம் இடம் கொடுக்காது. 

இந்த insecure மனநிலை உடைய பெண்களை கவனிப்பீர்களேயானால் பெரும்பாலும் பணம், சமூக அந்தஸ்து போன்ற விடயங்களே மனிதர்களை அளவிடும் அளவுகோலாக இருக்கும். பணம், சமூக அந்தஸ்து இவற்றை எப்பாடுபட்டாவது அடைய நினைப்பார்கள், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை குடும்பத்தின் சந்தோஷம், நிம்மதி. இவர்களது துணையும் தன் நிம்மதி சந்தோஷத்திற்காக வெளியே ஒரு உறவை நாடும்.. இவர்களை மனதில் வைத்தே நான் உங்களுக்கு எழுதினேன். 

ஆகையால் இந்த மாதிரியான பெண்களின் நிலையை ஆரம்பத்திலேயே உளவியல் ஆலோசகர்களின் உதவியுடன் குணப்படுத்தினால், அவர்களது குடும்பமும் மற்றவர்களும் பாதிக்கப்படமாட்டார்கள்.. 

மேலே நான் கூறிய உதாரணம் தனித்து insecure மனநிலை உடைய பெண்களின் துணைக்கு மட்டுமே.. 

இரண்டாவது வகை பெண்கள், 
சில பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றவுடன் தன்னையும் கவனிப்பதில்லை, தன் துணையையும் கவனிப்பதில்லை. இது பொதுவாக ஆண்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த நிலையிலும் ஆண் இன்னொரு உறவை தற்காலிகமாக தேட முனையலாம். இந்த ஆண்களைப்பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.. ஏனெனில் இவர்களைப்போன்றவர்களுக்கு பெண்கள் தனியே சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி.. வேறு எந்த valueம் இருக்காது.. 

இதனால்தான் பெண்கள் குழந்தை பெற்றபின்பும் தங்களது ஆரோக்கியத்திலும் மற்றைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.. 

மூன்றாவது, என்னைப்பொறுத்தவரை, பெண்கள் எல்லாவற்றிற்கும் ஆண்களின் முகவாயை பார்ப்பதை குறைக்கவேண்டும்.. எதிர்பார்ப்புகள் அதிகமானால் விட்டுக்கொடுப்புகளும்/sacrificeம் அதிகரிக்கும். பின்பு குறை கூறுவதால் பயனில்லை. 

அதேசமயம் ஒரு கணவன் தன் மனைவி, குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமல் முழு நேரமும் தன் வேலை, தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்கும் இடங்களில்.. மனைவி சில நேரங்களில் தன்னிடம் அன்பாக கதைக்கும் ஒருவருடன் உறவை நாடலாம்.. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் ஆனால் தன்னை நம்பி ஊர்விட்டு தேசவிட்டு வந்த துணைக்கு சிறிதளவு நேரத்தை ஒதுக்காமல் பணம் மட்டுமே முக்கியம் என 24/7 வேலை செய்துவிட்டு வந்து மனைவிக்கு என்ன தேவை என்பதை அறியாமல் தன் தேவையை மட்டும் பார்த்துவிட்டு உறங்கும் கணவனிடம் இருந்து நாளடைவில் மனைவி ஒதுங்கலாம்.. அப்பொழுது தன்னிடம் அன்பாக பேசும் நபரிடம் உறவை ஏற்படுத்துகிறார்கள்.. இதில் தவறு யாருடையது!

சில கணவர் இருக்கிறார்கள் “ நான் வளர்ந்த விதம் இப்படி, எனது வட்டம் இப்படி, இதை மீறி நான் வரமாட்டேன்” என்பவர்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க விருப்பமில்லாமல் தானும் வாழாமல் தன் மனைவி, பிள்ளைகளையும் வாழவிடாமல்.. இவர்களின் துனையும் விவாகரத்தும் எடுக்க முடியாமல் சில சமயங்களில் இன்னொரு உறவை நாடலாம்.. 

இயல்பாகவே மனைவி இருக்கும் பொழுதே மற்றைய பெண்களை நோட்டம் விட்டு கைகூடினால் காரியம் நடத்தும் கணவர்மார்.. sex drive அதிகம் உள்ள துணைகள் கூட திருப்தி ஏற்படாதவிடத்து ஒருவருக்கொருவர்  ஏமாற்றலாம்..ஏனெனில் ஆணோ பெண்ணோ இருவரும் உணர்வுகளை கொண்டவர்கள்.. 

எந்த உறவிற்கும் அடிப்படை பரஸ்பர நம்பிக்கை, அன்னியோன்யம், இது கலையும் இடத்து போலியான வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமில்லை. சமூகத்தின் மீதான பயம், பிள்ளைகளின் எதிர்காலம் என்பதற்காக இன்னொருவரின் வாழ்க்கையை கலைப்பது சரியல்ல. 

அதே போல காதல் என்ற உணர்வு எந்த வயதிலும் வரலாம், கட்டாயம் அது காமம் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்பதுமில்லை..அந்த உணர்வு உண்மையானது என்றால் அவரவர் பாதையில் போவதே சிறந்தது.. 


ஆனால் இதில் துல்பன் அண்ணா கூறியது போல கணவனின் பிழைகளை மன்னித்து ஏற்கும் மனைவி, இந்த குற்றத்திற்கு முதல் காரணம் எனக்கூறுவது  தனது கணவன் தேடிப் போன பெண்னைத்தான்.. 
அதே சமயம் மனைவியை கணவனால் ஏற்கமுடியாதவாறு சமூத்தின் வாய்கள் தடுக்கிறது.. அதனால்தான் வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியால் பெண்ணை சார்ந்த குடும்பம் கலைகிறது.. பெண்களையும் கற்பு அவர்களுக்கு மட்டும்தான் என்ற எண்ணத்தை ஊட்டி தன்னைத்தானே நொந்து உருக்குலைந்து போகவும் தற்கொலையை நாடவும் இந்த சமூகமே தூண்டுகிறது.. 

இதில் மாற்றம் வரவேண்டும், இந்த உறவில் இருவருக்குமே சம பங்கு உண்டு என்பதால் இருவரையும் ஒரே விதமாகத்தான் நடத்த வேண்டும் என நான் நினைப்பதுண்டு. 

ஆகையால் பிரச்சனைகள், விரிசல்கள் வருமிடத்து உரிய ஆலோசனைகளை நாடினால் இரு குடும்பங்களின் வாழ்க்கை தடங்கலில்லாமல் பயணிக்கும். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80ம் காலப்பகுதிகளுக்கு பின்னரான நம்வர் வாழ்க்கையில்....

ஐந்து வருடம்  தனித்தனியே வாழ்ந்து காதல் வாழ்க்கை.....
பின்னர்..
மூன்று வருடம் சேர்ந்திருந்து பரீட்சார்த்த/புரிந்துணர்வு வாழ்க்கை
அடுத்தது...
திருமண வாழ்க்கை இரு வருடம்...அந்த இரு வருடத்தில் ஒரு பிள்ளை இல்லையேல் பல கடினத்தின் பின்(இஞ்சைதான் சலிப்புத்தன்மை முளைக்குது)இரண்டாவது பிள்ளை பிரசன்னம்.இங்கே தளிர் விடுகின்றது திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு பின்னான காதலை அலசுவதைகாட்டிலும், அந்த காதலுக்கான காரணங்களை ஆராய்வது பொருத்தமாயிருக்குமென்று நினைக்கிறேன்.

புலம்பெயர் சமூக சிக்கல் பற்றி மட்டுமே பிரதானமாக பார்க்க நினைக்கிறேன், தாயகத்திலேற்படும் குடும்ப பாதிப்புக்களுக்கும் இதில் பல பொருந்தும் .

பல காரணங்கள் முறையற்ற உறவுக்கு வழி வகுக்கின்றன அதில் பிரதானமானவை 

* 24 மணிநேரமும் வேலை வேலை என்று அலைவது

* நீண்ட நாட்களாக உடல் உளவியல் ரீதியாக மனைவியுடன் நெருங்கியிருக்காதது

* எதுக்கெடுத்தாலும் எரிந்து விழுவது, தான் மட்டும் ஊர் சுற்றிக்கொண்டு துணையை தனிமை சிறையில் விட்டுவிடுவது

* ஏற்கனவே ஒருவரிடம் மனசை கொடுத்த ஒரு பெண்ணை பெற்றோர்கள் வற்புறுத்தி இன்னொருவனுக்கு கட்டி வைப்பது

* பொருத்தம் உடலிலும் வேண்டும் என்று கண்ணதாசன் சொன்னதுபோல ,பணம் விசா திமிரில் வழுக்கை விழுந்த தலையுடன் பியர் அடிச்சு வீங்கிய வண்டியை தள்ளிக்கொண்டு  வயசு வித்தியாசம் பார்க்காமல் தோற்றத்திற்கு எந்தவகையிலும் பொருத்தமில்லாத பெண்களை ஊருக்கு போய் திருமணம் செய்து கூட்டி வருவது,

இப்படி பல உண்டு.

எனக்கு தெரிந்த பலர் வெளிப்படையாகவே மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்து மூன்று மாசம் ஆகுது ஒரே பிஸி என்று பேசுவதை கேட்டிருக்கிறேன்.

வேலை முடிந்து வந்தால் ஆசையாய் சில வார்த்தை பேசுவதில்லை காரை எடுத்துக்கொண்டு ஓடிபோய் நண்பர்கள் வட்டத்துடன் சேர்ந்து தண்ணியடித்து காட்ஸ் விளையாடி ஜாலியாக பொழுதை கழிக்க , எப்போதும் சமைத்து வைத்துவிட்டு டிவியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு மாறுதலாக சமூக வலைதளங்களில் இறங்க தூண்டுகிறது, குழப்பங்களின் ஆரம்பமே அங்குதான் விதைக்கபடுகிறது.

புறதோற்றத்தில் வசீகரமான குலுங்க குலுங்க சிரிக்க வைக்க பேசும் நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் மிக எளிதாக திருமணம் ஆன ஆகாத பெண்களை ஈர்த்துவிடுகிறார்கள், அது காலபோக்கில் அவர்கள் மீது தீரா காதலாகிவிடுகிறது.

விவாகரத்து பெறாமலே காதலை வளர்ப்பதற்கு பிரதான காரணமே அவர்களின் பிள்ளைகள்தான் , பிள்ளைகளை விட்டு பிரிய விருப்பமின்றியும், காதலில் விழுத்திய ஆண்கள் பிள்ளைகளுடன் இவர்களை ஏற்க தயாராக இல்லாமையும் காரணமாகிறது.

பெரும்பாலும் முறையற்ற காதலில் குடும்ப பெண்களை விழுத்தும் ஆண்களில் பலரும் ஏற்கனவே கல்யாணமாகி மனைவி பிள்ளைகளுடன் வாழ்பவர்கள்தான், அவர்கள் இவர்களை விவாகரத்து செய்ய சொல்லி கேட்கமுடியாது ஏனென்றால் அவர்களும் விவாகரத்து செய்து மனைவி பிள்ளைகளை பிரிந்து வரவேண்டும்.

இந்த முறையற்ற காதலில் ஈடுபடும் ஆண்களில் பலருக்கு தங்களின் குடும்பத்தை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்தவன் குடும்பத்தை நாசமாக்கவேண்டும் என்பதே இலக்கு.

குடும்ப பெண்களை காதலில் விழுத்தும் திருமணமாகாத ஆண்களில் பலர் குழந்தைகளுடன் கூட்டிபோய் ஒரு பெண்ணுடன் வாழ தயாகாரவில்லை , கிடைத்தவரை லாபம் என்று திருமண பந்தத்திற்கு புறம்பான முறையில் உறவை ஏற்படுத்தவே விரும்பிகிறார்கள், .

அதை பெருமையாக நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளவும் செய்கிறார்கள், சிக்கல் என்று வரும்போது காய் வெட்டிவிட்டு சிறிலங்காவில் போய்  எவரையும் காதலிக்காத பெண்ணை நன்றாக விசாரித்து கல்யாணம் செய்து கம்பீரமாக நடமாடுகிறார்கள். அவரால் பாதிக்கபட்ட பெண்கள் மட்டும் கணவன் குழந்தைகள் அனைத்தையும் இழந்து கையறு நிலையில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

சிலர் இந்த பக்கமும் போக முடியாமல் அந்த பக்கமும் போகமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அதுவும் குடும்ப பெண்கள் விவாகரத்து பெறாமல் முறையற்ற காதலை தொடர காரணம்

சமூக வலைதளங்கள் ஆரம்பிக்காத அந்தநாட்களில் பொது விழாக்களில் வெறும் பார்வையுடன் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்ட முறையற்ற காதல் தூதுகள் இந்நாட்களில் ஒரு நாளிலேயே நேரடி உறவை ஏற்படுத்திக்கொள்ள உறுதுணையாகிவிட்டது.

 குடும்ப உறவில் உடலியல் உணர்வியல் உளவியல் ரீதியில் நெருக்கத்தை பேணாமல் விடுவது,பொருத்தமற்ற துணை ஜோடி பொருத்தங்கள்கூட  முறையற்ற காதலை தேட பிரதான வடிகாலாகிறது பல பெண்கள் விழாக்களுக்கு குடும்பமாய் போகும்போது பிற ஜோடிகள் முன்னர் கூனி குறுகுவதை பார்த்திருக்கிறேன்.

காரியங்கள் நடப்பதற்கு காரணங்கள் கட்டாயம் இருக்கும் காரணங்களுக்கு தீர்வு கண்டால் காரியங்களின் அளவு குறைந்து கொண்டு போகும் என்றே கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல் கெளரவமாக விவாகரத்து பெற்று பிரிந்து தமக்கு பிடித்தமான வாழ்கையை வாழுகின்றனர்.

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

80ம் காலப்பகுதிகளுக்கு பின்னரான நம்வர் வாழ்க்கையில்....

ஐந்து வருடம்  தனித்தனியே வாழ்ந்து காதல் வாழ்க்கை.....
பின்னர்..
மூன்று வருடம் சேர்ந்திருந்து பரீட்சார்த்த/புரிந்துணர்வு வாழ்க்கை
அடுத்தது...
திருமண வாழ்க்கை இரு வருடம்...அந்த இரு வருடத்தில் ஒரு பிள்ளை இல்லையேல் பல கடினத்தின் பின்(இஞ்சைதான் சலிப்புத்தன்மை முளைக்குது)இரண்டாவது பிள்ளை பிரசன்னம்.இங்கே தளிர் விடுகின்றது திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

தமிழ் மன்னன் என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் ராஜராஜ சோழனும் பல மனைவியருடன் வாழ்ந்தவன் தான். அது தமிழ் சிஸ்ரமா?

அந்த காலத்தில் காந்தர்வ மணம் என்று ஒரு சிஸ்ரம் இருந்தது. அது same like living together தான். 

Link to comment
Share on other sites

ஏன் தமிழ் கடவுள் என்று வணக்கப்படும் முருகனே திருமணத்தின் பின்னர் காதல் கொண்டவர் தான் 

அவருக்கு வருடா வருடம் திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது. 😂😂😂

இது தமிழ் சிஸ்ரமா அல்லது மேலைத்தேய சிஸ்ரமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல் கெளரவமாக விவாகரத்து பெற்று பிரிந்து தமக்கு பிடித்தமான வாழ்கையை வாழுகின்றனர்.

எந்த விசயத்திலை ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றாமல்,எந்த விசயத்திலை துரோகம் செய்யாமல் எண்டதை விளக்கமாய் சொல்லுங்கோ......உந்த பிரச்சனையிலை நானும் விளங்க நினைப்பவன் தான் கண்டியளோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

தமிழ் மன்னன் என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் ராஜராஜ சோழனும் பல மனைவியருடன் வாழ்ந்தவன் தான். அது தமிழ் சிஸ்ரமா?

ராஜராஜ சோழன் கரைச்சல் குடுத்து கலைச்சு விடேல்லை.கன்னியரை கரயவும் விடேல்லை.ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் கொடுத்து கண்கலங்காமல் வைத்திருந்தான்.

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

ராஜராஜ சோழன் கரைச்சல் குடுத்து கலைச்சு விடேல்லை.கன்னியரை கரயவும் விடேல்லை.ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் கொடுத்து கண்கலங்காமல் வைத்திருந்தான்.

நீங்கள் முதலில் கூறியது திருமணத்துக்கு பிறகு காதல் என்பது மேற்கத்தைய சிஸ்ரம் என்ற விடயத்தை பற்றி மட்டுமே.  இப்போது கதையை மாற்றுவது ஏன்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.