Jump to content

திருமணத்திற்கு பிறகு பெண்களின் காதல் தற்கொலைகள்


Recommended Posts

திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.
 

 

சாந்தி அக்கா! எனக்கு இதனைப்பற்றி சில கேள்விகள் உண்டு ஒன்று

இன்னொன்று இந்த உரையாடலில் நீங்கள் இன்னமும் சில விடயங்களை அழுத்தி கூறியிருக்கலாம் என நினைக்கிறேன்..

இந்த வாரம் முழுவதும் வேலை அதிகம் என்பதால் நான் நினைப்பதை எழுத முடியுமா தெரியவில்லை, ஆனாலும் இந்த மாதிரியான சம்பவங்களில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் என்றாலும் கூட இந்த மாதிரியான நிலைக்கு கணவனை தூண்டுவதும் பெண்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

 

Link to comment
Share on other sites

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சாந்தி அக்கா! எனக்கு இதனைப்பற்றி சில கேள்விகள் உண்டு ஒன்று

இன்னொன்று இந்த உரையாடலில் நீங்கள் இன்னமும் சில விடயங்களை அழுத்தி கூறியிருக்கலாம் என நினைக்கிறேன்.

இவ்விடயம் பற்றி தொடர்ந்து பேச இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் குழப்பம் தரும் தலைப்பும்..... நடந்த கலந்துரையாடலும்....

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

வேலையில் இருக்கும் கணவர், வேலை தானே செய்ய முடியும். வீட்டில் கதைக்க முடியாத விடயத்தை வேலையில் எப்படி கதைக்க முடியும்? புரியவில்லையே.....

தவறான விடயம் தொடர்பில், கணவருடன் அல்லது மணைவியுடன் அல்லது பிள்ளைகள் உடன், என்ன, எப்படி பேசுவது?

பழைய காதலன் அல்லது காதலி பயமுறுத்தினால், முதலில் பிளக் பண்ணணும். அந்த சமுகவலை ஊடகத்தில் முறையிட்டாலே, அவர்கள் கணக்கை, முடக்குவர்.  அதையும் மீறீனால்.... சட்டபூர்வமான உதவி பெறலாம்.

முதலில் இதையல்லாவா விளங்கப்படுத்த வேண்டும். 

இருவரும் சேர்ந்தே...... என்ன செய்கிறார்கள் என புரிந்து, சமூக வளைத்தளத்தில் நல்ல காதல் தொடர்பில் இருந்தால், பிறகென்ன, இரண்டு பக்கமும் விவாகரத்து பிரக்கிராசியாரை பார்த்து பிரிந்து, கலியாணம் பணண வேண்டியது தானே.

இதுக்கு தற்கொலை தீர்வல்ல என்று சொல்லாமல்.... குழப்பம் தரும் கருத்தாடல் போலவே தோன்றியது.

குடும்பத்தில் வரும் நாளாந்த பிரச்சணைக்கு தீர்வா அல்லது திருமணத்துக்கு பின்னான, முறறிலும் தவறான, காதலால் விளையும் பிரச்சணைகளுக்கு தீர்வா என்று கடைசி வரை புரியவில்லை.

இது எனது அபிப்பிராயம்.  தவறாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

மிகவும் குழப்பம் தரும் தலைப்பும்..... நடந்த கலந்துரையாடலும்....

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

வேலையில் இருக்கும் கணவர், வேலை தானே செய்ய முடியும். வீட்டில் கதைக்க முடியாத விடயத்தை வேலையில் எப்படி கதைக்க முடியும்? புரியவில்லையே.....

தவறான விடயம் தொடர்பில், கணவருடன் அல்லது மணைவியுடன் அல்லது பிள்ளைகள் உடன், என்ன, எப்படி பேசுவது?

பழைய காதலன் அல்லது காதலி பயமுறுத்தினால், முதலில் பிளக் பண்ணணும். அந்த சமுகவலை ஊடகத்தில் முறையிட்டாலே, அவர்கள் கணக்கை, முடக்குவர்.  அதையும் மீறீனால்.... சட்டபூர்வமான உதவி பெறலாம்.

முதலில் இதையல்லாவா விளங்கப்படுத்த வேண்டும். 

இருவரும் சேர்ந்தே...... என்ன செய்கிறார்கள் என புரிந்து, சமூக வளைத்தளத்தில் நல்ல காதல் தொடர்பில் இருந்தால், பிறகென்ன, இரண்டு பக்கமும் விவாகரத்து பிரக்கிராசியாரை பார்த்து பிரிந்து, கலியாணம் பணண வேண்டியது தானே.

இதுக்கு தற்கொலை தீர்வல்ல என்று சொல்லாமல்.... குழப்பம் தரும் கருத்தாடல் போலவே தோன்றியது.

குடும்பத்தில் வரும் நாளாந்த பிரச்சணைக்கு தீர்வா அல்லது திருமணத்துக்கு பின்னான, முறறிலும் தவறான, காதலால் விளையும் பிரச்சணைகளுக்கு தீர்வா என்று கடைசி வரை புரியவில்லை.

இது எனது அபிப்பிராயம்.  தவறாகவும் இருக்கலாம்.

வெல் சேய்ட்.. இன்னொரு காதல் செய்ய விருப்பம் இருந்தால் யாரையும் ஏமாற்றாமல் கெளரவமாக விவாகரத்து செய்துவிட்டு தமக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம்.. அதுதான் நேர்மையானது.. அதைத்தான் சொல்லிக்கொடுக்கவேணும்.. இல்லை இரண்டுகால் தோணி என்றால் பிள்ளைகள் உட்பட அந்தகுடும்பத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோர் நிம்மதியும் போய்விடும்..

Link to comment
Share on other sites

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனாலும் இந்த மாதிரியான சம்பவங்களில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் என்றாலும் கூட இந்த மாதிரியான நிலைக்கு கணவனை தூண்டுவதும் பெண்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

கணவனை இந்த மாதிரி நிலைக்கு தூண்டுவது என்பது பற்றி விளக்கமாக சொல்லுவீங்களோ?

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

தவறு அல்ல அது ஒரு தடுமாற்றம். அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு உறவு வந்து அதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் என்று நாம் ஒதுக்காமல் அவர்களை வாழ விட வேண்டும். 

இப்படி ஒருவர் தடுமாறினால் அதை பெரும் குற்றமாக நான் கருதமாட்டேன். 

இவ்விடயம் பற்றி கருத்தாடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில்.

இந்த வீடியோவை நான் விளங்கி கொண்ட விதத்துக்கும், நாதமும் ஓணாண்டியாரும் விளங்கி கொண்ட விதத்துக்கும் வேறுபாடு உண்டென நினைக்கிறேன்.

ஆனால் இதை நெறியாளரும் சாந்தி அக்காவும் இன்னும் கொஞ்சம் தெளிவாக விளங்கபடுத்தி இருக்கலாம்.

திருமணத்துக்கு பின்னான காதல்(?) இல்லை தடுமாற்றம் என்பதே சரி, தவறானதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. திருமண பந்தத்தில் இருந்தபடி வேறு உறவை வளர்ப்பது நம்பிக்கை சம்பந்தபட்ட விடயம்.

ஒரு குடும்பத்தில் எந்த உறவும் பரஸ்பரம் நம்பிக்கை கேடு வராமல் இருக்க வேண்டும் என்பது அடிப்படை.

ஆனால் முறைதவறிய காதலை செய்யுங்கோ ஆனால் பாதுகாப்பாக செய்யுங்கோ என இங்கே சாந்தி அக்காவோ நெறியாளரோ சொல்லவில்லை.

என் பார்வையில், இப்படியான தடுமாற்றம் எமது சமுகத்தில் நிகழாமல் தடுக்க இது தவறு (நாதமுனி சொன்னது போல்) என்பதை மட்டும் சொல்லுவதை விட, ஓணாண்டி சொல்வது போல் கண்ணியமாக பிரிந்து போங்கள் என மட்டும் சொல்வதைவிட, இவற்றோடு சேர்த்து இந்த “தற்காலிக தடுமாற்றத்தில்” இருந்து மீள்வது எப்படி, என்ன வகையில் ஆபத்துக்களை எதிர்கொள்ளலாம் என்பதை சொல்வதும் உதவிகளுக்கு signpost பண்ணுவதும் வினைதிறனா இருக்கும்.

ஒரு உதாரணம் - எயிட்சை கட்டுப்படுத்த ஒருவரோடு மட்டும் உறவு வையுங்கள் என்பதே மிக சரியான ஆலோசனை. ஆனாலும் அடுத்த வழியால் (alternative) அட்லீஸ்ட் பாதுகாப்பு சாதனங்களையாவது பாவியுங்கள் என கூறி அதை இலவசமாகவும் கொடுப்பது போலவே இதுவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, shanthy said:

தவறு அல்ல அது ஒரு தடுமாற்றம். அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு உறவு வந்து அதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் என்று நாம் ஒதுக்காமல் அவர்களை வாழ விட வேண்டும். 

இப்படி ஒருவர் தடுமாறினால் அதை பெரும் குற்றமாக நான் கருதமாட்டேன். 

இவ்விடயம் பற்றி கருத்தாடுவோம்.

நீஙகள் என்ன கருதுகிறீர்கள் என்பதல்ல இங்கே முக்கியமான விடயம்.

எது சரி, எது பிழை என்பதனை புரிந்த நிலையிலே சரியான ஆலோசணை தர முடியும்.

இங்கே, சிற்றிசன் அட்வைஸ் பீரோ எனும் அமைப்புக்கு முதலில் செல்ல வேண்டும். அவர்கள் சரியான ஆலோசணை தரக்கூடியவர்களை காட்டுவார்கள்.

ஆலோசணை தரக்கூடியவர், அதற்கான பயிற்சி மட்டுமல்ல, காப்புறுதியும், தேவையான அனுமதிப்பத்திரமும் வைத்திருப்பர்.

ஏனெனில், இந்த கலந்துரையாடல், குழப்பம் தந்தது.

தனிப்பட்ட ரீதியில் யாரையும் விமரசிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான ஒரு பிரச்சினையைப் பேசியிருக்கிறார் சாந்தி. மேலே ஓணாண்டியும், நாதமும் "சம்பவத்தில்" தங்கி நின்று விட்டார்களென நினைக்கிறேன் - அதனால் அந்தக் கருத்துக்கள். ஆனால் சாந்தி கலந்துரையாடியிருப்பது பெரும்பாலும் சம்பவம் நடந்த பின்னர் உயிரிழப்பு அவலங்கள் ஏற்படாமல் என்ன செய்வதென்பதைப் பற்றியதாக இருக்கிறது! மொழிப் பரிச்சயம் இருக்கும் நாடுகளிலேயே இப்படியானவர்கள் உதவிகள் பெற முடியாத நிலை இருக்கும் போது, ஜேர்மன், ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழ்வோரின் நிலை இன்னும் மோசமாகத் தான் இருக்குமென நினைக்கிறேன். உங்கள் பணி இன்றியமையாதது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

மிகச்சரியான கருத்து. 👍🏽

Link to comment
Share on other sites

14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெல் சேய்ட்.. இன்னொரு காதல் செய்ய விருப்பம் இருந்தால் யாரையும் ஏமாற்றாமல் கெளரவமாக விவாகரத்து செய்துவிட்டு தமக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம்.. அதுதான் நேர்மையானது.. அதைத்தான் சொல்லிக்கொடுக்கவேணும்.. இல்லை இரண்டுகால் தோணி என்றால் பிள்ளைகள் உட்பட அந்தகுடும்பத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோர் நிம்மதியும் போய்விடும்..

இன்னொரு காதலை யாரும் திட்டமிட்டு செய்வதில்லை. சூழ்நிலை மனங்களில் இன்னொரு ஈர்ப்பினுள் வீழ்த்திவிடுகிறது. 

பலர் ஒளித்து நடிப்பதை சிலர் வெளிப்படையாக செய்கிறார்கள். வெளிப்படையாக இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவது. 

இதற்கு நிரந்தர தீர்வு வராது. ஆனால் goshan_che சொன்ன எய்ட்ஸ் சிறந்த உதாரணம். 

நாம் இதுபற்றி பேசுவதால் யாரோ ஒருவரேனும் பயனடைவார். 

Link to comment
Share on other sites

இவ்வாறான வெளிப்படையான உரையாடலே சந்தர்பப சூழ்நிலைகளால் தவறிழைப்பவர்களுக்கான ஒரு விழிப்புணர்வுதான்.ஆகவே வரவேற்கப்பட வேண்டிய ஒரு சமூக விழிப்புணர்வு உரையாடல் இது. 

எமது விருப்பங்களுக்கப்பால் இவ்வாறான விடயங்கள் நாம் வாழும் சமுதாயத்தில் இன்று மட்டுமல்ல எல்லா காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நடைபெற்ற   ஓரு சிறிய தவறுக்காக அவர்களது வாழ்க்கை பலியாக கூடாது. அதிலிருந்து அவர்கள் மீண்டுவந்து சமூகத்தில் இணைந்து இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதையே இந்த உரையாடல் வலியுறுத்துகிறது. ஆகவே இவ்வாறாற உரையாடல்கள் சமுகத்திற்கு தேவையானது.

இப்படியான சம்பவங்கள் நடைபெற்று அவை குடும்பங்களில் கொலை, தற்கொலை போன்ற விடயங்கள் நடக்கும் போது அதை பரிகசிக்கும் வசன நடையுடன் கொசிப் செய்தியாக  இங்கு  பல முறை இணைக்கப்பட்டுள்ளது. அதை வாசித்து நக்கல் நளினங்களும் பகிரப்பட்ட சம்பவங்களும் அவை நிர்வாகத்தால் நீக்கப்படவேண்டிய நிலையும் ஏற்பட்டது.  ஆனால் இது அப்படியானதல்ல.

 பாதிக்கப்பட்ட மனிதர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர விரும்பும் சமூக பார்வையுடனான உரையாடல்.  

அத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் இப்படியான தவறுகள் சமூகத்தில் நடைபெறும் போது ஆண்/ பெண் என்ற இரு சாராரும் சம அளவில் இதுல் பங்கு பெற்றாலும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை. மிக விரைவாக அவர்களது துணையால்  மன்னிக்கப்பட்டு எதுவும் நடக்காதது போல் இயல்பு வாழ்ககையை தமது குடும்பத்துடன் நடத்துவதை கண்டிருக்கிறேன். அதற்கு சமூகமும் உதவி செய்கிறது. தவறில் சம பங்காளியான ஒருவர் அதை மறந்து குற்றமனப்பான்மையற்று வாழும் போது மற்றவர் அத்தவறுக்காக தனது வாழ்ககையை பலியாக்கவேண்ட நிலையை சமூகம் தான் உருவாக்கி உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன்பான காதலும் பின்பான காதலும் ஒன்றே என்பது எனது கருத்து காரணம் எதிர்பாலினம் அன்பான விசாரிப்புகளாலேயே மற்றவரை வசீகரித்துவிடலாம்.

 அண்மையில் ஒரு பெண் சமூக ஊடகமொன்றில் கூறியிருந்தார் எந்தப்பெண்ணையும் பார்த்து (அவர் திருமணமாகியிருக்கிறார இல்லையா என்பது வேறுவிடையம்) நீங்கள் அழகாக இருக்கிறேர்கள் எனக்கூறினாலே  அப்பெண் மறுபடியும் அந்த ஆண்மகனைப் ஓரக்கண்ணாலேயோ அல்லது தூரப்பார்வையிலோ பார்ப்பாள் அல்லது அவதானிப்பாள் என.

தமிழ் சமூகத்தில் "கிணத்துத் தண்ணியை வெள்ளமா கொண்டுபோய்விடப்போகிறது" எனும் மனப்பாண்மை ஆண்களிடம் உண்டு என்னதான் கஸ்டப்பட்டுக் காதலித்து மனம் உருகி மன்றாடித் திருமணம் முடித்தாலும் திருமணத்தின் பின்பான வாழ்கை என்பது பெண்களுக்கு நரகம்தான் இந்தச்சந்தர்ப்பத்தைத்தான் பிற ஆண்மகன் தனதாக்கிக்கொள்கிறான். இதில் அவன் திருமணமானவனாக இருந்தாலும் அவனது மனைவியும் அவனுக்கு நெருக்கமானவளாக அவன் கருதமாட்டான். இதுவே தப்புக்கு வழிவகுக்கிறது.

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

 

அத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் இப்படியான தவறுகள் சமூகத்தில் நடைபெறும் போது ஆண்/ பெண் என்ற இரு சாராரும் சம அளவில் இதுல் பங்கு பெற்றாலும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை. மிக விரைவாக அவர்களது துணையால்  மன்னிக்கப்பட்டு எதுவும் நடக்காதது போல் இயல்பு வாழ்ககையை தமது குடும்பத்துடன் நடத்துவதை கண்டிருக்கிறேன். அதற்கு சமூகமும் உதவி செய்கிறது. தவறில் சம பங்காளியான ஒருவர் அதை மறந்து குற்றமனப்பான்மையற்று வாழும் போது மற்றவர் அத்தவறுக்காக தனது வாழ்ககையை பலியாக்கவேண்ட நிலையை சமூகம் தான் உருவாக்கி உள்ளது. 

இந்த திரியில் இக் கருத்தைத் தான் நான் எழுத இருந்தேன், நீங்கள் எழுதி விட்டீர்கள். 

எம் சமூகத்தில் ஆண் ஒருவர் திருமணத்துக்கு அப்பால் இவ்வாறான உறவில் ஈடுபட்டு அது தெரிய வந்தால் மிக சிறிய அளவில் மட்டுமே ஆணுக்கு பாதிப்பு வருகின்றது. எந்த ஆணும் இதனால் தற்கொலை செய்வதோ வாழ்க்கையை தொலைப்பதோ கிடையாது. அத்துடன் அந்த ஆணை ஏதோ பெரிய காரியம் ஒன்றை செய்த வீரன் போல போற்றுவதற்கும் அவ் ஆணிற்கு சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அதே ஆணுடன் திருமணத்துக்கு அப்பால் உறவு வைத்த பெண்ணுக்குத்தான் எல்லாப் பிரச்சனைகளும் எல்லா மட்டத்தில் இருந்தும் வந்து மன அழுத்தத்தை அதிகரிக்க வைக்கும்.

திருமணத்துக்கு அப்பாலான காதல் / உறவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஓணாண்டி சொல்லியது போல, பிரிந்து போய் தனக்கான ஒன்றை தேடிக் கொள்வதே சரியான வழி. ஆனால் திருமணம் செய்த பின் பிரிவது என்பது எந்தளவுக்கு வலியானது என்பதை என் நண்பர்கள் சிலரது வாழ்வில் நான் கண்டுள்ளேன். சிலர் அந்த வலியை சந்திக்க விருப்பின்றி குறுக்கு வழியில் இவ்வாறான திருமணத்துக்கு அப்பாலான உறவுகளை வைத்துக் கொள்ள முயல்கின்றார்கள்.

திருமணத்துக்கு அப்பாலான உறவு தவறானது என்று வெறும் தட்டையாக சொல்லிவிட்டு அகலாமல். அவ்வாறான உறவில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைப்பவர்கள் அதில் இருந்து மீள்வதற்கான முறைகளை உரையாடும் சமூக பிரக்ஞை உள்ள ஒரு உரையாடலாகவே இதை பார்க்கின்றேன். 

நல்ல முயற்சி இது சாந்தி.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகரட் பெட்டியில் புகைப்பதால் புற்றுநோய் வரும் என்று பெரிய எழுத்துக்களில் போட்டிருந்தும் அதையும் பார்த்துவிட்டு புகைக்காதே என்று சொல்லும் டாக்ரரில் இருந்து கூடுதலானோர் 

பெட்டியில் எழுதியதை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை.

இந்திய சினிமாபாணியில் குடிக்கும் போது குடி உடல் நலத்துக்கு கேடு என்று போட்டுடுட்டு குடிப்பது போல இருக்கு.

திருடனா பார்த்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

கணவனை இந்த மாதிரி நிலைக்கு தூண்டுவது என்பது பற்றி விளக்கமாக சொல்லுவீங்களோ?

57-D9-BE30-A066-47-C1-9475-9304-EBB78-FC
 

Insecure Women.

ஒரு insecure பெண் தன்மீதும் தன் எண்ணங்கள்/பண்புகள் மீதும் நம்பிக்கை இல்லாத ஒரு பெண், அவள் தன் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைக் கட்டுப்படுத்த ஆசைப்படுவாள். அவளுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் அவளுடைய துணையாக இருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரியான பெண்கள் தங்களது துணை கொண்டு பிள்ளைகள் வரை அதீத கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இவர்களுடைய துணைக்கு தனிமனித சுதந்திரமே இருக்காது..தனித்த விருப்பு வெறுப்புகள் தொடக்கம் சம்பளம் வரை இந்த மாதிரியான பெண்களின் கட்டுப்பாட்டிலேதான் இருக்கும். இவற்றை மீறும் பட்சத்தில் குடும்பத்தில் உள்ளவர்களை குற்றவாளிகளாக காட்டியும் தன்னை பாதிக்கப்பட்டவளாக காட்டியும் மற்றவர்களின் அனுதாபத்தை பெறுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். 

ஆரம்பத்தில் இவர்களது துணை இவர்களை அனுசரித்தாலும் உறவில் விரிசல் வந்துவிடும், நாளடைவில் இவர்களது துணை ஒன்றில் தற்கொலை
செய்வார்கள் அல்லது வீட்டை விட்டு வெளியேறியோ அல்லது ஒரு affairலோ தங்களது வாழ்க்கையை கழிப்பார்கள்.. 

இந்த மாதிரியான பெண்களைப்பற்றி அதிகம் கேள்விப்படமாட்டோம் காரணம், இவர்களால் பாதிக்கப்படும் ஆண்கள் தங்கள் கவலைகளை வெளியே கூறுவதில்லை ஏனெனில் அதற்கு அவர்களது சுய கெளரவம் இடம் கொடுக்காது. 

இந்த insecure மனநிலை உடைய பெண்களை கவனிப்பீர்களேயானால் பெரும்பாலும் பணம், சமூக அந்தஸ்து போன்ற விடயங்களே மனிதர்களை அளவிடும் அளவுகோலாக இருக்கும். பணம், சமூக அந்தஸ்து இவற்றை எப்பாடுபட்டாவது அடைய நினைப்பார்கள், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை குடும்பத்தின் சந்தோஷம், நிம்மதி. இவர்களது துணையும் தன் நிம்மதி சந்தோஷத்திற்காக வெளியே ஒரு உறவை நாடும்.. இவர்களை மனதில் வைத்தே நான் உங்களுக்கு எழுதினேன். 

ஆகையால் இந்த மாதிரியான பெண்களின் நிலையை ஆரம்பத்திலேயே உளவியல் ஆலோசகர்களின் உதவியுடன் குணப்படுத்தினால், அவர்களது குடும்பமும் மற்றவர்களும் பாதிக்கப்படமாட்டார்கள்.. 

மேலே நான் கூறிய உதாரணம் தனித்து insecure மனநிலை உடைய பெண்களின் துணைக்கு மட்டுமே.. 

இரண்டாவது வகை பெண்கள், 
சில பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றவுடன் தன்னையும் கவனிப்பதில்லை, தன் துணையையும் கவனிப்பதில்லை. இது பொதுவாக ஆண்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த நிலையிலும் ஆண் இன்னொரு உறவை தற்காலிகமாக தேட முனையலாம். இந்த ஆண்களைப்பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.. ஏனெனில் இவர்களைப்போன்றவர்களுக்கு பெண்கள் தனியே சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி.. வேறு எந்த valueம் இருக்காது.. 

இதனால்தான் பெண்கள் குழந்தை பெற்றபின்பும் தங்களது ஆரோக்கியத்திலும் மற்றைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.. 

மூன்றாவது, என்னைப்பொறுத்தவரை, பெண்கள் எல்லாவற்றிற்கும் ஆண்களின் முகவாயை பார்ப்பதை குறைக்கவேண்டும்.. எதிர்பார்ப்புகள் அதிகமானால் விட்டுக்கொடுப்புகளும்/sacrificeம் அதிகரிக்கும். பின்பு குறை கூறுவதால் பயனில்லை. 

அதேசமயம் ஒரு கணவன் தன் மனைவி, குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமல் முழு நேரமும் தன் வேலை, தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்கும் இடங்களில்.. மனைவி சில நேரங்களில் தன்னிடம் அன்பாக கதைக்கும் ஒருவருடன் உறவை நாடலாம்.. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் ஆனால் தன்னை நம்பி ஊர்விட்டு தேசவிட்டு வந்த துணைக்கு சிறிதளவு நேரத்தை ஒதுக்காமல் பணம் மட்டுமே முக்கியம் என 24/7 வேலை செய்துவிட்டு வந்து மனைவிக்கு என்ன தேவை என்பதை அறியாமல் தன் தேவையை மட்டும் பார்த்துவிட்டு உறங்கும் கணவனிடம் இருந்து நாளடைவில் மனைவி ஒதுங்கலாம்.. அப்பொழுது தன்னிடம் அன்பாக பேசும் நபரிடம் உறவை ஏற்படுத்துகிறார்கள்.. இதில் தவறு யாருடையது!

சில கணவர் இருக்கிறார்கள் “ நான் வளர்ந்த விதம் இப்படி, எனது வட்டம் இப்படி, இதை மீறி நான் வரமாட்டேன்” என்பவர்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க விருப்பமில்லாமல் தானும் வாழாமல் தன் மனைவி, பிள்ளைகளையும் வாழவிடாமல்.. இவர்களின் துனையும் விவாகரத்தும் எடுக்க முடியாமல் சில சமயங்களில் இன்னொரு உறவை நாடலாம்.. 

இயல்பாகவே மனைவி இருக்கும் பொழுதே மற்றைய பெண்களை நோட்டம் விட்டு கைகூடினால் காரியம் நடத்தும் கணவர்மார்.. sex drive அதிகம் உள்ள துணைகள் கூட திருப்தி ஏற்படாதவிடத்து ஒருவருக்கொருவர்  ஏமாற்றலாம்..ஏனெனில் ஆணோ பெண்ணோ இருவரும் உணர்வுகளை கொண்டவர்கள்.. 

எந்த உறவிற்கும் அடிப்படை பரஸ்பர நம்பிக்கை, அன்னியோன்யம், இது கலையும் இடத்து போலியான வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமில்லை. சமூகத்தின் மீதான பயம், பிள்ளைகளின் எதிர்காலம் என்பதற்காக இன்னொருவரின் வாழ்க்கையை கலைப்பது சரியல்ல. 

அதே போல காதல் என்ற உணர்வு எந்த வயதிலும் வரலாம், கட்டாயம் அது காமம் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்பதுமில்லை..அந்த உணர்வு உண்மையானது என்றால் அவரவர் பாதையில் போவதே சிறந்தது.. 


ஆனால் இதில் துல்பன் அண்ணா கூறியது போல கணவனின் பிழைகளை மன்னித்து ஏற்கும் மனைவி, இந்த குற்றத்திற்கு முதல் காரணம் எனக்கூறுவது  தனது கணவன் தேடிப் போன பெண்னைத்தான்.. 
அதே சமயம் மனைவியை கணவனால் ஏற்கமுடியாதவாறு சமூத்தின் வாய்கள் தடுக்கிறது.. அதனால்தான் வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியால் பெண்ணை சார்ந்த குடும்பம் கலைகிறது.. பெண்களையும் கற்பு அவர்களுக்கு மட்டும்தான் என்ற எண்ணத்தை ஊட்டி தன்னைத்தானே நொந்து உருக்குலைந்து போகவும் தற்கொலையை நாடவும் இந்த சமூகமே தூண்டுகிறது.. 

இதில் மாற்றம் வரவேண்டும், இந்த உறவில் இருவருக்குமே சம பங்கு உண்டு என்பதால் இருவரையும் ஒரே விதமாகத்தான் நடத்த வேண்டும் என நான் நினைப்பதுண்டு. 

ஆகையால் பிரச்சனைகள், விரிசல்கள் வருமிடத்து உரிய ஆலோசனைகளை நாடினால் இரு குடும்பங்களின் வாழ்க்கை தடங்கலில்லாமல் பயணிக்கும். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80ம் காலப்பகுதிகளுக்கு பின்னரான நம்வர் வாழ்க்கையில்....

ஐந்து வருடம்  தனித்தனியே வாழ்ந்து காதல் வாழ்க்கை.....
பின்னர்..
மூன்று வருடம் சேர்ந்திருந்து பரீட்சார்த்த/புரிந்துணர்வு வாழ்க்கை
அடுத்தது...
திருமண வாழ்க்கை இரு வருடம்...அந்த இரு வருடத்தில் ஒரு பிள்ளை இல்லையேல் பல கடினத்தின் பின்(இஞ்சைதான் சலிப்புத்தன்மை முளைக்குது)இரண்டாவது பிள்ளை பிரசன்னம்.இங்கே தளிர் விடுகின்றது திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு பின்னான காதலை அலசுவதைகாட்டிலும், அந்த காதலுக்கான காரணங்களை ஆராய்வது பொருத்தமாயிருக்குமென்று நினைக்கிறேன்.

புலம்பெயர் சமூக சிக்கல் பற்றி மட்டுமே பிரதானமாக பார்க்க நினைக்கிறேன், தாயகத்திலேற்படும் குடும்ப பாதிப்புக்களுக்கும் இதில் பல பொருந்தும் .

பல காரணங்கள் முறையற்ற உறவுக்கு வழி வகுக்கின்றன அதில் பிரதானமானவை 

* 24 மணிநேரமும் வேலை வேலை என்று அலைவது

* நீண்ட நாட்களாக உடல் உளவியல் ரீதியாக மனைவியுடன் நெருங்கியிருக்காதது

* எதுக்கெடுத்தாலும் எரிந்து விழுவது, தான் மட்டும் ஊர் சுற்றிக்கொண்டு துணையை தனிமை சிறையில் விட்டுவிடுவது

* ஏற்கனவே ஒருவரிடம் மனசை கொடுத்த ஒரு பெண்ணை பெற்றோர்கள் வற்புறுத்தி இன்னொருவனுக்கு கட்டி வைப்பது

* பொருத்தம் உடலிலும் வேண்டும் என்று கண்ணதாசன் சொன்னதுபோல ,பணம் விசா திமிரில் வழுக்கை விழுந்த தலையுடன் பியர் அடிச்சு வீங்கிய வண்டியை தள்ளிக்கொண்டு  வயசு வித்தியாசம் பார்க்காமல் தோற்றத்திற்கு எந்தவகையிலும் பொருத்தமில்லாத பெண்களை ஊருக்கு போய் திருமணம் செய்து கூட்டி வருவது,

இப்படி பல உண்டு.

எனக்கு தெரிந்த பலர் வெளிப்படையாகவே மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்து மூன்று மாசம் ஆகுது ஒரே பிஸி என்று பேசுவதை கேட்டிருக்கிறேன்.

வேலை முடிந்து வந்தால் ஆசையாய் சில வார்த்தை பேசுவதில்லை காரை எடுத்துக்கொண்டு ஓடிபோய் நண்பர்கள் வட்டத்துடன் சேர்ந்து தண்ணியடித்து காட்ஸ் விளையாடி ஜாலியாக பொழுதை கழிக்க , எப்போதும் சமைத்து வைத்துவிட்டு டிவியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு மாறுதலாக சமூக வலைதளங்களில் இறங்க தூண்டுகிறது, குழப்பங்களின் ஆரம்பமே அங்குதான் விதைக்கபடுகிறது.

புறதோற்றத்தில் வசீகரமான குலுங்க குலுங்க சிரிக்க வைக்க பேசும் நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் மிக எளிதாக திருமணம் ஆன ஆகாத பெண்களை ஈர்த்துவிடுகிறார்கள், அது காலபோக்கில் அவர்கள் மீது தீரா காதலாகிவிடுகிறது.

விவாகரத்து பெறாமலே காதலை வளர்ப்பதற்கு பிரதான காரணமே அவர்களின் பிள்ளைகள்தான் , பிள்ளைகளை விட்டு பிரிய விருப்பமின்றியும், காதலில் விழுத்திய ஆண்கள் பிள்ளைகளுடன் இவர்களை ஏற்க தயாராக இல்லாமையும் காரணமாகிறது.

பெரும்பாலும் முறையற்ற காதலில் குடும்ப பெண்களை விழுத்தும் ஆண்களில் பலரும் ஏற்கனவே கல்யாணமாகி மனைவி பிள்ளைகளுடன் வாழ்பவர்கள்தான், அவர்கள் இவர்களை விவாகரத்து செய்ய சொல்லி கேட்கமுடியாது ஏனென்றால் அவர்களும் விவாகரத்து செய்து மனைவி பிள்ளைகளை பிரிந்து வரவேண்டும்.

இந்த முறையற்ற காதலில் ஈடுபடும் ஆண்களில் பலருக்கு தங்களின் குடும்பத்தை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்தவன் குடும்பத்தை நாசமாக்கவேண்டும் என்பதே இலக்கு.

குடும்ப பெண்களை காதலில் விழுத்தும் திருமணமாகாத ஆண்களில் பலர் குழந்தைகளுடன் கூட்டிபோய் ஒரு பெண்ணுடன் வாழ தயாகாரவில்லை , கிடைத்தவரை லாபம் என்று திருமண பந்தத்திற்கு புறம்பான முறையில் உறவை ஏற்படுத்தவே விரும்பிகிறார்கள், .

அதை பெருமையாக நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளவும் செய்கிறார்கள், சிக்கல் என்று வரும்போது காய் வெட்டிவிட்டு சிறிலங்காவில் போய்  எவரையும் காதலிக்காத பெண்ணை நன்றாக விசாரித்து கல்யாணம் செய்து கம்பீரமாக நடமாடுகிறார்கள். அவரால் பாதிக்கபட்ட பெண்கள் மட்டும் கணவன் குழந்தைகள் அனைத்தையும் இழந்து கையறு நிலையில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

சிலர் இந்த பக்கமும் போக முடியாமல் அந்த பக்கமும் போகமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அதுவும் குடும்ப பெண்கள் விவாகரத்து பெறாமல் முறையற்ற காதலை தொடர காரணம்

சமூக வலைதளங்கள் ஆரம்பிக்காத அந்தநாட்களில் பொது விழாக்களில் வெறும் பார்வையுடன் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்ட முறையற்ற காதல் தூதுகள் இந்நாட்களில் ஒரு நாளிலேயே நேரடி உறவை ஏற்படுத்திக்கொள்ள உறுதுணையாகிவிட்டது.

 குடும்ப உறவில் உடலியல் உணர்வியல் உளவியல் ரீதியில் நெருக்கத்தை பேணாமல் விடுவது,பொருத்தமற்ற துணை ஜோடி பொருத்தங்கள்கூட  முறையற்ற காதலை தேட பிரதான வடிகாலாகிறது பல பெண்கள் விழாக்களுக்கு குடும்பமாய் போகும்போது பிற ஜோடிகள் முன்னர் கூனி குறுகுவதை பார்த்திருக்கிறேன்.

காரியங்கள் நடப்பதற்கு காரணங்கள் கட்டாயம் இருக்கும் காரணங்களுக்கு தீர்வு கண்டால் காரியங்களின் அளவு குறைந்து கொண்டு போகும் என்றே கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல் கெளரவமாக விவாகரத்து பெற்று பிரிந்து தமக்கு பிடித்தமான வாழ்கையை வாழுகின்றனர்.

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

80ம் காலப்பகுதிகளுக்கு பின்னரான நம்வர் வாழ்க்கையில்....

ஐந்து வருடம்  தனித்தனியே வாழ்ந்து காதல் வாழ்க்கை.....
பின்னர்..
மூன்று வருடம் சேர்ந்திருந்து பரீட்சார்த்த/புரிந்துணர்வு வாழ்க்கை
அடுத்தது...
திருமண வாழ்க்கை இரு வருடம்...அந்த இரு வருடத்தில் ஒரு பிள்ளை இல்லையேல் பல கடினத்தின் பின்(இஞ்சைதான் சலிப்புத்தன்மை முளைக்குது)இரண்டாவது பிள்ளை பிரசன்னம்.இங்கே தளிர் விடுகின்றது திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

தமிழ் மன்னன் என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் ராஜராஜ சோழனும் பல மனைவியருடன் வாழ்ந்தவன் தான். அது தமிழ் சிஸ்ரமா?

அந்த காலத்தில் காந்தர்வ மணம் என்று ஒரு சிஸ்ரம் இருந்தது. அது same like living together தான். 

Link to comment
Share on other sites

ஏன் தமிழ் கடவுள் என்று வணக்கப்படும் முருகனே திருமணத்தின் பின்னர் காதல் கொண்டவர் தான் 

அவருக்கு வருடா வருடம் திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது. 😂😂😂

இது தமிழ் சிஸ்ரமா அல்லது மேலைத்தேய சிஸ்ரமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல் கெளரவமாக விவாகரத்து பெற்று பிரிந்து தமக்கு பிடித்தமான வாழ்கையை வாழுகின்றனர்.

எந்த விசயத்திலை ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றாமல்,எந்த விசயத்திலை துரோகம் செய்யாமல் எண்டதை விளக்கமாய் சொல்லுங்கோ......உந்த பிரச்சனையிலை நானும் விளங்க நினைப்பவன் தான் கண்டியளோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

தமிழ் மன்னன் என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் ராஜராஜ சோழனும் பல மனைவியருடன் வாழ்ந்தவன் தான். அது தமிழ் சிஸ்ரமா?

ராஜராஜ சோழன் கரைச்சல் குடுத்து கலைச்சு விடேல்லை.கன்னியரை கரயவும் விடேல்லை.ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் கொடுத்து கண்கலங்காமல் வைத்திருந்தான்.

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

ராஜராஜ சோழன் கரைச்சல் குடுத்து கலைச்சு விடேல்லை.கன்னியரை கரயவும் விடேல்லை.ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் கொடுத்து கண்கலங்காமல் வைத்திருந்தான்.

நீங்கள் முதலில் கூறியது திருமணத்துக்கு பிறகு காதல் என்பது மேற்கத்தைய சிஸ்ரம் என்ற விடயத்தை பற்றி மட்டுமே.  இப்போது கதையை மாற்றுவது ஏன்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.