Jump to content

திருமணத்திற்கு பிறகு பெண்களின் காதல் தற்கொலைகள்


Recommended Posts

திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.
 

 

சாந்தி அக்கா! எனக்கு இதனைப்பற்றி சில கேள்விகள் உண்டு ஒன்று

இன்னொன்று இந்த உரையாடலில் நீங்கள் இன்னமும் சில விடயங்களை அழுத்தி கூறியிருக்கலாம் என நினைக்கிறேன்..

இந்த வாரம் முழுவதும் வேலை அதிகம் என்பதால் நான் நினைப்பதை எழுத முடியுமா தெரியவில்லை, ஆனாலும் இந்த மாதிரியான சம்பவங்களில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் என்றாலும் கூட இந்த மாதிரியான நிலைக்கு கணவனை தூண்டுவதும் பெண்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

 

Link to comment
Share on other sites

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சாந்தி அக்கா! எனக்கு இதனைப்பற்றி சில கேள்விகள் உண்டு ஒன்று

இன்னொன்று இந்த உரையாடலில் நீங்கள் இன்னமும் சில விடயங்களை அழுத்தி கூறியிருக்கலாம் என நினைக்கிறேன்.

இவ்விடயம் பற்றி தொடர்ந்து பேச இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் குழப்பம் தரும் தலைப்பும்..... நடந்த கலந்துரையாடலும்....

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

வேலையில் இருக்கும் கணவர், வேலை தானே செய்ய முடியும். வீட்டில் கதைக்க முடியாத விடயத்தை வேலையில் எப்படி கதைக்க முடியும்? புரியவில்லையே.....

தவறான விடயம் தொடர்பில், கணவருடன் அல்லது மணைவியுடன் அல்லது பிள்ளைகள் உடன், என்ன, எப்படி பேசுவது?

பழைய காதலன் அல்லது காதலி பயமுறுத்தினால், முதலில் பிளக் பண்ணணும். அந்த சமுகவலை ஊடகத்தில் முறையிட்டாலே, அவர்கள் கணக்கை, முடக்குவர்.  அதையும் மீறீனால்.... சட்டபூர்வமான உதவி பெறலாம்.

முதலில் இதையல்லாவா விளங்கப்படுத்த வேண்டும். 

இருவரும் சேர்ந்தே...... என்ன செய்கிறார்கள் என புரிந்து, சமூக வளைத்தளத்தில் நல்ல காதல் தொடர்பில் இருந்தால், பிறகென்ன, இரண்டு பக்கமும் விவாகரத்து பிரக்கிராசியாரை பார்த்து பிரிந்து, கலியாணம் பணண வேண்டியது தானே.

இதுக்கு தற்கொலை தீர்வல்ல என்று சொல்லாமல்.... குழப்பம் தரும் கருத்தாடல் போலவே தோன்றியது.

குடும்பத்தில் வரும் நாளாந்த பிரச்சணைக்கு தீர்வா அல்லது திருமணத்துக்கு பின்னான, முறறிலும் தவறான, காதலால் விளையும் பிரச்சணைகளுக்கு தீர்வா என்று கடைசி வரை புரியவில்லை.

இது எனது அபிப்பிராயம்.  தவறாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

மிகவும் குழப்பம் தரும் தலைப்பும்..... நடந்த கலந்துரையாடலும்....

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

வேலையில் இருக்கும் கணவர், வேலை தானே செய்ய முடியும். வீட்டில் கதைக்க முடியாத விடயத்தை வேலையில் எப்படி கதைக்க முடியும்? புரியவில்லையே.....

தவறான விடயம் தொடர்பில், கணவருடன் அல்லது மணைவியுடன் அல்லது பிள்ளைகள் உடன், என்ன, எப்படி பேசுவது?

பழைய காதலன் அல்லது காதலி பயமுறுத்தினால், முதலில் பிளக் பண்ணணும். அந்த சமுகவலை ஊடகத்தில் முறையிட்டாலே, அவர்கள் கணக்கை, முடக்குவர்.  அதையும் மீறீனால்.... சட்டபூர்வமான உதவி பெறலாம்.

முதலில் இதையல்லாவா விளங்கப்படுத்த வேண்டும். 

இருவரும் சேர்ந்தே...... என்ன செய்கிறார்கள் என புரிந்து, சமூக வளைத்தளத்தில் நல்ல காதல் தொடர்பில் இருந்தால், பிறகென்ன, இரண்டு பக்கமும் விவாகரத்து பிரக்கிராசியாரை பார்த்து பிரிந்து, கலியாணம் பணண வேண்டியது தானே.

இதுக்கு தற்கொலை தீர்வல்ல என்று சொல்லாமல்.... குழப்பம் தரும் கருத்தாடல் போலவே தோன்றியது.

குடும்பத்தில் வரும் நாளாந்த பிரச்சணைக்கு தீர்வா அல்லது திருமணத்துக்கு பின்னான, முறறிலும் தவறான, காதலால் விளையும் பிரச்சணைகளுக்கு தீர்வா என்று கடைசி வரை புரியவில்லை.

இது எனது அபிப்பிராயம்.  தவறாகவும் இருக்கலாம்.

வெல் சேய்ட்.. இன்னொரு காதல் செய்ய விருப்பம் இருந்தால் யாரையும் ஏமாற்றாமல் கெளரவமாக விவாகரத்து செய்துவிட்டு தமக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம்.. அதுதான் நேர்மையானது.. அதைத்தான் சொல்லிக்கொடுக்கவேணும்.. இல்லை இரண்டுகால் தோணி என்றால் பிள்ளைகள் உட்பட அந்தகுடும்பத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோர் நிம்மதியும் போய்விடும்..

Link to comment
Share on other sites

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனாலும் இந்த மாதிரியான சம்பவங்களில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் என்றாலும் கூட இந்த மாதிரியான நிலைக்கு கணவனை தூண்டுவதும் பெண்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

கணவனை இந்த மாதிரி நிலைக்கு தூண்டுவது என்பது பற்றி விளக்கமாக சொல்லுவீங்களோ?

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

தவறு அல்ல அது ஒரு தடுமாற்றம். அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு உறவு வந்து அதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் என்று நாம் ஒதுக்காமல் அவர்களை வாழ விட வேண்டும். 

இப்படி ஒருவர் தடுமாறினால் அதை பெரும் குற்றமாக நான் கருதமாட்டேன். 

இவ்விடயம் பற்றி கருத்தாடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில்.

இந்த வீடியோவை நான் விளங்கி கொண்ட விதத்துக்கும், நாதமும் ஓணாண்டியாரும் விளங்கி கொண்ட விதத்துக்கும் வேறுபாடு உண்டென நினைக்கிறேன்.

ஆனால் இதை நெறியாளரும் சாந்தி அக்காவும் இன்னும் கொஞ்சம் தெளிவாக விளங்கபடுத்தி இருக்கலாம்.

திருமணத்துக்கு பின்னான காதல்(?) இல்லை தடுமாற்றம் என்பதே சரி, தவறானதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. திருமண பந்தத்தில் இருந்தபடி வேறு உறவை வளர்ப்பது நம்பிக்கை சம்பந்தபட்ட விடயம்.

ஒரு குடும்பத்தில் எந்த உறவும் பரஸ்பரம் நம்பிக்கை கேடு வராமல் இருக்க வேண்டும் என்பது அடிப்படை.

ஆனால் முறைதவறிய காதலை செய்யுங்கோ ஆனால் பாதுகாப்பாக செய்யுங்கோ என இங்கே சாந்தி அக்காவோ நெறியாளரோ சொல்லவில்லை.

என் பார்வையில், இப்படியான தடுமாற்றம் எமது சமுகத்தில் நிகழாமல் தடுக்க இது தவறு (நாதமுனி சொன்னது போல்) என்பதை மட்டும் சொல்லுவதை விட, ஓணாண்டி சொல்வது போல் கண்ணியமாக பிரிந்து போங்கள் என மட்டும் சொல்வதைவிட, இவற்றோடு சேர்த்து இந்த “தற்காலிக தடுமாற்றத்தில்” இருந்து மீள்வது எப்படி, என்ன வகையில் ஆபத்துக்களை எதிர்கொள்ளலாம் என்பதை சொல்வதும் உதவிகளுக்கு signpost பண்ணுவதும் வினைதிறனா இருக்கும்.

ஒரு உதாரணம் - எயிட்சை கட்டுப்படுத்த ஒருவரோடு மட்டும் உறவு வையுங்கள் என்பதே மிக சரியான ஆலோசனை. ஆனாலும் அடுத்த வழியால் (alternative) அட்லீஸ்ட் பாதுகாப்பு சாதனங்களையாவது பாவியுங்கள் என கூறி அதை இலவசமாகவும் கொடுப்பது போலவே இதுவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, shanthy said:

தவறு அல்ல அது ஒரு தடுமாற்றம். அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு உறவு வந்து அதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் என்று நாம் ஒதுக்காமல் அவர்களை வாழ விட வேண்டும். 

இப்படி ஒருவர் தடுமாறினால் அதை பெரும் குற்றமாக நான் கருதமாட்டேன். 

இவ்விடயம் பற்றி கருத்தாடுவோம்.

நீஙகள் என்ன கருதுகிறீர்கள் என்பதல்ல இங்கே முக்கியமான விடயம்.

எது சரி, எது பிழை என்பதனை புரிந்த நிலையிலே சரியான ஆலோசணை தர முடியும்.

இங்கே, சிற்றிசன் அட்வைஸ் பீரோ எனும் அமைப்புக்கு முதலில் செல்ல வேண்டும். அவர்கள் சரியான ஆலோசணை தரக்கூடியவர்களை காட்டுவார்கள்.

ஆலோசணை தரக்கூடியவர், அதற்கான பயிற்சி மட்டுமல்ல, காப்புறுதியும், தேவையான அனுமதிப்பத்திரமும் வைத்திருப்பர்.

ஏனெனில், இந்த கலந்துரையாடல், குழப்பம் தந்தது.

தனிப்பட்ட ரீதியில் யாரையும் விமரசிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான ஒரு பிரச்சினையைப் பேசியிருக்கிறார் சாந்தி. மேலே ஓணாண்டியும், நாதமும் "சம்பவத்தில்" தங்கி நின்று விட்டார்களென நினைக்கிறேன் - அதனால் அந்தக் கருத்துக்கள். ஆனால் சாந்தி கலந்துரையாடியிருப்பது பெரும்பாலும் சம்பவம் நடந்த பின்னர் உயிரிழப்பு அவலங்கள் ஏற்படாமல் என்ன செய்வதென்பதைப் பற்றியதாக இருக்கிறது! மொழிப் பரிச்சயம் இருக்கும் நாடுகளிலேயே இப்படியானவர்கள் உதவிகள் பெற முடியாத நிலை இருக்கும் போது, ஜேர்மன், ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழ்வோரின் நிலை இன்னும் மோசமாகத் தான் இருக்குமென நினைக்கிறேன். உங்கள் பணி இன்றியமையாதது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

மிகச்சரியான கருத்து. 👍🏽

Link to comment
Share on other sites

14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெல் சேய்ட்.. இன்னொரு காதல் செய்ய விருப்பம் இருந்தால் யாரையும் ஏமாற்றாமல் கெளரவமாக விவாகரத்து செய்துவிட்டு தமக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம்.. அதுதான் நேர்மையானது.. அதைத்தான் சொல்லிக்கொடுக்கவேணும்.. இல்லை இரண்டுகால் தோணி என்றால் பிள்ளைகள் உட்பட அந்தகுடும்பத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோர் நிம்மதியும் போய்விடும்..

இன்னொரு காதலை யாரும் திட்டமிட்டு செய்வதில்லை. சூழ்நிலை மனங்களில் இன்னொரு ஈர்ப்பினுள் வீழ்த்திவிடுகிறது. 

பலர் ஒளித்து நடிப்பதை சிலர் வெளிப்படையாக செய்கிறார்கள். வெளிப்படையாக இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவது. 

இதற்கு நிரந்தர தீர்வு வராது. ஆனால் goshan_che சொன்ன எய்ட்ஸ் சிறந்த உதாரணம். 

நாம் இதுபற்றி பேசுவதால் யாரோ ஒருவரேனும் பயனடைவார். 

Link to comment
Share on other sites

இவ்வாறான வெளிப்படையான உரையாடலே சந்தர்பப சூழ்நிலைகளால் தவறிழைப்பவர்களுக்கான ஒரு விழிப்புணர்வுதான்.ஆகவே வரவேற்கப்பட வேண்டிய ஒரு சமூக விழிப்புணர்வு உரையாடல் இது. 

எமது விருப்பங்களுக்கப்பால் இவ்வாறான விடயங்கள் நாம் வாழும் சமுதாயத்தில் இன்று மட்டுமல்ல எல்லா காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நடைபெற்ற   ஓரு சிறிய தவறுக்காக அவர்களது வாழ்க்கை பலியாக கூடாது. அதிலிருந்து அவர்கள் மீண்டுவந்து சமூகத்தில் இணைந்து இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதையே இந்த உரையாடல் வலியுறுத்துகிறது. ஆகவே இவ்வாறாற உரையாடல்கள் சமுகத்திற்கு தேவையானது.

இப்படியான சம்பவங்கள் நடைபெற்று அவை குடும்பங்களில் கொலை, தற்கொலை போன்ற விடயங்கள் நடக்கும் போது அதை பரிகசிக்கும் வசன நடையுடன் கொசிப் செய்தியாக  இங்கு  பல முறை இணைக்கப்பட்டுள்ளது. அதை வாசித்து நக்கல் நளினங்களும் பகிரப்பட்ட சம்பவங்களும் அவை நிர்வாகத்தால் நீக்கப்படவேண்டிய நிலையும் ஏற்பட்டது.  ஆனால் இது அப்படியானதல்ல.

 பாதிக்கப்பட்ட மனிதர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர விரும்பும் சமூக பார்வையுடனான உரையாடல்.  

அத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் இப்படியான தவறுகள் சமூகத்தில் நடைபெறும் போது ஆண்/ பெண் என்ற இரு சாராரும் சம அளவில் இதுல் பங்கு பெற்றாலும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை. மிக விரைவாக அவர்களது துணையால்  மன்னிக்கப்பட்டு எதுவும் நடக்காதது போல் இயல்பு வாழ்ககையை தமது குடும்பத்துடன் நடத்துவதை கண்டிருக்கிறேன். அதற்கு சமூகமும் உதவி செய்கிறது. தவறில் சம பங்காளியான ஒருவர் அதை மறந்து குற்றமனப்பான்மையற்று வாழும் போது மற்றவர் அத்தவறுக்காக தனது வாழ்ககையை பலியாக்கவேண்ட நிலையை சமூகம் தான் உருவாக்கி உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன்பான காதலும் பின்பான காதலும் ஒன்றே என்பது எனது கருத்து காரணம் எதிர்பாலினம் அன்பான விசாரிப்புகளாலேயே மற்றவரை வசீகரித்துவிடலாம்.

 அண்மையில் ஒரு பெண் சமூக ஊடகமொன்றில் கூறியிருந்தார் எந்தப்பெண்ணையும் பார்த்து (அவர் திருமணமாகியிருக்கிறார இல்லையா என்பது வேறுவிடையம்) நீங்கள் அழகாக இருக்கிறேர்கள் எனக்கூறினாலே  அப்பெண் மறுபடியும் அந்த ஆண்மகனைப் ஓரக்கண்ணாலேயோ அல்லது தூரப்பார்வையிலோ பார்ப்பாள் அல்லது அவதானிப்பாள் என.

தமிழ் சமூகத்தில் "கிணத்துத் தண்ணியை வெள்ளமா கொண்டுபோய்விடப்போகிறது" எனும் மனப்பாண்மை ஆண்களிடம் உண்டு என்னதான் கஸ்டப்பட்டுக் காதலித்து மனம் உருகி மன்றாடித் திருமணம் முடித்தாலும் திருமணத்தின் பின்பான வாழ்கை என்பது பெண்களுக்கு நரகம்தான் இந்தச்சந்தர்ப்பத்தைத்தான் பிற ஆண்மகன் தனதாக்கிக்கொள்கிறான். இதில் அவன் திருமணமானவனாக இருந்தாலும் அவனது மனைவியும் அவனுக்கு நெருக்கமானவளாக அவன் கருதமாட்டான். இதுவே தப்புக்கு வழிவகுக்கிறது.

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

 

அத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் இப்படியான தவறுகள் சமூகத்தில் நடைபெறும் போது ஆண்/ பெண் என்ற இரு சாராரும் சம அளவில் இதுல் பங்கு பெற்றாலும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை. மிக விரைவாக அவர்களது துணையால்  மன்னிக்கப்பட்டு எதுவும் நடக்காதது போல் இயல்பு வாழ்ககையை தமது குடும்பத்துடன் நடத்துவதை கண்டிருக்கிறேன். அதற்கு சமூகமும் உதவி செய்கிறது. தவறில் சம பங்காளியான ஒருவர் அதை மறந்து குற்றமனப்பான்மையற்று வாழும் போது மற்றவர் அத்தவறுக்காக தனது வாழ்ககையை பலியாக்கவேண்ட நிலையை சமூகம் தான் உருவாக்கி உள்ளது. 

இந்த திரியில் இக் கருத்தைத் தான் நான் எழுத இருந்தேன், நீங்கள் எழுதி விட்டீர்கள். 

எம் சமூகத்தில் ஆண் ஒருவர் திருமணத்துக்கு அப்பால் இவ்வாறான உறவில் ஈடுபட்டு அது தெரிய வந்தால் மிக சிறிய அளவில் மட்டுமே ஆணுக்கு பாதிப்பு வருகின்றது. எந்த ஆணும் இதனால் தற்கொலை செய்வதோ வாழ்க்கையை தொலைப்பதோ கிடையாது. அத்துடன் அந்த ஆணை ஏதோ பெரிய காரியம் ஒன்றை செய்த வீரன் போல போற்றுவதற்கும் அவ் ஆணிற்கு சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அதே ஆணுடன் திருமணத்துக்கு அப்பால் உறவு வைத்த பெண்ணுக்குத்தான் எல்லாப் பிரச்சனைகளும் எல்லா மட்டத்தில் இருந்தும் வந்து மன அழுத்தத்தை அதிகரிக்க வைக்கும்.

திருமணத்துக்கு அப்பாலான காதல் / உறவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஓணாண்டி சொல்லியது போல, பிரிந்து போய் தனக்கான ஒன்றை தேடிக் கொள்வதே சரியான வழி. ஆனால் திருமணம் செய்த பின் பிரிவது என்பது எந்தளவுக்கு வலியானது என்பதை என் நண்பர்கள் சிலரது வாழ்வில் நான் கண்டுள்ளேன். சிலர் அந்த வலியை சந்திக்க விருப்பின்றி குறுக்கு வழியில் இவ்வாறான திருமணத்துக்கு அப்பாலான உறவுகளை வைத்துக் கொள்ள முயல்கின்றார்கள்.

திருமணத்துக்கு அப்பாலான உறவு தவறானது என்று வெறும் தட்டையாக சொல்லிவிட்டு அகலாமல். அவ்வாறான உறவில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைப்பவர்கள் அதில் இருந்து மீள்வதற்கான முறைகளை உரையாடும் சமூக பிரக்ஞை உள்ள ஒரு உரையாடலாகவே இதை பார்க்கின்றேன். 

நல்ல முயற்சி இது சாந்தி.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகரட் பெட்டியில் புகைப்பதால் புற்றுநோய் வரும் என்று பெரிய எழுத்துக்களில் போட்டிருந்தும் அதையும் பார்த்துவிட்டு புகைக்காதே என்று சொல்லும் டாக்ரரில் இருந்து கூடுதலானோர் 

பெட்டியில் எழுதியதை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை.

இந்திய சினிமாபாணியில் குடிக்கும் போது குடி உடல் நலத்துக்கு கேடு என்று போட்டுடுட்டு குடிப்பது போல இருக்கு.

திருடனா பார்த்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

கணவனை இந்த மாதிரி நிலைக்கு தூண்டுவது என்பது பற்றி விளக்கமாக சொல்லுவீங்களோ?

57-D9-BE30-A066-47-C1-9475-9304-EBB78-FC
 

Insecure Women.

ஒரு insecure பெண் தன்மீதும் தன் எண்ணங்கள்/பண்புகள் மீதும் நம்பிக்கை இல்லாத ஒரு பெண், அவள் தன் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைக் கட்டுப்படுத்த ஆசைப்படுவாள். அவளுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் அவளுடைய துணையாக இருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரியான பெண்கள் தங்களது துணை கொண்டு பிள்ளைகள் வரை அதீத கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இவர்களுடைய துணைக்கு தனிமனித சுதந்திரமே இருக்காது..தனித்த விருப்பு வெறுப்புகள் தொடக்கம் சம்பளம் வரை இந்த மாதிரியான பெண்களின் கட்டுப்பாட்டிலேதான் இருக்கும். இவற்றை மீறும் பட்சத்தில் குடும்பத்தில் உள்ளவர்களை குற்றவாளிகளாக காட்டியும் தன்னை பாதிக்கப்பட்டவளாக காட்டியும் மற்றவர்களின் அனுதாபத்தை பெறுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். 

ஆரம்பத்தில் இவர்களது துணை இவர்களை அனுசரித்தாலும் உறவில் விரிசல் வந்துவிடும், நாளடைவில் இவர்களது துணை ஒன்றில் தற்கொலை
செய்வார்கள் அல்லது வீட்டை விட்டு வெளியேறியோ அல்லது ஒரு affairலோ தங்களது வாழ்க்கையை கழிப்பார்கள்.. 

இந்த மாதிரியான பெண்களைப்பற்றி அதிகம் கேள்விப்படமாட்டோம் காரணம், இவர்களால் பாதிக்கப்படும் ஆண்கள் தங்கள் கவலைகளை வெளியே கூறுவதில்லை ஏனெனில் அதற்கு அவர்களது சுய கெளரவம் இடம் கொடுக்காது. 

இந்த insecure மனநிலை உடைய பெண்களை கவனிப்பீர்களேயானால் பெரும்பாலும் பணம், சமூக அந்தஸ்து போன்ற விடயங்களே மனிதர்களை அளவிடும் அளவுகோலாக இருக்கும். பணம், சமூக அந்தஸ்து இவற்றை எப்பாடுபட்டாவது அடைய நினைப்பார்கள், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை குடும்பத்தின் சந்தோஷம், நிம்மதி. இவர்களது துணையும் தன் நிம்மதி சந்தோஷத்திற்காக வெளியே ஒரு உறவை நாடும்.. இவர்களை மனதில் வைத்தே நான் உங்களுக்கு எழுதினேன். 

ஆகையால் இந்த மாதிரியான பெண்களின் நிலையை ஆரம்பத்திலேயே உளவியல் ஆலோசகர்களின் உதவியுடன் குணப்படுத்தினால், அவர்களது குடும்பமும் மற்றவர்களும் பாதிக்கப்படமாட்டார்கள்.. 

மேலே நான் கூறிய உதாரணம் தனித்து insecure மனநிலை உடைய பெண்களின் துணைக்கு மட்டுமே.. 

இரண்டாவது வகை பெண்கள், 
சில பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றவுடன் தன்னையும் கவனிப்பதில்லை, தன் துணையையும் கவனிப்பதில்லை. இது பொதுவாக ஆண்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த நிலையிலும் ஆண் இன்னொரு உறவை தற்காலிகமாக தேட முனையலாம். இந்த ஆண்களைப்பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.. ஏனெனில் இவர்களைப்போன்றவர்களுக்கு பெண்கள் தனியே சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி.. வேறு எந்த valueம் இருக்காது.. 

இதனால்தான் பெண்கள் குழந்தை பெற்றபின்பும் தங்களது ஆரோக்கியத்திலும் மற்றைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.. 

மூன்றாவது, என்னைப்பொறுத்தவரை, பெண்கள் எல்லாவற்றிற்கும் ஆண்களின் முகவாயை பார்ப்பதை குறைக்கவேண்டும்.. எதிர்பார்ப்புகள் அதிகமானால் விட்டுக்கொடுப்புகளும்/sacrificeம் அதிகரிக்கும். பின்பு குறை கூறுவதால் பயனில்லை. 

அதேசமயம் ஒரு கணவன் தன் மனைவி, குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமல் முழு நேரமும் தன் வேலை, தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்கும் இடங்களில்.. மனைவி சில நேரங்களில் தன்னிடம் அன்பாக கதைக்கும் ஒருவருடன் உறவை நாடலாம்.. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் ஆனால் தன்னை நம்பி ஊர்விட்டு தேசவிட்டு வந்த துணைக்கு சிறிதளவு நேரத்தை ஒதுக்காமல் பணம் மட்டுமே முக்கியம் என 24/7 வேலை செய்துவிட்டு வந்து மனைவிக்கு என்ன தேவை என்பதை அறியாமல் தன் தேவையை மட்டும் பார்த்துவிட்டு உறங்கும் கணவனிடம் இருந்து நாளடைவில் மனைவி ஒதுங்கலாம்.. அப்பொழுது தன்னிடம் அன்பாக பேசும் நபரிடம் உறவை ஏற்படுத்துகிறார்கள்.. இதில் தவறு யாருடையது!

சில கணவர் இருக்கிறார்கள் “ நான் வளர்ந்த விதம் இப்படி, எனது வட்டம் இப்படி, இதை மீறி நான் வரமாட்டேன்” என்பவர்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க விருப்பமில்லாமல் தானும் வாழாமல் தன் மனைவி, பிள்ளைகளையும் வாழவிடாமல்.. இவர்களின் துனையும் விவாகரத்தும் எடுக்க முடியாமல் சில சமயங்களில் இன்னொரு உறவை நாடலாம்.. 

இயல்பாகவே மனைவி இருக்கும் பொழுதே மற்றைய பெண்களை நோட்டம் விட்டு கைகூடினால் காரியம் நடத்தும் கணவர்மார்.. sex drive அதிகம் உள்ள துணைகள் கூட திருப்தி ஏற்படாதவிடத்து ஒருவருக்கொருவர்  ஏமாற்றலாம்..ஏனெனில் ஆணோ பெண்ணோ இருவரும் உணர்வுகளை கொண்டவர்கள்.. 

எந்த உறவிற்கும் அடிப்படை பரஸ்பர நம்பிக்கை, அன்னியோன்யம், இது கலையும் இடத்து போலியான வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமில்லை. சமூகத்தின் மீதான பயம், பிள்ளைகளின் எதிர்காலம் என்பதற்காக இன்னொருவரின் வாழ்க்கையை கலைப்பது சரியல்ல. 

அதே போல காதல் என்ற உணர்வு எந்த வயதிலும் வரலாம், கட்டாயம் அது காமம் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்பதுமில்லை..அந்த உணர்வு உண்மையானது என்றால் அவரவர் பாதையில் போவதே சிறந்தது.. 


ஆனால் இதில் துல்பன் அண்ணா கூறியது போல கணவனின் பிழைகளை மன்னித்து ஏற்கும் மனைவி, இந்த குற்றத்திற்கு முதல் காரணம் எனக்கூறுவது  தனது கணவன் தேடிப் போன பெண்னைத்தான்.. 
அதே சமயம் மனைவியை கணவனால் ஏற்கமுடியாதவாறு சமூத்தின் வாய்கள் தடுக்கிறது.. அதனால்தான் வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியால் பெண்ணை சார்ந்த குடும்பம் கலைகிறது.. பெண்களையும் கற்பு அவர்களுக்கு மட்டும்தான் என்ற எண்ணத்தை ஊட்டி தன்னைத்தானே நொந்து உருக்குலைந்து போகவும் தற்கொலையை நாடவும் இந்த சமூகமே தூண்டுகிறது.. 

இதில் மாற்றம் வரவேண்டும், இந்த உறவில் இருவருக்குமே சம பங்கு உண்டு என்பதால் இருவரையும் ஒரே விதமாகத்தான் நடத்த வேண்டும் என நான் நினைப்பதுண்டு. 

ஆகையால் பிரச்சனைகள், விரிசல்கள் வருமிடத்து உரிய ஆலோசனைகளை நாடினால் இரு குடும்பங்களின் வாழ்க்கை தடங்கலில்லாமல் பயணிக்கும். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80ம் காலப்பகுதிகளுக்கு பின்னரான நம்வர் வாழ்க்கையில்....

ஐந்து வருடம்  தனித்தனியே வாழ்ந்து காதல் வாழ்க்கை.....
பின்னர்..
மூன்று வருடம் சேர்ந்திருந்து பரீட்சார்த்த/புரிந்துணர்வு வாழ்க்கை
அடுத்தது...
திருமண வாழ்க்கை இரு வருடம்...அந்த இரு வருடத்தில் ஒரு பிள்ளை இல்லையேல் பல கடினத்தின் பின்(இஞ்சைதான் சலிப்புத்தன்மை முளைக்குது)இரண்டாவது பிள்ளை பிரசன்னம்.இங்கே தளிர் விடுகின்றது திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு பின்னான காதலை அலசுவதைகாட்டிலும், அந்த காதலுக்கான காரணங்களை ஆராய்வது பொருத்தமாயிருக்குமென்று நினைக்கிறேன்.

புலம்பெயர் சமூக சிக்கல் பற்றி மட்டுமே பிரதானமாக பார்க்க நினைக்கிறேன், தாயகத்திலேற்படும் குடும்ப பாதிப்புக்களுக்கும் இதில் பல பொருந்தும் .

பல காரணங்கள் முறையற்ற உறவுக்கு வழி வகுக்கின்றன அதில் பிரதானமானவை 

* 24 மணிநேரமும் வேலை வேலை என்று அலைவது

* நீண்ட நாட்களாக உடல் உளவியல் ரீதியாக மனைவியுடன் நெருங்கியிருக்காதது

* எதுக்கெடுத்தாலும் எரிந்து விழுவது, தான் மட்டும் ஊர் சுற்றிக்கொண்டு துணையை தனிமை சிறையில் விட்டுவிடுவது

* ஏற்கனவே ஒருவரிடம் மனசை கொடுத்த ஒரு பெண்ணை பெற்றோர்கள் வற்புறுத்தி இன்னொருவனுக்கு கட்டி வைப்பது

* பொருத்தம் உடலிலும் வேண்டும் என்று கண்ணதாசன் சொன்னதுபோல ,பணம் விசா திமிரில் வழுக்கை விழுந்த தலையுடன் பியர் அடிச்சு வீங்கிய வண்டியை தள்ளிக்கொண்டு  வயசு வித்தியாசம் பார்க்காமல் தோற்றத்திற்கு எந்தவகையிலும் பொருத்தமில்லாத பெண்களை ஊருக்கு போய் திருமணம் செய்து கூட்டி வருவது,

இப்படி பல உண்டு.

எனக்கு தெரிந்த பலர் வெளிப்படையாகவே மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்து மூன்று மாசம் ஆகுது ஒரே பிஸி என்று பேசுவதை கேட்டிருக்கிறேன்.

வேலை முடிந்து வந்தால் ஆசையாய் சில வார்த்தை பேசுவதில்லை காரை எடுத்துக்கொண்டு ஓடிபோய் நண்பர்கள் வட்டத்துடன் சேர்ந்து தண்ணியடித்து காட்ஸ் விளையாடி ஜாலியாக பொழுதை கழிக்க , எப்போதும் சமைத்து வைத்துவிட்டு டிவியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு மாறுதலாக சமூக வலைதளங்களில் இறங்க தூண்டுகிறது, குழப்பங்களின் ஆரம்பமே அங்குதான் விதைக்கபடுகிறது.

புறதோற்றத்தில் வசீகரமான குலுங்க குலுங்க சிரிக்க வைக்க பேசும் நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் மிக எளிதாக திருமணம் ஆன ஆகாத பெண்களை ஈர்த்துவிடுகிறார்கள், அது காலபோக்கில் அவர்கள் மீது தீரா காதலாகிவிடுகிறது.

விவாகரத்து பெறாமலே காதலை வளர்ப்பதற்கு பிரதான காரணமே அவர்களின் பிள்ளைகள்தான் , பிள்ளைகளை விட்டு பிரிய விருப்பமின்றியும், காதலில் விழுத்திய ஆண்கள் பிள்ளைகளுடன் இவர்களை ஏற்க தயாராக இல்லாமையும் காரணமாகிறது.

பெரும்பாலும் முறையற்ற காதலில் குடும்ப பெண்களை விழுத்தும் ஆண்களில் பலரும் ஏற்கனவே கல்யாணமாகி மனைவி பிள்ளைகளுடன் வாழ்பவர்கள்தான், அவர்கள் இவர்களை விவாகரத்து செய்ய சொல்லி கேட்கமுடியாது ஏனென்றால் அவர்களும் விவாகரத்து செய்து மனைவி பிள்ளைகளை பிரிந்து வரவேண்டும்.

இந்த முறையற்ற காதலில் ஈடுபடும் ஆண்களில் பலருக்கு தங்களின் குடும்பத்தை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்தவன் குடும்பத்தை நாசமாக்கவேண்டும் என்பதே இலக்கு.

குடும்ப பெண்களை காதலில் விழுத்தும் திருமணமாகாத ஆண்களில் பலர் குழந்தைகளுடன் கூட்டிபோய் ஒரு பெண்ணுடன் வாழ தயாகாரவில்லை , கிடைத்தவரை லாபம் என்று திருமண பந்தத்திற்கு புறம்பான முறையில் உறவை ஏற்படுத்தவே விரும்பிகிறார்கள், .

அதை பெருமையாக நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளவும் செய்கிறார்கள், சிக்கல் என்று வரும்போது காய் வெட்டிவிட்டு சிறிலங்காவில் போய்  எவரையும் காதலிக்காத பெண்ணை நன்றாக விசாரித்து கல்யாணம் செய்து கம்பீரமாக நடமாடுகிறார்கள். அவரால் பாதிக்கபட்ட பெண்கள் மட்டும் கணவன் குழந்தைகள் அனைத்தையும் இழந்து கையறு நிலையில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

சிலர் இந்த பக்கமும் போக முடியாமல் அந்த பக்கமும் போகமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அதுவும் குடும்ப பெண்கள் விவாகரத்து பெறாமல் முறையற்ற காதலை தொடர காரணம்

சமூக வலைதளங்கள் ஆரம்பிக்காத அந்தநாட்களில் பொது விழாக்களில் வெறும் பார்வையுடன் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்ட முறையற்ற காதல் தூதுகள் இந்நாட்களில் ஒரு நாளிலேயே நேரடி உறவை ஏற்படுத்திக்கொள்ள உறுதுணையாகிவிட்டது.

 குடும்ப உறவில் உடலியல் உணர்வியல் உளவியல் ரீதியில் நெருக்கத்தை பேணாமல் விடுவது,பொருத்தமற்ற துணை ஜோடி பொருத்தங்கள்கூட  முறையற்ற காதலை தேட பிரதான வடிகாலாகிறது பல பெண்கள் விழாக்களுக்கு குடும்பமாய் போகும்போது பிற ஜோடிகள் முன்னர் கூனி குறுகுவதை பார்த்திருக்கிறேன்.

காரியங்கள் நடப்பதற்கு காரணங்கள் கட்டாயம் இருக்கும் காரணங்களுக்கு தீர்வு கண்டால் காரியங்களின் அளவு குறைந்து கொண்டு போகும் என்றே கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல் கெளரவமாக விவாகரத்து பெற்று பிரிந்து தமக்கு பிடித்தமான வாழ்கையை வாழுகின்றனர்.

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

80ம் காலப்பகுதிகளுக்கு பின்னரான நம்வர் வாழ்க்கையில்....

ஐந்து வருடம்  தனித்தனியே வாழ்ந்து காதல் வாழ்க்கை.....
பின்னர்..
மூன்று வருடம் சேர்ந்திருந்து பரீட்சார்த்த/புரிந்துணர்வு வாழ்க்கை
அடுத்தது...
திருமண வாழ்க்கை இரு வருடம்...அந்த இரு வருடத்தில் ஒரு பிள்ளை இல்லையேல் பல கடினத்தின் பின்(இஞ்சைதான் சலிப்புத்தன்மை முளைக்குது)இரண்டாவது பிள்ளை பிரசன்னம்.இங்கே தளிர் விடுகின்றது திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

தமிழ் மன்னன் என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் ராஜராஜ சோழனும் பல மனைவியருடன் வாழ்ந்தவன் தான். அது தமிழ் சிஸ்ரமா?

அந்த காலத்தில் காந்தர்வ மணம் என்று ஒரு சிஸ்ரம் இருந்தது. அது same like living together தான். 

Link to comment
Share on other sites

ஏன் தமிழ் கடவுள் என்று வணக்கப்படும் முருகனே திருமணத்தின் பின்னர் காதல் கொண்டவர் தான் 

அவருக்கு வருடா வருடம் திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது. 😂😂😂

இது தமிழ் சிஸ்ரமா அல்லது மேலைத்தேய சிஸ்ரமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல் கெளரவமாக விவாகரத்து பெற்று பிரிந்து தமக்கு பிடித்தமான வாழ்கையை வாழுகின்றனர்.

எந்த விசயத்திலை ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றாமல்,எந்த விசயத்திலை துரோகம் செய்யாமல் எண்டதை விளக்கமாய் சொல்லுங்கோ......உந்த பிரச்சனையிலை நானும் விளங்க நினைப்பவன் தான் கண்டியளோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

தமிழ் மன்னன் என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் ராஜராஜ சோழனும் பல மனைவியருடன் வாழ்ந்தவன் தான். அது தமிழ் சிஸ்ரமா?

ராஜராஜ சோழன் கரைச்சல் குடுத்து கலைச்சு விடேல்லை.கன்னியரை கரயவும் விடேல்லை.ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் கொடுத்து கண்கலங்காமல் வைத்திருந்தான்.

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

ராஜராஜ சோழன் கரைச்சல் குடுத்து கலைச்சு விடேல்லை.கன்னியரை கரயவும் விடேல்லை.ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் கொடுத்து கண்கலங்காமல் வைத்திருந்தான்.

நீங்கள் முதலில் கூறியது திருமணத்துக்கு பிறகு காதல் என்பது மேற்கத்தைய சிஸ்ரம் என்ற விடயத்தை பற்றி மட்டுமே.  இப்போது கதையை மாற்றுவது ஏன்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.